F. தேவனுடைய வார்த்தைகளை எவ்வாறு கடைப்பிடிப்பது மற்றும் கீழ்ப்படிவது என்பது குறித்து

391. தேவன் மனிதர்களைப் படைத்து பூமியில் வைத்தார், மற்றும் அவர் அதுமுதற்கொண்டு அவர்களை வழிநடத்தினார், அவர் அவர்களை இரட்சித்து மனுக்குலத்திற்கு ஒரு பாவநிவாரண பலியாக ஒப்புக்கொடுத்தார். முடிவில், அவர் இன்னும் மனுக்குலத்தை ஜெயங்கொள்ளவும், மனுக்குலம் முழுவதையும் இரட்சிக்கவும், மற்றும் அவர்களை ஆதி நிலைக்கு மீட்டுக்கொள்ளவும் வேண்டியுள்ளது. ஆதியில் இருந்து அவர் இந்தக் கிரியையில்தான் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்—மனுக்குலத்தை அதன் ஆதி சாயலாகவும் ரூபமாகவும் மீட்டெடுத்தல். தேவன் தமது ராஜ்யத்தை அமைத்து மனிதர்களின் ஆதி சாயலை மீட்டெடுப்பார், அதாவது தேவன் தமது அதிகாரத்தை பூமியிலும் மற்றும் எல்லா சிருஷ்டிகள் மத்தியிலும் நிறுவுவார். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பின்னர் மனுக்குலம் தங்கள் தேவனுக்குப் பயப்படும் இருதயத்தையும் தேவனுடைய சிருஷ்டிகள் ஆற்றவேண்டிய கடமையையும் இழந்து போனது, அதனால் தேவனுக்குக் கீழ்ப்படியாத விரோதியாக அவர்கள் மாறினர். பின்னர் மனுக்குலம் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்து அவனுடைய கட்டளைகளைப் பின்பற்றியது; இவ்வாறு, தேவன் தமது சிருஷ்டிகளுக்கு நடுவில் கிரியை செய்ய வழி இல்லாமல் போனது, மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரால் அவர்களது பயம் நிறைந்த பக்தியைப் பெற முடியாமல் போய்விட்டது. மனிதர்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், மேலும் அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும், ஆனால் உண்மையில் அவர்கள் அவரை நோக்கித் தங்கள் முதுகைத் திருப்பிக்கொண்டனர், மேலும் அதற்குப் பதிலாக சாத்தானை வணங்கினர். அவர்களது இருதயத்தில் சாத்தான் விக்கிரமாக மாறினான். இவ்வாறு, தேவன் அவர்களது இருதயத்தில் தம் இடத்தை இழந்தார், அதை வேறு வகையில் கூறினால் அவர் தாம் மனுக்குலத்தை படைத்ததன் அர்த்தத்தை இழந்துபோனார். ஆகவே, தாம் மனுக்குலத்தைப் படைத்ததன் பின்னணியில் இருக்கும் அர்த்தத்தை மீட்டெடுக்க, அவர் அவர்களுடைய ஆதி சாயலை மீட்டெடுத்து மனுக்குலத்தின் சீர்கெட்ட மனநிலையைப் போக்க வேண்டும். சாத்தானிடம் இருந்து மனிதர்களை மறுபடியும் மீட்க, அவர் அவர்களைப் பாவத்தில் இருந்து இரட்சிக்க வேண்டும். இந்த வகையில் மட்டுமே தேவனால் அவர்களது ஆதி சாயலையும் செயல்பாட்டையும் படிப்படியாக மீட்டெடுத்து, முடிவாகத் தமது ராஜ்யத்தை மீட்க முடியும். மனிதர்கள் சிறந்த முறையில் தேவனை ஆராதிக்கவும் சிறந்த முறையில் பூமியின் மீது வாழவும் அனுமதிக்க கீழ்ப்படியாமையின் பிள்ளைகளை இறுதியாக அழிப்பதும் மேற்கொள்ளப்படும். தேவனே மனிதர்களை சிருஷ்டித்ததால், அவர் அவர்களை அவரை ஆராதிக்க வைப்பார்; ஏனெனில் அவர் மனுக்குலத்தின் ஆதி செயல்பாட்டை மீட்க விரும்புகிறார், அவர் அதை முற்றிலுமாக மற்றும் எந்த மாசுமருவின்றி மீட்பார். அவராது அதிகாரத்தை மீட்பது என்றால் மனிதர்களை அவரை ஆராதிக்க வைத்து அவருக்கு கீழ்ப்படிய வைப்பது என்று அர்த்தமாகும்; தேவன் மனிதர்களை அவரால் வாழவைப்பார் மற்றும் அவரது விரோதிகளை தமது அதிகாரத்தின் விளைவாக அழியவைப்பார். எவரிடம் இருந்தும் எதிர்ப்பின்றி தம்மைப் பற்றிய எல்லாவற்றையும் தேவன் நிலைநிற்கச் செய்வார். தேவனுடைய ராஜ்யம் அவரது சொந்த ராஜ்யத்தை நிறுவ விரும்புகிறது. அவரை ஆராதிக்கும், முற்றிலுமாக அவருக்கு கீழ்ப்படியும் மற்றும் அவரது மகிமையை வெளிப்படுத்தும் மனுக்குலமே அவர் விரும்பும் மனுக்குலமாகும். தேவன் சீர்கெட்ட மனுக்குலத்தை இரட்சிக்காவிட்டால், பின்னர் அவர் மனுக்குலத்தைப் படைத்ததற்கான அர்த்தமே இல்லாமல் போகும்; அவருக்கு மனுக்குலத்திடம் அதிகாரம் ஒன்றும் இல்லாமல் போகும், பூமியில் அவரது ராஜ்யம் இனிமேலும் நிலைநிற்க முடியாமல் போய்விடும். அவருக்குக் கீழ்ப்படியாமல் இருக்கும் எதிரிகளை அழிக்காமல் போனால் அவர் தமது மகிமையை முற்றிலுமாகப் பெறமுடியாமல் போகும், அல்லது பூமியில் அவர் தமது ராஜ்யத்தை நிறுவ முடியாமல் போகும். மனுக்குலத்துக்குள் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பவர்களை முற்றிலுமாக அழித்தல், மற்றும் பரிபூரணமாக்கப்பட்டவர்களை இளைப்பாறுதலுக்குள் கொண்டுவருதல் இவையே அவர் தமது கிரியைகளை முடித்ததற்கான மற்றும் அவரது மாபெரும் கிரியை நிறைவேறுதலுக்கான அடையாளமாகும். மனிதர்கள் தங்கள் ஆதி சாயலில் மீட்கப்பட்ட பின், அவர்கள் தங்களுக்குரிய கடமைகளை முறையே நிறைவேற்ற முடிகின்றபோது, தங்களுக்கே உரிய முறையான இடங்களில் இருந்து மற்றும் தேவனின் விதிமுறைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும் போது, பூமியில் தம்மை ஆராதிக்கும் ஒரு கூட்ட மக்களை தேவன் ஆதாயப்படுத்தியிருந்திருப்பார், மற்றும் தம்மை ஆராதிக்கும் ஒரு ராஜ்யத்தை அவர் நிறுவி இருப்பார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து

392. நீ தேவனை விசுவாசிப்பதால், நீ அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். உன்னால் இதைச் செய்ய இயலவில்லை என்றால், நீ தேவனை விசுவாசிக்கிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல. நீ பல வருடங்களாக தேவனை விசுவாசித்தாலும், இன்னும் அவருக்குக் கீழ்ப்படியாமலும், அவருடைய வார்த்தைகளின் பரிபூரணத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமலும், அதற்குப் பதிலாக தேவனை உனக்கு கீழ்ப்படிந்து, உன் கருத்துக்களின்படி செயல்படுமாறு கேட்டுக்கொள்வாயானால், நீ தான் அனைவரைக் காட்டிலும் மிகவும் கலகக்காரன், நீ ஒரு அவிசுவாசி. மனுஷனின் கருத்துக்களுக்கு இணங்காத தேவனுடைய கிரியைகளுக்கும் வார்த்தைகளுக்கும் இதுபோன்றவர்கள் எவ்வாறு கீழ்ப்படிய முடியும்? தேவனுக்கு வேண்டுமென்றே கீழ்ப்படிய மறுப்பவர்களும் அவரை எதிர்ப்பவர்களுமே எல்லோரைக் காட்டிலும் பெரிய கலகக்காரர்கள். அவர்கள் தான் தேவனுடைய எதிரிகள், அந்திகிறிஸ்துக்கள். அவர்களுடையது எப்போதும் தேவனுடைய புதிய கிரியைக்கு எதிரான விரோதப் போக்காகும்; அவர்களிடம் ஒருபோதும் கீழ்ப்படிவதற்கான விருப்பம் சிறிதளவு கூட இருப்பதில்லை, அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்ததோ அல்லது தாழ்மைப்படுத்திக் கொண்டதோ கிடையாது. அவர்கள் மற்றவர்களுக்கு முன்பாக தங்களை பெருமைப்படுத்திக் கொள்கிறார்கள், ஒருபோதும் யாருக்கும் கீழ்ப்படிவதில்லை. தேவனுக்கு முன்பாக, வார்த்தையை பிரசங்கிப்பதில் சிறந்தவர்களாகவும், மற்றவர்களை இயக்குவதில் மிகவும் திறமையானவர்களாகவும் தங்களைக் கருதுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் தங்களிடமுள்ள “பொக்கிஷங்களை” ஒதுக்கித் தள்ளுவதில்லை, ஆனால் அவற்றை தொழுகைக்கான, மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதற்கான குடும்ப பரம்பரைச் சொத்துக்களாகக் கருதுகிறார்கள், மேலும் அவற்றைப் பார்த்து பிரமிக்கும் முட்டாள்களுக்கு பிரசங்கிக்க அவற்றை பயன்படுத்துகிறார்கள். திருச்சபையில் உண்மையிலேயே இது போன்ற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜனங்கள் இருக்கிறார்கள். அவர்களை தலைமுறை தலைமுறையாக தேவனுடைய வீட்டில் தங்கியிருக்கும் “வெல்லமுடியாத கதாநாயகர்கள்” என்று சொல்லலாம். அவர்கள் வார்த்தையை (கோட்பாடு) பிரசங்கிப்பதை தங்களுடைய மிக உயரிய கடமையாக கருதுகிறார்கள். கால காலமாக, தலைமுறை தலைமுறையாக, அவர்கள் தங்கள் “பரிசுத்தமான மற்றும் மீற முடியாத” கடமையைத் தீவிரமாக செயல்படுத்த ஆரம்பிக்கிறார்கள். அவர்களைத் தொடக்கூட யாரும் துணிவதில்லை; ஒருவர் கூட அவர்களை வெளிப்படையாக கடிந்துகொள்ளத் துணிவதில்லை. அவர்கள் கால காலமாக மற்றவர்களை அடக்கி ஆண்டு வருவதனால் தேவனுடைய வீட்டில் “ராஜாக்கள்” ஆக மாறி கட்டுப்பாடற்றவர்களாக செயல்படுகிறார்கள். இந்த பிசாசுகளின் கூட்டம் ஒன்றாக கைகோர்த்து எனது கிரியையை அழிக்க எத்தனிக்கிறது; இந்த உயிருள்ள பிசாசுகள் என் கண் முன்னே இருப்பதை நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்? பாதி கீழ்ப்படிதல் உள்ளவர்களும்கூட கடைசி வரை தொடர்ந்து பயணிக்க இயலாது. இன்னும் மோசமாக இந்த கொடுங்கோலர்கள் தங்கள் இருதயங்களில் சிறிதளவு கூட கீழ்ப்படிதல் இல்லாமல் இருக்கிறார்கள்! மனுஷன் தேவனை எளிதாக அடைவதில்லை. ஜனங்கள் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தினாலும், அவர்களால் அதில் ஒரு பகுதியை மாத்திரமே அடைந்து, இறுதியில் தங்களை பரிபூரணமாக்க அனுமதிக்க இயலும். தேவனுடைய கிரியையை அழிக்க முற்படும் பிரதான தேவதூதனின் பிள்ளைகளுக்கு என்ன நடக்கும்? தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதற்கு அவர்களிடம் சிறிதளவு நம்பிக்கை கூட இல்லையா? ஜெயத்தின் கிரியையைச் செய்வதில் எனது நோக்கம் ஜெயத்தின் நிமித்தமாக ஜெயம் கொள்வது மட்டுமின்றி, நீதியையும் அநீதியையும் வெளிப்படுத்துவதற்காகவும், மனுஷனின் தண்டனைக்கான ஆதாரத்தைப் பெறுவதற்காகவும், துன்மார்க்கரைக் கடிந்துகொள்வதற்காகவும் ஜெயம் கொள்வதாகும், அத்துடன் விருப்பத்துடன் கீழ்ப்படிபவர்களை பரிபூரணமாக்கும் பொருட்டும் ஜெயம் கொள்வதாகும். இறுதியில், எல்லோரும் தங்கள் வகைக்கு ஏற்ப பிரிக்கப்படுவார்கள், மேலும் பரிபூரணமாக்கப்பட்டவர்கள் தங்களது எண்ணங்கள் மற்றும் யோசனைகளில் கீழ்ப்படிதலுடன் நிறைந்திருப்பார்கள். இதுதான் இறுதியில் நிறைவேற்றப்படும் கிரியை ஆகும். இதற்கிடையில், தங்கள் ஒவ்வொரு செயலையும் கலகமாக கொண்டிருப்பவர்கள் தண்டிக்கப்பட்டு, நித்திய சாபமான அக்கினியில் எரிக்கப்படுவதற்கு அனுப்பப்படுவார்கள். அந்த காலம் வரும்போது, கடந்த காலங்களில் அந்த “வீரதீர, வெல்லமுடியாத கதாநாயகர்கள்” இழிவான மற்றும் புறக்கணிக்கப்பட்ட “பலவீனமான மற்றும் வலுவற்ற கோழைகளாக” மாறிப்போவார்கள். இது மாத்திரமே தேவனுடைய நீதியின் ஒவ்வொரு அம்சத்தையும், மனுஷனால் அவமதிக்கமுடியாத அவரது மனநிலையையும் எடுத்துரைக்க இயலும், மேலும் இதனால் மாத்திரமே என் இருதயத்திலுள்ள வெறுப்பைத் தணிக்க இயலும். இது முற்றிலும் நியாயமானது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்” என்பதிலிருந்து

393. தேவனால் செய்யப்படும் கிரியைகள் காலத்திற்கு காலம் மாறுபடும். நீ ஒரு கட்டத்தில் தேவனுடைய கிரியைக்கு மிகுந்த கீழ்ப்படிதலுடன் இருந்து, ஆனால் அடுத்த கட்டத்தில் அவருடைய கிரியை மீதான உன் கீழ்ப்படிதல் மோசமாக இருந்தால் அல்லது உன்னால் கீழ்ப்படிய இயலவில்லை என்றால், தேவன் உன்னை கைவிடுவார். தேவன் இந்த அடியை எடுத்துவைக்கும்போது அவருடைய வேகத்துக்கு நீ ஈடுகொடுத்தால், அவர் அடுத்த படிக்குச் செல்லும்போது, நீ தொடர்ந்து அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டும்; அப்போதுதான் நீ பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படியும் ஒருவனாக இருப்பாய். நீ தேவனை விசுவாசிப்பதால், உன் கீழ்ப்படிதலில் நீ இடைவிடாமல் நிலைத்திருக்க வேண்டும். வெறுமனே, நீ விரும்பும்போது கீழ்ப்படிந்து விருப்பமற்றபோது கீழ்ப்படியாமல் நீ இருக்கக்கூடாது. இவ்வகையான கீழ்ப்படிதல் தேவனால் பாராட்டப்படுவதில்லை. உன் சபை ஐக்கியத்திலுள்ள புதிய கிரியையின் வேகத்திற்கு உன்னால் ஈடுகொடுக்க முடியவில்லை என்றால், முந்தைய நீதிமொழிகளை தொடர்ந்து கடைப்பிடித்தால், உன் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற்றம் காணப்படும்? தேவனுடைய வார்த்தைகளின் மூலம் உனக்குக் கொடுப்பதே தேவனுடைய கிரியையாகும். நீ அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து ஏற்றுக்கொள்ளும்போது, பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உனக்குள் கிரியை செய்வார். பரிசுத்த ஆவியானவர் நான் பேசுவது போலவே கிரியை செய்கிறார்; நான் சொன்னது போலவே செய்கிறார், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் உடனடியாக கிரியை செய்வார். நீங்கள் தற்போதைய ஒளியைக் காண்பதற்கும் அதை உங்களுக்குள் கொண்டுவருவதற்காகவும், ஒரு புதிய ஒளியை வீசச் செய்கிறேன், நீ இந்த ஒளியில் நடக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் உனக்குள் உடனடியாக கிரியை செய்வார். சிலர் “நீ சொல்வதை நான் செய்யமாட்டேன்” என்று கூறி, கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில், நீ இப்போது சாலையின் இறுதிக்கு வந்துவிட்டாய் என்று நான் உனக்குச் சொல்கிறேன்; நீ வறண்டு போய்விட்டாய், இனிமேலும் உனக்கு ஜீவன் இல்லை. ஆகவே, உன் மனநிலையின் மாற்றத்தை அனுபவிப்பதில், தற்போதைய ஒளியின் வேகத்திற்கு ஈடுகொடுப்பதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. தேவனால் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட ஜனங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வது மட்டுமின்றி, திருச்சபைக்குள்ளும் கிரியை செய்கிறார். அவரால் யாருக்குள்ளும் கிரியை செய்ய இயலும். அவரால் தற்காலத்திலும் உனக்குள் கிரியை செய்யக்கூடும், மேலும் நீ இந்த கிரியையை அனுபவிப்பாய். அடுத்த காலகட்டத்தில், அவர் வேறொருவருக்குள் கிரியை செய்யலாம், இந்த விஷயத்தில் நீ விரைந்து பின்பற்ற வேண்டும்; தற்போதைய ஒளியை நீ எவ்வளவு நெருக்கமாகப் பின்பற்றுகிறாயோ, அவ்வளவு அதிகமாக உன் வாழ்க்கை வளர்ச்சியடையும். ஒருவர் எவ்விதமான நபராக இருந்தாலும், அவருக்குள் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்தால், நீ பின்பற்ற வேண்டும். அவர்கள் அனுபவித்த விதமாகவே நீங்களும் அனுபவிப்பீர்கள், நீங்கள் இன்னும் மேலான காரிங்களையும் பெறுவீர்கள். அவ்வாறு செய்வதன் மூலம் நீ மிக விரைவாக முன்னேறுவாய். இதுதான் மனிதர்களின் பரிபூரணத்துக்கான பாதையாகும், இதன் மூலமாகவே வாழ்க்கை வளர்ச்சியடைகிறது. பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு நீ கீழ்ப்படிவதன் மூலமே பரிபூரணமாக்கப்படுவதற்கான பாதையை அடைகிறாய். உன்னை பரிபூரணப்படுத்த தேவன் எந்த வகையான நபரின் மூலமும் கிரியை செய்வார் அல்லது எந்த நபர், சம்பவம் அல்லது காரியத்தின் மூலம் அவர் உன் காரியங்களைப் பெறவோ அல்லது பார்க்கவோ அனுமதிப்பார் என்பது உனக்குத் தெரியாது. இந்தச் சரியான பாதையில் நீ அடியெடுத்து வைக்க முடிந்தால், நீ தேவனால் பூரணப்படுத்தப்படுவாய் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையே இது காட்டுகிறது. உன்னால் முடியவில்லை என்றால், உன் எதிர்காலம் இருண்டும், ஒளியில்லாமலும் காணப்படும் என்பதையே இது காட்டுகிறது. நீ சரியான பாதைக்கு வந்ததும், எல்லா காரியங்களிலும் நீ வெளிப்படுத்துதலைப் பெறுவாய். பரிசுத்த ஆவியானவர் மற்றவர்களுக்கு எதை வெளிப்படுத்தினாலும், நீயே காரியங்களை அனுபவிக்க அவர்களுடைய அறிவின் அடிப்படையில் நீ செயல்பட்டால், இந்த அனுபவம் உன் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும், மேலும் இந்த அனுபவத்திலிருந்து உன்னால் மற்றவர்களுக்கும் கொடுக்க இயலும். சொன்தையே மீண்டும் மீண்டும் சொல்வோர் எந்த அனுபவமும் இல்லாதவர்கள்; உன் சொந்த உண்மையான அனுபவத்தையும் அறிவையும் பற்றி பேச ஆரம்பிப்பதற்கு முன்பு, மற்றவர்களின் ஞானம் மற்றும் வெளிச்சத்தின் மூலம் ஒரு நடைமுறை வழியை கண்டுபிடிக்க நீ கற்றுக்கொள்ள வேண்டும். இது உன் சொந்த வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு தேவனிடமிருந்து வரும் அனைத்துக்கும் கீழ்ப்படிந்து நீ அனுபவிக்க வேண்டும். நீ சகலத்திலும் தேவனுடைய சித்தத்தை நாட வேண்டும், சகலத்திலும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும், இதன் மூலம் உன் வாழ்க்கை வளர்சியடையலாம். இதுபோன்ற நடைமுறை மிக விரைவான முன்னேற்றத்தைக் கொடுக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்” என்பதிலிருந்து

394. தேவனுடைய கிரியைக்கு ஒப்புக்கொடுப்பது நிஜமானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும், அதன்படி வாழவும் வேண்டும். மேலோட்டமான கீழ்ப்படிதலினால் மாத்திரம் தேவனுடைய பாரட்டைப் பெற இயலாது, ஒருவருடைய மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்காமல் தேவனுடைய வார்த்தையின் மேலோட்டமான அம்சங்களுக்குக் கீழ்ப்படிவது தேவனுடைய இருதயத்திற்குப் பிரியமானது அல்ல. தேவனுக்குக் கீழ்ப்படிவதும் தேவனுடைய கிரியைக்குக் கீழ்ப்படிவதும் ஒன்றுதான். தேவனுக்கு மாத்திரமே அடிபணிந்து, அவருடைய கிரியைக்கு கீழ்ப்படியாதவர்களை கீழ்ப்படிதலுள்ளவர்கள் என்று கருத இயலாது, இவர்கள் உண்மையிலேயே கீழ்ப்படியாமல் வெளிப்புறமாக துதிபாடுகிறவர்களாக இருக்கிறார்கள். தேவனுக்கு உண்மையிலேயே கீழ்ப்படிகிறவர்கள் அனைவருமே கிரியையின் மூலம் ஆதாயப்படவும், தேவனுடைய மனப்பாங்கையும் கிரியையையும் குறித்த புரிதலைப் பெறவும் இயலும். இதுபோன்றவர்கள் மாத்திரமே தேவனுக்கு உண்மையாக கீழ்ப்படிகிறார்கள். இதுபோன்றவர்களால் புதிய கிரியையின் மூலம் புதிய அறிவைப் பெறவும், புதிய மாற்றங்களுக்கு உட்படவும் இயலும். இந்த ஜனங்கள் மாத்திரமே தேவனால் பாராட்டப்படுகிறார்கள், இந்த ஜனங்கள் மாத்திரமே பரிபூரணமாக்கப்படுகிறார்கள், இவர்களுடைய மனநிலைகள் தான் மாறுகின்றன. தேவனால் பாராட்டப்படுகிறவர்கள் தான் தேவனுக்கும், அவருடைய வார்த்தைக்கும் கிரியைக்கும் மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிகிறார்கள். இதுபோன்ற ஜனங்கள் மாத்திரமே சரியானவர்களாக இருக்கிறார்கள், இதுபோன்ற ஜனங்கள் மாத்திரமே தேவனை உண்மையாக விரும்புகிறார்கள், தேவனை உண்மையாக நாடுகிறார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்” என்பதிலிருந்து

396. புதிய ஒளியைப் பாராட்டுவதும், அதை ஏற்றுக்கொண்டு அதை கடைபிடிப்பதும்தான் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கான திறவுகோல் ஆகும். இது மட்டுமே உண்மையான கீழ்ப்படிதல் ஆகும். தேவனை விரும்புவதற்கான ஆவல் இல்லாதவர்கள் வேண்டுமென்றே அவருக்குக் கீழ்ப்படிய இயலாதவராவர், மேலும் அவர்கள் அந்தஸ்தில் திருப்தி அடைந்ததன் விளைவாக தேவனை எதிர்க்கலாம். அந்த மனிதன் தேவனுக்கு கீழ்படிய முடியாது, ஏனெனில் அவன் முன்பு வந்ததின் பொருட்டு பீடிக்கப்பட்டுள்ளான். இதற்கு முன் வந்த காரியங்கள் தேவனைப் பற்றிய எல்லா விதமான கருத்துக்களையும் கற்பனைகளையும் மக்களுக்கு அளித்துள்ளன, மேலும் அவர்களுடைய மனதில் இவை தேவனின் உருவமாகிவிட்டன. இவ்வாறு, அவர்கள் விசுவாசிப்பது அவர்களின் சொந்த கருத்துக்களும், அவர்களின் சொந்த கற்பனைகளும் ஆகும். உங்கள் சொந்த கற்பனையிலுள்ள தேவனுடன் இன்று உண்மையான ஊழியம் செய்யும் தேவனை நீங்கள் அளவிட்டால், உங்கள் விசுவாசம் சாத்தானிடமிருந்து வருகிறது, மேலும் உங்கள் சொந்த விருப்பங்களால் கறைபட்டுள்ளது. தேவன் இந்த வகையான விசுவாசத்தை விரும்புவதில்லை. அவர்களுடைய உயர்ந்த சான்றுகளை பொருட்படுத்தாமல் மற்றும் அவர்களுடைய அர்ப்பணிப்பையும் பொருட்படுத்தாமல், தேவனுடைய பணிக்காக அவர்கள் தம்முடைய ஜீவநாள் முழுவதும் முயற்சிகளை அர்ப்பணித்து, தங்களை தியாகம் செய்திருந்தாலும் கூட, இது போன்ற விசுவாசமுள்ள எவரையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் வெறுமனே அவர்களுக்கு ஒரு சிறிய கிருபையை அளித்து, அதை ஒரு காலத்திற்கு அனுபவிக்க அனுமதிக்கிறார். இது போன்ற மக்களால் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவர இயலாது. பரிசுத்த ஆவியானவர் இவர்களுக்குள் கிரியை செய்யமாட்டார், மேலும் தேவன் அவர்களில் ஒவ்வொருவரையும் அவரவர் முறைப்படி அகற்றி விடுவார். தங்கள் விசுவாசத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியாத மற்றும் தவறான நோக்கங்களைக் கொண்ட இளைஞர்களும் வயதானவர்களும்தான் எதிர்ப்பவர்களாகவும் குறுக்கிடுபவர்களாகவும் இருக்கின்றனர், அத்தகையவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி தேவனால் அகற்றப்படுவார்கள். தேவனுக்கு சிறிதளவும் கீழ்ப்படிதல் இல்லாமல், அவருடைய நாமத்தை வெறுமனே ஏற்றுக்கொண்டு, தேவனின் தயவு மற்றும் அன்பைப் பெற்றவர்களாக இருந்தாலும், பரிசுத்த ஆவியின் அடிச்சுவடுகளில் நடவாமல் மற்றும் பரிசுத்த ஆவியின் தற்போதைய செயல் மற்றும் சொல்லுக்குக் கீழ்படியாமல் இருப்பவர் தேவனின் கிருபையின் மத்தியில் ஜீவித்தாலும், இம்மாதிரியான மக்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்படாமலும் பரிபூரணப்படுத்தப்படாமலும் இருப்பர். தேவன் மக்களை தங்கள் கீழ்ப்படிதலின் மூலமாகவும், தேவனுடைய வார்த்தைகளை புசிப்பதன் மூலமாகவும், அருந்துவதன் மூலமாகவும், அனுபவிப்பதன் மூலமாகவும், அவர்களின் ஜீவனில் ஏற்படும் துன்பங்கள் மற்றும் சுத்திகரிப்பு மூலமாகவும் பரிபூரணமாக்குகிறார். இது போன்ற விசுவாசத்தின் மூலம் மட்டுமே மக்களின் மனநிலையை மாற்ற முடியும், அப்போதுதான் அவர்கள் தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற முடியும். தேவனின் கிருபையின் மத்தியில் ஜீவித்திருப்பதில் திருப்தி அடையாமல், தீவிரமாக மிக்க ஆவல் கொள்வது மற்றும் சத்தியத்தை தேடுவது மற்றும் தேவனால் ஆதாயப்படுவதை நாடுவது ஆகியவையே உணர்வுபூர்வமாக தேவனுக்குக் கீழ்ப்படிவதாகும், மேலும் இதுதான் துல்லியமாக அவர் விரும்பும் விசுவாசமாகும். தேவனின் கிருபையை அனுபவிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாதவர்களை பரிபூரணமாக்கவோ அல்லது மாற்றவோ முடியாது; மேலும் அவர்களின் கீழ்ப்படிதல், பக்தி, அன்பு மற்றும் பொறுமை அனைத்தும் மேலோட்டமானவை ஆகும். தேவனின் கிருபையை மட்டுமே அனுபவிப்பவர் உண்மையிலேயே தேவனை அறிந்துகொள்ள முடியாது, மேலும் அவர்கள் அவ்வாறு தேவனை அறிந்தாலும் கூட அவர்களுடைய அறிவானது மேலோட்டமானதாகும், மேலும் அவர்கள் “தேவன் மனிதனை நேசிக்கிறார்,” அல்லது தேவன் மனிதனிடம் இரக்கமுள்ளவராக இருக்கிறார்” போன்ற விஷயங்களை கூறுகிறார்கள். இது மனிதனின் ஜீவனை குறிக்கவில்லை, மேலும் மக்கள் தேவனை உண்மையாக அறிந்திருக்கிறார்கள் என்பதையும் காட்டவில்லை. தேவனின் வார்த்தைகள் அவர்களைச் செம்மைப் படுத்தும்போது, அல்லது தேவனுடைய சோதனைகள் அவர்கள் மீது வரும்போது, மக்கள் தேவனுக்கு கீழ்படியாமல், அவர்கள் சந்தேகம் அடைந்து, விழுந்துபோனால், அவர்கள் குறைந்தபட்சம்கூட கீழ்ப்படிந்தவர்கள் அல்ல. அவர்களுக்குள் தேவன் மீதான விசுவாசத்தைப் பற்றிய பல விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன; பல வருட விசுவாசத்தின் விளைவாக ஏற்படும் பழைய அனுபவங்கள் அல்லது வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. இது போன்றவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியுமா? மனித காரியங்களால் நிறைந்துள்ளவர்களால் எவ்வாறு தேவனுக்கு கீழ்ப்படிய முடியும்? அவர்களின் “கீழ்ப்படிதல்” தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப ஆனதாகும். தேவன் இவ்வாறான கீழ்ப்படிதலை விரும்புகிறாரா? இது தேவனுக்குக் கீழ்ப்படிதல் அல்ல, மாறாக கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதாகும். அது சுய-திருப்தி மற்றும் சுய-சந்தோஷம் ஆகும். இது தேவனுக்கு கீழ்படிதல் என்று நீங்கள் கூறினால், நீங்கள் அவருக்கு எதிராக அவரை நிந்திக்கவில்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தினாலே நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்பதிலிருந்து

397. தங்கள் விசுவாசத்தில் தேவனுக்குக் கீழ்படிதலைத் தேடாதவர்கள் அனைவரும் அவரை எதிர்க்கின்றனர். மக்கள் சத்தியத்தைத் தேடவும், அவருடைய வார்த்தைகளுக்காக தாகம் கொள்ளவும், அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவும், அருந்தவும், மற்றும் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கு அவற்றை கடைபிடிக்குமாறும் தேவன் கேட்டுக்கொள்கிறார். இவை உங்களுடைய உண்மையான நோக்கங்களாக இருந்தால், தேவன் நிச்சயமாக உங்களை உயர்த்துவார் மற்றும் உங்களிடம் கிருபையுள்ளவராக இருப்பார். இது சந்தேகிக்க இயலாத மற்றும் மாற்ற முடியாத ஒன்றாகும். உங்கள் நோக்கம் தேவனுக்குக் கீழ்படியாததாக இருந்தால் மற்றும் உங்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்குமானால், நீங்கள் சொல்வது மற்றும் செய்வது அனைத்தும், அதாவது தேவனுக்கு முன்பாக ஏறெடுக்கும் உங்கள் ஜெபங்களும் மற்றும் உங்களுடைய அனைத்துச் செயல்களும் அவருக்கு எதிரானதாக இருக்கும். நீங்கள் மென்மையாக பேசுபவராகவும் கனிவான நடத்தையுள்ளவராகவும் இருக்கலாம், உங்களுடைய ஒவ்வொரு செயலும் சொல்லும் சரியானதாக தோன்றலாம் மற்றும் நீங்கள் கீழ்படியும் ஒருவராக தோன்றலாம், ஆனால் உங்கள் நோக்கங்களுக்கும், தேவன் மீதான விசுவாசத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கும் வரும்போது, நீங்கள் செய்வதெல்லாம் தேவனுக்கு எதிரானதும், நீங்கள் செய்யும் அனைத்தும் தீமையானதுமாகும். ஆடுகளைப் போல கீழ்ப் படிந்தவர்களாகத் தோன்றினாலும், இதயத்தில் தீய நோக்கங்கள் கொண்டவர்கள், ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களாவர். அவர்கள் நேரடியாக தேவனை புண்படுத்துகிறார்கள், மேலும் அவர்களில் ஒருவரையும் தேவன் விடமாட்டார். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் ஒவ்வொருவரையும் பற்றி வெளிப்படுத்துவார், நயவஞ்சகர்கள் அனைவருமே, நிச்சயமாக, பரிசுத்த ஆவியினால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள் என்பதை அனைவருக்கும் காண்பிப்பார். கவலைப்பட வேண்டாம். தேவன் அவர்களில் கடைசியில் உள்ளவர் வரை அனைவரையும் சரிக்கட்டி அப்புறப்படுத்துவார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தினாலே நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்பதிலிருந்து

399. அன்றாட ஜீவித சிக்கல்களை எதிர்கொள்ளும்போது, தேவனுடைய அதிகாரத்தையும் அவருடைய சர்வவல்லமையையும் நீ எவ்வாறு அறிந்து புரிந்துகொள்ள வேண்டும்? இந்த சிக்கல்களை நீ எதிர்கொள்ளும் போது, அவற்றைப் புரிந்துகொள்வது, கையாள்வது மற்றும் அனுபவிப்பது எப்படி என்று தெரியாத போது, தேவனுடைய சர்வவல்லமை மற்றும் ஏற்பாடுகளுக்கு நீ கீழ்ப்படிவதற்கான உன் நோக்கத்தை, விருப்பத்தை மற்றும் கீழ்ப்படிவதன் யதார்த்தத்தை நிரூபிக்க நீ என்ன மனப்பான்மையைப் பின்பற்றவேண்டும்? முதலில் நீ காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும்; பிறகு நீ தேட கற்றுக்கொள்ள வேண்டும்; அதன் பின் நீ கீழ்ப்படிய கற்றுக்கொள்ள வேண்டும். “காத்திருத்தல்” என்பது தேவனுடைய நேரத்திற்காகக் காத்திருத்தல், அவர் உனக்காக ஏற்பாடு செய்துள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களுக்காகக் காத்திருத்தல், அவருடைய விருப்பம் படிப்படியாக உனக்கு வெளிப்படும்வரை காத்திருத்தல் என்பதாகும். “தேடுவது” என்பது ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் அவர் வகுத்துள்ள விஷயங்கள் ஆகியவற்றின் மூலம் உனக்காக தேவனுடைய சிந்தனைமிகுந்த நோக்கங்களை கவனித்து புரிந்துகொள்வது, அவற்றின் மூலம் சத்தியத்தைப் புரிந்துகொள்வது, மனிதர்கள் எதைச் சாதிக்கவேண்டும் என்பதையும் அவர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிகளையும் புரிந்துகொள்வது, தேவன் மனிதர்களில் எத்தகைய முடிவுகளை அடைய மற்றும் அவர்களில் எத்தகைய சாதனைகளை அடைய எண்ணுகிறார் என்பதையும் புரிந்துகொள்வதாகும். “கீழ்ப்படிதல்” என்பது, தேவன் திட்டமிட்டுள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களை ஏற்றுக்கொள்வது, அவருடைய சர்வவல்லமையை ஏற்றுக்கொள்வது மற்றும் அதன் மூலம், சிருஷ்டிகர் மனிதனின் தலைவிதியை எவ்வாறு ஆணையிடுகிறார், அவர் தன் ஜீவினைக்கொண்டு மனிதனுக்கு எவ்வாறு வழங்குகிறார், அவர் மனிதனுக்குள் எவ்வாறு சத்தியத்தைச் செயல்படுத்துகிறார் ஆகியவற்றை அறிந்துகொள்வதைக் குறிக்கிறது. தேவனுடைய ஏற்பாடுகள் மற்றும் சர்வவல்லமையின்கீழ் உள்ள அனைத்தும் இயற்கையான விதிகளுக்குக் கீழ்ப்படிகின்றன. மேலும், உனக்காக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கட்டளையிட தேவனை அனுமதிக்க நீ தீர்மானித்தால், நீ காத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், நீ தேட கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் நீ கீழ்ப்படிய கற்றுக்கொள்ளவேண்டும். தேவனுடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படிய விரும்பும் ஒவ்வொரு நபரும் கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறை இதுதான், தேவனுடைய சர்வவல்லமையையும் ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு நபரும் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை குணம் இதுதான். அத்தகைய மனப்பான்மையைக் கொண்டிருக்க, அத்தகைய குணத்தைக் கொண்டிருக்க, நீ கடினமாக உழைக்கவேண்டும். உண்மையான யதார்த்தத்திற்குள் நீ நுழைவதற்கு ஒரே வழி இதுதான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

400. தேவன் அறிவுறுத்தியபடி நோவா செய்தபோது, தேவனுடைய நோக்கங்கள் என்னவென்று அவனுக்குத் தெரியாமல் இருந்தது. தேவன் எதைச் சாதிக்க விரும்புகிறார் என்பது அவருக்குத் தெரியாமல் இருந்தது. தேவன் அவனுக்கு அதிக விளக்கம் இல்லாமல், ஒரு கட்டளையை மட்டுமே கொடுத்து, எதையேனும் செய்யும்படி அவனுக்கு அறிவுறுத்தியிருந்தார். நோவா முன்வந்து அதைச் செய்தான். அவன் தேவனுடைய நோக்கங்களை ரகசியமாகக் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை, தேவனை எதிர்க்கவில்லை அல்லது நேர்மையற்ற தன்மையைக் காட்டவில்லை. நோவா சென்று, பரிசுத்தமான எளிய இருதயத்துடன் அதைச் அப்படியே செய்தான். தேவன் எதைச் செய்யச் சொன்னாலும், நோவா அதைச் செய்தான். அவன் செய்த காரியத்தில் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதும் அதற்குச் செவிகொடுப்பதும் அவருடைய நம்பிக்கையை உறுதிப்படுத்தியது. அவ்வாறு தேவன் ஒப்படைத்ததை அவர் நேர்மையாகவும் எளிமையாகவும் கையாண்டார். அவருடைய கிரியைகளின் சாராம்சம் கீழ்ப்படிதல், இரண்டாவது சிந்தனை அல்ல, எதிர்ப்பல்ல, மேலும், தனது சொந்த நலன்களைப் பற்றியோ அவனது லாபங்கள் மற்றும் இழப்புகளைப் பற்றியோ சிந்திப்பதும் அல்ல—இவை அவரது சாராம்சமாகும். மேலும், ஜலப்பிரளயத்தால் உலகை அழிப்பேன் என்று தேவன் சொன்னபோது, நோவா எப்போது அல்லது என்னவாகிவிடும் என்று கேட்கவில்லை மற்றும் எப்படி உலகை அழிக்கப் போகிறார் என்று தேவனிடம் கேட்கவில்லை. தேவன் அறிவுறுத்தியபடி அவன் செய்தான். எவ்வாறாயினும், தேவன் அது செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார். தேவன் கேட்டபடியே அவன் செய்தான் மற்றும் நடவடிக்கைகளை உடனடியாகவும் தொடங்கினான். தேவனைத் திருப்திப்படுத்த விரும்பும் மனநிலையுடன் தேவனுடைய அறிவுறுத்தல்களின்படி அவன் செயல்பட்டான். தான் பேரழிவைத் தவிர்க்க இது உதவும் என அவன் இதைச் செய்தானா? இல்லை. உலகம் அழிக்கப்படுவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று அவன் தேவனிடம் கேட்டானா? அவர் அவ்வாறு செய்யவில்லை. பேழையைக் கட்ட எவ்வளவு காலம் ஆகும் என்று அவன் தேவனிடம் கேட்டானா அல்லது அவன் அறிந்திருந்தானா? அவனுக்கு அதுவும் தெரியாமல் இருந்தது. அவன் வெறுமனே கீழ்ப்படிந்தான், கவனித்தான் மற்றும் அதன்படி செயல்பட்டான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து

401. தேவன் மீதான நம்பிக்கையில், பேதுரு எல்லாவற்றிலும் தேவனை திருப்திப்படுத்த முயன்றான் மற்றும் தேவனிடமிருந்து வந்த அனைத்திற்கும் கீழ்ப்படிய முயன்றான். சிறிதும் புகார் இல்லாமல், அவனால் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அதே போல் சுத்திகரிப்பு, உபத்திரவம் மற்றும் அவனது ஜீவிதத்தில் எதுவும் இல்லாமல் போவது, என இவை எதுவுமே தேவன் மீதான அவனது அன்பை மாற்ற முடியவில்லை. இது தேவன் மீதான நிறைவான அன்பு அல்லவா? இது தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையின் நிறைவேற்றமல்லவா? சிட்சையிலோ, நியாயத்தீர்ப்பிலோ, உபத்திரவத்திலோ, நீ எப்போதுமே மரணம் வரையில் கீழ்ப்படிதலைக் காட்ட பெலனுடன் இருக்கிறாய். இதுதான் தேவனுடைய ஒரு சிருஷ்டியால் அடையப்பட வேண்டும். இது தேவன் மீதான அன்பின் தூய்மையாகும். மனிதனால் இதை அதிகம் அடைய முடிந்தால், அவனே தேவனுடைய தகுதிவாய்ந்த சிருஷ்டி மற்றும் சிருஷ்டிகரின் விருப்பத்தை சிறப்பாக பூர்த்தி செய்யும் வேறு எதுவும் இல்லை என்பதாகும். நீ தேவனுக்காக உழைக்க முடிகிறது, ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியவில்லை, தேவனை உண்மையாக நேசிக்க இயலவில்லை என்பதாக கற்பனை செய்துகொள். இவ்வாறு, நீ தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை நிறைவேற்றியிருக்க மாட்டாய் என்பது மட்டுமல்லாமல், நீ தேவனால் கண்டிக்கப்படுவாய். ஏனென்றால், நீ சத்தியத்தைக் கொண்டிராத, தேவனுக்குக் கீழ்ப்படிய இயலாத, தேவனுக்குக் கீழ்ப்படியாத ஒருவன். நீ தேவனுக்காக உழைப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகிறாய். சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவது பற்றியோ உன்னை அறிந்து கொள்வது பற்றியோ நீ கவலைப்படுவதில்லை. நீ சிருஷ்டிகரைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது அறிந்திருக்கவில்லை. நீ சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிவதுமில்லை சிருஷ்டிகரை நேசிப்பதுமில்லை. இயல்பாகவே நீ தேவனுக்கு கீழ்ப்படியாத ஒருவன், எனவே அத்தகையவர்கள் சிருஷ்டிகரால் பிரியப்படுவதில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

403. மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் முன்னர், அவர்கள் சத்தியத்தை நம்பினார்களா, அவர்கள் தேவனை அறிந்துள்ளார்களா, மற்றும் கண்ணுக்குப்புலனாகும் தேவனுக்குத் தங்களை அவர்களால் அர்ப்பணிக்க முடியுமா என்பதைப் பொறுத்தே ஒவ்வொரு வகையான நபரும் தண்டனைக்குரியவரா அல்லது பிரதிபலனுக்குரியவரா என்பது தீர்மானிக்கப்படும். கண்ணுக்குப்புலனாகும் தேவனுக்கு ஊழியம் செய்தும் அவரை அறியாமலும் அவருக்குக் கீழ்ப்படியாமலும் இருப்பவர்களிடம் சத்தியம் இல்லை. இத்தகைய ஜனங்கள் அக்கிரமக்காரர், மற்றும் அக்கிரமக்காரர் சந்தேகமின்றி தண்டனைக்குரியவர்கள்; மேலும் அவர்கள் தங்கள் துன்மார்க்கத்துக்கு ஏற்பத் தண்டிக்கப்படுவார்கள். தேவன் மனிதர்களின் விசுவாசத்திகுரியவர் மேலும் அவர் அவர்களின் கீழ்ப்படிதலுக்கு உகந்தவர். தெளிவில்லாத மற்றும் அதரிசனமான தேவனில் விசுவாசம் உள்ளவர்களே தேவனை விசுவாசியாதவர்கள் மேலும் தேவனுக்குக் கீழ்ப்படிய இயலாதவர்கள் ஆவர். கண்ணுக்குப்புலனாகும் தேவனின் ஜெயங்கொள்ளும் கிரியை முடியும் போது இந்த ஜனங்களால் இன்னும் அவரை நம்புவதற்கு முடியாமல் போனால், மேலும் மாம்சத்தில் புலனாகும் தேவனுக்குத் தொடர்ந்து கீழ்ப்படியாமல் எதிர்த்தால், பின்னர் இந்த தெளிவற்றவர்கள், சந்தேகமின்றி, அழிவின் பொருளாக மாறுவார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் சிலர் போல—மாம்சமாகிய தேவனை வாயால் அங்கீகரித்தும் மாம்சமாகிய தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும் சத்தியத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள், இறுதியில் அழித்தொழிக்கப்படும் பொருளாவார்கள். மேலும், கண்ணுக்குப்புலனாகும் தேவனை வார்த்தையால் அங்கீகரிக்கும் யாரொருவரும், அவரால் கூறப்படும் சத்தியத்தைப் புசித்து மற்றும் பானம்பண்ணி, அதே நேரத்தில் தெளிவற்ற மற்றும் அதரிசனமான தேவனைப் பின் பற்றினால், வருங்காலத்தில் இன்னும் அதிகமாக அழிக்கப்படும் வாய்ப்புள்வர்கள் ஆவர். தேவனின் கிரியை நிறைவடைந்த பின்னர் வரும் இளைப்பாறுதல் காலத்தில் இந்த ஜனங்களில் ஒருவரும் மீந்திருக்க மாட்டார்கள் அல்லது இத்தகைய ஜனங்களைப் போன்றவர்களில் ஒரு தனி நபர் கூட இளைப்பாறுதல் காலத்தில் மீந்திருக்க மாட்டார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களே பேய்த்தனமான ஜனங்கள்; அவர்களின் சாராம்சம் தேவனை எதிர்ப்பதும் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதும் ஆகும், மேலும் அவர்களிடம் அவருக்குக் கீழ்ப்படியும் எண்ணம் சிறிதளவும் இருப்பதில்லை. இத்தகைய ஜனங்கள் யாவரும் அழிக்கப்படுவார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து

முந்தைய: E. ஒரு நேர்மையான நபராக இருப்பது எப்படி என்பது குறித்து

அடுத்த: G. ஒருவருடைய கடமையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக