C. சீர்கெட்ட மனுக்குலத்தின் மதக் கருத்துக்கள், மதங்களுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் பொய்யான கருத்துக்களை வெளிப்படுத்துவது குறித்த வார்த்தைகள்

135. தேவனை விசுவாசிக்கிற விஷயத்தில் ஒருவர் எப்படி அவரை அறிந்துகொள்ள வேண்டும்? தேவனுடைய வார்த்தைகள் மற்றும் அவரது இன்றைய கிரியைகளின் அடிப்படையில் ஒருவர் தேவனை அறிந்துகொள்ள வேண்டும் விலகலடையாமல், தவறான விதத்தில் அல்லாமல் முதலாவது தேவனுடைய கிரியைகளை ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும். இதுதான் தேவனை அறிந்து கொள்ளுகிறதின் அஸ்திபாரம் ஆகும். தேவனுடைய வார்த்தைகளை குறித்த சுத்தமான புரிந்துகொள்ளுதல் குறைவாய் காணப்படும் பல்வேறுவிதமான அனைத்து தவறான உபதேசங்களும் சமயம் சார்ந்த நோக்கம் கொண்டவையாகும்; அவை மாறுபட்டதும் தவறான புரிந்துகொள்ளுதலுமாகும். தேவனுடைய வார்த்தைகளை எடுத்து அவற்றை கடந்தகாலத்தில் புரிந்துகொண்டு, தேவனுடைய இன்றைய வார்த்தைகளை அவற்றுக்கு எதிராய் மதிப்பிடுவதே மதவாதிகளின் சிறந்த திறமையாகும். இன்றைய தேவனை சேவிக்கும்போது, கடந்த காலத்தில் பரிசுத்த ஆவியானவரின் ஞானத்தினால் வெளிப்படுத்தப்பட்ட காரியங்களை நீங்கள் பற்றிக்கொண்டால் அது இடையூறு விளைவிக்கக்கூடியதாகவும், உங்கள் நடைமுறைகள் பழமையாகிப் போனதாகவும் வெற்று சமய சடங்காச்சாரமாகவும் மட்டுமே இருக்கும். தேவனை சேவிப்பவர்கள் ஏனைய தராதரங்களோடு வெளிப்புறமாக தாழ்மையாகவும் பொறுமையாகவும் இருக்கவேண்டும் என்று நீ நம்பினால், அவ்வகையான அறிவை இக்காலத்தில் நடைமுறைப்படுத்தினால், அவ்வறிவு சமய நோக்கம் கொண்டதாகும்; அச்செயல்பாடு மாய்மாலமாகிவிடும். “சமயம் சார்ந்த நம்பிக்கை” என்னும் பதம் (முன்பு தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தைகளின் புரிதல் மற்றும் பரிசுத்த ஆவியானவரால் நேரடியாக வெளிப்படுத்தப்பட்ட வெளிச்சம் உள்பட) பழமையாகிப்போன மற்றும் வழக்கத்தில் இல்லாத காரியங்களைக் குறிக்கும். இக்காலத்தில் அவற்றை நடைமுறைப்படுத்தினால் அவை தேவனின் செயல்பாட்டுக்கு இடையூறாக அமையும்; மனுஷனுக்கு ஒரு நன்மையையும் கொண்டு வராது. சமயம் சார்ந்த நம்பிக்கைகளை மக்கள் தம்மிடமிருந்து அகற்றாவிட்டால், அது அவர்கள் தேவனை சேவிப்பதற்கு பெரிய தடையாக மாறும். சமயம் சார்ந்த நம்பிக்கையுள்ள மக்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையுடன் முன்னேறிச் செல்ல எந்த வழியும் இல்லை; அவர்கள் ஒன்று, இரண்டு என அடி சறுக்குவார்கள். ஏனென்றால் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் மனுஷனை அசாதாரண சுயநீதி கொண்டவனாகவும் அகந்தை கொண்டவனாகவும் மாற்றுகின்றன. தேவன் தாம் முன்பு கூறியவற்றை, செய்தவற்றை குறித்த பழைய நினைவுகளில் திளைப்பவரல்லர்; மாறாக, ஏதாவது ஒன்று பழையதாகிவிட்டால் அதை அவர் நீக்கிப்போடுகிறார். உண்மையில் நம்பிக்கைகளை உன்னால் விட்டுவிட முடியவில்லையா? தேவன் முற்காலத்தில் கூறிய வார்த்தைகளைப் பற்றிக்கொண்டிருந்தால், இது நீ தேவனின் கிரியைகளை அறிந்திருக்கிறாய் என்பதை நிரூபிக்கிறதா? இன்று பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்தை உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், கடந்த கால வெளிச்சத்தை பற்றிக் கொண்டிருப்பதால், நீ தேவனின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறாய் என்று நிரூபிக்க இயலுமா? இன்னும்கூட சமயம் சார்ந்த நம்பிக்கைகளை உன்னால் விட்டுவிட இயலவில்லையா? அப்படியாயின் நீ தேவனை எதிர்க்கும் ஒருவனாக மாறுவாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் இன்றைய கிரியையை அறிந்துகொள்பவர்களால் மட்டுமே அவரைச் சேவிக்க இயலும்” என்பதிலிருந்து

136. தேவனின் கிரியையில் எப்போதும் புதிய முன்னேற்றங்கள் இருப்பதால், புதிய கிரியை வரும்போது, பழையதாகி வழக்கத்தில் இல்லாமல் போகிற கிரியை உண்டு. பழையதும் புதியதுமான இந்த வெவ்வேறு வகையான கிரியைகள் ஒன்றுக்கொன்று முரண்படாமல் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கின்றன, ஒவ்வொரு நடவடிக்கையும் கடைசி நடவடிக்கையிலிருந்து தொடர்கிறது. புதிய கிரியை வருவதால் பழையவை நீக்கப்படவேண்டியது கட்டாயம். எடுத்துக்காட்டாக, மனுஷனின் பல்லாண்டு அனுபவம் மற்றும் போதகத்தோடு இணைந்த நீண்டகால பழக்கவழக்கங்கள், சொல்வழக்குகள் மனதில் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும். பழங்காலம் முதல் பல ஆண்டுகளாக பரவி வரும் பாரம்பரிய கோட்பாடுகள் மனுஷனின் மனதில் இதுபோன்ற நம்பிக்கைகளை ஏற்புடையதாக உருவாக்கி வரும் நிலையில், தேவன் இன்னும் தமது உண்மையான முகத்தை, உள்ளார்ந்த தன்மையை மனுஷனுக்கு முழுவதுமாக வெளிப்படுத்த வேண்டும். காலப்போக்கில் தேவன்மேல் மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையின்மீது இதுபோன்ற பல்வேறு நம்பிக்கைகளின் தாக்கம், தேவ ஜனங்களில் எல்லாவிதமான நம்பிக்கை சார்ந்த புரிதல்கள் உருவாக தொடர்ந்து காரணமாகிறது; தேவனை சேவிக்கும் சமயரீதியான பல மக்கள் அவரது எதிரிகளாக மாறிவிட இது வழிவகுக்கிறது என்று சொல்லலாம். ஆகவே, மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் தேவனை எதிர்க்கவும், அவ்வளவு அதிகமாகய் அவருக்கு எதிரிகளாகவும் இருக்கின்றனர். தேவனின் கிரியை ஒருபோதும் பழமையாய் போகாது; அது எப்போதும் புதியதாய் இருக்கும்; ஒருபோதும் சித்தாத்தங்களை உருவாக்காது; மாறாக, தொடர்ந்து மாறி, பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இம்முறையில் செயல்படுவது தேவனின் இயல்பான மனநிலையின் ஒரு வெளிப்படுதலாகும். இது தேவனின் கிரியையின். இயல்பான கொள்கையாகவும், தேவன் தமது ஆளுகையை நிறைவேற்றும் வழிகளில் ஒன்றாகவும் உள்ளது. தேவன் இவ்வழியில் செயல்படாவிட்டால் மனுஷன் மாறாமல் அல்லது தேவனைக் குறித்து அறிந்துகொள்ள இயலாமல் போகும்; சாத்தான் தோற்கடிக்கப்படமாட்டான். இப்படியாக அவரது கிரியையில், மாற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது, ஆனால் இது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடக்கிறது. எப்படியாயினும் தேவனில் மனுஷன் நம்பிக்கை வைக்கும் முறையானது சற்று வேறுபட்டது. அவன் பழைய, பழக்கமான சித்தாத்தங்கள் மற்றும் அமைப்புகளை பற்றிக் கொள்கிறான்; அவை எந்த அளவுக்கு பழமையாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அவை அவன் மனதுக்கு பிடித்தமானவையாய் உள்ளன. மதியீனமான, கல்லைப் போல் இறுகிய மனுஷ மனதினால் தேவனுடைய ஆராய்ந்துமுடியாத புதிய கிரியைகளையும் வார்த்தைகளையும் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? ஒருபோதும் பழையவராகிப் போகாமல் எப்போதும் புதிதாய் இருக்கின்ற தேவனை மனுஷன் விரும்பவில்லை; நீண்ட பல்லும் வெள்ளை முடியும் கொண்டு ஓரிடத்தில் இருக்கிற பழைய தேவனையே அவன் விரும்புகிறான். இப்படி தேவனும் மனுஷனும் தங்களுக்கென்று சொந்த விருப்பங்களை கொண்டிருப்பதால், மனுஷன் தேவனுக்கு விரோதியாகிறான். ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகள் தேவன் புதிய கிரியைகளை செய்து கொண்டிருக்கிறார்; இன்றும்கூட பல முரண்பாடுகள் இருந்து வருகின்றன. பின்னர் அவை தீர்வுக்கு அப்பாற்பட்டவையாகி விடுகின்றன. மனுஷனுடைய முரட்டாட்டம் அல்லது எந்த மனுஷனாலும் மாற்றக்கூடாத தேவனின் ஆளுகை ஆணைகளின் காரணமாக அப்படி இருக்கக்கூடும். ஆனாலும் தம் பக்கம் யாருமில்லாததுபோல தேவன் தமது பூர்த்தியாகாத இரட்சிப்பின் பணிகளை நடத்திக்கொண்டிருக்கும்போது, அந்த குருமாரும் குருத்துவ பெண்களும் இன்னும் செல்லரித்துப் போன பழைய புஸ்தகங்கள் மற்றும் காகிதங்களை பற்றிக்கொண்டுள்ளனர். இந்த முரண்பாடுகள் தேவனுக்கும் மனுஷனுக்குமிடையே விரோதத்தை உண்டு பண்ணினாலும், அவை சரிசெய்யப்படக்கூடாதவையாயிருந்தாலும், அவை இருந்தாலும் இல்லாததுபோல தேவன் அவற்றின்மேல் கவனம் செலுத்தமாட்டார். எப்படியாயினும் மனுஷன் தன்னுடைய நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய எண்ணங்களை விட்டுவிடாமல் இருக்கிறான். மனுஷன் தன் நிலைப்பாட்டிலிருந்து மாறாமல் இருந்தாலும், தேவனது பாதங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன; சூழ்நிலைக்கேற்ப தம் நிலைப்பாட்டை அவர் எப்போதும் மாற்றிக்கொண்டே இருக்கிறார் என்பது விளக்கம் தேவைப்படாத உதாரணமாகும். முடிவில் போராட்டமே இல்லாமல் மனுஷன் தோற்கடிக்கப்படுவான். தம்மால் தோற்கடிக்கப்பட்ட அத்தனை எதிரிகளுக்கும் தேவன் பெரிய பகைவராகவும், தோற்கடிக்கப்பட்ட மற்றும் தோற்கடிக்கப்படாத மனுக்குலத்திற்கான வீரராகவும் திகழ்வார். தேவனோடு போட்டியிட்டு யாரால் ஜெயம்பெற இயலும்? தேவனுடைய கிரியை தொடங்கும்போதுதான் மனுஷனுடைய கருத்துகள் பிறப்பதால், அவை தேவனிடமிருந்து வந்தவை போன்று தோற்றமளிக்கின்றன. எப்படியாயினும் தேவன் இதற்காக மனுஷனை மன்னிப்பதில்லை; மாறாக, தமது கிரியைக்கு புறம்பான தமது கிரியை தொடங்கும்போது, “தேவனுக்காக” என்று தொகுப்பு தொகுப்பாய் மனுஷன் உருவாக்கும் தயாரிப்புகளுக்காக அவர் மனுஷனை மெச்சுவதில்லை. அதற்குப் பதிலாக, மனுஷனுடைய நம்பிக்கைகளை குறித்தும் பழைமையானதும் சமயரீதியானதுமான நம்பிக்கையை குறித்தும் அவர் மிகவும் வெறுப்படைந்திருக்கிறார், மேலும் அவர் இக்கருத்துக்கள் எப்போது முதன்முதலாக தோன்றின என்ற காலத்தை ஒப்புக்கொள்ள மனமில்லாதிருக்கிறார். மனுஷனுடைய இப்படியான நம்பிக்கைகள் தேவனுடைய சிந்தையிலிருந்தல்ல, சாத்தானிடமிருந்தும் மனுஷ மனதிலிருந்தும் தோன்றி மனுஷனால் பரப்பப்படுவதால் இக்கருத்துகள் தமது கிரியையினால் தோன்றியவை என்பதை அவர் ஒப்புக்கொள்ளமாட்டார். தமது கிரியை பழையதாகவும் செத்துப்போனதாகவும் அல்ல, புதிதாயும் ஜீவனுள்ளதாயும் இருக்கவேண்டுமென்பதே எப்போதும் தேவனின் நோக்கம். அவை காலத்திற்கேற்ப மனுஷனால் பின்பற்றப்படவேண்டியவையாயினும், அவை மாற்றப்படக்கூடாததும் அழியாதவையுமல்ல. ஏனென்றால் அவர் மனுஷனை ஜீவித்திருக்கவும் புதிதாயிருக்கவும் செய்யும் தேவனாக இருக்கிறார், மாறாக, சாத்தானோ மனுஷன் சாகவும் பழையவனாகிப் போகவும் காரணமாகிறான். உங்களால் இதை இன்னும் புரிந்துகொள்ள இயலவில்லையா? தேவனைக் குறித்து உனக்கு கருத்துகள் இருந்தாலும், உன் மனம் மூடியிருப்பதினால் அவற்றை விட்டொழிக்க இயலவில்லை. தேவனுடைய கிரியைகளில் மிகவும் குறைவான அறிவு இருப்பதாலோ, அவரது கிரியைகள் மனுஷ விருப்பங்களிலிருந்து வேறுபட்டு இருப்பதாலோ தேவன் தமது கடமைகளில் எப்போதும் அலட்சியமாக இருப்பதாலோ அல்ல. தேவன் காரியங்களை உனக்கு கடினமாக்கி வைத்திருப்பதால் அல்ல, நீ கீழ்ப்படியாதவனாக இருப்பதனாலும், சிருஷ்டியின் தன்மை உன்னிடம் சிறிதும் காணப்படாததனாலும், உன் நம்பிக்கைகளை உன்னால் விட்டுவிட முடியவில்லை. இவை எல்லாவற்றையும் நீயே வருவித்துக் கொண்டாய்; தேவனுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை. எல்லா பாடுகளும் தொல்லைகளும் மனுஷனாலேயே உருவாக்கப்படுகின்றன. தேவனுடைய எண்ணங்கள் எப்போதும் நன்மையானவையாய் இருக்கின்றன. நீ நம்பிக்கையை உருவாக்கிக்கொள்ள தாம் காரணமாவதையல்ல, காலம் செல்ல செல்ல நீ மாற்றம் பெற்று புதுப்பிக்கப்படவேண்டுமென்றே அவர் விரும்புகிறார். உனக்கு எது நன்மையானதென்று இன்னும் அறிந்திடாமல், எப்போதும் ஆராய்ந்து கொண்டு அல்லது பரிசோதித்துக் கொண்டு இருக்கிறாய். தேவன் உனக்கு காரியங்களை கடினமாக்கவில்லை; உனக்கு கீழ்ப்படியாமை பெரிதாயிருப்பதோடு தேவன்மேல் உனக்கு எந்தப் பயமுமில்லை. மிகச்சிறிய சிருஷ்டிப்பு ஒன்று, முன்பு தேவனால் கொடுக்கப்பட்ட பழையவற்றை எடுத்துக்கொண்டு, திரும்ப தேவனை தாக்குவதற்கு அதை பயன்படுத்தினால் அது மனுஷனின் கீழ்ப்படியாமைதானே? தேவன் முன்பு தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு மனுஷர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை; அவர்கள் அந்த அழுகிய கருத்துக்களைக் குறித்து எதுவும் சொல்ல விரும்பாததனால், எந்தப் பெறுமதியும் இல்லாத, துர்நாற்றம் வீசுகிற, அழுகிய, அலங்கார வார்த்தைகளை பகட்டாக காண்பிக்க தகுதியில்லாதவர்கள். அவர்கள் இன்னும் அதிக தகுதியற்றவர்கள்தானே?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் இன்றைய கிரியையை அறிந்துகொள்பவர்களால் மட்டுமே அவரைச் சேவிக்க இயலும்” என்பதிலிருந்து

137. தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது, மேலும் அவருடைய கிரியையின் நோக்கம் மாறாவிட்டாலும், அவர் கிரியை செய்யும் முறை தொடர்ந்து மாறுகிறது, அதாவது தேவனைப் பின்பற்றுகிறவர்களும்கூட தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறார்கள். தேவன் அதிகமான கிரியையைச் செய்யச்செய்ய, தேவனைப் பற்றிய அறிவு மனிதனுக்கு முழுமையாகிறது. தேவனின் கிரியையின் விளைவாக மனிதனின் மனநிலையிலும் அதற்கேற்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. இருப்பினும், தேவனுடைய கிரியை எப்போதும் மாறிக்கொண்டு இருப்பதால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறியாதவர்கள், மேலும் சத்தியத்தை அறியாத அந்த மூடத்தனமான மக்கள் தேவனை எதிர்க்கத் தொடங்குகின்றனர். தேவனின் கிரியை ஒருபோதும் மனிதனின் எண்ணங்களுக்கு ஏற்ப இருப்பதில்லை, ஏனெனில் அவரது கிரியை எப்போதும் புதியதே தவிர ஒருபோதும் பழையதல்ல, மற்றும் அவர் ஒருபோதும் பழைய கிரியையைத் திருப்பிச் செய்வதில்லை, ஆனால் மாறாக முன்னெப்போதும் செய்யப்படாத கிரியையுடன் முன்னோக்கிச் செல்கிறார். தேவன் தாம் செய்த அதே கிரியையைத் திருப்பிச் செய்வதில்லை என்பதாலும், மனிதன் எப்போதும் தேவன் கடந்த காலத்தில் செய்த கிரியையை வைத்தே அவரது தற்போதைய கிரியையை மதிப்பிடுவதினாலும், புதிய காலத்தின் கிரியையின் ஒவ்வொரு கட்டத்தையும் நிறைவேற்றுவது தேவனுக்கு மிகவும் கடினமாகிவிட்டது. மனிதனுக்கோ மிக அதிக அளவிலான கஷ்டங்கள்! அவன் தனது சிந்தனைகளில் மிகவும் பழமைவாதியாக இருக்கிறான்! தேவனின் கிரியையை எவரும் அறியவில்லை, ஆனால் ஒவ்வொருவரும் அதற்கு எல்லைவகுக்கின்றனர். தேவனை விட்டு விலகும் போது மனிதன் ஜீவன், சத்தியம் மற்றும் தேவ ஆசீர்வாதங்களை இழக்கிறான், ஆனால் அவன் ஜீவன் அல்லது சத்தியத்தை ஏற்காவிட்டால், மனுக்குலத்திற்கு பெரும் ஆசீர்வாதங்களில் மிகக் குறைவானவற்றையே தேவன் வழங்குகிறார். எல்லா மனிதர்களும் தேவனை அடையவே விரும்புகின்றனர், ஆனால் தேவனின் கிரியைகளில் எந்த ஒரு மாற்றத்தையும் அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தேவனின் புதிய கிரியையை ஏற்காதவர்கள் தேவனின் கிரியை மாறாதது என்றும் அது என்றென்றும் நிலைமாறாமல் இருக்கும் என்றும் நம்புகின்றனர். அவர்களது நம்பிக்கையின்படி, நித்திய இரட்சிப்பை அடையத் தேவையானதெல்லாம் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிப்பது மட்டுமே, மேலும் அவர்கள் மனந்திரும்பி தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு விட்டாலே தேவனின் சித்தம் எப்போதும் நிறைவேறிவிடும். நியாயப்பிரமாணத்தின் கீழ் இருக்கும் தேவனும், மனிதனுக்காக சிலுவையில் அறையப்பட்ட தேவனும் மட்டுமே தேவனாக இருக்க முடியும் என்று அவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்; வேதாகமத்தை தேவன் மிஞ்சக் கூடாது மற்றும் மிஞ்ச முடியாது என்பதும் கூட அவர்களது எண்ணம் ஆகும். சரியாகச் சொல்லப்போனால், இந்த எண்ணங்களே அவர்களைப் பழைய நியாயப்பிரமாணங்களுடன் பிணைத்து செத்த விதிகளுடன் சேர்த்துவைத்து அறைந்துள்ளன. தேவனின் புதிய கிரியை எதுவாக இருந்த போதிலும், அது தீர்க்கதரிசனங்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும், மேலும் அத்தகைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், “உத்தம” இருதயத்துடன் அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் வெளிப்பாடுகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்; அப்படி இல்லை என்றால், அத்தகைய கிரியைகள் தேவனின் கிரியைகளாக இருக்க முடியாது என்று நம்பும் மேலதிகமானோரும் உள்ளனர்; தேவனை அறிந்துகொள்ளுவது என்பது மனிதனுக்கு ஏற்கெனவே ஓர் எளிமையான காரியம் அல்ல. மனிதனின் மூட இருதயத்தோடு கூடுதலாக அவனது சுய-முக்கியத்துவம் மற்றும் அகம்பாவம் என்னும் கலக சுபாவத்தின் காரணமாக தேவனின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளுவது அவனுக்கு இன்னும் கடினமானதாக இருக்கிறது. தேவனின் புதிய கிரியையை மனிதன் கவனமாகக் கருத்தில் கொள்ளுவதுமில்லை, அதைத் தாழ்மையோடு ஏற்றுக்கொள்ளுவதும் இல்லை; அதற்குப் பதிலாக, அவன் தேவனிடம் இருந்து வெளிப்பாடுகளுக்காகவும் வழிகாட்டுதலுக்காகவும் காத்திருந்து ஓர் அலட்சியமான மனப்போங்கை கடைபிடிக்கிறான். இது தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்து அவரை எதிர்ப்பவர்களின் நடத்தை அல்லவா? இத்தகைய மக்கள் தேவனின் அங்கீகாரத்தை எவ்வாறு பெற முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லை வகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?” என்பதிலிருந்து

138. மனிதன் தேவனை நம்புகிறான் என்பதால், அவன் படிப்படியாக, தேவனுடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகபின்பற்றவேண்டும்; அவன்“ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்ற” வேண்டும். இவர்கள் மட்டுமே உண்மையான வழியை நாடுகிற ஜனங்களாக இருக்கிறார்கள், இவர்கள் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறிந்தவர்களாய் இருக்கிறார்கள். எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றை அடிமைத்தன இயல்புடன் பின்பற்றுகிறவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் நீக்கிப்போடப் பட்டிருப்பவர்களாய் இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், தேவன் புதிய கிரியையைத் தொடங்குவார், ஒவ்வொரு காலகட்டத்திலும், மனுஷர்களிடையே ஒரு புதிய தொடக்கம் இருக்கும். அந்தந்த யுகங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சத்தியங்களான “யேகோவாவே தேவனாக இருக்கின்றார்” மற்றும் “இயேசுவே கிறிஸ்துவாக இருக்கின்றார்” என்ற சத்தியங்களில் மாத்திரம் மனுஷன் நிலைத்திருந்தால், மனுஷன் ஒருபோதும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தொடரமாட்டான், மற்றும் அவன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஆதாயப்படுத்திக் கொள்ள இயலாதவனாகவே இருப்பான். தேவன் எவ்விதமாகக் கிரியை செய்கின்றார் என்பதைப் பொருட்படுத்தாமல், மனுஷன் சற்றும் சந்தேகம் இன்றிப் பின்தொடர்கிறான், மற்றும் அவன் நெருக்கமாகப் பின்தொடர்கிறான். இந்த வழியில், பரிசுத்த ஆவியானவரால் மனுஷனை எவ்வாறு நீக்கிப்போட முடியும்? தேவன் என்ன செய்கின்றார் என்பதைப் பொருட்படுத்தாமல், அது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று மனுஷன் உறுதியாக நம்புகிறவரை, மற்றும் அவன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் எந்தவிதமான ஐயப்பாடுகளுமின்றி ஒத்துழைக்கும் வரை, தேவனுடைய நிபந்தனைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறவரை, அவன் தண்டிக்கப்படக் கூடுவது எப்படி? தேவனுடைய கிரியை ஒருபோதும் ஒழிந்து போவதில்லை, அவருடைய அடிச்சுவடுகள் ஒருபோதும் நின்றுபோயிருக்கவில்லை, அவருடைய நிர்வாகக் கிரியையை முடிப்பதற்கு முன்பு, அவர் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்திருக்கின்றார், மற்றும் அவர் ஒருபோதும் நிறுத்தவில்லை. ஆனால் மனிதன் வேறுபட்டவனாக இருக்கிறான்: பரிசுத்த ஆவியானவரின் கிரியையினுடைய சிறு அளவை ஆதாயப்படுத்தியுள்ள நிலையில், அவன் அது ஒருபோதும் மாறாது என்பது போன்று அதை அவன் நடத்துகிறான்; கொஞ்சம் அறிவை பெற்றுக்கொண்ட நிலையில் அவன், தேவனுடைய புதிய கிரியையின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முன்வருவதில்லை; தேவனின் ஒரு சிறிய கிரியையைக் கண்டாலும், அவன் உடனடியாகத் தேவனைக் குறிப்பிட்ட ஒரு மரச்சிற்பமாகப் பரிந்துரைக்கிறான், மற்றும் தனக்கு முன்பாகக் காணும் இந்த வடிவத்திலேயே தேவன் எப்போதும் எப்போதும் இருப்பார் என்று நம்புகிறான், இது கடந்த காலங்களில் இதைப் போன்றதாக இருந்தது, மற்றும் எதிர்காலத்திலும் எப்போதும் இவ்வாறே இருக்கும்; மனுஷன் மேலோட்டமான அறிவைப் பெற்றிருந்தாலும், அவன் தன்னையே மறக்கும் அளவுக்கு மிகுந்த கர்வம் கொண்டு, ஒரு மனநிலையையும் மற்றும் இருப்பையும் கொண்டிராத ஒரு தேவனைப் பொறுப்பற்ற வகையில் பறைசாற்றத் தொடங்குகிறான்; மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினுடைய ஒரு கட்டத்தைப்பற்றி நிச்சயப்படுத்திக் கொண்ட நிலையில், தேவனுடைய புதிய கிரியையைப் பறைசாற்றுபவர் எவ்வகைப்பட்ட நபராக இருந்தாலும், மனுஷன் அதை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்கள் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ள முடியாத ஜனங்களாக உள்ளனர்; இவர்கள் மிகவும் பழமைவாதிகளாக உள்ளனர், மற்றும் புதிய விஷயங்களை ஏற்க இயலாதவர்களாய் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஜனங்கள் தேவனை நம்புகிறார்கள், ஆனால் தேவனை நிராகரிக்கவும் செய்கிறார்கள். இஸ்ரவேலர் “யேகோவாவை மட்டுமே நம்பி, இயேசுவை நம்பாமல்” தவறானவர்களாய் இருந்தார்கள் என்று மனுஷன் நம்புகிறான், ஆனாலும் பெரும்பான்மையானமக்கள் “யேகோவாவை மட்டுமே நம்புகிறார்கள், இயேசுவை நிராகரிக் கிறார்கள்” மற்றும் “மேசியா திரும்பி வருவதற்கு ஏங்குகிறார்கள், ஆனால் இயேசு என்று அழைக்கப்படும் மேசியாவை எதிர்க்கவும் செய்கிறார்கள்” என்ற ஒரு பாத்திரத்தில் வெளிப்படையாகச் செயல்படுகிறார்கள். ஆகவே, பரிசுத்த ஆவியின் கிரியையின் ஒரு கட்டத்தை ஏற்றுக்கொண்ட பிறகும் ஜனங்கள் சாத்தானின் களத்தில் வாழ்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை, மற்றும் அவர்கள் இன்னும் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறவில்லை. இது மனிதனின் கலகத்தன்மையின் விளைவாக இருக்கிறது அல்லவா? இன்றைய புதிய கிரியையைக் கடைப்பிடிக்காத உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் தாங்கள் அதிர்ஷ்டம் பெறுவோம், தங்களின் ஒவ்வொரு விருப்பத்தையும் தேவன் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆயினும், தேவன் அவர்களை மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துச் செல்வார் என்பது ஏன் என்று அவர்களால் உறுதியாகச் சொல்லமுடியாது, அல்லது அவர்களை அழைத்துச் செல்ல இயேசு ஒரு வெண்மையான மேகத்தின்மீது ஏறி வருவார் என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை, அவர்கள் கற்பனை செய்யும் நாளில் வெண்மையான மேகத்தின்மீது இயேசு உண்மையிலேயே வருவாரா என்பதை அவர்கள் கூறமுடியாது. அவர்கள் அனைவரும் பெருங்கவலைப் படுகிறார்கள், மற்றும் குழப்பத்தில் இருக்கிறார்கள்; ஒவ்வொரு சபைப் பிரிவையும் சேர்ந்த பலதரப்பட்ட சிறு ஜனக்கூட்டத்திலுள்ள அவர்கள் ஒவ்வொருவரையும் தேவன் எடுத்துக்கொள்வாரா என்று அவர்களுக்குத் தெரியாது. தற்போதய யுகத்தில், இப்போது தேவன் செய்யும் கிரியை, இந்த விஷயங்களில் எதையும் தேவன் பிடித்துக் கொண்டிருப்பதில்லை, மற்றும் அவர்கள் தங்கள் விரல்களின் மீது நாட்களை இறங்கு வரிசையில் எண்ணுதல் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைக் கடைசிவரை பின்பற்றுபவர்கள் மட்டுமே இறுதியான ஆசீர்வாதத்தைப் பெறமுடியும், அதேசமயம் அந்தக் கடைசிவரை பின்பற்ற முடியாமலே இன்னும் அனைத்தையும் பெற்றதாக நம்புகிற அந்த “புத்திசாலிஜனங்கள்” தேவன் தோன்றுவதைக் காண இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பூமியில் புத்திசாலித்தனமான நபராயிருக்கிறதாக நம்புகிறார்கள், மேலும் அவர்கள் எந்தக் காரணமும் இல்லாமல் தேவனுடைய கிரியையின் தொடர்ச்சியான வளர்ச்சியைக் குறைத்து விடுகிறார்கள், மேலும் தேவன் அவர்களைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்வார் என்று முழுமையான உறுதியுடன் நம்புவதாகத் தெரிகிறது, “மிகுந்த விசுவாசமுள்ளவர்கள் தேவனிடம், தேவனைப் பின்பற்றுங்கள், தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்.” தேவனால் பேசப்பட்ட வார்த்தைகளுக்கு அவர்கள் “மிகுந்தவிசுவாசம்” கொண்டிருந்தாலும், அவர்களுடைய வார்த்தைகளும் செயல்களும் இன்னும் வெறுக்கத் தக்கவையாகவே உள்ளன, ஏனென்றால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை எதிர்க்கிறார்கள், மேலும் வஞ்சகத்தையும் பொல்லாங்கையும் செய்கிறார்கள். கடைசிவரை பின்பற்றாதவர்கள், பரிசுத்த ஆவியின் கிரியையைப் பின்தொடராதவர்கள், மற்றும் பழைய கிரியையை மட்டுமே பிடித்திருப்பவர்கள், தேவனுக்கு விசுவாசத்தைக் காண்பிக்கத் தவறியது மட்டுமல்லாமல், இதற்கு மாறாக, தேவனை எதிர்ப்பவர்கள் ஆகியுள்ளனர், புதிய யுகத்தால் நிராகரிக்கப்படுபவர்களாகவும், தண்டிக்கப்படுபவர்களாகவும் ஆகியுள்ளனர். அவர்களைவிட அதிகம் பரிதாபகரமானவர்கள் யாராவது இருக்கிறார்களா? பழைய நியாயப்பிரமாணத்தை நிராகரித்து புதிய கிரியையை ஏற்றுக்கொள்கிறவர்கள் யாவரும் மனசாட்சி இல்லாமல் இருக்கிறார்கள் என்றுகூடப் பலர் நம்புகிறார்கள். “மனசாட்சியை” பற்றி மட்டுமே பேசுகிற, மற்றும் பரிசுத்தஆவியின் கிரியையை அறியாத இந்த ஜனங்கள், இறுதியில் தங்கள் சுய மனசாட்சியால் தங்கள் வாய்ப்புகளைக் குறைத்துக் கொள்வார்கள். தேவனுடைய கிரியை கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதில்லை, அது அவருடைய சொந்தக் கிரியையாக இருந்தாலும், தேவன் இன்னமும் அதை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்கிறது இல்லை. மறுக்கப்படவேண்டியது மறுக்கப்படுகிறது, அகற்றப்படவேண்டியது அகற்றப்படுகிறது. ஆயினும், தேவனுடைய நிர்வகித்தலின் ஒரு சிறிய பகுதியை உறுதியாய்ப் பற்றிக் கொள்வதன் மூலம் மனுஷன் தன்னைத்தானே தேவனிடத்தில் பகைமையுள்ள இடத்தில் வைக்கிறான். இது மனிதனின் அபத்தமாயிருக்கிறது அல்லவா? இது மனிதனின் அறியாமையாயிருக்கிறது அல்லவா? ஜனங்கள் எவ்வளவு அதிகமாய் மாபெரும் ஆசீர்வாதங்களை பெறமுடியாமல், மற்றும் இறுதி ஆசீர்வாதத்தைப் பெறமுடியாமல் இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் பயத்துடனும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும் இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற மாட்டோமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள், அடிமைத்தனமாகப் நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்கிற அந்த ஜனங்கள் அனைவரும் நியாயப்பிரமாணத்தின்மீது மிகுந்த விசுவாசத்தைக் காட்டுகிறார்கள், மேலும் அவர்கள் எவ்வளவு அதிகமாய்ப் நியாயப்பிரமாணத்தை நோக்கித் தங்கள் விசுவாசத்தைக் காட்சிப்படுத்துகிறார்களோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் தேவனை எதிர்க்கிற கலகக்காரர்களாக் இருக்கிறார்கள். இராஜ்யத்தின் காலமே இப்போதுள்ளது, நியாயப்பிரமாணத்தின் காலமல்ல, மற்றும் இன்றைய நாளின் கிரியை மற்றும் கடந்த காலத்தின் கிரியை ஆகியவை ஒரே மூச்சில் குறிப்பிடப்பட முடியாது, அல்லது கடந்த காலத்தின் கிரியை இன்றைய நாளின் கிரியையுடன் ஒப்பிடப்பட முடியாது. தேவனுடையகிரியைமாறியுள்ளது, மனிதனின் நடைமுறையும் மாறியுள்ளது; இதுநியாயப்பிரமாணத்தைப் பற்றிக்கொள்வதாகவோ அல்லதுசிலுவையைச் சுமப்பதாகவோ இருப்பதில்லை, ஆகவே நியாயப்பிரமாணம் மற்றும் சிலுவை மீதான ஜனங்களின் விசுவாசம் தேவனின் அங்கீகாரத்தைப்பெறாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்” என்பதிலிருந்து

139. மனுஷன் சீர்கெட்டு, சாத்தானின் வலையில் வாழ்கிறான். எல்லா ஜனங்களும் மாம்சத்தில் வாழ்கிறார்கள், சுயநல ஆசைகளுடன் வாழ்கிறார்கள், அவர்களில் எனக்கு இணக்கமாய் ஒருவரும் இல்லை. என்னுடன் இணக்கமாய் இருப்பதாகச் சொல்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அத்தகையவர்கள் அனைவரும் குழப்பமான விக்கிரகங்களை வணங்குகிறார்கள். அவர்கள் எனது பெயரை பரிசுத்தமானதாக ஒப்புக் கொண்டாலும், அவர்கள் எனக்கு முரணான ஒரு பாதையில் நடக்கிறார்கள், அவர்களுடைய வார்த்தைகள் ஆணவமும் தன்னம்பிக்கையும் நிறைந்ததாக உள்ளன. ஏனென்றால், அடிப்படையிலேயே, அவர்கள் அனைவரும் எனக்கு எதிரானவர்கள், எனக்கு இணக்கமாய் இராதவர்கள். ஒவ்வொரு நாளும், அவர்கள் வேதாகமத்தில் எனது அடிச்சுவடுகளை நாடுகிறார்கள், சீரற்ற முறையில் “பொருத்தமான” பத்திகளைக் கண்டுபிடித்து, அவர்கள் முடிவில்லாமல் வாசித்து, வேதங்களாக மனப்பாடம் செய்கிறார்கள். என்னுடன் எவ்வாறு இணக்கமாய் இருக்க வேண்டுமென்பதோ அல்லது எனக்கு எதிராக இருப்பதன் பொருள் என்ன என்பதோ அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வெறுமனே வேதத்தைக் கண்மூடித்தனமாக வாசிக்கிறார்கள். வேதாகமத்துக்குள், அவர்கள் இதுவரை கண்டிராத, அவர்களால் பார்க்க இயலாத ஒரு வரையறையற்ற தேவனைக் கட்டுப்படுத்துகிறார்கள், மற்றும் அதனை ஓய்வு நேரத்தில் பார்ப்பதற்காக வெளியே எடுக்கிறார்கள். அவர்கள் நான் இருப்பதை வேதாகமத்தின் எல்லைக்குள் மட்டுமே விசுவாசிக்கிறார்கள், அவர்கள் என்னை வேதாகமத்துடன் ஒப்பிடுகிறார்கள்; வேதாகமம் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் வேதாகமம் இல்லை. அவர்கள் எனது பிரசன்னத்துக்கோ அல்லது கிரியைகளுக்கோ செவிசாய்ப்பதில்லை, மாறாக வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் தீவிரமான மற்றும் சிறப்பான கவனம் செலுத்துகிறார்கள். வேதத்தால் முன்னறிவிக்கப்பட்டிருந்தாலொழிய நான் செய்ய விரும்பும் எதையும் நான் செய்யக்கூடாது என்று இன்னும் பலர் நம்புகிறார்கள். அவர்கள் வேதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அளவிடுவதற்கும் என்னை நிந்திப்பதற்கும் அவர்கள் வேதாகமத்தின் வசனங்களைப் பயன்படுத்தும் அளவிற்கு, வார்த்தைகளையும் வெளிப்பாடுகளையும் மிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள் என்று கூறலாம். அவர்கள் தேடுவது என்னுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியையோ அல்லது சத்தியத்திற்கு இணக்கமாய் இருப்பதற்கான வழியையோ அல்ல, ஆனால், வேதாகமத்தின் வார்த்தைகளுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியைத் தேடுகிறார்கள், மற்றும் அவர்கள் வேதாகமத்திற்கு இணங்காத எதையும் விதிவிலக்கு இல்லாமல், எனது கிரியை அல்ல என்று அவர்கள் நம்புகிறார்கள். அத்தகையவர்கள் பரிசேயர்களின் கடமைப்பட்ட சந்ததியினர் அல்லவா? யூத பரிசேயர்கள் இயேசுவைக் கண்டிக்க மோசேயின் நியாயப்பிரமாணத்தை பயன்படுத்தினர். அவர்கள் அந்தக் கால இயேசுவோடு இணக்கத்தைத் தேடவில்லை, ஆனால் எழுத்துக்களுக்கான நியாயப்பிரமாணத்தை விடாமுயற்சியுடன் பின்பற்றினார்கள், பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றவில்லை என்றும் மேசியாவாக இல்லை என்றும் அவரைக் குற்றம் சாட்டும் அளவிற்குச் சென்று, அவர்கள் இறுதியில் குற்றமற்ற இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அவர்களின் சாராம்சம் என்ன? அவர்கள் சத்தியத்துக்கு இணக்கமாய் இருக்கும் வழியைத் தேடவில்லை அல்லவா? எனது சித்தத்திற்கு அல்லது எனது கிரியையின் படிகள் மற்றும் வழிமுறைகளுக்கு செவிசாய்க்கும்போது அவர்கள் வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் பற்று வைத்திருந்தனர். அவர்கள் சத்தியத்தை நாடிய ஜனங்கள் அல்ல, மாறாக வார்த்தைகளை திடமாகப் பற்றிக்கொண்ட ஜனங்கள்; அவர்கள் தேவனை விசுவாசிக்கும் ஜனங்கள் அல்ல, வேதத்தை விசுவாசிப்பவர்கள். அடிப்படையில், அவர்கள் வேதத்தின் கண்காணிப்பாளர்கள். வேதாகமத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், வேதாகமத்தின் கெளரவத்தை நிலைநிறுத்துவதற்கும், வேதாகமத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் இரக்கமுள்ள இயேசுவை சிலுவையில் அறையும் அளவுக்குச் சென்றார்கள். வேதாகமத்தைப் பாதுகாப்பதற்காகவும், வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையின் நிலையையும் ஜனங்களின் இதயங்களில் பேணுவதற்காகவும் மட்டுமே அவர்கள் இவ்வாறு செய்தனர். ஆகவே, வேதத்தின் கோட்பாட்டிற்கு இணங்காத இயேசுவிற்கு மரண தண்டனையைக் கொடுப்பதற்காக அவர்கள் தங்கள் எதிர்காலத்தையும் பாவநிவாரணத்தையும் கைவிட விரும்பினர். அவர்கள் அனைவரும் வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையின் சேவகர்கள் இல்லையா?

இன்றைய ஜனங்கள் எவ்வாறு இருக்கின்றனர்? கிறிஸ்து சத்தியத்தை வெளிப்படுத்த வந்திருக்கிறார், ஆனாலும் அவர்கள் பரலோகத்திற்குள் நுழைந்து கிருபையைப் பெறக்கூடும் என்பதால் அவரை இந்த உலகத்திலிருந்து துரத்துவார்கள். வேதாகமத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் சத்தியத்தின் வருகையை முற்றிலுமாக மறுப்பார்கள், மேலும் வேதாகமத்தின் நித்திய இருப்பை உறுதி செய்வதற்காக, மாம்சத்திற்குத் திரும்பிய கிறிஸ்துவை மீண்டும் சிலுவையில் அறைவார்கள். மனுஷனின் இதயம் மிகவும் தீங்கிழைப்பதாகவும் மற்றும் அவனது இயல்பு என்னை நோக்கி மிகவும் விரோதமாகவும் இருக்கும்போது அவனால் எப்படி எனது இரட்சிப்பைப் பெற முடியும்? நான் மனுஷனிடையே வாழ்கிறேன், ஆனாலும் எனது பிரசன்னத்தை மனுஷன் அறியவில்லை. நான் மனுஷனின் மீது எனது ஒளியைப் பிரகாசிக்கச் செய்யும்போது, அவன் அப்போதும் எனது பிரசன்னத்தை அறியாமல் இருக்கிறான். நான் மனுஷனின் மீது எனது கோபத்தைக் கட்டவிழ்த்து விடும்போது, அவன் எனது பிரசன்னத்தை இன்னும் அதிக வீரியத்துடன் மறுக்கிறான். மனுஷன் வார்த்தைகளுக்கு இணக்கமாய் இருக்கும் தன்மையையும் வேதாகமத்திற்கு இணக்கமாய் இருக்கும் தன்மையையும் தேடுகிறான், ஆனாலும் சத்தியத்துக்கு இணக்கமாய் இருக்கும் வழியைத் தேட ஒருவர் கூட என் முன்னால் வருவதில்லை. மனுஷன் பரலோகத்தில் என்னைப் பார்க்கிறான், பரலோகத்தில் எனது பிரசன்னத்திற்கு குறிப்பாக அக்கறை செலுத்துகிறான், ஆனாலும் மாம்சத்தில் இருக்கும் என்னைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை, ஏனென்றால் மனுஷர்களிடையே வாழும் நான் அதிக முக்கியத்துவம் இல்லாதவன். வேதாகமத்தின் வார்த்தைகளுடன் மட்டுமே இணக்கமாய் இருக்க நாடுகிறவர்கள் மற்றும் தெளிவற்ற தேவனுடன் மட்டுமே இணக்கமாய் இருக்க நாடுபவர்கள் எனது பார்வைக்கு மோசமானவர்கள். ஏனென்றால், அவர்கள் இறந்த வார்த்தைகளையும், சொல்லப்படாத பொக்கிஷங்களை அவர்களுக்கு வழங்கக்கூடிய தேவனையுமே ஆராதிக்கின்றனர்; அவர்கள் மனுஷனின் தயவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு இல்லாத தேவனை ஆராதிக்கின்றனர். அப்படியானால், அத்தகையவர்கள் என்னிடமிருந்து என்ன பெற முடியும்? மனுஷன் வெறுமனே வார்த்தைகளுக்கு மிகவும் தாழ்ந்தவன். எனக்கு விரோதமாய் இருப்பவர்கள், என்னிடம் வரம்பற்ற கோரிக்கைகளை முன்வைப்பவர்கள், சத்தியத்தின் மீது அன்பு இல்லாதவர்கள், என்னை நோக்கி கலகம் செய்பவர்கள்—அவர்களால் என்னுடன் எவ்வாறு இணக்கமாய் இருக்க முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியை நாட வேண்டும்” என்பதிலிருந்து

140. தேவன் அசையாத களிமண் சிலையாக இருக்கிறார் என்பது போல அவரை மதிப்பிடவும் வரையறுக்கவும் உங்கள் சொந்தக் கருத்துகளைப் பயன்படுத்தினால், நீங்கள் வேதாகமத்தின் எல்லைக்குள் தேவனை முழுவதுமாக வரையறுத்து, ஒரு குறிப்பிட்ட வேலை வரம்பிற்குள் அவரை அடக்கி வைத்தால், நீங்கள் தேவனை நிந்திக்கிறீர்கள் என்பதை இது காட்டுகிறது. ஏனென்றால், பழைய ஏற்பாட்டின் காலத்தில் இருந்த யூதர்கள், தேவனை அவர்கள் தங்கள் இருதயங்களில் வைத்திருக்கும் ஓர் உருமாறாத சிலையாக வைத்திருந்தார்கள், தேவனை மேசியா என்று மட்டுமே அழைக்க முடியும், மேசியா என்று அழைக்கப்படுபவர் மட்டுமே தேவனாக இருக்க முடியும் என்றும், தேவனை ஒரு (உயிரற்ற) களிமண் சிலை போல கருதி அவருக்கு மனிதகுலம் ஊழியம் செய்து வணங்கியதால், அவர்கள் அந்தக் காலத்தில் வந்த இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள், அவருக்கு மரண தண்டனை அளித்தார்கள். குற்றமற்ற இயேசு இவ்வாறு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். எந்தவொரு குற்றத்திற்கும் தேவன் பாத்திரமற்றவர், ஆனாலும் மனுஷன் அவரைக் காப்பாற்ற மறுத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி வற்புறுத்தினான், அதனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். தேவன் எப்போதும் மாறாதவர் என்று மனுஷன் எப்போதும் விசுவாசிக்கிறான், வேதாகமம் என்ற ஒரே ஒரு புத்தகத்தின் அடிப்படையில் அவரை வரையறுக்கிறான், தேவனின் ஆளுகையைப் பற்றி மனுஷனுக்கு ஒரு முழுமையான புரிதல் இருப்பதைப் போலவும், தேவன் செய்யும் எல்லாவற்றையும் மனுஷன் தன் உள்ளங்கையில் வைத்திருப்பதைப் போலவும் விசுவாசிக்கிறான். ஜனங்கள் மிகவும் புத்தியீனமானவர்கள், மிகவும் ஆணவக்காரர்கள், அவர்கள் அனைவருக்கும் மிகைப்படுத்திக் கூறும் ஒரு இயல்பான திறமை உள்ளது. தேவனைப் பற்றிய உங்கள் அறிவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நீங்கள் தேவனை அறியவில்லை என்றும், நீங்கள் தேவனை மிகவும் எதிர்க்கும் ஒருவர் என்றும், தேவனை நிந்திக்கிறீர்கள் என்றும் நான் இன்னும் சொல்கிறேன், ஏனென்றால் நீங்கள் தேவனின் செயலுக்குக் கீழ்ப்படிந்து, தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்ட பாதையில் நடக்கவும் முற்றிலும் திரணியில்லாதவர்கள். மனுஷனின் செயல்களில் தேவன் ஏன் ஒருபோதும் திருப்தியடைவதில்லை? ஏனென்றால், மனுஷனுக்கு தேவனைத் தெரியாது, ஏனென்றால் அவனுக்குப் பல கருத்துகள் உள்ளன, மேலும் தேவனைப் பற்றிய அவனுடைய அறிவு எந்த வகையிலும் யதார்த்தத்துடன் உடன்படவில்லை, மாறாக, ஒரே கருத்தை ஒரே மாதிரியாக மாறுபாடின்றி மீண்டும் மீண்டும் சொல்கிறான், மேலும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரே அணுகுமுறையைப் பயன்படுத்துகிறான். எனவே, தேவன் இன்று பூமிக்கு வந்தால், மீண்டுமொருமுறை மனிதனால் சிலுவையில் அறையப்படுவார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “துன்மார்க்கன் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவான்” என்பதிலிருந்து

141. பல ஆயிரம் ஆண்டுகளாக, இரட்சகரின் வருகையைக் காண்பதற்காக மனிதன் ஏங்குகிறான். இரட்சகராகிய இயேசு, அவருக்காக ஏங்கிய மற்றும் அவருக்காக காத்திருந்த ஜனங்களின் மத்தியில், ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நேரில் காண்பதற்காக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் ஏங்குகிறான். இரட்சகர் திரும்பி வந்து மீண்டும் அவர்களுடன் ஒன்றிணைய வேண்டுமெனவும் மனிதன் ஏங்குகிறான். அதாவது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜனங்களிடமிருந்து பிரிந்த இரட்சகராகிய இயேசு திரும்பி வருவதற்கும், யூதர்களிடையே அவர் செய்த மீட்பின் கிரியையை மீண்டும் செய்வதற்கும், மனிதனிடம் இரக்கமுள்ளவராகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்றும் ஏங்குகிறான். மனிதனுடைய பாவங்களை மன்னித்து, மனிதனுடைய பாவங்களைச் சுமந்து, மனிதனுடைய எல்லா மீறுதல்களையும் தாங்கி, மனிதனை பாவத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென மனிதன் ஏங்குகிறான். மனிதன் எதற்காக ஏங்குகிறான் என்றால், இரட்சகராகிய இயேசு முன்பு போலவே இருக்க வேண்டும் என்று, அதாவது இரட்சகர் அன்பானவராக, கனிவானவராக, மரியாதைக்குரியவராக, மனிதனிடம் ஒருபோதும் கோபப்படாதவராக, மனிதனை ஒருபோதும் நிந்திக்காதவராக, ஆனால் மனிதனுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து ஏற்றுக்கொள்பவராக, முன்பு போலவே, மனிதனுக்காக சிலுவையில் மரிப்பவராக இருக்க வேண்டுமென மனிதன் ஏங்குகிறான். இயேசு புறப்பட்டதிலிருந்து, அவரைப் பின்பற்றிய சீஷர்களும், அவருடைய நாமத்தில் இரட்சிக்கப்பட்ட எல்லா பரிசுத்தவான்களும், அவருக்காக மிகுதியாக ஏங்கிக் காத்திருக்கிறார்கள். கிருபையின் யுகத்தில் இயேசு கிறிஸ்துவின் கிருபையால் இரட்சிக்கப்பட்ட அனைவருமே, இரட்சகராகிய இயேசு ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி, எல்லா ஜனங்களுக்கும் முன்பாக தோன்றும் அந்த மகிழ்ச்சியான கடைசி நாளுக்காக, ஏங்குகிறார்கள். இன்று, இரட்சகராகிய இயேசுவின் நாமத்தை ஏற்றுக் கொள்ளும் அனைவரின் ஒருமித்த விருப்பமும் இதுதான். இட்சகராகிய இயேசுவின் இரட்சிப்பை அறிந்திருக்கும் உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, தாம் திடீரென வந்து நிறைவேற்றுவேன் என்று சொன்னதை நிறைவேற்ற வேண்டுமென ஆவலுடன் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்: “நான் புறப்பட்டபடியே திரும்பி வருவேன்.” சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததைத் தொடர்ந்து, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு உன்னதமானவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்க மீண்டும் பரலோகத்திற்குச் சென்றார் என்று மனிதன் விசுவாசிக்கிறான். இதைப் போலவே, இயேசு மீண்டும் ஒரு வெண்மேகத்தின் மீது (இந்த மேகமானது இயேசு பரலோகத்திற்குத் திரும்பியபோது ஏறிச்சென்ற அதே மேகத்தைக் குறிக்கிறது) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவருக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தவர்களின் மத்தியில் அதே உருவத்துடனும் யூத வஸ்திரங்களுடனும் இறங்கி வருவார். அவர் மனிதனுக்குத் தோன்றியபின், அவர்களுக்கு ஆகாரத்தைக் கொடுப்பார், மேலும் அவர்களுக்காக ஜீவத்தண்ணீரைப் பாயச்செய்வார் மற்றும் மனிதர்களிடையே கிருபையும் அன்பும் நிறைந்த ஒருவராக, தெளிவானவராக மற்றும் உண்மையானவராக ஜீவிப்பார். இத்தகைய கருத்துக்கள் அனைத்தையும் ஜனங்கள் நம்புகின்றனர். ஆயினும், இரட்சகராகிய இயேசு இதைச் செய்யவில்லை. மனிதன் எண்ணியதற்கு நேர்மாறாக அவர் செய்தார். அவர் திரும்பி வர வேண்டுமென ஏங்கியவர்களிடையே அவர் வரவில்லை. வெண்மேகத்தின் மீது வரும் போது எல்லா ஜனங்களுக்கும் அவர் காட்சியளிக்கவில்லை. அவர் ஏற்கனவே வந்துவிட்டார், ஆனால் மனிதன் அவரை அறியவில்லை. அவரை அறியாதவனாக இருக்கிறான். ஒரு “வெண்மேகத்தின்” மீது (அந்த மேகமானது அவரது ஆவியாகிய மேகம், அவருடைய வார்த்தைகள், அவருடைய முழு மனநிலை மற்றும் அவருடைய எல்லாம்) அவர் இறங்கி வந்துவிட்டார் என்பதையும், கடைசி நாட்களில் தாம் உருவாக்கும் ஒரு ஜெயங்கொள்ளும் கூட்டத்தின் மத்தியில் இப்போது அவர் இருக்கிறார் என்பதையும் மனிதன் அறியாமலேயே, அவருக்காக அவன் காரணமில்லாமல் காத்திருக்கிறான். மனிதனுக்கு இது தெரியாது: பரிசுத்த இரட்சகராகிய இயேசு மனிதனிடம் நேசத்துடனும் அன்புடனும் இருந்தபோதிலும், அசுத்தமான மற்றும் தூய்மையற்ற ஆவிகள் வசிக்கும் அந்த “தேவாலயங்களில்” அவர் எவ்வாறு கிரியை செய்ய முடியும்? மனிதன் அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், பாவிகளுடைய மாம்சத்தை புசிப்பவர்களுடனும், இரத்தத்தைக் குடிப்பவர்களுடனும், அவர்களுடைய வஸ்திரங்களை உடுத்துபவர்களுடனும், தேவனை விசுவாசித்தப் பின்னரும் அவரை அறியாதவர்களுடனும், அவரைத் தொடர்ந்து வஞ்சிப்பவர்களுடனும் அவர் எவ்வாறு இருக்க முடியும்? இரட்சகராகிய இயேசு அன்பு நிறைந்தவர் என்பதையும், இரக்கத்தால் நிரம்பி வழிகிறார் என்பதையும், மீட்பால் நிரப்பப்பட்ட பாவநிவாரண பலி என்பதையும் மட்டுமே மனிதன் அறிந்திருக்கிறான். இருப்பினும், அவர் தான் தேவன் என்பதையும், அவர் நீதியுடனும், மாட்சிமையுடனும், கோபத்துடனும், நியாயத்தீர்ப்புடனும், அதிகாரம் உடையவராகவும், கண்ணியமனவராகவும் இருக்கிறார் என்பதையும் மனிதன் அறியாதிருக்கிறான். ஆகையால், மீட்பர் திரும்பி வர வேண்டுமென மனிதன் ஆவலுடன் ஏங்கினாலும், அவர்களுடைய ஜெபங்கள் பரலோகத்தையே அசைத்தாலும், இரட்சகராகிய இயேசுவை விசுவாசித்தும் அவரை அறியாத மனிதருக்கு அவர் காட்சியளிக்க மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்” என்பதிலிருந்து

142. மனுஷன் கற்பனை செய்வதுபோல, இயேசு மீண்டும் வருவார், கடைசிக் காலத்திலும் இயேசு என்று அழைக்கப்படுவார், ஒரு வெண்மையான மேகத்தின் மீது வந்து, இயேசுவின் சாயலில் மனுஷரிடையே இறங்குவார்: அது அவருடைய கிரியையை மறுபடியும் செய்வதுபோலில்லையா? பரிசுத்த ஆவியானவர் பழையதையே பற்றிக்கொண்டிருப்பவரா? மனுஷன் நம்புகிறதெல்லாம் கருத்துக்களை மட்டும் தான், மற்றும் மனுஷன் நேரடி அர்த்தத்திற்கு ஏற்பவும், அவனது கற்பனைக்கு ஏற்பவும் தான் அனைத்தையும் புரிந்துகொள்கிறான்; அவை பரிசுத்த ஆவியினுடைய கிரியையின் கொள்கைகளுடன் முரண்படுகின்றன, மேலும் தேவனின் நோக்கங்களுடனும் அவை ஒத்துப்போவதில்லை. தேவன் அவ்வாறு செயல்பட மாட்டார்; தேவன் அவ்வளவு முட்டாள்தனமானவரோ மதிகெட்டவரோ அல்ல, மேலும் அவருடைய கிரியை நீ கற்பனை செய்வது போல அவ்வளவு எளிதானதல்ல. மனுஷன் கற்பனை செய்யும் சகலத்தையும் அடிப்படையாகக் கொண்டு, இயேசு ஒரு மேகத்தின் மீது வந்து உங்களுக்கு மத்தியில் இறங்குவார். மேகத்தின் மீது வந்திறங்கிய அவரை நீங்கள் காண்பீர்கள், தாம் இயேசு என்று அவர் உங்களுக்குச் சொல்லுவார். நீங்கள் அவருடைய கைகளில் உள்ள ஆணி அடிக்கப்பட்ட தழும்புகளைக் கண்டு, அவரை இயேசு என்று அறிந்து கொள்வீர்கள். அவர் உங்களை மீண்டும் இரட்சிப்பார், மேலும் அவர் உங்களது வலிமைமிக்கத் தேவனாக இருப்பார். அவர் உங்களை இரட்சிப்பார், உங்களுக்கு ஒரு புதிய நாமத்தைக் கொடுப்பார், உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளைக் கல்லைக் கொடுப்பார், அதன் பிறகு நீங்கள் பரலோகராஜ்யத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டு பரலோகத்தில் பெறப்படுவீர்கள். இத்தகைய நம்பிக்கைகள் மனுஷனின் கருத்துக்கள் அல்லவா? தேவன் மனுஷனின் கருத்துக்களுக்கு ஏற்ப செயல்படுகிறாரா, அல்லது மனுஷனின் கருத்துக்களுக்கு எதிராக அவர் செயல்படுகிறாரா? மனுஷனின் கருத்துக்கள் அனைத்தும் சாத்தானிடமிருந்து பெறப்பட்டவை அல்லவா? மனுஷர் அனைவரும் சாத்தானால் சீர்கெட்டுப்போகவில்லையா? தேவன் தனது கிரியையை மனுஷனின் கருத்துக்களின்படி செய்திருந்தால், அவர் சாத்தானாக மாறியிருக்கமாட்டாரா? அவர் தனது சொந்த சிருஷ்டிப்புகளைப் போலவே இருந்திருக்க மாட்டாரா? அவருடைய சிருஷ்டிப்புகள் இப்போது சாத்தானால் மிகவும் சீர்கெட்டிருப்பதால், மனுஷன் சாத்தானின் உருவமாகிவிட்டான், தேவன் சாத்தானின் விஷயங்களின்படி செயல்படுவதாக இருந்தால், அவர் சாத்தானுடன் கூட்டணி அமைத்திருக்க மாட்டாரா? தேவனின் கிரியையை மனுஷன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? ஆகையால், தேவன் ஒருபோதும் மனுஷனின் கருத்துக்களின்படி செயல்படமாட்டார், மேலும் நீ கற்பனை செய்யும் வழிகளில் ஒருபோதும் செயல்பட மாட்டார். தேவன் ஒரு மேகத்தில் வருவார் என்று அவரே சொன்னதாகச் சொல்பவர்களும் உண்டு. தேவன் அவராகவே சொன்னார் என்பது உண்மைதான், ஆனால் தேவனின் மறைபொருட்களை எந்த மனுஷனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பது உனக்குத் தெரியாதா? தேவனின் வார்த்தைகளை எந்த மனுஷனாலும் விளக்க முடியாது என்று உனக்குத் தெரியாதா? பரிசுத்த ஆவியானவரால் நீ ஞானமும் தெளிவும் பெற்றிருக்கிறாய் என்பதில் சந்தேக நிழலுக்கு அப்பாலும் நீ உறுதியாக இருக்கிறாயா? உனக்கு இதுபோன்ற நேரடியான முறையில் காட்டியவர் பரிசுத்த ஆவியானவர் இல்லை என்று உன்னால் நிச்சயமாகக் கூறமுடியுமா? உனக்கு அறிவுறுத்தியது பரிசுத்த ஆவியானவரா, அல்லது உன் சொந்தக் கருத்துக்கள் உன்னை அவ்வாறு சிந்திக்க வழிவகுத்ததா? “இது தேவனால் கூறப்பட்டது,” என்று நீ சொன்னாய். ஆனால் தேவனின் வார்த்தைகளை அளவிட நம் சொந்த கருத்துகளையும் மனதையும் பயன்படுத்த முடியாது. ஏசாயா பேசிய வார்த்தைகளைப் பொறுத்தவரை, அவருடைய வார்த்தைகளை முழுமையான உறுதியுடன் உன்னால் விளக்க முடியுமா? அவருடைய வார்த்தைகளை விளக்க உனக்கு தைரியம் இருக்கிறதா? ஏசாயாவின் வார்த்தைகளை விளக்க உனக்கு துணிவில்லை என்பதால், இயேசுவின் வார்த்தைகளை விளக்க மட்டும் நீ ஏன் துணிகிறாய்? இயேசுவா அல்லது ஏசாயாவா, இவர்களில் மிகவும் உயர்ந்தவர் யார்? பதில் இயேசு என்பதால், இயேசு பேசிய வார்த்தைகளை நீ ஏன் விளக்குகிறாய்? தேவன் தனது கிரியையை முன்கூட்டியே உனக்குச் சொல்வாரா? ஒரு ஜந்துவால் கூட அறிய முடியாது, பரலோகத்திலுள்ள தூதர்களோ, மனுஷகுமாரனோ கூட அறிய முடியாது, எனவே உன்னால் மட்டும் எப்படி அறிந்து கொள்ளமுடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

143. பரிசேயர்கள் இயேசுவை, ஏன் எதிர்த்தார்கள் என்பதற்கான மூலக்காரணத்தை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? பரிசேயர்களின் சாராம்சத்தை அறிய விரும்புகிறீர்களா? அவர்கள் மேசியாவைப் பற்றிய கற்பனைகளால் நிறைந்திருந்தனர். மேலும், மேசியா வருவார் என்று மட்டுமே அவர்கள் நம்பினார்கள், மாறாக ஜீவிதத்தின் சத்தியத்தைத் தேடவில்லை. ஆகவே, இன்றும் அவர்கள் மேசியாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஜீவிதத்தின் வழியைப் பற்றிய எந்த அறிவும் இல்லை, சத்தியத்தின் வழி என்னவென்றும் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற முட்டாள்தனமான, பிடிவாதமான மற்றும் அறிவற்ற ஜனங்கள் தேவனின் ஆசீர்வாதத்தை எவ்வாறு பெற முடியும்? அவர்கள் மேசியாவை எவ்வாறு காண முடியும்? பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் செயல்பாட்டை அவர்கள் அறியாத காரணத்தினாலும், இயேசு பேசிய சத்தியத்தின் பாதை அவர்களுக்குத் தெரியாததாலும், மேசியாவை அவர்கள் புரிந்து கொள்ளாததாலும் அவர்கள் இயேசுவை எதிர்த்தார்கள். அவர்கள் ஒருபோதும் மேசியாவைக் கண்டிராததாலும், மேசியாவுடன் ஒருபோதும் ஐக்கியப்பட்டிராததாலும், மேசியாவின் சாராம்சத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தார்கள். ஆனால், அதே நேரத்தில், மேசியாவின் பெயரை வீணாகப் போற்றும் தவறையும் செய்தார்கள். இந்தப் பரிசேயர்கள் பொதுவாகவே பிடிவாதமானவர்கள் மற்றும் திமிர் பிடித்தவர்கள். மேலும், அவர்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவில்லை. தேவன் மீது அவர்கள் வைத்திருந்த விசுவாசத்தின் கொள்கை என்னவென்றால்: உங்கள் பிரசங்கம் எவ்வளவுதான் ஆழ்ந்த அறிவுள்ளதாக இருந்தாலும், உங்கள் அதிகாரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நீங்கள் மேசியா என்று அழைக்கப்படாவிட்டால் நீங்கள் கிறிஸ்து அல்ல என்பதே. இந்தப் பார்வைகள் போலித்தனமானவை மற்றும் கேலிக்குரியவை அல்லவா? நான் உங்களிடம் மேலும் கேட்கிறேன்: இயேசுவைப் பற்றிய புரிதல் துளியளவும் உங்களிடம் இல்லாதிருந்தால், ஆரம்பகால பரிசேயர்களின் தவறுகளை நீங்களும் செய்வது உங்களுக்கு மிகவும் எளிதானதல்லவா? சத்தியத்தின் வழியை உங்களால் அறிந்துகொள்ள முடியுமா? கிறிஸ்துவை நீங்கள் எதிர்க்க மாட்டீர்கள் என்று மெய்யாகவே நீங்கள் உத்தரவாதம் அளிக்க முடியுமா? பரிசுத்த ஆவியின் கிரியையை உங்களால் பின்பற்ற இயலுமா? நீங்கள் கிறிஸ்துவை எதிர்ப்பீர்களா என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் ஏற்கனவே மரணத்தின் விளிம்பில் ஜீவிக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன். மேசியாவை அறியாதவர்கள் அனைவரும் இயேசுவை எதிர்ப்பதற்கும், இயேசுவை நிராகரிப்பதற்கும், அவதூறு செய்வதற்கும் வல்லவர்களாவர். இயேசுவைப் புரிந்து கொள்ளாத ஜனங்கள் அனைவரும் அவரை நிராகரித்து அவதூறு செய்ய வல்லவர்கள். மேலும் இயேசுவின் வருகையைக் கூட சாத்தானின் வஞ்சகமாக அவர்கள் பார்க்க வல்லவர்கள். இன்னும் அதிகமான ஜனங்கள் இயேசு மாம்சத்திற்குத் திரும்பியதை குறைகூறுவார்கள். இவை அனைத்தும் உங்களை பயமுறுத்தவில்லையா? நீங்கள் எதிர்கொள்வது எல்லாம் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான அவதூறும், பரிசுத்த ஆவியானவர் திருச்சபைக்கு வழங்கும் வார்த்தைகள் அழிக்கப்படுவதும், இயேசுவால் வெளிப்படுத்தப்பட்ட அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படும் சூழலும் ஆகும். நீங்கள் மிகவும் குழப்பமடைந்துவிட்டால், இயேசுவிடமிருந்து உங்களால் எதைப் பெற முடியும்? உங்கள் தவறுகளை நீங்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டால், ஒரு வெண்மையான மேகத்தின் மீது, இயேசு மறுபடியும் மாம்சத்தில் திரும்பும்போது, அவரின் கிரியையை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்: வெண்மேகங்களின் மீது இயேசுவின் வருகையை கண்மூடித்தனமாக எதிர்பார்த்துக் காத்திருந்தும், சத்தியத்தைப் புரிந்துக்கொள்ளாத ஜனங்கள், நிச்சயமாக பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்திப்பார்கள். மேலும், இந்த வகையான ஜனங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். நீங்கள் இயேசுவின் கிருபையை மட்டுமே விரும்புகிறீர்கள். பரலோகத்தின் ஆனந்த சாம்ராஜ்யத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை மட்டும் விரும்புகிறீர்கள். ஆனால் இயேசு பேசிய வார்த்தைகளுக்கு நீங்கள் ஒருபோதும் கீழ்ப்படிந்ததில்லை. இயேசு மாம்சத்தில் திரும்பி வருகையில் அவர் வெளிப்படுத்திய சத்தியத்தை ஒருபோதும் பெறவில்லை. ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பியதற்கு ஈடாக நீங்கள் எதை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் மீண்டும் மீண்டும் பாவங்களைச் செய்து, அதன் பின் மீண்டும் மீண்டும் பாவமன்னிப்பு கேட்பது நேர்மையாகுமா? ஒரு வெண்மேகத்தின் மீது மறுபடியும் வரும் இயேசுவுக்கு பலியாக நீங்கள் எதைக் கொடுப்பீர்கள்? நீங்கள் பெருமையாகக் கருதும், உங்களுடைய ஆண்டுக்கணக்கான வேலையையா? திரும்பி வந்த இயேசு உங்களை நம்புவதற்கு நீங்கள் எதை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? எந்த சத்தியத்திற்கும் கீழ்ப்படியாத உங்கள் ஆணவ குணத்தையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்” என்பதிலிருந்து

144. உங்கள் விசுவாசம் வார்த்தையில் மட்டுமே உள்ளது. அறிவு சார்ந்த மற்றும் கருத்தியல் சார்ந்த அறிவு மட்டுமே உங்களிடம் உள்ளது. உங்கள் கிரியைகள் பரலோகத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகவே உள்ளது. எனவே உங்கள் விசுவாசம் எத்தகையதாய் இருக்க வேண்டும்? இன்று கூட, நீங்கள் சத்தியத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்கள் செவி மடுக்கவில்லை. தேவன் என்றால் யாரென்று உங்களுக்குத் தெரியாது, கிறிஸ்து என்றால் யாரென்று உங்களுக்குத் தெரியாது, யோகோவாவை எவ்வாறு வணங்குவது என்று உங்களுக்குத் தெரியாது, பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்குள் எவ்வாறு பிரவேசிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாது, மேலும் தேவனுடைய கிரியையையும் மனிதனுடைய ஏமாற்று வேலையையும் எவ்வாறு வேறுபடுத்துவது என்றும் உங்களுக்குத் தெரியாது. உங்கள் சொந்த எண்ணங்களுடன் இணங்காத, தேவன் வெளிப்படுத்திய எந்த சத்திய வார்த்தையையும் நிந்திக்க மட்டுமே உங்களுக்குத் தெரியும். உங்களது தாழ்மை எங்கே? உங்களது கீழ்ப்படிதல் எங்கே? உங்களது விசுவாசம் எங்கே? சத்தியத்தைத் தேடுவதற்கான உங்கள் வாஞ்சை எங்கே? தேவன் மீதுள்ள உங்கள் பயபக்தி எங்கே? அடையாளங்களைக் காரணமாகக் கொண்டு தேவனை விசுவாசிப்பவர்கள் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டிய பிரிவினர் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மாம்சத்திற்குத் திரும்பிய இயேசுவின் வார்த்தைகளைப் பெற இயலாதவர்கள் நிச்சயமாக நரகத்தின் சந்ததியினரும், பிரதான தூதனுடைய சந்ததியினரும் மற்றும் நித்திய அழிவுக்கு உட்படுத்தப்படும் பிரிவினரும் ஆவர். நான் சொல்வதை பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் புனிதரென அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நான் இன்னும் சொல்ல விரும்புகிறேன். இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நீங்கள் உங்களது கண்களால் காணும்போது, அது நீதியின் சூரியனுடைய பகிரங்கமான தோற்றமாக இருக்கும். ஒருவேளை, அது உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் நாழிகையாக இருக்கும். ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை நீங்கள் காணும் நேரம், நீங்கள் தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்ல வேண்டிய நேரமாகவும் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனின் இரட்சிப்பின் திட்டத்தின் இறுதி காலமாக இருக்கும். மேலும், நல்லோருக்கு, தேவன் வெகுமதி அளித்து துன்மார்க்கரைத் தண்டிக்கும் போது அது இருக்கும். சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம் இருக்கின்ற நிலையில், மனிதன் அடையாளங்களைக் காண்பதற்கு முன்னமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு முடிந்திருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அடையாளங்களைத் தேடாதவர்கள், மேலும் இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி, சிருஷ்டிகரின் அரவணைப்பில் பிரவேசித்திருப்பார்கள். “ஒரு வெண்மேகத்தின் மீது பயணம் செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து” எனக் கருதும் விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள், மாறாக கடுமையான தீர்ப்பையும், மெய்யான ஜீவிதத்தின் வழியையும் அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வரும்போது அவர்களுக்கு நியாயம் செய்வார். அவர்கள், அதீத பிடிவாதமும், தங்களுக்குள் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் மற்றும் அதீத கர்வமும் கொண்டவர்கள். இத்தகைய சீரழிவுகளுக்கு இயேசுவால் எவ்வாறு பலனளிக்க முடியும்? சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களுக்கு இயேசுவின் வருகை ஒரு பெரிய இரட்சிப்பாகும், மாறாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு, அது கண்டனத்தின் அடையாளமாகும். உங்கள் சொந்தப் பாதையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கவோ, சத்தியத்தை நிராகரிக்கவோ கூடாது. ஒரு அறிவற்ற, திமிரான நபராக நீங்கள் இருக்கக்கூடாது. மாறாக பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிந்து, சத்தியத்தை எதிர்பார்க்கும் ஒருவராக இருக்கவேண்டும். இந்த வழியில் மட்டுமே நீங்கள் பயனடைவீர்கள். தேவனுடைய விசுவாசத்தின் பாதையில் கவனமாக நடக்க வேண்டும் என நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். உடனடியாக முடிவுக்கு வந்துவிட வேண்டாம். மேலும் என்னவென்றால், தேவன் மீதான உங்கள் விசுவாசத்தில் பொறுப்பற்றும் சிந்தனையின்றியும் இருக்காதீர்கள். குறைந்தபட்சம், தேவனை விசுவாசிப்பவர்கள் தாழ்மையும் பயபக்தியும் உடையவராக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சத்தியத்தைக் கேட்டும், அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் முட்டாள்தனமானவர்கள் மற்றும் அறிவற்றவர்கள். சத்தியத்தைக் கேட்டும், கவனக்குறைவாக முடிவுகளுக்குச் செல்பவர்களும் அதைக் கண்டனம் செய்பவர்களும் ஆணவத்தால் சூழப்படுகிறார்கள். இயேசுவில் விசுவாசிக்கிற எவரும் மற்றவர்களை சபிக்கவோ கண்டிக்கவோ தகுதிப்படுத்தப்படவில்லை. நீங்கள் அனைவரும் புத்திசாலித்தனமாகவும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் ஒருவராகவும் இருக்க வேண்டும். ஒருவேளை, சத்திய வழியைக் கேட்டு, ஜீவ வார்த்தையைப் படித்த பிறகு, இந்த 10,000 வார்த்தைகளில் ஒன்று மட்டுமே உங்களது விசுவாசங்களுக்கும் வேதாகமத்துக்கும் இணங்குவதாக நீங்கள் நம்புகிறீர்களானால், பின்னர் இந்த 10,000 வார்த்தைகளில் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் தொடர்ந்து நாட வேண்டும். தாழ்மையுடன் இருக்கவும், அதீத நம்பிக்கை இல்லாதிருக்கவும், உங்களை மிக அதிகமாக உயர்த்திக் கொள்ளாதிருக்கவும், நான் மறுபடியும் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். தேவனுக்கு இத்தகைய அற்ப பயபக்தியை உங்களது இருதயம் கொண்டிருப்பதால், நீங்கள் அதிக கவனத்தைப் பெறுவீர்கள். இந்த வார்த்தைகளை நீங்கள் கவனமாக ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் சிந்தித்தால், அவை சத்தியமா இல்லையா என்பதையும், ஜீவனா இல்லையா என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஒருவேளை, சில வாக்கியங்களை மட்டுமே வாசித்த சிலர், இந்த வார்த்தைகளை கண்மூடித்தனமாகக் கண்டிப்பார்கள். “இது பரிசுத்த ஆவியானவரின் சில வெளிப்பாடுகளே அன்றி வேறொன்றுமில்லை” அல்லது “இவர் ஜனங்களை ஏமாற்றுவதற்காக வந்த ஒரு கள்ளக்கிறிஸ்து” என்று கூறுவார்கள். இவ்வாறு சொல்பவர்கள் அறியாமையால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள். தேவனின் கிரியை மற்றும் ஞானத்தை மிகக் குறைவாகவே நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் மீண்டும் புதிதாகத் தொடங்க நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்! கடைசி நாட்களில் கள்ளக்கிறிஸ்து தோன்றியதால் தேவன் வெளிப்படுத்திய வார்த்தைகளை நீங்கள் கண்மூடித்தனமாக கண்டிக்கக்கூடாது. மேலும் நீங்கள் வஞ்சகத்திற்கு பயப்படுவதால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறு கூறும் ஒருவராக இருந்துவிடாதீர்கள். அது ஒரு பெரிய பரிதாபமாக இருக்கும் அல்லவா? பல பரிசோதனைகளுக்குப் பிறகு, இந்த வார்த்தைகள் சத்தியம் இல்லை, வழி இல்லை, தேவனின் வெளிப்பாடும் இல்லை என்று நீங்கள் இன்னும் நம்பினால், நீங்கள் இறுதியில் தண்டிக்கப்படுவீர்கள் மற்றும் நீங்கள் ஆசீர்வாதம் இல்லாமலும் இருப்பீர்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்” என்பதிலிருந்து

145. நீ மிக நீண்ட காலமாக தேவனை நம்பவில்லை, ஆனாலும் நீ அவரைப் பற்றி நிறைய கருத்துக்களைக் கொண்டிருக்கிறாய், இஸ்ரவேலரின் தேவன் தமது பிரசன்னத்தால் உனக்கு கிருபை அளிப்பார் என்று நீ ஒரு நொடி கூட நினைக்கத் துணிவதில்லை. நீங்கள் எவ்வளவு இழிவாக இருக்கிறீர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவன் தனிப்பட்ட தோற்றத்தில் வருவதை நீங்கள் எப்படிக் காண்பீர்கள் என்பதை நீங்கள் சிந்திக்கத் துணிவதில்லை. தேவன் எப்படி ஒரு புறஜாதி தேசத்தில் தனிப்பட்ட முறையில் இறங்க முடியும் என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை நினைத்ததில்லை. அவர் சினாய் மலையிலோ அல்லது ஒலிவ மலையிலோ இறங்கி இஸ்ரவேலருக்குத் தோன்ற வேண்டும். புறஜாதியார் (அதாவது இஸ்ரவேலுக்கு வெளியே உள்ளவர்கள்) அனைவரும் அவர் வெறுக்கும் பொருட்களாக இருக்கவில்லையா? அவர் எவ்வாறு அவர்களிடையே தனிப்பட்ட முறையில் கிரியை செய்ய முடியும்? இவை அனைத்தும் நீங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த ஆழமாக வேரூன்றிய கருத்துக்கள். இன்று உங்களை ஜெயங்கொள்வதன் நோக்கம் உங்களுடைய இந்த கருத்துக்களை சிதைப்பதாகும். இவ்வாறு, சினாய் மலையிலோ அல்லது ஒலிவ மலையிலோ அல்ல, ஆனால் இதற்கு முன் அவர் வழிநடத்தியிறாத ஜனங்களாகிய உங்களிடையே தேவனின் தனிப்பட்ட தோற்றத்தை நீங்கள் காண்கிறீர்கள். தேவன் இஸ்ரவேலில் தமது கிரியையின் இரண்டு கட்டங்களைச் செய்தபின், அவர் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் என்பது உண்மைதான் என்றாலும் அவர் இஸ்ரவேலரின் தேவனாக மட்டுமே இருக்க விரும்புகிறார், புறஜாதியினரின் தேவனாக இருக்க விரும்பவில்லை என்று இஸ்ரவேலரும் எல்லா புறஜாதியரும் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருந்தனர். இஸ்ரவேலர் பின்வருவனவற்றை நம்புகிறார்கள்: தேவன் எங்கள் தேவனாக மட்டுமே இருக்க முடியும், புறஜாதியாரான உங்கள் தேவனாக இருக்க முடியாது, மேலும் நீங்கள் யேகோவாவை வணங்காததால், எங்கள் தேவனாகிய யேகோவா உங்களை வெறுக்கிறார். அந்த யூத ஜனங்களும் பின்வருவனவற்றை நம்புகிறார்கள்: கர்த்தராகிய இயேசு யூத ஜனங்களாகிய எங்களது உருவத்தை அணிந்துகொண்டார், அவர் யூத ஜனங்களின் அடையாளத்தை தாங்கிய தேவன் ஆகிறார். தேவன் எங்களிடையே கிரியை செய்கிறார். தேவனின் உருவமும் எங்கள் உருவமும் ஒத்தவை; எங்கள் உருவம் தேவனுக்கு நெருக்கமாக இருக்கிறது. கர்த்தராகிய இயேசு யூதர்களின் ராஜா; புறஜாதியார் அத்தகைய பெரிய இரட்சிப்பைப் பெற தகுதியற்றவர்கள். கர்த்தராகிய இயேசு தான் யூதர்களான நமக்கு பாவநிவாரணப்பலி. இஸ்ரவேலர்களும் யூத ஜனங்களும் இந்த இரண்டு கருத்துக்களையும் உருவாக்கியது கிரியையின் அந்த இரண்டு கட்டங்களின் அடிப்படையில்தான். தேவன் புறஜாதியினரின் தேவன் என்பதை அனுமதிக்காமல், அவர்கள் தேவனை தங்கள் தேவன் என்று கூறி அகந்தை கொள்கிறார்கள். இவ்வாறாக, தேவன் புறஜாதியரின் இருதயங்களில் ஒரு வெற்றிடமாகிப் போனார். ஏனென்றால், தேவன் புறஜாதியினரின் தேவனாக இருக்க விரும்பவில்லை என்றும், அவர் தேர்ந்தெடுத்த ஜனங்களான இஸ்ரவேலர்களையும் யூத ஜனங்களையும், குறிப்பாக அவரைப் பின்பற்றிய சீஷர்களை மட்டுமே நேசிக்கிறார் என்றும் எல்லோரும் விசுவாசித்தனர். யேகோவாவும் இயேசுவும் செய்த கிரியை எல்லா மனுஷரும் உயிர்வாழ்வதற்காகவே என்று உங்களுக்குத் தெரியாதா? இஸ்ரவேலுக்கு வெளியே பிறந்த உங்கள் அனைவருக்கும் தேவன் தான் தேவன் என்பதை நீ இப்போது ஒப்புக்கொள்கிறாயா? தேவன் இன்று இங்கே உங்கள் மத்தியில் இல்லையா? இது ஒரு சொப்பனமாக இருக்க முடியாது, இல்லையா? இந்த யதார்த்தத்தை நீங்கள் ஏற்கவில்லையா? நீங்கள் அதை நம்பவோ அல்லது அதைப் பற்றி சிந்திக்கவோ துணிவதில்லை. நீங்கள் அதை எப்படிப் பார்த்தாலும், உங்கள் நடுவில் தேவன் இங்கே இல்லையா? இந்த வார்த்தைகளை நம்ப நீங்கள் இன்னும் பயப்படுகிறீர்களா? இந்த நாளிலிருந்து, ஜெயங்கொள்ளப்பட்ட அனைவரும் மற்றும் தேவனின் சீஷர்களாக இருக்க விரும்பும் அனைவரும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லவா? இன்று பின்பற்றுபவர்களாக இருக்கும் நீங்கள் அனைவரும், இஸ்ரவேலுக்கு வெளியே இருக்கும் ஜனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லையா? உங்கள் அந்தஸ்து இஸ்ரவேலருக்கு சமமானதல்லவா? இவை அனைத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டாமா? உங்களை ஜெயங்கொள்ளும் கிரியையின் குறிக்கோள் இதுவல்லவா? நீங்கள் தேவனைக் காண முடியும் என்பதால், ஆதியிலிருந்து எதிர்காலம் வரை அவர் என்றென்றும் உங்கள் தேவனாக இருப்பார். நீங்கள் அனைவரும் அவரைப் பின்பற்றி, அவருடைய விசுவாசியாக, கீழ்ப்படிதலுள்ள ஜீவன்களாக இருக்கும் வரை அவர் உங்களை கைவிட மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (3)” என்பதிலிருந்து

146. உனது பழைய கருத்துக்களை ஒதுக்கி வைப்பதன் மூலம் மட்டுமே உன்னால் புதிய அறிவைப் பெற முடியும், ஆனால் பழைய அறிவு என்பது பழைய கருத்துக்களுக்கு சமமானதாக இருக்கவேண்டும் என்பதில்லை. “கருத்துக்கள்” என்பவை மனுஷன் கற்பனை செய்யும் யதார்த்தத்துடன் முரண்படுகின்ற காரியங்களைக் குறிக்கின்றன. பழைய அறிவானது ஏற்கனவே பழைய யுகத்திலேயே காலாவதியாகி, புதிய கிரியைக்குள் மனுஷன் பிரவேசிப்பதைத் தடுத்திருந்தால், இதுபோன்ற அறிவும் ஒரு கருத்தாகும். இதுபோன்ற அறிவுக்கான சரியான அணுகுமுறையை மனுஷனால் எடுக்க முடிந்தால், பழையதையும் புதியதையும் இணைத்துப் பல அம்சங்களிலிருந்து தேவனை அறிந்துகொள்ள முடிந்தால், பழைய அறிவு மனிதனுக்கு ஒரு உதவியாக மாறி, மனுஷன் புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் அடிப்படையாகிவிடுறது. தேவனை அறிந்துகொள்வதற்கான பாதையில் எவ்வாறு பிரவேசிப்பது, தேவனை அறிந்துகொள்வதற்கு எந்த சத்தியங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் உனது கருத்துக்களையும் பழைய இயல்பையும் எவ்வாறு அகற்றுவது போன்ற பல கொள்கைகளை அறிந்துகொள்ளுமாறு தேவனை அறிந்துகொள்வதற்கான பாடமானது உன்னிடம் கேட்டுக்கொள்கிறது, இதன்மூலம் தேவனுடைய புதிய கிரியையின் அனைத்து ஏற்பாடுகளுக்கும் நீங்கள் கீழ்ப்படியலாம். தேவனை அறிந்துகொள்வதற்கான பாடத்திற்குள் நுழைவதற்கான அஸ்திபாரமாக இக்கொள்கைகளைப் பயன்படுத்தினால், உனது அறிவு மென்மேலும் ஆழமாகும். தேவனுடைய முழு நிர்வாகத் திட்டத்தைப் பற்றியும், அதாவது மூன்று கட்ட கிரியைகளைப் பற்றியும் உனக்கு தெளிவான அறிவு இருந்தால், தேவனுடைய கிரியையின் முந்தைய இரண்டு கட்டங்களையும் தற்போதைய கட்டத்துடன் முழுமையாக தொடர்புபடுத்தவும், அதுதான் தேவனால் செய்யப்பட்ட கிரியை என்று உன்னால் பார்க்கவும் முடிந்தால், நீ ஒரு ஈடுஇணையற்ற உறுதியான அஸ்திபாரத்தைக் கொண்டிருப்பாய். … மூன்று கட்ட கிரியைகளிலும் அவை வெவ்வேறு யுகங்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நபர்களிடம் தேவனால் செய்யப்பட்டவை என்பதை மனுஷனால் பார்க்க முடிந்தால், கிரியை வேறுபட்டதாக இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே தேவனால்தான் செய்யப்படுகின்றன என்பதை மனுஷனால் பார்க்க முடிந்தால், அது ஒரே தேவனால் செய்யப்பட்ட கிரியை என்பதனால், அது சரியானதாகவும் பிழையில்லாததுமாக இருக்க வேண்டும். மேலும் அது மனுஷனின் கருத்துக்களுடன் முரண்பட்டதாக இருந்தாலும், அது ஒரே தேவனுடைய கிரியை என்பதை மறுப்பதற்கில்லை. இது ஒரே தேவனுடைய கிரியைதான் என்று மனுஷனால் உறுதியாகச் சொல்ல முடிந்தால், மனுஷனுடைய கருத்துக்கள் வெறும் அற்பமானவையாக குறைக்கப்படும், குறிப்பிடத் தகுதியற்றவையாகிவிடும். மனுஷனுடைய தரிசனங்கள் தெளிவற்றவையாக இருப்பதனாலும், மனுஷன் யேகோவாவை தேவனாகவும், இயேசுவை கர்த்தராகவும் மட்டுமே அறிந்திருப்பதாலும், இன்றைய மாம்சமாகிய தேவனைப் பற்றி இரு மனதுடன் காணப்படுவதாலும், பலர் யேகோவா மற்றும் இயேசுவின் கிரியையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றார்கள், இன்றைய கிரியையை பற்றிய கருத்துக்களால் குழம்பியிருக்கின்றார்கள், பெரும்பாலானவர்கள் எப்போதும் சந்தேகத்துடன் காணப்படுவதோடு, இன்றைய கிரியையைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. கண்ணுக்குத் தெரியாத கடைசி இரண்டு கட்ட கிரியைகளைப் பற்றி மனுஷனிடம் எந்தக் கருத்தும் இல்லை. ஏனென்றால், கடைசி இரண்டு கட்ட கிரியைகளின் யதார்த்தத்தை மனுஷன் புரிந்துகொள்ளவில்லை, தனிப்பட்ட முறையில் அவற்றைப் பார்த்ததும் இல்லை. ஏனென்றால், இந்தக் கட்ட கிரியைகளை மனுஷன் விரும்புவது போலக் கற்பனை செய்து பார்க்க முடியாது. அவன் எதைக் கொண்டு வந்தாலும், இதுபோன்ற கற்பனைகளை நிரூபிக்க எந்த உண்மைகளும் இல்லை, அவற்றை சரிசெய்ய யாருமில்லை. மனுஷன் தனது இயல்பான உள்ளுணர்விற்கு மிகவும் சுதந்திரம் கொடுக்கிறான், எச்சரிக்கையைக் காற்றில் பறக்கவிட்டு, அவனது கற்பனையைச் சுதந்திரமாக அலையவிடுகிறான். ஏனென்றால், அவனுடைய கற்பனைகளைச் சரிபார்க்க எந்த உண்மைகளும் இல்லை, ஆகையால் மனுஷனுடைய கற்பனைகளுக்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல், அவை “உண்மை” ஆகின்றன. இவ்வாறு மனுஷன் தன் மனதில் கற்பனை செய்துள்ள தேவனை நம்புகிறான், யதார்த்த தேவனையோ தேடுவதில்லை. ஒரு நபருக்கு ஒரு வகையான நம்பிக்கை இருந்தால், நூறு பேரிடம் நூறு வகையான நம்பிக்கைகள் இருக்கும். மனுஷன் தேவனுடைய கிரியையின் யதார்த்தத்தைக் காணாததாலும், அவன் அதைக் காதுகளால் மட்டுமே கேட்டு, அதை கண்களால் காணாததால், அவன் இதுபோன்ற நம்பிக்கைகளைக் கொண்டவனாக இருக்கிறான். மனுஷன் புராணங்களையும் கதைகளையும் கேட்டிருக்கிறான், ஆனால் தேவனுடைய கிரியையின் உண்மைகளைப் பற்றிய அறிவை அரிதாகவே கேள்விப்பட்டிருக்கின்றான். இவ்வாறு, ஒரு வருடமாக மட்டுமே விசுவாசிகளாக இருப்பவர்கள் தங்களுடைய சொந்தக் கருத்துக்களின் மூலமாகவே தேவனை விசுவாசிக்கிறார்கள். இது தங்கள் வாழ்நாள் முழுவதும் தேவனை விசுவாசித்தவர்களுக்கும் பொருந்தும். உண்மைகளைப் பார்க்க முடியாதவர்களால் ஒருபோதும் தேவனைப் பற்றிய கருத்துக்களை கொண்ட ஒரு விசுவாசத்திலிருந்து தப்பிக்க முடியாது. மனுஷன் தனது பழைய கருத்துக்களின் கட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, புதிய பிரதேசத்திற்குள் பிரவேசித்துவிட்டதாக நம்புகிறான். தேவனுடைய உண்மையான முகத்தைப் பார்க்க முடியாதவர்களின் அறிவு என்பது கருத்துக்களும் வதந்திகளுமே தவிர வேறு எதுவுமில்லை என்று மனுஷனுக்குத் தெரியாதா? மனுஷன் தனது கருத்துக்கள் சரியானவையாகவும் பிழையில்லாமலும் இருப்பதாக நினைக்கிறான், மேலும் இந்த கருத்துக்கள் தேவனிடமிருந்து வந்தவை என்றும் நினைக்கிறான். இன்று, மனுஷன் தேவனுடைய கிரியையைக் காணும்போது, பல வருடங்களாகக் கட்டி வைத்திருந்த கருத்துக்களை விட்டுவிடுகிறான். கடந்த காலத்தின் கற்பனைகளும் கருத்துக்களும் இந்தக் கட்டத்தின் கிரியைக்கு ஒரு தடையாக மாறியுள்ளன. மேலும், இதுபோன்ற கருத்துக்களை விட்டுவிடுவதும், இதுபோன்ற கருத்துக்களை மறுப்பதும் மனுஷனுக்கு கடினமாகிவிட்டது. இன்று வரை தேவனைப் பின்தொடர்ந்தவர்களில் பலரின் இந்த படிப்படியான கிரியையைப் பற்றிய கருத்துக்கள் இன்னும் படுமோசமாகிவிட்டன. இவர்கள் மாம்சமாகிய தேவன் மீது படிப்படியாக ஒரு பிடிவாதமான பகைமையை உருவாக்கியுள்ளனர். இந்த வெறுப்பின் மூலக்காரணமானது மனுஷனுடைய கருத்துக்களிலும் கற்பனைகளிலும் தான் உள்ளது. மனுஷனுடைய கருத்துக்களும் கற்பனைகளும் இன்றைய கிரியைக்கு எதிரியாகிவிட்டன, இக்கிரியை மனுஷனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறது. உண்மைகள் மனுஷனை அவனுடைய கற்பனைக்குச் சுதந்திரம் கொடுக்க அனுமதிக்காததினாலும் மற்றும் அவற்றை மனுஷனால் எளிதில் மறுக்க முடியாததினாலுமே இது நடந்துள்ளது. மேலும், மனுஷனுடைய கருத்துக்களும் கற்பனைகளும் உண்மைகள் இருப்பதை ஆதரிக்கவில்லை. மேலும், மனுஷன் உண்மைகளின் சரித்தன்மையையும் உண்மைத்தன்மையையும் குறித்துச் சிந்திக்காததனால், பிடிவாதமாகத் தனது கருத்துக்களை அவிழ்த்துவிட்டு, தனது சொந்த கற்பனையைப் பயன்படுத்துகிறான். இது மனுஷனுடைய கருத்துகளின் தவறு என்று மட்டுமே கூற முடியுமே தவிர, இது தேவனுடைய கிரியையின் தவறு என்று கூற முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

147. தேவன் ஒரு நீதியுள்ள தேவன் என்று ஜனங்கள் சொல்கிறார்கள், மனிதன் கடைசிவரை அவனைப் பின்தொடரும் வரை, அவர் நிச்சயமாக மனிதனிடம் நடுநிலையானவராக இருப்பார். ஏனென்றால் அவர் மிகவும் நீதியுள்ளவர். மனிதன் கடைசிவரை அவரைப் பின்தொடர்ந்தால், மனிதனை ஒதுக்கி வைக்க அவரால் முடியுமா? நான் எல்லா மனிதர்களிடமும் நடுநிலையானவராக இருக்கிறேன், எல்லா மனிதர்களையும் என் நீதியுள்ள மனநிலையோடு நியாயந்தீர்க்கிறேன், ஆனாலும் நான் மனிதனிடமிருந்து உருவாக்கும் தேவைகளுக்கு பொருத்தமான நிபந்தனைகள் உள்ளன, மேலும் அவர்கள் யார் என்றாலும் எல்லா மனிதர்களாலும் என் தேவைகளானவை நிறைவேற்றப்பட வேண்டும். உன் தகுதிகள் எப்படி இருக்கின்றன, அல்லது அவற்றை நீ எவ்வளவு காலம் வைத்திருக்கிறாய் என்பதில் எனக்கு அக்கறை இல்லை. நீ என் வழியில் நடக்கிறாயா, சத்தியத்திற்காக தாகமாயிருக்கிறாயா இல்லையா என்பதை மட்டுமே நான் கவனிக்கிறேன். நீ சத்தியம் இல்லாதிருந்தால், அதற்கு பதிலாக என் பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்தி, என் வழியின்படி கிரியை செய்யாவிட்டால், அக்கறையோ கவனிப்போ இல்லாமல் பின்பற்றினால், அந்த நேரத்தில் உன் தீமைக்காக நான் உன்னை அடித்துத் தள்ளி தண்டிப்பேன், நீ என்ன சொல்ல வேண்டும்? தேவன் நீதியுள்ளவர் அல்ல என்று நீ சொல்ல முடியுமா? இன்று, நான் பேசிய வார்த்தைகளுக்கு நீ இணங்கியிருந்தால், நான் அங்கிகரிக்கும் நபர் நீ தான். தேவனைப் பின்தொடரும் போது நீ எப்போதும் கஷ்டப்பட்டிருந்தும், இடைஞ்சல்களுக்கு இடையேயும் அவரைப் பின்தொடர்ந்தாய் என்றும், நல்ல நேரங்களையும் கெட்டதையும் அவருடன் பகிர்ந்து கொண்டாய் என்றும் நீ சொல்கிறாய், ஆனால் நீ தேவனால் பேசப்பட்ட வார்த்தைகளின்படி வாழவில்லை. நீ தேவனுக்காக ஓடவும், ஒவ்வொரு நாளும் தேவனுக்காக உன்னை விருத்தியாக்கவும் மட்டுமே விரும்புகிறாய், உண்மையுள்ள வாழ்க்கையை வாழ நினைத்ததில்லை. நீ, “எப்படியிருந்தாலும், தேவன் நீதியுள்ளவர் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அவருக்காக கஷ்டப்பட்டேன், அவருக்காக ஓடினேன், அவருக்காக என்னை அர்ப்பணித்தேன், எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்றாலும் நான் கடுமையாக உழைத்தேன்; அவர் என்னை நினைவில் வைத்திருப்பது உறுதி”, என்று கூறுகிராய். தேவன் நீதியுள்ளவர் என்பது உண்மைதான், ஆனாலும் இந்த நீதியானது எந்த அசுத்தங்களாலும் அறியப்படவில்லை. அதில் எந்த மனிதனின் சித்தமும் இல்லை, அது மாம்சத்தினால் அல்லது மனித பரிவர்த்தனைகளால் களங்கப்படுத்தப்படவில்லை. கலகக்காரர்களாகவும், எதிரானவர்களாவும் உள்ள அனைவரும், அவருடைய வழிக்கு இணங்காத அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். யாரும் மன்னிக்கப்படுவதில்லை, யாரும் காப்பாற்றப்படுவதில்லை! சில ஜனங்கள், “இன்று நான் உமக்காக ஓடுகிறேன்; முடிவு வரும்போது, நீர் எனக்கு ஒரு சிறிய ஆசீர்வாதம் தர முடியுமா?” என்று கேட்கிறார்கள். எனவே நான் உன்னிடம், “நீ என் வார்த்தைகளுக்கு இணங்கினாயா?” என்று கேட்கிறேன். நீ பேசும் நீதியானது ஒரு பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்டது. நான் எல்லா மனிதர்களிடமும் நீதியுள்ளவராகவும், நடுநிலைத் தவறாதவனாகவும் இருக்கிறேன் என்றும், கடைசிவரை என்னைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும் என் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் என்றும் மட்டுமே நீ நினைக்கிறாய். “என்னை கடைசிவரை பின்பற்றுபவர்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவது உறுதி” என்ற எனது வார்த்தைகளுக்கு உள்ளார்ந்த சாராம்சம் உள்ளது: என்னை கடைசிவரை பின்பற்றுபவர்கள் தான் என்னால் முழுமையாக ஆதாயப்படுத்தப்படுவார்கள், அவர்கள் தான் என்னால் ஜெயம் கொள்ளப்பட்டு, சத்தியத்தைத் தேடி, பரிபூரணமாக்கப்படுகிறார்கள். நீ என்ன நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளாய்? நீ என்னைப் பின்தொடர்வது வரை மட்டுமே சாதித்திருக்கிறதில்லாமல் வேறு என்ன? நீ என் வார்த்தைகளுக்கு இணங்கியிருக்கிறாயா? எனது ஐந்து தேவைகளில் ஒன்றை நீ நிறைவேற்றியுள்ளாய், ஆனால் மீதமுள்ள நான்கை நிறைவேற்ற உனக்கு எந்த நோக்கமும் இல்லை. நீ சிக்கலற்ற, எளிதான பாதையைக் கண்டுபிடித்து, அதிர்ஷத்தைப் பெறும் நம்பிக்கையுள்ள மனப்பான்மையுடன்அதைப் பின்தொடர்ந்தாய். உன்னைப் போன்ற ஒரு நபருக்கு என் நீதியான மனப்பான்மை தண்டனையும் தீர்ப்பும் ஆகும், இது நீதியான தண்டனையாகும், மேலும் இது எல்லா பொல்லாதவர்களுக்கும் நீதியான தண்டனையாகும்; என் வழியில் நடக்காத அனைவருக்கும் அவர்கள் கடைசிவரை பின்பற்றினாலும் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இது தேவனின் நீதியாகும். மனிதனின் தண்டனையில் இந்த நீதியான மனப்பான்மை வெளிப்படுத்தப்படும்போது, மனிதன் பேச்சில்லாதவன் போலாவான், மேலும் தேவனைப் பின்தொடரும் போதும், அவன் தன் வழியில் நடக்கவில்லை என்று வருத்தப்படுவான். “அந்த நேரத்தில், நான் தேவனைப் பின்தொடரும் போது கொஞ்சம் கஷ்டம் மட்டுமே அடைந்தேன், ஆனால் தேவனின் வழியில் நடக்கவில்லை. என்ன சாக்குப்போக்குகள் உள்ளன? தண்டிக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை!” ஆனாலும் அவனது மனதில், “எப்படியிருந்தாலும், நான் கடைசிவரை பின்பற்றினேன், எனவே நீர் என்னைத் தண்டித்தாலும், அது மிகவும் கடுமையான தண்டனையாக இருக்க முடியாது, மேலும் இந்த தண்டனையைச் செய்தபின் நீர் என்னை விரும்புகிறீர். நீர் நீதியுள்ளவர் என்று எனக்குத் தெரியும், என்னை என்றென்றும் அவ்வாறு நடத்தமாட்டீர். எல்லாவற்றிற்கும் மேலாக, அழிக்கப்படுபவர்களைப் போல நான் இருக்கவில்லை; அழிக்கப்பட வேண்டியவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும், அதேசமயம் என் தண்டனை இலகுவாக இருக்கும்” என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கிறான். நீ சொல்வது போல் நீதியான மனநிலை இல்லை. தங்கள் பாவங்களை அறிக்கைசெய்வதில் நல்லவர்கள் மென்மையுடன் கையாளப்படுகிறார்கள் என்பது வழக்கு அல்ல. நீதியே புனிதத்தன்மை, இது மனிதனின் குற்றத்தை சகிக்கமுடியாத தன்மையுள்ள ஒரு மனநிலையாகும், மேலும் அசுத்தமான மற்றும் மாறாத எல்லாம் தேவனின் வெறுக்கத்தக்க இலக்காகும். தேவனின் நீதியான மனப்பான்மை சட்டம் அல்ல, ஆனால் நிர்வாகக் கட்டளையாக இருக்கிறது. இது ராஜ்யத்திற்குள்ளான நிர்வாகக் கட்டளையாகும், மேலும் இந்த நிர்வாக கட்டளை என்பது சத்தியத்தை வைத்திருக்காத மற்றும் மாறாத எவருக்கும் நீதியான தண்டனையாகும், மேலும் இரட்சிப்பிற்கு வாய்ப்பில்லை. ஒவ்வொரு மனிதனும் வகையின்படி வகைப்படுத்தப்படும்போது, நன்மைக்கு பலன் கிடைக்கும், தீமைக்கு தண்டனை கிடைக்கும். மனிதனின் இலக்கு எப்போது தெளிவுபடுத்தப்படும் போது இது இருக்கும். இரட்சிப்பின் கிரியை முடிவுக்கு வரும் காலம் இது, அதன் பிறகு, மனிதனை இரட்சிக்கும் கிரியை இனி செய்யப்படாது, தீமை செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் தண்டனை வழங்கப்படும். சில ஜனங்கள், “தேவன் தன்னுடைய பக்கத்திலிருக்கும் ஒவ்வொருவரையும் நினைவில் கொள்கிறார். அவர் நம்மில் ஒருவரையும் மறக்க மாட்டார். தேவனால் பரிபூரணமாக்கப்படுவோம் என்று எங்களுக்கு உத்தரவாதம் உண்டு. கீழேயுள்ள எவரையும் அவர் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார், கீழேயுள்ளவர்களில் பரிபூரணர்களாக இருப்பவர்கள் நம்மை, பெரும்பாலும் தேவனைச் சந்திக்கும் நம்மை, விடக் குறைவானவர்கள் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறார்கள், நம்மிடையே யாரும் தேவனால் மறக்கப்படவில்லை, நாம் அனைவரும் தேவனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளோம், தேவனால் பரிபூரணமாக்கப்படுவோம் என்று எங்களுக்கு உத்தரவாதம் உண்டு”. நீங்கள் அனைவருக்கும் இதுபோன்ற எண்ணங்களைக் கொண்டிருக்கிறீர்கள். இது நீதியா? நீ யதார்த்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தாயா இல்லையா? நீ இது போன்ற வதந்திகளை யதார்த்தத்தில் பிரசித்தப்படுத்துகிறாய்—உனக்கு வெட்கமில்லையா!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து

148. நீங்கள் தேவனுடைய கிரியையின் கொள்கைகளை அறியாததினாலும் மற்றும் நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை போதுமான அளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததினாலும், நீங்கள் தேவனுடைய கிரியையை எதிர்க்கிறீர்கள் அல்லது இன்றைய கிரியையை அளவிட உங்கள் சொந்த கருத்துக்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் தேவனை எதிர்ப்பது மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு இடையூறு ஏற்படுத்துவது உங்கள் கருத்துக்களாலும் உள்ளார்ந்த இறுமாப்பினாலும் ஏற்படுகின்றன. இது தேவனுடைய கிரியை தவறானது என்பதால் அல்ல, ஆனால் நீங்கள் இயல்பாகவே மிகவும் கீழ்ப்படியாதவர்கள் என்பதனால் ஆகும். தேவன் மீதான தங்கள் விசுவாசத்தைக் கண்டறிந்த பிறகு, மனுஷன் எங்கிருந்து வந்தான் என்று சிலரால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை, ஆனாலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் சரியானவற்றையும் தவறானவற்றையும் மதிப்பிடும் பொது சொற்பொழிவுகளை ஆற்ற அவர்கள் தைரியம் கொள்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை கொண்டுள்ள அப்போஸ்தலர்களுக்கும் அவர்கள் விரிவுரை வழங்குகின்றார்கள், கருத்துரை கூறுகிறார்கள், அளவுக்கதிகமாகப் பேசுகிறார்கள்; அவர்களின் மனிதத்தன்மை மிகவும் குறைவாக உள்ளது அவர்களுக்கு சிறிதளவும் அறிவு இல்லை. இதுபோன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் புறக்கணிக்கப்பட்டு, நரகத்தின் அக்கினியினால் எரிக்கப்படும் நாள் வரவில்லையா? அவர்கள் தேவனுடைய கிரியையை அறியவில்லை, மாறாக அவருடைய கிரியையைப் பரியாசம் செய்கிறார்கள், மேலும் எவ்வாறு கிரியை செய்ய வேண்டும் என்று தேவனுக்கு அறிவுறுத்தவும் முயற்சி செய்கிறார்கள். இதுபோன்ற அநீதியானவர்களால் தேவனை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? தேடும் மற்றும் அனுபவிக்கும் செயல்முறையின்போது தான் மனுஷன் தேவனை அறிந்துகொள்கிறான். பரிசுத்த ஆவியானவரின் அறிவொளி மூலமே மனுஷன் தேவனை அறிந்துகொள்கிறான் என்று விரும்பியபடி விமர்சிப்பதன் மூலம் அல்ல. தேவனைப் பற்றிய ஜனங்களின் அறிவு எவ்வளவு துல்லியமானதாகிறதோ, அந்த அளவு குறைவாகவே அவர்கள் அவரை எதிர்க்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, தேவனைப் பற்றி ஜனங்கள் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அவரை எதிர்க்க வாய்ப்புள்ளது. உனது கருத்துக்கள், உனது பழைய சுபாவம் மற்றும் உனது மனிதத்தன்மை, குணம் மற்றும் நீதிநெறி ஆகியவையே நீ தேவனை எதிர்க்கும் “மூலதனம்” ஆகும். நீ எவ்வளவு அதிகமாகச் சீர்கேடானவனாகவும், தரங்கெட்டவனாகவும், இழிவானவனாகவும் மாறுகிறாயோ, அவ்வளவு அதிகமாக நீ தேவனுக்கு சத்துருவாக இருக்கிறாய். வலுவான கருத்துக்களை கொண்டவர்களும் சுய நீதி மனநிலையைக் கொண்டவர்களும் மாம்சமாகிய தேவனுடன் இன்னும் அதிகமான பகையுடன் உள்ளனர். இதுபோன்றவர்கள்தான் அந்திக்கிறிஸ்துகள். உனது கருத்துக்கள் சரிசெய்யப்படாவிட்டால், அவை எப்போதும் தேவனுக்கு எதிராகவே இருக்கும். நீ ஒருபோதும் தேவனுடன் இணக்கமாக இருக்கமாட்டாய், எப்போதும் அவரிடமிருந்து விலகியே இருப்பாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

149. இயேசு மாம்சமாகியிருக்கிறார் என்ற உண்மை வெளிவந்த பிறகு, பரலோகத்தில் பிதா மட்டுமல்ல, குமாரனும் ஆவியானவரும் கூட இருக்கின்றனர் என்பதை மனிதன் நம்பினான். பரலோகத்தில் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி என்ற திரித்துவ தேவன் போன்ற ஒரு தேவன் இருக்கிறார் என்று மனிதன் கொண்டிருக்கும் வழக்கமான கருத்து இதுதான். முழு மனுக்குலமும் இந்த கருத்துக்களைக் கொண்டுள்ளது: தேவன் ஒரே தேவன்தான், ஆனால் மூன்று அங்கங்களை வகிக்கிறார். வழக்கமான கருத்துக்களில் ஆழமாக வேரூன்றியுள்ள எல்லோருமே அவரை பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி என்று கருதுகின்றனர். அந்த மூன்று அங்கங்களும் ஒன்றாகி உருவாக்கிய ஒருவரே முழுமையான தேவனாக இருக்கிறார். பரிசுத்த பிதா இல்லாமல், தேவன் முழுமையானவராக இருக்க மாட்டார். அதேபோல, குமாரனோ பரிசுத்த ஆவியோ இல்லாமல் தேவன் முழுமையானவராக இருக்க மாட்டார். பிதாவையோ அல்லது குமாரனையோ தனியாக தேவனாக கருத முடியாது என்று அவர்கள் தங்களுடைய கருத்துக்களில் நம்புகின்றனர். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோரை சேர்த்து மட்டுமே தேவனாக கருத முடியும். இப்போது, எல்லா மத நம்பிக்கையுள்ளவர்களும், உங்கள் மத்தியில் பின்பற்றுகிற ஒவ்வொருவரும் கூட இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும், இந்த நம்பிக்கை சரியானதா என்பதை யாரும் விளக்க முடியாது, ஏனென்றால் நீங்கள் எப்போதும் தேவனுடைய காரியங்களைப் பற்றிய குழப்பத்திலேயே ஆழ்ந்திருக்கிறீர்கள். இவை கருத்துக்களாக இருக்கின்றபோதிலும், இவை சரியானவையா அல்லது தவறானவையா என்று உங்களுக்குத் தெரியாது, ஏனென்றால் நீங்கள் மதக் கருத்துக்களால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றீர்கள். மதத்தைப் பற்றிய இந்த வழக்கமான கருத்துக்களை நீங்கள் மிகவும் ஆழமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றீர்கள். மேலும், இந்த விஷம் உங்களுக்குள் மிகவும் ஆழமாக ஊடுருவிச் சென்றுள்ளது. ஆகையால், நீங்கள் இந்த காரியத்திலும் பொல்லாங்கான ஆதிக்கத்திற்கு அடிபணிந்திருக்கிறீர்கள், ஏனென்றால் திருத்துவ தேவன் என்பவரே கிடையாது. அதாவது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற திரித்துவம் உண்மையிலேயே கிடையாது. இவை எல்லாம் மனிதனின் வழக்கமான கருத்துக்களும், மனிதனின் தவறான நம்பிக்கைகளும் ஆகும். பல நூற்றாண்டுகளாக, மனிதன் இந்த திரித்துவத்தை நம்பிக்கொண்டிருக்கின்றான். இது மனிதனின் மனதிலுள்ள கருத்துக்களால் உண்டாகியிருக்கின்றன. மனிதனால் பொய்யாக புனையப்பட்டிருக்கின்றன. இதை மனிதன் இதற்கு முன் பார்த்ததில்லை. இத்தனை ஆண்டுகளில், திரித்துவத்தின் “உண்மையான அர்த்தத்தை” விளக்கிக்கூறிய பல வேதாகம விளைக்கவுரையாளர்கள் உள்ளனர், ஆனால் மூன்று தனித்துவமான ஒத்த ஆட்களான திரித்துவ தேவனைப் பற்றிய விளக்கங்கள் தெளிவற்றவையாக இருந்து வருகின்றன. மேலும் ஜனங்கள் எல்லோரும் தேவனுடைய “கட்டமைப்பால்” குழப்பமடைந்திருக்கின்றனர். எந்த ஒரு பெரிய மனிதனாலும் ஒரு முழுமையான விளக்கத்தை வழங்க முடியவில்லை. பெரும்பாலான விளக்கங்கள் பகுத்தறிவின் அடிப்படையிலும் காகிதத்தில் உள்ளவற்றின் அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, ஆனால் ஒரு மனிதனுக்குக் கூட அதன் அர்த்தத்தைப் பற்றிய முழுமையான தெளிவான புரிதல் கிடையாது. ஏனென்றால், மனிதனின் இருதயத்தில் இடம்பிடித்துள்ள இந்த பெரிய திரித்துவம் உண்மையிலேயே கிடையாது. …

இந்தத் திரித்துவ கருத்துக்கு ஏற்ப மூன்று கட்டக் கிரியைகளும் மதிப்பிடப்பட்டால், ஒவ்வொருவரும் செய்யும் கிரியை ஒரே மாதிரியானது அல்ல என்பதால் மூன்று தேவன்கள் இருக்க வேண்டும். உங்களில் யாராவது திரித்துவம் உண்மையில் உண்டென்று கூறினால், மூன்று ஆள்தத்துவங்களில் உள்ள இந்த ஒரே தேவன் சரியாக யார் என்பதை விளக்குங்கள். பரிசுத்த பிதா என்றால் யார்? குமாரன் என்றால் யார்? பரிசுத்த ஆவியானவர் என்றால் யார்? யேகோவா தான் பரிசுத்த பிதாவா? இயேசு தான் குமாரனா? அப்படியானால் பரிசுத்த ஆவியானவர் யார்? பிதா ஆவியானவர் இல்லையா? குமாரனின் சாராம்சம் ஆவியானவர் இல்லையா? இயேசுவின் கிரியை பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இல்லையா? அந்த நேரத்தில் ஆவியானவரால் செய்யப்பட்ட யேகோவாவின் கிரியை இயேசு செய்தது மாதிரியானது இல்லையா? தேவன் எத்தனை ஆவியானவர்களைக் கொண்டிருக்க முடியும்? உங்கள் விளக்கத்தின்படி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரும் ஒருவரே என்று வைத்துக் கொண்டால், மூன்று ஆவியானவர்கள் உள்ளனர், ஆனால் மூன்று ஆவியானவர்கள் இருக்கின்றார்கள் என்றால் மூன்று தேவன்கள் இருக்கின்றனர் என்று அர்த்தமாகும். ஒன்றான மெய்த்தேவன் என்று யாருமே இல்லை என்பதே இதன் அர்த்தமாகும். இந்த வகையான தேவன் எவ்வாறு இன்னும் தேவனுடைய இயல்பான சாராம்சத்தைக் கொண்டிருக்க முடியும்? ஒரே ஒரு தேவன் மட்டுமே உண்டு என்பதை நீ ஏற்றுக்கொண்டால், அவரால் எப்படி ஒரு மகனைப் பெற்று பிதாவாக இருக்க முடியும்? இவை அனைத்தும் உண்மையில் உன் கருத்துக்கள் அல்லவா? “ஒரே ஒரு பரிசுத்த ஆவியானவரும், ஒரே ஒரு தேவனும் மட்டுமே உள்ளனர்” என்று வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, ஒரே ஒரு தேவனும், இந்த தேவனில் ஒரே ஒரு ஆள்தத்துவமும், ஒரே ஒரு தேவனுடைய ஆவியானவரும் உள்ளனர். நீ பேசும் பிதாவும் குமாரனும் இருக்கின்றார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரே ஒரு தேவன் மட்டுமே இருக்கின்றார். மேலும், நீங்கள் நம்பும் பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் சாராம்சம் பரிசுத்த ஆவியின் சாராம்சமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் ஆவியானவராக இருக்கிறார், ஆனால் அவரால் மாம்சமாகி மனிதர்களிடையே வாழவும், எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கவும் முடியும். அவருடைய ஆவியானவர் எல்லாவற்றையும் உள்ளடக்கியவராகவும், எங்கும் நிறைந்தவராகவும் காணப்படுகிறார். அவரால் ஒரே நேரத்தில் மாம்சத்திலும் பிரபஞ்சத்திற்கு மேலேயும் இருக்க முடியும். தேவனே ஒன்றான மெய்த்தேவன் என்று எல்லா ஜனங்களும் சொல்வதனால், யாருடைய விருப்பப்படியும் பிரிக்க முடியாத ஒரே தேவன் மட்டுமே இருக்கிறார்! தேவன் ஒரே ஒரு ஆவியானவராகவும், ஒரே ஒரு ஆள்தத்துவமுள்ளவராகவும் இருக்கின்றார்; அவர்தான் தேவனுடைய ஆவியானவர் ஆவார். நீ சொல்வது போல பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோர் இருந்தால், அவர்கள் மூன்று தேவன்கள் அல்லவா? பரிசுத்த ஆவியானவர் ஒருவராகவும், குமாரன் மற்றொருவராகவும், பிதா இன்னொருவராகவும் இருக்கின்றனர். அவர்களுடைய ஆள்தத்துவங்கள் வேறுபட்டவர்கள், அவர்களுடைய சாராம்சங்கள் வேறுபட்டவை, அப்படியானல் அவர்கள் ஒவ்வொருவராலும் எப்படி ஒரே தேவனின் அங்கமாக இருக்க முடியும்? பரிசுத்த ஆவியானவர் ஆவியானவராக இருக்கிறார். இதைப் புரிந்துகொள்வது மனிதனுக்கு எளிதாகும். இது இவ்வாறு இருப்பதனால், பிதா ஆவியானவரைக் காட்டிலும் மேலானவராக இருக்கிறார். அவர் ஒருபோதும் பூமிக்கு இறங்கி வரவில்லை, ஒருபோதும் மாம்சமாக மாறவில்லை. அவர் மனிதனுடைய இருதயத்தில் யேகோவா தேவனாக இருக்கிறார், மேலும் அவர் நிச்சயமாகவே ஒரு ஆவியானவராகவும் இருக்கிறார். அவருக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் இடையிலான உறவு என்ன? இது பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலுள்ள உறவா? அல்லது பரிசுத்த ஆவியானவருக்கும் பிதாவின் ஆவியானவருக்கும் இடையிலுள்ள உறவா? ஒவ்வொரு ஆவியானவரின் சாராம்சமும் ஒன்றா? அல்லது பரிசுத்த ஆவியானவர் பிதாவின் கருவியா? இதை எவ்வாறு விளக்க முடியும்? அப்படியானால் குமாரனுக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் இடையிலான தொடர்பு என்ன? இது இரண்டு ஆவியானவர்களுக்கும் இடையிலான உறவா அல்லது ஒரு மனிதனுக்கும் ஆவியானவருக்கும் இடையிலான உறவா? இவை அனைத்தும் எந்த விளக்கமும் இல்லாத காரியங்களாகும்! அவர்கள் அனைவரும் ஒரே ஆவியானவர் என்றால், மூன்று ஆள்தத்துவங்களைப் பற்றி பேச முடியாது, ஏனென்றால் அவர்கள் ஒரே ஆவியானவரைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தனித்தனியான ஆட்களாக இருந்தால், அவர்களுடைய ஆவியானவர்கள் வலிமையில் மாறுபடுவார்கள், அவர்களால் ஒரே ஒரு ஆவியானவராக இருக்க முடியாது. பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்ற இந்த கருத்து மிகவும் பொருத்தமற்றதாகும்! இது தேவனை பிரிக்கின்றது, ஒவ்வொருவரையும் ஒரு நிலைப்பாட்டுடனும் ஆவியானவருடனும் மூன்று நபர்களாகப் பிரிக்கின்றது. அப்படியானால் அவரால் எப்படி இன்னும் ஒரே ஆவியானவராகவும் ஒரே தேவனாகவும் இருக்க முடியும்? வானமும் பூமியும் அதிலுள்ளவை யாவும் பிதா, குமாரனால் அல்லது பரிசுத்த ஆவியானவரால் சிருஷ்டிக்கப்பட்டனவா என்று சொல்லுங்கள்? அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அனைத்தையும் சிருஷ்டித்ததாக சிலர் கூறுகின்றனர். அப்படியானல் மனுக்குலத்தை மீட்டவர் யார்? அதைச் செய்தது பரிசுத்த ஆவியானவரா, குமாரனா அல்லது பிதாவா? மனுக்குலத்தை மீட்டது குமாரன் தான் என்று சிலர் கூறுகின்றனர். அப்படியானால் உண்மையில் குமாரன் யார்? அவர் தேவனுடைய ஆவியானவரின் மாம்சமாகிய தேவன் இல்லையா? சிருஷ்டிக்கப்பட்ட மனிதனின் கண்ணோட்டத்தில் மாம்சமாகிய தேவன் பரலோகத்திலுள்ள தேவனை பிதா என்ற பெயரில் அழைக்கிறார். இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டு பிறந்தார் என்பது உனக்குத் தெரியாதா? அவருக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். நீ என்ன சொன்னாலும், அவர் இன்னும் பரலோகத்திலுள்ள தேவனுடன் இருக்கிறார், ஏனென்றால் அவர் தேவனுடைய ஆவியானவரின் மாம்சமாகிய தேவனாவார். குமாரனைக் குறித்த இந்தக் கருத்து உண்மையில் பொய்யானதாகும். எல்லாக் கிரியைகளையும் செய்பவர் ஒரே ஆவியானவர்தான். தேவன் மாத்திரமே, அதாவது, தேவனுடைய ஆவியானவரே அவருடைய கிரியையைச் செய்கிறார். தேவனுடைய ஆவியானவர் யார்? அவர் பரிசுத்த ஆவியானவர் இல்லையா? அவர் இயேசுவில் கிரியை செய்யும் பரிசுத்த ஆவியானவர் இல்லையா? பரிசுத்த ஆவியானவரால் (அதாவது தேவனுடைய ஆவியானவரால்) கிரியை செய்யப்படவில்லை என்றால், அவருடைய கிரியை தேவனை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க முடியுமா? இயேசு ஜெபம் செய்கையில் பரலோகத்திலிருக்கின்ற தேவனை பிதா என்று பெயர் சொல்லி அழைத்தபோது, இது சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் மட்டுமே செய்யப்பட்டது, ஏனென்றால் தேவனுடைய ஆவியானவர் ஒரு சாதாரண மற்றும் இயல்பான மாம்சத்தை அணிந்திருந்தார் மற்றும் ஒரு சிருஷ்டியின் வெளிப்புறத் தோற்றத்தைப் பெற்றிருந்தார். அவனுக்குள் தேவனுடைய ஆவியானவர் இருந்தாலும், அவருடைய வெளிப்புறத் தோற்றம் இன்னும் ஒரு சாதாரண மனிதனின் தோற்றமாகவே இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் “மனுஷகுமாரனாக” மாறியிருந்தார், இதைப் பற்றி இயேசு உட்பட எல்லா மனிதர்களும் பேசினார்கள். அவர் மனுஷகுமாரன் என்று அழைக்கப்படுவதால், அவர் ஒரு சாதாரண மனிதரின் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு நபராக (ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், மனிதனின் வெளிப்புறத் தோற்றமுள்ளவராக) இருக்கிறார். ஆகையால், இயேசு பரலோகத்திலிருக்கின்ற தேவனை பிதா என்ற பெயரில் அழைத்தது, நீங்கள் முதலில் அவரை பிதா என்று அழைத்ததைப் போன்றதாகும். அவர் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் இவ்வாறு அழைக்கப்பட்டார். இயேசு நீங்கள் மனப்பாடம் செய்வதற்காக உங்களுக்குக் கற்பித்த கர்த்தருடைய ஜெபம் இன்னும் உங்களுக்கு நினைவிருக்கிறதா? “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே….” அவர் எல்லா மனிதர்களையும் பரமண்டலங்களிலிருக்கிற தேவனை பிதா என்ற பெயரில் அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரும் அவரை பிதா என்று அழைத்ததால், உங்கள் அனைவருடனும் சமமான நிலையில் நிற்கும் ஒருவரின் கண்ணோட்டத்தில் அவ்வாறு சொன்னார். பரலோகத்திலுள்ள தேவனை நீங்கள் பிதா என்ற பெயரில் அழைத்ததால், இயேசு உங்களுடன் சமமான நிலையில் இருப்பதையும், பூமியில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு மனிதனாக (அதாவது தேவனுடைய குமாரன்) இருப்பதையும் பார்த்ததை இது காண்பிக்கிறது. நீங்கள் தேவனைப் பிதா என்று அழைத்தால், நீங்கள் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் என்பதனால்தான் அல்லவா? சிலுவையில் அறையப்படுவதற்கு முன், இயேசுவின் அதிகாரம் பூமியில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவர் பரிசுத்த ஆவியானவரால் (அதாவது தேவனால்) ஆளுகை செய்யப்பட்ட மனுஷகுமாரனாகவும், பூமியில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களில் ஒருவராகவும் மட்டுமே இருந்தார், ஏனென்றால் அவர் இன்னும் தமது கிரியையை நிறைவு செய்யவில்லை. ஆகையால், பரலோகத்திலுள்ள தேவனை அவர் பிதா என்று அழைத்தது அவருடைய மனத்தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் மட்டுமே குறிக்கிறது. ஆனாலும், அவர் தேவனை (அதாவது, பரலோகத்திலுள்ள ஆவியானவரை) இவ்வாறு அழைப்பது, அவர் பரலோகத்திலுள்ள தேவனுடைய ஆவியானவரின் குமாரன் என்பதை நிரூபிக்கவில்லை. மாறாக, அவருடைய கண்ணோட்டம் மட்டுமே வேறுபட்டதாக இருந்ததே தவிர, அவர் வேறு நபராக இருக்கவில்லை. தனித்தனியான நபர்களாக இருக்கின்றனர் என்பது பொய்யாகும்! சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, இயேசு மாம்சத்தின் வரம்புக்கு உட்பட்ட மனுஷகுமாரனாக இருந்தார், அவர் ஆவியின் அதிகாரத்தை முழுமையாகக் கொண்டிருக்கவில்லை. அதனால்தான், சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை மட்டுமே அவரால் நாட முடிந்தது. இது அவர் கெத்செமனே என்னும் இடத்தில் மூன்று முறை ஜெபித்தது போலவே இருக்கிறது: “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, அவர் யூதர்களின் ராஜாவாக இருந்தார். அவர் கிறிஸ்துவாகவும், மனுஷகுமாரனாகவும் இருந்தார், மகிமையின் சரீரத்தில் அல்ல. அதனால்தான், சிருஷ்டிக்கப்பட்டவர் என்ற ஒரு நிலைப்பாட்டில் இருந்து, அவர் தேவனை பிதா என்று அழைத்தார். இப்போது, தேவனைப் பிதா என்று அழைக்கின்ற எல்லோரையும் குமாரன் என்று உன்னால் சொல்ல முடியாது. இது அப்படி இருந்திருந்தால், கர்த்தருடைய ஜெபத்தை இயேசு உங்களுக்குக் கற்பித்தவுடனே நீங்கள் எல்லோரும் குமாரனாகியிருக்க மாட்டீர்களா? நீங்கள் இன்னும் நம்பவில்லை என்றால், நீங்கள் பிதா என்று அழைப்பவர் யார் என்று சொல்லுங்கள்? நீங்கள் இயேசுவைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், இயேசுவின் பிதா யார்? இயேசு சென்ற பிறகு, பிதா மற்றும் குமாரனைக் குறித்த இந்தக் கருத்து இல்லாமல் போய்விட்டது. இந்தக் கருத்து இயேசு மாம்சமாகிய போது இருந்த ஆண்டுகளுக்கு மட்டுமே பொருத்தமானது. மற்ற எல்லா சூழ்நிலைகளிலும், நீங்கள் தேவனைப் பிதா என்று அழைக்கும்போது சிருஷ்டிப்பின் கர்த்தருக்கும் சிருஷ்டிக்கப்பட்டவற்றுக்கும் இடையிலான உறவு ஒன்றாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற திரித்துவத்தின் இந்த கருத்து நிலைநிற்பதற்கு எந்த நேரமும் இல்லை. இது காலங்காலமாக அரிதாகவே காணப்படும் ஒரு பொய்யாகும். திரித்துவம் என்பதே கிடையாது!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “திரித்துவம் என்பது உண்டா?” என்பதிலிருந்து

150. வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஒரே மெய்த்தேவன் யேகோவா மட்டுமே இஸ்ரவேலில் தமது கிரியையைச் செய்தார். காலம் மாறும்போது அவர் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார், ஆனால் ஒவ்வொரு பெயரும் வெவ்வேறு நபரைக் குறிக்கிறது என்பதை இது நிரூபிக்க முடியாது. இது இப்படி இருப்பதனால், தேவனில் எண்ணற்ற நபர்கள் இருக்க மாட்டார்கள் அல்லவா? பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருப்பது என்னவென்றால், நியாயப்பிரமாண காலத்தில் ஆரம்பிப்பதற்காக தேவனின் ஒரு கட்டக் கிரியையான யேகோவாவின் கிரியையாகும். இது தேவனுடைய கிரியையாக இருந்தது. அவர் பேசியது போலவே அது இருந்தது. அவர் கட்டளையிட்டபடியே அது நின்றது. யேகோவா எந்த நேரத்திலும் தாம் கிரியை செய்ய வந்த பிதா என்று சொல்லவும் இல்லை, மனுக்குலத்தை மீட்க வந்த குமாரன் என்றும் அவர் ஒருபோதும் தீர்க்கதரிசனம் உரைத்ததில்லை. இயேசுவின் காலத்திற்கு வரும்போது, சகல மனுக்குலத்தையும் மீட்க தேவனம் மாம்சமாகினார் என்று மட்டுமே கூறப்பட்டது, ஆனால் வந்தவர் குமாரன் என்று கூறப்படவில்லை. காலங்கள் ஒன்றுபோல இருப்பதில்லை என்பதாலும், தேவன் செய்யும் கிரியையையே வேறுபடுவதனால், அவர் தமது கிரியையை வெவ்வேறு பகுதிகளுக்குள் செய்ய வேண்டும். இதனால், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளமும் வேறுபடுகிறது. யேகோவா இயேசுவின் பிதா என்று மனிதன் நம்புகிறான், ஆனால் இது உண்மையில் இயேசுவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இயேசு சொன்னார்: “நாங்கள் பிதா குமாரன் என்று ஒருபோதும் வேறுபடுத்தப்படவில்லை; நானும் பரலோகத்திலுள்ள பிதாவும் ஒருவரே. பிதா என்னிலும் நான் பிதாவிலும் இருக்கிறேன்; மனிதர் குமாரனைப் பார்க்கும்போது, அவர்கள் பரலோக பிதாவையே பார்க்கிறார்கள்.” எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்க்கும்போது, பிதாவாக இருந்தாலும், குமாரனாக இருந்தாலும், அவர்கள் ஒரே ஆவியானவராக இருக்கின்றார்கள், தனி நபர்களாகப் பிரிக்கப்படுவதில்லை. மனிதன் இதை விளக்க முயற்சிக்கும்போது, தனித்தனி ஆள்தத்துவங்கள் என்ற கருத்து மற்றும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோருக்கு இடையிலான உறவு ஆகியவற்றினால் காரியங்கள் சிக்கலாகியுள்ளன. மனிதன் தனித்தனி ஆள்தத்துவங்களைப் பற்றி பேசும்போது, இது தேவனை குறிப்பிடாதா? மனிதன் ஆள்தத்துவங்களை முதலாமவர், இரண்டாவது நபர் மற்றும் மூன்றாவது நபர் என்றும் வரிசைப்படுத்துகிறான். இவை அனைத்தும் மனிதனின் கற்பனைகளே தவிர, இவை அர்த்தமுள்ளவையும் அல்ல, முற்றிலும் நம்பத்தகுந்தவையும் அல்ல! நீ அவரிடம், “எத்தனை தேவன்கள் இருக்கிறார்கள்?” என்று கேட்டால், தேவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் திரித்துவமான ஒரே மெய்த்தேவனாக இருக்கிறார் என்று அவர் கூறுவார். நீ மீண்டும் அவரிடம், “பிதா யார்?” என்று கேட்டால், “பிதா பரலோகத்திலுள்ள தேவனுடைய ஆவியானவர் என்றும், அவர் அனைவருக்கும் பொறுப்பானவர், பரலோகத்தின் எஜமானர்” என்று அவர் கூறுவார். “அப்படியானால் யேகோவா ஆவியானவரா?” அவர், “ஆம்!” என்று கூறுவார். நீ அவரிடம், “குமாரன் யார்?” என்று கேட்டால், நிச்சயமாகவே, இயேசு தான் குமாரன் என்று அவர் கூறுவார். “அப்படியானால் இயேசுவின் கதை என்ன? அவர் எங்கிருந்து வந்தார்?” “இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டு மரியாளிடம் பிறந்தார்” என்று கூறுவார் அப்படியானால் அவருடைய சாராம்சம் ஆவியானவர் இல்லையா? அவருடைய கிரியை பரிசுத்த ஆவியின் பிரதிநிதித்துவம் இல்லையா? யேகோவாதான் ஆவியானவர், இயேசுவின் சாராம்சமும் அவர்தான். இப்போதும் கடைசி நாட்களில், ஆவியானவர்தான் இன்னும் கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்லத் தேவையில்லை என்றிருக்கும்போது, அவர்களால் எப்படி வெவ்வேறு நபர்களாக இருக்க முடியும்? தேவனுடைய ஆவியானவரே ஆவியானவரின் கிரியையை வெவ்வேறு கண்ணோட்டங்களில் இருந்து செய்யவில்லையா? இவ்வாறு, ஆள்தத்துவங்களுக்கு இடையில் வேறுபாடு கிடையாது. இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார், மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி, அவருடைய கிரியையானது துல்லியமாக பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருக்கிறது. யேகோவா செய்த முதல் கட்டக் கிரியையில், அவர் மாம்சமாகவும் மாறவில்லை, மனிதனிடத்தில் தோன்றவும் இல்லை. ஆகையால் மனிதன் அவர் தோன்றியதை ஒருபோதும் பார்த்ததில்லை. அவர் எவ்வளவு பெரியவராகவும், எவ்வளவு உயரமானவராகவும் இருந்தாலும், மனிதனை ஆதியிலே சிருஷ்டித்த தேவனான ஆவியானவர் அவரே. அதாவது, அவர்தான் தேவனுடைய ஆவியானவராக இருந்தார். அவர் மேகங்களுடனே இருந்து மனிதனிடம் பேசியபோது, அவர் ஆவியானவராக மாத்திரமே இருந்தார். அவருடைய தோற்றத்தை யாரும் கண்டதில்லை. கிருபையின் காலத்தில், தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் வந்து யூதேயாவில் அவதரித்தபோது, ஒரு யூதனாக மனிதன் மாம்சமான தேவனின் சாயலை முதன்முதலாகப் பார்த்தான். யேகோவாவின் உணர்வை உணர முடியவில்லை. ஆயினும், அவர் பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார், அதாவது யேகோவாவின் ஆவியானவரால் கருத்தரிக்கப்பட்டார். இயேசு இன்னும் தேவனுடைய ஆவியானவரின் சாயலாகவே பிறந்தார். பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல் இயேசுவின் மேல் இறங்கியதைத் தான் மனிதன் முதலில் பார்த்தான். அது இயேசுவுக்கான பிரத்யேகமான ஆவியானவர் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவராக இருந்தார். அப்படியானால் இயேசுவின் ஆவியானவரை பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பிரிக்க முடியுமா? குமாரனாகிய இயேசு இயேசுவாகவும், பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த ஆவியானவராகவும் இருந்தால், அவர்களால் எப்படி ஒருவராக இருக்க முடியும்? அவ்வாறு இருந்தால் கிரியையை செய்ய முடியாமல் போயிருக்கும். இயேசுவுக்குள் இருக்கும் ஆவியானவர், பரலோகத்திலுள்ள ஆவியானவர், யேகோவாவின் ஆவியானவர் எல்லோருமே ஒருவர்தான். அவரை பரிசுத்த ஆவியானவர் என்றும், தேவனுடைய ஆவியானவர் என்றும், ஏழு மடங்கு தீவிரமான ஆவியானவர் என்றும் மற்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஆவியானவர் என்றும் அழைக்கலாம். தேவனுடைய ஆவியானவரால் அதிகமான கிரியைகளைச் செய்ய முடியும். அவரால் உலகத்தை சிருஷ்டிக்கவும், பூமியை ஜலப்பிரளயத்தால் அழிக்கவும் முடியும். அவரால் முழு மனுக்குலத்தையும் மீட்கவும் முடியும், முழு மனுக்குலத்தையும் ஜெயங்கொண்டு அழிக்கவும் முடியும். இந்த கிரியைகள் அனைத்தும் தேவனாலேயே செய்யப்படுகிறது, அவருக்குப் பதிலாக தேவனுடைய ஆள்தத்துவங்களானா வேறு யாராலும் செய்ய முடியாது. அவருடைய ஆவியானவரை யேகோவா, இயேசு மற்றும் சர்வவல்லவர் என்ற பெயர்களிலும் அழைக்கலாம். கர்த்தரும், கிறிஸ்துவும் அவரே. அவரால் மனுஷகுமாரனாகவும் முடியும். அவர் வானத்திலும் பூமியிலும் வாசம்பண்ணுகிறார். அவர் பிரபஞ்சங்களுக்கு மேலேயும், திரளான ஜனங்களுக்கு நடுவேயும் வாசம்பண்ணுகிறார். வானத்திற்கும் பூமிக்கும் அவர் ஒருவரே எஜமானர்! சிருஷ்டிப்பின் காலம் முதல் இப்போது வரை, இந்த கிரியையானது தேவனுடைய ஆவியானவரால் செய்யப்பட்டு வருகிறது. வானத்திலுள்ள கிரியையாக இருக்கட்டும் அல்லது மாம்சத்திலுள்ள கிரியையாக இருக்கட்டும், இவை அனைத்தும் அவருடைய சொந்த ஆவியானவராலேயே செய்யப்படுகின்றன. வானத்திலிருந்தாலும் அல்லது பூமியிலிருந்தாலும், சகல ஜீவராசிகளும் அவருடைய சர்வவல்லமையுள்ள உள்ளங்கையிலே உள்ளன. இவை எல்லாமே தேவனுடைய கிரியையாகும், அவருக்குப் பதிலாக வேறு ஒருவராலும் செய்ய இயலாது. வானங்களில், அவர் ஆவியானவராகவும், அதேவேளையில் தேவனாகவும் இருக்கிறார். மனிதர்களிடையே அவர் மாம்சமாகவும், அதேவேளையில் தேவனாகவும் இருக்கிறார். அவர் இலட்சக்கணக்கான பெயர்களால் அழைக்கப்பட்டாலும், அவர் இன்னும் அவராக இருக்கிறார், எல்லா வேலைகளும் அவருடைய ஆவியானவரின் நேரடி வெளிப்பாடாகவும் இருக்கின்றன. அவர் சிலுவையில் அறையப்பட்டதன் மூலமாக சகல மனுக்குலத்திற்குமான மீட்பு அவருடைய ஆவியானவரின் நேரடி கிரியையாகும், அதேபோல் இது கடைசி நாட்களில் எல்லா தேசங்களிலும், எல்லா நாடுகளிலும் அறிவிக்கப்படுகிறது. எல்லா நேரங்களிலும், தேவனை சர்வவல்லவர் என்றும், ஒரே மெய்த்தேவன் என்றும், சகலத்தையும் உள்ளடக்கிய தேவன் என்றும் மட்டுமே அழைக்க முடியும். தனித்தனி ஆள்தத்துவங்களும் கிடையாது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற இந்த கருத்தும் கிடையாது. வானத்திலும் பூமியிலும் ஒரே ஒரு தேவன் தான் வாசம்பண்ணுகிறார்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “திரித்துவம் என்பது உண்டா?” என்பதிலிருந்து

151. இன்னும் சிலர் கூறலாம்: “பிதா பிதாவாகவே இருக்கிறார்; குமாரன் குமாரனாகவே இருக்கிறார்; பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த ஆவியானவராகவே இருக்கிறார், இறுதியில் அவர்கள் ஒருவராவார்கள்.” அப்படியானால் நீ எவ்வாறு அவர்களைஒன்றாக உருவாக்க வேண்டும்? பிதாவையும் பரிசுத்த ஆவியானவரையும் எவ்வாறு ஒருவராக்க முடியும்? அவர்கள் இயல்பாகவே இருவராக இருந்தால், அவர்கள் எவ்வாறு ஒன்றாக இணைந்திருந்தாலும், அவர்கள் இரண்டு அங்கங்களாக இருந்திருக்க மாட்டார்களா? அவர்களை ஒன்றாக்குவது குறித்து நீ பேசும்போது, ஒரு முழுமையானதாக்க இரண்டு தனித்தனி அங்கங்களை வெறுமென இணைப்பதாக இருக்காதா? ஆனால் அவர்கள் முழுமையாக்கப்படுவதற்கு முன்பு இரண்டு அங்கங்கள் இல்லையா? ஒவ்வொரு ஆவியானவரிடமும் ஒரு தனிப்பட்ட சாராம்சம் உள்ளது. மேலும், இரண்டு ஆவியானவர்களையும் ஒரே ஒருவராக உருவாக்க முடியாது. ஆவியானவர் ஒரு பொருள் அல்ல, பொருள் உலகிலுள்ள எதையும் போல் இல்லாதவர். மனிதன் அதைப் பார்க்கும்போது, பிதா ஒரு ஆவியானவராக இருக்கிறார், குமாரன் மற்றொருவராக இருக்கிறார், பரிசுத்த ஆவியானவர் இன்னொருவராக இருக்கிறார், அதன்பிறகு மூன்று ஆவியானவர்களும் மூன்று டம்ளர் தண்ணீரைப் போல ஒன்றாக கலக்கப்பட்டு, ஒரே முழுமையானவராகின்றனர். அப்டியானால் மூவரும் ஒருவராக உருவாக்கப்படுவதில்லையா? இது முற்றிலும் தவறானதொரு விளக்கமாகும்! இது தேவனைப் பிரிப்பதில்லையா? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோர் எல்லோரையும் எப்படி ஒருவராக்க முடியும்? அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்ட மூன்று அங்கங்கள் அல்லவா? “இயேசு என்னுடைய நேசகுமாரன் என்று தேவன் வெளிப்படையாகக் கூறவில்லையா?” என்று சொல்பவர்களும் இன்னும் இருக்கின்றார்கள். இயேசு என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்பது நிச்சயமாக தேவனால் கூறப்பட்டதுதான். தேவன் தமக்குத்தாமே சாட்சி கொடுத்தார், ஆனால் வேறுபட்ட கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே, பரலோகத்திலுள்ள ஆவியானவராக தமது சொந்த மனுஷ அவதரிப்புக்கு சாட்சி கொடுத்தார். இயேசு அவருடைய மனுஷ அவதரிப்பாவார், பரலோகத்திலுள்ள அவருடைய குமாரன் அல்ல. உனக்குப் புரிகிறதா? “நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறார்,” என்ற இயேசுவின் வார்த்தைகள் அவர்கள் ஒரே ஆவியானவராக இருக்கின்றனர் என்பதைக் குறிப்பிடவில்லையா? மனுஷ அவதரிப்பின் காரணமாக அவர்கள் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் பிரிக்கப்பட்டார்கள் அல்லவா? உண்மையில், அவர்கள் இன்னும் ஒருவராகவே இருக்கின்றனர். எதுவாக இருந்தாலும், தேவன் தமக்குத்தாமே சாட்சி கொடுக்கிறார். காலங்களின் மாற்றத்தின் காரணமாக, கிரியையின் தேவைகள் மற்றும் அவருடைய நிர்வாகத் திட்டத்தின் வெவ்வேறு கட்டங்களின் காரணமாக, மனிதன் அவரை அழைக்கும் பெயரும் வேறுபடுகிறது. அவர் முதல் கட்டக் கிரியையைச் செய்ய வந்தபோது, அவரை இஸ்ரவேலரின் மேய்ப்பராகிய யேகோவா என்று மட்டுமே அழைக்க முடிந்தது. இரண்டாவது கட்டத்தில், மாம்சமாகிய தேவனை, கர்த்தர் மற்றும் கிறிஸ்து என்று மட்டுமே அழைக்க முடிந்தது. ஆனால் அந்த நேரத்தில், பரலோகத்திலுள்ள ஆவியானவரே இவரே என்னுடைய நேசகுமாரன் என்று கூறினார், இவர் தேவனுடைய ஒரே குமாரன் என்று கூறவில்லை. இது உண்மையில் நடக்கவில்லை. தேவனுக்கு எப்படி ஒரே குழந்தை இருக்க முடியும்? அப்படியானால் தேவன் மனிதனாக மாறியிருக்க மாட்டாரா? அவர் மனுஷ அவதரிப்பு என்பதால், அவர் தேவனுடைய நேசகுமாரன் என்று அழைக்கப்பட்டார். இதிலிருந்தே, பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலான உறவு வந்தது. இது உண்மையில் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான பிரிவின் காரணமாக ஏற்பட்டது. இயேசு மாம்சத்தின் கண்ணோட்டத்தில் ஜெபம் பண்ணினார். அவர் சாதாரண மனிதனின் மாம்சத்தைத் தரித்திருந்ததால், அவர் மாம்சத்தின் கண்ணோட்டத்தில் இவ்வாறு சொன்னார்: “எனது வெளிப்புறத் தோற்றம் ஒரு சிருஷ்டியினுடையதாக இருக்கிறது. இந்த பூமிக்கு வருவதற்காக நான் ஒரு மாம்சத்தை தரித்திருந்ததால், நான் இப்போது பரலோத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறேன்.” இந்த காரணத்திற்காகவே, அவர் மாம்சத்தின் கண்ணோட்டத்தில் பிதாவாகிய தேவனிடம் மட்டுமே ஜெபிக்க முடிந்தது. இது அவருடைய கடமையாக இருந்தது. மேலும், அதுவே மாம்சமாகிய தேவனுடைய ஆவியானவர் கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது. அவர் மாம்சத்தின் கண்ணோட்டத்தில் பிதாவிடம் ஜெபித்ததனால், அவரை தேவன் இல்லை என்று சொல்ல முடியாது. அவர் தேவனுடைய நேசகுமாரன் என்று அழைக்கப்பட்ட போதிலும், அவர் இன்னும் தேவனாகவே இருந்தார், ஏனென்றால் அவர் ஆவியானவரின் மாம்சமானவராக மட்டுமே இருந்தார், மேலும் அவருடைய சாராம்சம் இன்னும் ஆவியானவராகவே இருந்தது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “திரித்துவம் என்பது உண்டா?” என்பதிலிருந்து

முந்தைய: B. சீர்கெட்ட மனுக்குலத்தின் சாத்தானிய மனநிலையையும் அவற்றின் இயல்பான சாரத்தையும் வெளிப்படுத்துவது குறித்த வார்த்தைகள்

அடுத்த: D. சத்தியம் என்றால் என்ன என்பதை வெளிப்படுத்துவது குறித்த வார்த்தைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக