தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்

தேவனுடைய கிரியையின் நோக்கம், அவருடைய கிரியை மனுஷனில் ஏற்படுத்தும் தாக்கம், மனுஷனுக்கான அவருடைய சித்தம் என்ன என்பவற்றைப் புரிந்துகொள்ள, தேவனைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இதனைத்தான் பெற்றுக்கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் தேவனின் கிரியைப் பற்றிய அறிவுதான் எல்லா ஜனங்களுக்கும் இருப்பதில்லை. தேவன் ஜனங்கள் மீது நடப்பித்த கிரியைகள், தேவனின் கிரியையின் முழுமை, மற்றும் உலகை சிருஷ்டித்ததிலிருந்து தற்போதைய காலம் வரை மனுஷனிடம் தேவனின் சித்தம் துல்லியமாக என்னவாக இருக்கிறது—இந்த விஷயங்கள் மனுஷனுக்குத் தெரிவதில்லை அல்லது அவன் புரிந்துகொள்வதுமில்லை. இந்தப் போதாமை மத உலகம் முழுவதும் மட்டுமல்லாமல், தேவனை விசுவாசிக்கிறவர்களிடமும் காணப்படுகிறது. நீ உண்மையிலேயே தேவனைக் காணும் நாள் வரும்போது, அவருடைய ஞானத்தை நீ உண்மையிலேயே பாராட்டும்போது, தேவன் செய்த அனைத்து கிரியைகளையும் நீ காணும்போது, தேவன் என்பவர் யார், அவர் என்ன வைத்திருக்கிறார் என்பதை நீ அறிந்துகொள்ளும்போது—அவருடைய ஈவை, ஞானத்தை, அதிசயத்தை மற்றும் அவர் ஜனங்கள் மீது புரிந்த அனைத்து கிரியையைக் காணும்போது—அப்போதுதான் தேவனில் நீ கொண்டிருக்கும் உனது விசுவாசத்தில் நீ வெற்றியை அடைவாய். தேவன் எல்லாவற்றையும் உள்ளடக்கியவர், எல்லாம் நிறைந்தவர் என்று கூறப்படும் போது, அவர் எந்த வகையில் சரியாக அனைத்தையும் உள்ளடக்கியவர், எந்த வகையில் அவர் எல்லாம் நிறைந்தவர்? நீ இதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நீ தேவனை விசுவாசிப்பதாகக் கருத முடியாது. மத உலகில் இருப்பவர்கள் தேவனை விசுவாசிப்பவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் பிசாசைப் போல பொல்லாதவர்கள் என்று நான் ஏன் கூறுகிறேன்? அவர்கள் பொல்லாதவர்கள் என்று நான் கூறுவதற்கு அவர்கள் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளாததும், அவருடைய ஞானத்தைக் காண முடியாததும் தான் காரணம். தேவன் எந்த நேரத்திலும் தம்முடைய கிரியையை அவர்களுக்கு வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் குருடர்கள்; அவர்களால் தேவனின் கிரியைகளைக் காண முடியாது, அவர்கள் தேவனால் கைவிடப்பட்டிருக்கிறார்கள், தேவனின் அக்கறையும் பாதுகாப்பும் அவர்களுக்கு முற்றிலுமாக இருப்பதில்லை, பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பற்றிக் குறிப்பிட வேண்டியதில்லை. தேவனின் கிரியை இல்லாதவர்கள் அனைவரும் பொல்லாதவர்கள் மற்றும் தேவனின் எதிராளிகள். நான் கூறும் தேவனின் எதிராளிகள் என்பவர்கள், தேவனை அறியாதவர்கள், தேவனை அவர்களின் உதடுகளால் ஏற்றுக்கொண்டாலும், இன்னும் அவரை அறியாதவர்கள், தேவனைப் பின்பற்றினாலும், இன்னும் அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள், மற்றும் தேவனின் கிருபையில் மகிழ்ச்சி அடைந்தாலும் இன்னும் அவருக்கு சாட்சியாக நிற்க முடியாதவர்கள். தேவனின் கிரியையின் நோக்கம் பற்றிய புரிதலோ அல்லது தேவன் மனுஷனில் செய்யும் கிரியைப் பற்றிய புரிதலோ இல்லாமல், அவன் தேவனின் சித்தத்திற்கு இணங்கி இருக்கவும் முடியாது, அவன் தேவனுக்கு சாட்சியாக நிற்கவும் முடியாது. மனுஷன் தேவனை எதிர்ப்பதற்கான காரணம், ஒருபுறம், அவனுடைய சீர்கெட்ட மனநிலையிலிருந்தும், மறுபுறம், தேவன் குறித்த அறியாமையிலிருந்தும், தேவன் செயல்படும் கொள்கைகள் மற்றும் மனுஷனுக்கான அவருடைய சித்தம் பற்றிய புரிதல் இல்லாததாலும் உருவாகிறது. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக வைத்துப் பார்த்தால், இவை தேவனுடன் மனுஷனுக்கு உள்ள எதிர்ப்பின் வரலாற்றை உருவாக்குகின்றன. புதிதாக விசுவாசிப்பவர்கள் தேவனை எதிர்ப்பதற்கு காரணம், இது போன்ற எதிர்ப்பு அவர்களின் இயல்பிலேயே இருக்கிறது, அதே சமயம் பல ஆண்டுகளாக விசுவாசிப்பவர்கள் தேவனை எதிர்ப்பது அவரைப் பற்றிய அவர்களின் அறியாமையாலும், இதனுடன் அவர்களின் சீர்கெட்ட மனநிலையினாலும் விளைகிறது. தேவன் மாம்சமாக மாறுவதற்கு முந்தைய காலத்தில், ஒரு மனுஷன் தேவனை எதிர்க்கிறானா என்கிற அளவீடானது பரலோகத்தில் உள்ள தேவனால் வகுக்கப்பட்ட நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றுகிறானா என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உதாரணமாக, நியாயப்பிரமாண யுகத்தில், யேகோவாவின் நியாயப்பிரமாணங்களை யாரெல்லாம் கடைப்பிடிக்கவில்லையோ அவர்கள் தேவனை எதிர்த்தவர்களாகக் கருதப்பட்டார்கள்; யேகோவாவுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகளை யாரெல்லாம் திருடினார்களோ, அல்லது யேகோவாவுக்கு ஆதரவானவர்களுக்கு எதிராக நின்றார்களோ, அவர்கள் தேவனை எதிர்த்தவர்கள் என்று கருதப்பட்டு, கல்லெறிந்து கொல்லப்படுவார்கள்; தன் தந்தையையும் தாயையும் மதிக்காதவர்கள், மற்றவனைத் தாக்கியவர்கள் அல்லது சபித்தவர்கள், நியாயப்பிரமாணங்களைக் கடைப்பிடிக்காதவர்களாகக் கருதப்பட்டார்கள். யேகோவாவின் நியாயப்பிரமாணங்களைக் கடைப்பிடிக்காத அனைவரும் அவருக்கு எதிராக நிற்பவர்கள் என்று கருதப்பட்டனர். ஆனால், கிருபையின் யுகத்தில் அது தொடரவில்லை, அப்போது இயேசுவுக்கு எதிராக யாரெல்லாம் நின்றார்களோ அவர்கள் தேவனுக்கு எதிராக நின்றவர்களாகக் கருதப்பட்டனர், மற்றும் இயேசு சொன்ன வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் தேவனுக்கு எதிராக நின்றவர்களாகக் கருதப்பட்டனர். இந்த நேரத்தில், தேவனை எதிர்ப்பது குறித்து வரையறுக்கப்பட்டுள்ள விதம், மிகவும் துல்லியமாகவும் நடைமுறைக்கு மிகவும் ஏற்றதாகவும் ஆனது. அதுவரை தேவன் மாம்சமாக மாறியிராத காலகட்டத்தில், மனுஷன் தேவனை எதிர்க்கிறானா என்பது மனுஷன் பரலோகத்தில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தேவனை வணங்குகிறானா மற்றும் போற்றுகிறானா என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தேவனை எதிர்ப்பது என்பது வரையறுக்கப்பட்ட விதம் நடைமுறைக்குரியதாக இல்லவே இல்லை, ஏனென்றால் மனுஷனால் தேவனைப் பார்க்கவும் முடியவில்லை, தேவனின் உருவம் எதுவென்றும், அல்லது அவர் எவ்வாறு கிரியை புரிந்தார், பேசினார் என்றும் அவனுக்குத் தெரிந்திருக்கவுமில்லை. மனுஷனுக்கு தேவனைப் பற்றி எவ்வகையான கருத்தும் இல்லை, அவன் தேவனைத் தெளிவற்ற முறையில் நம்பினான், ஏனென்றால் தேவன் அதுவரை மனுஷனுக்குத் தோன்றவில்லை. ஆகையால், மனுஷன் தனது கற்பனையில் தேவனை எப்படி நம்பினாலும் பரவாயில்லை, தேவன் மனுஷனைக் கண்டிக்கவோ அல்லது அவனிடம் பல கோரிக்கைகளை வைக்கவோ இல்லை, ஏனென்றால் மனுஷனால் தேவனை முழுமையாகக் காண முடியவில்லை. தேவன் மாம்சமாகி, மனுஷர்களிடையே கிரியைப் புரிய வரும்போது, அனைவரும் அவரைக் காண்பார்கள், அவருடைய வார்த்தைகளைக் கேட்பார்கள், தேவன் தம்முடைய மாம்ச உடலுக்குள் மேற்கொள்ளும் செயல்களை அனைவரும் காண்பார்கள். அந்தத் தருணத்தில், எல்லா மனுஷனின் கருத்துகளும் நுரையாகின்றன. தேவன் மாம்சத்தில் தோன்றுவதைக் கண்டவர்கள் விருப்பத்துடன் அவருக்குக் கீழ்ப்படிந்தால், அவர்கள் கண்டிக்கப்பட மாட்டார்கள், அதேசமயம் அவருக்கு எதிராக வேண்டுமென்றே நிற்பவர்கள் தேவனுடைய எதிரியாகக் கருதப்படுவார்கள். அத்தகையவர்கள் அந்திக்கிறிஸ்துகள், அவர்கள் தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே நிற்கும் எதிரிகள். தேவனைப் பற்றிய கருத்துகளைக் கொண்டிருந்தாலும், அவருக்குக் கீழ்ப்படியத் தயாராகவும், விருப்பம் கொண்டவராகவும் இருப்பவர்கள் ஆக்கினைக்குள்ளாக மாட்டார்கள். மனுஷனின் நோக்கங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் தேவன் மனுஷனைக் கண்டிக்கிறார், ஒருபோதும் அவனது சிந்தனைகளையும் யோசனைகளையும் வைத்து அல்ல. அவர் மனுஷனை அவனுடைய சிந்தனைகள் மற்றும் யோசனைகளின் அடிப்படையில் கண்டித்தால், தேவனின் கோபமான கரங்களிலிருந்து ஒரு மனுஷனால் கூட தப்பிக்க முடியாது. மனுஷரூபமெடுத்த தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே நிற்பவர்கள், கீழ்ப்படியாமைக்காகத் தண்டிக்கப்படுவார்கள். தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே நிற்கும் இந்த ஜனங்களைப் பொறுத்தவரை, அவர்கள் தேவனுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் எதிர்ப்பு உருவாகிறது, அதன் விளைவாக இது தேவனின் கிரியைக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களுக்கு அவர்களை வழிநடத்துகிறது. இந்த ஜனங்கள் வேண்டுமென்றே தேவனின் கிரியையை எதிர்த்து அழிக்கிறார்கள். அவர்கள் வெறுமனே தேவனைப் பற்றிய கருத்துகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவருடைய கிரியையைச் சீர்குலைக்கும் செயல்களிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள், இந்தக் காரணத்திற்காக இந்த வகையான ஜனங்கள் கண்டிக்கப்படுவார்கள். தேவனின் கிரியையை வேண்டுமென்றே சீர்குலைக்காதவர்கள் பாவிகளாகக் கண்டிக்கப்பட மாட்டார்கள், ஏனென்றால் அவர்களால் விருப்பத்துடன் கீழ்ப்படியவும், மேலும் இடையூறு மற்றும் தொந்தரவை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் முடிகிறது. இது போன்றவர்கள் கண்டிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், பல ஆண்டுகளாக தேவனின் கிரியையை ஜனங்கள் அனுபவித்திருக்கும்போது, அவர்கள் தொடர்ந்து தேவனுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தால் மற்றும் மனுஷரூமமெடுத்த தேவனின் கிரியையை அறிய முடியாமல் இருந்தால், எத்தனை வருடங்கள் அவருடைய கிரியையை அவர்கள் அனுபவித்திருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் தொடர்ந்து தேவனைப் பற்றிய கருத்துக்களால் நிரம்பி இருந்தாலும், அவரை அறிய முடியாது, பின்னர் அவர்கள் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடாவிட்டாலும், அவர்களுடைய இருதயங்கள் தேவனைப் பற்றிய பல கருத்துகளால் நிரம்பியிருக்கும், இந்த கருத்துகள் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், இது போன்ற ஜனங்கள் தேவனின் கிரியைக்கு எந்தவகையிலும் உதவியாக இருக்க மாட்டார்கள். தேவனுக்காக சுவிசேஷத்தைப் பரப்பவோ அல்லது அவருக்கு சாட்சியாக இருக்கவோ அவர்களால் முடியவில்லை. இது போன்ற ஜனங்கள் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர்கள் மற்றும் மிகக் குறைவான அறிவை உடையவர்கள். அவர்களுக்கு தேவனைத் தெரியாததாலும், மேலும் அவரைப் பற்றிய தங்கள் கருத்துகளைத் தூக்கி எறிய முற்றிலும் இயலாதவர்களாகவும் இருப்பதால், அவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள். இதனை இவ்வாறு கூறலாம்: புதிய விசுவாசிகள் தேவனைப் பற்றிய யூகக் கருத்துகளை வைத்திருப்பது அல்லது அவரைப் பற்றி எதுவும் தெரியாமல் இருப்பது இயல்பானது, ஆனால் பல ஆண்டுகளாக தேவனை விசுவாசித்து, அவருடைய கிரியையில் ஒரு நல்ல பங்கை அனுபவித்த ஒருவருக்கு, யூகக் கருத்துகளைத் தொடர்ந்து வைத்திருப்பது இயல்பான விஷயம் அல்ல, மேலும் இது போன்ற ஒருவன் தேவனைப் பற்றிய அறிவு இல்லாதிருப்பது அவ்வளவு இயல்பானதாக இருக்காது. இதற்குக் காரணம், அவர்கள் கண்டிக்கப்படுவது ஒரு சாதாரண நிலை அல்ல. இந்த அசாதாரண ஜனங்கள் அனைவரும் குப்பைகள்; அவர்கள் தான் தேவனை மிகவும் எதிர்க்கிறார்கள், எதுவும் செய்யாமல் தேவனின் கிருபையை அனுபவித்தவர்கள். அத்தகைய ஜனங்கள் அனைவரும் முடிவில் புறம்பாக்கப்படுவார்கள்!

தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாத எவரும் அவரை எதிர்ப்பவர் ஆவர், தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொண்டாலும், இன்னும் தேவனைத் திருப்திப்படுத்த நாடிச் செல்லாதவர் தேவனின் எதிராளி என்றும் கருதப்படுகிறார். பெரிய தேவாலயங்களில் வேதாகமத்தை வாசித்து, நாள் முழுவதும் அதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் ஒருவர்கூட தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்களில் ஒருவரால் கூட தேவனை அறிய முடிவதில்லை; அதிலும் அவர்களில் எவராலும் தேவனின் சித்தத்திற்கு இணங்கி இருக்க முடிவதில்லை. அவர்கள் அனைவரும் பயனற்றவர்கள், மோசமான ஜனங்கள், ஒவ்வொருவரும் தேவனுக்குச் சொற்பொழிவாற்ற உயரத்தில் நிற்கிறார்கள். தேவனின் பதாகையை அவர்கள் எடுத்துச் செல்லும்போதுகூட அவர்கள் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறார்கள். தேவன் மீது விசுவாசம் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் மனுஷனின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தை குடிக்கின்றனர். அத்தகைய ஜனங்கள் அனைவரும் மனுஷனின் ஆத்துமாவை விழுங்கும் பிசாசுகள், சரியான பாதையில் செல்ல முயற்சிப்பவர்களின் வழியில் வேண்டுமென்றே குறுக்கிடும் தலைமைப் பேய்கள், தேவனைத் தேடுகிறவர்களுக்கு இடையூறு செய்யும் தடைக் கற்கள். அவர்கள் “நல்ல அமைப்பாகத்” தோன்றக்கூடும், ஆனால் அவர்கள் தேவனுக்கு எதிராக நிற்க ஜனங்களை வழிநடத்தும் அந்திக்கிறிஸ்துக்களே தவிர வேறு யாருமல்லர் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? அவர்கள் மனுஷ ஆத்துமாக்களை விழுங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிசாசுகள் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? தேவனின் முன்னிலையில் தங்களை உயர்ந்த மதிப்பில் வைத்திருப்பவர்கள் மனுஷனில் மிகவும் கீழ்த்தரமானவர்கள், அதே சமயம் தங்களைத் தாழ்த்திக் கொண்டவர்கள் மிகவும் மரியாதைக்குரியவர்கள். மேலும், தேவனின் கிரியைத் தனக்குத் தெரியும் என்று நினைப்பவர்கள், மேலும், அவர்கள் அவரை நேரடியாகப் பார்த்தாலும்கூட மிகுந்த ஆரவாரத்துடன் மற்றவர்களுக்குத் தேவனின் கிரியையை அறிவிக்க வல்லவர்கள், இவர்கள் மனுஷர்களிலே மிகவும் அறியாமையிலுள்ளவர்கள். அத்தகையவர்கள் தேவனின் சாட்சியம் இல்லாமல், திமிர்பிடித்தவர்களாகவும், அகங்காரம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். தேவனைப் பற்றிய உண்மையான அனுபவம் மற்றும் நடைமுறை அறிவு இருந்தபோதிலும், தேவனைப் பற்றி தனக்கு மிகக் குறைந்த அறிவு இருப்பதாக நம்புவோர், அவரால் மிகவும் நேசிக்கப்படுபவர்கள். அத்தகையவர்கள் மட்டுமே உண்மையிலேயே சாட்சியமளிக்கிறார்கள், அவர்களே தேவனால் பரிபூரணப்படுத்தப்பட வல்லவர்கள். தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் தேவனை எதிர்ப்பவர்கள்; தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொண்ட போதிலும், சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் தேவனை எதிர்ப்பவர்கள்; தேவனுடைய வார்த்தைகளைப் புசித்து, குடித்தாலும், தேவனுடைய வார்த்தைகளின் சாராம்சத்திற்கு எதிராகச் செல்வோர் தேவனை எதிர்ப்பவர்கள்; மனுஷரூபமெடுத்த தேவனைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டவர்கள், மேலும் கலகத்தில் ஈடுபட மனம் கொண்டவர்கள், தேவனை எதிர்ப்பவர்கள்; தேவன் குறித்து நியாயந்தீர்ப்பவர்கள் தேவனை எதிர்ப்பவர்கள்; மற்றும் தேவனை அறியவோ அல்லது அவருக்கு சாட்சியாக இருக்கவோ முடியாதவர்கள் தேவனை எதிர்ப்பவர்கள். எனவே நான் உங்களிடம் வலியுறுத்துகிறேன்: இந்தப் பாதையில் உங்களால் நடக்க முடியும் என்று உங்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருந்தால், அதைப் பின்பற்றுங்கள். ஆனால் உங்களால் தேவனை எதிர்ப்பதைத் தவிர்க்க முடியாவிட்டால், மிகவும் தாமதமாகிவிடுவதற்கு முன்பே நீங்கள் விலகிச் சென்றுவிடுவது நல்லது. இல்லையெனில், விஷயங்கள் உங்களுக்கு எதிராக மோசமாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன, ஏனென்றால் உங்கள் இயல்பு மிகவும் சீர்கெட்டுள்ளது. விசுவாசம் அல்லது கீழ்ப்படிதல், அல்லது நீதிக்காகவும் சத்தியத்துக்காகவும் தாகம் கொண்ட, அல்லது தேவனை நேசிக்கும் ஒரு இருதயம், உங்களுக்குக் கொஞ்சம்கூட இல்லை. தேவனுக்கு முன்பாக உங்கள் சூழ்நிலை முற்றிலும் குழப்பமானதாக இருக்கிறது என்று கூறப்படலாம். நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியதை உங்களால் கடைப்பிடிக்க முடியாது, மேலும் சொல்ல வேண்டியதைச் சொல்லவும் முடியாது. நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவற்றை, நீங்கள் கடைப்பிடிக்கத் தவறிவிட்டீர்கள்; நீங்கள் நிறைவேற்ற வேண்டிய செயல்பாட்டை உங்களால் நிறைவேற்ற முடியவில்லை. உங்களுக்கு இருக்கவேண்டிய விசுவாசம், மனசாட்சி, கீழ்ப்படிதல் அல்லது மன உறுதி உங்களிடம் இல்லை. சகித்துக்கொள்ள வேண்டிய துன்பத்தை நீங்கள் சகித்துக்கொள்ளவில்லை, உங்களுக்கு இருக்கவேண்டிய விசுவாசம் உங்களிடம் இல்லை. மிகவும் எளிமையாகக் கூறினால், நீங்கள் எந்தவொரு தகுதியையும் பூரணமாகப் பெறவில்லை: நீங்கள் இப்படியே வாழ்வதற்கு வெட்கப்படவில்லையா? நித்திய ஓய்வில் உங்கள் கண்களை மூடுவதே நல்லது என்று நான் உங்களைச் சம்மதிக்க வைக்கிறேன், இதன் மூலம் உங்களுக்காகக் கவலைப்படுவதிலிருந்தும், உங்கள் நிமித்தம் துன்பப்படுவதிலிருந்தும் தேவனுக்கு ஓய்வுகொடுங்கள். நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்கள், ஆனால் இன்னும் அவருடைய சித்தத்தை அறியவில்லை; நீங்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புசிக்கிறீர்கள் மற்றும் குடிக்கிறீர்கள், ஆனால் இன்னும் தேவன் மனுஷனிடம் கேட்பதை உங்களால் நிறைவேற்ற முடியவில்லை. நீங்கள் தேவனை நம்புகிறீர்கள், ஆனால் இன்னும் அவரை அறியாமல் இருக்கிறீர்கள், மற்றும் முயற்சிப்பதற்கான குறிக்கோள் இல்லாமல், எந்தவொரு மதிப்பும் இல்லாமல், எந்த அர்த்தமும் இல்லாமல் நீங்கள் உயிர் வாழ்கிறீர்கள். நீங்கள் ஒரு மனுஷனாக வாழ்கிறீர்கள், ஆயினும் மனசாட்சி, ஒருமைப்பாடு அல்லது நம்பகத்தன்மை சிறிதளவும் இல்லை—நீங்கள் உங்களை இன்னும் மனுஷர்கள் என்று அழைக்க முடியுமா? நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்கள், ஆனால் அவரை ஏமாற்றுகிறீர்கள்; மேலும் என்னவென்றால், நீங்கள் தேவனின் பணத்தை எடுத்துக்கொள்கிறீர்கள், அவருக்கு வழங்கப்படும் காணிக்கைகளைப் புசிக்கிறீர்கள். ஆயினும்கூட, முடிவில், தேவனுடைய உணர்வுகள் அல்லது அவரை நோக்கிய மங்கலான மனசாட்சியைக் கருத்தில் கொள்ள நீங்கள் இன்னும் தவறிவிட்டீர்கள். தேவனின் கோரிக்கைகளில் மிகவும் அற்பமானவற்றைக்கூட உங்களால் பூர்த்தி செய்ய முடியாது. உங்களால் உங்களை இன்னும் மனுஷர்கள் என்று கூறிக்கொள்ள முடியுமா? தேவன் உங்களுக்கு வழங்கும் போஜனத்தைச் சாப்பிட்டுக் கொண்டு, அவர் உங்களுக்குக் கொடுக்கும் பிராணவாயுவை சுவாசித்துக் கொண்டு, அவருடைய கிருபையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், இறுதியில், தேவனைப் பற்றிய சிறிதளவு அறிவும் உங்களுக்கு இல்லை. மாறாக, நீங்கள் தேவனை எதிர்க்கும் எதற்கும் உதவாதவர்களாக மாறிவிட்டீர்கள். அது உங்களை ஒரு நாயை விடக் கேவலமான மிருகமாக மாற்றவில்லையா? விலங்குகளில், உங்களை விட தீங்கிழைக்கக்கூடியது ஏதேனும் உள்ளதா?

உயர்ந்த பிரசங்கபீடத்தின் மீது நின்றுகொண்டு மற்றவர்களுக்குக் கற்பிக்கும் போதகர்களும் மூப்பர்களும் தேவனை எதிர்ப்பவர்கள் மற்றும் சாத்தானின் கூட்டாளிகள்; உங்களில் உயர்ந்த பிரசங்கபீடத்தில் நின்றுகொண்டு, மற்றவர்களுக்குக் கற்பிக்காதவர்கள் தேவனின் பெரிய எதிரிகள் அல்லவா? சாத்தானுடன் சேர்ந்து சதி செய்வதில் நீங்கள் அவர்களைவிட மிஞ்சியவர்கள் அல்லவா? தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு, தேவனின் சித்தத்திற்கு இணங்கி நடக்கத் தெரியாது. நிச்சயமாக, தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்பவர்களுக்கு அவருடைய சித்தத்திற்கு எவ்வாறு இணங்கி நடப்பது என்று தெரியாமல் இருக்காது. தேவனின் கிரியை ஒருபோதும் பிழையாகாது; மாறாக, மனுஷனின் நாட்டமே குறைபாடுடையது. தேவனை வேண்டுமென்றே எதிர்த்து சீர்கெடுகிறவர்கள், அந்தப் போதகர்களையும் மூப்பர்களையும்விட மிகவும் கொடியவர்களாகவும் வஞ்சகர்களாகவும் இருப்பார்கள் அல்லவா? பலர் தேவனை எதிர்ப்பவர்கள், ஆனால் அவர்கள் மத்தியில் தேவனை அவர்கள் எதிர்ப்பதற்கான பல்வேறு வழிகளும் உள்ளன. எல்லா விதமான விசுவாசிகளும் இருப்பதைப் போல், தேவனை எதிர்ப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரைப் போல் மற்றொருவர் இல்லாமல் எல்லா விதத்திலும் இருக்கிறார்கள். தேவனுடைய கிரியையின் நோக்கத்தைத் தெளிவாக அறிந்துகொள்ளத் தவறியவர்களில் ஒருவர் கூட இரட்சிக்கப்பட மாட்டார்கள். கடந்த காலங்களில் மனுஷன் தேவனை எவ்வாறு எதிர்த்திருந்தாலும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தை மனுஷன் புரிந்துகொண்டு, தேவனைத் திருப்திப்படுத்த தனது முயற்சிகளை அர்ப்பணிக்கும்போது, தேவன் அவனுடைய முந்தைய பாவங்கள் அனைத்தையும் துடைப்பார். மனுஷன் சத்தியத்தைத் தேடி, சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் வரை, தேவன் அவன் செய்ததை மனதில் கொள்ளமாட்டார். மேலும், மனுஷன் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதன் அடிப்படையில் தான் தேவன் அவனை நியாயந்தீர்க்கிறார். இது தேவனின் நீதியாகும். மனுஷன் தேவனைப் பார்ப்பதற்கு அல்லது அவருடைய கிரியையை அனுபவிப்பதற்கு முன்பு, மனுஷன் தேவனை நோக்கி எவ்வாறு செயல்பட்டிருந்தாலும், அவர் அதை நினைவில் கொள்ள மாட்டார். இருப்பினும், மனுஷன் தேவனைக் கண்டு, அவருடைய கிரியையை அனுபவித்ததும், மனுஷனின் எல்லா செயல்களும் நடவடிக்கைகளும் தேவனால் “வரலாற்றுப் பதிவேடுகளில்” பதிவு செய்யப்படும், ஏனென்றால் மனுஷன் தேவனைக் கண்டு, அவருடைய கிரியையின் மத்தியில் வாழ்ந்திருக்கிறான்.

மனுஷன் தேவனிடம் என்ன இருக்கிறது என்றும் மற்றும் அவர் யார் என்றும் உண்மையாகப் பார்த்ததும், அவருடைய மாட்சிமையைப் பார்த்ததும், தேவனின் கிரியையை அவன் உண்மையிலேயே அறிந்ததும், மேலும், மனுஷனின் பழைய மனநிலை மாறியதும், மனுஷன் தேவனை எதிர்க்கும் தனது கலக மனநிலையை முற்றிலுமாகத் தூக்கி எறிவான். எல்லோரும் சில சமயங்களில் தேவனை எதிர்த்திருக்கலாம், எல்லோரும் சில சமயங்களில் தேவனுக்கு எதிராகக் கலகம் பண்ணியிருக்கலாம் என்று கூறலாம். இருப்பினும், நீ மனுஷரூபமெடுத்த தேவனுக்கு விருப்பத்துடன் கீழ்ப்படிந்தால், இந்தத் தருணத்திலிருந்து உன் விசுவாசத்தால் தேவனின் இருதயத்தைத் திருப்திப்படுத்தினால், நீ கடைப்பிடிக்க வேண்டிய சத்தியத்தைக் கடைப்பிடித்தால், உனது கடமைகளை நீ செய்யவேண்டியபடி செய்தால், நீ பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பின்பற்றினால், பின்னர் நீ தேவனைத் திருப்திப்படுத்த உனது கலகக் குணத்தைத் தூக்கி எறியத் தயாராக இருப்பாய், தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவாய். உனது தவறுகளைப் பார்க்க நீ பிடிவாதமாக மறுத்து, உனக்கு மனந்திரும்பும் எண்ணம் இல்லாதிருந்தால், தேவனுடன் ஒத்துழைத்து அவரைத் திருப்திப்படுத்தும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் உனது கலக நடத்தையில் நீ தொடர்ந்து இருந்தால், உன்னைப் போன்ற ஒரு பிடிவாதமான மற்றும் தவறான ஆள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவான், நிச்சயமாக ஒருபோதும் தேவனால் பூரணப்படுத்தப்பட மாட்டான். அப்படியானால், நீ இன்று தேவனின் எதிரியாக இருக்கிறாய் மற்றும் நாளை நீ தேவனின் எதிரியாக இருப்பாய், நாளை மறுநாளும் நீ தேவனின் எதிரியாகவே இருப்பாய்; நீ என்றென்றும் தேவனை எதிர்ப்பவனாகவும், தேவனின் எதிரியாகவும் இருப்பாய். அவ்வாறான நிலையில், தேவன் உன்னை விடுவிப்பது எப்படிச் சாத்தியமாகும்? தேவனை எதிர்ப்பது மனுஷனின் இயல்பு, ஆனால் மனுஷன் தனது இயல்பை மாற்றுவது சமாளிக்க முடியாத பணியாக இருப்பதால் தேவனை எதிர்ப்பதற்கான “இரகசியத்தை” வேண்டுமென்றே தேடக்கூடாது. அது தான் சூழ்நிலை என்றால், மிகவும் தாமதமாவதற்கு முன் நீ விலகிச் சென்றுவிடுவது நல்லது, உனது மாம்ச உடல் இறுதியில் முடிக்கப்படும் வரை எதிர்காலத்தில் உனது தண்டனை மிகவும் கடுமையாவதைத் தடுத்திடு, உனது மிருகத்தனமான இயல்பு வெடித்து, கட்டுப்படுத்த முடியாமல் போவதைத் தடுத்திடு. ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக நீ தேவனை விசுவாசிக்கிறாய்; ஆனால் முடிவில் உனக்குத் துரதிர்ஷ்டம் ஏற்பட்டால், அது அவமானமாக இருக்காதா? நீங்கள் வேறொரு திட்டமிடுவது நல்லது என்று உங்களை வலியுறுத்துகிறேன். நீங்கள் செய்யக்கூடிய எதுவும் தேவனை விசுவாசிப்பதைவிட நல்லதாக இருக்கும்: நிச்சயமாக இந்த ஒரு பாதை மட்டுமே இருக்க முடியாது. நீங்கள் சத்தியத்தைத் தேடவில்லை என்றால் நீங்கள் தொடர்ந்து பிழைக்க மாட்டீர்களா? இந்த வழியில் நீங்கள் ஏன் தேவனுடன் முரண்பட வேண்டும்?

முந்தைய: மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்

அடுத்த: தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (1)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக