IV. மாம்சமாதலின் இரகசியங்களை வெளிப்படுத்துவது குறித்த வார்த்தைகள்

187. மனுஷனை பாவத்திலிருந்து மீட்கவே தேவன் முதன் முதலில் மாம்சமாகினார், இயேசுவின் மாம்ச சரீரத்தின் மூலம் அவனை மீட்க மாம்சமாகினார், அதாவது அவர் மனுஷனை சிலுவையிலிருந்து இரட்சித்தார், ஆனாலும் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலை இன்னும் மனுஷனுக்குள் தான் இருந்தது. தேவன் இரண்டாவதாக மாம்சமாகியது பாவநிவாரணப்பலியாக ஊழியம் செய்ய அல்ல, மாறாகப் பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை முழுமையாக இரட்சிக்கவே ஆகும். மன்னிக்கப்பட்டவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு முழுமையாகச் சுத்திகரிக்கப்படுவதற்காகவும், மற்றும் மாற்றப்பட்ட மனநிலையை அடைவதன் மூலம் சாத்தானின் அந்தகார ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்புவதற்காகவும் இது செய்யப்படுகிறது. இவ்வாறாக மட்டுமே மனுஷனை முழுமையாக பரிசுத்தப்படுத்த முடியும். நியாயப்பிரமாணத்தின் யுகம் முடிவுக்கு வந்தபின், கிருபையின் யுகத்திலிருந்து, தேவன் இரட்சிப்பின் கிரியையைத் தொடங்கினார், இது கடைசிக் காலம் வரை தொடர்கிறது, மனுஷ இனத்தை அவர்களின் கலகத்தன்மைக்காக அவர்களை நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சைக்கு உட்படுத்தி, அவர் மனுஷகுலத்தை முழுமையாகச் சுத்திகரிப்பார். அப்போதுதான் தேவன் தம்முடைய இரட்சிப்பின் கிரியையை முடித்துவிட்டு ஓய்வெடுப்பார். ஆகையால், கிரியையின் மூன்று கட்டங்களில், தேவன் தம்முடைய கிரியையை மனுஷர்களிடையே நிறைவேற்ற இரண்டு முறை மட்டுமே மாம்சமாகியிருக்கிறார். ஏனென்றால், கிரியையின் மூன்று கட்டங்களில் ஒன்று மட்டுமே மனுஷரை தங்கள் ஜீவிதத்தை வழிநடத்த வழிகாட்டும், மற்ற இரண்டுமே இரட்சிப்பின் கிரியைகளைக் கொண்டிருக்கும். மாம்சமாவதன் மூலம் மட்டுமே தேவன் மனுஷனுடன் இணைந்து ஜீவிக்கவும், உலகின் துயரங்களை அனுபவிக்கவும், சாதாரண மாம்ச சரீரத்தில் ஜீவிக்கவும் முடியும். இவ்வாறாக மட்டுமே அவர் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களுக்குத் தேவையான நடைமுறை பாதையை வழங்க முடியும். மாம்சமாகிய தேவன் மூலம்தான் மனுஷன் தேவனிடமிருந்து முழு இரட்சிப்பைப் பெறுகிறான், அவனுடைய ஜெபங்களுக்கு பதில் பரலோகத்திலிருந்து நேரடியாக வருவதில்லை. ஏனென்றால், மனுஷன் மாம்சத்தில் இருப்பதால், அவனுக்கு தேவனுடைய ஆவியானவரைக் காணவும் வழி இல்லை, அவருடைய ஆவியானவரை அணுகவும் முடியாது. மனுஷன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரே விஷயம் மாம்சமாகிய தேவன் மட்டும் தான், மேலும் இதன் மூலம் மட்டுமே மனுஷன் எல்லா வழிகளையும் எல்லா சத்தியங்களையும் புரிந்துகொண்டு முழு இரட்சிப்பைப் பெற முடியும். தேவன் இரண்டாவது முறை மாம்சமாவது மனுஷனின் பாவங்களை நீக்குவதற்கும் அவனை முழுமையாக சுத்திகரிப்பதற்கும் போதுமானதாக இருக்கும். ஆகையால், தேவன் இரண்டாவது முறை மாம்சமாவதுடன், மாம்சத்தில் தேவனின் முழுக் கிரியையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவம் முழுமையாக்கப்படும். இதன்மூலம், மாம்சத்தில் தேவனின் கிரியை முற்றிலும் முடிவுக்கு வந்திருக்கும். தேவன் இரண்டாவது முறையாக மாம்சமாகியதற்குப் பிறகு, அவர் தமது கிரியைக்காக மூன்றாவது முறையாக மாம்சமாக மாற மாட்டார். அவருடைய முழு ஆளுகையும் முடிவுக்கு வந்திருக்கும். தேவனின் கடைசிக் காலத்திற்கான மாம்சம் அவர் தேர்ந்தெடுத்த ஜனங்களை முழுமையாகப் பெற்றிருக்கும், கடைசிக் காலத்தின் மனுஷத்தன்மை அனைத்தும் வகையின்படி வகைப்படுத்தப்படும். அவர் இனியும் இரட்சிப்பின் கிரியையை செய்யமாட்டார், எந்தக் கிரியையும் செய்ய மாம்சத்திற்குத் திரும்பமாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

188. யேகோவாவின் கிரியைக்குப் பிறகு, இயேசு மனுஷரிடையே தனது கிரியையைச் செய்ய மாம்சத்தில் வந்தார். அவருடைய கிரியை தனிமையில் மேற்கொள்ளப்படவில்லை, ஆனால் யேகோவாவின் கிரியையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. நியாயத்தீர்ப்பின் யுகத்தை முடித்தபின் தேவன் செயல்படுத்திய ஒரு புதிய யுகத்திற்கான கிரியை இது. இதேபோல், இயேசுவின் கிரியை முடிந்தபின், தேவன் அடுத்த யுகத்திற்காக தனது கிரியையைத் தொடர்ந்தார், ஏனென்றால் தேவனின் முழு ஆளுகையானது எப்போதும் முன்னேறியபடியே இருக்கிறது. முதுமையடைந்த யுகம் கடந்து செல்லும் போது, அதற்குப் பதிலாக ஒரு புதிய யுகம் வரும், மேலும் பழையக் கிரியை முடிவடைந்ததும், தேவனின் ஆளுகையைத் தொடர புதிய கிரியை ஒன்று இருக்கும். இந்த மனுஷ அவதாரம் தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரம் ஆகும், இது இயேசுவின் கிரியையைப் பின்பற்றுகிறது. நிச்சயமாக, இந்த மனுஷ அவதாரம் சுயாதீனமாக ஏற்படாது; இது நியாயத்தீர்ப்பின் யுகம் மற்றும் கிருபையின் யுகம் ஆகியவற்றிற்குப் பிறகான கிரியையின் மூன்றாம் கட்டம் ஆகும். ஒவ்வொரு முறையும் தேவன், கிரியையின் புதிய கட்டத்தைத் தொடங்கும்போது, எப்போதும் ஒரு புதிய ஆரம்பம் இருக்க வேண்டும், மேலும் அது எப்போதும் ஒரு புதிய யுகத்தைக் கொண்டுவர வேண்டும். தேவனின் மனநிலையிலும், அவர் கிரியை செய்யும் முறையிலும், அவருடைய கிரியை செய்யப்படும் இடத்திலும் மற்றும் அவரது நாமத்திலும் அதற்கேற்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்படியானால், புதிய யுகத்தில் தேவனின் கிரியையை ஏற்றுக்கொள்வது மனுஷனுக்கு கடினம் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் தேவன் மனுஷனால் எவ்வாறு எதிர்க்கப்படுகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் எப்போதும் தனது கிரியையைச் செய்கிறார், எப்போதும் மனுஷகுலம் முழுவதையும் முன்னோக்கிக் கொண்டு செல்கிறார். இயேசு மனுஷனின் உலகத்திற்கு வந்தபோது, அவர் நியாயப்பிரமாணத்தின் யுகத்தை முடித்துவைத்து கிருபையின் யுகத்தை அறிமுகப்படுத்தினார். கடைசிக்காலத்தில், தேவன் மீண்டும் மாம்சத்தில் வந்தார், இந்த மனுஷ அவதாரத்தில் அவர் கிருபையின் யுகத்தை முடித்துவைத்து, ராஜ்யத்தின் யுகத்தை அறிமுகப்படுத்தினார். தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருமே ராஜ்யத்தின் யுகத்திற்கு வழிநடத்தப்படுவார்கள், மேலும் அவர்களால் தேவனின் வழிகாட்டலை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளவும் முடியும். இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனை புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஒரு உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து

189. “மனுஷரூபமெடுத்தல்” என்பது மாம்சத்தில் தேவனுடைய தோற்றமாகும்; மாம்ச சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களிடையே தேவன் கிரியை செய்கிறார். ஆகவே, தேவன் மனுஷரூபம் எடுக்கவேண்டுமாயின், அவர் முதலில் மாம்சமாக இருக்கவேண்டும், அதாவது சாதாரண மனிதத்தன்மையுடன் மாம்சமாக இருக்க வேண்டும்; இது மிகவும் அடிப்படையான முன்னிபந்தனையாகும். உண்மையில், தேவன் மாம்சமாகியதன் உட்பொருள் என்னவென்றால், தேவன் மாம்சத்தில் வாழ்கிறார், கிரியை செய்கிறார் என்பதாகும், தேவன் அவருடைய சாராம்சத்தில் மாம்சமாகி ஒரு மனிதனாகிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து

190. மாம்சமாகுதல் என்றால் தேவனுடைய ஆவியானவர் ஒரு மாம்சமாகிறார், அதாவது தேவன் மாம்சமாகிறார் என்று அர்த்தமாகும்; மாம்சம் செய்கிற கிரியையானது ஆவியானவரின் கிரியையாகும், இது மாம்சத்தில் உணரப்பட்டு, மாம்சத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. தேவனுடைய மாம்சத்தைத் தவிர வேறு எவரும் மாம்சமாகிய தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்ற முடியாது; அதாவது, இந்த இயல்பான மனிதத்தன்மையைக் கொண்ட மாம்சமாகிய தேவன் மட்டுமே வேறு எவராலும் வெளிப்படுத்த இயலாத—தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்தக்கூடியவராக இருக்கிறார். தேவன் தமது முதல் வருகையின் போது, இருபத்தொன்பது வயதிற்கு முன்பு இயல்பான மனிதத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்றால்—அவர் பிறந்தவுடனே அற்புதங்களைச் செய்யக் கூடியவராக இருந்திருந்தார் என்றால், அவர் பேசக் கற்றுக்கொண்டவுடனே பரலோகப் பாஷையையும் பேசக்கூடியவராக இருந்திருந்தார் என்றால், அவர் பூமியில் முதன்முதலில் காலடி வைத்த தருணத்திலே அவர் எல்லா உலக விஷயங்களையும் புரிந்துகொள்ளக் கூடியவராக இருந்திருந்தார் என்றால், ஒவ்வொரு நபரின் எண்ணங்களையும் நோக்கங்களையும் புரிந்துகொள்ளக் கூடியவராக இருந்திருந்தார் என்றால்—அத்தகைய நபரை ஒரு சாதாரண மனிதர் என்று அழைத்திருக்க முடியாது, அத்தகைய மாம்சத்தை மனித மாம்சம் என்று அழைத்திருக்கவும் முடியாது. கிறிஸ்துவின் நிலை இதுவாக இருந்திருந்தால், தேவன் மாம்சமாகியதன் அர்த்தமும் சாராம்சமும் இழக்கப்பட்டுப் போயிருக்கும். அவர் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்கிறார் என்பது அவர் மாம்சத்தில் அவதரித்த தேவன் என்பதை நிரூபிக்கிறது; அவர் ஒரு சாதாரண மனித வளர்ச்சி செயல்முறைக்கு உட்படுகிறார் என்னும் காரியம் அவர் ஒரு சாதாரண மாம்சமுள்ளவர் என்பதை மேலும் நிரூபிக்கிறது; மேலும், அவர் தேவனுடைய வார்த்தை, தேவனுடைய ஆவியானவர், மாம்சமாக மாறினார் என்பதற்கு அவருடைய கிரியை போதுமான சான்றாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து

191. மாம்சத்தில் வந்த தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், தேவனுடைய ஆவியால் அணிவிக்கப்பட்ட மாம்சமே கிறிஸ்து. இந்த மாம்சமானது மாம்சத்திலிருந்து வருகின்ற மற்றெந்த மனிதனையும் போல அல்ல. இந்த வித்தியாசம் எதற்காகவென்றால், கிறிஸ்து மாம்சம் மற்றும் இரத்தத்திற்குரியவர் அல்ல; அவர் மாம்சத்திலே வந்த ஆவியின் அவதாரம். அவர் ஒரு சாதாரண மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை கொண்டவர். அவரது தெய்வீகத்தன்மையானது எந்த மனிதனாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அவருடைய தெய்வீகத்தன்மை தேவனுடைய கிரியையைச் செய்து நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அவருடைய இயல்பான மனிதத்தன்மை அவரது இயல்பான அனைத்துச் செயல்களையும் மாம்சத்தில் நிலைநிறுத்துகிறது. அவருடைய மனிதத்தன்மையாக இருந்தாலும் அல்லது தெய்வீகத்தன்மையாக இருந்தாலும், இரண்டுமே பரமபிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிகின்றன. கிறிஸ்துவின் சாராம்சம் ஆவியானவர் ஆவார், அதாவது தெய்வீகத்தன்மையுள்ளவர் ஆவார். ஆகையால், அவருடைய சாராம்சம் தேவனாகவே இருக்கிறது; இந்தச் சாராம்சம் அவரது சொந்தக் கிரியைக்கு இடையூறு விளைவிக்காது, மேலும் அவரால் தனது சொந்தக் கிரியையை அழிக்கும் எதையும் செய்ய முடியாது, மேலும் அவர் தனது சொந்தச் சித்தத்திற்கு எதிரான எந்த வார்த்தைகளையும் உச்சரிக்கவும் மாட்டார். ஆகையால், மாம்சத்தில் வந்த தேவன் தனது சொந்த நிர்வாகத்தைக் குறுக்கிடும் எந்த செயலையும் ஒருபோதும் செய்ய மாட்டார். இதைத்தான் ஜனங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் சாராம்சம் மனிதனை இரட்சிப்பதே ஆகும், இது தேவனுடைய சொந்த நிர்வாகத்தின் பொருட்டே செய்யப்படுகிறது. இதேபோல், கிறிஸ்துவின் கிரியை மனிதனை இரட்சிப்பதாகும், மேலும் அது தேவனுடைய சித்தத்திற்காகவே செய்யப்படுகிறது. தேவன் மாம்சமாக வந்ததனால், அவரது கிரியையைச் செய்ய அவருடைய மாம்சம் போதுமானதாக இருக்கிறது என்பதை அவர் தமது மாம்சத்திற்குள் தமது சாரம்சத்தை உணர்ந்துகொள்கிறார். ஆகையால், கிறிஸ்துவின் மனித அவதாரத்தின் போது தேவனுடைய ஆவியின் அனைத்துக் கிரியைகளுக்கும் பதிலாக கிறிஸ்துவின் கிரியை இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த மனித அவதாரக் காலம் முழுவதுமுள்ள அனைத்துக் கிரியைகளின் பிரதான மையமாக கிறிஸ்துவின் கிரியை இருக்கிறது. இதை வேறு எந்தக் காலத்தின் கிரியையோடும் ஒன்றாகச் சேர்க்க முடியாது. தேவன் மாம்சமாக மாறுவதால், அவர் தம்முடைய மாம்சத்தின் அடையாளத்தில் செயல்படுகிறவராயிருக்கிறார்; அவர் மாம்சத்தில் வருவதால், அவர் மாம்சத்தில் செய்ய வேண்டிய கிரியையை செய்து முடிக்கிறார். அது தேவனுடைய ஆவியாக இருந்தாலும் அல்லது கிறிஸ்துவாக இருந்தாலும், இருவரும் தேவனே, அவர் தாம் செய்ய வேண்டிய கிரியையைச் செய்கிறார், மற்றும் அவர் தாம் செய்ய வேண்டிய ஊழியத்தைச் செய்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது” என்பதிலிருந்து

192. தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் செய்ய விரும்பும் கிரியையை அவர் வெளிப்படுத்துவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியை சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை மனுஷன் விசாரிக்க விரும்பினால், தேவன் வெளிப்படுத்தும் மனநிலை மற்றும் அவர் பேசும் வார்த்தைகளிலிருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை உறுதிப்படுத்தவும், இது சத்தியத்திற்கான வழி இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், ஒருவன் தனது சாராம்சத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும். எனவே, இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானது, வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டிலும், அவரது சாராம்சத்தில் (அவரது கிரியை, அவரது வார்த்தைகள், அவரது மனநிலை மற்றும் பல அம்சங்களில்) அமைந்துள்ளது. மனுஷன் தேவனின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே ஆராய்ந்து, அதன் விளைவாக அவரது சாராம்சத்தை கவனிக்கத் தவறுகிறான் என்றால், இது மனுஷன் இருளில் மூழ்கியுள்ளதையும், அவனது அறியாமையையும் காட்டுகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து

193. தேவன் மாம்சமாகியதன் உட்பொருள் என்னவென்றால், தேவன் மாம்சத்தில் வாழ்கிறார், கிரியை செய்கிறார் என்பதாகும், தேவன் அவருடைய சாராம்சத்தில் மாம்சமாகி ஒரு மனிதனாகிறார். மனுஷரூபமெடுத்து வந்த அவருடைய வாழ்க்கை மற்றும் கிரியையை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவதாக, அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கு முன்பு அவர் வாழும் வாழ்க்கை. அவர் சாதாரண மனிதத் தேவைகள் நிறைந்த (உணவு, உடை, உறக்கம், உறைவிடம்), சாதாரண மனித பலவீனங்கள் மற்றும் சாதாரண மனித உணர்ச்சிகளுடன் ஒரு சாதாரண மனிதக் குடும்பத்தில், முற்றிலும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்கிறார், மனித வாழ்க்கையின் சாதாரண ஒழுக்கங்களையும் விதிகளையும் கடைபிடிக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த முதல் கட்டத்தில் அவர் தெய்வீகத்தன்மையற்ற, எல்லாச் சாதாரண மனித நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறவராய் முற்றிலும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்கிறார். இரண்டாவது கட்டம், அவருடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கியபின் அவர் வாழும் வாழ்க்கையாகும். அவர் இன்னும் சாதாரண மனிதத்தன்மையில், தெய்வீகத்தின் வெளிப்புற அடையாளத்தைக் காண்பிக்காமல் ஒரு சாதாரண மனிதத் தோற்றத்தில் வாழ்கிறார். ஆயினும் அவர் தம்முடைய ஊழியத்திற்காகவே முற்றிலும் வாழ்கிறார், இந்தச் சமயத்தில் முற்றிலும் அவருடைய தெய்வீகத்தன்மையின் இயல்பான கிரியையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது இருக்கிறது, ஏனென்றால் அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது அவருடைய ஊழியத்தை நிறைவேற்றும் அளவிற்கு முதிர்ச்சியடைந்துள்ளது. ஆகவே, அவருடைய வாழ்க்கையின் இரண்டாவது கட்டமானது, அவரது இயல்பான மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை ஆகிய இரண்டின் வாழ்க்கையாக இருக்கும்போது, அது அவருடைய ஊழியத்தை அவரது இயல்பான மனிதத்தன்மையில் செய்ய வேண்டியதிருந்தது. அவரது வாழ்வின் முதல் கட்டத்தில், அவர் முற்றிலும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்வதற்கான காரணம் என்னவென்றால், அவருடைய மனிதத்தன்மையினால் தெய்வீகத்தன்மையினுடைய கிரியையை முழுமையாக இன்னும் பராமரிக்க முடியவில்லை, அது இன்னும் முதிர்ச்சியடையவில்லை; அவருடைய மனிதத்தன்மை முதிர்ச்சியடைந்த பின்னரே, அவர் தமது ஊழியத்தைத் தாங்கிக் கொள்ளும் திறன் பெற்று அவர் செய்து முடிக்கவேண்டிய ஊழியத்தைச் செய்ய ஆரம்பிக்கவும் முடியும். அவர் மாம்சமாக இருக்கிற நிலையில், வளர்ந்து முதிர்ச்சியடைய வேண்டும் என்பதால், அவருடைய வாழ்க்கையின் முதல் கட்டமானது சாதாரண மனிதத்தன்மையுடையதாகும்—இரண்டாவது கட்டத்தில், அவருடைய மனிதத்தன்மையானது அவருடைய கிரியையைச் செய்வதற்கும், அவருடைய ஊழியத்தை நிறைவேற்றவும் வல்லது என்பதால், தேவன் மாம்சத்தில் அவதரித்த வாழ்க்கையானது அவருடைய ஊழியத்தின் போது மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை ஆகிய இரண்டும் கொண்ட ஒன்றாகும். மனித அவதரிப்பாக மாம்சத்தில் வந்த தேவன் தாம் பிறந்த தருணத்திலிருந்து, தமது ஊழியத்தை ஊக்கத்துடனே ஆரம்பித்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்திருந்தால், பிறகு அவருக்கு எந்தவிதமான சரீரம் சார்ந்த சாராம்சமும் இருந்திருக்காது. ஆகையால், அவருடைய மனிதத்தன்மையானது அவருடைய மனித உடலின் சாராம்சத்தின் பொருட்டு உள்ளதாய் இருக்கிறது; மனிதத்தன்மை இல்லாமல் மாம்சம் இருக்க முடியாது, மனிதத்தன்மை இல்லாத ஒருவர் மனிதர் அல்ல. இந்த வகையில், தேவனுடைய மாம்சத்தின் மனிதத்தன்மை என்பது மனுஷரூபத்திலான தேவனுடைய மாம்சத்தின் ஒரு உள்ளார்ந்த குணமாகும். “தேவன் மாம்சமாகிறபோது அவர் முற்றிலும் தெய்வீகத்தன்மையுள்ளவர், மனிதரல்ல” என்று சொல்வது தேவதூஷணமாகும், ஏனென்றால் இந்த அறிக்கையானது வெறுமனே இல்லாததாயிருக்கிறது, மேலும் மாம்சமாகியதன் கொள்கையை மீறுகிறதாய் இருக்கிறது. அவர் தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கிய பிறகும், அவர் தம்முடைய கிரியையைச் செய்யும்போது மனிதத்தன்மையின் வெளிப்புறமான தோற்றத்தில் தெய்வீகத்தன்மையுடன் வாழ்கிறார்; அந்த நேரத்தில், அவருடைய தெய்வீகத்தன்மையை சாதாரண மாம்சத்தில் செய்கிறதான கிரியைகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்கு அவருடைய மனிதத்தன்மையானது உதவுகிறது. ஆகவே, கிரியையின் காரணகர்த்தா அவருடைய மனிதத்தன்மையில் வசிக்கும் தெய்வீகத்தன்மையாகும். அவருடைய மனிதத்தன்மை அல்ல, அவருடைய தெய்வீகத்தன்மையே செயல்பாட்டில் இருக்கிறது, ஆனாலும் இந்தத் தெய்வீகத்தன்மையானது அவருடைய மனிதத்தன்மைக்குள் மறைக்கப்பட்டிருக்கிறது; முக்கியமாக அவருடைய கிரியையானது அவருடைய மனிதத்தன்மையினால் அல்ல, அவருடைய முழுமையான தெய்வீகத்தன்மையினாலேயே செய்யப்படுகிறது. ஆனால் அந்தக் கிரியையைச் செய்வது அவருடைய மாம்சமாகும். அவர் ஒரு மனிதனாகவும் மற்றும் தேவனாகவும் இருக்கிறார் என்று ஒருவர் சொல்லலாம், ஏனென்றால் தேவன் மாம்சத்தில் வாழும் ஒரு தேவனாக மாறுகிறார், மனித வெளிப்புறத் தோற்றத்தில் மற்றும் மனித சாரம்சம் கொண்டவராக ஆனால் அதேவேளையில் தேவனின் சாரம்சம் உடையவராகவும் இருக்கிறார். அவர் தேவனுடைய சாரம்சம் கொண்ட ஒரு மனிதர் என்பதால், அவர் சிருஷ்டிக்கப்பட்ட எல்லா மனிதர்களுக்கும் மேலானவராகவும், தேவனுடைய கிரியையைச் செய்யக்கூடிய எந்த மனிதனுக்கும் மேலானவராகவும் இருக்கிறார். எனவே, அவரைப் போன்ற புறம்பான ஒரு மனித தோற்றமுள்ள அனைவரிலும், மனிதத்தன்மையைக் கொண்ட அனைவரிலும், அவர் ஒருவர் மட்டுமே மாம்சமாகிய தேவனாக இருக்கிறார்—மற்றவர்கள் அனைவரும் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மனிதத்தன்மை இருந்தாலும், சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களுக்கு மனிதத்தன்மையைத் தவிர வேறொன்றும் இல்லை, அதே நேரத்தில் மாம்சமாகிய தேவன் வேறுபட்டவராக இருக்கிறார்: அவருடைய மாம்சத்தில் அவருக்கு மனிதத்தன்மை மட்டுமல்ல, மிக முக்கியமாக தெய்வீகத்தன்மையும் உள்ளது. அவருடைய மனிதத்தன்மையை அவருடைய மாம்சத்தின் வெளிப்புறத் தோற்றத்திலும் அவருடைய அன்றாட வாழ்க்கையிலும் காணலாம், ஆனால் அவருடைய தெய்வீகத்தன்மையை உணர்ந்துகொள்வது கடினமானதாகும். ஏனென்றால், அவருடைய தெய்வீகத்தன்மையானது அவருக்கு மனிதத்தன்மை இருக்கும்போது மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது, மேலும் ஜனங்கள் கற்பனை செய்வது போல இது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல, இதனை ஜனங்கள் காண்பது என்பது மிகவும் கடினமாகும். இன்றும் கூட, மாம்சமாகிய தேவனுடைய உண்மையான சாரம்சத்தை ஆராய்ந்து புரிந்துகொள்வதில் ஜனங்களுக்கு மிகுந்த சிரமம் உள்ளது. நான் அதைப் பற்றி இவ்வளவு விரிவாகப் பேசிய பிறகும், உங்களில் பெரும்பாலானோருக்கு இது இன்னமும் ஒரு இரகசியமாகவே இருக்கக்கூடும் என்று நான் எதிர்பார்க்கிறேன். உண்மையில், இந்தப் பிரச்சினையானது மிகவும் எளிதானதாகும்: தேவன் மாம்சமாக மாறுவதால், அவருடைய சாரம்சமானது மனிதத்தன்மை மற்றும் தெய்வீகத்தன்மையின் கலவையாக இருக்கிறது. இந்தக் கலவையானது தேவன் என்று, அதாவது பூமியிலுள்ள தேவன் என்றழைக்கப்படுகிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து

194. மாம்சத்தில் இயல்பான தெய்வீகத்தன்மையின் கிரியையை பராமரிக்கவே மாம்சமாகிய தேவனுடைய மனிதத்தன்மை உள்ளது; அவரது இயல்பான மனித சிந்தனையானது அவரது இயல்பான மனிதத்தன்மையையும் அவரது இயல்பான அனைத்துச் சரீரச் செயல்பாடுகளையும் நிலைநிறுத்துகிறது. மாம்சத்தில் தேவனுடைய எல்லாக் கிரியைகளையும் நிலைநிறுத்துவதற்காகவே அவருடைய இயல்பான மனிதத்தன்மையானது இருக்கிறது என்று ஒருவர் கூறலாம். இந்த மாம்சம் ஒரு சாதாரண மனித மனதைக் கொண்டிருக்கவில்லை என்றால், தேவனால் மாம்சத்தில் கிரியை செய்ய முடிந்திருக்காது, மேலும் மாம்சத்தில் அவர் செய்ய வேண்டியதை ஒருபோதும் நிறைவேற்ற முடிந்திருக்காது. மாம்சமாகிய தேவன் ஒரு சாதாரண மனித மனதைக் கொண்டிருந்தாலும், அவருடைய செயல் மனித சிந்தனையால் கலப்படம் செய்யப்படவில்லை; அவர் தமது கிரியையை சாதாரண மனித சிந்தனையின் சிந்தனையினால் அல்லாமல், மனிதத்தன்மை மனதுடன் கொண்டிருப்பதற்கான முன்னிபந்தனையின் கீழ், மனிதத்தன்மையின் ஒரு சாதாரண மனதுடன் மேற்கொள்கிறார். அவருடைய மாம்சத்தின் எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அவருடைய கிரியை தருக்கத்தினாலோ அல்லது சிந்தனையினாலோ களங்கப்படுத்தப்படுவதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவருடைய செயல் அவருடைய மாம்சத்தின் மனதினால் சிந்திக்கப்படவில்லை, ஆனால் அவருடைய மனிதத்தன்மையில் தெய்வீகத்தன்மையினுடைய கிரியையின் நேரடி வெளிப்பாடாகும். அவருடைய செயல்கள் அனைத்தும் அவர் நிறைவேற்ற வேண்டிய ஊழியமாகும், அவற்றில் எதுவுமே அவருடைய மூளையில் தோன்றவில்லை. உதாரணமாக, பிணியாளிகளைக் குணப்படுத்துவது, பிசாசுகளைத் துரத்துவது, மற்றும் சிலுவையில் அறையப்படுவது அவருடைய மனித மனதில் தோன்றியவைகள் அல்ல, மனித மனதுள்ள எந்தவொரு மனிதனும் அவற்றை நிறைவேற்றியிருக்க முடியாது. அதேபோல், இன்றைய வெற்றியின் கிரியையானது மாம்சமாகிய தேவனால் செய்யப்பட வேண்டிய ஒரு ஊழியமாகும், ஆனால் அது ஒரு மனித சித்தத்தின்படியான கிரியை அல்ல, அது அவருடைய தெய்வீகத்தன்மை செய்ய வேண்டிய கிரியையாகும், அது எந்த மாம்ச மனிதனும் செய்ய முடியாத கிரியையாக இருக்கிறது. ஆகவே மாம்சமாகிய தேவன் ஒரு சாதாரண மனித மனதைக் கொண்டிருக்க வேண்டும், சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் அவர் மனிதத்தன்மையில் தனது கிரியையை சாதாரண மனதுடன் செய்ய வேண்டும். இது மாம்சமாகிய தேவனுடைய கிரியையின் சாராம்சமாகும், அதாவது மாம்சமாகிய தேவனின் சாராம்சமாகும்.

இயேசு கிரியையைச் செய்வதற்கு முன்பு, அவர் தமது இயல்பான மனிதத்தன்மையில் வாழ்ந்தார். அவர் தேவன் என்று ஒருவராலும் சொல்ல முடியவில்லை, அவர் மாம்சமாகிய தேவன் என்பதை ஒருவரும் கண்டுபிடிக்கவில்லை; ஜனங்கள் அவரை முற்றிலும் ஒரு சாதாரண மனிதராக அறிந்தார்கள். தேவன் மாம்சமாகினார் என்பதற்கும், கிருபையின் காலம் என்பது மாம்சமாகிய தேவனுடைய கிரியையின் காலமாகும், ஆவியானவருடைய கிரியையின் காலம் அல்ல என்பதற்கும் அவரது முற்றிலும் சாதாரண, இயல்பான மனிதத்தன்மை சான்றாகும். மாம்சமாகிய தேவனுடைய காலத்தில் அவருடைய மாம்சமானது ஆவியின் எல்லா கிரியைகளையும் செய்தது, தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் முழுமையாக உணரப்பட்டார் என்பதற்கான சான்றாகும். சாதாரண மனிதத்தன்மையுள்ள கிறிஸ்து ஆவியானவரால் உணரப்பட்ட ஒரு மாம்சமாவார், மேலும் சாதாரண மனிதத்தன்மை, இயல்பான உணர்வு மற்றும் மனித சிந்தனை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார். “உணரப்படுவது” என்பது தேவன் மனிதனாக மாறுதல், ஆவியானவர் மாம்சமாக மாறுதல் ஆகும்; இன்னும் தெளிவாகச் சொல்வதானால், தேவன் தாமே சாதாரண மனிதத்தன்மையுடன் ஒரு மாம்சத்தில் வசிக்கிறார், அதன் மூலம் அவருடைய தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்துகிறார்—இதுதான் உணரப்பட வேண்டும் அல்லது மனுஷனாக அவதரிக்க வேண்டும் என்பதாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து

195. கிறிஸ்துவினுடைய மனிதத்தன்மை அவருடைய தெய்வீகத்தன்மையால் நிர்வகிக்கப்படுகிறது. அவர் மாம்சத்தில் இருந்தபோதிலும், அவருடைய மனிதத்தன்மையானது மாம்சத்திலிருக்கிற மனிதனைப் போன்றது அல்ல. அவர் தமக்கென்றுள்ள தனித்துவமான குணத்தைப் பெற்றிருக்கிறார், இதுவும் அவருடைய தெய்வீகத்தன்மையால் நிர்வகிக்கப்படுகிறது. அவருடைய தெய்வீகத்தன்மைக்கு பலவீனம் இல்லை; கிறிஸ்துவின் பலவீனம் என்பது அவருடைய மனிதத் தன்மையைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இந்த பலவீனமானது அவருடைய தெய்வீகத்தன்மையைக் கட்டுப்படுத்துகிறது, ஆனாலும் அத்தகைய வரம்புகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கும் நேரத்திற்கும் உட்பட்டவையாகும், மேலும் அவை வரம்பற்றவை அல்ல. அவருடைய தெய்வீகத்தன்மையின் கிரியையைச் செய்யும்படியான நேரம் வரும்போது, அது அவருடைய மனிதத்தன்மையை பொருட்படுத்தாமல் செய்யப்படுகிறது. கிறிஸ்துவின் மனிதத்தன்மையானது அவருடைய தெய்வீகத்தன்மையால் முழுமையாக வழிநடத்தப்படுகிறது. அவருடைய மனிதத்தன்மையின் இயல்பான வாழ்க்கையைத் தவிர்த்து, அவருடைய மனிதத்தன்மையின் மற்ற அனைத்து செயல்களும் அவருடைய தெய்வீகத்தன்மையால் செல்வாக்கைப் பெற்று, செயல் விளைவை அடைந்து, வழிநடத்தப்படுகின்றன. கிறிஸ்துவிடம் ஒரு மனிதத்தன்மை இருந்தபோதிலும், அது அவருடைய தெய்வீகத்தன்மையின் கிரியையை சீர்குலைப்பதில்லை, துல்லியமாக இதன் காரணம் என்னவென்றால் கிறிஸ்துவின் மனிதத்தன்மையானது அவருடைய தெய்வீகத்தன்மையினால் வழிநடத்தப்படுகிறது; மற்றவர்களுடனான நடத்தையில் தம்மை எவ்வாறு நடத்துகிறது என்பதில் அவருடைய மனிதத்தன்மையானது முதிர்ச்சியடையவில்லை என்ற போதிலும், அது அவருடைய தெய்வீகத்தன்மையின் இயல்பான கிரியையைப் பாதிப்பதில்லை. கிறிஸ்துவினுடைய மனிதத்தன்மையானது சீர்கெட்டுப்போகவில்லை என்று நான் கூறும்போது, கிறிஸ்துவின் மனிதத்தன்மையானது அவருடைய தெய்வீகத்தன்மையால் நேரடியாகக் கட்டளையிடப்பட முடியும் என்றும், சாதாரண மனிதனை விட மிகவும் உயர்ந்த உணர்வு அவருக்கு உண்டு என்பதைத்தான் நான் சொல்கிறேன். அவருடைய மனிதத்தன்மையானது அவரது கிரியையின் தெய்வீகத் தன்மையால் வழிநடத்தப்படுவதற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது; அவரது மனிதத்தன்மையானது தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்துவதற்கு மிகவும் வல்லது, மேலும் இதுபோன்ற கிரியைக்கு கீழ்ப்படிந்திருப்பதற்கும் வல்லதாக இருக்கிறது. தேவன் மாம்சத்தில் செயல்படுகிறார் என்பதால், மாம்சத்தில் ஒரு மனிதன் நிறைவேற்ற வேண்டிய கடமை மீதான தனது பார்வையை அவர் ஒருபோதும் இழப்பதில்லை; பரலோகத்திலுள்ள தேவனை அவர் ஒரு உண்மையான இருதயத்தோடு தொழுதுகொள்ள முடிகிறது. அவர் தேவனுடைய சாரம்சத்தைக் கொண்டிருக்கிறார், மேலும் தேவனே அவருடைய அடையாளமாக இருக்கிறார். ஒரு சிருஷ்டிக்கப்பட்ட நபராக மாறி அவர் பூமிக்கு வந்திருக்கிறார் என்பது, ஒரு சிருஷ்டிக்கப்பட்ட நபரின் வெளிப்புற தோற்றத்துடன், இப்போது அவருக்கு இருக்கிற மற்றும் முன்னமே இல்லாத ஒரு மனிதத்தன்மையைக் கொண்டிருக்கிறார் என்பதையே குறிப்பிடுகிறது. அவரால் பரலோகத்திலுள்ள தேவனைத் தொழுதுகொள்ள முடிகிறது; இது தேவனாக ஜீவிப்பதாகும் மற்றும் இது மனிதனால் பார்த்துப் பின்பற்ற முடியாததுமாகும். தேவனாக இருக்கிறார் என்பதே அவரது அடையாளம். அவர் மாம்சத்தின் கண்ணோட்டத்திலிருந்தே தேவனைத் தொழுதுகொள்கிறார்; எனவே, “கிறிஸ்து பரலோகத்திலுள்ள தேவனைத் தொழுதுகொள்கிறார்” என்னும் வார்த்தைகள் தவறானவை அல்ல. அவர் மனிதனிடம் கேட்பது துல்லியமாக அவருடைய சுய பிரசன்னத்தையே ஆகும்; அத்தகையவற்றைக் கேட்பதற்கு முன்பே அவர் மனிதனிடம் கேட்கும் யாவற்றையும் அவர் ஏற்கனவே அடைந்துள்ளார். அவரே அவர்களிடமிருந்து விடுபட்டவராக இருக்கிறபோது அவர் ஒருபோதும் மற்றவர்களிடம் கோரிக்கை வைக்க மாட்டார், ஏனென்றால் இவை அனைத்தும் அவருடைய பிரசன்னத்தை உள்ளடக்கியவை. அவர் தமது கிரியையை எவ்வாறு செய்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனுக்குக் கீழ்ப்படியாத வகையில் அவர் செயல்பட மாட்டார். அவர் மனிதனிடம் எதைக் கேட்டாலும், எந்தவொரு கோரிக்கையும் மனிதனால் அடையக்கூடியதை விட அதிகமானது அல்ல. அவர் செய்வதெல்லாம் தேவனுடைய சித்தத்தைச் செய்வதும் மற்றும் அவருடைய நிர்வாகத்திற்குமே ஆகும். கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையானது சகல மனுஷருக்கும் மேலானது; ஆகையால், சிருஷ்டிக்கப்பட்ட எல்லா உயிரினங்களிலும் அவர் மிக உயர்ந்த அதிகாரம் உடையவராக இருக்கிறார். இந்த அதிகாரம் அவருடைய தெய்வீகத்தன்மையாகும், அதாவது தேவனுடைய மனநிலை மற்றும் பிரசன்னமாகும், அதுதான் அவருடைய அடையாளத்தைத் தீர்மானிக்கிறது. ஆகையால், அவருடைய மனிதத்தன்மையானது எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும், அவர் தேவனுடைய அடையாளத்தைக் கொண்டிருக்கிறார் என்பது மறுக்க முடியாததாகும்; அவர் எந்த நிலைப்பாட்டில் இருந்து பேசினாலும், அவர் தேவனுடைய சித்தத்திற்கு எந்த அளவுக்கு கீழ்ப்படிந்தாலும், அவர் தேவன் இல்லை என்று சொல்ல முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது” என்பதிலிருந்து

196. மனுவுருவான மனுஷகுமாரன் தேவனுடைய தெய்வீகத்தன்மையை தன்னுடைய மனிதத்தன்மையின் மூலம் வெளிப்படுத்தி, தேவனுடைய சித்தத்தை மனுக்குலத்திற்குத் தெரிவித்தார். மேலும் தேவனுடைய சித்தம் மற்றும் மனநிலையை அவர் வெளிப்படுத்தியதின் மூலம், ஆவிக்குரிய உலகில் வாழ்கின்ற காணக்கூடாத, தொடக்கூடாத தேவனையும் அவர் ஜனங்களுக்கு வெளிப்படுத்தினார். மாம்சம் மட்டும் இரத்தத்தாலான, தொடக்கூடிய வடிவத்தில் தேவனையே ஜனங்கள் பார்த்தார்கள். ஆகவே மனவுருவான மனுஷகுமாரன், தேவனுடைய அடையாளம், தேவனுடைய நிலை, உருவம், மனநிலை மற்றும் அவரிடத்தில் உள்ளவை, அவர் யாராக இருக்கிறார் ஆகிய காரியங்களை உறுதியானதாகவும், மனிதத்தன்மையுடையதாகவும் மாற்றினார். மனுஷகுமாரனின் வெளிப்புறத் தோற்றம் தேவனுடைய உருவத்தைப் பற்றிய சில வரம்புகளைக் கொண்டிருந்தாலும், அவருடைய சாராம்சமும் அவரிடத்தில் உள்ளவையும் மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதும் அவருடைய அடையாளத்தையும் மற்றும் தேவனுடைய நிகழ்நிலையையும் முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது. வெளிப்படுத்தின விதத்தில் சொற்பமான சில வேறுபாடுகள் இருந்தன. மனுஷகுமாரன் தேவனுடைய அடையாளத்தையும், நிகழ்நிலையையும் தன்னுடைய மனிதத்தன்மையின் வடிவத்திலும் மற்றும் தன்னுடைய தெய்வீகதன்மையிலும் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதை நாம் மறுக்க முடியாது. எவ்வாறாயினும், இந்த நேரத்தில், தேவன் மாம்சத்தின் மூலம் கிரியை செய்தார், மாம்சத்தின் கண்ணோட்டத்திலிருந்து பேசினார், மனுஷகுமாரனுடைய அடையாளம் மற்றும் நிகழ்நிலையுடன் மனுக்குலத்தின் முன் நின்றார். மேலும் இது உண்மையான வார்த்தைகளை, மனுக்குலத்திற்கு மத்தியில் செய்யப்பட்ட தேவனுடைய கிரியையைச் சந்திக்கவும், அனுபவிக்கவும் ஜனங்களுக்கு வாய்ப்பளித்தது. இது, மனத்தாழ்மையின் மத்தியில் அவருக்கிருந்த தெய்வீகத்தன்மை மற்றும் அவருடைய மகத்துவத்தை ஜனங்கள் ஆழ்ந்து நோக்க அனுமதித்தது. அத்துடன் இது தேவனுடைய நம்பகத்தன்மை மற்றும் உண்மை நிலையின் ஆரம்பகட்ட புரிதலையும், வரையறையையும் அடையவும் அனுமதித்தது. கர்த்தராகிய இயேசுவால் செய்து முடிக்கப்பட்ட கிரியைகள், அவர் கிரியை செய்யும் வழிகள் மற்றும் அவர் எந்த கண்ணோட்டத்திலிருந்து பேசினார் ஆகியவை ஆவிக்குரிய உலகத்தில் உள்ள தேவனுடைய மெய்யான மனுவுடலில் இருந்து வேறுபட்டிருந்தாலும், அவரைப் பற்றிய அனைத்தும் உண்மையிலேயே முன் ஒருக்காலும் மனுக்குலம் கண்டிராத தேவனை பிரதிநிதித்துவப்படுத்தின, இதை மறுக்க முடியாது! அதாவது, எந்த வடிவத்தில் தேவன் தோன்றினாலும், அவர் எந்த கண்ணோட்டத்தில் இருந்து பேசினாலும் அல்லது எந்த உருவத்தில் மனுக்குலத்தை எதிர்கொண்டாலும், தேவன் தன்னைத் தவிர வேறு எதையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அவர் எந்த ஒரு மனிதனையோ அல்லது சீர்கேடான மனுக்குலத்தையோ பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. தேவன்தாமே தேவன், இதை மறுக்க முடியாது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

197. இன்று பேசப்படும் நடைமுறை தேவன் தாமே மனிதத் தன்மையிலும் தெய்வீகத் தன்மையிலும் கிரியை செய்கிறார். நடைமுறை தேவனின் தோற்றத்தின் மூலம், அவருடைய வழக்கமான மனிதப் பணி மற்றும் ஜீவன் மற்றும் அவருடைய முழு தெய்வீகப் பணி ஆகியவை நிறைவேற்றப்படுகின்றன. அவரது மனிதத் தன்மையும் தெய்வீகத் தன்மையும் ஒன்றாக இணைக்கப்படுகின்றன, இரண்டின் கிரியையும் வார்த்தைகளால் நிறைவேற்றப்படுகின்றன; மனிதத் தன்மையினாலும் அல்லது தெய்வீகத் தன்மையினாலும் அவர் வார்த்தைகளை உதிர்க்கிறார். தேவன் மனிதத் தன்மையில் கிரியை செய்யும் போது, அவர் மனித மொழியைப் பேசுகிறார், இதனால் மக்கள் அதை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியும். அவருடைய வார்த்தைகள் தெளிவாகப் பேசப்படுகின்றன, புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கின்றன, அவற்றை எல்லா மக்களுக்கும் கொடுக்கலாம்; மக்கள் அறிவுள்ளவர்களாக இருந்தாலும் அல்லது குறைவாக படித்திருந்தாலும், எல்லோருமே தேவனுடைய வார்த்தைகளைப் பெற முடியும். தெய்வீகத் தன்மையில் தேவனுடைய பணியானது வார்த்தைகள் மூலமாக செய்யப்படுகிறது, ஆனால் அது ஸ்லாக்கியமும் ஜீவனும் நிறைந்ததாக இருக்கிறது, அது மனித சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டது, அது மனித விருப்பங்களுடன் தொடர்பில்லாதது, அது மனித வரம்புகளற்றது, அது எந்தவொரு சாதாரண மனிதனின் எல்லைக்கும் வெளியே உள்ளது; அது மாம்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது, ஆனால் அது ஆவியின் நேரடி வெளிப்பாடாக இருக்கிறது. மனிதத் தன்மையில் செய்யப்படும் தேவனின் கிரியையை மாத்திரமே மக்கள் ஏற்றுக் கொண்டால், அவர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் அடைத்துக் கொள்வார்கள், இதனால் அவர்களுக்குள் ஒரு சிறிய மாற்றமாவது ஏற்பட வேண்டுமென்றால் நீண்ட கால சரிகட்டுதல், சுத்திகரிப்பு மற்றும் சிட்சை ஆகியவை தேவைப்படும். ஆனாலும், பரிசுத்த ஆவியின் கிரியை அல்லது பிரசன்னம் இல்லாமல், அவர்கள் எப்போதும் தங்கள் பழைய வழிகளுக்கே திரும்பிச் செல்வார்கள்; தெய்வீகக் கிரியை மூலமாக மாத்திரமே இந்த மாறுபாடுகளையும் குறைபாடுகளையும் சரிசெய்ய முடியும், அப்போது தான் மக்களை பரிபூரணமாக்க முடியும். தொடர்ச்சியான சரிகட்டுதல் மற்றும் சுத்திகரிப்புக்கு பதிலாக, அனைத்து குறைபாடுகளையும் சரிசெய்யும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல், மக்களின் ஒவ்வொரு நிலையையும் வெளிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல், அவர்களுடைய வாழ்க்கையையும், அவர்களுடைய ஒவ்வொரு சொல்லையும் செயலையும் வழிநடத்தும் மற்றும் அவர்களுடைய நோக்கங்களையும் ஊக்கங்களையும் வெளிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல் போன்ற நேர்மறையான வழிமுறைகளே தேவைப்படுகின்றன. இதுதான் நடைமுறை தேவனின் உண்மையான பணியாகும். ஆகவே, நடைமுறை தேவனுடனான உங்கள் அணுகுமுறையில், நீங்கள் அவருடைய மனிதத் தன்மைக்கு முன்பாக அவரை அங்கீகரித்து, ஏற்றுக் கொண்டு உங்களை உடனடியாக ஒப்புக் கொடுக்க வேண்டும், மேலும் அவருடைய தெய்வீக கிரியைகளையும் வார்த்தைகளையும் நீங்கள் ஏற்றுக் கொண்டு கீழ்ப்படிய வேண்டும். மாம்சத்தில் தேவனின் தோற்றம் என்றால் தேவனுடைய ஆவியின் அனைத்து கிரியைகளும் வார்த்தைகளும் அவருடைய சாதாரண மனிதத் தன்மை மூலமாகவும், அவருடைய மனித அவதாரம் எடுத்த மாம்சத்தின் மூலமாகவும் செய்யப்படுகின்றன என்று அர்த்தமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய ஆவி ஒரே நேரத்தில் அவருடைய மனிதக் கிரியையை வழிநடத்துகிறார் மற்றும் மாம்சத்தில் தெய்வீகக் கிரியை செய்கிறார், மேலும் தேவனுடைய மனித அவதாரத்தில் நீங்கள் மனிதனில் தேவனுடைய கிரியை மற்றும் அவருடைய முழு தெய்வீக கிரியை இரண்டையும் காணலாம். இதுதான் மாம்சத்தில் நடைமுறை தேவனின் தோற்றத்தின் உண்மையான முக்கியத்துவம் ஆகும். உங்களால் இதை தெளிவாகக் காண முடிந்தால், உங்களால் தேவனின் வெவ்வேறு பகுதிகளை இணைக்க இயலும்; தெய்வீகத்தில் அவர் செய்த கிரியையுடன் தேவையற்ற முக்கியத்துவத்தை இணைப்பதை நீங்கள் நிறுத்திவிடுவீர்கள், மேலும் மனிதனில் அவர் செய்த கிரியையைத் தேவையற்ற நிராகரிப்புடன் பார்ப்பதை நீங்கள் நிறுத்திவிடுவீர்கள், மேலும் நீங்கள் வரம்பு மீறிய நிலைக்குச் செல்லவோ, எந்த மாற்றுப்பாதைகளையும் தேர்ந்தெடுக்கவோ மாட்டீர்கள். ஒட்டுமொத்தமாக, நடைமுறை தேவன் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், ஆவியால் வழிகாட்டப்பட்டபடி, அவருடைய மனித மற்றும் அவருடைய தெய்வீகக் கிரியையானது அவருடைய மாம்சத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது, இதன்மூலம் அவர் வெளிப்படையானவர் மற்றும் ஜீவனுள்ளவர், நிஜமானவர் மற்றும் உண்மையானவர் என்பதை மக்களால் காண இயலும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நடைமுறை தேவனும் தேவன்தான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

198. எல்லா சிருஷ்டிப்புகள் மீதும் தேவனுடைய ஆவியானவர் அதிகாரமுடையவராக இருக்கிறார். தேவனுடைய சாராம்சத்தைக் கொண்ட மாம்சத்திற்கும் அதிகாரம் உண்டு, ஆனால் மாம்சத்தில் உள்ள தேவன் பரமபிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிகிறதான எல்லா கிரியைகளையும் செய்யக் கூடியவராக இருக்கிறார். இதை எந்த ஒரு தனிப்பட்ட நபராலும் அடையவோ அல்லது பெறவோ முடியாது. தேவனே முழு அதிகாரம் உடையவராக இருக்கிறார், ஆனால் அவருடைய மாம்சமானது அவருடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படியக் கூடியதாக இருக்கிறது. “பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு கிறிஸ்து கீழ்ப்படிகிறார்” என்று கூறப்படும் போது, இவ்வாறுதான் அர்த்தம் கொள்ளப்படுகிறது. தேவன் ஒரு ஆவியாயிருக்கிறார், மனிதனாக வந்த தேவனாலே இரட்சிப்பின் கிரியையைச் செய்ய முடியும். எப்படியிருந்தாலும், தேவன் தாமே தமது சொந்த கிரியையைச் செய்கிறார்; அவர் குறுக்கிடவோ, தலையிடவோ செய்யாமல், அதையும்விட அவர் தம்மை முரண்படுத்தும் கிரியையை செய்வதில்லை, ஏனென்றால் ஆவியானவரும் மாம்சமாய் வந்தவரும் செய்யும் கிரியையின் சாரம்சம் ஒன்றாயிருக்கிறது. அது ஆவியானவராக இருந்தாலும் அல்லது மாம்சமாக வந்தவராக இருந்தாலும், இருவரும் ஒரே சித்தத்தை நிறைவேற்றுவதற்கும் மற்றும் ஒரே கிரியையை நிர்வகிப்பதற்குமே கிரியையை நடப்பிக்கிறார்கள். ஆவியானவரும் மாம்சமானவரும் இருவரும் முற்றிலும் வேறுபட்ட குணங்களைக் கொண்டிருந்தாலும், அவர்களின் சாராம்சங்கள் ஒன்றாயிருக்கின்றன; இருவருமே தேவனுடைய சாரம்சம் மற்றும் தேவனுடைய அடையாளத்தைக் கொண்டிருக்கிறார்கள். கீழ்ப்படியாமையின் எந்த அம்சங்களையும் தேவன்தாமே தம்மில் கொண்டிருக்கவில்லை; அவரது சாராம்சம் நன்மையானதாக இருக்கிறது. அவர் தாமே சகல அழகு மற்றும் நன்மைகளின் வெளிப்பாடாக இருக்கிறார், அதேபோல் அவர் சகல அன்புள்ளவராகவும் இருக்கிறார். மாம்சத்தில் கூட, பிதாவாகிய தேவனுக்குக் கீழ்ப்படியாத செயல் எதையும் தேவன் செய்வதில்லை. தமது ஜீவனைப் பலியாகக் கொடுக்கும் விஷயத்தில் கூட, அவர் வேறு எதையும் தேர்ந்தெடுக்காமல், அவர் முழு மனதுடன் அவ்வாறே செய்யத் தயாராக இருந்தார். தேவன் சுய-நீதி அல்லது சுய-முக்கியத்துவமாகிய எந்த அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை, அல்லது வீண் பெருமை மற்றும் அகந்தை ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை; சீர்கேடான எந்த அம்சங்களையும் அவர் கொண்டிருக்கவில்லை. தேவனுக்குக் கீழ்ப்படியாத அனைத்தும் சாத்தானிடமிருந்து வருகின்றன; சகல அவலட்சணத்திற்கும் துன்மார்க்கத்திற்கும் சாத்தான்தான் ஆதாரம். மனிதன் சாத்தானால் சீர்கெட்டு அவனால் ஆட்கொள்ளப்பட்டு இருப்பதுதான், சாத்தானுக்கு இருக்கின்ற குணங்களைப் போன்று மனிதனுடைய குணங்களும் இருப்பதற்கான காரணமாகும். கிறிஸ்துவானவர் சாத்தானால் சீர்கெட்டுப்போகவில்லை, எனவே அவர் சாத்தானின் குணங்கள் எதுவும் கொண்டிராமல் தேவனுடைய குணங்களை மட்டுமே கொண்டிருக்கிறார். எவ்வளவு கடினமான கிரியை அல்லது பலவீனமான மாம்சமாக இருந்தாலும், தேவன் மாம்சத்தில் வாழும்போது, தேவனுடைய கிரியைக்கு இடையூறு விளைவிக்கும் எதையும் ஒருபோதும் செய்ய மாட்டார், மேலும் அதையும்விட கீழ்ப்படியாமையினால் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தைக் கைவிடவும் மாட்டார். பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு துரோகம் செய்வதைக்காட்டிலும் அவர் மாம்சத்தின் வேதனையையே அனுபவிப்பதை விரும்பினார்; “பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” என்று இயேசு ஜெபத்தில் சொன்னது போலவே இருக்கிறது. ஜனங்கள் தங்கள் சொந்த விருப்பங்களையே தேர்வு செய்கிறார்கள், ஆனால் கிறிஸ்துவோ அவ்வாறு செய்யவில்லை. அவர் தேவனுடைய அடையாளத்தைக் கொண்டிருந்தாலும், அவர் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தையே நாடுகிறார், பிதாவாகிய தேவனால் தமக்கு ஒப்புவிக்கப்பட்டதை தமது மாம்சத்தின் கண்ணோட்டத்திலிருந்து நிறைவேற்றுகிறார். இது மனிதனால் அடைய முடியாத ஒன்றாகும். சாத்தானிடமிருந்து வருகிற எதுவும் தேவனுடைய சாராம்சத்தைக் கொண்டிருக்க முடியாது; அது தேவனுக்குக் கீழ்ப்படியாத மற்றும் அவரை எதிர்க்கும் ஒன்றை மட்டுமே கொண்டிருக்க முடியும். இது தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிய முடியாது, இன்னும் சொல்வதானால் தேவனுடைய சித்தத்திற்கு மனமுவந்து கீழ்ப்படியாது. கிறிஸ்துவைத் தவிர்த்து மற்ற எல்லா மனிதர்களும் தேவனை எதிர்க்கும் செயலைச் செய்யலாம், தேவனால் ஒப்புவிக்கப்பட்ட கிரியையை ஒரு மனிதனாலும் நேரடியாக மேற்கொள்ள முடியாது; தேவனுடைய நிர்வாகத்தைத் தங்களுடைய சொந்த பொறுப்பாகக் கருதி ஒருவராலும் செயல்படுத்த முடியாது. கிறிஸ்துவின் சாராம்சமானது பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படிதல் ஆகும்; தேவனுக்கு எதிரான கீழ்ப்படியாமையானது சாத்தானின் குணமாகும். இந்த இரண்டு குணங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாகும், சாத்தானின் குணங்களைக் கொண்டிருக்கிற எவரையும் கிறிஸ்து என்று அழைக்க முடியாது. தேவனுக்குப் பதிலாக தேவனுடைய கிரியையை மனிதனால் செய்ய முடியாது என்பதற்கான மூலக்காரணம், தேவனுக்குரிய எந்தவொரு சாராம்சமும் மனிதனிடம் இல்லை என்பதே ஆகும். மனிதன் தன்னுடைய தனிப்பட்ட நலன்களுக்காகவும் எதிர்கால வாய்ப்புகளுக்காகவுமே தேவனுக்கு வேலை செய்கிறான், ஆனால் கிறிஸ்துவோ பிதாவாகிய தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்காகவே கிரியையை நடப்பிக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது” என்பதிலிருந்து

199. தேவனுடைய மனு உருவின் வெளிப்புறத் தோற்றம் ஒரு மனிதனைப் போலவே இருந்தாலும், அவர் மனித அறிவை கற்றுக்கொண்டு மனித மொழியைப் பேசுகிறார் என்றாலும், சில சமயங்களில் அவருடைய எண்ணங்களை மனுக்குலத்தின் சொந்த முறைகள் அல்லது பேசும் முறைகள் மூலம் வெளிப்படுத்தினாலும்கூட, அப்போதும் கூட அவர் மனிதர்களைப் பார்க்கும் விதமும் அவர் காரியங்களின் சாராம்சத்தை பார்க்கும் விதமும், சீர்கேடான ஜனங்கள் மனுக்குலத்தையும், காரியங்களின் சாராம்சத்தையும் பார்க்கும் விதத்தைப் போன்று நிச்சயமாக இருக்காது. அவருடைய கண்ணோட்டமும் மற்றும் அவர் நிற்கும் உயரமும் ஒரு சீர்கேடான நபரால் அடைய முடியாத ஒன்றாகும். ஏனென்றால் தேவன் சத்தியமாய் இருக்கிறார், ஏனென்றால் அவர் கொண்டிருக்கும் மாம்சமும் தேவனுடைய சாராம்சத்தைக் கொண்டுள்ளது, மேலும் அவருடைய எண்ணங்களும் அவர் தன்னுடைய மனிதத்தன்மையின் மூலம் வெளிப்படுத்துகிறதும் கூட சத்தியமாயிருக்கிறது. சீர்கேடான ஜனங்களுக்கு அவர் மாம்சத்தில் வெளிப்படுத்துவது சத்தியத்தின் மற்றும் ஜீவனின் ஏற்பாடுகள் ஆகும். இந்த ஏற்பாடுகள் ஏதோ ஒரு நபருக்கானது அல்ல, மனுக்குலம் முழுவதற்குமானது. எந்த ஒரு சீர்கேடான நபரின் இருதயத்திலும் அவர்களுடன் தொடர்புடைய சிலர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் இந்த சொற்ப ஜனங்களை மட்டுமே பராமரித்து, அக்கறை காட்டுகிறார்கள். பேரழிவின் விளிம்பில் இருக்கும்போது, அவர்கள் முதலில் தங்களுடைய சொந்த குழந்தைகள், வாழ்க்கைத் துணை அல்லது பெற்றோரைப் பற்றி நினைக்கிறார்கள். அதிகபட்சமாக, மிகவும் இரக்கமுள்ள ஒரு நபர் சில உறவினர்கள் அல்லது நல்ல நண்பருக்காக சில சிந்தனைகளைக் கொண்டிருப்பார்கள், ஆனாலும் அத்தகைய இரக்கமுள்ள நபரின் எண்ணங்கள் கூட அதற்கு மேல் விரிவாகுமா? இல்லை, ஒருபோதும் ஆகாது! ஏனென்றால், மனிதர்கள் என்ன இருந்தாலும் மனிதர்கள் தான், மேலும் அவர்கள் எல்லாவற்றையும் ஒரு மனிதனுடைய மட்டத்தில் இருந்தும், கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே பார்க்க முடியும். எப்படியிருப்பினும், மனுவுருவான தேவன் சீர்கேடான மனிதர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவராவார்‌. மனுவுருவான தேவனின் மாம்சம் எவ்வளவு சாதாரணமானதாக, எவ்வளவு இயல்பானதாக, எவ்வளவு தாழ்மையுள்ளதாக இருந்தாலும் அல்லது ஜனங்கள் எப்படிப்பட்ட அவமதிப்புடன் அவரைத் தாழ்வாகப் பார்த்தாலும், மனுக்குலத்தின் மீதான அவருடைய எண்ணங்களும், மனப்பான்மையும் எந்த ஒரு மனிதனும் கொண்டிருக்க முடியாதவையும், எந்த ஒரு மனிதனும் பின்பற்ற முடியாதவையுமாகும். அவர் எப்போதும் மனுக்குலத்தை தெய்வீகக் கண்ணோட்டத்திலிருந்து, சிருஷ்டிகராகத் தன்னுடைய நிலையின் உயரத்தில் இருந்து உற்று நோக்குவார். அவர் எப்போதும் தேவனுடைய சாராம்சம் மற்றும் மனநிலையின் மூலம் மனுக்குலத்தைப் பார்ப்பார். அவர் நிச்சயமாக ஒரு சராசரி மனிதனுடைய தாழ்ந்த உயரத்திலிருந்தோ அல்லது ஒரு சீர்கேடான மனிதனுடைய கண்ணோட்டத்தில் இருந்தோ மனுக்குலத்தைப் பார்க்க முடியாது. ஜனங்கள் மனுக்குலத்தைப் பார்க்கும்போது, அவர்கள் மனிதப் பார்வை, மனித அறிவு மற்றும் மனித விதிகள் மற்றும் கோட்பாடுகள் போன்ற காரியங்களை அளவு முறையாகப் பயன்படுத்திப் பார்க்கிறார்கள். இது ஜனங்கள் தங்கள் கண்களால் பார்க்கக்கூடிய எல்லைக்குள் உள்ளது, மேலும் சீர்கேடான ஜனங்களால் அடையக்கூடிய எல்லைக்குள் உள்ளது. தேவன் மனுக்குலத்தைப் பார்க்கும்போது அவர் தெய்வீகப் பார்வையுடன் பார்க்கிறார், மேலும் அவர் தனது சாராம்சத்தையும், தன்னிடம் உள்ளவை மற்றும் தான் யாராக இருக்கிறார் என்பதையும் அளவு முறையாகப் பயன்படுத்துகிறார். இந்த எல்லையில் ஜனங்கள் பார்க்க முடியாத காரியங்கள் உள்ளன, மேலும் இங்கேதான் மனுவுருவான தேவனும் சீர்கேடான மனிதர்களும் முற்றிலும் வேறுபட்டவர்களாய் இருக்கிறார்கள். இந்த வேறுபாடு மனிதர்களுடைய மற்றும் தேவனுடைய வித்தியாசமான சாராம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறது, இந்த வெவ்வேறான சாராம்சங்கள் அவர்களுடைய அடையாளங்களையும், நிலைகளையும் அத்துடன் அவர்கள் எந்தக் கண்ணோட்டத்திலிருந்தும் மற்றும் உயரத்திலிருந்தும் காரியங்களைப் பார்க்கிறார்கள் என்பதையும் தீர்மானிக்கின்றன.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

200. நீ சமுதாயத்தின் அனுபவங்களைக் கொண்டிருக்கிறாயா, நீ உனது குடும்பத்தில் உண்மையில் எப்படி ஜீவிக்கிறாய் என்பதையும் அதற்குள் இருக்கும் அனுபவத்தையும் நீ வெளிப்படுத்தியவற்றில் காணலாம், அதேசமயம் உன்னால் தேவனின் கிரியையில் மாம்சமாகிய தேவனுக்கு சமூக அனுபவங்கள் உள்ளதா என்பதையும் பார்க்க முடியாது. மனுஷனின் சாராம்சத்தை அவர் நன்கு அறிவார், மேலும் அனைத்து வகையான ஜனங்களுக்கும் தொடர்புடைய அனைத்து வகையான நடைமுறைகளையும் அவரால் வெளிப்படுத்த முடியும். மனுஷரின் சீர்கெட்ட மனநிலையையும் கலகத்தனமான நடத்தையையும் வெளிப்படுத்துவதில் அவர் இன்னும் சிறந்தவராக இருக்கிறார். அவர் உலக ஜனங்களிடையே ஜீவிக்கவில்லை என்றாலும், மனுஷரின் சுபாவம் மற்றும் உலக ஜனங்கள் அனைவரின் சீர்கேடுகளையும் அவர் அறிந்திருக்கிறார். இதுவே அவருடைய இருப்புநிலை ஆகும். அவர் உலகத்தைக் கையாள்வதில்லை என்றாலும், உலகத்தைக் கையாள்வதற்கான விதிகளை அவர் அறிந்திருக்கிறார், ஏனென்றால் அவர் மனுஷ சுபாவங்களை முழுமையாகப் புரிந்துகொள்கிறார். இன்றைய மற்றும் கடந்த காலங்களில் மனுஷனின் கண்களால் பார்க்க முடியாத மற்றும் மனுஷனின் செவிகளால் கேட்க முடியாத ஆவியானவரின் கிரியையைப் பற்றி அவர் அறிந்திருக்கிறார். இதில் ஜீவிப்பதற்கான தத்துவம் அல்லாத ஞானமும், ஜனங்கள் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும் அதிசயங்களும் அடங்கும். இதுதான் அவருடைய இருப்புநிலை, ஜனங்களுக்குத் தெரியும்படியும் இருக்கிறது, ஜனங்களிடமிருந்து மறைக்கப்பட்டும் இருக்கிறது. அவர் வெளிப்படுத்தும் விஷயங்களானது ஒரு அசாதாரண நபர் வெளிப்படுத்தும் விஷயங்களாக இருப்பது இல்லை, ஆனால் உள்ளார்ந்த பண்புகள் கொண்ட ஆவியானவர் வெளிப்படுத்தும் விஷயங்களாக இருக்கின்றன. அவர் உலகில் பயணம் செய்வதில்லை, ஆனாலும் அவை எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் அறிவு அல்லது நுண்ணறிவு இல்லாத “மனுஷக்குரங்கினங்களை” தொடர்பு கொள்கிறார், ஆனால் அறிவை விட உயர்ந்த மற்றும் பெரிய மனுஷருக்கு மேலான வார்த்தைகளை அவர் வெளிப்படுத்துகிறார். அவர் மனுஷத்தன்மை இல்லாத மற்றும் மனுஷகுலத்தின் மரபுகளையும் ஜீவிதத்தையும் புரிந்து கொள்ளாத ஒரு குழப்பமான மற்றும் உணர்ச்சியற்ற ஜனக்கூட்டத்திற்குள் ஜீவிக்கிறார், ஆனால் அவரால் சாதாரண மனுஷத்தன்மையில் ஜீவிக்குமாறு மனுஷகுலத்தை கேட்டுக்கொள்ள முடியும், அதே நேரத்தில் மனுஷத்தன்மையின் அடிப்படையையும் அதன் இழிவான தன்மையையும் அவர் வெளிப்படுத்துகிறார். இவை அனைத்தும் அவருடைய இருப்புநிலை தான், இவை மாம்சத்தாலும் இரத்தத்தாலுமான நபரின் இருப்புநிலையை விட உயர்ந்ததாக இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்யவும் மற்றும் சீர்கெட்ட மனுஷகுலத்தின் சாராம்சத்தை முழுமையாக வெளிப்படுத்தவும் சிக்கலான, தொந்தரவான, மோசமான சமூக ஜீவிதத்தை அனுபவிப்பது தேவையற்றதாக இருக்கிறது. ஒரு மோசமான சமூக ஜீவிதமானது அவருடைய மாம்சத்தை மேம்படுத்துவதில்லை. அவரது கிரியையும் வார்த்தைகளும் மனுஷனின் கீழ்ப்படியாமையை மட்டுமே வெளிப்படுத்துகின்றன, மேலும் அவை மனுஷனுக்கு உலகத்தைக் கையாள்வதற்கான அனுபவத்தையும் பாடங்களையும் வழங்குவதில்லை. அவர் மனுஷனுக்கு ஜீவனை வழங்கும்போது சமூகம் அல்லது மனுஷனின் குடும்பத்தை ஆராயத் தேவையில்லை. மனுஷனை வெளிப்படுத்துவதும் நியாயத்தீர்ப்பளிப்பதும் அவருடைய மாம்சத்தின் அனுபவங்களின் வெளிப்பாடாக இருப்பதில்லை; நீண்ட காலமாக மனுஷனின் கீழ்ப்படியாமையை அறிந்த பின்பும், மனுஷகுலத்தின் சீர்கேட்டை வெறுத்த பின்பும் மனுஷனின் அநீதியை அவர் வெளிப்படுத்துவதே அவரது வெளிப்பாடாக இருக்கிறது. அவர் செய்யும் கிரியையானது மனுஷனுக்கு அவருடைய மனநிலையை வெளிப்படுத்துவதற்கும் அவருடைய இருப்புநிலையை வெளிப்படுத்துவதற்குமே செய்யப்படுகிறது. அவரால் மட்டுமே இந்த கிரியையைச் செய்ய முடியும்; இது மாம்சத்தாலும் இரத்தத்தாலுமான நபர் அடையக்கூடிய ஒன்று இல்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

201. கிறிஸ்துவின் கிரியையும் வெளிப்பாடும் அவருடைய சாராம்சத்தைத் தீர்மானிக்கிறது. அவரிடம் ஒப்படைக்கப்பட்டதை அவர் உண்மையான இருதயத்தோடு செய்துமுடிக்க முடிகிறது. அவரால் உண்மையான இருதயத்தோடு பரலோகத்தில் உள்ள தேவனை தொழுதுகொள்ள முடிகிறது, உண்மையான இருதயத்தோடு பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நாட முடிகிறது. இவை அனைத்தும் அவருடைய சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. அப்படியே அவருடைய இயல்பான வெளிப்பாடும் அவருடைய சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகிறது; இதை நான் அவருடைய “இயற்கையான வெளிப்பாடு” என்று அழைப்பதற்கான காரணம், அவருடைய வெளிப்பாடு பார்த்துப் பின்பற்றக்கூடிய ஒன்று அல்ல, அல்லது மனிதனுடைய படிப்பறிவின் விளைவோ அல்லது மனிதனால் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்த உழைப்பின் விளைவோ இல்லை. அவர் அதைக் கற்றுக்கொள்ளவுமில்லை அல்லது தம்மை அவ்வாறாக அலங்கரிக்கவுமில்லை; மாறாக, அது அவருக்குள் இயல்பாகவே இருக்கிறது. மனிதன் அவருடைய கிரியையையும், அவரது வெளிப்பாட்டையும், அவரது மனிதத்தன்மையையும், அவரது சாதாரண மனிதத்தன்மையின் முழு வாழ்க்கையையும் மறுக்கக்கூடும், ஆனால் அவர் உண்மையான இருதயத்தோடு பரலோகத்தில் உள்ள தேவனை தொழுதுகொள்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது; பரமபிதாவின் சித்தத்தை நிறைவேற்றவே அவர் வந்துள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது, மேலும் அவர் பிதாவாகிய தேவனைத் தேடும் நேர்மையையும் யாரும் மறுக்க முடியாது. அவருடைய உருவம் புலன்களுக்குப் பிரியமானதாக இல்லை என்றாலும், அவருடைய கலந்துரையாடல் ஒரு அசாதாரணமான காற்றைக் கொண்டிருக்கவில்லை, மற்றும் அவரது வேலை பூமியைத் தகர்ப்பதோ அல்லது மனிதன் கற்பனை செய்வது போல வானத்தை உலுக்குவதோ இல்லை, அவர் உண்மையில் பரமபிதாவிற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, அவரது மரணம் வரை கீழ்ப்படிந்தவராகி பரமபிதாவின் சித்தத்தை உண்மையான இருதயத்துடன் நிறைவேற்றுகிற கிறிஸ்துவாக இருக்கிறார். ஏனென்றால், அவருடைய சாராம்சம் கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது. இந்த உண்மையை நம்புவது மனிதனுக்கு கடினமாக இருக்கிறது, ஆனால் இது ஒரு உண்மை. கிறிஸ்துவின் ஊழியம் முழுமையாக நிறைவேறியதும், மனிதன் அவருடைய கிரியையின் மூலம் அவருடைய மனநிலையும் அவருடைய பிரசன்னமும் மற்றும் பரலோகத்தில் உள்ள தேவனுடைய மனநிலையையும் பிரசன்னத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதைக் கண்டுகொள்ள முடியும். அந்த நேரத்தில், அவருடைய எல்லா கிரியைகளின் சுருக்கமும், அவர் மெய்யாகவே வார்த்தையானது மாம்சமாக மாறியதுதான் என்பதை உறுதிப்படுத்த முடியும், ஆனால் அது மனிதனுக்குள்ள ஒரு மாம்சமும் இரத்தமும் அல்ல.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது” என்பதிலிருந்து

202. மாம்சத்திற்கு மாறிய தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், ஆகையால் ஜனங்களுக்குச் சத்தியத்தைக் கொடுக்கக்கூடிய கிறிஸ்து தேவன் என்று அழைக்கப்படுகிறார். மனிதனால் அடைய முடியாதவையாகிய தேவன் என்னும் சாராம்சம் அவரிடம் இருப்பதாலும், தேவனுடைய மனநிலையை அவர் கொண்டிருப்பதாலும், அவருடைய கிருயையில் ஞானம் இருப்பதாலும், இதைப் பற்றி அதிகமாக எதுவுமில்லை. தங்களைக் கிறிஸ்து என்று அழைத்தாலும், தேவனுடைய கிரியையைச் செய்ய முடியாதவர்கள் ஏமாற்றுக்காரர்கள். கிறிஸ்து பூமியில் தேவனுடைய வெளிப்பாடாக மட்டுமின்றி, அவர் மனுஷர்களுக்கு மத்தியில் தனது கிரியையைச் செய்து முடிப்பதனால் தேவனால் பெறப்பட்ட குறிப்பிட்ட மாம்சமாகவும் இருக்கிறார். இந்த மாம்சத்தை எந்தவொரு மனிதனாலும் அகற்ற முடியாது, ஆனால் பூமியில் தேவனுடைய கிரியையைப் போதுமான அளவு தாங்கக்கூடிய, மற்றும் தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்தவும், தேவனை நன்கு பிரதிநிதித்துவப்படுத்தவும், மனுஷனுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒரு மாம்சமாக இருக்கிறது. இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள், கிறிஸ்துவைப் போலப் பாசாங்கு செய்பவர்கள் அனைவரும் விழுந்துபோவார்கள், ஏனென்றால் அவர்கள் கிறிஸ்து என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களிடம் கிறிஸ்து என்னும் சாராம்சம் எதுவுமில்லை. ஆகையால் கிறிஸ்துவின் நம்பகத்தன்மையை மனுஷனால் வரையறுக்க இயலாது, ஆனால் தேவனால் பதிலளிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகிறது என்று சொல்கிறேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து

203. தேவனுடைய ஆவியானவர் அணிந்திருக்கும் மாம்சமானது தேவனின் சொந்த மாம்சமாகும். தேவனுடைய ஆவியானவர் உயர்ந்தவராக இருக்கிறார்; அவர் சர்வ வல்லவராக, பரிசுத்தராக, நீதியுள்ளவராக இருக்கிறார். அதேபோல், அவருடைய மாம்சமும் உயர்ந்ததாக, சர்வ வல்லமை மிக்கதாக, பரிசுத்தமானதாக, நீதியுள்ளதாக இருக்கிறது. அத்தகைய மாம்சத்தால் மட்டுமே மனுக்குலத்திற்கு நீதியும் நன்மையும் வழங்க முடியும், அதுவே பரிசுத்தமானதாக, மகிமை கொண்டதாக, வல்லமை பொருந்தியதாக இருக்கிறது; சத்தியத்தை மீறும், ஒழுக்கத்தையும் நீதியையும் மீறும் எதையும் அவரால் செய்ய இயலாது, மேலும் தேவனுடைய ஆவியானவருக்கு துரோகம் செய்யும் எதையும் அவரால் செய்ய முடியாது. தேவனுடைய ஆவியானவர் பரிசுத்தமானவர், ஆகவே அவருடைய மாம்சமானது சாத்தானால் சீர்கெட்டுப்போகாது; அவருடைய மாம்சமானது மனுஷனின் மாம்சத்தை விட வித்தியாசமான சாராம்சத்தைக் கொண்டது. ஏனென்றால் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டுப் போனது மனுஷன் தான், தேவன் இல்லை; தேவனின் மாம்சத்தை சாத்தானால் சீர்கெட்டுப்போகவைக்க முடியாது. ஆகவே, மனுஷனும் கிறிஸ்துவும் ஒரே இடத்திலேயே ஜீவிக்கிறார்கள் என்ற போதிலும், மனுஷன் தான் சாத்தானால் உடைமையாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு சிக்கவைக்கப்படுகிறான். இதற்கு நேர்மாறாக, கிறிஸ்து சாத்தானின் சீர்கேட்டிற்கு நித்தியமாக ஊக்கமளிப்பதில்லை, ஏனென்றால் சாத்தான் ஒருபோதும் மிக உன்னதமான இடத்தில் ஏறுவதற்கான திறம் மிக்கவனாக இருக்க மாட்டான், மேலும் அவனால் ஒருபோதும் தேவனிடம் நெருங்கவே முடியாது. இன்று எமக்கு துரோகம் செய்வது, சாத்தானால் சீர்கெட்டுப்போயிருக்கும் மனுக்குலம் மட்டும் தான் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். துரோகம் என்பது ஒருபோதும் கிறிஸ்துவை உள்ளடக்கிய ஒரு பிரச்சினையாக இருக்காது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (2)” என்பதிலிருந்து

204. தேவன் மாம்சமாக மாறினார், ஏனென்றால் சாத்தானுடைய ஆவியோ அல்லது எந்தவொரு ஆவியின் காரியமோ அவருடைய கிரியையின் இலக்கு அல்ல, மாம்சமானவனும் சாத்தானால் சீர்கெட்டுப்போனவனுமாகிய மனுஷனே அவருடைய கிரியையின் இலக்காக இருக்கிறான். மனுஷனுடைய மாம்சம் சீர்கெட்டுப் போயிருப்பதனாலே, தேவன் மாம்சமான மனுஷனை தமது கிரியையின் இலக்காக்கியுள்ளார்; மேலும், மனுஷனே சீர்கேட்டின் இலக்காக இருப்பதனால், தேவன் தமது இரட்சிப்பின் கிரியையின் அனைத்துக் கட்டங்களிலும் மனுஷனை தமது கிரியையின் ஒரே இலக்காக்கியுள்ளார். மனுஷன் மரணத்திற்கு ஏதுவானவனாக இருக்கிறான், மாம்சமாகவும் இரத்தமாகவும் இருக்கிறான், தேவன் ஒருவரால் மாத்திரமே மனுஷனை இரட்சிக்க முடியும். ஆகையால், தேவன் தமது கிரியையைச் செய்வதற்கு மனுஷனைப் போன்ற அதே இயற்பண்புகளை கொண்ட ஒரு மாம்சமாக மாற வேண்டும், இதன்மூலம் அவருடைய கிரியை சிறந்த பலன்களை அடையக்கூடும். மனுஷன் மாம்சமுள்ளவனாகவும், பாவத்தை மேற்கொள்ளவோ அல்லது மாம்சத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவோ இயலாதவனாக இருப்பதனால், தேவன் தமது கிரியையைச் செய்ய மாம்சமாக மாறியாக வேண்டும். மாம்சமான தேவனுடைய சாராம்சமும் அடையாளமும் மனுஷனுடைய சாராம்சத்திலும் அடையாளத்திலும் இருந்து பெரிதும் வேறுபட்ட போதிலும், அவருடைய தோற்றம் மனுஷனுடைய தோற்றத்திற்கு ஒப்பாகவே உள்ளது. அவர் ஒரு சாதாரண மனுஷனுடைய தோற்றமுள்ளவராக இருக்கின்றார், ஒரு சாதாரண மனுஷனுடைய வாழ்க்கையை வாழ்கின்றார், அவரைக் காண்கிறவர்கள் ஒரு சாதாரண மனுஷனுக்கும் அவருக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் காண முடியாது. சாதாரண மனிதத்தன்மையில் தமது தெய்வீகக் கிரியையை செய்வதற்கு இந்த இயல்பான தோற்றமும் சாதாரண மனிதத்தன்மையும் அவருக்குப் போதுமானவையாக இருக்கின்றன. அவருடைய மாம்சமானது சாதாரண மனிதத்தன்மையில் அவருடைய கிரியையைச் செய்ய அவரை அனுமதிக்கின்றது. மேலும் மனுஷர் நடுவே தமது கிரியையைச் செய்யவும் அவருக்கு உதவுகின்றது. மேலும் அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது மனுஷர் நடுவே இரட்சிப்பின் கிரியையைச் செய்யவும் அவருக்கு உதவுகின்றது. அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது மனுஷர் நடுவே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளபோதிலும், இதுபோன்ற குழப்பமானது அவருடைய கிரியையின் வழக்கமான பலன்களைப் பாதிக்கவில்லை. சுருக்கமாகக் கூறுவதென்றால், அவருடைய சாதாரண மாம்சத்தின் கிரியையானது மனுஷனுக்கு மிகப் பெரிய அளவில் பயனை அளிக்கிறதாக இருக்கின்றது. பெரும்பாலான ஜனங்கள் அவருடைய சாதாரணமான மனிதத்தன்மையை ஏற்றுக்கொள்ளாதபோதிலும், அவருடைய கிரியையால் இன்னும் முடிவுகளை அடைய முடியும். மேலும் இந்த முடிவுகள் அவருடைய சாதாரண மனிதத்தன்மை மூலமாகவே அடையப்படுகின்றன. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மாம்சத்தில் செய்யப்படும் அவருடைய கிரியையின் மூலம், மனுஷன் தனது சாதாரண மனிதத்தன்மையைப் பற்றி மனுஷர் நடுவே காணப்படும் கருத்துக்களை காட்டிலும் பத்து மடங்கு அல்லது டஜன் கணக்கான மடங்கு அதிகமான காரியங்களைப் பெறுகிறான். இத்தகைய கருத்துக்கள் எல்லாம் இறுதியில் அவருடைய கிரியையால் விழுங்கிப்போடப்படும். அவருடைய கிரியை அடைந்த பலன், அதாவது மனுஷனிடம் அவரைக் குறித்து காணப்படும் அறிவானது அவரைப் பற்றிய மனுஷனுடைய கருத்துக்களைக் காட்டிலும் மிகவும் அதிகமானதாகும். மாம்சத்தில் அவர் செய்யும் கிரியையை கற்பனை செய்யவோ அளவிடவோ வழியேதும் கிடையாது, ஏனென்றால் அவருடைய மாம்சம் எந்த மாம்சமான மனுஷனுக்கும் இருப்பது போன்றதல்ல. வெளிப்புறத் தோற்றம் ஒத்ததாக காணப்பட்டாலும், சாராம்சம் ஒப்பானது அல்ல. அவருடைய மாம்சம் தேவனைப் பற்றி மனுஷர் நடுவில் பல கருத்துக்களை உண்டாக்குகின்றது. ஆனாலும் அவருடைய மாம்சமானது மனுஷன் மிகுந்த அறிவை பெறுவதற்கும் உதவக்கூடும். மேலும் ஒத்த வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கும் எந்தவொரு நபரையும் ஜெயங்கொள்ள இயலும். அவர் வெறுமனே மனுஷராக மட்டுமல்லாமல், ஆனால் மனுஷனுடைய வெளிப்புறத் தோற்றத்துடன் தேவனாக காணப்படுவதனால், அவரை யாரும் முழுமையாக அறிந்துகொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து

205. தேவனுடைய சகல சிருஷ்டிகளிலும் மிகவும் உயர்ந்தவனான சாத்தானால் மனுஷன் சீர்கெட்டுப்போயிருக்கிறான். ஆகையால் மனுஷனுக்கு தேவனுடைய இரட்சிப்பு தேவைப்படுகிறது. தேவனுடைய இரட்சிப்பின் இலக்கு மனுஷனே தவிர, சாத்தான் அல்ல. இரட்சிக்கப்படுவது மனுஷனுடைய மாம்சமும், மனுஷனுடைய ஆத்துமாவுமே தவிர, பிசாசு அல்ல. தேவன் முற்றிலுமாக நிர்மூலமாக்குவதின் இலக்காக சாத்தான் இருக்கிறான். மனுஷன் தேவனுடைய இரட்சிப்பின் இலக்காக இருக்கிறான். மனுஷனுடைய மாம்சம் சாத்தானால் சீர்கேடடைந்துள்ளது. ஆகையால் முதலில் இரட்சிக்கப்படுவது மனுஷனுடைய மாம்சமாக இருக்க வேண்டும். மனுஷனுடைய மாம்சமானது மிகவும் ஆழமாக சீர்கேடடைந்துள்ளது. இது தேவனை எதிர்க்கும் ஒன்றாக மாறிவிட்டது. அவ்வாறே இது தேவன் இருக்கிறார் என்பதை வெளிப்படையாக எதிர்க்கவும் மறுக்கவும் செய்கிறது. இந்த சீர்கேடான மாம்சம் மிகவும் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கிறது. மாம்சத்தின் சீர்கேடான மனநிலையை சரிக்கட்டுவதையோ மாற்றுவதையோ காட்டிலும் கடினமானது வேறு எதுவுமில்லை. தொல்லைகளைத் தூண்டுவதற்காகவே மனுஷனுடைய மாம்சத்திற்குள் சாத்தான் வருகிறான். தேவனுடைய கிரியையைத் தொந்தரவு செய்வதற்காகவும் தேவனுடைய திட்டத்தை நாசமாக்குவதற்காகவும் மனுஷனுடைய மாம்சத்தைப் பயன்படுத்துகிறான். இவ்வாறு மனுஷன் சாத்தானாக மாறி, தேவனுக்கு சத்துருவாகிவிட்டான். மனுஷன் இரட்சிக்கப்படுவதற்கு, அவன் முதலில் வெல்லப்பட வேண்டும். ஏனென்றால் தேவன் ஜெயங்கொள்வதற்காக எழுந்தருளி, தாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்வதற்காகவும், சாத்தானுடன் யுத்தம் செய்வதற்காகவும் மாம்சத்திற்குள் வருகிறார். சீர்கெட்டுப்போன மனுஷனுடைய இரட்சிப்பும், அவருக்கு எதிராக கலகம் செய்யும் சாத்தானின் தோல்வியும் அழிவுமே அவரது நோக்கமாகும். மனுஷனை ஜெயங்கொள்ளும் கிரியையின் மூலம் அவர் சாத்தானை தோற்கடிக்கிறார், அதே நேரத்தில் சீர்கெட்ட மனுக்குலத்தை அவர் இரட்சிக்கிறார். இவ்வாறு, இது ஒரே நேரத்தில் இரண்டு நோக்கங்களை அடையும் ஒரு கிரியையாக இருக்கிறது. அவர் மாம்சத்தில் கிரியை செய்கிறார், மாம்சத்தில் பேசுகிறார், மனுஷனுடன் சிறப்பாக செயல்படுவதற்கும், மனுஷனை சிறப்பாக ஜெயங்கொள்வதற்கும் மாம்சத்தில் எல்லா கிரியைகளையும் செய்கிறார். தேவன் மாம்சமாகும் கடைசி முறையில், கடைசி நாட்களில் அவருடைய கிரியை மாம்சத்தில் முடிவடையும். அவர் எல்லா மனுஷர்களையும் வகைவாரியாக வகைப்படுத்துவார். அவருடைய முழு நிர்வாகத்தையும் முடிப்பார். மேலும் மாம்சத்தில் அவருடைய கிரியையை எல்லாம் முடிப்பார். பூமியில் அவருடைய கிரியை எல்லாம் முடிந்த பிறகு, அவர் முற்றிலும் ஜெயங்கொள்கிறவராக இருப்பார். மாம்சத்தில் கிரியை செய்யும் தேவன் மனுக்குலத்தை முழுமையாக ஜெயங்கொண்டு, மனுக்குலத்தை முழுமையாக ஆதாயப்படுத்துவார். அவருடைய முழு நிர்வாகமும் ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்று அர்த்தமல்லவா? தேவன் மாம்சத்தில் தமது கிரியையை முடித்து, சாத்தானை முழுமையாக தோற்கடித்து, ஜெயங்கொண்டவராக இருக்கும்போது, மனுஷனை மோசம்போக்க சாத்தானுக்கு மேற்கொண்டு வாய்ப்பு இருக்காது. மனுஷனை மீட்பதும், மனுஷனுடைய பாவங்களை மன்னிப்பதுமே தேவனுடைய முதல் மனுஷ அவதரிப்பின் கிரியையாகும். இப்போது இது மனுக்குலத்தை ஜெயங்கொண்டு, முழுவதும் ஆதாயப்படுத்தும் கிரியையாக இருக்கிறது, இதனால் சாத்தானுக்கு இனிமேல் அதன் கிரியையைச் செய்ய எந்த வழியும் இருக்காது. அது முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டுப் போய்விடும். தேவனே முற்றிலும் ஜெயங்கொள்கிறவராக இருப்பார். இதுவே மாம்சத்தின் கிரியையாகும். இது தேவனால் செய்யப்படும் கிரியையாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து

206. மனுஷனுடைய மாம்சம் சாத்தானால் சீர்கேடடைந்திருக்கிறது. இது மிகவும் ஆழமாக குருடாகியிருக்கிறது மற்றும் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளது. தேவன் தனிப்பட்ட முறையில் மாம்சத்தில் கிரியை செய்வதற்கான மிகவும் அடிப்படையான காரணம் என்னவென்றால், அவருடைய இரட்சிப்பின் நோக்கம் மாம்சத்தாலான மனுஷனாவான், ஏனென்றால் தேவனுடைய கிரியையைக்கு இடையூறு செய்ய சாத்தானும் மனுஷனுடைய மாம்சத்தைப் பயன்படுத்துகிறான். சாத்தானுடனான யுத்தமானது உண்மையில் மனுஷனை ஜெயங்கொள்ளும் கிரியையாக இருக்கிறது. அதே நேரத்தில், மனுஷனும் தேவனுடைய இரட்சிப்பின் நோக்கமாக இருக்கிறான். ஆகவே, மாம்சமான தேவனுடைய கிரியை அத்தியாவசியமானதாகும். சாத்தான் மனுஷனுடைய மாம்சத்தைக் கெடுத்தான், இதனால் மனுஷன் சாத்தானின் உருவகமாகி, தேவனால் தோற்கடிக்கப்பட வேண்டிய இலக்காக மாறிவிட்டான். ஆகையால், சாத்தானுடன் யுத்தம் செய்து மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியை பூமியில் நடக்கிறது. சாத்தானுடன் யுத்தம் செய்வதற்கு தேவன் மனுஷனாக மாற வேண்டும். இதுதான் மிகவும் நடைமுறையான கிரியையாகும். தேவன் மாம்சத்தில் கிரியை செய்யும்போது, அவர் உண்மையில் சாத்தானுடன் மாம்சத்தில் யுத்தம் செய்கிறார். அவர் மாம்சத்தில் கிரியை செய்யும்போது, அவர் ஆவிக்குரிய உலகில் தமது கிரியையைச் செய்து, ஆவிக்குரிய உலகில் தமது கிரியை முழுவதையும் பூமியில் உண்மையானதாக மாற்றுகிறார். அவருக்குக் கீழ்ப்படியாத மனுஷனே ஜெயங்கொள்ளப்படுகிறான், அவருக்கு விரோதமாக இருக்கிற சாத்தானின் உருவமே (உண்மையில், இதுவும் மனுஷன் தான்) தோற்கடிக்கப்படுகிறான், இறுதியில் மனுஷன்தான் இரட்சிக்கப்படுகிறவனாகவும் இருக்கிறான். ஆகையால், ஒரு சிருஷ்டியின் வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்ட மனுஷனாக தேவன் மாறுவது மேன்மேலும் அவசியமானதாக இருக்கிறது, இதனால் அவர் சாத்தானுடன் உண்மையான யுத்தம் செய்யவும் அவருக்குக் கீழ்ப்படியாத, அவரைப் போலவே வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கிற மனுஷனை ஜெயங்கொள்ளவும், அவரைப் போலவே வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கிற மற்றும் சாத்தானால் தீங்கிற்குள்ளான மனுஷனை இரட்சிக்கவும் முடியும். அவருடைய எதிரி மனுஷன்தான், அவர் ஜெயங்கொள்ளும் இலக்கும் மனுஷன்தான், அவருடைய இரட்சிப்பின் நோக்கமும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷன் தான். ஆகையால், அவர் மனுஷனாக வேண்டும், இதனால், அவருடைய கிரியை மிகவும் எளிதாகிறது. அவரால் சாத்தானைத் தோற்கடித்து மனுக்குலத்தை ஜெயங்கொள்ள முடிகிறது, மேலும், மனுக்குலத்தை இரட்சிக்கவும் முடிகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து

207. மனுஷனைத் தேவன் இரட்சிப்பது என்பது ஆவியானவரின் முறையையும், ஆவியானவரின் அடையாளத்தையும் பயன்படுத்தி நேரடியாகச் செய்யப்படுவதில்லை. ஏனென்றால் ஆவியானவரை மனுஷனால் தொடவோ அல்லது பார்க்கவோ முடியாது, மேலும் மனுஷனால் அவரை நெருங்கவும் முடியாது. ஆவியானவர் தன் வழிமுறையைப் பயன்படுத்தி மனுஷனை நேரடியாக இரட்சிக்க முயன்றால், மனுஷனால் அவனுக்கான இரட்சிப்பைப் பெற முடியாமல் போகும். சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனின் வெளிப்புற வடிவத்தை தேவன் அணிந்திருக்கவில்லை என்றால், மனுஷனுக்கு இந்த இரட்சிப்பைப் பெற வழியே இருந்திருக்காது. ஏனென்றால் எப்படி யேகோவாவின் மேகத்தின் அருகே யாராலும் செல்ல முடியாமல் இருந்ததோ, அதுபோல மனுஷனுக்கு அவரை அணுக வழி இல்லை. சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனாக மாறுவதன் மூலம் மட்டுமே, அதாவது, அவர் மாறப்போகும் சரீர மாம்சத்தில் அவருடைய வார்த்தையை வைப்பதன் மூலம் மட்டுமே, அவரைப் பின்தொடரும் அனைவருக்கும் அவரால் தனிப்பட்ட முறையில் வார்த்தையால் கிரியை செய்ய முடியும். அப்போதுதான் மனுஷனால் தனிப்பட்ட முறையில் அவருடைய வார்த்தையைக் காணவும் கேட்கவும் முடியும், மேலும் அவருடைய வார்த்தையைக் கைக்கொள்ளவும் முடியும், இதன் மூலம் மனுஷன் முழுமையாக இரட்சிக்கப்படுவான். தேவன் மாம்சத்தில் வந்திருக்காவிட்டால், மாம்சமும் இரத்தமும் கொண்ட எவராலும் இவ்வளவு பெரிய இரட்சிப்பைப் பெற்றிருக்கவும் முடியாது, ஒரு மனுஷன் கூட இரட்சிக்கப்பட்டிருக்கவும் மாட்டான். தேவனுடைய ஆவியானவர் மனுஷகுலத்தின் மத்தியில் நேரடியாக கிரியை செய்தால், சகலவித மனுஷரும் தாக்கப்படுவார்கள், இல்லையெனில், தேவனுடன் தொடர்பு கொள்ள எந்த வழியும் இல்லாமல், அவர்கள் சாத்தானால் சிறைபிடிக்கப்படுவார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

208. சீர்கெட்ட மனுஷனுடைய தேவைகள் தான் மாம்சமான தேவன் மாம்சத்திற்குள் வந்ததற்கு ஒரே காரணமாகும். தேவனுடைய தேவைகள் அல்ல, மனுஷனுடைய தேவைகளே இதற்குக் காரணமாகும். தேவனுடைய தியாகப்பலிகள் மற்றும் பாடுகள் எல்லாமே மனுக்குலத்திற்காகவே ஆகும், அவருடைய நலனுக்காக அல்ல. தேவனுக்கு எந்தச் சாதக பாதகமோ அல்லது வெகுமதிகளோ கிடையாது. முதலில் அவருக்குக் கொடுக்க வேண்டிய சில எதிர்கால அறுவடையை அவர் அறுவடை செய்ய மாட்டார். அவர் மனுக்குலத்திற்காக செய்கிற மற்றும் தியாகம் செய்கிற எல்லாம் அவர் சிறந்த வெகுமதிகளைப் பெறுவதற்காக அல்ல, முற்றிலும் மனுக்குலத்திற்காகவே ஆகும். மாம்சத்தில் தேவனுடைய கிரியை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல சிரமங்களைக் கொண்டிருக்கிற போதிலும், அது இறுதியில் அடையும் பலன்கள் ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியைகளின் பலன்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும். மாம்சத்தின் கிரியை மிகுந்த கஷ்டத்தை உண்டாக்குகின்றது. மேலும் ஆவியானவர் கொண்டிருக்கின்ற அதே மாபெரும் அடையாளத்தை மாம்சமானவரால் கொண்டிருக்க முடியாது. ஆவியானவர் செய்கிற அதே தெய்வீகச் செயல்களை மாம்சமானவரால் செய்ய முடியாது. ஆவியானவர் கொண்டிருக்கிற அதே அதிகாரத்தை மாம்சமானவரால் கொண்டிருக்க முடியாது. ஆனாலும், சாதாரணமான இந்த மாம்சமானவரால் செய்யப்படும் கிரியையின் சாராம்சமானது ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியையைக் காட்டிலும் மிகவும் உயர்ந்ததாகும். மேலும் இந்த மாம்சமானவரே எல்லா மனுக்குலத்தின் தேவைகளுக்கும் பதிலாக இருக்கின்றார். இரட்சிக்கப்படுகிறவர்களைப் பொறுத்தவரையில், ஆவியானவரின் பயன்பாட்டு மதிப்பானது மாம்சமானவரின் பயன்பாட்டு மதிப்பைக் காட்டிலும் மிகவும் குறைவாகும்: ஆவியானவரின் கிரியையால் எல்லா மலைகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் சமுத்திரங்கள் உட்பட முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்க முடியும். ஆனால் மாம்சமானவரின் கிரியை அவர் தொடர்புகொள்ளும் ஒவ்வொரு நபருடனேயே மிகவும் பயனுள்ள முறையில் தொடர்புடையதாக இருக்கின்றது. மேலும் என்னவென்றால், காணக்கூடிய உருவத்திலுள்ள தேவனுடைய மாம்சத்தை மனுஷனால் நன்கு புரிந்துகொள்ளவும் நம்பவும் முடியும். மேலும் தேவனைப் பற்றிய மனுஷனுடைய அறிவை இன்னும் ஆழப்படுத்தவும் முடியும். மேலும் தேவனுடைய உண்மையான செயல்களைக் குறித்த மிகவும் ஆழமான தாக்கத்தை மனுஷனுக்கு ஏற்படுத்தவும் முடிவும். ஆவியானவரின் கிரியை மறைபொருளில் மறைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு ஏதுவானவர்களால் அவற்றைப் புரிந்துகொள்வது கடினமாகும். மேலும் அவற்றைக் காண்பதும் கடினமாகும். ஆகவே அவர்கள் வெற்றுக் கற்பனைகளை மாத்திரமே நம்பியிருக்க முடியும். ஆனாலும், மாம்சத்தின் கிரியை இயல்பானது, யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் வளமான ஞானத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது மனுஷனுடைய மாம்சக் கண்ணால் காணக்கூடிய ஒரு உண்மையாகும். தேவனுடைய கிரியையின் ஞானத்தை மனுஷன் தனிப்பட்ட முறையில் அனுபவிக்க முடியும். அவனுடைய வளமான கற்பனையைப் பயன்படுத்த வேண்டியதில்லை. இது மாம்சத்தில் தேவனுடைய கிரியையின் துல்லியமாகவும், உண்மையான மதிப்பாகவும் இருக்கிறது. மனுஷனுடைய கண்ணுக்குத் தெரியாத மற்றும் அவன் கற்பனை செய்வதற்கு கடினமான காரியங்களை மட்டுமே ஆவியானவரால் செய்ய முடியும். உதாரணமாக, ஆவியானவரின் அறிவொளி, ஆவியானவரின் அசைவு மற்றும் ஆவியானவரின் வழிகாட்டுதல் ஆகியவை மனம் கொண்ட மனுஷனுக்கு எந்தத் தெளிவான அர்த்தத்தையும் கொடுப்பதில்லை. அவை ஒரு அசைவையோ அல்லது பரந்த அர்த்தத்தையோ மாத்திரமே கொடுக்கின்றன, வார்த்தைகளாலான ஒரு அறிவுரையை வழங்க முடியாது. ஆனாலும், மாம்சத்தில் செய்யப்படும் தேவனுடைய கிரியை பெரிதும் வித்தியாசமானதாகும்: இது வார்த்தைகளின் துல்லியமான வழிகாட்டுதலைக் கொண்டுள்ளதோடு, தெளிவான சித்தத்தையும், தேவையான இலக்குகளையும் கொண்டுள்ளது. ஆகவே, மனுஷன் தட்டித் தடுமாறவோ அல்லது அவனுடைய கற்பனையைப் பயன்படுத்தவோ, ஊகங்கள் செய்யவோ வேண்டியதில்லை. இது மாம்சத்தில் செய்யப்படும் கிரியைக் குறித்த விளக்கமாகும். இது ஆவியானவரின் கிரியையிலிருந்து பெரிதும் வேறுபட்டதாகும். ஆவியானவரின் கிரியையானது ஒரு குறுகிய வரம்பிற்கு மட்டுமே பொருத்தமானதாகும். இது மாம்சத்தின் கிரியைக்கு மாற்றாக முடியாது. மாம்சத்தின் கிரியையானது ஆவியானவரின் கிரியையைக் காட்டிலும் மிகவும் துல்லியமான மற்றும் தேவையான இலக்குகளையும், உண்மையான, மதிப்புமிக்க அறிவையும் மனுஷனுக்குக் கொடுக்கிறது. துல்லியமான வார்த்தைகளையும், பின்தொடர்வதற்குத் தெளிவான இலக்குகளையும் கொடுக்கும் கிரியையே சீர்கெட்ட மனுஷனுக்கு மாபெரும் மதிப்புடையதாக இருக்கும் கிரியையாகும், இதைக் கண்டும், தொட்டும் உணரலாம். யதார்த்தமான கிரியை மற்றும் சரியான நேரத்திலான வழிகாட்டுதல் ஆகியவை மட்டுமே மனுஷனுடைய சுவைகளுக்குப் பொருத்தமானவையாகும். மேலும் மெய்யானக் கிரியை மட்டுமே மனுஷனை அவனது சீர்கேடான மற்றும் ஒழுக்கக்கேடான மனநிலையிலிருந்து இரட்சிக்க முடியும். மாம்சமான தேவனால் மட்டுமே இதை அடைய முடியும். மாம்சமான தேவனால் மட்டுமே மனுஷனை அவனுடைய முந்தைய சீர்கேடான மற்றும் மோசமான மனநிலையிலிருந்து இரட்சிக்க முடியும். ஆவியானவர் தேவனுடைய இயல்பான சாராம்சமாக இருக்கின்றபோதிலும், இத்தகைய கிரியையை அவருடைய மாம்சத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆவியானவர் தனியாக கிரியை செய்திருந்தால், அவருடைய கிரியை பயனுள்ளதாக இருக்க இயலாது என்பது ஒரு தெளிவான சத்தியமாகும். இந்த மாம்சத்தின் நிமித்தமாக பெரும்பாலான ஜனங்கள் தேவனுடைய சத்துருக்களாக மாறியிருக்கின்றபோதிலும், அவர் தமது கிரியையை முடிக்கும் தருவாயில், அவருக்கு எதிரானவர்கள் அவருடைய சத்துருக்களாக இல்லாமல், அவருடைய சாட்சிகளாக மாறுவார்கள். அவரால் ஜெயங்கொள்ளப்பட்ட சாட்சிகளாகவும், அவருடன் இணக்கமாகி அவரிடமிருந்து பிரிக்க முடியாத சாட்சிகளாகவும் மாறுவார்கள். மனுஷனுக்கு மாம்சத்தில் செய்யப்படும் அவருடைய கிரியையின் முக்கியத்துவத்தை அவர் மனுஷனுக்குத் தெரியப்படுத்துவார். மேலும் மனித வாழ்வின் அர்த்தத்தில் இந்த மாம்சத்தின் முக்கியத்துவத்தை மனுஷன் அறிந்துகொள்வான். மேலும் மனித வாழ்வின் வளர்ச்சியில் அவனுடைய உண்மையான மதிப்பை அறிந்துகொள்வான். மேலும் இந்த மாம்சமானது வாழ்வின் நீரூற்றாக மாறும், இதிலிருந்து மனுஷனால் பிரிந்திருக்க இயலாது என்பதை அறிந்துகொள்வான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து

209. மாம்சமான தேவனுடைய மாம்சமானது தேவனுடைய அடையாளத்திற்கும் நிலைப்பாட்டிற்கும் மிகவும் பொருத்தமில்லாததாக இருக்கின்றபோதிலும், மனுஷன் அவருடைய உண்மையான நிலைப்பாட்டுடன் இணக்கமில்லாதவனாக தோன்றுகின்றபோதிலும், தேவனுடைய மெய்யான சாயலையோ அல்லது மெய்யான அடையாளத்தையோ கொண்டிராத இந்த மாம்சத்தினால் தேவனுடைய ஆவியினால் நேரடியாகச் செய்ய முடியாத கிரியையைச் செய்ய முடியும். இதுவே தேவனுடைய மனுஷ அவதரிப்பின் உண்மையான முக்கியத்துவமும் மதிப்பும் ஆகும். மேலும் இந்த முக்கியத்துவத்தையும் மதிப்பையும் தான் மனுஷனால் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. சகல மனுஷரும் தேவனுடைய ஆவியை மேல்நோக்கிப் பார்க்கிறார்கள், தேவனுடைய மாம்சத்தை கீழ்நோக்கிப் பார்க்கிறார்கள். அவர்கள் அவற்றை எவ்வாறு பார்த்தாலும் அல்லது சிந்தித்தாலும், மாம்சத்தின் உண்மையான முக்கியத்துவமும் மதிப்பும் ஆவியானவருக்குரியவற்றை காட்டிலும் மிகவும் அதிகமானவையாகும். நிச்சயமாக, இது சீர்கெட்ட மனுக்குலத்துடன் மாத்திரமே தொடர்புடையதாகும். சத்தியத்தைத் தேடுகிற மற்றும் தேவன் தோன்றுவதற்காக வாஞ்சித்து ஏங்குகிற எல்லோருக்கும், ஆவியானவரின் கிரியை ஏவுதலையோ அல்லது தூண்டுதலையோ, விவரிக்க முடியாத மற்றும் கற்பனை செய்யமுடியாத அதிசய உணர்வையோ, மகத்துவமான, மேன்மையான மற்றும் போற்றத்தக்க, ஆனாலும் எல்லோராலும் அடைய முடியாத மற்றும் பெற முடியாத உணர்வையோ மட்டுமே கொடுக்க முடியும். மனுஷனும் தேவனுடைய ஆவியானவரும் தங்களுக்கு இடையில் மிகவும் அதிகமான தூரம் இருப்பது போலவே, ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் மனுஷனும் தேவனும் கண்ணுக்கு தெரியாத ஒரு பிளவினால் பிரிக்கப்பட்டிருப்பதைப் போலவே, அவர்களால் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. உண்மையில், இது ஆவியானவரால் மனுஷனுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு மாயையாகும். ஏனென்றால் ஆவியானவரும் மனுஷனும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல, ஒரே உலகில் ஒருபோதும் இணைந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் ஆவியானவர் மனுஷனுக்குரிய எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகையால் மனுஷனுக்கு ஆவியானவர் தேவையில்லை. ஏனென்றால் மனுஷனுக்கு பெரிதும் தேவைப்படும் கிரியையை ஆவியானவரால் நேரடியாகச் செய்ய முடியாது. மாம்சத்தின் கிரியையானது மனுஷனுக்குப் பின்தொடர்வதற்கான உண்மையான இலக்குகளையும், தெளிவான வார்த்தைகளையும், அவர் உண்மையானவர், சாதாரணமானவர், அவர் தாழ்மையானவர், இயல்பானவர் என்ற உணர்வையும் கொடுக்கிறது. மனுஷன் அவருக்குப் பயப்படுகின்றபோதிலும், பெரும்பாலான ஜனங்களுக்கு அவர் எளிதாக தொடர்புகொள்ளக் கூடியவராக இருக்கிறார்: மனுஷனால் அவருடைய முகத்தைப் பார்க்க முடியும், அவருடைய குரலைக் கேட்க முடியும், அவன் அவரை தூரத்திலிருந்து பார்க்க வேண்டியதில்லை. இந்த மாம்சம் மனுஷனால் அணுகக்கூடியதாக உணர்கிறது. இது தொலைவில் இருப்பதாகவோ அல்லது புரிந்துகொள்ள இயலாததாகவோ இல்லாமல், கண்டும் தொட்டும் உணரக்கூடியதாக இருக்கிறது, ஏனென்றால் இந்த மாம்சம் மனுஷனுடைய அதே உலகில் உள்ளது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து

210. மாம்சமாகிய தேவனின் கிரியை உண்மையில் அசாதாரணமானது என்பதையும், அதில் மனுஷனால் அடைய முடியாதவை நிறைய உள்ளன என்பதையும், அவை மறைபொருட்களும் அதிசயங்களும் தான் என்பதையும் இப்போது மனுஷன் காண்கிறான். எனவே, பலர் கீழ்ப்படிந்திருக்கின்றனர். சிலர் பிறந்ததிலிருந்து எந்தவொரு மனுஷனுக்கும் ஒருபோதும் கீழ்ப்படிந்ததில்லை, ஆனால் இந்த நாளில் தேவனின் வார்த்தைகளை காணும்போது, அவர்கள் அவ்வாறு செய்திருப்பதை அறியாமலேயே முழுமையாகக் கீழ்ப்படிகிறார்கள், மேலும் அவர்கள் வேறு எதையும் ஆராய்வதற்கோ அல்லது சொல்வதற்கோ துணிவதில்லை. மனுஷத்தன்மையானது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, வார்த்தையினுடைய நியாயத்தீர்ப்பின் கீழ் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறது. தேவனுடைய ஆவியானவர் மனுஷனிடம் நேரடியாகப் பேசியிருந்தால், மனுஷகுலம் அனைவரும் அந்தக் குரலுக்கு அடிபணிந்து, தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் பவுல் தரையில் விழுந்த விதத்தில், வெளிப்படுத்தும் வார்த்தைகள் இல்லாமல் கீழே விழுந்துவிடுவார்கள். தேவன் இவ்வாறாக தொடர்ந்து கிரியை செய்தால், மனுஷன் ஒருபோதும் வார்த்தையின் நியாயத்தீர்ப்பின் மூலம் தனது சொந்தச் சீர்கேட்டை அறிந்து கொள்ள முடியாது, அதன் மூலம் இரட்சிப்பையும் அடைய முடியாது. மாம்சமாக மாறுவதன் மூலம்தான் தேவன் ஒவ்வொரு மனுஷனுடைய செவிகளிலும் தனிப்பட்ட முறையில் தனது வார்த்தைகளைச் சொல்ல முடியும், இதனால் செவிகள் உள்ள அனைவருமே அவருடைய வார்த்தைகளை கேட்டு, அவருடைய நியாயத்தீர்ப்பை வார்த்தையால் பெற முடியும். மனுஷனை அடிபணியச் செய்ய ஆவியானவர் வெளிப்படுவதை விட, அவருடைய வார்த்தையால் அடையப்படும் விளைவு இதுதான். இந்த நடைமுறை மற்றும் அசாதாரணக் கிரியையின் மூலம்தான், மனுஷனின் பழைய மனநிலையை, பல ஆண்டுகளாக ஆழமாக மறைந்திருக்கும் மனநிலையை, முழுமையாக அம்பலப்படுத்த முடியும், இதனால் மனுஷன் அதை அடையாளம் கண்டு அதை மாற்றியமைக்க முடியும். இந்த விஷயங்கள் அனைத்தும் மாம்சமாகிய தேவனின் நடைமுறைக்கான கிரியைகளாகும், அதில், நியாயத்தீர்ப்பை ஒரு நடைமுறைக்கான முறையில் பேசுவது மற்றும் செயல்படுத்துவது ஆகிய முறைகளில், அவர் மனுஷனுக்கான நியாயத்தீர்ப்பின் முடிவுகளை வார்த்தையால் அடைகிறார். இதுவே மாம்சமாகிய தேவனின் அதிகாரம் மற்றும் தேவன் மாம்சமாகியதன் முக்கியத்துவமும் ஆகும். மாம்சமாகிய தேவனின் அதிகாரத்தை அறிவதற்கும், வார்த்தையினுடைய கிரியையின் மூலம் பெறப்பட்ட முடிவுகளை அறிந்து கொள்வதற்கும், ஆவியானவர் மாம்சத்தில் வந்துள்ளார் என்பதையும், வார்த்தையால் மனுஷனை நியாயந்தீர்ப்பதன் மூலம் அவருடைய அதிகாரத்தை நிரூபிக்கிறார் என்பதைக் காட்டுவதற்கும் இது செய்யப்படுகிறது. அவருடைய மாம்சம் ஒரு சாதாரண மற்றும் இயல்பான மனுஷகுலத்தின் வெளிப்புற வடிவம்தான் என்றாலும், அவர் அதிகாரம் மிக்கவர் என்றும், அவரே தேவன் என்றும், அவருடைய வார்த்தைகள் தேவனின் வெளிப்பாடு என்றும் மனுஷனுக்கு காண்பிக்கும் அவருடைய வார்த்தைகள் அடையும் முடிவுகள் தான் அது. இதன் மூலம் மனுஷர் அனைவருக்கும் அவர் தான் தேவன் என்றும், அவர் தான் மாம்சமாக மாறியவர் என்றும், அவர் யாராலும் இடறலடையக்கூடாது என்றும், அவருடைய நியாயத்தீர்ப்பை வார்த்தையால் யாராலும் மிஞ்ச முடியாது என்றும், அந்தகாரத்தின் எந்த சக்தியும் அவருடைய அதிகாரத்தைத் தாண்டி மேலோங்க முடியாது என்றும் காட்டப்பட்டுள்ளது. அவர் தான் மாம்சமாகிய வார்த்தை என்பதால், அவரது அதிகாரத்தினால், மற்றும் அவரது வார்த்தையின் நியாயத்தீர்ப்பினால் மனுஷன் அவருக்கு முழுக்க முழுக்க கீழ்ப்படிகிறான். அவருடைய மாம்சத்தால் கொண்டுவரப்பட்ட கிரியையே, அவர் வைத்திருக்கும் அதிகாரம் ஆகும். அவர் மாம்சமாகியதன் காரணம் என்னவென்றால், மாம்சத்திற்கும் அதிகாரம் இருக்க முடியும், மேலும் அவரால் மனுஷரிடையே ஒரு நடைமுறைக்குரிய முறையில் கிரியையைச் செய்ய முடியும், அதை மனுஷனுக்குத் தெரியும் வகையிலும் மற்றும் உறுதியான முறையிலும் செய்ய முடியும். எல்லா அதிகாரங்களையும் கொண்ட தேவனின் ஆவியால் நேரடியாகச் செய்யப்படும் கிரியையை விட இந்தக் கிரியை மிகவும் யதார்த்தமானது, மேலும் அதன் முடிவுகளும் தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால், மாம்சமாகிய தேவனால் ஒரு நடைமுறைக்குரிய வழியில் பேசவும் கிரியை செய்யவும் முடியும். அவருடைய மாம்சத்தின் வெளிப்புற வடிவம் எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை, மேலும் மனுஷனால் அதனை அணுக முடியும், அதேசமயம் அவருடைய சாராம்சமானது அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது, ஆனால் அவருடைய அதிகாரம் யாருக்கும் தெரிவதில்லை. அவர் பேசும் போதும், கிரியை செய்யும்போதும், மனுஷனால் அவரது அதிகாரத்தின் இருப்பைக் கண்டுபிடிக்க முடிவதில்லை; இது ஒரு நடைமுறைக்குரிய இயல்புடைய கிரியையை செய்வதற்கு அவருக்கு உதவுகிறது. இந்த நடைமுறைக்குரிய கிரியைகள் அனைத்தாலும் முடிவுகளை அடைய முடியும். எந்தவொரு மனுஷனும் அவரிடம் அதிகாரம் இருப்பதை உணருவதில்லை, அல்லது அவர் இடறலடையப்படக்கூடாதவர் என்பவர் என்பதை, அல்லது அவரது கடுங்கோபத்தைக் காண்கிறான் என்றாலும், அவர் மறைத்து வைத்திருக்கும் அதிகாரம், மறைக்கப்பட்ட கோபம் மற்றும் அவர் வெளிப்படையாக பேசும் வார்த்தைகள் ஆகியவற்றின் மூலம் அவன் வார்த்தைகளின் திட்டமிடப்பட்ட முடிவை அடைகிறான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவருடைய குரல், அவரது பேச்சின் கடினத்தன்மை மற்றும் அவரது வார்த்தைகளில் இருக்கும் அனைத்து ஞானத்தின் மூலமும் மனுஷன் முற்றிலும் சமாதானப்படுத்தப்படுகிறான். இவ்வாறாக, மனுஷன், மாம்சமாகிய தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிகிறான், அவனுக்கு அதிகாரமே இல்லை, இதன் மூலம் மனுஷனைக் இரட்சிப்பதற்கான தேவனின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறது. இது அவர் மாம்சமாகியதன் முக்கியத்துவத்தின் மற்றொரு அம்சமாகும்: இன்னும் யதார்த்தமாக பேசுவதும், அவருடைய வார்த்தைகளின் யதார்த்தம் மனுஷனுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அனுமதிப்பதும், இதன்மூலம் மனுஷனால் தேவனுடைய வார்த்தையின் வல்லமையைக் காணக்கூடும். எனவே, இந்தக் கிரியை மாம்சமாகிய தேவன் மூலம் செய்யப்பட்டிருக்காவிட்டால், அது சிறிதளவு முடிவுகளைக் கூட அடைந்திருக்காது, மேலும் பாவிகளை முழுமையாக இரட்சிக்கவும் முடிந்திருக்காது. தேவன் மாம்சமாகி இருக்காவிட்டால், அவர் மனுஷனின் கண்ணுக்குத் தெரியாத மற்றும் அவனால் தொட்டுணர முடியாத ஆவியானவராக இருந்திருப்பார். மனுஷன் மாம்சத்திலான சிருஷ்டியாக இருப்பதால், அவனும் தேவனும் இரண்டு வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்தவர்களாக, வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தாலான மனுஷனுடன் இணக்கமில்லாதவராக இருக்கிறார், மேலும் அவர்களுக்கிடையில் உறவுகளை ஏற்படுத்த எந்த வழியும் இல்லை. மனுஷனால் ஒரு ஆவியாக மாற இயலாது. இது அவ்வாறு இருப்பதால், தேவனுடைய ஆவியானவர் அவருடைய உண்மையான கிரியையைச் செய்ய ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக மாற வேண்டும். தேவனால் மிக உயர்ந்த இடத்திற்கு ஏறி, ஒரு மனுஷ ஜீவனாக மாறுவதற்கு தம்மைத் தாழ்த்திக் கொள்ள முடியும், மனுஷரிடையே கிரியை செய்து, அவர்கள் மத்தியில் வாழவும் முடியும், ஆனால் மனுஷனால் உயர்ந்த இடத்திற்கு ஏறி ஒரு ஆவியாக மாற முடியாது, மேலும் மிகவும் தாழ்ந்த இடத்திற்கு இறங்கவும் முடியாது. இதனால்தான் தேவன் தமது கிரியையைச் செய்ய மாம்சமாக மாற வேண்டியிருந்தது. அதே அடையாளத்தின் மூலம், தேவன் முதல்முறை மாம்சமாகியபோது, மாம்சமாகிய தேவனின் மாம்சத்தால் மட்டுமே மனுஷனை மீட்டெடுக்க சிலுவையில் அறையப்பட முடியும், அதேசமயம் தேவனுடைய ஆவியானவர் மனுஷனுக்கான பாவநிவாரணப்பலியாக சிலுவையில் அறையப்படுவதற்கு எந்த வழியும் இருந்திருக்காது. மனுஷனுக்கான பாவநிவாரணப்பலியாக ஊழியம் செய்ய தேவன் நேரடியாக மாம்சமாகியிருக்க முடியும், ஆனால் தேவன் தனக்காக ஆயத்தம் செய்து வைத்திருக்கும் பாவநிவாரணப்பலியை எடுக்க மனுஷனால் நேரடியாக வானத்திற்கு ஏற முடியாது. அப்படியானால், சாத்தியமானதெல்லாம், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் ஒரு சில முறை முன்னும் பின்னுமாக ஓடும்படி தேவனிடம் கேட்பது மட்டுமே, இந்த இரட்சிப்பை எடுக்க மனுஷன் வானத்திற்கு ஏற அல்ல, ஏனென்றால் மனுஷன் விழுந்துவிட்டான், மேலும், மனுஷனால் வெறுமனே வானத்திற்கு ஏற முடியாது, பாவநிவாரணப்பலியைப் பெறவும் முடியாது. ஆகையால், இயேசு மனுஷகுலத்தின் மத்தியில் வந்து மனுஷனால் வெறுமனே செய்ய முடியாத கிரியையை தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் தேவன் மாம்சமாக மாறும்போதும், அது முழுமையாக தேவையற்றதாக இருப்பதில்லை. எந்தவொரு கட்டமும் தேவனுடைய ஆவியானவரால் நேரடியாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், மாம்சமாகும் இழிநிலைக்கு அவர் கீழ்படிந்திருக்க மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

211. மனுஷனுடைய மாம்சத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்ப்பதற்கான கிரியையைச் செய்வதற்கு மாம்சத்திலுள்ள தேவனை விட வேறு யாரும் பொருத்தமானவராகவும் தகுதியானவராகவும் இல்லை. நியாயத்தீர்ப்பானது தேவனுடைய ஆவியானவரால் நேரடியாக செய்யப்பட்டிருந்தால், அது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்திருக்காது. மேலும், இதுபோன்ற கிரியையை மனுஷன் ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும், ஏனென்றால் ஆவியானவரால் மனுஷனிடம் நேரில் வரமுடியாது. இதன் காரணமாக, பலன்கள் உடனடியாக கிடைக்காது, மனுஷனால் தேவனுடைய புண் படுத்த இயலாத மனநிலையை மிகவும் தெளிவாகப் பார்க்கவும் முடியாது. மாம்சத்திலுள்ள தேவன் மனுக்குலத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்த்தால் மாத்திரமே, சாத்தானை முழுமையாக தோற்கடிக்க முடியும். சாதாரண மனிதத்தன்மையைக் கொண்ட மனுஷனைப் போலவே இருக்கும் மாம்சத்திலுள்ள தேவனால் மனுஷனுடைய அநீதியை நேரடியாக நியாயந்தீர்க்க முடியும். இது அவருடைய இயல்பான பரிசுத்தத்தன்மையின் மற்றும் அவருடைய தெய்வீகத்தன்மையின் அடையாளமாக இருக்கிறது. தேவன் மாத்திரமே மனுஷனை நியாயந்தீர்க்க தகுதியுடையவர், நியாயந்தீர்க்கும் நிலையில் இருக்கிறார், ஏனென்றால் அவர் சத்தியத்தையும் நீதியையும் கொண்டிருக்கிறார், ஆகவே அவரால் மனுஷனை நியாயந்தீர்க்க முடிகிறது. சத்தியமும் நீதியும் இல்லாதிருக்கிறவர்கள் மற்றவர்களை நியாயந்தீர்க்க தகுதியற்றவர்கள். இந்த கிரியை தேவனுடைய ஆவியானவரால் செய்யப்பட்டிருந்தால், அது சாத்தான் மீதான ஜெயத்தைக் குறிக்காது. ஆவியானவர் மனுஷர்களை விட இயல்பாகவே உயர்ந்தவர், தேவனுடைய ஆவியானவர் இயல்பாகவே பரிசுத்தமானவர், மாம்சத்தின் மீது வெற்றிசிறக்கிறார். இந்தக் கிரியையை ஆவியானவர் நேரடியாகச் செய்திருந்தால், மனுஷனுடைய கீழ்ப்படியாமை அனைத்தையும் அவரால் நியாயந்தீர்க்க முடியாது, மேலும் மனுஷனுடைய எல்லா அநீதியையும் வெளிப்படுத்த முடியாது. நியாயத்தீர்ப்பின் கிரியையானது தேவனைப் பற்றிய மனுஷனுடைய கருத்துக்கள் மூலமாகவும் செய்யப்படுவதனால், மனுஷனிடம் ஆவியானவரைப் பற்றிய எந்தக் கருத்துக்களும் கிடையாது. ஆகையால், மனுஷனுடைய அநீதியைச் சிறந்த முறையில் வெளிப்படுத்த ஆவியானவரால் முடியாது, இதுபோன்ற அநீதியை முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாது. மாம்சமான தேவன் அவரை அறியாத அனைவருக்கும் சத்துருவாக இருக்கிறார். மனுஷனுடைய கருத்துக்களையும், அவரை எதிர்ப்பதையும் நியாயந்தீர்ப்பதன் மூலம், மனுக்குலத்தின் கீழ்ப்படியாமை அனைத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார். ஆவியானவரின் கிரியையின் பலன்களைக் காட்டிலும் மாம்சத்தில் அவர் செய்த கிரியையின் பலன்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. ஆகையால், மனுக்குலம் முழுவதின் நியாயத்தீர்ப்பும் ஆவியானவரால் நேரடியாக செய்யப்படாமல், மாம்சமான தேவனுடைய கிரியையால் செய்யப்படுகிறது. மாம்சத்திலுள்ள தேவனை மனுஷனால் காணவும், தொட்டுணரவும் முடியும். மாம்சத்திலுள்ள தேவனால் மனுஷனை முழுமையாக ஜெயங்கொள்ள முடியும். மாம்சத்திலுள்ள தேவனுடனான தனது உறவில், மனுஷன் எதிர்ப்பிலிருந்து கீழ்ப்படிதலுக்கும், துன்புறுத்துதலிலிருந்து ஏற்றுக்கொள்ளுதலுக்கும், கருத்துக்களிலிருந்து அறிவுக்கும் மற்றும் புறக்கணிப்பதிலிருந்து அன்புக்கும் முன்னேறுகிறான். இவைதான் மாம்சமான தேவனுடைய கிரியையின் பலன்களாகும். மனுஷன் அவருடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொள்வதன் மூலமாக மாத்திரமே இரட்சிக்கப்படுகிறான். மனுஷன் அவருடைய வாயின் வார்த்தைகளின் மூலமாக அவரை படிப்படியாக அறிந்துகொள்கிறான். மனுஷன் அவரை எதிர்க்கும்போது அவரால் ஜெயங்கொள்ளப்படுகிறான். அவருடைய சிட்சையை ஏற்றுக்கொள்ளும் போது அவர் வழங்கும் ஜீவனைப் பெறுகிறான். இந்த கிரியைகள் எல்லாம் மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியையாகும், ஆனால் ஆவியானவர் என்ற அடையாளத்திலுள்ள தேவனுடைய கிரியை அல்ல.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து

212. தேவன் இன்னும் மாம்சமாகாத போது, அவர் சொன்னதை ஜனங்கள் அதிகம் புரிந்து கொள்ளவில்லை, ஏனென்றால் அவருடைய வார்த்தைகள் முழுமையான தெய்வீகத்தன்மையிலிருந்து வெளிப்பட்டன. அவர் சொன்ன கண்ணோட்டமும், சூழலும் கண்களுக்குத் தெரியாததாய் மற்றும் மனுக்குலம் அடைய முடியாததாய் இருந்தது. அது ஜனங்கள் பார்க்கக் கூடாத ஒரு ஆவிக்குரிய உலகிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது. மாம்சத்தில் வாழ்ந்த ஜனங்களுக்கு ஆவிக்குரிய உலகத்திற்குள்ளாகக் கடந்து செல்ல முடியவில்லை. ஆனால் தேவன் மாம்சமான பிறகு மனிதத்தன்மையின் கண்ணோட்டத்திலிருந்து மனுக்குலத்தோடு பேசினார், மேலும் அவர் வெளியேறி, ஆவிக்குரிய உலகத்தின் எல்லையைத் தாண்டினார். அவர் தன்னுடைய தெய்வீக மனநிலையையும், சித்தத்தையும் மற்றும் மனப்பான்மையையும், மனிதர்களால் கற்பனை செய்யக்கூடிய விஷயங்கள், அவர்கள் வாழ்க்கையில் கண்ட மற்றும் சந்தித்த விஷயங்கள், மற்றும் மனிதர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைகள், அவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் மற்றும் அறிவால் அவர்கள் கிரகித்துக்கொள்ளக்கூடியவை மூலம் வெளிப்படுத்த முடியும். இது மனுக்குலத்தை தேவனைப் புரிந்து கொள்ள, அறிந்து கொள்ள, அவருடைய நோக்கத்தையும், அவர் எதிர்பார்க்கிற தரத்தையும் அவர்களுடைய திறனின் எல்லைக்குள்ளும், அவர்களால் முடிந்த அளவிற்கும் கிரகித்துக் கொள்ள அனுமதிக்கிறது. இதுவே மனுக்குலத்தில் செய்யப்படும் தேவனுடைய கிரியையின் முறையும் கொள்கையும் ஆகும். மாம்சத்தில் கிரியை செய்யும் தேவனுடைய வழிகளும், அவருடைய கொள்கைகளும் பெரும்பாலும் மனுக்குலத்தின் வாயிலாகவோ அல்லது அதன் மூலமாகவோ அடையப்பட்டிருந்தாலும், அது உண்மையிலேயே நேரடியாக தெய்வீகத்தன்மையில் கிரியை செய்வதன் மூலம் அடையமுடியாத பலன்களை அடைந்தது. மனுக்குலத்தில் தேவனுடைய கிரியை மிகவும் உறுதியானது, உண்மையானது மற்றும் இலக்குடையது, கிரியையின் முறைகள் மிகவும் இணங்குகிற வகையானது, மேலும் இது, வடிவத்தில் நியாயப்பிரமாண காலத்தின்போது நிறைவேற்றப்பட்ட கிரியைகளை விஞ்சியது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

213. மாம்சத்தில் தேவனுடைய வருகை என்றால் முக்கியமாக மக்கள் தேவனுடைய உண்மையான செயல்களைக் காணவும், உருவமற்ற ஆவிக்கு மாம்ச உருவத்தைக் கொடுக்கவும், மக்கள் அவரைக் காணவும் தொடவும் அனுமதிக்க வேண்டும் என்பதாகும். இவ்விதமாக, அவரால் பரிபூரணமாக்கப்பட்டவர்கள் அவரைப் போல வாழ்வார்கள், அவரால் ஆதாயப்படுத்தப்படுவார்கள், அவருடைய இருதயத்திற்குப் பின்னால் இருப்பார்கள். தேவன் பரலோகத்தில் மாத்திரமே பேசிவிட்டு, உண்மையிலே பூமிக்கு வரவில்லை என்றால், மக்கள் தேவனை இன்னும் அறிய முடியாமல் இருப்பார்கள்; அவர்கள் வெற்றுக் கோட்பாட்டைப் பயன்படுத்தி தேவனுடைய செயல்களைப் பிரசங்கிக்க மட்டுமே முடியுமே தவிர, தேவனுடைய வார்த்தைகளை நிஜமாகக் கொண்டிருக்க மாட்டார்கள். தேவன் முக்கியமாக தான் ஆதாயப்படுத்தியவர்களுக்கு முன்மாதிரியாகவும் உதாரணமாகவும் செயல்படவுமே பூமிக்கு வந்துள்ளார்; மக்கள் இவ்வாறு மாத்திரமே உண்மையில் தேவனை அறிந்துகொள்ளவும், தேவனைத் தொடவும், அவரைப் பார்க்கவும் இயலும், அப்போதுதான் அவர்கள் உண்மையிலேயே தேவனால் ஆதாயப்படுத்தப்பட முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நடைமுறை தேவனும் தேவன்தான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

214. தேவன் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளும் பொழுது, அதாவது, தேவன் மாம்சமாக மாறும் பொழுது தான், மனிதன் அவருக்கு நெருக்கமானவனாகவும் நம்பிக்கையுள்ளவனாகவும் இருக்க முடியும். தேவன் ஆவியினாலானவர்: உன்னதமான மற்றும் புரிந்துக் கொள்ள முடியாதவரான இந்த ஆவியானவருடன் நெருக்கமாக இருக்க ஜனங்கள் எவ்வாறு தகுதி பெறுகிறார்கள்? தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் இறங்கி, மனிதனைப் போலவே வெளித்தோற்றம் கொண்ட ஒரு சிருஷ்டியாக மாறும் பொழுது தான், ஜனங்கள் அவருடைய சித்தத்தைப் புரிந்துக் கொண்டு உண்மையில் அவரை அடைய முடியும். அவர் மாம்சத்தில் கிரியை செய்துப் பேசுகிறார், மனிதகுலத்தின் சந்தோஷங்கள், துக்கங்கள் மற்றும் இன்னல்களில் பங்கு வகிக்கிறார், மனிதகுலத்தின் அதே உலகில் ஜீவிக்கிறார், மனித குலத்தைப் பாதுகாக்கிறார், அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார், மேலும் இதன் மூலம் அவர் ஜனங்களைச் சுத்திகரித்து, அவருடைய இரட்சிப்பையும் அவருடைய ஆசீர்வாதத்தையும் அடைய அவர்களை அனுமதிக்கிறார். இவற்றை அடைந்த பிறகு, ஜனங்கள் தேவனின் சித்தத்தை உண்மையிலேயே புரிந்துக் கொள்கிறார்கள், அதன் பிறகு மட்டுமே அவர்களால் தேவனுடன் நெருக்கமானவர்களாக இருக்க முடியும். இது மட்டுமே நடைமுறைக்குரியது. தேவன் அதரிசனமானவரும், ஜனங்களுக்கு புரிந்துக் கொள்ள முடியாதவராகவும் இருந்தால், அவர்கள் எவ்வாறு அவருக்கு நெருக்கமானவர்களாக இருக்க முடியும்? இது வெறுமையான உபதேசம் அல்லவா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்” என்பதிலிருந்து

215. மாம்சத்தில் வாழ்பவர்கள் எல்லோரும், தங்கள் மனநிலையை மாற்றுவதற்கு பின்தொடர்வதற்கான இலக்குகள் தேவைப்படுகின்றன, தேவனை அறிந்துகொள்வதற்கு உண்மையான செயல்களையும், தேவனுடைய உண்மையான முகத்தையும் பார்க்க வேண்டியதிருக்கிறது. இரண்டையும் மாம்சமான தேவனுடைய மாம்சத்தால் மாத்திரமே அடைய முடியும். மேலும் இரண்டையும் சாதாரண மற்றும் உண்மையான மாம்சத்தால் மாத்திரமே நிறைவேற்ற முடியும். இதனால்தான் மனுஷனாக அவதரிப்பது அவசியமானதாகும். இது சீர்கெட்ட மனுக்குலத்திற்கு தேவைப்படுகிறது. ஜனங்கள் தேவனை அறிந்துகொள்ள வேண்டியதிருப்பதால், தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வங்களின் உருவங்கள் அவர்களுடைய இருதயங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும். மேலும் அவர்கள் தங்கள் சீர்கேடான மனநிலையைப் போக்க வேண்டியதிருப்பதால், அவர்கள் முதலில் தங்கள் சீர்கேடான மனநிலையை அறிந்துகொள்ள வேண்டும். ஜனங்களின் இருதயங்களிலிருந்து தெளிவற்ற தெய்வங்களின் உருவங்களை அகற்றுவதற்கான கிரியையை மனுஷன் மட்டுமே செய்தால், அவன் சரியான பலனை அடையத் தவறிவிடுவான். ஜனங்களின் இருதயங்களில் காணப்படும் தெளிவற்ற தெய்வங்களின் உருவங்களை வார்த்தைகளால் மாத்திரமே நீக்கவோ அல்லது முழுமையாக அப்புறப்படுத்தவோ முடியாது. அவ்வாறு செய்தால், ஆழமாக வேரூன்றப்பட்ட இந்த விஷயங்களை ஜனங்களிடமிருந்து அகற்றுவது இன்னும் சாத்தியமாக இருக்காது. நடைமுறைத் தேவன் மற்றும் தேவனுடைய உண்மையான உருவம் ஆகியவற்றைக் கொண்டும், ஜனங்களை படிப்படியாக தங்களை அறிந்துகொள்ள வைப்பவதன் மூலமாகவும், இந்த தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை மாற்றுவதன் மூலமாக மட்டுமே சரியான பலனை அடைய முடியும். மனுஷன் தான் கடந்த காலங்களில் தேடிய தேவன் தெளிவற்றவராகவும் இயற்கைக்கு அப்பாற்பட்டவராகவும் இருப்பதை உணர்ந்துகொள்கிறான். இந்த பலனை ஆவியானவரின் நேரடி தலைமையினாலோ, ஒரு குறிப்பிட்ட நபரின் போதனைகளினாலோ அல்லாமல், மாம்சமான தேவனாலேயே அடைய முடியும். மாம்சமான தேவன் தமது கிரியையை அதிகாரப்பூர்வமாகச் செய்யும்போது, மனுஷனுடைய கருத்துக்கள் வெளியரங்கமாக்கப்படுகின்றன. ஏனென்றால் மாம்சமான தேவனுடைய இயல்பான தன்மையும் யதார்த்தமும் மனுஷனுடைய கற்பனையில் காணப்படும் தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவனுக்கு நேர்மாறானவையாக இருக்கின்றன. மாம்சமான தேவனுக்கு நேர்மாறாக இருக்கும்போது மட்டுமே மனுஷனுடைய உண்மையான கருத்துக்களை வெளிப்படுத்த முடியும். மாம்சமான தேவனுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல், மனுஷனுடைய கருத்துக்களை வெளிப்படுத்த இயலாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கேடுநிறைந்தவன் என்ற யதார்த்தம் இல்லாமல், தெளிவற்ற காரியங்களை வெளிப்படுத்த முடியாது. இந்த கிரியையைச் செய்வதற்கு யாராலும் வார்த்தைகளைப் பயன்படுத்த முடியாது. வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த கிரியையை யாராலும் தெளிவாக பேசவும் முடியாது. தேவனால் மாத்திரமே தமது சொந்த கிரியையைச் செய்ய முடியும். வேறு யாராலும் அவர் சார்பாக இந்த கிரியையைச் செய்ய முடியாது. மனுஷனுடைய பாஷை எவ்வளவு வளமையாக இருந்தாலும் சரி, தேவனுடைய யதார்த்தத்தையும் இயல்பையும் அவனால் தெளிவாக பேச முடியாது. மனுஷனால் தேவனை மிகவும் நடைமுறையில் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். மேலும் தேவன் மனுஷர் நடுவே தனிப்பட்ட முறையில் கிரியை செய்து, தமது உருவத்தையும் தான் உண்டென்பதையும் முழுமையாக வெளிப்படுத்தினால் மாத்திரமே, அவனால் அவரை மிகவும் தெளிவாக பார்க்க முடியும். மாம்சத்தாலான எந்த மனுஷனாலும் இந்த பலனை அடைய முடியாது. நிச்சயமாகவே, தேவனுடைய ஆவியானவராலும் இந்த பலனை அடைய முடியாது. சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து சீர்கெட்ட மனுஷனை தேவனால் இரட்சிக்க முடியும், ஆனால் இந்த கிரியையை தேவனுடைய ஆவியானவரால் நேரடியாக நிறைவேற்ற முடியாது. மாறாக, தேவனுடைய ஆவியானவர் அணிந்திருக்கும் மாம்சத்தினால், மாம்சமான தேவனுடைய மாம்சத்தினால் மட்டுமே செய்ய முடியும். இந்த மாம்சம் மனுஷனாகவும், தேவனாகவும் இருக்கிறது, சாதாரண மனிதத்தன்மை கொண்ட ஒரு மனுஷனாகவும், முழு தெய்வீகத்தன்மை கொண்ட தேவனாகவும் இருக்கிறது. ஆகையால், இந்த மாம்சம் தேவனுடைய ஆவியானவர் இல்லை என்றபோதிலும், ஆவியானவரிலிருந்து பெரிதும் மாறுபட்டது என்றபோதிலும், ஆவியானவராகவும் மாம்சமாகவும் இருக்கும் மாம்சமான தேவனே இன்னும் மனுஷனை இரட்சிக்கிறார். அவர் எவ்வாறு அழைக்கப்பட்டாலும் சரி, இறுதியில் தேவனே மனுக்குலத்தை இரட்சிக்கிறவராக இருக்கிறார். தேவனுடைய ஆவியானவர் மாம்சத்திலிருந்து பிரிக்க இயலாதவராக இருப்பதால், மாம்சத்தின் கிரியையும் தேவனுடைய ஆவியானவரின் கிரியையாக இருக்கிறது. இந்த கிரியை ஆவியானவரின் அடையாளத்தைப் பயன்படுத்தி செய்யப்படவில்லை, ஆனால் மாம்சத்தின் அடையாளத்தைப் பயன்படுத்தியே செய்யப்படுகிறது. ஆவியானவரால் நேரடியாக செய்யப்பட வேண்டிய கிரியைக்கு மனுஷனாக அவதரிக்க தேவவையில்லை. மாம்சம் செய்ய வேண்டிய கிரியையை ஆவியானவரால் நேரடியாக செய்ய முடியாது. மாம்சமான தேவனால் மட்டுமே செய்ய முடியும். இந்த கிரியைக்கு இதுதான் தேவைப்படுகிறது. இதுதான் சீர்கெட்ட மனுக்குலத்திற்கு தேவைப்படுகிறது. தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களில், ஒரே ஒரு கட்டம் மட்டுமே ஆவியானவரால் நேரடியாக செய்யப்பட்டது. மீதமுள்ள இரண்டு கட்டங்களும் மாம்சமான தேவனால் செய்யப்படுகின்றன, ஆவியானவரால் நேரடியாக செய்யப்படுவதில்லை. ஆவியானவரால் செய்யப்பட்ட நியாயப்பிரமாண காலத்தின் கிரியை மனுஷனுடைய சீர்கேடான மனநிலையை மாற்றுவதில் ஈடுபடவில்லை. தேவனைப் பற்றிய மனுஷனுடைய அறிவுக்கு எந்த தொடர்புடையதாகவும் இருக்கவில்லை. ஆனாலும், கிருபையின் காலத்திலும், ராஜ்யத்தின் காலத்திலும் தேவனுடைய மாம்சத்தின் கிரியையானது மனுஷனுடைய சீர்கேடான மனநிலையுடனும், தேவனைப் பற்றிய அறிவுடனும் தொடர்புடையதாக இருக்கிறது. மேலும் இது இரட்சிப்பின் கிரியையின் முக்கியமான பகுதியாகும். ஆகையால், சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகமாக தேவைப்படுகிறது. மேலும் மாம்சமான தேவனுடைய நேரடி கிரியையும் அதிகமாக தேவைப்படுகிறது. மனுஷனை வழிநடத்துவதற்கும், அவனை ஆதரிப்பதற்கும், அவனுக்குத் தண்ணீர் கொடுப்பதற்கும், அவனைப் போஷிப்பதற்கும், அவனை நியாயந்தீர்ப்பதற்கும் சிட்சிப்பதற்கும் மாம்சமான தேவன் தேவைப்படுகிறார். மேலும் மாம்சமான தேவனிடமிருந்து அவனுக்கு அதிக கிருபையும், மாபெரும் மீட்பும் தேவைப்படுகிறது. மாம்சத்தில் உள்ள தேவனால் மட்டுமே மனுஷனுடைய ஆப்த நண்பராகவும், மனுஷனுடைய மேய்ப்பராகவும், மனுஷனுடைய தற்போதைய சகாயமாகவும் இருக்க முடியும். இவையெல்லாம் இன்றைக்கும் கடந்த காலங்களிலும் மாம்சத்தில் மனுஷனாய் அவதிரிப்பதன் அவசியமாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து

216. மனிதர்களிடையே தம்முடைய கிரியையைச் செய்வதற்கும், மனிதனுக்குத் தனிப்பட்ட முறையில் தன்னை வெளிப்படுத்துவதற்கும், மனிதன் தன்னைப் பார்ப்பதற்கு அனுமதிப்பதற்கும் தேவன் பூமிக்கு வந்துள்ளார்; இது ஒரு சிறிய விஷயமா? இது உண்மையில் அவ்வளவு எளிதல்ல! இது மனிதன் கற்பனை செய்வது போல அல்ல: தேவன் வந்துவிட்டார், அதனால் மனிதன் அவரைப் பார்க்லாம், இதனால் தேவன் இருப்பது உண்மை, அது தெளிவற்ற அல்லது வெற்றுத்தனமான விஷயம் அல்ல என்பதையும், தேவன் உயர்ந்தவர், ஆனாலும் தாழ்மையுள்ளவர் என்பதையும் மனிதன் புரிந்துகொள்ள முடியும். அது அவ்வளவு எளிதாக இருக்க முடியுமா? இது துல்லியமாக, சாத்தான் மனிதனின் மாம்சத்தை சீர்கேடு அடையச் செய்ததால், மற்றும் மனிதனைத் தேவன் இரட்சிக்க விரும்புவதால், சாத்தானுடன் யுத்தம் செய்வதற்கும் மனிதனைத் தனிப்பட்ட முறையில் மேய்ப்பதற்கும் தேவன் மாம்ச உருவத்தைப் பெறவேண்டும் என்பதாகும். இது மட்டுமே அவருடைய கிரியைக்கு நன்மை பயக்கும். தேவனின் இரண்டு மனித உருவம் எடுத்த மாம்சங்கள் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவும், மனிதனைச் சிறப்பாக இரட்சிப்பதற்காகவும் இருந்தன. இது ஏனென்றால், அது தேவனின் ஆவியானாவராக இருந்தாலும் சரி, தேவனின் மனித உருவ மாம்சமாக இருந்தாலும் சரி, சாத்தானுடன் யுத்தம் செய்யும் ஒருவர் தேவனாக மட்டுமே இருக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், சாத்தானுடன் யுத்தம் செய்கிறவர்கள் தேவதூதர்களாக இருக்க முடியாது, அப்படி இருக்கும்போது, அதனைக் காட்டிலும் குறைவாக, அது சாத்தானால் சீர்கேடடைந்த மனிதனாக இருக்க முடியாது. இந்த யுத்தத்தில் சண்டையிடத் தேவதூதர்கள் சக்தியற்றவர்கள், மனிதன் அதைக்காட்டிலும் பலமற்றவன். எனவே, மனிதனின் ஜீவித காலத்துக்கான கிரியையைச் செய்யத் தேவன் விரும்பினால், மனிதனை இரட்சிக்க அவர் தனிப்பட்ட முறையில் பூமிக்கு வர விரும்பினால், அவர் தனிப்பட்ட முறையில் மாம்சமாக மாற வேண்டும்—அதாவது, அவர் தனிப்பட்ட முறையில் மாம்ச உருவத்தைப் பெறவேண்டும், மேலும் அவரது உள்ளார்ந்த அடையாளம் மற்றும் அவர் செய்ய வேண்டிய கிரியையுடன் அவர் தனிப்பட்ட முறையில் மனிதனை இரட்சிக்க மனிதர் மத்தியில் வருகிறார். இல்லையென்றால், இந்த கிரியையைச் செய்தது தேவனுடைய ஆவியானவர் அல்லது மனிதன் என்றால், இந்த யுத்தத்தில் எதுவும் முடிவுக்கு வரப்போவதில்லை, மேலும் அது ஒருபோதும் முடிவடையாது. மனிதர்களிடையே உள்ள சாத்தானுக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் யுத்தத்துக்குச் செல்ல தேவன் மாம்சமாக மாறும்போதுதான் மனிதனுக்கு இரட்சிப்பின் வாய்ப்பு கிடைக்கும். மேலும், அப்போதுதான் சாத்தானை வெட்கமடையச் செய்து, அபகரிப்பதற்கான வாய்ப்புகள் அல்லது செயல்படுத்த எந்த திட்டமும் இல்லாமல் போகுமாறு செய்ய முடியும். மனித உருவாகிய தேவனால் செய்யப்பட்ட கிரியை தேவனுடைய ஆவியானவரால் செய்ய முடியாதது, மேலும் எந்த மாம்ச மனிதனும் தேவனின் சார்பாக அதைச் செய்வது இன்னும் சாத்தியமற்றது, ஏனென்றால் அவர் செய்யும் கிரியை மனிதனின் ஜீவிதம் நிமித்தமானது, மற்றும் மனிதனின் சீர்கெட்ட மனநிலையை மாற்றுவதற்கானது. இந்த யுத்தத்தில் மனிதன் பங்கேற்க வேண்டுமென்றால், அவன் மோசமாக குழப்பமடைந்து தப்பி ஓடுவான், மேலும் அவனது சீர்கெட்ட மனநிலையை வெறுமனே அவனால் மாற்ற இயலாது. மனிதனைச் சிலுவையிலிருந்து காப்பாற்றவோ, அல்லது கலகக்கார மனுக்குலம் அனைத்தையும் ஜெயங்கொள்ளவோ அவனால் இயலாது, ஆனால் கொள்கைகளுக்கு அப்பால் செல்ல இயலாத ஒரு சிறிய பழைய காரியத்தை, இல்லையெனில் சாத்தானின் தோல்விக்கு தொடர்பில்லாத காரியத்தை மட்டுமே செய்ய முடியும். அதனால் ஏன் கவலைப்படவேண்டும்? சாத்தானைத் தோற்கடிக்க முடியாதது, அதைக்காட்டிலும் குறைவாக, மனிதகுலத்தைக்கூட ஆதாயப்படுத்த முடியாத இந்தக் காரியத்தில் என்ன முக்கியத்துவம் இருக்கும்? எனவே, சாத்தானுடனான யுத்தத்தை தேவனால் தாமே மேற்கொள்ள முடியும், மனிதன் அதைச் செய்வது என்பது கொஞ்சமும் சாத்தியமில்லாதது. மனிதனின் கடமை கீழ்ப்படிதல் மற்றும் பின்பற்றுவதுதான், ஏனென்றால் வானத்தையும் பூமியையும் உருவாக்குவதற்கு ஒத்த கிரியையை மனிதனால் செய்ய முடியாது, மேலும், சாத்தானுடன் போரிடும் கிரியையையும் அவனால் செய்ய முடியாது. தேவன் தாமே அவரது தலைமையின் கீழ் மனிதன் சிருஷ்டிகரை திருப்திப்படுத்த மட்டுமே முடியும், இதன் மூலம் மட்டுமே சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான்; மனிதனால் செய்யக்கூடிய ஒரே விஷயம் இதுதான். எனவே, ஒரு புதிய யுத்தம் தொடங்கும் ஒவ்வொரு முறையும், அதாவது, புதிய காலத்தின் கிரியை தொடங்கும் ஒவ்வொரு முறையும், இந்தக் கிரியை தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்படுகிறது, இதன் மூலம் அவர் அனைத்து யுகங்களையும் வழிநடத்தி, மனுக்குலம் முழுமைக்கும் புதிய பாதையைத் திறக்கிறார். ஒவ்வொரு புதிய காலத்தின் விடியலும் சாத்தானுடனான யுத்தத்தில் ஒரு புதிய தொடக்கமாகும், இதன் மூலம் மனிதன் ஒரு புதிய, அழகான உலகிற்குள், மற்றும் தேவனால் தாமே தனிப்பட்ட முறையில் வழிநடத்தப்படும் ஒரு புதிய காலத்திற்குள் பிரவேசிக்கிறான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து

217. இயேசுவின் கிரியையில் மாம்சமாகியதன் அர்த்தம் முற்றுபெறவில்லை என்று நான் ஏன் சொல்கிறேன்? ஏனெனில் வார்த்தை முற்றிலும் மாம்சமாக மாறவில்லை. இயேசு செய்தது மாம்சத்தில் தேவனுடைய கிரியையின் ஒரு பகுதி மட்டுமே; அவர் மீட்பின் கிரியையை மட்டுமே செய்தார், மனிதனை முழுமையாக ஆதாயப்படுத்தும் கிரியையைச் செய்யவில்லை. இந்த காரணத்திற்காக, தேவன் கடைசி நாட்களில் மீண்டும் மாம்சமாகியிருக்கிறார். கிரியையின் இந்த நிலையும் கூட ஒரு சாதாரண மாம்சத்தில் செய்யப்படுகிறது; இது முற்றிலும் சாதாரணமான ஒரு மனிதனால் செய்யப்படுகிறது, அவருடைய மனிதத்தன்மையானது சிறிதளவேனும் மீறப்படவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் ஒரு முழுமையான மனிதராகிவிட்டார்; அவர் தேவனுடைய அடையாளம், ஒரு முழுமையான மனிதர், கிரியையைச் செய்கிற ஒரு முழுமையான மாம்சமாவார். மனித கண்கள் ஒரு வரம்பு மீறாத மாம்ச உடலையும், பரலோக மொழியைப் பேசக்கூடிய, அதிசயமான அடையாளங்களைக் காண்பிக்காத, அதிசயங்களைச் செய்யாத, பெரிய அரங்குகளில் மதத்தைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்தாத ஒரு சாதாரண மனிதரையும் காண்கின்றன. ஜனங்களைப் பொறுத்தவரை, மனுஷரூபமெடுத்த இரண்டாவது மாம்சத்தின் கிரியையானது முதல் கிரியையைப் போலல்லாமல் முற்றிலும் வேறுபட்டதாய் தெரிகிறது, இரண்டுக்கும் பொதுவானது எதுவுமில்லை என்று தோன்றுகிறது, முதல் கிரியையில் எதுவும் இந்த காலத்தில் காண முடியாது. மனுஷரூபமெடுத்த இரண்டாவது மாம்சத்தின் கிரியையானது முதல் கிரியையிலிருந்து வேறுபட்டிருந்தாலும், அவற்றின் ஆதாரம் ஒன்றாக இல்லை என்பதை இது நிரூபிக்கவில்லை. அவற்றின் ஆதாரம் ஒன்றா என்பது மாம்சப்பகுதியால் செய்யப்படும் கிரியையின் தன்மையைப் பொறுத்தது, அவற்றின் வெளிப்புற தோற்றத்தில் அல்ல. அவருடைய கிரியையின் மூன்று கட்டங்களில், தேவன் இரண்டு முறை அவதரித்திருக்கிறார், இரண்டு முறையும் மாம்சமாகிய தேவனுடைய கிரியையானது ஒரு புதிய யுகத்தைத் துவக்குகிறது, ஒரு புதிய கிரியையைத் தொடங்குகிறது; மனுஷ அவதரிப்புகள் ஒன்றையொன்று புகழுரை சூட்டிக்கொள்கின்றன. இரண்டு மாம்சங்களும் உண்மையில் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்று மனித கண்களால் சொல்ல முடியாது. இது மனிதக் கண்ணிற்கும் அல்லது மனித மனதிற்கும் உள்ள திறனுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லாமல் போகிறது. ஆனால் அவற்றின் சாராம்சத்தில், அவை இரண்டும் ஒன்றே, ஏனென்றால் அவற்றின் கிரியை ஒரே ஆவியானவரிடமிருந்து உருவாகிறது. இரண்டு மனுஷரூபமெடுத்த மாம்சங்களும் ஒரே மூலத்திலிருந்து எழுகின்றனவா என்பதை யுகம் மற்றும் அவை பிறந்த இடம், அல்லது இதுபோன்ற பிற காரணிகளால் தீர்மானிக்க முடியாது, ஆனால் அவர்கள் வெளிப்படுத்திய தெய்வீகத்தன்மையின் கிரியைகளால் அறிந்துகொள்ள முடியும். மனுஷரூபமெடுத்த இரண்டாவது மாம்சம் இயேசு செய்த எந்த கிரியையும் செய்வதில்லை, ஏனென்றால் தேவனுடைய கிரியை வழக்கத்திற்கு கட்டுப்படாது, ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பாதையைத் திறக்கிறது. இரண்டாவது மனுஷரூபமெடுத்த மாம்சம் ஜனங்களின் மனதில் முதல் மாம்சத்தின் தோற்றத்தை ஆழமாக்குவதையோ அல்லது திடப்படுத்துவதையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அதை பூர்த்திசெய்து முழுமையாக்குவதையும், தேவனைப் பற்றிய மனிதனின் அறிவை ஆழப்படுத்துவதையும், ஜனங்களின் இதயங்களில் இருக்கும் அனைத்து விதிகளையும் முறிப்பதையும், அவர்களின் இதயங்களில் இருக்கும் தேவனுடைய தவறான உருவங்களை நீக்குவதையும் நோக்கமாக கொண்டிருக்கிறது. தேவனுடைய சொந்த கிரியையின் எந்தவொரு தனிப்பட்ட கட்டமும் மனிதனைப் பற்றிய முழுமையான அறிவை வழங்க முடியாது என்று கூறலாம்; ஒவ்வொன்றும் ஒரு பகுதியை மட்டுமே தருகிறது, முழுமையை அல்ல. தேவன் தமது மனநிலையை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தாலும், மனிதனின் மட்டுப்படுத்தப்பட்ட திறமை காரணமாக, தேவனைப் பற்றிய அவனது அறிவு இன்னும் முழுமையடையாததாக இருக்கிறது. தேவனுடைய மனநிலையை முழுவதுமாக வெளிப்படுத்த மனித மொழியைப் பயன்படுத்துவது சாத்தியமில்லை; மேலும், அவருடைய கிரியையின் ஒரு கட்டம் மட்டுமே எவ்வாறு தேவனை முழுமையாக வெளிப்படுத்த முடியும்? அவர் தமது இயல்பான மனிதத்தன்மையினுடைய மறைவின் கீழ் மாம்சத்தில் கிரியை செய்கிறார், மேலும் ஒருவர் அவருடைய தெய்வீகத்தின் வெளிப்பாடுகளால் அவரை அறிந்திருக்க முடியும், அவருடைய உடலின் புறத்தோற்றத்தால் அல்ல. தேவன் தமது பல்வேறு வேலையின் மூலம் மனிதனை அறிந்துகொள்ள அனுமதிக்க மாம்சத்திற்குள் வருகிறார், அவருடைய கிரியையின் இரண்டு கட்டங்களும் ஒரே மாதிரியாக இல்லை. இந்த வழியில் மட்டுமே மனிதன் மாம்சத்தில் தேவனுடைய கிரியையைப் பற்றிய முழு அறிவைக் கொண்டிருக்க முடியும், ஒரே ஒரு அம்சத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை. மனுஷரூபமெடுத்த இரண்டு மாம்சங்களின் கிரியையும் வேறுபட்டிருந்தாலும், மாம்சப் பகுதிகளின் சாராம்சமும், அவற்றின் கிரியையின் மூலமும் ஒரே மாதிரியானவை; கிரியையின் இரண்டு வெவ்வேறு கட்டங்களைச் செய்வதற்கு அவை இருக்கின்றன, இரண்டு வெவ்வேறு யுகங்களில் எழுகின்றன. எதுவாக இருந்தாலும், மனுஷரூபமெடுத்த தேவனுடைய மாம்சங்கள் ஒரே சாராம்சத்தையும் ஒரே தோற்றத்தையும் பகிர்ந்து கொள்கின்றன—இது யாராலும் மறுக்க முடியாத ஒரு சத்தியமாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து

218. தேவன் தமது முதல் மனுஷரூபமெடுத்தலில் மாம்சமாகியதன் கிரியையை முடிக்கவில்லை; மாம்சத்தில் தேவன் செய்ய வேண்டிய அவசியமான கிரியையின் முதல் கட்டத்தை மட்டுமே அவர் செய்து முடித்தார். ஆகவே, மாம்சமாகியதன் கிரியையை முடிப்பதற்காக, தேவன் மீண்டும் மாம்சத்திற்கு திரும்பியுள்ளார், மாம்சத்தின் இயல்பான தன்மையிலும் யதார்த்தத்திலும் வசித்து வருகிறார், அதாவது தேவனுடைய வார்த்தையை முற்றிலும் இயல்பான மற்றும் சாதாரண மாம்சத்தில் வெளிப்படுத்துகிறார், இதன் மூலம் அவர் மாம்சத்தில் செய்து முடிக்காமல் விட்டுப்போன கிரியையை முடிக்கிறார். முக்கியமாக, இரண்டாவது மனுஷரூபமெடுத்த மாம்சமானது முதல் மாம்சத்தைப் போன்றதுதான், ஆனால் அது இன்னும் உண்மையானது மற்றும் முதலில் இருந்ததை விட சாதாரணமானது. இதன் விளைவாக, இரண்டாவது மனுஷரூபமெடுத்த மாம்சமானது கடந்து செல்லும் துன்பமானது முதல் மாம்சம் கடந்து சென்ற துன்பத்தை விட மிகவும் அதிகமாக உள்ளது, ஆனால் இந்த துன்பம் மாம்சத்தில் அவர் செய்த ஊழியத்தின் விளைவாகும், இது சீர்கெட்ட மனிதனின் துன்பத்தைப் போலல்லாததாகும். இது அவருடைய மாம்சத்தின் இயல்பு மற்றும் யதார்த்தத்திலிருந்து உருவாகிறது. அவர் தம்முடைய ஊழியத்தை முற்றிலும் இயல்பான மற்றும் உண்மையான மாம்சத்தில் செய்வதால், மாம்சமானது பெரும் கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும். இந்த மாம்சம் எவ்வளவு அதிகமாக சாதாரணமானதாகவும் மற்றும் உண்மையானதாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அவருடைய ஊழியத்தின் செயல்பாட்டில் அவர் அதிகம் வேதனையை அடைவார். தேவனுடைய கிரியையானது மிகவும் பொதுவான மாம்சத்தில் வெளிப்படுத்தப்படுகிறது, இது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. ஏனென்றால், அவருடைய மாம்சம் இயல்பானது, மேலும் மனிதனை இரட்சிக்கும் கிரியையைச் செய்ய வேண்டும், அவர் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட மாம்சத்தை விட மிகப் பெரிய அளவில் பாடுபடுகிறார்—மேலும் இந்த பாடுகள் யாவும் அவருடைய மாம்சத்தின் யதார்த்தம் மற்றும் இயல்பான தன்மையிலிருந்து உருவாகின்றன. இரண்டு மனுஷரூபமான மாம்சங்களும் தங்கள் ஊழியங்களைச் செய்யும்போது ஏற்பட்ட பாடுகளிலிருந்து, மாம்சமாகியதன் சாராம்சத்தை ஒருவர் கண்டுகொள்ளலாம். மாம்சம் எந்த அளவிற்கு சாதாரணமானதாக இருக்கிறதோ, கிரியையைச் செய்யும்போது அவர் அந்த அளவிற்கு அதிகமாகக் கஷ்டங்களைச் சகிக்க வேண்டும்; கிரியையை மேற்கொள்ளும் மாம்சமானது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு ஜனங்களின் கருத்துக்கள் மற்றும் அதிக ஆபத்துகள் அவருக்கு ஏற்படக்கூடும். இன்னும், மாம்சமானது எந்த அளவிற்கு உண்மையானதோ, மேலும் சாதாரண மனிதனின் தேவைகளையும் முழுமையான உணர்வையும் மாம்சம் எந்த அளவிற்கு கொண்டிருக்கிறதோ, மாம்சத்தில் தேவனுடைய கிரியையை அவர் மேற்கொள்வதில் அவ்வளவு அளவிற்கு அதிக திறன் உள்ளவராக இருக்கிறார். இயேசுவின் மாம்சந்தான் சிலுவையில் அறையப்பட்டது, அவருடைய மாம்சத்தை அவர் பாவநிவாரணப்பலியாக ஒப்புக்கொடுத்தார்; சாதாரண மனிதத்தன்மையுடன் கூடிய ஒரு மாம்சத்தின் மூலம்தான் அவர் சாத்தானைத் தோற்கடித்து மனிதனை முழுமையாக சிலுவையிலிருந்து இரட்சித்தார். தேவன் தமது இரண்டாவது மனுஷரூபமெடுத்தலில் ஜெயங்கொள்ளுதலின் கிரியையைச் செய்து சாத்தானைத் தோற்கடிப்பது ஒரு முழுமையான மாம்சமாக இருக்கிறது. முற்றிலும் இயல்பான மற்றும் உண்மையான ஒரு மாம்சம் மட்டுமே ஜெயங்கொள்ளுதலின் கிரியையை முழுவதுமாக செய்ய முடியும் மற்றும் வல்லமையான சாட்சியத்தை அளிக்க முடியும். அதாவது, மனிதனை இரட்சிப்பது மாம்சத்தில் தேவனுடைய யதார்த்தம் மற்றும் இயல்பான தன்மை மூலம் திறம்படச் செய்யப்படுகிறது, மாறாக இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள் மற்றும் வெளிப்பாடுகள் மூலம் அல்ல. இந்த மாம்சமாகிய தேவனுடைய ஊழியம் என்னவென்றால் பேசுவதும், அதன் மூலம் மனிதனை ஆட்கொண்டு பரிபூரணமாக்குவதும் ஆகும்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாம்சத்தில் உணரப்பட்ட ஆவியானவரின் கிரியை, அதாவது மாம்சத்தின் கடமை என்னவென்றால் பேசுவதும் அதன் மூலம் ஜெயிங்கொள்வதும், வெளிப்படுத்துவதும், பரிபூரணமாக்குவதும், மனிதனை முற்றிலுமாக அகற்றுவதும் ஆகும். எனவே, ஜெயங்கொள்ளுதலின் கிரியையில் தான் மாம்சத்தில் தேவனுடைய கிரியை முழுமையாக நிறைவேற்றப்படும். மீட்பின் ஆரம்ப கிரியையானது மாம்சமாகியதன் கிரியையின் ஆரம்பம் மட்டுமே; ஜெயங்கொள்ளுதலின் கிரியையைச் செய்யும் மாம்சமானது மாம்சமாகியதன் முழு கிரியையையும் நிறைவு செய்யும். பாலினத்தில், ஒருவர் ஆண் மற்றவர் பெண், எனவே தேவன் மாம்சமாகியதன் முக்கியத்துவத்தை பூர்த்திசெய்து, தேவனைப் பற்றிய மனிதனின் கருத்துக்களை அகற்றுவார்: தேவன் ஆணும் பெண்ணுமாக மாறமுடியும், முக்கியமாக, மாம்சத்தில் மனுஷரூபமாக வந்த தேவன் பாலினமற்றவர். அவர் ஆண் மற்றும் பெண் இருவரையும் உருவாக்கினார், அவரைப் பொறுத்தவரை பாலினத்தில் பிரிவு இல்லை. கிரியையின் இந்தக் கட்டத்தில், தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்வதில்லை, இதனால் கிரியை அதன் முடிவுகளை வார்த்தைகளின் மூலம் அடையும். இதற்குக் காரணம், இந்த காலத்தில் மாம்சமாகிய தேவனுடைய கிரியை என்னவென்றால் பிணியாளிகளைக் குணப்படுத்துவதும் பிசாசுகளைத் துரத்துவதும் அல்ல, ஆனால் பேசுவதன் மூலம் மனிதனை ஆட்கொள்வதே ஆகும், அதாவது தேவனுடைய இந்த மனுஷரூபமெடுத்த மாம்சத்தால் சொந்த பூர்வீக திறன் என்று கூறுவது வார்த்தைகளை பேசுவதற்கும் மனிதனை ஆட்கொள்வதற்குமே ஆகும், பிணியாளிகளைக் குணப்படுத்துவதற்கும் பிசாசுகளைத் துரத்துவதற்கும் அல்ல. சாதாரண மனிதத்தன்மையில் அவர் செய்யும் கிரியை அற்புதங்களைச் செய்வதல்ல, பிணியாளிகளைக் குணப்படுத்துவதற்கும், பிசாசுகளைத் துரத்துவதற்கும் அல்ல, ஆனால் பேசுவதற்காகும், எனவே இரண்டாவது மனுஷரூபமெடுத்த மாம்சமானது முதல் மாம்சத்தை விட மிகவும் சாதாரணமானதாக ஜனங்களுக்குத் தோன்றுகிறது. தேவன் மாம்சமாகியது பொய் அல்ல என்பதை ஜனங்கள் காண்கிறார்கள்; ஆனால் இந்த மாம்சமாகிய தேவன் மாம்சமாகிய இயேசுவிலிருந்து வேறுபட்டவர், அவர்கள் இருவரும் மாம்சமாகிய தேவனாக இருந்தாலும், அவர்கள் இருவரும் முற்றிலும் ஒன்றல்ல. இயேசு இயல்பான மனிதத்தன்மையையும் சாதாரண மனிதத்தன்மையையும் கொண்டிருந்தார், ஆனால் அவரைப் பல அடையாளங்களும் அதிசயங்களும் தொடர்ந்திருந்தன. இந்த மாம்சமாகிய தேவனில், மனித கண்கள் எந்த அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பதில்லை, பிணியாளிகளை குணப்படுத்துவதோ, பிசாசுகளைத் துரத்துவதோ, கடல்மேல் நடப்பதோ, நாற்பது நாட்கள் உபவாசம் இருப்பதோ இல்லை…. இயேசு செய்த அதே கிரியையை அவர் செய்வதில்லை, ஏனெனில், முக்கியமாக, அவருடைய மாம்சம் இயேசுவிலிருந்து வேறுபட்டது என்பதற்காக அல்ல, ஆனால் பிணியாளிகளைக் குணப்படுத்தி பிசாசுகளைத் துரத்துவது அவருடைய ஊழியமல்ல. அவர் தமது சொந்தக் கிரியையை பாழ்படுத்துவதில்லை, மேலும் தமது சொந்த கிரியைக்கு அவரே இடையூறு செய்வதில்லை. அவர் தமது உண்மையான வார்த்தைகளின் மூலம் மனிதனை ஆட்கொள்வதால், அவர் அவனை அற்புதங்களால் அடக்க வேண்டிய அவசியமில்லை, எனவே இந்தக் கட்டம் மாம்சமாகியதன் கிரியையை முடிப்பதே ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து

219. தேவனால் செய்யப்பட்ட கிரியையின் ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரிய நடைமுறை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அக்காலத்தில், இயேசு வந்தபோது, அவர் ஆணாக இருந்தார், மேலும் தேவன் இம்முறை வரும்போது, அவர் பெண்ணாக இருக்கிறார். இதிலிருந்து, தேவன் தமது கிரியையின் பொருட்டு ஆண் பெண் இருபலரையும் படைத்தார் என்பதை நீ பார்க்கலாம், மேலும் அவரிடத்தில் பாலின வேறுபாடு எதுவும் இல்லை. அவருடைய ஆவி வரும்போது, அவர் விரும்பும் எந்த மாம்சத்திலும் அவரால் தோன்ற முடியும், மற்றும் அந்த மாம்சம் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்; ஆணோ அல்லது பெண்ணோ, அது அவரது அவதார மாம்சமாக இருக்கும் வரை அதனால் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியும். இயேசு வந்த போது அவர் ஒரு பெண்ணாகத் தோன்றியிருந்தால், அதாவது, ஓர் ஆண் குழந்தையாக இல்லாமல் ஒரு பெண் குழந்தை பரிசுத்த ஆவியினால் உற்பத்தியாகியிருந்தால், கிரியையின் அந்தக் கட்டம் அதே போன்றே நிறைவேறி இருக்கும். நிகழ்ந்தது அதுவாக இருந்திருந்தால், கிரியையின் தற்போதைய கட்டம் ஓர் ஆணால் நிறைவேற்றப்பட வேண்டியதாயிருந்திருக்கும், ஆனால் அதே போன்றே கிரியை நிறைவேற்றப்படும். இரு கட்டத்திலும் செய்யப்பட்ட கிரியை சமமான முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன; இருகட்ட கிரியைகளும் ஒன்றுக்கொன்று திருப்பி செய்யப்படவில்லை, அல்லது ஒன்றோடொன்று முரண்படவும் இல்லை. அக்காலத்தில், இயேசு தம் கிரியையை செய்தபோது ஒரே பேறான குமாரன் என்று அழைக்கப்பட்டார் மேலும் “குமாரன்” என்பது ஆண்பாலை குறிக்கிறது. தற்போதைய நடப்புக் கட்டத்தில் ஒரே பேறான குமாரன் ஏன் குறிப்பிடப்படவில்லை? ஏனெனில் கிரியையின் தேவைகள் இயேசுவின் பாலினத்தில் இருந்து ஒரு மாற்றத்தின் தேவையை உருவாக்கியுள்ளது. தேவனை பொறுத்தவரையில் பாலின வேறுபாடு எதுவும் இல்லை. அவர் தாம் விரும்பும் படி தமது கிரியையை நடப்பிக்கிறார், மேலும் அவர் தமது கிரியையை செய்யும் போது எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுவதில்லை, ஆனால் குறிப்பாக சுதந்திரமானவராக இருக்கிறார். ஆனால் கிரியையின் ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரிய நடைமுறை முக்கியத்துவத்தை கொண்டதாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன” என்பதிலிருந்து

221. “வார்த்தை மாம்சமாக மாறுகிறது” என்ற உண்மையை நிறைவேற்றுவதற்காக தேவன் முதன்மையாக பூமிக்கு வந்துள்ளார். அதாவது, அவருடைய வார்த்தைகள் மாம்சத்திலிருந்து வெளிவரும்படி அவர் வந்திருக்கிறார் (பழைய ஏற்பாட்டில் மோசேயின் காலத்தைப் போல அல்ல, தேவனுடைய சத்தம் வானத்திலிருந்து நேரடியாக வெளியிடப்படாது). அதன்பிறகு, அவருடைய வார்த்தைகள் அனைத்தும் ஆயிர வருட அரசாட்சியின் யுகத்தில் நிறைவேறும். அவை மனிதனுடைய கண்களுக்கு முன்பாகத் தெரியும் உண்மைகளாக மாறும். ஜனங்கள் தங்கள் கண்களைப் பயன்படுத்தி சிறிதளவும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அதனைப் பார்ப்பார்கள். இது தேவனுடைய அவதாரத்தின் மிக உயர்ந்த அர்த்தமாகும். அதாவது, ஆவியின் கிரியை மாம்சத்தின் மூலமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் செய்யப்படுகிறது. இதுதான் “வார்த்தை மாம்சமாக மாறும்” மற்றும் “மாம்சத்தில் வார்த்தையின் தோற்றம்” என்பதன் உண்மையான அர்த்தமாகும். தேவனால் மட்டுமே ஆவியின் சித்தத்தை பேச முடியும். மாம்சத்தில் உள்ள தேவன் மட்டுமே ஆவியின் சார்பாக பேச முடியும். தேவனுடைய வார்த்தைகள் தேவனில் அவதரித்தன. மற்ற அனைவருமே அவற்றால் வழிநடத்தப்படுகிறார்கள். யாருக்கும் விலக்கு இல்லை. அவை அனைத்தும் இந்த எல்லைக்குள் உள்ளன. இந்த வார்த்தைகளிலிருந்து மட்டுமே ஜனங்கள் விழிப்புணர்வு பெற முடியும். இவ்வாறு விழிப்புணர்வு பெறாதவர்கள் பரலோகத்திலிருந்து வார்த்தைகளைப் பெற முடியும் என்று நினைத்தால் அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள் என்பதாகும். தேவனுடைய மாம்ச அவதாரத்தில் நிரூபிக்கப்பட்ட அதிகாரம் இது தான், அனைவரையும் முழு நம்பிக்கையுடன் விசுவாசிக்க வைக்கிறது. மிகவும் மதிப்பிற்குரிய வல்லுநர்கள் மற்றும் மத மேய்ப்பர்கள் கூட இந்த வார்த்தைகளை பேச முடியாது. அவர்கள் அனைவரும் அவற்றின் கீழ் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் மற்றும் அவர்கள் யாரும் மற்றொன்றை தொடங்க முடியாது. தேவன் பிரபஞ்சத்தை ஜெயிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துவார். அவருடைய மாம்ச ரூபத்தினால் அல்ல. ஆனால், தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் முழு பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜனங்களையும் ஜெயிக்க அவர் மாம்சமாக மாறுவார். இந்த வார்த்தை மாம்சமாக மாறும். இது மாம்சத்திலுள்ள வார்த்தையின் தோற்றம் மட்டுமே. ஒருவேளை, மனிதர்களுக்கு, தேவன் அதிக கிரியை செய்யவில்லை என்பது போலத் தோன்றுகிறது. ஆனால் தேவன் அவருடைய வார்த்தைகளை உச்சரிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் முழுமையாக அவரை நம்புவார்கள், அவருக்கு பயப்படுவார்கள். உண்மைகள் இல்லாமல், ஜனங்கள் கூச்சலிடுகிறார்கள், கத்துகிறார்கள்; தேவனுடைய வார்த்தைகளால் அவர்கள் அமைதியாகிறார்கள். தேவன் நிச்சயமாக இந்த உண்மையை நிறைவேற்றுவார். ஏனென்றால் இது, நீண்ட காலமாக தேவனால் நிறுவப்பட்ட திட்டம் ஆகும்: பூமியிலுள்ள வார்த்தையுடைய வருகையின் உண்மையை நிறைவேற்றுவதாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது” என்பதிலிருந்து

222. மாம்சமாகிய தேவன், தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்யும்போது அவரைப் பின்தொடரும் ஜனங்களில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே அவர் தம்மை வெளிப்படுத்துகிறார், சகல ஜீவன்களுக்கும் தம்மை வெளிப்படுத்துவதில்லை. அவர் தமது கிரியையின் ஒரு கட்டத்தை நிறைவு செய்வதற்காக மட்டுமே மாம்சமாக மாறினார், மனுஷனிடம் தம்முடைய உருவத்தைக் காண்பிப்பதற்காக மாறவில்லை. இருப்பினும், அவருடைய கிரியையை அவரே செய்ய வேண்டும், ஆகவே அவர் மாம்சத்தில் அவ்வாறு செய்வது அவசியமாகும். இந்தக் கிரியை நிறைவடைந்ததும், அவர் மனுஷ உலகத்திலிருந்துப் புறப்பட்டுச் செல்வார்; வரவிருக்கும் கிரியையின் வழியில் குறுக்கே நின்றிடுவோம் என்ற பயத்தால் அவர் மனுஷரிடையே நீண்ட காலம் தங்கியிருக்க மாட்டார். அவருடைய நீதியுள்ள மனநிலையையும், அவருடைய எல்லா கிரியைகளையும் மட்டுமே பெருந்திரளான ஜனங்களுக்கு அவர் வெளிப்படுத்துகிறார்; அவர் இரண்டு முறை மாம்சமாக வந்தபோது இருந்த உருவங்களை வெளிப்படுத்துவதில்லை, ஏனென்றால் தேவனின் உருவத்தை அவருடைய மனநிலையால் மட்டுமே காட்ட முடியும், அதை அவருடைய மாம்சமாகிய உருவத்தால் மாற்ற முடியாது. அவருடைய மாம்சத்தின் உருவம், அவர் மாம்சத்தில் செயல்படுவதால் அவரைப் பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜங்கங்களுக்கு மட்டுமே காட்டப்படுகிறது. இதனால்தான் இப்போது மேற்கொள்ளப்படும் கிரியைகள் இரகசியமாகச் செய்யப்படுகின்றன. அதேபோல், இயேசு தம்முடைய கிரியையைச் செய்தபோது அவர் யூதர்களுக்கு மட்டுமே தம்மை காட்டிக் கொண்டார், வேறு எந்த நாட்டிற்கும் பகிரங்கமாக தம்மைக் காட்டவில்லை. இவ்வாறு, அவர் தமது கிரியையை முடித்தவுடன், இங்கேயே தங்கிவிடாமல் உடனடியாக மனுஷ உலகத்திலிருந்துப் புறப்பட்டுச் சென்றார்; அதன் பின்னர், மனுஷனுக்குக் காட்டிய அவருடைய மனுஷ உருவம் நேரடியாக கிரியை செய்யவில்லை, மாறாக, பரிசுத்த ஆவியானவரே நேரடியாக கிரியை செய்தார். மாம்சமாகிய தேவனின் கிரியை முற்றிலும் நிறைவடைந்தவுடன், அவர் மரணத்திற்குரிய உலகத்திலிருந்து புறப்பட்டுச் செல்வார், மேலும் அவர் மாம்சத்தில் இருந்தபோது அவர் செய்ததைப் போன்ற எந்த கிரியையையும் மீண்டும் ஒருபோதும் செய்ய மாட்டார். இதற்குப் பிறகு, கிரியைகள் அனைத்தும் நேரடியாகப் பரிசுத்த ஆவியானவரால் செய்யப்படுகின்றன. இந்தக் காலகட்டத்தில், மனுஷனால் தேவனின் மாம்ச சரீரத்தின் உருவத்தைக் காண முடியாது; அவர் மனுஷனுக்குத் தம்மைக் காட்டிக் கொள்ளாமல், ஆனால் என்றென்றும் மறைந்திருக்கிறார். மாம்சமாகிய தேவனின் கிரியைக்கான நேரம் குறைவாகவே உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட யுகம், காலம், தேசம் மற்றும் குறிப்பிட்ட நபர்களிடையே மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் கிரியை தேவன் மாம்சமாகியக் காலக் கட்டத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மேலும் இது குறிப்பிட்ட யுகத்தை மட்டுமே குறிக்கிறது; இது ஒரு குறிப்பிட்ட யுகத்திற்கான தேவ ஆவியானவரின் கிரியையை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அவருடைய முழு கிரியையையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ஆகையால், மாம்சமாகிய தேவனின் உருவம் சகல ஜனங்களுக்கும் காட்டப்படாது. அவர் இரண்டு முறை மாம்சத்தில் வந்தபோது இருந்த அவருடைய உருவத்தை விட, தேவனின் நீதியும், அவருடைய மனநிலையுமே முழுவதுமாக பெருந்திரளான ஜனங்களுக்குக் காட்டப்படுகிறது. இது மனுஷனுக்குக் காட்டப்படும் ஒரே ஒரு உருவமோ, இரண்டு உருவங்கள் இணைக்கப்பட்ட ஒரு உருவமோ இல்லை. ஆகையால், மாம்சமாகிய தேவனின் மாம்சம், அவர் செய்ய வேண்டிய கிரியையை முடித்தவுடன் பூமியை விட்டுப் புறப்பட்டுச் செல்ல வேண்டியது அவசியமானதாகும், ஏனென்றால் அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய மட்டுமே அவர் வருகிறார், அவருடைய உருவத்தை ஜனங்களுக்கு காட்ட வரவில்லை. மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவம் தேவன் இரண்டு முறை மாம்சமாகியபோது நிறைவு செய்யப்பட்டிருந்தாலும், அவரை ஒருபோதும் பார்த்திராத எந்தவொரு தேசத்திற்கும் அவர் வெளிப்படையாக தம்மை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார். இயேசு மீண்டும் ஒருபோதும் யூதர்களுக்குத் தம்மை நீதியின் சூரியனாகக் காட்டிக்கொள்ள மாட்டார், ஒலிவ மலை மீது ஏறி சகல ஜனங்களுக்கும் தோன்றமாட்டார்; இயேசு யூதேயாவில் இருந்தபோது இருந்த தோற்றத்தின் உருவப்படத்தை தான் சகல யூதர்களும் கண்டிருக்கிறார்கள். ஏனென்றால், இயேசு மாம்சமாகிய காலத்தில் அவர் செய்த கிரியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முடிந்தது; அவர் ஒரு யூதரின் சாயலில் யூதேயாவுக்குத் திரும்ப மாட்டார், எந்தவொரு புறஜாதி தேசங்களுக்கும் ஒரு யூதரின் உருவத்தில் தன்னைக் காட்டிக் கொள்ள மாட்டார், ஏனென்றால் மாம்சமாகிய இயேசுவின் உருவம் என்பது வெறும் யூதரின் உருவம் தான், யோவான் கண்ட மனுஷகுமாரனின் உருவம் அல்ல. தாம் மீண்டும் வருவேன் என்று இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தாலும், புறஜாதி தேசங்களில் உள்ள அனைவருக்கும் வெறுமனே தம்மை யூதரின் சாயலில் காட்டமாட்டார். மாம்சமாகிய தேவனின் கிரியை ஒரு யுகத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கிரியை சில ஆண்டுகளுக்கென வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் தேவ ஆவியின் எல்லா கிரியைகளையும் அவரால் முடிக்க முடியாது. அதேபோல், யூதராக இயேசுவின் உருவம், யூதேயாவில் அவர் கிரியை செய்த தேவனின் உருவத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும், மேலும் அவரால் சிலுவையில் அறையப்படும் கிரியையை மட்டுமே செய்ய முடியும். இயேசு மாம்சத்தில் இருந்தக் காலகட்டத்தில், யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அல்லது மனுஷகுலத்தை அழிக்கும் கிரியையை அவரால் செய்ய முடியவில்லை. ஆகையால், அவர் சிலுவையில் அறையப்பட்டு, அவருடைய கிரியையை முடித்தபின், அவர் உயர்ந்த இடத்தின் மீது ஏறி, மனுஷனிடமிருந்து தம்மை எப்போதும் மறைத்துக்கொண்டார். அப்போதிருந்து, புறஜாதி தேசங்களைச் சேர்ந்த உண்மையுள்ள விசுவாசிகள் இயேசுவாகிய கர்த்தரின் வெளிப்பாட்டைக் காண முடியவில்லை, ஆனால் சுவரில் ஒட்டப்பட்டிருந்த உருவப்படத்தை மட்டுமே அவர்கள் கண்டனர். இந்த உருவப்படம் மனுஷனால் வரையப்பட்ட ஒன்றாகும், ஆனால் தேவன் மனுஷனுக்குக் காட்டிய உருவம் அல்ல. தேவன் இரண்டு முறை மாம்சத்தில் வந்தபோது இருந்த உருவத்திலேயே பெருந்திரளான ஜனங்களுக்கு தன்னை வெளிப்படையாகக் காட்டவில்லை. மனுஷரிடையே அவர் செய்யும் கிரியை, அவருடைய மனநிலையைப் புரிந்துகொள்ள அவர்களை அனுமதிக்கிறது. இவை அனைத்தும் வெவ்வேறு யுகங்களின் கிரியைகள் மூலம் மனுஷனுக்குக் காட்டப்படுகின்றன; இயேசுவின் வெளிப்பாட்டின் மூலம் அல்லாமல், அவர் அறிந்த மனநிலை மற்றும் அவர் செய்த கிரியையின் மூலமே அது நிறைவேற்றப்படுகிறது. அதாவது, தேவனின் உருவம் மனுஷனுக்குத் தெரியவருவது மாம்சமாவதன் மூலம் அல்ல, மாறாக உருவமும் வடிவமும் கொண்ட மாம்சமாகிய தேவனால் மேற்கொள்ளப்படும் கிரியையின் மூலமாகவே மனுஷனுக்குத் தெரியவருகிறது; அவருடைய கிரியையின் மூலம், அவருடைய உருவம் காட்டப்பட்டு, அவருடைய மனநிலை அறியப்படுகிறது. அவர் மாம்சத்தில் செய்ய விரும்பும் கிரியையின் முக்கியத்துவம் இதுதான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (2)” என்பதிலிருந்து

223. தேவன் பிரபஞ்சம் மற்றும் அதற்கும் மேலே இருக்கும் பிரபஞ்சத்தில் மிகப் பெரியவராக இருக்கிறார், அவரால் ஒரு மாம்சத்தின் உருவத்தைப் பயன்படுத்தி தம்மை முழுமையாக விளக்கிக் காட்ட முடியுமா? தேவன் தமது கிரியையின் ஒரு கட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்த மாம்சத்தை அணிந்துகொள்கிறார். மாம்சத்தின் இந்த உருவத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, இது கடந்து செல்லும் யுகங்களுடனோ அல்லது தேவனின் மனநிலையுடனோ எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை. இயேசு தம்முடைய உருவத்தை நிலைத்திருக்க ஏன் அனுமதிக்கவில்லை? தம்முடைய உருவத்தைப் பிற்காலத் தலைமுறையினர் பார்க்கும் வகையில் அவர் ஏன் அதை வரைய அனுமதிக்கவில்லை? அவருடைய உருவம் தேவனின் சாயல் என்பதை ஜனங்களை அவர் ஏன் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை? மனுஷனின் உருவம் தேவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருந்தாலும், மனுஷனின் தோற்றம் தேவனின் உயர்ந்த சாயலைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? தேவன் மாம்சமாகும்போது, அவர் பரலோகத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட மாம்சத்தில் இறங்குகிறார். அவருடைய ஆவிதான் ஒரு மாம்சத்தில் இறங்குகிறது, அதன் மூலம் அவர் ஆவியானவரின் கிரியையைச் செய்கிறார். மாம்சத்தில் வெளிப்படுவது ஆவியானவர் தான், மேலும் மாம்சத்தில் அவருடைய கிரியையைச் செய்வதும் ஆவியானவர் தான். மாம்சத்தில் செய்யப்படும் கிரியையானது ஆவியானவரை முழுமையாக பிரதிபலிக்கிறது, மாம்சமானது கிரியையின் பொருட்டு மட்டுமே உள்ளது, அதனால் மாம்சத்தின் உருவம் தேவனின் உண்மையான உருவத்திற்கு மாற்றாக இருக்கிறது என்று அர்த்தமல்ல; இது மாம்சமாகிய தேவனின் நோக்கமோ அல்லது முக்கியத்துவமோ அல்ல. அவர் மாம்சமாகிய காரணம், ஆவியானவர் அவருடைய கிரியைக்கு ஏற்ற ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பார் என்பதற்காகத் தான். மாம்சமாவது தான் அவருடைய கிரியையை அடையச் சிறந்தது, இதன்மூலம் ஜனங்கள் அவருடைய கிரியைகளைக் காணவும், அவருடைய மனநிலையைப் புரிந்துகொள்ளவும், அவருடைய வார்த்தைகளைக் கேட்கவும், அவருடைய கிரியையின் அதிசயத்தை அறிந்து கொள்ளவும் முடியும். அவருடைய நாமம் அவருடைய மனநிலையைப் பிரதிபலிக்கிறது, அவருடைய கிரியை அவருடைய அடையாளத்தைப் பிரதிபலிக்கிறது, ஆனால் மாம்சத்தில் அவரது தோற்றம் அவருடைய உருவத்தைப் பிரதிபலிக்கிறது என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை; அது வெறுமனே மனுஷனின் கருத்து மட்டுமே. எனவே, தேவன் மாம்சமாகியதன் முக்கியமான அம்சங்கள் அவருடைய நாமம், அவருடைய கிரியை, அவருடைய மனநிலை மற்றும் அவரது பாலினம் ஆகியவை மட்டுமே. இந்த யுகத்தில் அவருடைய ஆளுகையைப் பிரதிநிதித்துவப்படுத்த இவை பயன்படுத்தப்படுகின்றன. மாம்சத்தில் அவரது தோற்றம், அவருடைய ஆளுகையுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை, அந்த நேரத்தில் அவருடைய கிரியையின் பொருட்டு மட்டுமே அந்த மாம்சம் இருக்கிறது. ஆயினும், மாம்சமாகிய தேவன் குறிப்பிட்ட தோற்றம் கொண்டிருப்பது சாத்தியமில்லை, எனவே அவருடைய தோற்றத்தை தீர்மானிக்கப் பொருத்தமானக் குடும்பத்தை அவர் தேர்வு செய்கிறார். தேவனின் தோற்றம் பிரதிநிதித்துவ முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தால், அவரைப் போன்ற முக அம்சங்களைக் கொண்ட அனைவருமே தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருப்பர். அது ஒரு மிகப் பெரிய தவறு அல்லவா? மனுஷன் இயேசுவை வணங்கக்கூடும் என்பதற்காகவே அவரது உருவப்படம் மனுஷனால் வரையப்பட்டது. அந்த நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் எந்தச் சிறப்பு அறிவுறுத்தல்களையும் கொடுக்கவில்லை, எனவே மனுஷன் அந்தக் கற்பனை உருவப்படத்தை இன்று வரை பயன்படுத்திவருகிறான். உண்மையில், தேவனின் உண்மையான நோக்கத்தின்படி, மனுஷன் இதைச் செய்திருக்கக்கூடாது. மனுஷனின் வைராக்கியத்தால் மட்டுமே இயேசுவின் உருவப்படம் இந்த நாள் வரை நிலைத்திருக்கிறது. தேவன் ஆவியானவர், இறுதி சோதனையில் தேவனின் உருவம் என்னவாக இருக்கும் என்பதைப் பொதுமைப்படுத்தும் திறன் மனுஷனுக்கு ஒருபோதும் இருக்க முடியாது. அவரது உருவத்தை அவருடைய மனநிலையால் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

224. தேவன் மாம்சத்தில் வருவது மனுஷனை தமது மாம்சத்தை அறிய அனுமதிக்கும் நோக்கத்திற்கோ அல்லது தேவனின் மாம்சத்திற்கும் மனுஷனின் மாம்சத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை வேறுபடுத்திப் பார்க்க மனுஷனை அனுமதிக்கும் நோக்கத்திற்கோ அல்ல; மனுஷனின் பகுத்தறியும் சக்திகளைப் பயிற்றுவிக்கவும் தேவன் மாம்சமாக மாறவில்லை, மேலும் மாம்சமாகிய தேவனை வணங்க மனுஷனை அனுமதித்து அதன் மூலம் பெரும் மகிமை பெறும் நோக்கத்தோடும் அவர் அவ்வாறு செய்யவில்லை. இந்த விஷயங்கள் எதுவும் தேவன் மாம்சமாவதன் உண்மையான நோக்கம் அல்ல. மனுஷனைக் கண்டிக்கவோ, வேண்டுமென்றே மனுஷனை வெளிப்படுத்தவோ, அவனுக்கு விஷயங்களை கடினமாக்கவோ தேவன் மாம்சமாகவில்லை. இந்த விஷயங்கள் எதுவும் தேவனின் உண்மையான நோக்கம் அல்ல. ஒவ்வொரு முறையும் மாம்சத்தில் வரும்போது, அது தவிர்க்க முடியாத ஒரு கிரியையாக இருக்கிறது. மனுஷன் கற்பனை செய்யும் காரணங்களுக்காக அல்ல, ஆனால் அவருடைய பெரிய கிரியைக்காகவும், அவருடைய பெரிய ஆளுகைக்காகவும் மட்டும் தான் அவர் செயல்படுகிறார். தமது கிரியைக்கு தேவை என்பதாலும், அவசியம் என்பதாலும் தான் தேவன் பூமிக்கு வருகிறார். அவர் வெறுமனே சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பூமிக்கு வருவதில்லை, ஆனால் அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே வருகிறார். வேறு எதற்காக அவர் இந்த கிரியையைச் செய்ய இவ்வளவு பெரிய சுமையை ஏற்றுக்கொண்டு இவ்வளவு பெரிய ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டும்? தேவன் அவர் மாம்சமாக வேண்டியபோது தான் மாம்சமாகிறார், எப்போதும் தனித்துவமான முக்கியத்துவத்துடன் மாம்சமாகிறார். ஜனங்கள் அவரைப் பார்க்கவும், அவர்களின் எல்லைகளை விரிவுபடுத்தவும் அனுமதிப்பதற்காக மட்டுமே தேவன் மாம்சமாக வருவதாக இருந்திருந்தால், அவர் நிச்சயமாக ஜனங்களிடையே ஒருபோதும் இவ்வளவு எளிதாக வந்திருக்கமாட்டார். அவர் தமது ஆளுகைக்காகவும், அவருடைய பெரிய கிரியைக்காகவும், அதன் மூலம் அவர் மனுஷகுலத்தை அதிகம் ஆதாயம் செய்வதற்காகவும் பூமிக்கு வருகிறார். அவர் யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வருகிறார், அவர் சாத்தானைத் தோற்கடிக்க வருகிறார், சாத்தானைத் தோற்கடிப்பதற்காக அவர் மாம்சத்தை அணிந்துகொள்கிறார். அதற்கும் மேலாக, முழு மனுஷகுலத்தையும் அவர்களின் ஜீவிதங்களை வழிநடத்துவதற்காக அவர் வருகிறார். இவை அனைத்தும் அவருடைய ஆளுகையையும், முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் பற்றியது. மனுஷன் தமது மாம்சத்தை அறிந்து கொள்ளவும், ஜனங்களின் கண்களைத் திறக்கவுமே தேவன் மாம்சத்தில் வந்திருந்தால், அவர் ஏன் ஒவ்வொரு தேசத்திற்கும் பயணிக்கவில்லை? இது மிகவும் எளிதான விஷயமாக இருந்திருக்காதா? ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை, அதற்குப் பதிலாக அவர் செய்ய வேண்டிய கிரியையைத் தொடங்கவும் அதற்கானப் பொருத்தமான இடத்தையும் தேர்ந்தெடுத்தார். இந்த மாம்சம் மட்டும் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் ஒரு முழு யுகத்தைப் பிரதிநித்துவப்படுத்துகிறார், மேலும் ஒரு முழு யுகத்தின் கிரியையையும் செய்கிறார்; அவர் பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து புதிய யுகத்தைத் தொடங்குகிறார். இவை அனைத்தும் தேவனின் ஆளுகை பற்றிய ஒரு முக்கியமான விஷயமாகும், மேலும் இவை அனைத்தும் தேவன் பூமியில் செய்வதற்கு வரும் கிரியையின் ஒரு கட்டத்தின் முக்கியத்துவமுமாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (3)” என்பதிலிருந்து

225. பூமியிலுள்ள கிறிஸ்து தேவனின் சார்பாகச் செயல்பட முடிந்தாலும், எல்லா மனிதர்களுக்கும் தம்முடைய உருவத்தை மாம்சத்தில் காண்பிக்கும் நோக்கத்துடன் அவர் வரவில்லை. எல்லா மனிதர்களும் அவரைப் பார்க்கவேண்டும் என்பதற்காக அவர் வரவில்லை; மனிதனை தமது கையால் வழிநடத்த மனிதனை அனுமதிக்கவும், அதன் மூலம் மனிதன் புதிய யுகத்திற்குள் நுழைவதற்காகவுமே அவர் வருகிறார். கிறிஸ்துவினுடைய மாம்சத்தின் செயல்பாடு தேவனுடைய கிரியைக்காகவே ஆகும், அதாவது மாம்சத்தில் செய்த தேவனுடைய கிரியையானது, மனிதன் தமது மாம்சத்தின் சாரம்சத்தை முழுமையாக புரிந்துகொள்ள உதவவேண்டும் என்பதற்காக அல்ல. அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது முக்கியமல்ல, ஆனால் அவர் செய்யும் எதுவும் மாம்சத்தால் அடையக்கூடியதைத் தாண்டி செல்லாது. அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது முக்கியமல்ல, அவர் சாதாரண மனிதத்தன்மையுடன் மாம்சத்தில் அவ்வாறு செய்கிறார், மேலும் தேவனுடைய மெய்யான முகத்தை மனிதனுக்கு முழுமையாக வெளிப்படுத்தவில்லை. மேலும், மாம்சத்தில் அவர் செய்யும் கிரியையானது ஒருபோதும் மனிதன் கருதுவது போல் இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்லது விவரிக்க முடியாதது அல்ல. கிறிஸ்து மாம்சத்தில் தேவனை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், தேவன் மட்டுமே செய்ய வேண்டிய வேலையை நேரில் செய்தாலும், அவர் தேவன் பரலோகத்தில் இருப்பதை மறுக்கவில்லை, மேலும் அவருடைய செயல்களை அவர் பரபரப்புடன் அறிவிக்கவுமில்லை. மாறாக, அவர் தம்முடைய மாம்சத்திற்குள் மறைந்து, தாழ்மையுடன் இருக்கிறார். கிறிஸ்துவைத் தவிர, கிறிஸ்து என்று பொய்யாகக் கூறுபவர்களுக்கு அவருடைய குணங்கள் இல்லை. அந்த பொய்யான கிறிஸ்துக்களின் திமிர்பிடித்த மற்றும் சுயத்தை மேன்மை பாராட்டும் மனநிலையை எதிர்த்துப் பேசும்போது, எந்த விதமான மாம்சம் உண்மையிலேயே கிறிஸ்துவினுடையது என்பது தெளிவாகிறது. அவர்கள் பொய்யானவர்கள், இதுபோன்ற கள்ளக்கிறிஸ்துக்கள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்துகிறார்கள், மேலும் மனிதனை ஏமாற்றுவதற்கான அடையாளங்கள் மற்றும் அதிசயங்களில் அவர்கள் அதிகத் திறமையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். கள்ளக்கிறிஸ்துக்களுக்கு தேவனுடைய குணங்கள் இல்லை; கள்ளக்கிறிஸ்துக்களுக்கு சொந்தமான எந்தவொரு அம்சத்தினாலும் கிறிஸ்து கறைபடுத்தப்படுவதில்லை. தேவன் மாம்சமாக மாறியது மாம்சத்தின் கிரியையை முடிப்பதற்காக மட்டுமேயாகும், வெறுமனே மனிதர்கள் அவரைப் பார்க்க அனுமதிப்பதற்காக அல்ல. மாறாக, அவர் தமது கிரியையை அவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அனுமதிக்கிறார், மேலும் அவர் வெளிப்படுத்தியதைக் கொண்டு அவருடைய சாராம்சத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் அனுமதிக்கிறார். அவரது சாராம்சம் ஆதாரமற்றது அல்ல; அவரது அடையாளம் அவரது கையால் கைப்பற்றப்படவில்லை; அது அவருடைய கிரியை மற்றும் அவரது சாரம்சம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது” என்பதிலிருந்து

226. மாம்சத்தில் அவர் செய்யும் கிரியையைப் பற்றிய மிகச் சிறந்த காரியம் என்னவென்றால், அவரால் துல்லியமான வார்த்தைகளையும் அறிவுரைகளையும், அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு மனுக்குலத்திற்கான அவருடைய குறிப்பிட்ட சித்தத்தையும் விட்டுச்செல்ல இயலும். இதனால், அதன்பிறகு அவரைப் பின்பற்றுகிறவர்கள் மாம்சத்தில் செய்யும் அவருடைய எல்லா கிரியைகளையும், மனுக்குலம் முழுவதிற்குமான அவருடைய சித்தத்தையும் இதை ஏற்றுக்கொள்கின்றவர்களிடம் மிகவும் துல்லியமாகவும், உறுதியாகவும் பரப்ப இயலும். மனுஷர்கள் நடுவே மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியை மாத்திரமே தேவன் மனுஷனுடன் ஒன்றாக இருக்கிறார் மற்றும் ஒன்றாக சேர்ந்து ஜீவிக்கிறார் என்கிற உண்மையை மெய்யாகவே நிறைவேற்றுகிறது. தேவனுடைய முகத்தைக் காணவும், தேவனுடைய கிரியையைப் பார்க்கவும், தேவனுடைய தனிப்பட்ட வார்த்தையைக் கேட்கவும் மனுஷனுடைய விருப்பத்தை இந்த கிரியை மாத்திரமே நிறைவேற்றுகிறது. யேகோவாவின் பின்புறம் மாத்திரமே மனுக்குலத்திற்குத் தோன்றிய போது மாம்சமான தேவன் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறார். மேலும், தெளிவற்ற தேவன் மீதான மனுக்குலத்தின் நம்பிக்கையின் காலத்தையும் அவர் முடிவுக்குக் கொண்டுவருகிறார். குறிப்பாக, கடைசியாக மாம்சமான தேவனுடைய கிரியையானது முழு மனுக்குலத்தையும் மிகவும் யதார்த்தமான, மிகவும் நடைமுறையான மற்றும் அழகான ஒரு காலத்திற்குக் கொண்டுவருகிறது. அவர் நியாயப்பிரமாணத்தின் மற்றும் கோட்பாட்டின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமின்றி, மிகவும் முக்கியமாக, உண்மையான மற்றும் சாதாரணமான, நீதியுள்ள மற்றும் பரிசுத்தமான, நிர்வாகத் திட்டத்தின் கிரியைகளைத் திறக்கும் மற்றும் மனுக்குலத்தின் மறைபொருட்களையும், போய்ச்சேருமிடத்தையும் விவரிக்கும், மனுக்குலத்தை சிருஷ்டித்து, நிர்வாகக் கிரியைகளை முடிவுக்குக் கொண்டுவரும், ஆயிரக்கணக்கான வருடங்களாக மறைந்திருக்கும் ஒரு தேவனை அவர் மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகிறார். அவர் தெளிவற்ற காலத்தை ஒரு முழுமையான முடிவுக்குக் கொண்டுவருகிறார். மனுக்குலம் முழுவதும் தேவனுடைய முகத்தைத் தேட விரும்பியும் காண முடியாத காலத்தை அவர் முடிவுக்குக் கொண்டுவருகிறார். மனுக்குலம் முழுவதும் சாத்தானுக்கு ஊழியம் செய்த காலத்தை அவர் முடிவுக்குக் கொண்டுவந்து, மனுக்குலம் முழுவதையும் ஒரு புதிய காலத்திற்குள் வழிநடத்துகிறார். இவையெல்லாம் தேவனுடைய ஆவியானவருக்குப் பதிலாக மாம்சத்திலுள்ள தேவனால் செய்யப்படும் கிரியையின் பலனாகும். தேவன் தம்முடைய மாம்சத்தில் கிரியை செய்யும்போது, அவரைப் பின்பற்றுகிறவர்கள் இனிமேல் இருப்பதும் இல்லாததும் போல தோன்றும் காரியங்களைத் தேடி அலைவதில்லை, தெளிவற்ற தேவனுடைய சித்தத்தை ஊகம் செய்வதை நிறுத்திக்கொள்கிறார்கள். தேவன் மாம்சத்தில் தம்முடைய கிரியையைப் பரப்பும்போது, அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவர் மாம்சத்தில் செய்த கிரியையை எல்லா மதங்களிலும் மதப் பிரிவுகளிலும் அறிவிப்பார்கள். மேலும், அவர்கள் அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் மனுக்குலத்தின் காதுகளில் எடுத்துரைப்பார்கள். அவருடைய சுவிசேஷத்தைப் பெறுபவர்களால் கேட்கப்படுகின்ற அனைத்தும் அவருடைய கிரியையின் உண்மைகளாகவும், மனுஷனால் தனிப்பட்ட முறையில் காணக்கூடிய காரியங்களாகவும் இருக்கும், அவை உண்மைகளாக இருக்குமே தவிர, வதந்தியாக இருக்காது. இந்த உண்மைகள் அவர் கிரியையைப் பரப்புவதற்கான ஆதாரமாக இருக்கின்றன. இவை கிரியையைப் பரப்புவதற்கு அவர் பயன்படுத்தும் கருவிகளாகவும் இருக்கின்றன. ஜீவித்திருக்கிற உண்மைகள் இல்லாமால், அவருடைய சுவிசேஷம் எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் பரவாது. உண்மைகள் இல்லாமல் மனுஷனுடைய கற்பனைகளைக் கொண்டு மட்டுமே, முழு பிரபஞ்சத்தையும் ஜெயங்கொள்ளும் கிரியையை அவரால் ஒருபோதும் செய்ய முடியாது. ஆவியானவர் மனுஷனால் தொட்டுணர முடியாதவராகவும், மனுஷனுடைய கண்ணுக்குத் தெரியாதவராகவும் இருக்கிறார். தேவனுடைய கிரியையின் வேறு எந்த கூடுதல் ஆதாரத்தையோ அல்லது உண்மைகளையோ விட்டுச்செல்ல ஆவியானவரின் கிரியையால் முடியாது. தேவனுடைய உண்மையான முகத்தை மனுஷன் ஒருபோதும் காணமாட்டான். அவன் எப்போதும் இல்லாத ஒரு தெளிவற்ற தேவனையே நம்புவான். மனுஷன் ஒருபோதும் தேவனுடைய முகத்தைக் காணமாட்டான் தேவனால் தனிப்பட்ட முறையில் பேசப்படும் வார்த்தைகளையும் மனுஷன் ஒருபோதும் கேட்கமாட்டான். எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷனுடைய கற்பனைகள் வெறுமையாக உள்ளன, தேவனுடைய உண்மையான முகத்திற்கு அவை மாற்றாக முடியாது. தேவனுடைய இயல்பான மனநிலை மற்றும் தேவனுடைய கிரியை ஆகியவற்றை மனுஷனால் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது. பரலோகத்திலுள்ள அதரிசனமான தேவனும், அவருடைய கிரியையும் மனுஷர் நடுவே தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்யும் மாம்சமான தேவனால் மட்டுமே பூமிக்கு கொண்டுவர முடியும். இதுவே தேவன் மனுஷரிடம் தோன்றுவதற்கான மிகச் சிறந்த வழியாகும், இதில் மனுஷன் தேவனைப் பார்க்கிறான், தேவனுடைய உண்மையான முகத்தை அறிந்துகொள்கிறான். மாம்சமாகாத தேவனால் இதை அடைய முடியாது. இந்தக் கட்டத்தில் அவருடைய கிரியை செய்யப்பட்டதனால், தேவனுடைய கிரியை ஏற்கனவே சிறந்த பலனை அடைந்துள்ளது, மேலும் இது ஒரு முழுமையான ஜெயமாக இருக்கிறது. மாம்சத்தில் தேவனுடைய தனிப்பட்ட கிரியையானது ஏற்கனவே அவருடைய முழு நிர்வாகத்தின் தொண்ணூறு சதவீத கிரியைகளை முடித்துவிட்டது. இந்த மாம்சம் அவருடைய எல்லா கிரியைகளுக்கும் ஒரு சிறந்த துவக்கத்தையும், அவருடைய எல்லா கிரியைகளுக்கும் ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளது, மேலும் அவருடைய எல்லா கிரியைகளையும் அறிவித்துள்ளது. இந்த கிரியைகள் எல்லாவற்றிற்கும் கடைசி முழு நிறைவேறுதலையும் செய்துள்ளது. இனிமேல், தேவனுடைய நான்காவது கட்டக் கிரியையைச் செய்வதற்கு மற்றொரு மாம்சமான தேவன் இருக்க மாட்டார், மேலும் மூன்றாவது மாம்சமான தேவனுடைய எந்த அதிசயமான கிரியையும் ஒருபோதும் இருக்காது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து

227. இந்த மாம்சம் சாதாரணமானதாகவும் உண்மையானதாகவும் இருக்கின்றபோதிலும், அவர் பொதுவான மாம்சமல்ல: அவர் மனுஷனாக மட்டுமே உள்ள மாம்சம் அல்ல, ஆனால் மனுஷனாகவும் தெய்வீகமாகவும் உள்ள மாம்சம் ஆவார். இது அவருக்கும் மனுஷனுக்கும் உள்ள வித்தியாசமாகும். இதுதான் தேவனுடைய அடையாளத்தின் குறியீடாகும். இத்தகைய மாம்சத்தால் மட்டுமே அவர் செய்ய விரும்பும் கிரியையைச் செய்யவும், மாம்சத்தில் தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்றவும், மனுஷர் நடுவில் அவருடைய கிரியையை முழுமையாக செய்து முடிக்கவும் இயலும். இவ்வாறு இல்லையென்றால், மனுஷர் நடுவே அவருடைய கிரியை எப்போதும் வெறுமையானதாகவும் குறைபாடுள்ளதாகவும் இருக்கும். தேவனால் சாத்தானின் ஆவியுடன் யுத்தம் செய்து ஜெயங்கொள்ள முடியும் என்றாலும், சீர்கேடான மனுஷனுடைய பழைய சுபாவத்தை ஒருபோதும் போக்க முடியாது. தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களும் அவரை எதிர்ப்பவர்களும் ஒருபோதும் அவருடைய ஆதிக்கத்திற்கு உண்மையாக உட்பட்டிருக்க முடியாது. அதாவது, அவரால் ஒருபோதும் மனுக்குலத்தை ஜெயங்கொள்ள முடியாது, மனுக்குலத்தை ஒருபோதும் ஆதாயப்படுத்த முடியாது. பூமியில் அவருடைய கிரியைக்குத் தீர்வு காண முடியவில்லை என்றால், அவருடைய நிர்வாகம் ஒருபோதும் முடிவுக்கு வராது, மனுக்குலம் முழுவதும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாது. தேவன் தமது சிருஷ்டிகள் எல்லாவற்றுடனும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாது என்றாலும், அத்தகைய நிர்வாகக் கிரியைக்கு ஒருபோதும் பலன் கிடைக்காது, இதன் விளைவாகத் தேவனுடைய மகிமை மறைந்துபோய்விடும். அவருடைய மாம்சத்திற்கு அதிகாரம் இல்லையென்றாலும், அவர் செய்யும் கிரியை அதன் பலனை அடைந்திருக்கும். இது அவருடைய கிரியையின் தவிர்க்க முடியாத திசையாகும். அவருடைய மாம்சம் அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும் கொண்டிருக்காவிட்டாலும், தேவன் தமது கிரியையைச் செய்ய வல்லவராக இருக்கும் வரை, அவர் தாமே தேவனாக இருக்கிறார். இந்த மாம்சம் எவ்வளவு இயல்பானதாகவும் சாதாரணமானதாகவும் இருந்தாலும், அவர் செய்யவேண்டிய கிரியையை அவரால் செய்ய இயலும், ஏனென்றால் இந்த மாம்சம் மனுஷனாக மட்டுமின்றி தேவனாகவும் இருக்கிறது. இந்த மாம்சம் மனுஷனால் செய்ய முடியாத கிரியையைச் செய்ய முடியும் என்பதற்கான காரணம் என்னவென்றால், அவருடைய உள்ளான சாராம்சம் எந்தவொரு மனுஷனையும் போல இல்லை. அவரால் மனுஷனை இரட்சிக்க முடிவதற்கான காரணம் என்னவென்றால், அவருடைய அடையாளம் எந்த மனுஷனுடைய அடையாளத்திலும் இருந்து வேறுபட்டதாகும். இந்த மாம்சம் மனுக்குலத்திற்கு மிகவும் முக்கியமானதாகும், ஏனென்றால் அவர் மனுஷனாகவும், இன்னும் அதிகமாக, அவர் தேவனாகவும் இருக்கிறார், ஏனென்றால் சாதாரண மாம்ச மனுஷனால் செய்ய முடியாத கிரியையை அவரால் செய்ய முடியும், பூமியில் அவருடன் சேர்ந்து வாழும் சீர்கேடான மனுஷனை அவரால் இரட்சிக்கவும் முடியும். அவர் மனுஷனைப் போலவே இருந்தாலும், மாம்சமான தேவன் எந்தவொரு மதிப்புமிக்க நபரைக் காட்டிலும் மனுக்குலத்திற்கு மிகவும் முக்கியமானவராவார், ஏனென்றால் தேவனுடைய ஆவியானவரால் செய்ய முடியாத கிரியையை அவரால் செய்ய முடியும், தேவனுடைய ஆவியானவரைக் காட்டிலும் அதிகமாகத் தேவனுக்குச் சாட்சி கொடுக்க முடியும், தேவனுடைய ஆவியானவரைக் காட்டிலும் அதிகமாக மனுக்குலத்தை முழுவதுமாக ஆதாயப்படுத்த முடியும். இதன் விளைவாக, இந்த மாம்சம் இயல்பானதாகவும் சாதாரணமானதாகவும் இருக்கின்றபோதிலும், மனுக்குலத்திற்கு அவர் அளித்த பங்களிப்பும், மனுக்குலம் வாழ்ந்திருப்பதற்கான அவரது முக்கியத்துவமும் அவரை மிகவும் விலையேறப்பெற்றவராக்குகின்றன. மேலும், இந்த மாம்சத்தின் உண்மையான மதிப்பும் முக்கியத்துவமும் எந்த மனுஷனாலும் அளவிட முடியாததாகும். இந்த மாம்சத்தால் சாத்தானை நேரடியாக அழிக்க முடியாது என்கின்றபோதிலும், மனுக்குலத்தை ஜெயங்கொள்ளவும், சாத்தானை தோற்கடிக்கவும், சாத்தானை தமது ஆதிக்கத்திற்கு முழுமையாக அடிபணியச் செய்யவும் அவர் தமது கிரியையைப் பயன்படுத்த முடியும். தேவன் மனுஷனாக அவதரித்திருப்பதால் தான், அவரால் சாத்தானை தோற்கடித்து, மனுக்குலத்தை இரட்சிக்க முடிகிறது. அவர் சாத்தானை நேரடியாக அழிப்பதில்லை, மாறாக சாத்தானால் சீர்கெட்டுப்போன மனுக்குலத்தை ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்வதற்கு மாம்சமாக மாறுகிறார். ஆகையால், அவரால் தமது சிருஷ்டிகளுக்கு மத்தியில் தம்மைத்தாமே சிறப்பாக சாட்சி பகிர முடிகிறது, சீர்கேடான மனுஷனை சிறப்பாக இரட்சிக்க முடிகிறது. மாம்சமான தேவன் சாத்தானைத் தோற்கடித்தது தேவனுடைய ஆவியானவரால் சாத்தானை நேரடியாக அழிப்பதைக் காட்டிலும் அதிக சாட்சி பகிர்கிறது, அதிக வல்லமையானதாகவும் இருக்கிறது. மனுஷன் சிருஷ்டிகரை அறிந்துகொள்ள மாம்சத்திலுள்ள தேவனால் அவனுக்குச் சிறப்பாக உதவ முடியும், தமது சிருஷ்டிகளுக்கு மத்தியில் தம்மைத்தாமே சிறப்பாகச் சாட்சி பகிர முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து

228. இந்த நேரத்தில், தேவன் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் அல்ல, மாறாக மிகவும் சாதாரணமான நிலையில் கிரியையைச் செய்ய வருகிறார். மேலும், இது தேவனுடைய இரண்டாவது மனுஷ அவதரிப்பின் சரீரம் மட்டுமல்ல, தேவன் மாம்சத்திற்குத் திரும்பும் சரீரமும் கூட. இது மிகவும் சாதாரண மாம்சம். அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க வைக்கும் எதையும் உன்னால் பார்க்க முடியாது, ஆனால் நீ அவரிடமிருந்து முன்பு கேள்விப்படாத சத்தியங்களைப் பெறலாம். இந்த அற்பமான மாம்சம்தான் தேவனிடமிருந்து வரும் சத்திய வார்த்தைகள் அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையை மேற்கொள்கிறது, மேலும் மனிதன் புரிந்துகொள்வதற்காக தேவனுடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. தேவனைப் பரலோகத்தில் காண்பதற்கு நீ பெரிதும் விரும்பவில்லையா? பரலோகத்திலுள்ள தேவனைப் புரிந்துகொள்வதற்கு நீ பெரிதும் விரும்பவில்லையா? மனிதகுலம் சென்று சேரும் இடத்தைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? இந்த இரகசியங்கள் அனைத்தையும் அவர் உனக்கு சொல்லுவார்—அதாவது எந்த மனிதனும் உனக்குச் சொல்ல முடியாத ரகசியங்களைச் சொல்லுவார், மேலும் நீ புரிந்து கொள்ளாத சத்தியங்களையும் அவர் உனக்குச் சொல்வார். ராஜ்யத்திற்குள் அவரே உன் வாசலாகவும், புதிய யுகத்திற்கான உன் வழிகாட்டியாகவும் இருக்கிறார். அத்தகைய ஒரு சாதாரண மாம்சம் பல புரிந்துகொள்ள முடியாத மர்மங்களைக் கொண்டிருக்கிறது. அவருடைய செயல்கள் உனக்கு விவரிக்க முடியாததாக இருக்கலாம், ஆனால் அவர் செய்யும் கிரியையின் முழுக் குறிக்கோளும், ஜனங்கள் நம்புகிறபடி, ஒரு எளிய மாம்சமல்ல என்பதை நீ காண அனுமதிக்க போதுமானதாக இருக்கிறது. ஏனென்றால், அவர் தேவனுடைய சித்தத்தையும், கடைசி நாட்களில் மனிதகுலத்தின் மீது தேவன் காட்டிய அக்கறையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். வானங்களையும் பூமியையும் அசைப்பதாகத் தோன்றும் அவரது வார்த்தைகளைக் கேட்கவும், அக்கினி ஜுவாலைகளைப் போல இருக்கும் அவரது கண்களைப் பார்க்கவும், அவருடைய இருப்புக்கோலால் சீர்பொருந்தப் பண்ணுதலை நீ உணரவும் முடியாமல் போனாலும் தேவன் கோபமாக இருக்கிறார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து உன்னால் கேட்க முடியும், தேவன் மனிதகுலத்திற்கு இரக்கம் காட்டுகிறார் என்பதையும் நீ அறிந்துகொள்ள முடியும்; தேவனுடைய நீதியான மனநிலையையும் அவருடைய ஞானத்தையும் நீ கண்டுகொள்ளலாம், மேலும், எல்லா மனிதர்கள் மீதான தேவனுடைய அக்கறையை உணரலாம். கடைசி நாட்களில் தேவனுடைய கிரியை என்னவென்றால், பூமியில் உள்ள மனிதர்களிடையே வாழும் பரலோகத்திலுள்ள தேவனைக் காண மனிதனை அனுமதிப்பதும், அவன் தேவனை அறிந்துகொள்ளவும், கீழ்ப்படியவும், வணங்கவும், நேசிக்கவும் மனிதனுக்கு உதவுவதுமே ஆகும். இதனால்தான் அவர் இரண்டாவது முறையாக மாம்சத்திற்குத் திரும்பியுள்ளார். மனிதன் பார்ப்பது மனிதனைப் போன்ற ஒரு தேவனாகும், அதாவது மூக்கு மற்றும் இரண்டு கண்களை கொண்ட தேவன், மற்றும் குறிப்பிட்டுக் கூற முடியாத தேவன், இறுதியில், இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானம் பூமி மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்பதையும்; இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானம் மங்கலாகிவிடும், பூமி குழப்பத்தில் மூழ்கிவிடும், பஞ்சம் மற்றும் வாதைகளுக்கு மத்தியில் எல்லா மனிதர்களும் வாழ்வார்கள் என்பதையும் தேவன் உங்களுக்கு காண்பிப்பார். கடைசி நாட்களில் தேவன் உங்களை இரட்சிப்பதற்கு வரவில்லை என்றால், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே எல்லா மனிதர்களையும் நரகத்தில் தள்ளி அழித்திருப்பார் என்பதையும்; இந்த மாம்சம் ஜீவித்திருக்கவில்லை என்றால், நீங்கள் என்றென்றும் பிரதான பாவிகளாக இருந்திருப்பீர்கள் மற்றும் நீங்கள் என்றென்றும் சடலங்களாகவே இருந்திருப்பீர்கள் என்பதையும் அவர் உங்களுக்கு காண்பிப்பார். இந்த மாம்சம் ஜீவித்திராவிட்டால், எல்லா மனிதர்களும் விரும்பத்தகாத பேரழிவை எதிர்கொள்வார்கள் என்பதையும், கடைசி நாட்களில் தேவன் மனிதகுலத்திற்கு அளிக்கும் இன்னும் கடுமையான தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியாது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த சாதாரண மாம்சம் பிறந்திருக்கவில்லை என்றால், நீங்கள் அனைவரும் வாழ முடியாமல் உயிருக்குப் பிச்சை எடுக்கும் ஒரு நிலையில் இருந்திருப்பீர்கள், மரிக்க முடியாமல் மரணத்திற்காக ஜெபிக்கிறவர்களாக இருந்திருப்பீர்கள்; இந்த மாம்சம் இல்லாதிருந்தால், நீங்கள் சத்தியத்தைப் பெற முடியாமல், இன்று தேவனுடைய சிங்காசனத்தின் முன்பாக வரமுடியாமல், மாறாக உங்களுடைய கடுமையான பாவங்களுக்காக நீங்கள் தேவனால் தண்டிக்கப்பட்டிருப்பீர்கள். தேவன் மாம்சத்திற்குத் திரும்பாமல் இருந்திருந்தால், யாருக்கும் இரட்சிப்பின் வாய்ப்பு இருந்திருக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த மாம்சத்தின் வருகைக்காக, தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பார் அல்லவா? இது அவ்வாறாக இருக்க, தேவனுடைய இரண்டாவது மனுஷஅவதரிப்பை உங்களால் இன்னும் நிராகரிக்க முடியுமா? இந்த சாதாரண மனிதரிடமிருந்து நீங்கள் பல நன்மைகளை பெற முடியும் என்பதால், நீங்கள் ஏன் மகிழ்ச்சியுடன் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது?

தேவனுடைய கிரியை என்பது நீ புரிந்து கொள்ள முடியாத ஒன்று. உன்னுடைய தேர்வு சரியானதா என்பதை உன்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாவிட்டால், அல்லது தேவனுடைய கிரியை வெற்றிபெற முடியுமா என்பதை உன்னால் அறிய முடியாவிட்டால், பிறகு இந்த சாதாரண மனிதர் உனக்குப் பெரிதும் உதவக்கூடும் என்பதைப் பார்க்கவும் மற்றும் தேவன் உண்மையில் பெரிய கிரியை செய்தாரா என்பதை அறியவும் உன் அதிர்ஷ்டத்தை ஏன் முயற்சி செய்யக்கூடாது? இருப்பினும், நோவாவின் காலத்தில், மனிதர்கள் புசித்தும், குடித்தும், பெண்கொண்டும், பெண்கொடுத்தும் தேவனால் சகிக்கமுடியாத அளவிற்கு இருந்ததை நான் உனக்குச் சொல்லியே ஆக வேண்டும், எனவே அவர் மனிதகுலத்தை அழிக்க ஒரு பெரிய ஜலப்பிரளயத்தை அனுப்பினார், நோவாவின் குடும்பத்திலுள்ள எட்டுபேர் மற்றும் அனைத்து வகையான பறவைகள் மற்றும் மிருகங்களை மட்டுமே தப்பும்படிச் செய்தார். எவ்வாறாயினும், கடைசி நாட்களில், தேவனால் காப்பாற்றப்பட்டவர்கள் அனைவரும் கடைசி வரை அவருக்கு விசுவாசமாக இருந்தார்கள். இரண்டு யுகங்களும் தேவனால் சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு பெரும் சீர்கேடு நிறைந்த காலங்களாக இருந்தபோதிலும், இரு யுகங்களிலும் மனிதகுலம் தேவன் தங்களுடைய கர்த்தர் என்பதை மறுதலிக்கும் அளவுக்கு சீர்கெட்டதாக மாறியிருந்தாலும், தேவன் நோவாவின் காலத்திலுள்ள ஜனங்களை மட்டுமே அழித்தார். இரு யுகங்களிலும் மனிதகுலம் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது, ஆனாலும் தேவன் கடைசி நாட்களின் மனிதர்களிடம் இப்போது வரை பொறுமையாக இருக்கிறார். இது ஏன்? ஏன் என்று நீங்கள் ஆச்சரியப்படவே இல்லையா? உங்களுக்கு உண்மையிலேயே தெரியாவிட்டால், நான் உங்களுக்கு சொல்கிறேன். கடைசி நாட்களில் தேவன் ஜனங்களுக்கு கிருபையை அளிக்க முடிந்தது என்பதற்கான காரணம், அவர்கள் நோவாவின் காலத்தில் இருந்தவர்களை விட குறைவான அளவே சீர்கெட்டுப்போயிருந்தார்கள் என்பதற்காக அல்ல, அல்லது அவர்கள் தேவனிடத்தில் மனந்திரும்புதலைக் காண்பித்திருக்கிறார்கள் என்பதற்காகவும் அல்ல, கடைசி நாட்களில் தேவன் அவர்கள் மேல் அழிவைக் கொண்டுவருவதற்கு முடியாதபடிக்கு தொழில்நுட்பமானது மிகக் குறைவு என்பதனாலும் அல்ல. மாறாக, கடைசி நாட்களில் ஒரு குறிப்பிட்ட ஜனக்கூட்டத்தில் தேவன் செய்ய வேண்டிய கிரியை இருக்கிறது, மேலும் தேவன் தனது மனுஷஅவதரிப்பில் இந்த கிரியையைத் தானே செய்ய விரும்புகிறார். மேலும், தேவன் தனது இரட்சிப்பின் பாத்திரங்களாகவும், அவருடைய நிர்வாகத் திட்டத்தின் பலனாகவும் இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியைத் தேர்வுசெய்து, இந்த ஜனங்களை அடுத்த யுகத்திற்கு கொண்டு வர விரும்புகிறார். ஆகையால் தேவன் செலுத்திய இந்த விலையானது எதுவாக இருந்தாலும், அவருடைய அவதரித்த மாம்சம் கடைசி நாட்களில் செய்யும் கிரியைக்கு முற்றிலும் தயாராகி வருகிறது. நீங்கள் இன்று வந்துவிட்டீர்கள் என்ற உண்மைக்கு இந்த மாம்சமே காரணமாக இருக்கிறது. தேவன் மாம்சத்தில் வாழ்கிறார் என்பதால்தான் நீங்கள் ஜீவனோடு வாழ வாய்ப்பு உள்ளது. இந்த சாதாரண மனிதரின் பேரில் இந்த நல்ல அதிர்ஷ்டம் அனைத்தும் பெறப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, இறுதியில் ஒவ்வொரு தேசமும் இந்த சாதாரண மனிதரை ஆராதிப்பதோடு, இந்த முக்கியமற்ற/சிறப்பற்ற மனிதருக்கு நன்றி செலுத்திக் கீழ்ப்படிவார்கள், ஏனென்றால் எல்லா மனிதர்களையும் இரட்சிக்கும்படியாக அவர் கொண்டுவந்த சத்தியமும், ஜீவனும் மற்றும் வழியுமாக அது இருக்கிறது, மனிதனுக்கும் தேவனுக்கும் இடையேயான மோதலைத் தளர்த்தியது, இருவருக்கும் இடையேயான தூரத்தையும் குறைத்தது, தேவன் மற்றும் மனிதனுடைய நினைவுகளுக்கு இடையிலான தொடர்பைத் திறந்தது. தேவனுக்காக இன்னும் பெரிய மகிமையைக் கொண்டுவந்தவர் அவரே. இது போன்ற ஒரு சாதாரண மனிதர் உன் நம்பிக்கை மற்றும் போற்றுதலுக்கு தகுதியற்றவரா? அத்தகைய சாதாரண மாம்சம் கிறிஸ்து என்று அழைக்கப்படுவதற்கு பொருத்தமாக இல்லையா? அத்தகைய சாதாரண மனிதர் மனிதர்களிடையே தேவனுடைய வெளிப்பாடாக மாற முடியாதா? மனிதகுலத்தை பேரழிவிலிருந்து இரட்சித்த அத்தகைய மனிதர், உங்களுடைய அன்பிற்கும், அவரைப் பற்றிக்கொள்ளுவதற்கான உங்கள் விருப்பத்திற்கும் தகுதியற்றவரா? அவருடைய வாயிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை நீங்கள் நிராகரித்து, உங்களிடையே அவர் ஜீவிப்பதை வெறுக்கிறீர்கள் என்றால், இறுதியில் உங்களின் நிலை என்னவாக இருக்கும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்” என்பதிலிருந்து

229. தேவனுடைய கடைசி நாட்களின் கிரியைகள் யாவும் இந்த சாதாரண மனிதர் மூலமாகவே செய்யப்படுகின்றன. அவர் உனக்கு எல்லாவற்றையும் வழங்குவார், மேலும் என்னவென்றால், உன் தொடர்பான அனைத்தையும் அவரால் தீர்மானிக்க முடியும். குறிப்பிடத் தகுதியற்ற ஒரு மிகவும் எளிமையான ஒரு மனிதர் நீங்கள் விசுவாசிக்கும் இத்தகைய ஒரு மனிதராக இருக்க முடியுமா? உங்களை முற்றிலுமாக நம்பவைப்பதற்கு அவருடைய சத்தியம் போதுமானதாக இல்லையா? உங்களை முற்றிலுமாக நம்பவைப்பதற்கு அவருடைய செயல்களின் சாட்சி போதுமானதாக இல்லையா? அல்லது அவர் உங்களை வழிநடத்தும் பாதை நீங்கள் நடக்கத் தகுதியற்றதா? எல்லாவற்றையும் சொல்லி முடித்தவுடன், நீங்கள் அவரை வெறுக்கவும், அவரைத் தூக்கி எறிந்து, அவருக்கு ஒரு பரந்த இடத்தையும் கொடுக்க என்ன காரணம்? இந்த மனிதரே சத்தியத்தை வெளிப்படுத்துகிறார், இந்த மனிதரே சத்தியத்தை அளிக்கிறார், இந்த மனிதரே உங்களுக்கு பின்பற்றத்தக்கதாக ஒரு பாதையை அளிக்கிறார். இந்த சத்தியங்களுக்குள் தேவனுடைய கிரியையின் தடயங்களை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? இயேசுவின் கிரியை இல்லாமல், மனிதகுலம் சிலுவையிலிருந்து இறங்கியிருக்க முடியாது, இன்றைய மனுஷஅவதரிப்பு இல்லாமல், சிலுவையிலிருந்து இறங்குவோர் ஒருபோதும் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறவோ அல்லது புதிய யுகத்திற்குள் நுழையவோ முடியாது. இந்த சாதாரண மனிதரின் வருகை இல்லாமல், தேவனுடைய உண்மையான முகத்தைக் காண உங்களுக்கு ஒருபோதும் வாய்ப்பில்லை, அல்லது நீங்கள் தகுதி பெறமாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அனைவரும் நீண்ட காலத்திற்கு முன்பே அழிக்கப்பட்டிருக்க வேண்டிய பொருட்களாக இருக்கிறீர்கள். தேவனுடைய இரண்டாவது மனுஷஅவதரிப்பின் வருகையால், தேவன் உங்களை மன்னித்து, உங்களுக்கு இரக்கம் காண்பித்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, இன்னும், நான் உங்களுக்கு கடைசியில் விட்டுபோக வேண்டிய வார்த்தைகள் இவைதான்: தேவனின் மனுஷஅவதரிப்பாக இருக்கும் இந்த சாதாரண மனிதர் உங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். தேவன் ஏற்கனவே மனிதர்களுக்குள்ளே செய்திருக்கிற மிகப் பெரிய காரியம் இதுதான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்” என்பதிலிருந்து

230. கிறிஸ்து பேசும் சத்தியத்தை நம்பாமல் ஜீவனைப் பெற்றுக்கொள்ள பிரயாசப்படுவோர், பூமியின் மேல் மிகவும் பரியாசம் பண்ணுகிற ஜனங்களாவர், கிறிஸ்து கொண்டுவரும் ஜீவனுக்கான வழியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கற்பனையில் தொலைந்து போனவர்கள். ஆகையால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேவனால் என்றென்றும் வெறுக்கப்படுவார்கள் என்று சொல்கிறேன். கிறிஸ்து தான் கடைசி நாட்களில் ராஜ்யத்திற்குள் செல்வதற்கான மனிதனின் நுழைவாயில், அவரைச் சுற்றிச் செல்லக்கூடியவர்கள் யாருமில்லை. கிறிஸ்துவின் மூலமாக அல்லாமல் தேவனால் யாரும் பரிபூரணமாக்கப்பட மாட்டார்கள். நீ தேவனை விசுவாசிக்கிறாய், ஆகையால் நீ அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அவருடைய வழிக்குக் கீழ்ப்படிய வேண்டும். சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள இயலாமலும், வழங்கும் ஜீவனை ஏற்றுக்கொள்ள இயலாமலும் இருக்கும்போது, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வது பற்றி உன்னால் சிந்திக்கவே இயலாது. கிறிஸ்து தன்னை மெய்யாகவே விசுவாசிக்கிற அனைவருக்கும் ஜீவனைக் கொடுப்பதற்காகவே கடைசி நாட்களில் வருகிறார். அவருடைய கிரியை பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, புதிய யுகத்திற்குள் நுழைவதற்காகவே செய்யப்படுகிறது, மேலும் அவருடைய கிரியையானது புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய வழியாகும். உன்னால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதற்குப் பதிலாக அவரை நிந்திக்கவோ, தூஷிக்கவோ அல்லது துன்புறுத்தவோ செய்தால், நீ நித்தியமாக எரிக்கப்படுவாய், ஒருபோதும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டாய். இந்தக் கிறிஸ்து தாமே பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடாகவும், தேவனுடைய வெளிப்பாடாகவும், பூமியில் தமது கிரியையைச் செய்யத் தேவன் நம்பி ஒப்படைக்கப்பட்டவராகவும் இருக்கிறார். ஆகையால், கடைசி நாட்களில் கிறிஸ்துவால் செய்யப்பட்ட அனைத்தையும் உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், நீ பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கிறாய் என்று சொல்கிறேன். பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கிறவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ எதிர்த்தால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ வெறுத்து ஒதுக்கினால், அதற்கான பின்விளைவுகளைத் தாங்கிக்கொள்ள வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதையும் உனக்குச் சொல்கிறேன். மேலும், இந்த நாள் முதல் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள உனக்கு வேறொரு வாய்ப்பும் கிடைக்காது; நீ உன்னைச் சரிக்கட்ட முயற்சி செய்தாலும், நீ தேவனுடைய முகத்தை ஒருபோதும் மீண்டும் பார்க்கமாட்டாய். நீ எதிர்ப்பது ஒரு மனிதன் அல்ல, நீ வெறுத்து ஒதுக்குவது ஒரு மெலிந்த நபரை அல்ல, மாறாக கிறிஸ்துவையே அப்படி செய்கிறாய். இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று உனக்குத் தெரியுமா? நீ சிறு தவறு செய்யாமல், மிகவும் வெறுக்கத் தக்க ஒரு குற்றத்தைச் செய்திருப்பாய். ஆகையால், சத்தியத்திற்கு முன்னால் உன் நச்சுப்பற்களைத் திறக்க வேண்டாம், அல்லது கவனக்குறைவான பரியாசங்களைச் செய்ய வேண்டாம் என்று எல்லோருக்கும் அறிவுறுத்துகிறேன், ஏனென்றால் சத்தியத்தால் மட்டுமே உனக்கு ஜீவனைக் கொண்டு வர இயலும், மேலும் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் உன்னை மறுபடியும் பிறக்கச் செய்யவும், தேவனுடைய முகத்தை மீண்டும் பார்க்க வைக்கவும் உதவாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து

முந்தைய: III. தேவனுடைய தோற்றத்துக்கும் கிரியைக்கும் சாட்சி பகர்தல் குறித்த வார்த்தைகள்

அடுத்த: V. ஒவ்வொரு கட்ட கிரியைக்கும் தேவனுடைய நாமத்திற்கும் இடையிலான உறவு குறித்த வார்த்தைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக