ஒவ்வொருவரும் அவர்களுடைய செயல்பாட்டைச் செயல்படுத்துதல் மேல்

தற்போதைய காலகட்டத்தில், தேவனை உண்மையாக நேசிக்கும் அனைவரும் அவரால் பரிபூரணப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் வாலிபர்களாக இருந்தாலும், வயதானவர்களாக இருந்தாலும், தேவனுக்குக் கீழ்ப்படிதலை தங்கள் இருதயங்களில் வைத்து அவரைப் போற்றும் வரை, அவர்கள் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட முடியும். தேவன் மக்களின் வெவ்வேறு செயல்பாடுகளுக்கு ஏற்ப அவர்களைப் பரிபூரணப்படுத்துகிறார். நீ உன் பலத்தை முழுமையாகப் பயன்படுத்தி, தேவனுடைய கிரியைக்குக் கீழ்ப்டிந்து நடக்கும் வரை, நீ அவரால் பரிபூரணப்படுத்தப்படுவாய். தற்போதைய நிலையில், நீங்கள் யாருமே பரிபூரணமானவர்கள் அல்ல. சில நேரங்களில் நீங்கள் ஒருவகைச் செயல்பாட்டைச் செய்யும் திறனுள்ளவர்களாக இருக்கிறீர்கள், மற்ற நேரங்களில் நீங்கள் இருவகை செயல்பாடுகளைச் செய்யும் திறனுள்ளவர்களாக இருக்கிறீர்கள். தேவனுக்காக எந்தளவுக்கு உங்களையே நீங்கள் செலவழிக்க முயற்சி செய்கிறீர்களோ, அந்தளவுக்கு நீங்கள் அவரால் பரிபூரணமடைவீர்கள்.

வாலிபர்கள் வாழ்வதற்கு சில தத்துவங்கள் இருக்கின்றன, அவர்கள் ஞானத்திலும் நுண்ணறிவிலும் குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள். மனிதனின் ஞானத்தையும் நுண்ணறிவையும் பரிபூரணப்படுத்தவே தேவன்வருகிறார். அவருடைய வார்த்தை அவர்களுடைய குறைபாடுகளைச் சரிசெய்கிறது. இருப்பினும், வாலிபர்களின் மனநிலைகள் நிலையற்றதாக இருப்பதால், அவை தேவனால் மறுரூபப்படுத்தப்பட வேண்டும். வாலிபர்களுக்கு மதக் கருத்துக்களும், வாழ்வதற்கான தத்துவங்களும் குறைந்தளவில்தான் உள்ளன; அவர்கள் எல்லாவற்றையும் எளிமையான அர்த்தங்களில் சிந்திக்கிறார்கள், அவர்களுடைய பிரதிபலிப்புகள் சிக்கலானவை அல்ல. இது இன்னும் வடிவம் பெறாத அவர்களது மனிதத்தன்மையின் ஒரு பகுதியாக இருக்கிறது, இது பாராட்டத்தக்கதாகும்; இருப்பினும், வாலிபர்கள் அறியாதவர்களாகவும், ஞானத்தில் குறைவுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இது தேவனால் பரிபூரணப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. தேவனால் நீங்கள் பரிபூரணப்படுத்தப்பட இருப்பது உங்களுக்கு விவேகத்தை வளர்க்க உதவும். ஆவிக்குரிய பல விஷயங்களை உங்களால் தெளிவாகப் புரிந்துகொண்டு, படிப்படியாக தேவனால் பயன்படுத்தக்கூடிய தகுதியான ஒருவராக மாறுவீர்கள். மூத்த சகோதர சகோதரிகளும் அவர்களால் செயல்படுத்தக் கூடிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளனர், அவர்கள் தேவனால் கைவிடப்படுவதில்லை. மூத்த சகோதர சகோதரிகளும் விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத அம்சங்களைக் கொண்டுள்ளனர். வாழ்வதற்கான தத்துவங்களும், மதக் கருத்துக்களும் அவர்களுக்கு அதிகமாகவே உள்ளன. அவர்களுடைய செயல்களில், பல கடுமையான மரபுகளை கடைபிடிக்கின்றனர், இயந்திரத்தனமாகவும் நெகிழ்வுத்தன்மை இன்றியும் பொருந்தும் விதிமுறைகளை விரும்புகின்றனர். இது ஒரு விரும்பத்தகாத அம்சமாகும். இருப்பினும், இந்த மூத்த சகோதர சகோதரிகள் எது நடந்தாலும் அமைதியாகவும் உறுதியுடனும் இருக்கிறார்கள்; அவர்களது மனநிலைகள் நிலையானவை, மேலும் அவர்கள் கொந்தளிப்பான மனநிலைகளைக் கொண்டிருக்கவில்லை. விஷயங்களை ஏற்றுக்கொள்வதில் வேண்டுமானால் அவர்கள் தாமதமாக இருக்கலாம், ஆனால் இது ஒரு பெரிய தவறு அல்ல. நீங்கள் உங்களை தேவனிடம் சமர்ப்பிக்கும் வரை; தேவனின் தற்போதைய வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்காமல் நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வரை; நீங்கள் உங்களை அவரிடம் சரணடைய மற்றும் அவரைப் பின்பற்றுவதில் மட்டுமே அக்கறை செலுத்தும் வரை, தேவனுடைய வார்த்தைகளின்மேல் ஒருபோதும் தீர்ப்பை வழங்காமல் அல்லது அவற்றைப் பற்றிய பிற தவறான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளாத வரை; நீங்கள் அவருடைய வார்த்தைகளை ஏற்று அதன்படி நடந்துகொள்ளும் வரை—என இவ்வாறான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், நீங்கள் பரிபூரணராக முடியும்.

நீங்கள் ஒரு வாலிபரோ அல்லது மூத்த சகோதரனோ அல்லது சகோதரியோ, நீங்கள் செய்ய வேண்டிய உங்களுக்கான செயல்பாடு உங்களுக்குத் தெரியும். வாலிபப்பிராயத்தில் இருப்பவர்கள் ஆணவம் கொண்டவர்களும் அல்ல; வயதானவர்கள் செயலற்றவர்களோ அல்லது பின்வாங்குபவர்களோ அல்ல. மேலும், அவர்களால் தங்கள் பலவீனங்களை ஈடுசெய்ய ஒருவருக்கொருவர் பலத்தைப் பயன்படுத்த முடிகிறது, மேலும் அவர்களால் எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் ஒருவருக்கொருவர் சேவை செய்யவும் முடியும். வாலிப மற்றும் மூத்த சகோதர சகோதரிகளுக்கிடையில் நட்புப் பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது, மேலும்தேவனுடைய அன்பின் நிமித்தமாக, உங்களால் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. வாலிப சகோதர சகோதரிகள் மூத்த சகோதர சகோதரிகளை இழிவாகப் பார்ப்பதும் இல்லை, மூத்த சகோதர சகோதரிகள் சுயநீதியுள்ளவர்களும் இல்லை: இது ஓர் இணக்கமான கூட்டு அல்லவா? உங்கள் அனைவருக்கும் அத்தகைய தீர்மானம் இருந்தால், உங்கள் தலைமுறையில் தேவனின் சித்தம் நிச்சயமாக நிறைவேறும்.

எதிர்காலத்தில், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பீர்களா அல்லது சபிக்கப்பட்டவர்களாக இருப்பீர்களா என்பது இன்றைய உங்களுடைய செயல்கள் மற்றும் நடத்தை அடிப்படையில் தீர்மானிக்கப்படும். தேவனால் நீங்கள் பரிபூரணப்படுத்தப்பட வேண்டும் என்றால், அது இப்போதே இந்த சகாப்தத்திலேயே நடக்க வேண்டும்; எதிர்காலத்தில் மற்றொரு வாய்ப்பு இருக்காது. தேவன் உண்மையிலேயே உங்களை இப்போது பரிபூரணப்படுத்த விரும்புகிறார், இது வெறும் பேச்சுக்காக இல்லை. எதிர்காலத்தில், உங்களுக்கு என்ன சோதனைகள் ஏற்படவிருந்தாலும், என்ன நிகழ்வுகள் நடக்கவிருந்தாலும், அல்லது நீங்கள் என்ன பேரழிவுகளை எதிர்கொள்ளவிருந்தாலும், தேவன் உங்களை பரிபூரணப்படுத்த விரும்புகிறார்; இது ஒரு திட்டவட்டமான மற்றும் மறுக்க முடியாத உண்மை. இதை எங்கே காண முடியும்? தேவனுடைய வார்த்தை, யுகங்கள் மற்றும் தலைமுறைகள் கடந்து, இன்று இருப்பதைப் போல முன்பு ஒரு பெரிய உயரத்தை எட்டியிருக்கவில்லை என்ற உண்மையில் காணலாம். இது மிக உயர்ந்த சாம்ராஜ்யத்திற்குள் நுழைந்துள்ளது, மனிதகுலம் அனைத்திலும் இன்றளவில் இருக்கும் பரிசுத்த ஆவியின் செயல்பாடு இதற்கு முன் நடக்காதவையாக இருக்கிறது. கடந்த தலைமுறைகளைச் சேர்ந்த எவருக்கும் இதுபோன்ற அனுபவம் இல்லை; இயேசுவின் காலத்தில் கூட இன்றைய வெளிப்பாடுகள் இருக்கவில்லை. உங்களிடத்தில் பேசப்பட்ட வார்த்தைகள், அவற்றிலிருந்து நீங்கள் புரிந்துகொண்டது மற்றும் உங்கள் அனுபவம் என அனைத்தும் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளன. சோதனைகள் மற்றும் சிட்சைகளுக்கு மத்தியிலும் கூட நீங்கள் வெளியேறுவதில்லை. இதுவே தேவனுடைய செயலானது முன்னெப்போதும் இல்லாத ஒரு பிரகாசத்தை அடைந்துள்ளது என்பதற்குப் போதுமான சான்று. இது மனிதனால் செய்யக்கூடிய ஒன்று அல்ல, மனிதன் பராமரிக்கப்படும் ஒன்றும் அல்ல; மாறாக, இது தேவனுடைய வேலையாயிருக்கிறது. ஆகவே, தேவனுடைய கிரியையின் பல யதார்த்தங்களிலிருந்து, அவர் மனிதனை பரிபூரணப்படுத்த விரும்புகிறார் என்பதைக் காணலாம், மேலும் அவர் உங்களை நிச்சயமாக முழுமையாக்குவார். நீங்கள் இந்த நுண்ணறிவைக் கொண்டு, இந்தப் புதிய கண்டுபிடிப்பைச் செய்தால், இயேசுவின் இரண்டாவது வருகைக்காக நீங்கள் காத்திருக்க மாட்டீர்கள்; அதற்குப் பதிலாக, தற்போதைய யுகத்திலேயே உங்களை முழுமையாக்க தேவனை அனுமதிப்பீர்கள். ஆகையால், நீங்கள் ஒவ்வொருவரும் எந்த முயற்சியையும் விட்டுவிடாமல், உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், நீங்கள் தேவனால் பரிபூரணப்படுத்தப்படலாம்.

இப்போது, எதிர்மறையான விஷயங்களுக்கு நீங்கள் கவலைப்படக்கூடாது. முதலில், உன்னை எதிர்மறையாக உணர வைக்கக் கூடிய எதையும் ஒதுக்கி வைத்துப் புறக்கணிக்க வேண்டும். நீ விவகாரங்களைக் கையாளும் போது, தேவனிடம் சரணடையும் இதயத்துடனும், முன்னோக்கிய பாதையை தேடும் மற்றும் உணரும் இதயத்துடனும் அவ்வாறு செய்யவும். நீங்கள் உங்களுக்குள் ஒரு பலவீனத்தைக் கண்டறியும் போதெல்லாம், அது உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள், அது இருந்தபோதிலும், நீங்கள் செய்ய வேண்டிய செயல்பாடுகளைச் செய்யுங்கள், அவ்வாறு செய்தால் நீங்கள் ஒரு சாதகமான முன்னேற்றத்தை மேற்கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம். உதாரணமாக, உன்னுடைய மூத்த சகோதர சகோதரிகள் மதக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள், ஆனாலும் உன்னால் தேவனிடத்தில் ஜெபிக்கவும், அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கவும், தேவனுடைய வார்த்தைகளைப் புசிக்கவும், பானம்பண்ணவும், பாடல்களைப் பாடவும் முடிகிறது…. இதன் மூலம் நீ அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், உன்னால் என்ன செய்ய முடியுமோ, எந்தச் செயல்பாடுகளை உன்னால் செய்ய முடியுமோ அதற்காக உன்னால் முடிந்தளவுக்கு அனைத்து வலிமையையும் ஒன்றுதிரட்டி உன்னையே நீ அர்ப்பணிக்க வேண்டும் என்பதாகும். செயலற்ற முறையில் காத்திருக்க வேண்டாம். உன்னுடைய கடமையின் செயல்பாட்டில் தொடர்ந்து தேவனை திருப்திப்படுத்துவதே உனது முதல் படியாகும். பின்னர், உன்னால் சத்தியத்தைப் புரிந்துகொள்ள முடிந்து, தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நுழைய முடிந்தால், நீ அவரால் பரிபூரணப்படுத்தப்பட்டிருபாய்.

முந்தைய: சபை வாழ்க்கை மற்றும் யதார்த்த வாழ்க்கையை விவாதித்தல்

அடுத்த: தேவன் மனிதனைப் பயன்படுத்துவது பற்றி

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக