அத்தியாயம் 8

ஆவியானவரின் கண்ணோட்டத்திலிருந்து தேவன் பேசும்போது, அவரது தொனி முழு மனிதகுலத்தையும் நோக்கி இருக்கிறது. மனுஷீகக் கண்ணோட்டத்திலிருந்து தேவன் பேசும்போது, அவரது தொனி அவருடைய ஆவியானவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றும் அனைவரையும் நோக்கி இருக்கிறது. மூன்றாவது நபரில் தேவன் பேசும்போது (பார்வையாளர்களின் கருத்தாக ஜனங்கள் குறிப்பிடுவதிலிருந்து), அவர் தமது வார்த்தைகளை நேரடியாக ஜனங்களுக்குக் காட்டுகிறார், அதனால் அவர்கள் அவரை ஒரு வர்ணனையாளராகக் காண்பார்கள், மேலும் மனுஷர்கள் அறிந்திராத மற்றும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாத எல்லையற்ற விஷயங்கள் அவருடைய வாயிலிருந்து வெளிவருவதாக அவர்களுக்குத் தோன்றுகிறது. இது அப்படித்தான் அல்லவா? தேவன் ஆவியானவரின் கண்ணோட்டத்திலிருந்து பேசும்போது, முழு மனிதகுலமும் ஆச்சரியப்படுகிறது. “மனிதர்கள் என்னை நேசிப்பது மிகக் குறைவு, என்மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பரிதாபகரமாக சிறியதாகவே இருக்கிறது. ஜனங்களின் பலவீனத்தில் நான் எனது வார்த்தைகளின் வலிமையைச் செலுத்தவில்லை என்றால், அவர்கள் பெருமைகொண்டு, மிகைப்படுத்தி அறிவுரை கூறுவார்கள், மேலும் அவர்கள் சர்வமும் அறிந்தவர்கள் மற்றும் பூமிக்குரிய சகல விஷயங்களையும் அறிந்தவர்கள் போல ஆர்ப்பாட்டமான கோட்பாடுகளுடன் வருவார்கள்.” இந்த வார்த்தைகள் மனிதகுலம் உண்மையிலேயே எப்படி இருக்கிறது என்பதையும் மற்றும் மனுஷர்களின் இருதயங்களில் தேவன் பெற்றிருக்கும் நிலையையும் வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் முழு வாழ்க்கையையும் வெட்டவெளிச்சமாக்குகின்றன. ஒவ்வொரு நபரும் தாங்கள் அசாதாரணமானவர்கள் என்று நம்புகிறார்கள், ஆனால் “தேவன்” என்று ஒரு வார்த்தை இருக்கிறது என்று கூட அறியாதிருக்கிறார்கள். எனவே, அவர்கள் ஆர்ப்பாட்டமான கோட்பாடுகளுடன் வரத் துணிகிறார்கள். இருப்பினும், இந்த “ஆர்ப்பாட்டமான கோட்பாடுகளுடன் வருவது” ஜனங்கள் புரிந்து கொள்ளும் வகையில் “பேசுவதாக” இல்லை. மாறாக, மனுஷர்கள் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் அதன் அர்த்தமாய் இருக்கிறது. அவர்கள் செய்யும் அனைத்தும், அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் தேவனுக்கு எதிரானதும் அவரை நேரடியாக எதிர்க்கிறதுமாய் இருக்கிறது, மேலும் அவர்களின் செயல்களின் சாராம்சம் சாத்தானிடமிருந்து வருகிறது மற்றும் தேவனுக்கு எதிரானதாக இருக்கிறது, மேலும் தேவனுடைய சித்தத்திற்கு மாறாக விடுதலையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால்தான் மனுஷர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டமான கோட்பாடுகளுடன் வருகிறார்கள் என்று தேவன் கூறுகிறார். தேவன் தம்முடைய வார்த்தைகளின் தாக்கம் மனுஷனுடைய பலவீனங்களை நோக்கி இருப்பதாக ஏன் கூறுகிறார்? ஏனென்றால், தேவனுடைய எண்ணத்தின்படி, ஜனங்களின் இருதயங்களில் ஆழமாக மறைந்துள்ள விஷயங்களை அவர் வெளிப்படுத்தவில்லை என்றால், யாரும் கீழ்ப்படிய மாட்டார்கள்; அதேபோல், ஜனங்கள் தங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள், மேலும் அவர்கள் தேவனிடத்தில் பயபக்தியுடன் இருக்க மாட்டார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், ஜனங்களின் நோக்கங்கள் அப்பட்டமாக வெளிப்படுத்தப்படவில்லை என்றால், அவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள்—ஒருவேளை பரலோகத்தையோ அல்லது தேவனையோ நேரடியாகச் சபிக்கக் கூட செய்யலாம். இவை மனிதகுலத்தின் பலவீனங்களாகும். எனவே, தேவன் இவ்வாறு கூறுகிறார்: “எனது நோக்கத்துடன் பொருந்துகிறவர்களையும், என்னால் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றவர்களையும் தொடர்ந்து தேடுவதில் நான் பிரபஞ்ச உலகின் எல்லா மூலைகளுக்கும் பயணம் செய்கிறேன்.” இந்த அறிக்கை, ராஜ்யத்தின் வணக்கம் முறைப்படி ஒலிப்பதைப் பற்றி பின்னர் கூறப்பட்டவற்றுடன் இணைந்து, தேவனுடைய ஆவியானவர் பூமியில் புதிய கிரியையில் ஈடுபட்டிருக்கிறார் என்பதைத் தெளிவாக்குகிறது; அதை மனுஷர்கள் தங்கள் மாம்சீகக் கண்களால் பார்க்க முடியாது என்பது உண்மை. ஆவியானவர் பூமியில் புதிய கிரியையைச் செய்கிறார் என்று கூறப்படுவதால், முழு பிரபஞ்ச உலகமும் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகிறது: தேவனுடைய புத்திரர்களும் தேவனுடைய ஜனங்களும் தேவனுடைய மனுவுருவானவரின் சாட்சியை ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறார்கள், ஆனால் அதை விட மேலாக, ஒவ்வொரு மதம் மற்றும் மதப் பிரிவுகளும், வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் இடமும் அதை வெவ்வேறு அளவுகளில் ஏற்றுக்கொள்கின்றன. இது ஆவிக்குரிய உலகில் பிரபஞ்ச உலகத்தின் ஒரு பெரிய இயக்கமாகும். இது முழு மத உலகத்தையும் அதன் சாரம் மையம் வரை உலுக்குகிறது, இது ஒரு வகையில் முன்னர் குறிப்பிடப்பட்டிருக்கிற “பூகம்பத்தைக்” குறிக்கிறது. அடுத்து, தேவதூதர்கள் முறையாக தங்கள் கிரியையைத் தொடங்குகிறார்கள், இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்புகிறார்கள், இனி ஒருபோதும் அலைவதில்லை, மேலும் சேர்த்துக்கொள்ளப்பட்ட அனைவரும் மேய்க்கப்படுவதை ஏற்றுக்கொள்கிறார்கள். மாறாக, எகிப்தியர்கள் எனது இரட்சிப்பின் நோக்கத்திலிருந்து விலகிச் செல்லத் தொடங்குகின்றனர்; அதாவது, அவர்கள் என்னுடைய சிட்சையைப் பெறுகிறார்கள் (ஆனால் அது இன்னும் முறையாகத் தொடங்கியிருக்கவில்லை). எனவே, உலகம் ஒரே நேரத்தில் பல பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகும்போது, இதுவே, ராஜ்யத்தின் வணக்கம் முறைப்படி ஒலிக்கும் சமயமும், ஜனங்கள் “ஏழு மடங்காக தீவிரமடைந்த ஆவியானவர் கிரியைச் செய்யத் தொடங்குகிற காலம்” என்று அழைத்திருக்கும் நேரமுமாகும். ஒவ்வொரு முறையும் தேவன் மீட்பின் கிரியையைச் செய்கிறார், இந்தக் கட்டங்களில் (அல்லது இந்த இடைநிலைக் காலங்களில்), பரிசுத்த ஆவியானவரின் கிரியையை யாராலும் உணர முடிவதில்லை. ஆகவே, “ஜனங்கள் நம்பிக்கையை இழக்கும்போது” என்ற தேவனுடைய வார்த்தைகள் உண்மையாகவே ஒலிக்கின்றன. மேலும், இந்த ஒவ்வொரு கட்டத்தின் மாறுதலின் போதும், மனுஷர்கள் நம்பிக்கையை இழக்கும்போது, அல்லது இது தவறான பாதை என்று அவர்கள் உணரும்போது, தேவன் புதிதாகத் தொடங்கி தமது அடுத்த கட்ட கிரியையை மேற்கொள்கிறார். சிருஷ்டிப்பின் காலத்திலிருந்து இப்போது வரை, தேவன் தமது கிரியையை மீட்டெடுத்திருக்கிறார் மற்றும் அவரது கிரியையின் முறைகளை அப்படியே மாற்றி அமைத்திருக்கிறார். பெரும்பாலான ஜனங்கள், வெவ்வேறு அளவுகளில், இந்தக் கிரியையின் சில அம்சங்களைப் புரிந்து கொள்ள முடியும் என்றாலும், இறுதியில் அவர்கள் ஒரு வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள், ஏனெனில் அவர்கள் மிகவும் குறைந்த வளர்ச்சியுடையவர்கள்; தேவனுடைய கிரியையின் படிகளை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை, அதனால் அவர்கள் புறம்பாக்கப்படுகிறார்கள். இருப்பினும், இதுதான் தேவன் ஜனங்களை எவ்வாறு தூய்மைப்படுத்துகிறார் என்பதும், மேலும் இது மனுஷகுலத்தின் காலாவதியான கருத்துக்களுக்கான தேவனுடைய நியாயத்தீர்ப்புமாகும். ஜனங்கள் எந்த அளவுக்கு அடித்தளம் கொண்டிருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக தேவனைப் பற்றிய அவர்களின் மதக் கருத்துக்கள் உள்ளன, அவர்கள் அவைகளை ஒதுக்கி வைப்பது கடினமாய் இருக்கிறது; அவர்கள் எப்போதும் பழைய விஷயங்களைப் பற்றிக்கொள்கிறார்கள், மேலும் புதிய ஒளியை ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு கடினமாக உள்ளது. அதேபோல, ஒருவன் நின்று கொண்டிருந்தால், நிற்பதற்கான சில அடித்தளங்களை ஒருவன் கொண்டிருக்க வேண்டும், இருப்பினும் பெரும்பாலான ஜனங்கள் தங்களது கருத்துக்களை விட்டுவிடுவதில் சிக்கலை உடையவர்களாக இருக்கிறார்கள். இன்றைய மனுவுருவான தேவனைப் பற்றிய அவர்களின் கருத்துக்களில் இது குறிப்பாக உண்மையாக இருக்கிறது, இது பார்க்கும்படித் தெளிவாக உள்ள கருத்தாகும்.

இன்றைய வார்த்தைகளில், தேவன் தரிசனங்களைப் பற்றி அதிகமாகப் பேசுகிறார், மேலும் விவரிக்க வேண்டிய அவசியமில்லை. திருச்சபையைக் கட்டுவது எவ்வாறு ராஜ்யத்தைக் கட்டுவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது என்பதைப் பற்றி தேவன் முதன்மையாகப் பேசுகிறார். இன்னும் குறிப்பாக, திருச்சபை கட்டப்பட்டிருந்த போது, மனுவுருவான தேவனை அவர்கள் தங்கள் சொந்த கண்களால் பார்த்து அறியவில்லை என்றாலும், இருதயத்தினாலும் வார்த்தையினாலும் ஜனங்களை நம்பவைப்பதே முக்கிய குறிக்கோளாக இருந்தது. அவர்கள் இருதயத்தில் விசுவாசம் வைத்திருந்தாலும், மனுவுருவான தேவனை அவர்கள் அறியவில்லை, ஏனென்றால் அந்தக் கட்டத்தில் அவர் ஒரு நபரிடமிருந்து பிரித்தறிய முடியாதவராக இருந்தார். ராஜ்யத்தின் காலத்தில், அனைவரும் தங்களது இருதயங்களிலும், தங்களது பேச்சிலும், தங்களது கண்களிலும் நம்பிக்கையைக் காட்ட வேண்டும். அனைவரும் தங்களது இருதயங்களிலும், தங்களது பேச்சிலும், தங்களது கண்களிலும் நம்பிக்கையைக் காட்ட, மாம்சத்தில் வாழும் தேவனைத் தங்கள் மாம்சீகக் கண்களால் அறிய—வற்புறுத்தலினாலும் அல்ல, அல்லது சாதாரண நம்பிக்கையினாலும் அல்ல, மாறாக, அவர்களது இருதயம் மற்றும் வாயிலிருந்து வருகிற அறிக்கையினால் வருகிற அறிவினால் நம்பிக்கையைக் காண்பிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைக் காட்ட இது போதுமானதாய் இருக்கிறது. எனவே, கட்டுமானத்தின் இந்தக் கட்டத்தில், சண்டையும் இல்லை, கொலையும் இல்லை. மாறாக, தேவனுடைய வார்த்தைகள் மூலம் ஜனங்கள் அறிவொளிக்கு வழிநடத்திச் செல்லப்படுவார்கள், இதன் மூலம் அவர்கள் பின்பற்றலாம் மற்றும் ஆராயலாம், இதனால் அவர்கள் மனுவுருவான தேவனை ஆழ்மனதில் அறிந்துகொள்ள முடியும். எனவே, தேவனுக்கு, இந்தக் கட்ட கிரியை மிகவும் எளிதானது, அதில், அது இயற்கையை அதன் போக்கில் செல்ல அனுமதிக்கிறது மற்றும் மனிதகுலத்திற்கு எதிராகச் செல்வதில்லை. அது, இறுதியில், மனுஷர்களை இயற்கையாகவே தேவனைப் பற்றிய அறிவுக்கு அழைத்துச் செல்லும், எனவே வருத்தப்படவோ, கவலைப்படவோ வேண்டாம். “ஆவிக்குரிய உலகத்தினுடைய யுத்தத்தின் நிலையானது எனது எல்லா ஜனங்களிடையேயும் நேரடியாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது” என்று தேவன் சொன்னபோது, ஜனங்கள் சரியான பாதையில் சென்று தேவனை அறியத் தொடங்கும் போது, ஒவ்வொரு நபரும் சாத்தானால் உள்ளாகச் சோதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்கள் சபையிலேயே சாத்தானால் சோதிக்கப்படலாம் என்பதைக் குறிப்பிட்டார். இருப்பினும், இது அனைவரும் செல்ல வேண்டிய பாதை என்பதால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. சாத்தானின் சோதனை பல வடிவங்களில் வரலாம். ஒருவன் தேவன் சொல்வதைப் புறக்கணிக்கலாம் அல்லது விட்டுவிடலாம், மற்றவர்களின் நேர்மறையைக் குறைக்க எதிர்மறையான விஷயங்களைச் சொல்லலாம்; இருப்பினும், அத்தகைய நபர் பொதுவாக மற்றவர்களை தங்கள் பக்கம் இழுக்கும்படி ஜெயிக்க மாட்டான். இதைப் பகுத்தறிவது மிகவும் கடினம். இதற்கான முக்கியக் காரணம் என்னவென்றால்: அத்தகைய நபர் கூட்டங்களில் கலந்துகொள்வதில் இன்னும் முனைப்புடன் இருக்கலாம், ஆனால் அவர்கள் தரிசனங்களைப் பற்றி தெளிவற்றவர்களாக இருக்கிறார்கள். திருச்சபை அவர்களுக்கு எதிராகத் தன்னைக் காத்துக்கொள்ளாவிட்டால், தேவனுக்குப் பதற்றமாகப் பதிலளிப்பதால், முழு திருச்சபையும் அவர்களுடைய எதிர்மறையான தன்மையால் அலைக்கழிக்கப்பட்டுப் போகலாம், அதனால், தேவனுடைய வார்த்தைகளுக்குச் செவிசாய்க்காமல் போகலாம்—மேலும் இது சாத்தானின் சோதனையில் நேரடியாக விழுவதைக் குறிக்கும். அத்தகைய நபர் நேரடியாக தேவனுக்கு எதிராகக் கலகம் செய்யாமல் இருக்கலாம், ஆனால் தேவனுடைய வார்த்தைகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியாததாலும், தேவனை அறியாததாலும், அவர்கள் குறைகூறும் அளவிற்கு செல்லவோ அல்லது மனக்கசப்பு நிறைந்த இருதயத்தைக் கொண்டிருக்கவோ கூடும். தேவன் அவர்களைக் கைவிட்டுவிட்டார் என்றும், எனவே அவர்கள் வெளிச்சத்தையும் அறிவொளியையும் பெற இயலாது என்றும் அவர்கள் கூறலாம். அவர்கள் வெளியேற விரும்பலாம், ஆனால் அவர்கள் சற்று பயப்படுகிறார்கள், மேலும் தேவனுடைய கிரியை தேவனிடமிருந்து வருவதில்லை, மாறாக அது பொல்லாத ஆவிகளின் கிரியையாக இருக்கிறது என்று அவர்கள் கூறலாம்.

தேவன் ஏன் பேதுருவை அடிக்கடி குறிப்பிடுகிறார்? யோபு கூட அவனுக்குச் சமமாக இருக்கும்படி அருகில் வரவில்லை என்று ஏன் கூறுகிறார்? இவ்வாறு கூறுவதால், பேதுருவின் செயல்களில் ஜனங்கள் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் இருதயங்களில் உள்ள எல்லா உதாரணங்களையும், மிகப்பெரிய விசுவாசம் கொண்ட யோபுவின் உதாரணத்தைக் கூட ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்—அப்படி செய்வதில்லையா. இவ்வாறு மட்டுமே ஒரு சிறந்த முடிவை அடைய முடியும், அதில்தான், ஜனங்கள் பேதுருவைப் பின்பற்றும் முயற்சியில் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ள முடிகிறது, மேலும் அவ்வாறு செய்வதன் மூலம், தேவனைப் பற்றிய அவர்களின் அறிவில் ஒரு படி முன்னேறுகிறார்கள். தேவனை அறிய பேதுரு மேற்கொண்ட பயிற்சியின் பாதையை தேவன் ஜனங்களுக்குக் காட்டுகிறார், அவ்வாறு செய்வதற்கான குறிக்கோள் என்னவென்றால், ஜனங்களுக்கு ஒரு குறிப்பை வழங்குவதற்காகவே ஆகும். அதைத் தொடர்ந்து, “இருப்பினும், நீ பாராமுகமாக என் வார்த்தைகளைக் கவனிக்காமல் இருந்தால், சந்தேகத்திற்கு இடமின்றி நீ என்னை எதிர்க்கிறாய். இது உண்மை” என்று தேவன் கூறுவதன் மூலம், சாத்தான் மனுஷர்களைச் சோதிக்கும் வழிகளில் ஒன்றை தேவன் முன்னறிவிக்கிறார். இந்த வார்த்தைகளில், சாத்தான் பயன்படுத்த முயற்சிக்கும் தந்திரமான திட்டங்களை தேவன் முன்னறிவிக்கிறார்; அவைகள் ஓர் எச்சரிக்கையாக இருக்கின்றன. எல்லோரும் தேவனுடைய வார்த்தைகளைக் குறித்து அலட்சியமாக இருக்க முடியாது, ஆயினும்கூட, சிலர் இந்த சோதனையால் சிறைபிடிக்கப்படுவார்கள். எனவே, இறுதியில், “நீங்கள் என் வார்த்தைகளை அறியவில்லை என்றால், அவற்றை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவற்றைக் கடைபிடிக்காவிட்டால், பிறகு நீங்கள் தவிர்க்க முடியாதபடிக்கு என்னுடைய தண்டனைக்குரிய பொருட்களாக மாறிப்போவீர்கள்! நீங்கள் மெய்யாகவே சாத்தானுக்குப் பலியாகிப்போவீர்கள்!” என்று தேவன் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். இது மனிதகுலத்திற்கான தேவனுடைய ஆலோசனையாகும்—இருப்பினும் இறுதியில், தேவன் முன்னறிவித்தபடி, ஜனங்களில் ஒரு பகுதியினர் தவிர்க்க முடியாமல் சாத்தானுக்குப் பலியாவார்கள்.

முந்தைய: பேதுருவின் வாழ்க்கை

அடுத்த: அத்தியாயம் 9

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக