அத்தியாயம் 1

“என் வார்த்தைகளின் வேரை யாராலும் புரிந்து கொள்ள முடியாது, அவைகளைப் பேசுவதற்கான என் நோக்கத்தையும் அவர்கள் அறியார்கள்” என்று தேவன் கூறியிருக்கிறது போல், தேவனுடைய ஆவியானவரின் வழிகாட்டுதல் இல்லாவிட்டால், மேலும் அவருடைய வார்த்தைகளின் வருகை இல்லாவிட்டால், எல்லா ஜனங்களும் அவரது சிட்சையின் கீழ் அழிந்துவிடுவார்கள். எல்லா ஜனங்களையும் சோதிக்க தேவன் ஏன் இவ்வளவு நீண்ட காலம் எடுத்திருக்கிறார்? ஐந்து மாதங்கள் வரையிலுமா? இது துல்லியமாக நமது ஐக்கியத்தின் முக்கியக் கருத்தாகவும், அதோடு கூட தேவனுடைய ஞானத்தில் ஒரு மையக் கருத்தாகவும் இருக்கிறது. நாம் பின்வருவனவற்றை முன்வைக்கலாம்: மனுஷனை உபத்திரவத்திற்கு உட்படுத்தும் இந்தக் காலகட்டம் இல்லாமலும், சீர்கெட்ட மனித இனத்தை தேவன் கடுமையாக தாக்கிக், கொன்று, வெட்டி வீழ்த்தாமலும், திருச்சபையைக் கட்டுதல் இன்று வரை தொடர்ந்திருந்தால், அதன் விளைவு என்னவாக இருந்திருக்கும்? ஆகவே, தேவன் முதல் வாக்கியத்திலேயே நேரடியாக விஷயத்திற்கு வருகிறார், இந்தப் பல மாத கிரியைக்கான விரும்பிய பலனை நேரடியாகச் சுட்டிக்காட்டுகிறார்—உண்மையில் அவர் முதல் குத்திலேயே இரத்தம் வரவைக்கிறார்! இந்தப் பல மாத காலகட்டத்தில் தேவனுடைய கிரியைகளின் ஞானத்தைக் காட்ட இது போதுமானது: உபத்திரவத்தின் வழியாக, எவ்வாறு கீழ்ப்படிவது மற்றும் தங்களை எவ்வாறு நேர்மையுடன் ஒப்புக்கொடுப்பது, அதோடு கூட வேதனை மிகுந்த சுத்திகரிப்பின் வழியாக தேவனை அறிந்து கொள்வது எவ்வளவு நல்லது என்பதை ஒவ்வொவரும் கற்றுக் கொள்ள அவை உதவியுள்ளன. ஜனங்கள் எவ்வளவு அதிகமாக விரக்தியை அனுபவிக்கிறார்களோ, அவ்வளவு நன்றாக அவர்கள் தங்களைத் தாங்களே அறிந்து கொள்கிறார்கள். உண்மையைச் சொல்வதென்றால், துன்பங்கள் நிறைந்த சுத்திகரிப்பை அவர்கள் எவ்வளவு அதிகமாக எதிர்கொள்கிறார்களோ, தேவனுக்கு ஊழியம் செய்பவர்களாக இருப்பதற்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்பதையும், மேலும், ஊழியம் செய்ய அவரால் உயர்த்தப்பட வேண்டும் என்பதையும் அங்கீகரிக்கும் அளவுக்கு, அவ்வளவு அதிகமாக அவர்கள் தங்கள் சொந்த சீர்கேட்டை அறிந்துகொள்கிறார்கள். எனவே, இந்தப் பலனை அடைந்த பிறகு, மனுஷன் தன் ஒவ்வொரு பகுதியையும் பயன்படுத்தும்போது, தேவன் எதையும் மறைக்காமல் இரக்கத்தின் வார்த்தைகளுக்கு நேரடியாகக் குரல் கொடுக்கிறார். இந்தச் சில மாதங்களுக்குப் பிறகு, தேவனுடைய கிரியை செய்யும் முறை, அதன் தொடக்கப் புள்ளியாக இன்று உருவெடுக்கிறது என்பதை உடனடியாகக் காணலாம்; இதை அனைவரும் பார்க்கும்படி அவர் தெளிவாக்கியுள்ளார். ஏனெனில், கடந்த காலத்தில், தேவன் அடிக்கடி இவ்வாறு கூறினார், “தேவனுடைய ஜனங்கள் என்று அழைக்கப்படும் உரிமையைச் சம்பாதிப்பது எளிதானது அல்ல,” அவர் இந்த வார்த்தைகளை ஊழியம் செய்பவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஜனங்களிடையே வெளிப்படுத்தினார், இது தேவன் சந்தேகத்தின் நிழலுக்கு இடமின்றி நம்பகமானவர் என்பதைக் காட்ட போதுமானதாகும். தேவன் சொல்வதெல்லாம் வெவ்வேறு கோணங்களில் நிறைவேறும், எந்த விதத்திலும் அது வெற்றுப் பேச்சு அல்ல.

எல்லா ஜனங்களும் கவனம் சிதறுகிற அளவிற்கு துக்கத்தினாலும் கவலையினாலும் நிறைந்திருக்கும்போது, தேவனிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகள் வீட்டைத் தாக்கி, அவர்களின் நம்பிக்கையின்மையின் மத்தியில் அனைவரையும் உயிர்ப்பிக்கிறது. மனுஷர்களின் மனதில் இருந்து மேலும் எல்லா சந்தேகங்களையும் நீக்கும் பொருட்டு, தேவன் பின்வருவனவற்றைக் கூறினார்: “அவர்கள் என் ஜனங்கள் என்று குறிப்பிடப்பட்டாலும், இந்தத் தலைப்பானது என் ‘குமாரர்கள்’ என்று அழைக்கப்படுவதற்கு எந்த வகையிலும் இரண்டாம் நிலை அல்ல.” தேவனால் மட்டுமே தமது சொந்த அதிகாரத்தைப் பாதுகாக்க முடியும் என்பதைக் காட்ட இது போதுமானதாகும், மேலும் ஜனங்கள் இதைப் படித்தவுடன், அவர்கள் இன்னும் உறுதியாக அதை நம்புவார்கள், இது கிரியை செய்யும் முறைக்கு அப்பாற்பட்டது, இது ஓர் உண்மையாகும். ஜனங்களின் தரிசனங்கள் தெளிவாக இருக்கும்படி, ஒரு படி மேலே செல்லும்போது, அவரது புதிய அணுகுமுறையில் ஒவ்வொருவரின் அடையாளமும் தெளிவாக்கப்படுகிறது. தேவனுடைய ஞானத்தைக் காட்ட இது போதுமானதாகும், மேலும் தேவன் மனுஷர்களின் இருதயங்களுக்குள் இருப்பதைப் பார்க்க முடியும் என்பதை ஜனங்களை நன்கு அறிந்துகொள்ளச் செய்கிறது; மனுஷர்கள் தங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்களில், தேவன் கயிறுகளை இழுத்து ஆடவைக்கும் பொம்மைகளாக இருக்கிறார்கள், இது நிச்சயமானதும் கேள்விக்கு அப்பாற்பட்டதுமாய் இருக்கிறது.

ஆரம்பத்திற்குச் செல்வோமானால், தேவன் தொடக்கத்திலிருந்து என்ன செய்தார் என்றால், அவருடைய கிரியையின் முதல் படியாகிய, “திருச்சபையைச் சுத்திகரித்தல்” ஏற்கனவே முடிவடைந்துவிட்டது என்பதை நேரடியாகச் சுட்டிக்காட்டுவதே ஆகும். “இப்போது சூழ்நிலை முன்னொரு காலத்தில் இருந்ததைப் போல அல்ல, என் கிரியை ஒரு புதிய தொடக்க நிலையில் பிரவேசித்திருக்கிறது.” இந்தக் கூற்றிலிருந்து, தேவனுடைய கிரியை ஒரு புதிய தொடக்கப் புள்ளியில் பிரவேசித்திருப்பதையும், இதைத் தொடர்ந்து உடனடியாக அவருடைய கிரியையின் அடுத்த படிக்கான வரைபடங்களை அவர் நமக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறதையும் ஒருவன் காண முடியும்—திருச்சபையின் கட்டுமானம் முடிந்ததும், ராஜ்யத்தின் காலத்தினுடைய வாழ்க்கை தொடங்கும், “ஏனென்றால் இப்போது திருச்சபைக் கட்டிடத்தின் காலமாக இனி இருப்பதில்லை, ஆனால் அதற்கு மாறாக ராஜ்யம் வெற்றிகரமாகக் கட்டப்பட்டிருக்கிற காலமாகும்.” மேலும், ஜனங்கள் இன்னும் பூமியில் இருப்பதால், அவர்களின் கூட்டங்கள் தொடர்ந்து திருச்சபை என்று குறிப்பிடப்படும், இதன் மூலம் எல்லோரும் கற்பனை செய்தது போல் ஒரு யதார்த்தமற்ற “ராஜ்யம்” உணரப்படுவதைத் தவிர்க்கலாம் என்று அவர் கூறியிருக்கிறார். தரிசனங்களைக் குறித்த பிரச்சினையைப் பற்றியே அடுத்த ஐக்கியம் வருகிறது.

இப்போது ராஜ்யத்தைக் கட்டும் காலமாகவும், திருச்சபைக் கட்டிடத்தின் முடிவாகவும் இருந்தாலும், எல்லாக் கூடுகைகளும் திருச்சபை என்று அழைக்கப்படுவது ஏன்? திருச்சபை ராஜ்யத்திற்கு முன்னோடி என்று கடந்த காலத்தில் கூறப்பட்டிருக்கிறது, மேலும் திருச்சபை இல்லாமல் ராஜ்யத்தைப் பற்றிய பேச்சு இருக்க முடியாது. ராஜ்யத்தினுடைய காலத்தின் ஆரம்பம் மாம்சத்தில் தேவனுடைய ஊழியத்தின் ஆரம்பமாகும், மேலும் ராஜ்யத்தின் காலமானது மனுவுருவான தேவனால் தொடங்கிவைக்கப்படுகிறது. அவர் கொண்டு வருவது ராஜ்யத்தின் காலமே தவிர, ராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ வம்சாவளியை அல்ல. இது கற்பனை செய்வதற்குக் கடினமானது அல்ல; தேவனுடைய ஜனங்கள் என்று நான் கூறுவது ராஜ்யத்தின் காலத்தின் ஜனங்களைத்தான், ராஜ்யத்தின் ஜனங்களை அல்ல. அதனால்தான் பூமியில் உள்ள கூடுகைகள் இன்னும் திருச்சபை என்று குறிப்பிடப்பட வேண்டும் என்று சொல்வது அர்த்தமுள்ளதாக இருக்கும். கடந்த காலத்தில், அவர்தாம் தேவன் என்று இன்னும் சாட்சி பகரப்படாமல் இருக்கும்போதே, அவர் தமது இயல்பான மனிதத்தன்மையில் செயல்பட்டார். அதனால், ராஜ்யத்தின் காலம் மனுஷர்களிடையே தொடங்கியிருக்கவில்லை; அதாவது, நான் கூறியிருப்பது போல், என் ஆவியானவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக என் மனுவுருவான மாம்சத்தில் கிரியை செய்யத் தொடங்கியிருக்கவில்லை. இப்போது தேவனே சாட்சி பகர்ந்திருப்பதால், ராஜ்யம் மனுஷர்களிடையே உணரப்படுகிறது. நான் என் தெய்வீகத்தில் கிரியை செய்யத் தொடங்குவேன் என்பதை இது குறிக்கிறது, ஆகவே, என் தெய்வீகத்தில் நான் பேசும் வார்த்தைகளையும், நான் செய்யும் கிரியைகளையும் புரிந்துகொள்ளக்கூடிய மனுஷர்கள் ராஜ்யத்தின் காலத்தினுடைய என் ஜனங்கள் என்று அறியப்படுவார்கள். இதிலிருந்து தான் “தேவனுடைய ஜனங்கள்” உருவானார்கள். இந்தக் கட்டத்தில், செயல்படுவதும் பேசுவதும் முதன்மையாக எனது தெய்வீகம் ஆகும். மனுஷனால் வெறுமனே தலையிடவும் முடியாது, என் திட்டத்திற்கு இடையூறு விளைவிக்கவும் முடியாது. தேவன் தம்முடைய பேச்சில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்தவுடன், அவரது நாமம் சாட்சி பகரப்பட்டவுடன், இந்த இடத்திலிருந்து மனிதகுலத்தின் மீதான அவரது சோதனை தொடங்கும். இதுவே தேவனுடைய கிரியையில் உள்ள ஞானத்தின் உச்சகட்டமாகும். இது ஓர் உறுதியான அடித்தளத்தை அமைத்து, அடுத்த கட்டத்தின் தொடக்கத்திற்கும் கடைசி கட்டத்தின் முடிவிற்கும் வழிவகுக்கிறது. இது ஒரு மனுஷனாக, யாரும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒன்றாகும்; இது நியாயத்தீர்ப்பு காலத்தின் முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளின் சந்திப்புப் புள்ளியாகும். நான் மனுஷனை சுத்திகரித்த அந்த சில மாதங்கள் இல்லாவிட்டால், என் தெய்வீகமானது கிரியை செய்ய வழி இல்லாமல் இருந்திருக்கும். அந்தப் பல மாத சுத்திகரிப்பு எனது கிரியையின் அடுத்த கட்டத்திற்கான வழியைத் திறந்தது. இந்தச் சில மாத கிரியையின் நிறுத்திவைப்பு அடுத்த கட்ட கிரியை இன்னும் ஆழமாக இருக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும். தேவனுடைய வார்த்தைகளை ஒருவன் உண்மையாகப் புரிந்து கொண்டால், அவர் தமது கிரியையின் அடுத்த கட்டத்தைத் தொடங்க இந்தப் பல மாத காலத்தைப் பயன்படுத்துகிறார், அதன் மூலம் இன்னும் நல்ல பலன்களை அடையச் செய்ய முடியும் என்பதையும் ஒருவன் புரிந்து கொள்ள முடியும். எனது மனிதத்தன்மையின் தடையானது எனது கிரியையின் அடுத்த கட்டத்திற்குத் தடையாக இருப்பதால், இந்த சில மாத துன்பங்களின் வழியாகச் சுத்திகரிக்கப்பட்டதன் மூலம், இரு தரப்பினரும் மேம்படுத்தப்பட்டு கணிசமான பலனைப் பெற்றிருக்கின்றனர். இதன் விளைவாக, இப்போதுதான், மனுஷன் நான் அவனைக் குறிப்பிடும் முறையைப் பொக்கிஷமாகக் கருதத் தொடங்குகிறான். எனவே, தேவன், தமது எழுத்துத் தூரிகையைத் திருப்பி, மனுஷர்களை “ஊழியம் செய்பவர்கள்” என்று அல்ல, மாறாக “தேவனுடைய ஜனங்கள்” என்று அழைப்பதாகச் சொன்னபோது, அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கினர். இது மனுஷனுடைய பலவீனமாக இருந்தது. துல்லியமாக, மனுஷனின் இந்த முக்கியமான பலவீனத்தைக் கண்டுபிடிப்பதற்காகவே, தேவன் தாம் செய்ததைப் போலவே பேசினார்.

எல்லா ஜனங்களையும் மேலும் வெல்வதற்கும், அவர்களுடைய முழு இருதயத்தின் விசுவாசத்தைப் பெறுவதற்கும், மேலும் சில ஜனங்களின் பக்தி அசுத்தங்களால் களங்கமடைந்திருக்கிறது என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுவதற்கும் தேவன் வெவ்வேறு வகையான எல்லா மனுஷீக அசுத்தங்களுக்கும் கவனத்தை ஈர்க்கும் கூடுதல் நடவடிக்கையை எடுத்திருக்கிறார், மேலும் அவ்வாறு செய்வதன் மூலம் அவர் தமது வார்த்தைகளை நிறைவேற்றியிருக்கிறார்: “எத்தனை பேர் என்னை நேசிப்பதில் நேர்மையாக இருக்கிறார்கள்? தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு செயல்படாதவர்கள் யார்? தங்களின் உபத்திரவங்களின் போது யார் ஒருபோதும் குறைகூறியதில்லை?” இதுபோன்ற வார்த்தைகளிலிருந்து, ஒவ்வொருவரும் தங்கள் சொந்தக் கீழ்ப்படியாமை, விசுவாசமின்மை மற்றும் உண்மையான பக்தி இல்லாதது போன்றவற்றை உணர முடிகிறது, மேலும், தேவனுடைய இரக்கமும் தயவும் தம்மைத் தேடும் அனைவரையும், ஒவ்வொரு அடியிலும் பின்பற்றுவதைக் காண முடிகிறது. இதைப் பின்வரும் வார்த்தைகளிலிருந்து அறியலாம்: “சிலர் பின்வாங்குவதற்கான விளிம்பில் இருக்கும்போது, நான் பேசும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தவர்கள், நம்பிக்கையை இழந்திருக்கும்பொழுது, அந்த நேரத்தில் என்னை உண்மையாக நேசிக்கும் அனைவரையும் என் சிங்காசனத்திற்கு முன்பாக, என் ராஜ்யத்திற்குத் திரும்பக் கொண்டுவந்து, நான் இரட்சிப்பின் சத்தங்களுக்குக் குரல் எழுப்புகிறேன்.” இங்கே, “என்னை உண்மையாக நேசிப்பவர்கள்” என்ற சொற்றொடர் மற்றும் “எத்தனை பேர் என்னை உண்மையாகவே நேசிக்கிறார்கள்?” என்ற சொல்லாட்சிக் கேள்வி ஒன்றுக்கொன்று முரண்படுவதில்லை. இந்தச் சூழலில் “நேர்மை” எவ்வாறு அசுத்தங்களைக் கொண்டுள்ளது என்பதை அவை விளக்குகின்றன. தேவனுக்கு எதுவும் தெரியாது என்பதல்ல; மாறாக, தேவன் மனுஷனின் உள்ளான இருதயங்களுக்குள் இருப்பதைத் துல்லியமாகப் பார்க்க முடியும் என்பதாலேயே, “நேர்மை” போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்துகிறார், இது ஒவ்வொருவரையும் தாங்கள் தேவனுக்குக் கடன்பட்டிருப்பதை மிக அதிகமாக உணரச் செய்யவும், மேலும் தங்களைத் தாங்களே மிகக் கடினமாக கடிந்து கொள்ளச் செய்யவும், அதோடு கூட அவர்களின் இருதயங்களில் உள்ள குறைகள் முற்றிலும் சாத்தானிடமிருந்தே வருகின்றன என்ற உண்மையை உணரச் செய்வதற்குமான சீர்கெட்ட மனித இனத்தை இலக்காகக் கொண்ட ஒரு பழிச்சொல்லாகும். “பக்தி” போன்ற ஒரு வார்த்தையைப் பார்க்கும்போது எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்: “நான் பல முறை வானத்திற்கும் பூமிக்கும் எதிராகக் குறைகூறினேன், மேலும், பல முறை வெளியேற விரும்பினேன், ஆனால் தேவனுடைய ஆட்சிமுறை ஆணைகளுக்கு நான் பயந்ததால், அவைகளைச் சமாளித்து, கூட்டத்துடன் சேர்ந்து சென்று, தேவன் என்னை நடத்துவார் என்று காத்துக்கொண்டிருக்கிறேன், விஷயங்கள் உண்மையிலேயே நம்பிக்கையற்றதாக மாறினால், நான் மெதுவாகப் பின்வாங்குவதற்கு இன்னும் போதுமான நேரம் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது தேவன் நம்மை தம்முடைய பக்தியுள்ள ஜனங்கள் என்று அழைக்கிறார். தேவன் உண்மையில் மனுஷர்களின் உள்ளிந்திரியங்களைப் பார்க்கும் தேவனாக இருக்க முடியுமா?” இதுபோன்ற தவறான புரிதலைத் தவிர்ப்பதற்காகவே, தேவன் பல்வேறு வகையான ஜனங்களின் உளவியல் நிலைகளுக்குக் கடைசியில் மட்டுமே கவனம் செலுத்தினார், இருதயத்தாலும் வார்த்தையாலும் மற்றும் பார்வையாலும் அவர்கள் நம்பியிருக்கிற நிலையின் வெளிப்புறமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டு, அதே நேரத்தில், ஒவ்வொருவரும் உள்ளுக்குள் சந்தேகம் கொள்ளும் நிலையிலிருந்து மாறச் செய்தார். இந்த வழியில், தேவனுடைய வார்த்தையைப் பற்றிய மனுஷனின் அபிப்பிராயம் ஆழமடைந்திருக்கிறது, அதன் இயற்கையான விளைவாக மனுஷன் இன்னும் கொஞ்சம் பயத்துடனும், இன்னும் கொஞ்சம் பயபக்தியுடனும் வளர்ந்திருக்கிறான், மேலும் தேவனைப் பற்றிய சிறந்த புரிதலைப் பெற்றிருக்கிறான். இறுதியாக, மனுஷனின் கவலைகளைப் போக்கும்படி, தேவன் சொன்னார்: “… ஆனால் கடந்த காலம் கடந்த காலமாகவும், மற்றும் நிகழ்காலம் ஏற்கனவே இங்கே இருப்பதாலும், இனி நேற்றைய தினத்துக்காக வருத்தத்துடன் ஏங்கவோ அல்லது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படவோ வேண்டிய அவசியமில்லை.” இந்த வகையான பதற்றமான, இணக்கமான, ஆனால் பரிதாபமான பேச்சு இன்னும் பெரிய விளைவை ஏற்படுத்துகிறது, அவருடைய வார்த்தைகளை வாசிக்கும் அனைவரையும் கடந்த கால விரக்தியின் மத்தியிலிருந்து மீண்டும் ஒருமுறை ஒளியைப் பார்க்கச் செய்கிறது, அவர்கள் தேவனுடைய ஞானத்தையும் கிரியைகளையும் பார்க்கும் வரை, “தேவனுடைய ஜனங்கள்” என்ற பெயரை பெறச் செய்கிறது, அவர்களின் இருதயங்களில் உள்ள சந்தேகத்தின் மேகங்களை நீக்குகிறது, பின்னர் அவர்களின் உளவியல் நிலைகளின் மாறும் வடிவங்களிலிருந்து தங்களைத் தாங்களே அறிந்துகொள்ளச் செய்கிறது. இந்த நிலைமைகள் மாறி மாறி, கவலையையும் துக்கத்தையும், மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருகின்றன. இந்த அத்தியாயத்தில் தேவன் ஜனங்களின் வெளிப்புறத்தை, அது பரிபூரணமான நிலையை அடைந்திருக்கும்படி, ஒவ்வொரு விவரத்திலும் மிகவும் உயிரோட்டமுள்ளதாகவும் மற்றும் தெளிவாகவும் வரையறுத்துள்ளார். இது உண்மையிலேயே மனுஷனால் சாதிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது, மனிதனுடைய இருதயத்தின் ஆழமான இடைவெளிகளில் உள்ள இரகசியங்களை உண்மையாகவே வெளிப்படுத்துகிறது. இது மனுஷனால் செய்யக்கூடிய திறன் கொண்டதாக இருக்க முடியுமா?

உடனடியாக இதைத் தொடர்ந்து, இது தேவனுடைய ஆட்சிமுறை ஆணையை மனுஷனுக்கு நேரடியாக வெளிப்படுத்துகிற கீழேயுள்ள பகுதி இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, மேலும் மிகவும் முக்கியமான பகுதியாக இது இருக்கிறது: “மனுஷனாக இருப்பதால், யாரெல்லாம் யதார்த்தத்திற்கு எதிராகச் செல்கிறார்களோ மற்றும் என் வழிகாட்டுதலின்படி காரியங்களைச் செய்வதில்லையோ அவர்கள் ஒரு நல்ல முடிவை அடையமாட்டார்கள், மாறாக அவர்கள் தங்கள் மீது பிரச்சனையை மட்டுமே வரவழைத்துக்கொள்வார்கள். பிரபஞ்சத்தில் நிகழும் எல்லாவற்றிலும், என்னிடம் இல்லாத இறுதிச் சொல் என்று எதுவும் இல்லை.” இது தேவனுடைய ஆட்சிமுறை ஆணையல்லவா? இந்த ஆட்சிமுறை ஆணையை மீறுபவர்களுக்கான எடுத்துக்காட்டுகள் லேகியோன் என்பதைக் காட்ட இது போதுமானதாகும். மேற்கூறியவற்றின் அடிப்படையில், ஒவ்வொருவரையும் தங்கள் சொந்த விதியைப் பற்றி சிந்திக்க வேண்டாம் என்று தேவன் தொடர்ந்து வலியுறுத்துகிறார். தேவனுடைய திட்டமிடுதலில் இருந்து விடுபட விரும்புவதற்கு ஒருவர் துணிந்தால், அதன் விளைவுகள் கற்பனைக்கு அப்பாற்பட்ட விதத்தில் மிக மோசமானதாக இருக்கும். இந்த வார்த்தைகளில் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் அனுபவித்திருக்கும் அனைவரும் தேவனுடைய ஆட்சிமுறை ஆணையை நன்றாகப் புரிந்துகொள்வதுடன், அவருடைய மகத்துவம் அவமதிக்கப்படக் கூடாது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அதன்மூலம், காற்று மற்றும் உறைபனியால் வாடி, கடுமையான குளிரின் அச்சுறுத்தலுக்கு எதிராக நின்று, இயற்கையின் செழிப்பான பசுமையான உயிர்ச்சக்தியை தொடர்ந்து சேர்க்கிறதுமான ஒரு தேவதாரு மரத்தைப் போல பசுமையாக இருந்து பக்குவப்பட்டவர்களாகவும் நிலையானவர்களாகவும் மாறச் செய்கிறது. பெரும்பாலான ஜனங்கள், இந்தப் பத்தியை எதிர்கொள்ளும்போது, தாங்கள் ஒருவித பிரமைக்குள் அலைந்து திரிந்ததைப் போல் திகைத்து நிற்கிறார்கள்; ஏனென்றால், தேவனுடைய வார்த்தைகளின் உள்ளடக்கம் மிகவும் விரைவாக மாறுகிறது, எனவே, தங்கள் சொந்தச் சீர்கெட்ட மனநிலைகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யும் போது பத்தில் ஒன்பது பேர் ஒரு சிக்கலான வழிக்குள் நுழைகிறார்கள். எதிர்காலத்தில் கிரியை மிகவும் சுமூகமாக நடக்கவும், எல்லா மனுஷர்களின் இருதயங்களிலும் உள்ள சந்தேகங்கள் நீங்கவும், தேவனுடைய விசுவாசத்தில் அனைவரும் ஒரு படி மேலே செல்லவும், அந்தப் பத்தியின் முடிவில் அவர் வலியுறுத்துகிறார்: “என்னை உண்மையாக நேசிப்பவர்கள் ஒவ்வொருவரும் நிச்சயமாக என் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்பிவருவார்கள்.” இவ்வாறு, பல மாதங்களாக அவரது கிரியைக்கு உட்பட்டிருக்கிற ஜனங்களது மனங்கள், ஒரு நொடிப்பொழுதில், அவர்களுடைய அச்சத்தின் சில பகுதியிலிருந்து விடுபடுகின்றன. மேலும் என்னவென்றால், நடுவானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களின் இருதயங்கள், ஒரு பாரமான கல் தரையில் விழுந்ததைப் போல ஒரு காலத்தில் இருந்த நிலைக்குத் திரும்புகின்றன. இனி அவர்கள் தங்கள் தலைவிதியைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை; மேலும், தேவன் இனி வெற்று வார்த்தைகளைப் பேசமாட்டார் என்று அவர்கள் நம்புகிறார்கள். மனுஷர்கள் சுயநீதியுள்ளவர்களாக இருப்பதால், அவர்கள் தேவன் மீது மிகுந்த பக்தியைக் காட்டுகிறார்கள் என்று நம்பாதவர்கள் யாரும் இல்லை; அதனால்தான், தேவன் வேண்டுமென்றே “உண்மையாக” ஒரு சிறந்த முடிவை அடைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இது அவரது கிரியையின் அடுத்த கட்டத்திற்கு வழி வகுத்து அடித்தளம் அமைப்பதாகும்.

முந்தைய: அத்தியாயம் 47

அடுத்த: அத்தியாயம் 3

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக