தேவன் மனிதனைப் பயன்படுத்துவது பற்றி

பரிசுத்த ஆவியானவரால் விசேஷித்த ஆலோசனையும் வழிகாட்டுதலும் கொடுக்கப்படுபவர்களைத் தவிர வேறு யாராலும் சுதந்திரமாக வாழ முடியாது, ஏனெனில் அவர்களுக்கு தேவனால் பயன்படுத்தப்படுபவர்களின் ஊழியமும் வழிநடத்துதலும் தேவைப்படுகிறது. இவ்வாறு, ஒவ்வொரு காலத்திலும் தமது கிரியைக்காகச் சபைகளில் சுறுசுறுப்பாக மேய்ப்பன் ஊழியத்தைச் செய்யும் வெவ்வேறு மனுஷர்களை தேவன் எழுப்புகிறார். அதாவது, தேவனின் கண்களில் தயை பெற்று அவரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மூலமே அவருடைய கிரியை செய்யப்பட வேண்டும்; பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதற்கு, அவர்களுக்குள் பயன்படுத்தத் தகுதியான பகுதியைப் பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்த வேண்டும், மேலும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் பரிபூரணப்படுத்தப்பட்டதன் மூலம் தேவனால் பயன்படுத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மனுஷனின் புரிந்துகொள்ளும் திறன் குறைவாக இருப்பதால், அவன் தேவனால் பயன்படுத்தப்படுகிறவர்களால் வழிநடத்தப்பட வேண்டும்; மோசேயை தேவன் பயன்படுத்தியதும் இது போன்றதே. மோசேயிடம் அந்நேரத்தில் பயன்படுத்துவதற்குப் பொருத்தமானவை அதிகமாக இருந்ததை அவர் கண்டார், மேலும் அந்த நிலையில் அதை அவர் தேவனின் கிரியையைச் செய்ய பயன்படுத்தினார். இந்த நிலையிலும், கிரியை செய்வதற்காகப் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படக் கூடிய ஒரு மனுஷனின் பகுதியைச் சாதகமாகக் கொண்டு தேவன் அவனைப் பயன்படுத்துகிறார், மேலும் பரிசுத்த ஆவியானவர் அவனை வழிநடத்தும் அதே வேளையில் மீதியாய் இருக்கும் பயன்படுத்த முடியாத பகுதியைப் பரிபூரணப்படுத்துகிறார்.

தேவனால் பயன்படுத்தப்படுகிற ஒருவனால் செய்யப்படும் கிரியை கிறிஸ்து அல்லது பரிசுத்த ஆவியானவரின் கிரியையுடன் ஒத்துழைப்பதற்காகவே செய்யப்படுகிறது. இந்த மனுஷன் மனுஷர்களின் நடுவில் இருந்து தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரையும் வழிநடத்த தேவனால் எழுப்பப்படுகிறான், மேலும் இவன் மனுஷ ஒத்துழைப்பின் கிரியையைச் செய்ய தேவனால் எழுப்பப்படுகிறான். மனுஷ ஒத்துழைப்பின் கிரியையைச் செய்யக் கூடிய இப்படிப்பட்ட ஒருவனைக் கொண்டு, இன்னும் அதிகமான மனுஷனுக்கான தேவனின் தேவைகளையும், மனுஷனின் மத்தியில் பரிசுத்த ஆவியானவர் செய்யவேண்டிய கிரியையையும் அவன் மூலம் செய்ய முடியும். இதை இன்னொரு வகையில் இப்படிச் சொல்லலாம்: இந்த மனுஷனை தேவன் பயன்படுத்துவதன் நோக்கம் என்னவென்றால், தேவனைப் பின்பற்றும் யாவரும் தேவனின் சித்தத்தைச் சிறந்த முறையில் புரிந்து கொள்ள முடியும், தேவனின் கோரிக்கைகளை இன்னும் அதிகமாக நிறைவேற்ற முடியும். தேவனின் வார்த்தைகளை அல்லது தேவனின் சித்தத்தை ஜனங்களால் நேரடியாகப் புரிந்துகொள்ள முடியாததால், இத்தகைய கிரியையைச் செய்ய யாராவது ஒருவனை தேவன் எழுப்புகிறார். தேவனால் பயன்படுத்தப்படும் இந்த நபரை மத்தியஸ்தன் என விளக்கலாம். தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியில் தொடர்புகொள்ளும் ஒரு “மொழிபெயர்ப்பாளன்” போல இவன் மூலம் தேவன் ஜனங்களை வழிநடத்துகிறார். இவ்வாறு, இப்படிப்பட்ட மனுஷன் தேவனுடைய வீட்டில் பணி செய்பவர்களையோ அல்லது அவருடைய அப்போஸ்தலர்களையோ போன்றவன் அல்ல. அவர்களைப் போல, தேவனை சேவிக்கிற ஒருவன் எனச் சொல்லலாம், எனினும் அவன் செய்யும் வேலையின் தன்மையிலும் அவனை தேவன் பயன்படுத்தும் பின்னணியிலும் அவன் பெருமளவில் மற்ற ஊழியக்காரர்களிலும் அப்போஸ்தலர்களிலும் இருந்து வேறுபடுகிறான். அவனுடைய வேலையின் சாராம்சம் மற்றும் அவன் பயன்படுத்தப்படும் பின்புலம் ஆகியவற்றின் அடிப்படையில், தேவனால் பயன்படுத்தப்படுகிற மனுஷன் அவரால் எழுப்பப்படுகிறான், அவன் தேவனுடைய கிரியைக்காக தேவனால் ஆயத்தப்படுத்தப்படுகிறான், மேலும் அவன் தேவனின் சொந்தக் கிரியையிலேயே ஒத்துழைக்கிறான். அவனுக்குப் பதிலாக வேறு எவரும் அவனுடைய வேலையைச் செய்ய முடியாது—இது தேவ கிரியையோடு கூட தவிர்க்க முடியாததாக இருக்கும் மனுஷ ஒத்துழைப்பாகும். அதேநேரத்தில், மற்ற ஊழியக்காரர்கள் அல்லது அப்போஸ்தலர்களால் செய்யப்படும் கிரியை என்பது, ஒவ்வொரு காலகட்டத்திலும் சபைகளுக்கான ஏற்பாடுகளின் பல அம்சங்களின் அனுப்புதலும் நடைமுறைப்படுத்தலும் ஆகும், அல்லது சபை வாழ்க்கையைப் பராமரிப்பதற்கான சில எளிய வாழ்க்கை நியதிக்கான கிரியை ஆகும். இந்த ஊழியக்காரர்களும் அப்போஸ்தலர்களும் தேவனால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படுபவர்கள் என்றும் கூறமுடியாது. அவர்கள் சபைகளின் மத்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், மேலும் ஒரு கால அளவிற்கு அவர்கள் பயிற்சிபெற்று பண்படுத்தப்பட்ட பின்னர், அவர்களில் தகுதியானவர்கள் வைக்கப்பட்டு தகுதியற்றவர்கள் அவர்கள் வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் சபைகளின் நடுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால், தலைவர்கள் ஆன பின்னர் அவர்கள் தங்கள் சுயரூபத்தைக் காட்டுகிறார்கள், மேலும் சிலர் மோசமான செயல்களையும் கூட செய்து முடிவில் புறம்பாக்கப்படுகிறார்கள். மாறாக, தேவனால் பயன்படுத்தப்படும் மனுஷன், தேவனால் ஆயத்தப்படுத்தப்படுகிறான், மேலும் சில திறன்களைக் கொண்டவனாய் இருக்கிறான், மேலும் மனிதத்தன்மை உள்ளவனாய் இருக்கிறான். அவன் முன்கூட்டியே பரிசுத்த ஆவியானவரால் ஆயத்தப்படுத்தப்பட்டு பரிபூரணப்படுத்தப்படுகிறான், மேலும் அவன் முழுமையாகப் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறான், மற்றும் குறிப்பாக அவனுடைய கிரியை என்று வரும்போது, அவன் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு கட்டளையிடப்படுகிறான்—இதனால் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வழிநடத்தும் பாதையில் எந்தத் திசைமாற்றமும் இல்லை, ஏனெனில் தேவன் தமது சொந்தக் கிரியைக்கு நிச்சயமாகப் பொறுப்பை எடுத்துக்கொள்ளுகிறார், மேலும் தேவன் தமது சொந்தக் கிரியையையே எல்லா நேரமும் செய்கிறார்.

முந்தைய: ஒவ்வொருவரும் அவர்களுடைய செயல்பாட்டைச் செயல்படுத்துதல் மேல்

அடுத்த: நீங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டவுடன், அதன்படி நடக்க வேண்டும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்

ஜீவனுக்கான வழி என்பது யாரும் வைத்திருக்கக்கூடிய ஏதோ ஒன்றல்ல, யாரும் எளிதில் அடையக்கூடிய ஒன்றும் அல்ல. ஏனென்றால், ஜீவனானது தேவனிடமிருந்து...

இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்

நீ இயேசுவைப் பார்க்க விரும்புகிறாயா? நீ இயேசுவோடு வாழ விரும்புகிறாயா? இயேசு பேசிய வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறாயா? அப்படியானால்,...

மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்

பல்லாயிரம் ஆண்டுகள் சீர்கேட்டுக்குப் பிறகு, மனிதன் உணர்வற்றவனாக, மந்த அறிவுள்ளவனாக இருக்கிறான்; தேவனைப் பற்றின மனிதனுடைய கலகத்தன்மை...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக