தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்துதல்

தேவனுடைய வார்த்தைகளில் பிரவேசிப்பதற்கு அவரது சமூகத்தில் உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்துவதைத் தவிர எந்த நடவடிக்கையும் மிகவும் முக்கியமானது அல்ல. தற்போது சகல ஜனங்களும் பிரவேசிக்க வேண்டிய அவசர தேவையில் உள்ளனர் என்பதற்கு இது ஒரு பாடமாகும். தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்துதலுக்குள் பிரவேசிப்பதற்கான பாதை பின்வருமாறு:

1. வெளிப்புற காரியங்களிலிருந்து உங்கள் இருதயத்தை விலக்குங்கள். தேவனுக்கு முன்பாக சமாதானமாக இருங்கள், தேவனிடம் ஜெபிப்பதில் உங்கள் சிதறாத கவனத்தைச் செலுத்துங்கள்.

2. தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தில் சமாதானத்தோடு, தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணி அனுபவியுங்கள்.

3. தேவனுடைய அன்பைப் பற்றி தியானம் செய்யுங்கள் மற்றும் சிந்தித்துப் பாருங்கள், உங்கள் இருதயத்தில் தேவனுடைய கிரியையைச் சிந்தித்துப் பாருங்கள்.

முதலில், ஜெபம் என்ற அம்சத்திலிருந்து ஆரம்பியுங்கள். சிதறாத கவனத்துடனும் குறித்த நேரங்களிலும் ஜெபம் பண்ணுங்கள். நீங்கள் நேரத்தின் நிமித்தம் எவ்வளவு நெருக்கம் அடைந்தாலும், உங்கள் வேலையில் எவ்வளவு அலுவலாக இருந்தாலும் அல்லது உங்களுக்கு என்ன நேர்ந்தாலும், ஒவ்வொரு நாளும் வழக்கமாக ஜெபம் பண்ணுங்கள், தேவனுடைய வார்த்தைகளை வழக்கமாக புசித்துப் பானம்பண்ணுங்கள். தேவனுடைய வார்த்தைகளை நீங்கள் புசித்துப் பானம் பண்ணும் வரை, உங்களை சூழ்ந்திருப்பவைகள் என்னவாக இருந்தாலும், உங்கள் ஆவிக்கு மிகுந்த இன்பம் உண்டாகும், மேலும் உங்களைச் சுற்றியுள்ள ஜனங்கள், நிகழ்வுகள் அல்லது காரியங்களால் நீங்கள் தொந்தரவில்லாமல் இருப்பீர்கள். உங்கள் இருதயத்தில் தேவனைக் குறித்து இயல்பாகச் சிந்திக்கும்போது, வெளியில் நடப்பது உங்களைத் தொந்தரவு செய்ய முடியாது. வளர்ச்சியைக் கொண்டிருப்பதற்கான அர்த்தம் இதுதான். ஜெபத்துடன் ஆரம்பியுங்கள்: தேவனுக்கு முன்பாக அமைதியாக ஜெபிப்பது மிகவும் பலனளிக்கக்கூடியது. அதன்பிறகு, தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுங்கள், தேவனுடைய வார்த்தைகளைக் குறித்துச் சிந்திப்பதன் மூலம் ஒளியைத் தேடுங்கள், பயிற்சி செய்வதற்கான பாதையைக் கண்டுபிடியுங்கள், தேவனுடைய வார்த்தைகளைப் பேசுவதன் மூலம் அவருடைய நோக்கத்தை அறிந்துகொள்ளுங்கள், மாறுபாடு இல்லாமல் அவற்றைப் புரிந்துகொள்ளுங்கள். பொதுவாக, நீங்கள் வெளிப்புற காரியங்களால் கலக்கமடையாமல் உங்கள் இருதயத்தில் தேவனிடம் நெருங்கி வரவும், தேவனுடைய அன்பைப் பற்றிச் சிந்திக்கவும், தேவனுடைய வார்த்தைகளைச் சிந்திப்பதற்கும் அது இயல்பாக இருக்க வேண்டும். உன் இருதயம் ஒரு குறிப்பிட்ட அளவிலான சமாதானத்தை அடையும்போது, இறுதியாக உன் இருதயத்தில் துதி ஊற்றெடுக்கும் இடத்தை அடையும் வரை நீ மிக அமைதியாகவும், உனக்குள், தேவனுடைய அன்பைப் பற்றிச் சிந்திக்கவும், உங்களை சூழ்ந்துள்ளவைகளைப் பொருட்படுத்தாமல், உண்மையிலேயே அவரிடம் நெருங்கி வரவும் முடியும், இது ஜெபத்தைக் காட்டிலும் சிறந்தது. அப்போது நீ ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியைப் பெற்றிருப்பாய். உன்னால் மேலே விவரிக்கப்பட்டுள்ள நிலைகளை அடைய முடியுமானால், உன் இருதயம் தேவனுக்கு முன்பாக உண்மையிலேயே சமாதானமாக இருக்கிறது என்பதற்கு இது சான்றாக இருக்கும். இது முதல் அடிப்படைப் பாடமாகும். தேவனுக்கு முன்பாக ஜனங்கள் சமாதானமாக இருக்க முடிந்த பிறகே, அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் தொடப்பட்டு, பரிசுத்த ஆவியானவரால் அறிவூட்டப்பட்டு ஓளியூட்டப்பட முடியும், அப்போதுதான் அவர்களால் தேவனோடு உண்மையான ஐக்கியத்தைக் கொண்டிருக்க முடியும், அத்துடன் தேவனுடைய சித்தத்தையும் பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலையும் புரிந்துகொள்ள முடியும். அப்போது அவர்கள் தங்கள் ஆவிக்குரிய ஜீவியங்களில் சரியான பாதையில் பிரவேசித்திருப்பார்கள். தேவனுக்கு முன்பாக ஜீவிப்பதற்கான அவர்களுடைய பயிற்சி ஒரு குறிப்பிட்ட ஆழத்தை அடைந்து, அவர்கள் தங்களையே துறந்து, தங்களையே வெறுத்து, தேவனுடைய வார்த்தைகளில் ஜீவிக்கவும் முடியும் போதுதான், அவர்களுடைய இருதயங்கள் உண்மையிலேயே தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்கும். தன்னையே வெறுக்கவும், தன்னையே சபிக்கவும், தன்னையே துறக்கவும் முடியுமானால் அது தேவனுடைய கிரியையால் அடையப்பட்ட பலனாகும், இதை ஜனங்களால் தாமாகச் செய்ய முடியாது. ஆகவே, தேவனுக்கு முன்பாக ஒருவரின் இருதயத்தை அமைதிப்படுத்தும் பயிற்சியே ஜனங்கள் உடனடியாகப் பிரவேசிக்க வேண்டிய ஒரு பாடமாகும். சிலரால் பொதுவாக தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியாது என்பது மட்டுமல்லாமல், ஜெபிக்கும்போது கூட அவர்களால் தேவனுக்கு முன்பாக அவர்களுடைய இருதயங்களை அமைதிப்படுத்த முடியாது. இது தேவனுடைய தரத்தின் நிலைகளுக்கு மிகவும் குறைவானது! உங்கள் இருதயம் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியவில்லை என்றால், நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட முடியுமா? நீ தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியாத ஒருவனாக இருந்தால், யாராவது ஒருவர் வரும்போது அல்லது மற்றவர்கள் பேசும்போது நீ திசைதிருப்பப்படுவதற்குப் பொறுப்பாளியாய் இருப்பாய், மற்றவர்கள் காரியங்களைச் செய்யும்போது உன் மனம் கவனத்தைச் சிதறவிடலாம், இந்தச் சந்தர்ப்பத்தில் நீ தேவனுடைய பிரசன்னத்தில் ஜீவிப்பதில்லை. உன் இருதயம் உண்மையிலேயே தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருந்தால், வெளி உலகில் நடக்கும் எந்தக் காரியத்தாலோ அல்லது எந்தவொரு நபர், நிகழ்வு அல்லது காரியத்தால் ஆக்கிரமிக்கப்படுவதால் நீ கலக்கமடைய மாட்டாய். நீ இதில் பிரவேசித்தால், அந்த எதிர்மறையான நிலைகளும் எல்லா எதிர்மறையான காரியங்களும், அதாவது மனிதக் கருத்துக்கள், ஜீவிப்பதற்கான தத்துவங்கள், ஜனங்களுக்கிடையிலான வித்தியாசமான உறவுகள் மற்றும் கருத்துக்கள் மற்றும் எண்ணங்கள் போன்றவை இயற்கையாகவே மறைந்துவிடும். ஏனென்றால் நீ எப்போதும் தேவனுடைய வார்த்தைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறாய், உன் இருதயம் எப்போதும் தேவனிடம் நெருங்கி வருவதோடு, தேவனுடைய தற்போதைய வார்த்தைகளால் எப்போதும் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், உன்னை அறியாமலேயே அந்த எதிர்மறையான காரியங்கள் உன்னைவிட்டு விலகிவிடும். புதிய மற்றும் நேர்மறையான காரியங்கள் உன்னை ஆட்கொள்ளும்போது, எதிர்மறையான பழைய காரியங்களுக்கு இடமிருக்காது, அதனால் அந்த எதிர்மறையான காரியங்களில் கவனம் செலுத்தக்கூடாது. அவற்றைக் கட்டுப்படுத்த நீ முயற்சி செய்ய வேண்டியதில்லை. நீ தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும், உன்னால் முடிந்தவரை தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணி, அனுபவிக்க வேண்டும், உன்னால் முடிந்தவரை தேவனைத் துதித்துப் பாடல்களைப் பாட வேண்டும், மேலும் தேவன் உன்னில் கிரியை செய்ய அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும், ஏனென்றால் தேவன் இப்போது மனுக்குலத்தைத் தனிப்பட்ட முறையில் பரிபூரணப்படுத்த விரும்புகிறார், மேலும் அவர் உன் இருதயத்தைப் ஆதாயப்படுத்த விரும்புகிறார். அவருடைய ஆவி உன் இருதயத்தை ஏவுகிறது, பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நீ தேவனுடைய சமூகத்தில் ஜீவிக்க வந்தால், நீ தேவனைத் திருப்திப்படுத்துவாய். நீ தேவனுடைய வார்த்தைகளில் ஜீவிப்பதில் கவனம் செலுத்தி, பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டுதலையும் வெளிச்சத்தையும் பெற சத்தியத்தைப் பற்றி அதிக ஐக்கியத்தில் ஈடுபட்டால், அந்த மதக் கருத்துக்கள் மற்றும் உன் சுயநீதி மற்றும் சுய முக்கியத்துவம் எல்லாம் மறைந்துவிடும், தேவனுக்காக உன்னை எப்படி ஒப்புக்கொடுக்க வேண்டும், தேவனிடத்தில் எவ்வாறு அன்பு செலுத்த வேண்டும், தேவனை எவ்வாறு திருப்திப்படுத்த வேண்டும் என்பதை நீ அறிந்துகொள்வாய். உங்களை அறியாமலேயே, தேவனுக்குப் புறம்பான அப்படிப்பட்ட காரியங்கள் உங்கள் உணர்வுநிலையில் இருந்து முற்றிலும் மறைந்துவிடும்.

தேவனுடைய தற்போதைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும்போது தேவனுடைய வார்த்தைகளைப் பற்றி சிந்தித்து ஜெபம் செய்வதே தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பதற்கான முதல் படியாகும். உன்னால் உண்மையிலேயே தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியுமனால், பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டுதலும் வெளிச்சமும் உங்களுடன் இருக்கும். தேவனுடைய சமூகத்தில் சமாதானமாக இருப்பதன் மூலம் சகல ஆவிக்குரிய ஜீவியமும் அடையப்படுகிறது. ஜெபத்தில், நீ தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க வேண்டும், அப்போதுதான் நீ பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட முடியும். நீ தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்கும்போது, நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும்போது நீ அறிவூட்டப்படவும் ஒளியூட்டப்படவும் முடியும், மேலும் தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய உண்மையான புரிதலை அடைய முடியும். தியானம் மற்றும் ஐக்கியம் மற்றும் உன் இருதயத்தில் தேவனிடம் நெருங்கி வருதல் போன்ற உன் வழக்கமான செயல்களில், நீ தேவனுடைய சமூகத்தில் சமாதானமாகும்போது, உன்னால் தேவனுடனான உண்மையான நெருக்கத்தை அனுபவிக்கவும், தேவனுடைய அன்பு மற்றும் அவருடைய கிரியை குறித்த உண்மையான புரிதலைக் கொண்டிருக்கவும், தேவனுடைய நோக்கங்களில் உண்மையான சிந்தனையையும் அக்கறையையும் கொண்டிருக்க முடியும். தேவனுக்கு முன்பாக நீ எவ்வளவு அதிகமாகச் சமாதானமாக இருக்க முடியுமோ அவ்வளவு அதிகமாக நீ வெளிச்சம் அடைவாய், உன் சொந்தச் சீர்கெட்ட மனநிலையையும், நீ எதில் குறைவுபடுகிறாய், நீ எதில் பிரவேசிக்க வேண்டும், நீ என்ன செயல்பாட்டைச் செய்ய வேண்டும், அதில் உன் குறைபாடுகள் ஆகியவற்றைப் பற்றி புரிந்துகொள்ள முடியும். தேவனுடைய சமூகத்தில் சமாதானமாக இருப்பதன் மூலம் இவை அனைத்தும் அடையப்படுகிறது. தேவனுக்கு முன்பாக உங்கள்சமாதானத்தில் நீங்கள் உண்மையிலேயே ஆழத்தை அடைந்தால், ஆவியின் சில இரகசியங்களை உங்களால் புரிந்துகொள்ள முடியும், தற்போது தேவன் உன்னில் என்ன செய்ய விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும், தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய ஆழமான புரிதலை கிரகித்துக்கொள்ளவும், தேவனுடைய வார்த்தைகளின் சிறப்பு, தேவனுடைய வார்த்தைகளின் சாராம்சம், தேவனுடைய வார்த்தைகளின் இருப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும் முடியும், மேலும் நடைமுறையின் பாதையை உன்னால் இன்னும் தெளிவாகவும் துல்லியமாகவும் பார்க்க முடியும். உன் ஆவிக்குள் சமாதானம் அடைவதற்கு போதுமான ஆழத்தை நீ அடையத் தவறினால், நீ பரிசுத்த ஆவியானவரால் சிறிதளவு மட்டுமே ஏவப்படுவாய்; நீ உள்ளே பலப்படுவதை உணருவாய், மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு இன்பத்தையும் சமாதானத்தையும் உணருவாய், ஆனால் ஆழமாக எதையும் நீ புரிந்துகொள்ள மாட்டாய். நான் முன்பு சொல்லியிருக்கிறேன்: ஜனங்கள் தங்கள் பலத்தின் ஒவ்வொரு பகுதியையும் பயன்படுத்தாவிட்டால், அவர்களால் என் சத்தத்தைக் கேட்பதற்கோ அல்லது என் முகத்தைப் பார்ப்பதற்கோ அவர்களுக்குக் கடினமாக இருக்கும். இது தேவனுக்கு முன்பாக ஒருவரின் சமாதானத்தில் ஆழத்தை அடைவதைக் குறிக்கிறது, மேலோட்டமான முயற்சிகளை மேற்கொள்வதை அல்ல. தேவனுடைய சமூகத்தில் உண்மையிலேயே சமாதானமாக இருக்கக்கூடிய ஒரு நபரால் சகல உலக உறவுகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ளவும், தேவனால் ஆட்கொள்ளுதலை அடையவும் முடியும். தேவனுடைய சமூகத்தில் சமாதானமாக இருக்க இயலாத எல்லோரும் நிச்சயமாகவே சீர்கெட்டவர்களாகவும், கட்டுப்பாடற்றவர்களாகவும் இருக்கின்றனர். தேவனுக்கு முன்பாக சமாதானமாக இருக்கக்கூடிய எல்லோருமே தேவனுக்கு முன்பாக பக்தியுள்ளவர்களாகவும், தேவனுக்காக ஏங்குகிறவர்களாகவும் இருக்கின்றனர். தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பவர்கள் மட்டுமே ஜீவனை மதிக்கின்றனர், ஆவியில் ஐக்கியப்படுவதை மதிக்கின்றனர், தேவனுடைய வார்த்தைகளுக்காகத் தாகம் கொள்கின்றனர், மற்றும் சத்தியத்தை நாடுகின்றனர். தேவனுக்கு முன்பாக சமாதானமாக இருப்பதை மதிக்காதவர்கள், தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பதைப் பயிற்சி செய்யாதவர்கள் வீணர்களாகவும், மேலோட்டமானவர்களாகவும், உலகத்துடன் இணைக்கப்பட்டு, ஜீவன் இல்லாதவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் தேவனை நம்புவதாகச் சொன்னாலும், அவர்கள் உதட்டளவில் மட்டுமே ஆராதனை செய்கின்றனர். தேவன் யாரை இறுதியில் பரிபூரணப்படுத்துகிறாரோ அவர்களே அவருடைய சமூகத்தில் சமாதானமாக இருக்கக்கூடியவர்கள். ஆகவே, தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பவர்கள் பெரிதான ஆசீர்வாதங்களால் அலங்கரிக்கப்படுவார்கள். நாள் முழுவதும் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ண அரிதாகவே நேரம் எடுத்துக்கொள்பவர்கள், வெளி விவகாரங்களில் மும்முரமாக ஈடுபடுத்திக்கொள்கிற, ஜீவ பிரவேசத்திற்கு சிறிதளவு மதிப்பு கொடுக்கிற எல்லோரும் எதிர்கால வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பு இல்லாத மாயக்காரர்கள். தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்கக்கூடியவர்களும், தேவனுடன் உண்மையாக ஐக்கியம் கொள்ளுகிறவர்களும் தேவனுடைய ஜனங்களாக இருக்கின்றனர்.

அவருடைய வார்த்தைகளை உன் ஜீவனாக ஏற்றுக்கொள்ள தேவனுக்கு முன்பாக வருவதற்கு, நீ முதலில் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க வேண்டும். தேவனுக்கு முன்பாக நீ சமாதானமாக இருக்கும்போதுதான், தேவன் உனக்கு அறிவூட்டுவார், உனக்கு அறிவைக் கொடுப்பார். ஜனங்கள் எவ்வளவு அதிகமாக தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்களால் தேவனுடைய அறிவூட்டுதலையும் வெளிச்சத்தையும் பெற முடிகிறது. இதற்கெல்லாம் ஜனங்கள் பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு மட்டுமே அவர்களால் பரிபூரணமாக்கப்பட முடியும். ஆவிக்குரிய ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்கான அடிப்படை பாடம் என்னவென்றால் தேவனுடைய சமூகத்தில் சமாதானமாக இருப்பதுதான். தேவனுடைய சமூகத்தில் நீ சமாதானமாக இருந்தால் மட்டுமே, உன் ஆவிக்குரிய பயிற்சி அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும். தேவனுக்கு முன்பாக உன் இருதயத்தால் சமாதானமாக இருக்க முடியவில்லை என்றால், உன்னால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற முடியாது. நீ என்ன செய்தாலும், உன் இருதயம் தேவனுக்கு முன்பாக சமாதானமாக இருந்தால், அப்போதுதான் நீ தேவனுடைய சமூகத்தில் ஜீவிக்கும் ஒருவனாக இருக்கிறாய். நீ என்ன செய்தாலும், உன் இருதயம் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருந்து தேவனிடத்தில் கிட்டிச் சேர்ந்தால், நீ தேவனுக்கு முன்பாக சமாதானமாக இருக்கும் ஒரு நபர் என்பதை இது நிரூபிக்கிறது. நீ மற்றவர்களுடன் பேசும்போது, அல்லது நடக்கும்போது, “என் இருதயம் தேவனிடம் நெருங்கிக் கொண்டிருக்கிறது, வெளிப்புற காரியங்களில் கவனம் செலுத்துவதில்லை, என்னால் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடிகிறது,” என்று உன்னால் சொல்ல முடிந்தால், நீ தேவனுக்கு முன்பாக சமாதானமாக இருக்கக்கூடிய ஒருவன். உன் இருதயத்தை வெளிப்புறக் காரியங்களுக்கு நேராக இழுக்கும் எந்தவொரு காரியத்திலும் அல்லது உன் இருதயத்தைத் தேவனிடமிருந்து பிரிக்கும் நபர்களுடனும் ஈடுபடக் கூடாது. தேவனுடன் நெருக்கமாக இருப்பதிலிருந்து உன் இருதயத்தைத் திசைதிருப்பும் எதையும் ஒதுக்கி வை அல்லது அதிலிருந்து விலகி இரு. இது உன் ஜீவனுக்குப் பெரிதும் நன்மை பயக்கும். பரிசுத்த ஆவியானவரின் மாபெரும் கிரியைக்கான நேரம் துல்லியமாக இப்போது தான் வந்திருக்கிறது, இதுவே தேவன் தனிப்பட்ட முறையில் ஜனங்களை பரிபூரணமாக்கும் நேரமாகும். இந்த நேரத்தில், உன்னால் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியவில்லை என்றால், நீ தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக வரக்கூடிய ஒருவன் அல்ல. நீ தேவனைத் தவிர வேறு காரியங்களை நாடினால், நீ தேவனால் பரிபூரணமாக்கப்பட வழியே இருக்காது. தேவனிடமிருந்து இத்தகைய பேச்சுகளைக் கேட்டும், இன்று அவருக்கு முன்பாக சமாதானமாக இருக்கத் தவறியவர்கள் சத்தியத்தை நேசிக்காதவர்களாகவும், தேவனை நேசிக்காதவர்களாகவும் இருக்கின்றனர். நீ இந்த நேரத்தில் உன்னைக் கொடுக்கவில்லை என்றால், நீ எதற்காகக் காத்திருக்கிறாய்? ஒருவரைக் கொடுப்பது என்றால் தேவனுக்கு முன்பாக ஒருவரின் இருதயத்தை அமைதிப்படுத்துவதாகும். அது ஓர் உண்மையான காணிக்கையாக இருக்கும். இப்பொழுது யாரெல்லாம் உண்மையிலேயே தங்கள் இருதயத்தை தேவனுக்குக் கொடுக்கிறார்களோ அவர்கள் தேவனால் பரிபூரணமாக்கப்படுவது உறுதி. அது எதுவாக இருந்தாலும், எதுவும் உன்னைத் தொந்தரவு செய்ய முடியாது. அது உன்னைக் கிளைநறுக்குவதாக இருக்கட்டும் அல்லது உன்னைக் கையாள்வதாக இருக்கட்டும் அல்லது நீ விரக்தியையோ அல்லது தோல்வியையோ சந்திப்பதாக இருக்கட்டும், உன் இருதயம் எப்போதும் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க வேண்டும். ஜனங்கள் உன்னை எப்படி நடத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல, உன் இருதயம் தேவனுக்கு முன் சமாதானமாக இருக்க வேண்டும். நீ எந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டாலும், நீ இன்னல், துன்பம், துன்புறுத்தல் அல்லது பல்வேறு உபத்திரவங்களால் சூழப்பட்டிருந்தாலும், உன் இருதயம் எப்போதும் தேவனுக்கு முன் சமாதானமாக இருக்க வேண்டும். பரிபூரணமாக்கப்படுவதற்கான பாதைகள் இவையே. தேவனுக்கு முன்பாக நீ உண்மையிலேயே சமாதானமாக இருக்கும்போதுதான், தேவனுடைய தற்போதைய வார்த்தைகள் உனக்குத் தெளிவாகத் தெரியும். பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்திற்கும் அறிவூட்டுதலுக்கும் வேறுபாடு இல்லாமல் உன்னால் இன்னும் சரியாகப் பயிற்சி செய்ய முடியும், உன் ஊழியத்திற்கு ஒரு தெளிவான வழிகாட்டுதலைக் கொடுக்கும் தேவனுடைய நோக்கங்களை மிகவும் தெளிவுடன் புரிந்துகொள்ள முடியும், பரிசுத்த ஆவியானவரின் ஏவப்படுதலையும் வழிகாட்டுதலையும் இன்னும் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும், மேலும் பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின் கீழ் ஜீவிப்பது குறித்து உறுதியாக இருக்க முடியும். உண்மையிலேயே தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பதன் மூலம் அடையக்கூடிய பலன்கள் இவைகளே. ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளைப் பற்றித் தெளிவில்லாதிருத்தல், பயிற்சி செய்ய பாதை இல்லாதது, தேவனுடைய நோக்கங்களை புரிந்துகொள்ளத் தவறுவது அல்லது நடைமுறைக் கொள்கைகள் இல்லாதது, இவைகளே தங்கள் இருதயங்கள் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இல்லாததற்குக் காரணமாகும். வாஞ்சையோடும் நடைமுறையாகவும் இருப்பதும், தேவனுடைய வார்த்தைகளில் சரிபடுத்தும் தன்மையையும் வெளிப்படைத் தன்மையையும் தேடுவதும், இறுதியாகச் சத்தியத்தைப் புரிந்துகொள்வதும் தேவனை அறிந்துகொள்வதும் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பதன் நோக்கமாகும்.

உன் இருதயம் பெரும்பாலும் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இல்லையென்றால், தேவன் உன்னைப் பரிபூரணமாக்குவதற்கு வழியே இல்லை. மனவுறுதியில்லாமல் இருப்பது இருதயம் இல்லாததற்குச் சமமாகும், இருதயம் இல்லாத ஒருவரால் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியாது. இத்தகைய நபருக்கு தேவன் எந்த அளவிற்குக் கிரியைச் செய்கிறார், அல்லது அவர் எவ்வளவு பேசுகிறார் என்பதோ அல்லது எவ்வாறு பயிற்சி செய்வது என்பதோ தெரியாது. இவர் இருதயம் இல்லாத ஒரு நபரல்லவா? இருதயம் இல்லாத ஒருவரால் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியுமா? இருதயம் இல்லாமல் ஜனங்களைப் பரிபூரணப்படுத்துவதற்கு தேவனுக்கு வழியே இல்லை, அவர்கள் பாரம் சுமக்கும் மிருகங்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்லர். தேவன் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் பேசியிருக்கிறார், ஆனாலும் உன் இருதயம் அசையாமல் இருக்கிறது, மேலும் நீ தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியாமல் இருக்கிறாய். நீ ஓர் ஊமையான மிருகம் அல்லவா? தேவனுடைய சமூகத்தில் சமாதானமாக இருப்பதைப் பயிற்சி செய்வதில் சிலர் வழிதவறுகின்றனர். சமைக்கும் நேரம் வரும்போது, அவர்கள் சமைப்பதில்லை, வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டிய நேரம் வரும்போது, அவர்கள் அவற்றைச் செய்வதில்லை, ஆனால் தொடர்ந்து ஜெபமும் தியானமும் செய்கின்றனர். தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பது என்றால் சமைக்காமல் அல்லது வீட்டு வேலைகளைச் செய்யாமல், அல்லது ஒருவருடைய ஜீவியத்தை ஜீவிக்காமல் இருப்பது என்று அர்த்தமல்ல; மாறாக, எல்லா சாதாரண நிலைகளிலும் தேவனுக்கு முன்பாக ஒருவருடைய இருதயத்தை அமைதிப்படுத்தவும், ஒருவருடைய இருதயத்தில் தேவனுக்கு ஓர் இடத்தைக் கொண்டிருக்கவும் முடிவதாகும். நீங்கள் ஜெபம் செய்யும்போது, ஜெபிக்கும்படி தேவனுக்கு முன்பாக ஒழுங்காக முழங்காற்படியிட வேண்டும். நீங்கள் வீட்டு வேலைகளைச் செய்யும்போது அல்லது உணவைத் தயார் செய்யும்போது, தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்தி, தேவனுடைய வார்த்தைகளைச் சிந்தியுங்கள் அல்லது கீர்த்தனைகளைப் பாடுங்கள். நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், நீங்கள் பயிற்சி செய்வதற்கு உங்களிடம் உங்கள் சொந்த வழி இருக்க வேண்டும், தேவனிடம் நெருங்கி வர உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், மேலும் தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்த உங்கள் முழு பலத்தோடு முயற்சி செய்ய வேண்டும். சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது, ஒருமனதோடு ஜெபம் செய்யுங்கள். சூழ்நிலைகள் அனுமதிக்காதபோது, கையிலுள்ள பணியைச் செய்யும்போது உங்கள் இருதயத்தில் தேவனிடம் நெருங்கி வாருங்கள். உங்களால் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ண முடியும்போது, அவருடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுங்கள்; உங்களால் ஜெபம் பண்ண முடியும்போது, ஜெபம் பண்ணுங்கள். உங்களால் தேவனைப் பற்றிச் சிந்திக்க முடியும்போது, அவரைப் பற்றிச் சிந்தியுங்கள். வேறு வார்த்தைகளில் சொல்லுவதென்றால், உங்கள் சூழலுக்கு ஏற்ப பிரவேசிப்பதற்கு உங்களைப் பயிற்றுவிக்க உங்களால் முடிந்தவற்றையெல்லாம் செய்யுங்கள். எந்தக் காரியமும் இல்லாதபோது சிலரால் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியும், ஆனால் ஏதாவது நடந்தவுடன், அவர்களுடைய மனம் அலைந்து திரிகிறது. அது தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பது அல்ல. அனுபவத்திற்கான சரியான வழி என்னவென்றால்: எந்தச் சூழ்நிலையிலும் ஒருவருடைய இருதயம் தேவனிடமிருந்து விலகாமல் அல்லது வெளி நபர்கள், நிகழ்வுகள் அல்லது காரியங்களால் தொந்தரவடையாமல் இருக்க முடியுமானால், அப்போதுதான் ஒருவர் தேவனுக்கு முன்பாக உண்மையிலேயே சமாதானமாக இருக்கிறார். சபைக் கூட்டங்களில் ஜெபம் செய்யும்போது, தங்கள் இருதயங்களால் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியும், ஆனால் மற்றவர்களுடனான ஐக்கியத்தில் அவர்கள் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடிவதில்லை, அவர்களுடைய எண்ணங்கள் தாறுமாறாக ஓடுகின்றன. இது தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பது அல்ல. இன்று, பெரும்பாலான ஜனங்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றனர், அவர்களுடைய இருதயங்களால் தேவனுக்கு முன்பாக எப்போதும் சமாதானமாக இருக்க முடிவதில்லை. ஆகவே, இந்தப் பகுதியில் உங்களைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும், படிப்படியாக, ஜீவ அனுபவத்தின் சரியான பாதையில் பிரவேசித்து, தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கான பாதையை ஏற்றுக்கொள்ளுங்கள்.

முந்தைய: தங்கள் மனநிலையில் மாற்றம் அடைந்தவர்களே தேவனுடைய வார்த்தைகளைக் குறித்த யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பவர்கள்

அடுத்த: பரிபூரணத்தை அடைவதற்கு தேவனுடைய சித்தத்தைக் குறித்து கவனமுள்ளவர்களாய் இருங்கள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக