தேவனுடனான உனது உறவு எப்படி உள்ளது?

தேவனை விசுவாசிக்கையில், தேவனுடன் ஓர் இயல்பான உறவைக் கொண்டிருப்பதிலுள்ள பிரச்சினையையாவது நீங்கள் தீர்க்க வேண்டும். நீங்கள் தேவனுடன் ஓர் இயல்பான உறவைக் கொண்டிருக்கவில்லை என்றால், தேவன் மீதான உங்கள் விசுவாசம் அர்த்தம் இழக்கிறது. தேவனோடு ஓர் இயல்பான உறவை ஏற்படுத்துவது என்பது தேவனுடைய சமுகத்தில் அமைதியாக இருக்கும் இருதயத்தால் முற்றிலும் அடையக்கூடியதாக இருக்கிறது. தேவனோடு ஓர் இயல்பான உறவைக் கொண்டிருப்பது என்பது சந்தேகப்படாமல் இருக்கவும், அவருடைய எந்தக் கிரியையையும் மறுக்காமல் இருக்கக் கூடியது மற்றும் அவருடைய கிரியைக்கு ஒப்புக்கொடுக்கக் கூடியது ஆகும். இதன் அர்த்தம், தேவனுடைய சமுகத்தில் சரியான நோக்கங்களைக் கொண்டிருப்பது, உனக்கு நீயே திட்டங்கள் போடாமல் இருப்பது, மற்றும் எல்லாவற்றிலும் தேவனுடைய குடும்பத்தின் நலன்களையே முதலில் கருத்தில் கொள்வது என்பதாகும்; தேவனின் சோதனையை ஏற்றுக்கொள்வதும் தேவனின் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிவதும் இதன் அர்த்தமாகும். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தேவனுடைய சமுகத்தில் உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்த உங்களால் முடிய வேண்டும். தேவனின் சித்தத்தை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும், உங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் உங்கள் திறனுக்கு ஏற்றவாறு நீங்கள் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். தேவனின் சித்தம் உனக்கு வெளிப்படுத்தப்பட்டவுடன், அதைச் செயல்படுத்து, அது மிகவும் தாமதமானதாக இருக்காது. தேவனுடனான உனது உறவு இயல்பாகிவிட்டால், நீயும் ஜனங்களுடன் இயல்பான உறவுகளைக் கொண்டிருப்பாய். தேவனுடன் ஒர் இயல்பான உறவை உருவாக்க, அனைத்தும் தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும், தேவனுடைய வார்த்தைகளின்படியும், தேவன் கேட்டுக்கொள்வதன்படியும், உன் கடமையை நீ செய்யக் கூடியவனாக இருக்க வேண்டும், நீ உன் கருத்துக்களைச் சரிசெய்துகொள்ள வேண்டும், மேலும் எல்லா விஷயத்திலும் சத்தியத்தைத் தேட வேண்டும். நீ சத்தியத்தைப் புரிந்து கொள்ளும்போது அதைக் கைக்கொள்ள வேண்டும், உனக்கு என்ன நேர்ந்தாலும், நீ தேவனிடத்தில் ஜெபித்து, தேவனுக்குக் கீழ்ப்படியும் இருதயத்தோடு தேட வேண்டும். இவ்வாறு பயிற்சி செய்வதன் மூலம், உன்னால் தேவனுடன் ஓர் இயல்பான உறவைப் பராமரிக்க முடியும். உன் கடமையைச் சரியாகச் செய்யும் அதே நேரத்தில், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் ஜீவ பிரவேசத்திற்குப் பயனளிக்காத எதையும் செய்யாமல் இருப்பதையும், சகோதர சகோதரிகளுக்கு உதவாத எதையும் சொல்லாமல் இருப்பதையும் கூட, நீ உறுதி செய்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம், உன் மனசாட்சிக்கு விரோதமான எதையும் நீ செய்யக்கூடாது, மேலும் வெட்கக்கேடான எதையும் நீ நிச்சயமாக செய்யக்கூடாது. குறிப்பாக, தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்கிற அல்லது எதிர்க்கிற ஒன்றை நீ நிச்சயமாக செய்யக்கூடாது, மேலும் திருச்சபையின் பணியையோ அல்லது வாழ்க்கையையோ தொந்தரவு செய்யும் எதையும் நீ செய்யக்கூடாது. நீ செய்யும் எல்லாவற்றிலும் நீதியுடனும் நன்மதிப்புடனும் இரு, உனது ஒவ்வொரு செயலும் தேவனுக்கு முன்பாக கனமுள்ளதாய் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள். சில நேரங்களில் மாம்சம் பலவீனமாக இருந்தாலும், தேவனுடைய குடும்பத்தின் நலன்களுக்கு உன்னால் முதலிடம் கொடுக்க இயல வேண்டும், மேலும் தனிப்பட்ட லாபத்திற்காகப் பேராசை இல்லாமல், சுயநலமான அல்லது வெறுக்கத்தக்கதான எதையும் செய்யாமல், உன்னைக் குறித்தே அடிக்கடி சிந்திக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். இதன்மூலம், உன்னால் பெரும்பாலும் தேவனுக்கு முன்பாக வாழ முடியும், மேலும் தேவனுடனான உனது உறவு முற்றிலும் இயல்பானதாக மாறும்.

நீ செய்யும் எல்லாவற்றிலும், உனது நோக்கங்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை நீ ஆராய வேண்டும். தேவனின் தேவைகளுக்கு ஏற்ப உன்னால் செயல்பட முடிந்தால், அப்போது தேவனுடனான உனது உறவு இயல்பானதாக இருக்கிறது. இது குறைந்தபட்ச தரநிலையாகும். உனது நோக்கங்களைப் பார், தவறான நோக்கங்கள் எழுந்திருப்பதை நீ கண்டால், அவற்றிற்குத் திரும்பி உனது முதுகைக் காட்ட இயலவும், தேவனுடைய வார்த்தைகளின்படி செயல்பட முடியவும் வேண்டும்; இவ்வாறு நீ தேவனுக்கு முன்பாக சரியாக இருக்கும் ஒருவனாக மாறுவாய், இது தேவனுடனான உனது உறவுகள் இயல்பானது என்பதையும், மேலும் நீ செய்யும் அனைத்தும் தேவனுக்காகவே, உனக்காக அல்ல என்பதையும் நிரூபிக்கிறது. நீ செய்யும் அனைத்திலும் மற்றும் நீ சொல்லும் அனைத்திலும், உனது இருதயத்தைச் சரியாக அமைத்து, உனது செயல்களில் நீதியுள்ளவனாக இருக்கக் கூடியவனாக வேண்டும், மேலும் உனது உணர்ச்சிகளால் வழிநடத்தப்படாதே, உனது சொந்த விருப்பப்படி செயல்படாதே. தேவனுடைய விசுவாசிகள் தாங்கள் கைக்கொண்டு நடந்துகொள்ள வேண்டிய கொள்கைகள் இவை. சிறிய விஷயங்கள் ஒரு நபரின் நோக்கங்களையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்தக்கூடும், ஆகவே, ஒருவர் தேவனால் பரிபூரணபடுத்தப்படும் பாதையில் பிரவேசிப்பதற்கு, அவர்கள் முதலில் தங்கள் நோக்கங்களையும் தேவனுடனான அவர்களின் உறவையும் சரிசெய்ய வேண்டும். தேவனுடனான உனது உறவு இயல்பானதாக இருக்கும்போதுதான், நீ அவரால் பரிபூரணப்படுத்தப்பட முடியும்; அப்போதுதான் தேவனின் கையாளுதல், கிளை நறுக்குதல், ஒழுக்கம் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவை உன்னில் அவை விரும்பிய பலனை அடைய முடியும். அதாவது, மனுஷர்களால் தேவனை தங்கள் இருதயத்தில் வைத்திருக்க முடிந்தால் மற்றும் தனிப்பட்ட ஆதாயத்தைத் தொடரவோ அல்லது தங்கள் சொந்த வாய்ப்புகளைப் (ஒரு மாம்ச அர்த்தத்தில்) பற்றி சிந்திக்கவோ முடியாவிட்டால், ஆனால் மாறாக ஜீவனில் பிரவேசிக்கும் பாரத்தைத் தாங்கி, சத்தியத்தைத் தொடர தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, மற்றும் தேவனின் கிரியைக்கு கீழ்ப்படிந்தால்—உன்னால் இதனைச் செய்ய முடிந்தால், நீ நாடும் குறிக்கோள்கள் சரியாக இருக்கும், மற்றும் தேவனுடனான உனது உறவு இயல்பானதாக இருக்கும். தேவனுடனான உறவை சரியானதாக்குவது ஒருவரின் ஆவிக்குரிய பயணத்தில் நுழைவதற்கான முதல் படி என்று அழைக்கப்படலாம். மனுஷனின் தலைவிதி தேவன் தம்முடைய கரங்களில் இருந்தாலும், தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், அது மனுஷனால் மாற்றப்பட முடியாது என்றாலும், நீ தேவனால் பரிபூரணமாக்கப்படக்கூடுமா அல்லது அவரால் ஆதாயப்படுத்தப்பட முடியுமா என்பது தேவனுடனான உனது உறவு இயல்பானதா என்பதைப் பொறுத்தது ஆகும். உன்னில் பலவீனமான அல்லது கீழ்ப்படியாத சில பகுதிகள் இருக்கலாம்—ஆனால் உனது பார்வைகளும் உனது நோக்கங்களும் சரியானதாக இருக்கும்வரை மற்றும் தேவனுடனான உனது உறவு சரியானதாக மற்றும் இயல்பானதாக இருக்கும்வரை, நீ தேவனால் பரிபூரணமாக்கப்பட தகுதியுள்ளவனாக இருக்கிறாய். நீ தேவனுடன் சரியான உறவைக் கொண்டிருக்கவில்லை என்றால், மற்றும் மாம்சத்திற்காகவோ அல்லது உனது குடும்பத்தினருக்காகவோ செயல்பட்டால், நீ எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அது ஒன்றுக்கும் பிரயோஜனப்படாது. தேவனுடனான உனது உறவு இயல்பானதாக இருந்தால், மற்றவை அனைத்தும் சரியாக நடைபெறும். தேவன் வேறொன்றையும் பார்ப்பதில்லை, ஆனால் தேவன் மீதான உனது விசுவாசத்தில் உனது பார்வைகள் சரியானதா என்பதை மட்டுமே பார்க்கிறார்: நீ யாரை விசுவாசிக்கிறாய், யார் பொருட்டு நீ விசுவாசிக்கிறாய், மற்றும் ஏன் விசுவாசிக்கிறாய். உன்னால் இந்த விஷயங்களைத் தெளிவாகக் காண முடிந்தால் மற்றும் உனது பார்வைகளை நன்கு வெளிப்படுத்தி கடைபிடித்தால், அப்போது நீ உனது வாழ்வில் முன்னேற்றம் அடைவாய், மேலும் சரியான பாதையில் பிரவேசிப்பதற்கும் உனக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். தேவனுடனான உனது உறவு இயல்பானதல்ல, தேவன் மீதான உனது விசுவாசத்தின் பார்வைகள் மாறுபட்டவை என்றால், மற்றவை அனைத்தும் வீணாகிவிடும், நீ எவ்வளவு திடமாக விசுவாசித்தாலும், நீ எதையும் பெற மாட்டாய். தேவனுடனான உனது உறவு இயல்பானதாக மாறிய பின்னரே, நீ மாம்சத்தைக் கைவிட்டால், ஜெபித்தால், துன்பப்பட்டால், சகித்துக்கொண்டால், கீழ்ப்படிந்தால், உனது சகோதர சகோதரிகளுக்கு உதவினால், தேவனுக்காக உன்னை அதிகமாக உபயோகித்தால், மற்றும் பலவற்றைச் செய்தால் நீ அவரால் புகழப்படுவாய். நீ செய்யும் செயலுக்கு மதிப்பு மற்றும் முக்கியத்துவம் உள்ளதா என்பது உனது நோக்கங்கள் சரியானதா, உனது பார்வைகள் சரியானதா என்பதைப் பொறுத்தது ஆகும். இப்போதெல்லாம், ஒரு கடிகாரத்தைப் பார்ப்பதற்குத் தலையை சாய்ப்பது போல் பலர் தேவனை விசுவாசிக்கிறார்கள்—அவர்களின் கண்ணோட்டங்கள் கோணலாக உள்ளன, மேலும் அவர்கள் ஒரு திருப்புமுனையால் சரிசெய்யப்பட வேண்டும். இந்தப் பிரச்சனைத் தீர்க்கப்பட்டால், அனைத்தும் சரியாகிவிடும்; இல்லையென்றால், அனைத்தும் ஒன்றும் இல்லாததாகிவிடும். சிலர் எனது சமுகத்தில் நன்றாக நடந்துகொள்கிறார்கள், ஆனால் எனது முதுகுக்குப் பின்னால், அவர்கள் செய்வதெல்லாம் என்னை எதிர்ப்பதுதான். இது கபடு மற்றும் வஞ்சகத்தின் வெளிப்பாடு, மற்றும் இந்த வகை மனுஷன் சாத்தானின் வேலைக்காரன்; அவன் தேவனைச் சோதிக்க வந்திருக்கும் சாத்தானின் பொதுவான உருவகம். எனது கிரியைக்கும் எனது வார்த்தைகளுக்கும் உன்னால் கீழ்ப்படிய முடிந்தால் மட்டுமே நீ ஒரு சரியான மனுஷன். உன்னால் தேவனுடைய வார்த்தைகளைப் புசிக்கவும் பானம்பண்ணவும் முடியும் வரை; நீ செய்யும் அனைத்தும் தேவனுக்கு முன்பாக நல்லவையாக இருக்கும் வரை மற்றும் நீ செய்யும் அனைத்திலும் நீ நியாயமுள்ளவனாகவும், நேர்மையுள்ளவனாகவும் இருக்கும்வரை; நீ வெட்கக்கேடான காரியங்களைச் செய்யாத வரை, அல்லது மற்றவர்களின் வாழ்க்கைக்குத் தீங்கு விளைவிக்கும் விஷயங்களைச் செய்யாத வரை; நீ வெளிச்சத்தில் வாழும் வரை மற்றும் உன்னைச் சாத்தான் சுரண்ட அனுமதிக்காத வரை, தேவனுடனான உனது உறவு சரியானதாக இருக்கும்.

தேவனை விசுவாசிப்பதற்கு உனது நோக்கங்களையும் பார்வைகளையும் சரியாக வைத்திருக்க வேண்டும்; தேவனின் வார்த்தைகள் மற்றும் தேவனின் கிரியை, தேவன் ஏற்பாடு செய்யும் அனைத்துச் சூழல்கள், தேவன் சாட்சியமளிக்கும் மனுஷன் மற்றும் நடைமுறை தேவன் ஆகியவை பற்றிய சரியான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் சரியான வகையில் நடத்தப்படவும் வேண்டும். நீ உனது சொந்த யோசனைகளின்படி நடக்கக்கூடாது அல்லது உனது சொந்தமான அற்பமான திட்டங்களை வகுக்கக்கூடாது. நீ எதைச் செய்தாலும், உன்னால் சத்தியத்தைத் தேட இயல வேண்டும் மற்றும், சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனுஷனாக தேவனின் கிரியை அனைத்திற்கும் கீழ்ப்படிய வேண்டும். நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதைத் தொடர விரும்பினால் மற்றும் சரியான வாழ்க்கைப் பாதையில் பிரவேசிக்க விரும்பினால், உனது இருதயம் எப்போதும் தேவனின் சமுகத்தில் வாழ வேண்டும். ஒழுக்கம் கெட்டுப் போகாதே, சாத்தானைப் பின்பற்றாதே, சாத்தான் அவனுடைய வேலையைச் செய்வதற்கு எந்த வாய்ப்புகளையும் அனுமதிக்காதே, மற்றும் சாத்தான் உன்னைப் பயன்படுத்த அனுமதிக்காதே. நீ உன்னை முழுமையாக தேவனுக்குக் கொடுக்க வேண்டும், மற்றும் தேவன் உன்னை ஆளுகை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

நீ சாத்தானின் வேலைக்காரனாக இருக்க விரும்புகிறாயா? நீ சாத்தானால் வசப்படுத்திக்கொள்ளப்பட விரும்புகிறாயா? நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவாய் என்பதற்காக, அல்லது நீ தேவனின் கிரியைக்கு ஒரு பிரதிபலிப்புப் படலமாக மாறுவாய் என்பதற்காக, நீ தேவனை விசுவாசிக்கிறாயா மற்றும் அவரைப் பின்தொடர்கிறாயா? நீ தேவனால் பெறப்பட்ட ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை விரும்புகிறாயா, அல்லது ஒரு பயனற்ற மற்றும் வெற்று வாழ்க்கையை விரும்புகிறாயா? நீ தேவனால் பயன்படுத்தப்பட விரும்புகிறாயா, அல்லது சாத்தானால் வசப்படுத்திக்கொள்ளப்பட விரும்புகிறாயா? தேவனுடைய வார்த்தைகளும் சத்தியமும் உன்னை நிரப்புவதற்கு அனுமதிக்க நீ விரும்புகிறாயா, அல்லது பாவமும் சாத்தானும் உன்னை நிரப்ப அனுமதிக்கிறாயா? இந்தக் காரியங்களை கவனமாகப் பரிசீலனை செய். உனது அன்றாட வாழ்க்கையில், நீ எந்த வார்த்தைகளைச் சொல்கிறாய், எந்தெந்த விஷயங்கள் தேவனுடனான உனது உறவில் இயல்பின்மையை ஏற்படுத்தக்கூடும் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும், பின்னர் சரியான முறையில் பிரவேசிக்க உன்னைத் திருத்திக் கொள். எல்லா நேரங்களிலும், உனது வார்த்தைகள், உனது செயல்கள், உனது ஒவ்வொரு அசைவு மற்றும் உனது எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் அனைத்தையும் ஆராய்ந்திடு. உனது உண்மையான நிலையைப் பற்றிய ஒரு சரியான புரிதலைப் பெற்று, பரிசுத்த ஆவியானவரின் கிரியை செய்யும் முறைக்குள் பிரவேசி. தேவனுடன் இயல்பான உறவைக் கொண்டிருப்பதற்கான ஒரே வழி இதுதான். தேவனுடனான உனது உறவு இயல்பானதா என்பதை மதிப்பிடுவதன் மூலம், உன்னால் உனது நோக்கங்களைச் சரிசெய்யவும், மனுஷனின் இயல்பு மற்றும் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளவும், மற்றும் உன்னை உண்மையாகப் புரிந்து கொள்ளவும் முடியும், அவ்வாறு செய்யும்போது, உன்னால் மெய்யான அனுபவங்களுக்குள் பிரவேசிக்க முடியும், உன்னையே ஒரு மெய்யான பாதையில் விட்டுவிட முடியும், மற்றும் நோக்கத்துடன் கீழ்ப்படிய முடியும். தேவனுடனான உனது உறவு இயல்பானதா இல்லையா என்பது குறித்த இந்த விஷயங்களை நீ அனுபவிக்கும்போது, நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் பல நிலைகளைப் புரிந்துகொள்ள முடியும். சாத்தானின் பல தந்திரங்களையும் உன்னால் காண முடியும் மற்றும் அவனுடைய சதித்திட்டங்களையும் புரிந்துகொள்ள முடியும். இந்தப் பாதை மட்டுமே தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கிறது. தேவனுடனான உனது உறவை நீ சரிசெய்யும்போது, நீ அவரின் ஏற்பாடுகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியக்கூடும், மற்றும் நீ மெய்யான அனுபவத்திற்குள் இன்னும் ஆழமாகப் பிரவேசிக்கக்கூடும் மற்றும் இன்னும் அதிகமாகப் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறக்கூடும். நீ தேவனுடன் ஓர் இயல்பான உறவைக் கடைபிடித்தால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மாம்சத்தைக் கைவிடுவதாலும், தேவனுடனான உண்மையான ஒத்துழைப்பின் மூலமும் ஜெயங்கொள்ள முடியும். “ஒத்துழைக்கும் இருதயம் இல்லாமல், தேவனின் கிரியையைப் பெறுவது கடினம்; மாம்சம் துன்பப்படாவிட்டால், தேவனிடமிருந்து எந்த ஆசீர்வாதங்களும் கிடைக்காது; ஆவி போராடவில்லை என்றால், சாத்தான் வெட்கப்படுத்தப்பட மாட்டான்” என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். நீ இந்தக் கொள்கைகளைக் கடைபிடித்து அவற்றை முழுமையாக புரிந்து கொண்டால், தேவன் மீதான உனது விசுவாசம் குறித்த பார்வைகள் சரிப்படுத்தப்படும். உங்களுடைய தற்போதைய நடைமுறைப்படுத்தலில், “பசியைப் போக்க அப்பத்தைத் தேடுவது” என்கிற மனநிலையை நீங்கள் விலக்கிட வேண்டும்; “எல்லாம் பரிசுத்த ஆவியானவரால் செய்யப்படுகிறது, ஜனங்களால் தலையிட முடியாது” என்ற மனநிலையை நீங்கள் விலக்க வேண்டும். அவ்வாறு கூறும் ஒவ்வொருவரும், “ஜனங்கள் விரும்பிய எதையும் செய்யலாம், நேரம் வரும்போது, பரிசுத்த ஆவியானவர் அவருடைய கிரியையைச் செய்வார். ஜனங்கள் மாம்சத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஒத்துழைக்கவோ தேவையில்லை; அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுவார்கள் என்பதே முக்கியம்” என்று நினைக்கிறார்கள். இந்தக் கருத்துகள் அனைத்தும் அபத்தமானவை. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், பரிசுத்த ஆவியானவரால் கிரியை செய்யமுடியாது. இந்த மாதிரியான கண்ணோட்டம்தான் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெரிதும் தடுக்கிறது. பெரும்பாலும், பரிசுத்த ஆவியானவரின் கிரியை மனித ஒத்துழைப்பின் மூலம் அடையப்படுகிறது. ஒத்துழைக்காதவர்கள் மற்றும் தீர்க்கப்படாதவர்கள், மெய்யாகவே இன்னும் தங்கள் மனநிலையில் ஒரு மாற்றத்தை அடையவும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும், தேவனிடமிருந்து அறிவொளி மற்றும் வெளிச்சத்தைப் பெறவும் விரும்புகிறவர்கள் உண்மையிலேயே வீணான எண்ணங்களைக் கொண்டிருக்கின்றனர். இது “ஒருவரின் சுயத்தில் ஈடுபடுதல் மற்றும் சாத்தானை மன்னித்தல்” என்று அழைக்கப்படுகிறது. அத்தகையவர்கள் தேவனுடன் இயல்பான உறவைக் கொண்டிருக்க மாட்டார்கள். நீ உனக்குள்ளேயே சாத்தானின் மனநிலையின் பல வெளிப்பாடுகளையும் வெளிப்படுத்துதல்களையும் கண்டுபிடிக்க வேண்டும் மற்றும் தேவனுக்கு இப்போது தேவைப்படுபவற்றுக்கு மாறாக இயங்கும் எந்தவொரு நடைமுறைகளையும் நீ கண்டுபிடிக்க வேண்டும். உன்னால் இப்போது சாத்தானைக் கைவிட முடியுமா? நீ தேவனுடன் ஓர் இயல்பான உறவை அடைய வேண்டும், தேவனுடைய நோக்கங்களின்படி செயல்பட வேண்டும், புதிய வாழ்க்கையைக் கொண்ட புதிய மனுஷனாக மாற வேண்டும். கடந்த கால மீறுதல்களிலேயே குடியிருக்க வேண்டாம்; தேவையற்ற வருத்தம் கொள்ள வேண்டாம்; எழுந்து நின்று தேவனுக்கு ஒத்துழைக்க முயல வேண்டும், மற்றும் நீ நிறைவேற்ற வேண்டிய உன்னுடைய கடமைகளை நீ நிறைவேற்ற வேண்டும். இப்படியாக, தேவனுடனான உனது உறவு இயல்பானதாகிவிடும்.

இதனை வாசித்த பிறகு, நீ வெறுமனே இந்த வார்த்தைகளை மாத்திரம் ஏற்றுக்கொள்வதாகக் கூறினால், இன்னும் உனது இருதயம் அசைக்கப்படாமல் இருந்தால், மேலும் தேவனுடனான உனது உறவை இயல்பாக்க நீ நாடவில்லை என்றால், தேவனுடனான உனது உறவுக்கு நீ முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதையே இது நிரூபிக்கிறது. உனது பார்வைகள் இன்னும் சரியாக்கப்படவில்லை என்பதையும், உனது நோக்கங்கள் இன்னும் தேவனால் பெறப்படுவதற்கும், அவரை மகிமைப்படுத்துவதற்கும் இன்னும் அமைக்கப்படவில்லை என்பதையும் ஆனால் சாத்தானின் சதித்திட்டங்களை மேலோங்க அனுமதித்து, உனது சொந்த இலக்குகளை அடைவதற்கு அமைக்கப்பட்டிருப்பதையுமே இது நிரூபிக்கிறது. இத்தகையவர்கள் தவறான நோக்கங்களையும் தவறான பார்வைகளையும் கொண்டிருக்கிறார்கள். தேவன் என்ன கூறுகிறார் அல்லது எப்படிக் கூறுகிறார் என்பது முக்கியமல்ல, அத்தகையவர்கள் முற்றிலும் அலட்சியமாகவே இருப்பார்கள், குறைந்தபட்ச மாற்றம்கூட ஏற்பட்டிருக்காது. அவர்களின் இருதயங்கள் எந்த அச்சத்தையும் உணராது, அவர்கள் வெட்கப்படுவதில்லை. அத்தகைய மனுஷன் ஆவி இல்லாத மூடன். தேவனின் ஒவ்வொரு வார்த்தையையும் வாசித்து, அவற்றைப் புரிந்துகொண்டவுடன் நீ அவற்றைக் கடைபிடி. உனது மாம்சம் பலவீனமாய் இருந்த தருணங்கள் இருந்திருக்கலாம், அல்லது நீ கலகம் செய்பவனாய் இருந்திருக்கலாம், அல்லது நீ எதிர்த்திருக்கலாம்; கடந்த காலத்தில் நீ எப்படி நடந்திருந்தாலும், இது சிறிய விளைவையே ஏற்படுத்தும், மற்றும் அது உனது வாழ்க்கை இன்று முதிர்ச்சியடைவதிலிருந்து தடுக்க முடியாது. இன்று நீ தேவனுடன் ஓர் இயல்பான உறவைக் கொண்டிருக்கும் வரையில், நம்பிக்கை இருக்கிறது. நீ தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் உன்னில் மாற்றம் ஏற்பட்டால், உனது வாழ்க்கைச் சிறப்பானதாக மாறிவிட்டது என்று மற்றவர்களால் சொல்ல முடியும் என்றால், தேவனுடனான உனது உறவு இப்போது இயல்பானது, இது சரியாக்கப்பட்டுள்ளது என்பதை இது காட்டுகிறது. தேவன் ஜனங்களை அவர்களின் மீறுதல்களின்படி நடத்துவதில்லை. நீ புரிந்துகொண்டு விழிப்படைந்ததும், நீ கிளர்ச்சி செய்வதையோ அல்லது எதிர்ப்பதையோ நிறுத்திக் கொண்டால், தேவன் உன் மீது இரக்கம் காட்டுவார். உனக்குப் புரிதல் இருந்து, தேவனால் பரிபூரணப்படுத்தப்பட தீர்மானித்தால், தேவனுடைய சமுகத்தில் உனது நிலை இயல்பானதாக மாறும். நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமல்ல, நீ இதைச் செய்யும்போது பின்வருவனவற்றைக் கவனித்துப்பார்: நான் இதைச் செய்தால் தேவன் என்ன நினைப்பார்? இது எனது சகோதர சகோதரிகளுக்கு பயனளிக்குமா? தேவனின் வீட்டில் செய்யும் வேலைக்கு இது பயனளிக்குமா? ஜெபம், ஐக்கியம், பேச்சு, வேலை, அல்லது மற்றவர்களுடனான தொடர்பு என எதுவாக இருந்தாலும் உனது நோக்கங்களை ஆராய்ந்துபார், மற்றும் தேவனுடனான உனது உறவு இயல்பானதா என்று சரிபார். உனது சொந்த நோக்கங்களையும் எண்ணங்களையும் உன்னால் அறிய முடியாவிட்டால், உனக்குப் பகுத்தறிவு இல்லை என்று அர்த்தம், இது நீ மிகக் குறைவாகவே சத்தியத்தைப் புரிந்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நிரூபிக்கிறது. தேவன் செய்யும் அனைத்தையும் உன்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தால் மற்றும் அவருடைய வார்த்தைகள் என்னும் கண்ணாடி மூலம், அவருடைய பக்கத்தில் நின்று விஷயங்களை உணர முடிந்தால், உனது பார்வைகள் சரியானதாகிவிடும். எனவே, தேவனுடன் நல்ல உறவை நிலைநிறுத்துவது என்பது தேவனை விசுவாசிக்கிற எவருக்கும் மிக முக்கியமானது; ஒவ்வொருவரும் இதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாகவும், அவர்களுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வாகவும் கருத வேண்டும். நீ செய்யும் அனைத்தும், நீ தேவனுடன் இயல்பான உறவைக் கொண்டிருக்கிறாயா என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. தேவனுடனான உனது உறவு இயல்பானதாக மற்றும் உனது நோக்கங்கள் சரியானதாக இருந்தால், செயல்படுங்கள். தேவனுடன் ஓர் இயல்பான உறவைப் பேணுவதற்கு, உனது தனிப்பட்ட நலன்களில் ஏற்படும் இழப்புகளைப் பற்றி நீ பயப்படக்கூடாது; நீ சாத்தானை மேலோங்க அனுமதிக்கக் கூடாது, உன்னை விலைக்கு வாங்குவதற்கு நீ சாத்தானை அனுமதிக்கக் கூடாது, மேலும் உன்னை நகைப்பிற்குரிய பொருளாக மாற்ற சாத்தானை அனுமதிக்க முடியாது. இத்தகைய நோக்கங்களைக் கொண்டிருப்பது தேவனுடனான உனது உறவு இயல்பானது என்பதற்கான அறிகுறியாகும்—மாம்சத்திற்காக அல்லாமல், மாறாக ஆவியானவரின் அமைதிக்காக, பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறுவதற்காக, மற்றும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக ஆகும். சரியான நிலைக்குள் பிரவேசிக்க, நீ தேவனுடன் ஒரு நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் தேவன் மீதான உனது விசுவாசத்தின் பார்வைகளை சரிப்படுத்த வேண்டும். இதற்குக் காரணம், தேவன் உன்னை ஆதாயப்படுத்தக்கூடும், மற்றும் அவர் தமது வார்த்தைகளின் பலனை உன்னிடத்தில் வெளிப்படுத்தி, உனக்கு மேலும் அறிவொளி கொடுத்து வெளிச்சமாக்குவார். இந்த வழியில், நீ சரியான முறையில் பிரவேசித்திருப்பாய். தேவனின் இன்றைய வார்த்தைகளைத் தொடர்ந்து புசித்துப் பானம்பண்ணு, பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியை செய்யும் முறைக்குள் பிரவேசி, தேவனின் இன்றைய கோரிக்கைகளுக்கு ஏற்ப செயல்படு, பழங்கால நடைமுறைகளைக் கடைபிடிக்காதே, காரியங்களைச் செய்ய பழைய வழிகளைப் பற்றிக்கொள்ளாதே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ உடனே இன்றைய கிரியை செய்யும் முறைக்குள் பிரவேசி. இவ்வாறு, தேவனுடனான உனது உறவு முழுவதுமாக இயல்பானதாகிவிடும் மற்றும் நீ தேவன் மீதான விசுவாசத்தில் சரியான பாதையில் இறங்கியிருப்பாய்.

முந்தைய: ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது

அடுத்த: யதார்த்த நிலைமீது அதிகமாய்க் கவனம் செலுத்துங்கள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக