V. ஒவ்வொரு கட்ட கிரியைக்கும் தேவனுடைய நாமத்திற்கும் இடையிலான உறவு குறித்த வார்த்தைகள்

231. தேவனின் ஆளுகை முழுவதிலும் அவரது பணி முற்றிலும் தெளிவாக இருக்கிறது: கிருபையின் யுகம் என்பது கிருபையின் யுகம் தான், கடைசிக் காலம் என்பது கடைசிக் காலம் தான். ஒவ்வொரு யுகத்திற்கும் வித்தியாசமான வேறுபாடுகள் இருக்கின்றன, ஏனென்றால் ஒவ்வொரு யுகத்திலும் தேவன் அந்த யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரியையைச் செய்கிறார். கடைசிக் காலத்தின் கிரியையை செயல்படுத்த, யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர நியாயத்தீர்ப்பு, ஆக்கினைத்தீர்ப்பு, கடுங்கோபம் மற்றும் அழிவு ஆகியவை இருக்க வேண்டும். கடைசிக் காலம் இறுதியான யுகத்தைக் குறிக்கின்றது. இறுதி யுகத்தின் போது, தேவன் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர மாட்டாரா? யுகத்தை முடித்துவைக்க, தேவன் தம்முடன் ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் கொண்டு வர வேண்டும். இவ்வாறாக மட்டுமே அவரால் யுகத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். மனுஷன் தொடர்ந்து உயிர்பிழைப்பதும், ஜீவித்திருப்பதும், அவன் ஒரு சிறந்த வழியில் நிலைத்திருப்பதுமே இயேசுவின் நோக்கமாக இருந்தது. அவர் மனுஷனை பாவத்திலிருந்து இரட்சித்தார், இதனால் அவர் தமது வம்சாவளி சீரழிவதை தடுத்து, இனியும் பாதாளத்திலும் நரகத்திலும் ஜீவிக்க விடாமல் செய்தார். மேலும் மனுஷனை பாதாளத்திலும் நரகத்திலும் இருந்து இரட்சிப்பதன் மூலம், இயேசு அவனை ஜீவித்திருக்க அனுமதித்தார். இப்போது, கடைசிக் காலம் வந்துவிட்டது. தேவன் மனுஷனை நிர்மூலமாக்கி, மனுஷகுலத்தை முற்றிலுமாக அழித்துப்போடுவார், அதாவது அவர் மனுஷகுலத்தின் கலகத்தை மாற்றிப்போடுவார். இந்த காரணத்திற்காக, கடந்த காலத்தின் இரக்கமுள்ள மற்றும் அன்பான மனநிலையோடு, தேவன் யுகத்தை முடிவுக்கு கொண்டுவருவது அல்லது அவரது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. ஒவ்வொரு யுகத்திலும் தேவனுடைய மனநிலையின் சிறப்பு பிரதிநிதித்துவம் இருக்கிறது, மேலும் ஒவ்வொரு யுகத்திலும் தேவனால் செயல்படுத்தப்பட வேண்டியக் கிரியைகள் இருக்கின்றன. ஆகவே, ஒவ்வொரு யுகத்திலும் தேவன் அவராகவே செயல்படுத்தியக் கிரியைகளில் அவருடைய மெய்மையான மனநிலையின் வெளிப்பாடு இருக்கிறது, மேலும் அவருடைய நாமம் மற்றும் அவர் செய்யும் கிரியைகள் ஆகியவையும் யுகத்துக்கு ஏற்ப மாறுகின்றன—அவை அனைத்தும் புதியவையாக இருக்கின்றன. நியாயப்பிரமாண யுகத்தின் போது, மனுஷகுலத்தை வழிநடத்தும் கிரியை யேகோவா என்ற நாமத்தில் செயல்படுத்தப்பட்டது, மேலும் பூமியில் முதல் கட்டக் கிரியையும் தொடங்கப்பட்டது. இந்தக் கட்டத்தில், ஆலயத்தையும் பலிபீடத்தையும் கட்டியெழுப்புவதும், விதிகளைப் பயன்படுத்தி இஸ்ரவேல் ஜனங்களுக்கு வழிகாட்டுவதும் மற்றும் அவர்கள் மத்தியில் கிரியை செய்வதுமே கிரியைகளாக இருந்தன. இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்துவதன் மூலம், அவர் பூமியில் தனது கிரியைக்கு ஒரு அஸ்திபாரத்தைத் தொடங்கினார். இந்த அஸ்திபாரத்திலிருந்து, அவர் இஸ்ரவேலுக்கு அப்பால் தனது கிரியையை விரிவுபடுத்தினார். அதாவது, இஸ்ரவேலில் இருந்து தொடங்கி, அவர் தனது கிரியையை வெளிப்புறமாக விரிவுபடுத்தினார். இதன் மூலம் பிற்காலத் தலைமுறையினர் யேகோவாவே தேவன் என்பதையும், வானங்களையும் பூமியையும் மற்றும் சகலத்தையும் சிருஷ்டித்தவர் யேகோவா தான் என்பதையும், மேலும் சகல ஜீவஜந்துக்களை சிருஷ்டித்ததும் யேகோவா தான் என்பதையும் படிப்படியாக அறிந்து கொண்டனர். அவர் தம்முடைய கிரியையை இஸ்ரவேல் ஜனங்கள் மூலமாக அவர்களுக்கு அப்பால் பரப்பினார். பூமியில் யேகோவாவினுடைய கிரியையின் முதல் பரிசுத்தமான இடமாக இஸ்ரவேல் தேசம் தான் இருந்தது, மேலும் இஸ்ரவேல் தேசத்திற்கு தான் தேவன் முதன் முதலில் பூமியில் கிரியை செய்யச் சென்றார். அதுவே நியாயப்பிரமாண யுகத்தின் கிரியையாக இருந்தது. கிருபையின் யுகத்தில் மனுஷனை இரட்சித்த தேவன், இயேசு. அவர் கிருபையும், அன்பும், இரக்கமும், சகிப்புத்தன்மையும், பொறுமையும், தாழ்மையும், கவனிப்பும் கொண்டவராகவும், அதன் உருவாகவும் இருந்தார். அவர் செய்தப் பல கிரியைகள் மனுஷனின் மீட்பிற்காகவே இருந்தன. அவரது மனநிலை இரக்கமும் அன்பும் நிறைந்த ஒன்றாகும், மேலும் அவர் இரக்கமுள்ளவராகவும் அன்பானவராகவும் இருந்ததால், தேவன் தம்மை நேசித்தது போலவே மனுஷனையும் நேசித்தார் என்பதைக் காண்பிக்க, மனுஷனுக்காக அவர் சிலுவையில் அறையப்பட வேண்டியிருந்தது, அந்த அளவுக்கு அவர் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார். கிருபையின் யுகத்தில், தேவனின் நாமம் இயேசு என்பதாக இருந்தது, அதாவது தேவன் என்பவர் மனுஷனை இரட்சித்த தேவனாக இருந்தார், அவர் இரக்கமுள்ள மற்றும் அன்பான தேவனாக இருந்தார். தேவன் மனுஷனுடன் இருந்தார். அவருடைய அன்பும், இரக்கமும், அவருடைய இரட்சிப்பும் ஒவ்வொரு மனுஷனுடனும் இருந்தன. இயேசுவின் நாமத்தையும் அவருடைய பிரசன்னத்தையும் ஏற்றுக்கொண்டதன் மூலம் மட்டுமே மனுஷனால் அமைதியையும், மகிழ்ச்சியையும் பெற முடிந்தது, அவருடைய ஆசீர்வாதத்தையும், அவருடைய பரந்த மற்றும் ஏராளமான கிருபையையும், அவருடைய இரட்சிப்பையும் பெற முடிந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்டதன் மூலம், அவரைப் பின்பற்றிய அனைவரும் இரட்சிப்பைப் பெற்றார்கள், அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. கிருபையின் யுகத்தில், தேவனின் நாமம் இயேசு என்பதாக இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிருபையின் யுகத்தின் கிரியைகள் முக்கியமாக இயேசு என்ற நாமத்தில் தான் செய்யப்பட்டன. கிருபையின் யுகத்தில், தேவன், இயேசு என்று அழைக்கப்பட்டார். அவர் பழைய ஏற்பாட்டையும் தாண்டி புதிய கிரியையின் ஒரு கட்டத்தை மேற்கொண்டார், அவருடைய கிரியை சிலுவையில் அறையப்படுவதுடன் நிறைவு செய்யப்பட்டது. இதுவே அவருடைய கிரியையின் முழுமையாக இருந்தது. ஆகையால், நியாயப்பிரமாண யுகத்தின் போது தேவனின் நாமம் யேகோவா என்பதாக இருந்தது, கிருபையின் யுகத்தில் இயேசுவின் நாமமே தேவனைக் குறித்தது. கடைசிக் காலத்தில், அவருடைய நாமம் சர்வவல்லமையுள்ள தேவன், அதாவது சர்வவல்லவர் என்பதாக இருக்கிறது, அவர் மனுஷனை வழிநடத்தவும், மனுஷனை ஜெயங்கொள்ளவும், மனுஷனை ஆதாயப்படுத்தவும் தனது வல்லமையைப் பயன்படுத்துகிறார், இறுதியில், யுகத்தை முடிவிற்குக் கொண்டுவருகிறார். ஒவ்வொரு யுகத்திலும், அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், தேவனின் மனநிலை தெளிவாகத் தெரிகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

232. “யேகோவா” என்பது இஸ்ரவேலில் நான் கிரியை செய்கையில் நான் வைத்துக் கொண்ட நாமம் ஆகும். அதன் அர்த்தம் என்னவென்றால் மனிதன் மீது பரிதாபப்படவும், மனிதனை சபிக்கவும், மனிதனுடைய வாழ்வை வழிநடத்தவும் கூடிய இஸ்ரவேலரின் (தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள்) தேவன் என்பதாகும். மாபெரும் வல்லமையைக் கொண்ட தேவன், ஞானம் நிறைந்தவர் என்பதாகும். “இயேசு” என்றால் இம்மானுவேல், அதாவது அன்பு நிறைந்த, இரக்கமுள்ள, மனிதனை மீட்டுக்கொள்ளும் பாவநிவாரணபலி என்று அர்த்தமாகும். அவர் கிருபையின் யுகத்துடைய கிரியையைச் செய்தார், மற்றும் அவர் கிருபையின் யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், ஆளுகைத் திட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். அதாவது, யேகோவா மட்டுமே தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனும், மோசேயின் தேவனும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரின் தேவனும் ஆவார். ஆகவே, தற்போதைய யுகத்தில், யூத ஜனங்கள் அல்லாமல், இஸ்ரவேலர் அனைவரும் யேகோவாவை வணங்குகிறார்கள். அவர்கள் பலிபீடத்தின் மீது அவருக்கு பலியிட்டு, ஆசாரியர்களின் வஸ்திரங்களை அணிந்து தேவாலயத்தில் அவருக்கு சேவை செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது யேகோவா மீண்டும் தோன்றுவது ஆகும். இயேசு மட்டுமே மனிதகுலத்தின் மீட்பர். அவர் மனிதகுலத்தை பாவத்திலிருந்து மீட்டெடுத்த பாவநிவாரண பலியாவார். அதாவது, இயேசுவின் நாமமானது கிருபையின் யுகத்தில் தோன்றியது. அது கிருபையின் யுகத்தில் மீட்பின் கிரியைக்காக வந்ததாகும். கிருபையின் யுகத்தைச் சேர்ந்தவர்கள் மறுபடியும் பிறந்து, இரட்சிப்பைப் பெறுவதற்காக இயேசுவின் நாமம் வந்தது. மேலும், இது முழு மனிதகுலத்தின் மீட்பிற்குமான ஒரு குறிப்பிட்ட நாமமாகும். ஆகவே, இயேசு என்ற நாமம் மீட்பின் கிரியையைக் குறிக்கிறது. மேலும், கிருபையின் யுகத்தைக் குறிக்கிறது. யேகோவா என்ற நாமம் நியாயப்பிரமாணங்களின் கீழ் வாழ்ந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கான ஒரு குறிப்பிட்ட நாமம் ஆகும். ஒவ்வொரு யுகத்திலும், கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், எனது நாமம் ஆதாரமற்றதாக இருக்கவில்லை. ஆனால் பிரதிநிதித்துவ முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது: ஒவ்வொரு பெயரும் ஒரு யுகத்தைக் குறிக்கிறது. “யேகோவா” என்பது நியாயப்பிரமாணத்தின் யுகத்தைக் குறிக்கிறது, இது இஸ்ரவேல் ஜனங்களால் வணங்கப்படும் தேவனுக்கான மரியாதையாகும். “இயேசு” என்பது கிருபையின் யுகத்தைக் குறிக்கிறது, மற்றும் கிருபையின் யுகத்தில் மீட்கப்பட்ட அனைவரின் தேவனுடைய நாமமாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்” என்பதிலிருந்து

233. கிருபையின் யுகம் இயேசுவின் நாமத்துடன் தொடங்கியது. இயேசு தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கியபோது, பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் நாமத்திற்கு சாட்சிக் கொடுக்கத் தொடங்கினார், அதற்குப்பின் யேகோவாவின் நாமம் பேசப்படவில்லை; அதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியானவர் புதிய கிரியையை இயேசு என்ற நாமத்தை முதன்மையாக வைத்தே மேற்கொண்டார். அவரை விசுவாசித்தவர்களின் சாட்சியம் இயேசு கிறிஸ்துவுக்காகவும், அவர்கள் செய்தக் கிரியையும் இயேசு கிறிஸ்துவுக்காகவும் இருந்தன. பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தின் முடிவானது, யேகோவா என்ற நாமத்தில் முக்கியமாகச் செயல்படுத்தப்பட்டக் கிரியைகள் முடிவுக்கு வந்துவிட்டன என்பதைக் குறிக்கின்றது. அதனால், தேவனின் நாமம் இனி யேகோவா அல்ல; அதற்குப் பதிலாக அவர் இயேசு என்று அழைக்கப்பட்டார், இங்கிருந்து பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் நாமத்தை முதன்மையாகக் கொண்டுக் கிரியைகளைத் தொடங்கினார். ஆகவே, இன்றும் யேகோவாவின் வார்த்தைகளை புசித்துக் குடிப்பவர்கள், எல்லாவற்றையும் இன்னும் நியாயப்பிரமாண யுகத்தின் கிரியைக்கு ஏற்ப செய்பவர்கள்—நீ விதிகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றவில்லையா? நீ கடந்த காலத்திலேயே மாட்டிக் கொள்ளவில்லையா? கடைசிக் காலம் வந்துவிட்டது என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். இயேசு வரும்போது, அவர் இன்னும் இயேசு என்று தான் அழைக்கப்படுவாரா? மேசியா ஒருவர் வருவார் என்று யேகோவா இஸ்ரவேல் ஜனங்களிடம் சொன்னார், ஆனால் அவர் வந்தபோது, அவர் மேசியா என்று அழைக்கப்படவில்லை, இயேசு என்று அழைக்கப்பட்டார். தாம் மீண்டும் வருவேன் என்றும், தாம் புறப்பட்டுச் சென்றபடியே வருவேன் என்றும் இயேசு கூறினார். இவை இயேசுவின் வார்த்தைகள், ஆனால் இயேசு புறப்பட்டுச் சென்ற விதத்தை நீ பார்த்தாயா? இயேசு ஒரு வெண்மையான மேகத்தின் மீது புறப்பட்டுச் சென்றார், ஆனால் அவர் ஒரு வெண்மையான மேகத்தின் மீது தான் தனிப்பட்ட முறையில் மனுஷரிடையே திரும்பி வருவாரா? அப்படி வந்தால், அவர் இன்னும் இயேசு என்று அழைக்கப்படமாட்டாரா? இயேசு மீண்டும் வரும்போது, யுகம் ஏற்கனவே மாறியிருக்கும், எனவே அவரை இன்னும் இயேசு என்று அழைக்க முடியுமா? இயேசுவின் நாமத்தால் மட்டுமே தேவனை அறிய முடியுமா? ஒரு புதிய யுகத்தில் அவர் ஒரு புதிய நாமத்தால் அழைக்கப்பட மாட்டாரா? ஒருவரின் உருவமும், ஒரு குறிப்பிட்ட நாமமும் தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? ஒவ்வொரு யுகத்திலும், தேவன் புதிய கிரியைகளைச் செய்கிறார், புதிய நாமத்தால் அழைக்கப்படுகிறார்; எவ்வாறு அவரால் ஒரே கிரியையை வெவ்வேறு யுகங்களில் செய்ய முடியும்? எப்படி அவர் பழைய கிரியைகளையே பற்றிக்கொண்டு இருப்பார்? மீட்பிற்கான கிரியைக்காக இயேசுவின் நாமம் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஆகவே, கடைசிக் காலத்தில் அவர் திரும்பி வரும்போது அதே பெயரால் அழைக்கப்படுவாரா? அவர் இப்போதும் மீட்பிற்கான கிரியையை தான் மேற்கொள்வாரா? யேகோவாவும் இயேசுவும் வெவ்வேறு யுகங்களில் வெவ்வேறு நாமங்களால் அழைக்கப்படும்போது, எதற்காக அவர்கள் ஒருவராக இருக்கிறார்கள்? இது அவர்களது கிரியைகளின் யுகங்கள் வேறுபட்டு இருப்பதால் இல்லையா? தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரேயொரு நாமத்தால் முடியுமா? இது அவ்வாறு இருப்பதால், தேவனை வெவ்வேறு யுகத்தில் வெவ்வேறு நாமத்தால் அழைக்க வேண்டும், மேலும் யுகத்தை மாற்றவும், யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவும் அவர் தன் நாமத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு நாமத்தாலும் தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் ஒவ்வொரு நாமமும் ஒரு குறிப்பிட்ட யுகத்தில் தேவனின் மனநிலையின் தற்காலிக அம்சத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும்; செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமே. ஆகையால், முழு யுகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த தேவன் தனது மனநிலைக்கு ஏற்ற எந்த நாமத்தையும் தேர்வு செய்யலாம். அது யேகோவாவின் யுகமாக இருந்தாலும் சரி, அல்லது இயேசுவின் யுகமாக இருந்தாலும் சரி, அதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு யுகமும் ஒரு நாமத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

234. இயேசு தம்முடைய கிரியையைச் செய்ய வந்தபோது, அது பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின் படி இருந்தது; அவர் பரிசுத்த ஆவியானவர் விரும்பியபடியே செய்தார், பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தின் படியோ அல்லது யேகோவாவின் கிரியையின் படியோ செய்யவில்லை. இயேசு செய்ய வந்த கிரியையானது யேகோவாவின் விதிகளையோ அல்லது யேகோவாவின் கட்டளைகளையோ பின்பற்றுவதில்லை என்றாலும், அவற்றின் ஆதாரம் ஒன்றுதான். இயேசு செய்தக் கிரியை இயேசுவின் நாமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அது கிருபையின் யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது; யேகோவா செய்தக் கிரியையைப் பொறுத்தவரை, அது யேகோவாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியது, மேலும் அது நியாயப்பிரமாண யுகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. அவர்களின் கிரியைகள் இரண்டு வெவ்வேறு யுகங்களில் செயல்படுத்தப்பட ஒரே ஆவியானவரின் கிரியைகள் ஆகும். இயேசு செய்தக் கிரியை கிருபையின் யுகத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும், யேகோவா செய்தக் கிரியை பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும். யேகோவா இஸ்ரவேல், எகிப்து ஜனங்களுக்கும், மற்றும் இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட எல்லா தேசங்களுக்கும் மட்டுமே வழிகாட்டினார். புதிய ஏற்பாட்டினுடைய கிருபையின் யுகத்தில் இயேசுவின் கிரியைகள் இயேசு என்ற நாமத்தில் தேவனின் கிரியைகளாக இருந்தன, ஏனென்றால் அந்த யுகத்தை வழிநடத்தியவர் இயேசு. … இயேசு புதிய கிரியையைச் செயல்படுத்த, ஒரு புதிய யுகத்தைத் தொடங்க, இஸ்ரவேலில் முன்பு செய்தக் கிரியையை முறித்துக் கொள்ள, அவருடையக் கிரியையை இஸ்ரவேலில் யேகோவா செய்தக் கிரியைக்கு ஏற்ப இல்லாமல், அல்லது அவரது பழைய விதிகளுக்கு ஏற்ப இல்லாமல், அல்லது எந்தவொரு விதிமுறைகளுக்கும் இணங்காமல், மாறாக அவர் செய்ய வேண்டியப் புதிய கிரியையைச் செய்தால் மட்டுமே ஒரு புதிய யுகம் இருக்கும். தேவனே யுகத்தைத் தொடங்க வருகிறார், மேலும் தேவனே யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறார். யுகத்தைத் தொடங்குவதற்கும், முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மனுஷனால் இயலாது. இயேசு வந்தபின் அவர் யேகோவாவின் கிரியையை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கவில்லை என்றால், அவர் வெறுமனே ஒரு மனுஷன் மட்டுமே, அவரால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பதற்கு இதுவே சான்றாக இருந்திருக்கும். இயேசு வந்து யேகோவாவின் கிரியையை முடித்ததாலும், யேகோவாவின் கிரியையைத் தொடர்ந்ததாலும், மேலும், அவருடைய சொந்தக் கிரியையை, ஒரு புதிய கிரியையைச் செய்ததாலும், இது ஒரு புதிய யுகம் என் நிரூபிக்கப்படுகிறது, மேலும் இயேசுதான் தேவன் என்பதையும் நிரூபிக்கிறது. அவர்கள் கிரியையின் இரண்டு வெவ்வேறு கட்டங்களைச் செய்தார்கள். ஒரு கட்டம் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டது, மற்றொன்று ஆலயத்திற்க்கு வெளியே நடத்தப்பட்டது. ஒரு கட்டம் விதிகளின்படி மனுஷனின் ஜீவிதத்தை வழிநடத்துவதும், மற்றொன்று பாவநிவாரணபலியை வழங்குவதுமாக இருந்தன. கிரியையின் இந்த இரண்டு கட்டங்களும் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டதாக இருந்தன; இது புதிய யுகத்தை பழையதிலிருந்து பிரிக்கிறது, மேலும் அவை இரண்டும் வெவ்வேறு யுகங்கள் என்று சொல்வது முற்றிலும் சரியானதாக இருக்கிறது. அவர்களது கிரியைகளின் இருப்பிடம் வேறுபட்டதாக இருந்தன, அவர்களது கிரியைகளின் உள்ளடக்கம் வேறுபட்டதாக இருந்தன, மற்றும் அவர்களது கிரியைகளின் நோக்கமும் வேறுபட்டதாக இருந்தன. எனவே, அவற்றை இரண்டு யுகங்களாகப் பிரிக்கலாம்: புதிய மற்றும் பழைய ஏற்பாடுகள், அதாவது புதிய மற்றும் பழைய யுகங்கள். இயேசு வந்தபோது அவர் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை, இது யேகோவாவின் யுகம் முடிந்துவிட்டது என்பதை நிரூபித்தது. ஆலயத்தில் யேகோவாவின் கிரியை முடிந்துவிட்டதால் அவர் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை, அதை மீண்டும் செய்ய வேண்டிய அவசியமில்லை. மீண்டும் அதைச் செய்வது, செய்தக் கிரியையை மீண்டும் செய்வதாக ஆகிவிடும். ஆலயத்தை விட்டு வெளியேறி, ஒரு புதியக் கிரியையைத் தொடங்கி, ஆலயத்திற்கு வெளியே ஒரு புதிய பாதையைத் தொடங்கியதன் மூலம் மட்டுமே, தேவனின் கிரியையை அதன் உச்சத்திற்குக் கொண்டு வர அவரால் முடிந்தது. அவர் தனது கிரியையைச் செய்ய ஆலயத்திற்கு வெளியே சென்றிருக்காவிட்டால், தேவனின் கிரியை ஆலயத்தின் அஸ்திவாரங்களில் தேக்கமடைந்து, புதிய மாற்றங்கள் எதுவும் ஏற்படாமல் போயிருக்கும். ஆகவே, இயேசு வந்தபோது, அவர் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை, ஆலயத்தில் அவருடைய கிரியைகளைச் செய்யவில்லை. அவர் ஆலயத்திற்கு வெளியே தனது கிரியைகளைச் செய்தார், சீஷர்களை வழிநடத்தி, அவருடைய கிரியைகளை சுதந்திரமாகச் செய்தார். தேவன் தனது கிரியையைச் செய்ய ஆலையத்திலிருந்து புறப்படுவது, தேவன் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அவரது கிரியை ஆலயத்திற்கு வெளியே நடத்தப்படவிருந்தது, அது செயல்படுத்தப்படும் விதத்தில் கட்டுப்படுத்தப்படாத புதிய கிரியையாக இருந்திருக்க வேண்டும். இயேசு வந்திறங்கியவுடனேயே, பழைய ஏற்பாட்டினுடைய யுகத்தில் யேகோவாவின் கிரியையை முடிவுக்குக் கொண்டுவந்தார். அவர்கள் இரண்டு வெவ்வேறு நாமங்களால் அழைக்கப்பட்டிருந்தாலும், அதே ஆவியானவர்தான் கிரியையின் இரு கட்டங்களையும் நிறைவேற்றியது, மேலும், செயல்படுத்தப்பட்ட கிரியை தொடர்ச்சியானதாக இருந்தது. நாமமும் கிரியையின் உள்ளடக்கமும் வேறுபட்டதாக இருந்ததால், யுகமும் வேறுபட்டதாக இருந்தது. யேகோவா வந்தபோது, அது யேகோவாவின் யுகம்; இயேசு வந்தபோது, அது இயேசுவின் யுகம். எனவே, ஒவ்வொரு வருகையிலும், தேவன் ஒரு நாமத்தால் அழைக்கப்படுகிறார், அவர் ஒரு யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், மேலும் அவர் ஒரு புதிய பாதையைத் தொடங்குகிறார்; ஒவ்வொரு புதிய பாதையிலும், அவர் ஒரு புதிய நாமத்தைச் சூட்டிக்கொள்கிறார், இது தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பதையும், அவருடைய கிரியை எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறுகிறது என்பதையும் காட்டுகிறது. வரலாறு எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது, அதேபோல் தேவனின் கிரியையும் எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது. அவரது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டம் அதன் முடிவை எட்டுவதற்கு, அது ஒரு முன்னோக்கிய திசையில் முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர் புதிய கிரியையைச் செய்ய வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் அவர் புதிய கிரியையைச் செய்ய வேண்டும்; அவர் புதிய பாதைகளைத் தொடங்க வேண்டும், புதிய யுகங்களைத் தொடங்க வேண்டும், புதிய மற்றும் பெரிய கிரியைகளைத் தொடங்க வேண்டும், இவற்றுடன் புதிய நாமங்களையும் புதிய கிரியைகளையும் கொண்டுவர வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

235. ஒவ்வொரு யுகத்திலும் தேவனின் கிரியை எப்போதுமே ஒரே மாதிரியானது என்றும், அவர் எப்போதும் ஒரே நாமத்தால் அழைக்கப்படுகிறார் என்றும் வைத்துக் கொண்டால், மனுஷன் அவரை எப்படி அறிவான்? தேவனை யேகோவா என்று அழைக்க வேண்டும், யேகோவா என்று அழைக்கப்படும் தேவனைத் தவிர, வேறு எந்த நாமத்திலும் அழைக்கப்படுபவர் தேவன் அல்ல. இல்லையெனில் தேவன் இயேசுவாக மட்டுமே இருக்க முடியும், இயேசுவின் நாமத்தைத் தவிர வேறு எந்த நாமத்தினாலும் அவர் அழைக்கப்படக்கூடாது; இயேசுவைத் தவிர, யேகோவா என்பவர் தேவன் அல்ல, சர்வவல்லமையுள்ள தேவன் என்பவரும் தேவன் அல்ல. தேவன் சர்வவல்லவர் என்பது உண்மை என்று மனுஷன் நம்புகிறான், ஆனால் தேவன் என்பவர் மனுஷனுடன் இருக்கும் தேவன் ஆவார், அவர் இயேசு என்று அழைக்கப்பட வேண்டும், ஏனென்றால் தேவன் மனுஷனுடன் இருக்கிறார். இதைச் செய்வது கோட்பாட்டிற்கு இணங்குவதும், தேவனை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்குள் அடைப்பதும் ஆகும். எனவே, ஒவ்வொரு யுகத்திலும், தேவன் செய்யும் கிரியை, அவர் அழைக்கப்படும் நாமம், மற்றும் அவர் அணிந்துகொள்ளும் உருவம்—இன்றுவரை ஒவ்வொரு கட்டத்திலும் அவர் செய்யும் கிரியை—இவை எந்தவொரு ஒழுங்குமுறையையும் பின்பற்றுவதில்லை, மற்றும் எந்தவொரு வரம்புகளுக்கும் உட்பட்டவை அல்ல. அவர் தான் யேகோவா, ஆனால் அவரே தான் இயேசுவும் கூட, மேசியாவும் அவர் தான், சர்வவல்லமையுள்ள தேவனும் அவர் தான். அவரது கிரியை படிப்படியாக அவருடைய நாமத்துடன் தொடர்புடைய மாற்றங்களுக்கு உட்படும். எந்த ஒரு நாமத்தாலும் அவரை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, ஆனால் அவர் அழைக்கப்படும் அனைத்து நாமங்களும் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும், மேலும் ஒவ்வொரு யுகத்திலும் அவர் செய்யும் கிரியை அவருடைய மனநிலையை குறிக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

236. தேவனின் நாமம் மாறுவதில்லை என்று சிலர் சொல்லுகிறார்கள். பின் ஏன் யேகோவா என்ற நாமம் இயேசு என்றானது? மேசியா வருவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது, பின் ஏன் இயேசு என்ற பெயர் கொண்ட ஒரு மனிதர் வந்தார்? தேவனுடைய நாமம் ஏன் மாறியது? இத்தகையக் கிரியை வெகு காலத்திற்கு முன்னர் செய்யப்படவில்லையா? இன்று புதிய கிரியைகளை தேவன் செய்ய முடியாதவராக இருக்கிறாரா? நேற்றைய கிரியையை மாற்ற முடியும், யேகோவாவின் கிரியையில் இருந்து இயேசுவின் கிரியை தொடர முடியும். முடியாதென்றால், இயேசுவின் கிரியையின் இடத்தில் அதற்குப் பதிலாக பிற கிரியைகளால் நடைபெறுமா? யேகோவாவின் நாமம் இயேசு என்று மாற்றப்பட்டால், பின் ஏன் இயேசு என்ற நாமமும் மாற்றப்படக்கூடாது? இவற்றில் ஒன்றும் புதுமையானது அல்ல; மக்கள் மிகவும் அறிவுத்திறன் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தேவன் எப்போதும் தேவனாகவே இருக்கிறார். அவருடைய கிரியை எவ்வாறு மாறினாலும் சரி, அவருடைய நாமம் எவ்வாறு மாறினாலும் சரி, அவருடைய மனநிலையும் ஞானமும் ஒருபோதும் மாறாது. தேவனை இயேசு என்ற நாமத்தினால் மட்டுமே அழைக்க வேண்டும் என்று நீ நம்பினால், உனது அறிவு மிகவும் குறைந்தது என்றுதான் பொருள். இயேசு என்பதுதான் தேவனுடைய நாமமாக எப்போதும் இருக்கும் என்றும் தேவன் என்றென்றும் எப்போதும் இயேசு என்ற நாமத்தையே கொண்டிருப்பார் என்றும் இது ஒருபோதும் மாறாது என்றும் நீ தைரியமாக உறுதிபடச் சொல்கிறாயா? இயேசு என்ற நாமமே நியாயப்பிரமாணத்தின் காலத்தை முடித்துவைத்தது என்றும் இறுதி காலத்தை முடிக்கும் என்றும் உன்னால் தைரியமாக உறுதிபடச் சொல்ல முடியுமா? காலத்தை இயேசுவின் கிருபை முடிவுக்குக் கொண்டுவரும் என்று யாரால் கூற முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லை வகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?” என்பதிலிருந்து

237. “தேவன் நம்மோடிருக்கிறார்” என்று அர்த்தமுள்ள இயேசுவின் நாமத்தால் தேவனின் மனநிலையை முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? அந்த நாமத்தால் தேவனை முழுமையாக வெளிப்படுத்த முடியுமா? தேவனால் தமது மனநிலையை மாற்ற முடியாது என்பதால் தேவனை இயேசு என்று மட்டுமே அழைக்க முடியும் என்றும், வேறு எந்த நாமமும் அவருக்கு இல்லை என்றும் மனுஷன் கூறினால், அந்த வார்த்தைகள் உண்மையில் தூஷணமாகும்! தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமுள்ள இயேசு என்ற நாமத்தால் மட்டுமே தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று நீ நம்புகிறாயா? தேவன் பல நாமங்களால் அழைக்கப்படலாம், ஆனால் இந்தப் பல நாமங்களில், தேவனின் முழு அம்சத்தையும் அடக்கக் கூடிய நாமம் ஒன்றுகூட இல்லை, தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய நாமம் ஒன்றுகூட இல்லை. எனவே, தேவனுக்குப் பல நாமங்கள் இருக்கின்றன, ஆனால் இந்தப் பல நாமங்களால் தேவனின் மனநிலையை முழுமையாக வெளிப்படுத்த முடியாது, ஏனென்றால் தேவனின் மனநிலை வளம் மிக்கது, அது அவரை அறிந்து கொள்ளும் மனுஷனின் திறனை மீறுகிறது. மனுஷனுக்கு, மனுஷகுலத்தின் மொழியைப் பயன்படுத்தி, தேவனின் முழு அம்சத்தையும் அடக்கக் கூடிய எந்த வழியும் இல்லை. தேவனின் மனநிலையைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் அடக்க மனுஷகுலத்திடம் ஒரு வரையறுக்கப்பட்ட சொற்களஞ்சியம் தான் இருக்கிறது: மகத்துவமானவர், கனத்திற்குரியவர், அதிசயமானவர், புரிந்துகொள்ள முடியாதவர், உயர்ந்தவர், பரிசுத்தமானவர், நீதியுள்ளவர், ஞானமுள்ளவர், மற்றும் பல எனப் பல வார்த்தைகள் இருக்கின்றன! இந்த வரையறுக்கப்பட்ட சொற்களஞ்சியத்தால் தேவனின் மனநிலையைப் பற்றி மனுஷன் கண்ட சிறிய விஷயங்களை விவரிக்க இயலாது. காலப்போக்கில், பலர் தங்கள் இருதயங்களில் இருக்கும் உற்சாகத்தை விவரிக்க முடியும் என்று நினைத்த வார்த்தைகளை இதில் சேர்த்தனர்: தேவன் மிகவும் மகத்துவமானவர்! தேவன் மிகவும் பரிசுத்தமானவர்! தேவன் மிகவும் அழகானவர்! இன்று, இது போன்ற மனுஷ சொற்கள் உச்சத்தை எட்டியுள்ளன, ஆனாலும் மனுஷனால் தன்னைத் தெளிவாக வெளிப்படுத்த இயலவில்லை. எனவே, மனுஷனைப் பொறுத்தவரை, தேவனுக்கு ஒரு நாமம் அல்ல, பல நாமங்கள் இருக்கின்றன. ஏனென்றால் தேவன் வளம்மிக்கவர், மேலும் மனுஷனின் மொழி மிகவும் வறிய நிலையில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வார்த்தை அல்லது நாமத்துக்கு தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் இல்லை, எனவே அவருடைய நாமத்தை நிரந்தரமாக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா? தேவன் மகத்துவம் மிக்கவர், மிகவும் பரிசுத்தமானவர், ஆனாலும் ஒவ்வொரு புதிய யுகத்திலும் அவருடைய நாமத்தை மாற்ற நீ அவரை அனுமதிக்க மாட்டாயா? ஆகையால், தேவன் தனது சொந்தக் கிரியையை தனிப்பட்ட முறையில் செய்யும் ஒவ்வொரு யுகத்திலும், அவர் செய்ய விரும்பும் கிரியையின் சிறப்பியல்புகளை உள்ளடக்கும் வகையில், யுகத்துக்கு ஏற்ற ஒரு நாமத்தைப் பயன்படுத்துகிறார். தற்காலிகமாக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் குறிப்பிட்ட நாமத்தை, அந்த யுகத்தில் அவருக்கு இருந்த மனநிலையை பிரதிநிதித்துவப்படுத்தப் பயன்படுத்துகிறார். தேவன் தனது சொந்த மனநிலையை வெளிப்படுத்த மனுஷகுலத்தின் மொழியைப் பயன்படுத்துகிறார். அப்படியிருந்தும், ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற்ற மற்றும் தேவனை தனிப்பட்ட முறையில் பார்த்த அநேகரும் இந்த ஒரு குறிப்பிட்ட நாமத்தால் தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த இயலாது என்று நினைக்கிறார்கள்—ஐயோ, இதனால் உதவ முடியாது—எனவே மனுஷன் இனியும் எந்த நாமத்தாலும் தேவனைக் குறிப்பிடுவதில்லை, ஆனால் வெறுமனே அவரை “தேவன்” என்று அழைக்கிறான். இது மனுஷனின் இருதயம் அன்பால் நிறைந்திருப்பது போலவும், ஆனால் முரண்பாடுகளால் சூழப்பட்டதாகவும் இருக்கிறது, ஏனென்றால் தேவனை எவ்வாறு விளக்குவது என்று மனுஷன் அறிந்திருக்கவில்லை. தேவன் வளம்மிக்கவராக இருப்பதால் அவர் என்னவாக இருக்கிறார் என்பதை விவரிக்க எந்த வழியும் இல்லை. தேவனின் மனநிலையை சுருக்கமாகக் குறிப்பிடக்கூடிய எந்த ஒரு நாமமும் இல்லை, மேலும் தேவன் வைத்திருக்கும் மற்றும் அவர் என்னவாக இருக்கிறார் என்பதையும் விவரிக்கக்கூடிய ஒரு நாமமும் இல்லை. யாராவது என்னிடம், “நீ எந்த நாமத்தைப் பயன்படுத்துகிறாய்?” என்று கேட்டால், நான் அவர்களிடம், “தேவன் தேவனே!” என்று கூறுவேன். இது தேவனுக்கு சிறந்த நாமம் அல்லவா? இது தேவனின் மனநிலையை சிறப்பாக உள்ளடக்கியிருக்கும் ஒரு நாமம் அல்லவா? இது அவ்வாறு இருப்பதால், தேவனின் நாமத்தைத் தேடுவதற்கு நீங்கள் ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறீர்கள்? ஒரு நாமத்தின் பொருட்டு, உணவு மற்றும் நித்திரை இல்லாமல் உங்கள் மூளையை எதற்காகக் கசக்க வேண்டும்? தேவன், யேகோவா, இயேசு அல்லது மேசியா என்று அழைக்கப்படாத ஒரு நாள் வரும்—அவர் வெறுமனே சிருஷ்டிகராக இருப்பார். அந்த நேரத்தில், அவர் பூமியில் சூட்டிக்கொண்ட எல்லா நாமங்களும் முடிவுக்கு வரும், ஏனென்றால் பூமியில் அவர் செய்தக் கிரியைகள் முடிவுக்கு வரும், அதன் பிறகு அவருடைய நாமங்கள் இனி இருக்காது. சகலமும் சிருஷ்டிகரின் ஆதிக்கத்தின் கீழ் வரும்போது, அவருக்கு மிகவும் பொருத்தமான ஆனால் முழுமையற்ற நாமத்திற்கான தேவை என்ன? நீ இப்போதும் தேவனின் நாமத்தைத் தேடுகிறாயா? தேவன் யேகோவா என்று மட்டுமே அழைக்கப்படுகிறார் என்று நீ இன்னும் சொல்லத் துணிகிறாயா? தேவனை இயேசு என்று மட்டுமே அழைக்க முடியும் என்று நீ இன்னும் சொல்லத் துணிகிறாயா? தேவனுக்கு எதிராக தூஷணம் செய்த பாவத்தை உன்னால் தாங்கிக்கொள்ள முடியுமா? தேவனுக்கு நாமம் என்பதே இல்லை என்பதை நீ முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அவர் ஒன்று, இரண்டு, அல்லது பல நாமங்களை மட்டுமே சூட்டிக்கொண்டார், ஏனென்றால் அவருக்குக் கிரியைகள் இருந்தன, மனுஷகுலத்தை நிர்வகிக்க வேண்டியிருந்தது. அவர் எந்த நாமத்தால் அழைக்கப்பட்டாலும்—அதை அவர் சுதந்திரமாகத் தேர்வு செய்யவில்லையா? அதைத் தீர்மானிக்க அவருக்கு அவரது சிருஷ்டிப்புக்களில் ஒருவனான உன் உதவி தேவையா? தேவனைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் நாமமானது, மனுஷனின் மொழியுடன், மனுஷனால் புரிந்துகொள்ள முடியும் விஷயங்களுடன் உடன்படுவதாக இருக்கிறது, ஆனால் இந்த நாமம் மனுஷனால் பொதுமைப்படுத்தக் கூடிய ஒன்று அல்ல. பரலோகத்தில் ஒரு தேவன் இருக்கிறார், அவர் தேவன் என்று அழைக்கப்படுகிறார், அவர் மிகுந்த வல்லமையுள்ள தேவன், அவர் மிகவும் புத்திசாலி, மிக உயர்ந்தவர், அதிசயமானவர், மறைபொருள் மிக்கவர், மற்றும் சர்வவல்லமையுள்ளவர் என்று மட்டுமே உன்னால் சொல்ல முடியும், அதற்கு மேல் உன்னால் எதுவும் சொல்ல முடியாது; சிறிதளவு மட்டுமே உன்னால் அறிய முடிந்திருக்கிறது. இது அவ்வாறு இருப்பதால், இயேசுவின் நாமத்தால் மட்டுமே தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? கடைசிக் காலம் வரும்போது, தேவனே அவருடைய கிரியைகளைச் செய்கிறார் என்றாலும், அவருடைய நாமம் மாற வேண்டும், ஏனென்றால் அது வேறு யுகம்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

238. ஒவ்வொரு முறை தேவன் பூமிக்கு வரும்போதும், அவர் தமது நாமத்தையும், பாலினத்தையும், உருவத்தையும், தமது கிரியையையும் மாற்றுகிறார்; அவர் முன்னர் செய்த கிரியையை திரும்பச் செயல்படுத்துவதில்லை. அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல. முன்னர் அவர் வந்தபோது, அவர் இயேசு என்று அழைக்கப்பட்டார்; அவர் மீண்டும் வரும்போது இந்த முறை அவரை இயேசு என்று அழைக்க முடியுமா? முன்னர் அவர் வந்தபோது, அவர் ஆணாக இருந்தார்; இந்த முறை அவர் மீண்டும் ஆணாக இருக்க முடியுமா? கிருபையின் யுகத்தில் அவர் வந்தபோது அவருக்கான கிரியை சிலுவையில் அறையப்படுவது தான்; அவர் மீண்டும் வரும்போது, அவரால் மனுஷகுலத்தை பாவத்திலிருந்து மீட்டெடுக்க முடியுமா? அவர் மீண்டும் சிலுவையில் அறையப்படுவாரா? அது அவருடைய கிரியையை மீண்டும் செய்வதாக இருக்காதா? தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பது உனக்குத் தெரியாதா? தேவன் மாறாதவர் என்று சொல்பவர்களும் உண்டு. அது சரிதான், ஆனால் அது தேவனின் மனநிலை மற்றும் அவரது சாரத்தின் மாறாத தன்மையைக் குறிக்கிறது. அவருடைய நாமத்திலும் கிரியையிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அவருடைய சாராம்சம் மாறிவிட்டது என்பதை நிரூபிக்கவில்லை; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் எப்போதும் தேவனாகவே இருப்பார், இது ஒருபோதும் மாறாது. தேவனின் கிரியை மாறாது என்று நீ கூறினால், அவரால் தனது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தை நிறைவுசெய்ய முடியுமா? தேவன் எப்போதும் மாறாதவர் என்பதை மட்டுமே நீ அறிவாய், ஆனால் தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பது உனக்குத் தெரியுமா? தேவனின் கிரியை மாறாமல் இருந்தால், அவர் இன்றுவரை மனுஷகுலத்தை வழிநடத்தியிருக்க முடியுமா? தேவன் மாறாதவர் என்றால், அவர் ஏன் ஏற்கனவே இரண்டு யுகங்களின் கிரியைகளைச் செய்திருக்க வேண்டும்? அவரது கிரியை ஒருபோதும் முன்னேறிச் செல்வதை நிறுத்தாது, அதாவது அவரது மனநிலை படிப்படியாக மனுஷனுக்கு வெளிப்படுகிறது, அவ்வாறு வெளிப்படுத்தப்படுவது அவருடைய ஆழ்ந்த மனநிலையே. ஆதியில், தேவனின் மனநிலை மனுஷனிடமிருந்து மறைக்கப்பட்டது, அவர் ஒருபோதும் தன் மனநிலையை மனுஷனுக்கு வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை, மேலும் மனுஷனுக்கு அவரைப் பற்றிய எந்த அறிவும் இருக்கவில்லை. இதன் காரணமாக, மனுஷனுக்கு தனது மனநிலையைப் படிப்படியாக வெளிப்படுத்த அவர் தனது கிரியையைப் பயன்படுத்துகிறார், ஆனால் இவ்வாறு கிரியை செய்வது என்பது ஒவ்வொரு யுகத்திலும் தேவனின் மனநிலை மாறுகிறது என்று அர்த்தமல்ல. தேவனின் சித்தம் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதால், தேவனின் மனநிலையும் தொடர்ந்து மாறுகிறது என்று கருதக்கூடாது. மாறாக, அவர் கிரியை செய்த யுகங்கள் வித்தியாசமாக இருப்பதால், தேவன் தம்முடைய ஆழமான மனநிலையை முழுவதுமாக எடுத்து, படிப்படியாக அதை மனுஷனுக்கு வெளிப்படுத்துகிறார், இதன்மூலம் மனுஷன் அவரை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இது எந்த வகையிலும் தேவன் முதலில் குறிப்பிட்ட மனநிலை எதையும் கொண்டிருக்கவில்லை என்பதற்கோ அல்லது காலப்போக்கில் அவருடைய மனநிலை படிப்படியாக மாறிவிட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை—அத்தகைய புரிதல் தவறானது. கடந்து செல்லும் யுகங்களுக்கு ஏற்ப தேவன் மனுஷனுக்கு அவரது உள்ளார்ந்த மற்றும் குறிப்பிட்ட மனநிலையை, அதாவது அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்; ஒரு யுகத்திற்கான கிரியையால் தேவனின் முழு மனநிலையையும் வெளிப்படுத்த முடியாது. ஆகவே, “தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல,” என்ற வார்த்தைகள் அவருடைய கிரியையைக் குறிக்கின்றன, மேலும் “தேவன் மாறாதவர்” என்ற வார்த்தைகள் தேவனுக்குள் இயல்பாக இருக்கும் விஷயங்களையும், அவர் என்னவாக இருக்கிறார் என்பதையும் குறிக்கின்றன. இருப்பினும், உன்னால் ஆறாயிரம் ஆண்டுகளின் கிரியைகளை ஒரு புள்ளியில் இணைக்கவோ அல்லது மரித்துப்போன வார்த்தைகளுடன் மட்டுப்படுத்தவோ முடியாது. இது மனுஷனின் முட்டாள்தனம். மனுஷன் கற்பனை செய்வது போல தேவன் எளிமையானவர் அல்ல, மேலும் அவருடைய கிரியை எந்த ஒரு யுகத்திலும் தாமதமாகச் செயல்படாது. உதாரணமாக, யேகோவா எப்போதும் தேவனின் நாமமாக இருக்க முடியாது; தேவன் தனது கிரியையை இயேசு என்ற பெயரிலும் செயல்படுத்த முடியும். இது தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறுகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

தேவன் எப்போதும் தேவன்தான், அவர் ஒருபோதும் சாத்தானாக மாற மாட்டார்; சாத்தான் எப்போதும் சாத்தான்தான், அவன் ஒருபோதும் தேவனாக மாற மாட்டான். தேவனின் ஞானம், தேவனின் அதிசயம், தேவனின் நீதி, தேவனின் மகத்துவம் ஆகியவை ஒருபோதும் மாறாது. அவருடைய சாராம்சமும், அவரிடம் இருப்பதும், அவர் என்னவாக இருக்கிறாரோ அதுவாக இருப்பதும் மாறாது. எவ்வாறாயினும், அவருடைய கிரியையைப் பொறுத்தவரை, அது எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறி வருகிறது, எப்போதும் ஆழமாகச் செல்கிறது, ஏனென்றால் அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல. ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு புதிய நாமத்தைப் பெறுகிறார், ஒவ்வொரு யுகத்திலும் அவர் புதிய கிரியையைச் செய்கிறார், ஒவ்வொரு யுகத்திலும் அவர் தனது சிருஷ்டிப்புகளை அவருடைய புதிய சித்தத்தையும் புதிய மனநிலையையும் காண அனுமதிக்கிறார். ஒரு புதிய யுகத்தில், தேவனின் புதிய மனநிலையின் வெளிப்பாட்டை ஜனங்கள் காணத் தவறினால், அவர்கள் அவரை எப்போதும் சிலுவையில் அறைந்தபடியே விட்டுவிட மாட்டார்களா? அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் தேவனை வரையறுக்க மாட்டார்களா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

239. கடைசி நாட்களில் இரட்சகராகிய இயேசுவின் வருகைக்காக மனிதன் ஏங்கி யூதேயாவில் அவர் கொண்டிருந்த அதே உருவத்தில் அவர் வருவார் என்று மனிதன் இன்னும் காத்திருக்கிறான் என்றால், ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டம் மீட்பின் யுகத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கும் மற்றும் அதைத் தாண்டி வந்திருக்க முடியாது. மேலும், கடைசி நாட்கள் ஒருபோதும் வராது. இந்த யுகம் ஒருபோதும் முடிவுக்கு வராது. ஏனென்றால், இரட்சகராகிய இயேசு மனிதகுலத்தின் மீட்பிற்காகவும் இரட்சிப்பிற்காகவும் மட்டுமே இருக்கிறார். கிருபையின் யுகத்தில் உள்ள அனைத்து பாவிகளுக்காகவும் நான் இயேசுவின் நாமத்தை எடுத்தேன், ஆனால் அது முழு மனிதகுலத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் நாமம் அல்ல. யேகோவா, இயேசு, மேசியா அனைவருமே என் ஆவியானவரைக் குறிக்கிறார்கள் என்றாலும், இந்த நாமங்கள் எனது ஆளுகைத் திட்டத்தின் வெவ்வேறு யுகங்களை மட்டுமே குறிக்கின்றன, மற்றும் என்னை முழுமையாக பிரதிநிதித்தும் செய்யவில்லை. பூமியிலுள்ள ஜனங்கள் என்னை அழைக்கும் நாமங்கள் எனது முழு மனநிலையையும், என்னுடைய அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது. அவை வெவ்வேறு யுகங்களில் நான் அழைக்கப்படும் வெவ்வேறு நாமங்கள் ஆகும். எனவே, இறுதி யுகம், அதாவது கடைசி நாட்களின் யுகம் வரும்போது, என் நாமம் மீண்டும் மாறும். நான் யேகோவா என்றோ, இயேசு என்றோ, அல்லது மேசியா என்றோ அழைக்கப்படமாட்டேன்—நான் வல்லமை பொருந்திய சர்வவல்லமையுள்ள தேவன் என்று அழைக்கப்படுவேன். இந்த நாமத்தின் கீழ் நான் முழு யுகத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவேன். நான் ஒரு யுகத்தில் யேகோவா என்று அழைக்கப்பட்டேன். நான் மேசியா என்றும் அழைக்கப்பட்டேன். ஜனங்கள் ஒரு முறை என்னை இரட்சகராகிய இயேசு என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைத்தார்கள். ஆயினும், கடந்த யுகங்களில் ஜனங்கள் அறிந்திருந்த யேகோவா அல்லது இயேசுவாக நான் இன்று இல்லை. நான் கடைசி நாட்களில் திரும்பி வந்த தேவன். நான் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தேவன். என் முழு மனநிலையுடன், அதிகாரம், மரியாதை மற்றும் மகிமை நிறைந்தவராக பூமியின் கடையாந்தரங்களிலிருந்து எழுந்து வரும் தேவன் நானே. ஜனங்கள் ஒருபோதும் என்னுடன் ஈடுபடவில்லை, ஒருபோதும் என்னை அறிந்திருக்கவில்லை, எப்போதும் என் மனநிலையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை ஒரு நபர் கூட என்னைப் பார்த்ததில்லை. தேவன் கடைசி நாட்களில் மனிதனுக்குக் காட்சியளிக்கிறார். ஆனால் மனிதர்களிடையே மறைந்திருக்கிறார். எரியும் சூரியனையும், எரியும் சுடரையும் போல, உண்மையான மற்றும் மெய்யான மனிதர்களிடையே வல்லமை மற்றும் அதிகாரம் நிறைந்தவராக அவர் வசிக்கிறார். என் வார்த்தைகளால் தீர்மானிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. நெருப்பை எரிப்பதன் மூலம் சுத்திகரிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. இறுதியில், எல்லா ஜாதிகளும் என்னுடைய வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், என் வார்த்தைகளால் துண்டு துண்டாக நொறுக்கப்படுவார்கள். இவ்வாறு, கடைசி நாட்களில் எல்லா ஜனங்களும் திரும்பி வந்த மீட்பர் நான் தான் என்பதையும், மனிதகுலம் அனைத்தையும் ஜெயிக்கும் சர்வவல்லமையுள்ள தேவன் நான் தான் என்பதையும் காண்பார்கள். நான் ஒரு யுகத்தில் மனிதனுக்கான பாவநிவாரண பலியாக இருந்தேன், ஆனால் கடைசி நாட்களில் நான் எல்லாவற்றையும் எரிக்கும் சூரியனின் தீப்பிழம்புகளாகவும், எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் நீதியின் சூரியனாகவும் மாறுகிறேன் என்பதை எல்லோரும் காண்பார்கள். இதுவே கடைசி நாட்களில் எனது கிரியை. அனைவரும் ஒரே உண்மையான தேவனாகிய என்னை வணங்குவதற்காகவும், அவர்கள் என் உண்மையான முகத்தைக் காணவும், நான் ஒரு நீதியுள்ள தேவன், எரியும் சூரியன், எரியும் சுடர் என்று ஜனங்கள் அனைவரும் காணவும், இந்த நாமத்தை நான் எடுத்துக்கொண்டேன்: நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் மீட்பர் மட்டுமல்ல; வானம், பூமி, கடல் என எல்லா உயிரினங்களுக்கும் நான் தான் தேவன்.

இரட்சகர் கடைசி நாட்களில் வந்து, இன்னும் இயேசு என்று அழைக்கப்பட்டு, மீண்டும் யூதேயாவில் பிறந்து அங்கே அவருடைய கிரியையைச் செய்திருந்தால், நான் இஸ்ரவேல் ஜனங்களை மட்டுமே படைத்தேன், இஸ்ரவேல் ஜனங்களை மட்டுமே மீட்டுக்கொண்டேன் என்பதையும் புறஜாதியினருடன் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் இது நிரூபிக்கும். “வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவன் நான் என்ற என் வார்த்தைகளுக்கு முரணாக இது இருக்காதா? நான் யூதேயாவை விட்டு புறஜாதியினரிடையே என் கிரியையைச் செய்கிறேன். ஏனென்றால் நான் இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் தேவன். கடைசி நாட்களில் நான் புறஜாதியினரிடையே தோன்றுகிறேன். ஏனென்றால், நான் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனாகிய யேகோவா மட்டுமல்ல, ஆனால் அதற்கு மேலாக, புறஜாதியினரிடையே நான் தேர்ந்தெடுத்த அனைவரையும் சிருஷ்டித்தவன். நான் இஸ்ரவேல், எகிப்து, லெபனான் ஆகியவற்றை மட்டுமல்ல, இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட அனைத்து புறஜாதி தேசங்களையும் படைத்தேன். இதன் காரணமாக, நான் எல்லா உயிரினங்களுக்கும் கர்த்தராக இருக்கிறேன். நான் என் கிரியையின் தொடக்கப் புள்ளியாக இஸ்ரவேலைப் பயன்படுத்தினேன். யூதேயா மற்றும் கலிலேயாவை எனது மீட்பின் கிரியையின் கோட்டைகளாகப் பயன்படுத்தினேன். இப்போது நான் புறஜாதி தேசங்களைப் பயன்படுத்துகிறேன். அதில் இருந்து முழு யுகத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவேன். நான் இஸ்ரவேலில் இரண்டு கட்ட கிரியைகளைச் செய்தேன் (இந்த இரண்டு கட்ட கிரியைகளும் நியாயப்பிரமாணத்தின் யுகம் மற்றும் கிருபையின் யுகம் ஆகும்). மேலும், இரண்டு கட்ட கிரியைகளை (கிருபையின் யுகம் மற்றும் ராஜ்யத்தின் யுகம்) இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட நிலங்கள் முழுவதிலும் செய்து வருகிறேன். புறஜாதி தேசங்களிடையே, நான் ஜெயம் பெறும் கிரியையைச் செய்து, யுகத்தை முடிப்பேன். மனிதன் எப்பொழுதும் என்னை இயேசு கிறிஸ்து என்று அழைத்தாலும், கடைசி நாட்களில் நான் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கியிருக்கிறேன், புதிய கிரியையைத் தொடங்கியிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரியவில்லை என்றால், இரட்சகராகிய இயேசுவின் வருகையை மனிதன் தொடர்ந்து எதிர்பார்த்துக் காத்திருந்தால், நான் அந்த ஜனங்களை, என்னை நம்பாதவர்கள் என்றும், என்னை அறியாதவர்கள் என்றும், என் மீது தவறான நம்பிக்கை உடையவர்கள் என்றும் அழைப்பேன். அத்தகையவர்கள் பரலோகத்திலிருந்து இரட்சகராகிய இயேசுவின் வருகையைப் பார்க்க முடியுமா? அவர்கள் எனது வருகைக்காக காத்திருக்கவில்லை, யூதர்களுடைய ராஜாவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். இந்த தூய்மையற்ற பழைய உலகத்தை நான் நிர்மூலமாக்க வேண்டுமென அவர்கள் காத்திருக்கவில்லை, மாறாக, அவர்கள் மீட்கப்பட இயேசுவின் இரண்டாவது வருகைக்காக ஏங்குகிறார்கள். இந்த தீட்டுப்பட்ட மற்றும் அநீதியான தேசத்திலிருந்து மனிதகுலம் முழுவதையும் மீட்க அவர்கள் இயேசுவை எதிர்நோக்குகிறார்கள். அத்தகையவர்கள், கடைசி நாட்களில் எனது கிரியையை முடிப்பவர்களாக எப்படி மாற முடியும்? மனிதனுடைய ஆசைகளால் என் விருப்பங்களை நிறைவேற்றவோ அல்லது என் கிரியையை நிறைவேற்றவோ இயலாது. ஏனென்றால், நான் முன்பு செய்த கிரியையை மனிதன் வெறுமனே போற்றுகிறான் அல்லது மதிக்கிறான் மற்றும் நான் எப்போதும் பழமையாகிப் போகாத புதிய தேவன் என்று அவன் அறியாதிருக்கிறான். நான் யேகோவா, இயேசு என்று மட்டுமே மனிதனுக்கு தெரியும். மனிதகுலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் கடைசி நபர் நான் என்பதை அவன் அறியாதிருக்கிறான். மனிதன் ஏங்கும் மற்றும் அறிந்த அனைத்தும் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களிலிருந்தே வருகின்றன. அது அவர்கள் கண்களால் பார்க்கக்கூடியது மட்டுமே ஆகும். இது நான் செய்யும் கிரியைக்கு ஏற்ப இல்லை, ஆனால் அதனுடன் ஒத்துப்போகமல் இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்” என்பதிலிருந்து

முந்தைய: IV. மாம்சமாதலின் இரகசியங்களை வெளிப்படுத்துவது குறித்த வார்த்தைகள்

அடுத்த: VI. வேதாகமம் குறித்த வார்த்தைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக