தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்

வெவ்வேறு காலங்களுக்கு ஏற்றபடி தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசுகிறார், அவருடைய கிரியையைச் செய்கிறார், வெவ்வேறு காலங்களில் அவர் வெவ்வேறு வார்த்தைகளைப் பேசுகிறார். தேவன் விதிகளுக்குக் கட்டுப்படுவதில்லை, அல்லது அதே கிரியையை மீண்டும் செய்வதில்லை, அல்லது கடந்த கால விஷயங்களுக்காக ஏக்கம் கொள்வதில்லை. அவரே தேவன், அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் இல்லை, அவர் ஒவ்வொரு நாளும் புதிய வார்த்தைகளைப் பேசுகிறார். நீ இன்று பின்பற்ற வேண்டியதைப் பின்பற்ற வேண்டும். இதுவே மனிதனின் பொறுப்பும் கடமையும் ஆகும். இன்றைய தினத்தில் நடைமுறையானது தேவனின் வெளிச்சம் மற்றும் வார்த்தைகளை மையமாகக் கொண்டு இருப்பது முக்கியமானதாகும். தேவன் விதிகளுக்குக் கட்டுப்படுபவர் இல்லை, மேலும் அவருடைய ஞானத்தையும் சர்வவல்லமையையும் தெளிவுபடுத்துவதற்காகப் பல்வேறு கண்ணோட்டங்களில் இருந்து அவரால் பேச முடிகிறது. அவர் ஆவியினுடைய அல்லது மனிதனினுடைய, அல்லது மூன்றாவது நபரினுடைய கண்ணோட்டத்தில் பேசுகிறாரா என்பது முக்கியமல்ல—தேவன் எப்போதுமே தேவன் தான், மனிதனின் கண்ணோட்டத்திலிருந்து அவர் பேசுவதால் நீ அவரை தேவன் இல்லை என்று சொல்ல முடியாது. வெவ்வேறு கண்ணோட்டங்களில் தேவன் பேசுவதன் விளைவாக சில நபர்களிடையே கருத்துக்கள் உருவாகியுள்ளன. அத்தகையோருக்கு தேவனைப் பற்றிய அறிவும் இல்லை, அவருடைய கிரியையைப் பற்றிய அறிவும் இல்லை. தேவன் எப்போதும் ஒரே கண்ணோட்டத்தில் பேசியிருந்தால், தேவனைப் பற்றிய விதிகளை மனிதன் வகுத்திருக்க மாட்டானா? அப்படிச் செயல்படுவதற்கு மனிதனை தேவன் அனுமதிக்க முடியுமா? எந்தக் கண்ணோட்டத்தில் தேவன் பேசுகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவ்வாறு செய்ய அவருக்கு நோக்கங்கள் உள்ளன. தேவன் எப்போதும் ஆவியானவரின் கண்ணோட்டத்திலேயே பேசுவதாக இருந்தால், உன்னால் அவருடன் ஐக்கியப்பட முடியுமா? இவ்வாறு, சில நேரங்களில் தமது வார்த்தைகளை உனக்குக் கொடுக்கவும், உன்னை யதார்த்தத்திற்குள் வழிநடத்தவும் அவர் மூன்றாவது நபரைப் போல் பேசுகிறார். தேவன் செய்யும் அனைத்துமே பொருத்தமானதாக இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இவை அனைத்தும் தேவனால் செய்யப்படுகின்றன, இதை நீ சந்தேகிக்கக்கூடாது. அவர் தேவன், ஆகவே அவர் எந்த கண்ணோட்டத்தில் பேசினாலும் அவர் எப்போதும் தேவனாகவே இருப்பார். இது ஒரு மாற்ற முடியாத சத்தியம். இருப்பினும் அவர் கிரியை செய்கிறார், அவர் இன்னும் தேவன் தான், அவருடைய சாராம்சம் மாறாது! பேதுரு தேவனை மிகவும் நேசித்தான், தேவனின் சொந்த இருதயத்திற்குப் பிரியமான ஒரு மனிதனாக இருந்தான், ஆனால் தேவன் அவனைக் கர்த்தராகவோ அல்லது கிறிஸ்துவாகவோ சாட்சி அளிக்கவில்லை, ஏனென்றால் ஒரு மனிதனின் சாராம்சம் என்னவோ அதுதான், அது ஒருபோதும் மாற முடியாது. தேவன் தமது கிரியையில் விதிகளுக்குக் கட்டுப்படுவதில்லை, ஆனால் அவருடைய கிரியையை பயனுள்ளதாக்கவும், அவரைக் குறித்த மனிதனின் அறிவை ஆழப்படுத்துவதற்கும் வெவ்வேறு முறைகளைப் பிரயோகிக்கிறார். அவர் செய்யும் கிரியையின் முறைகள் ஒவ்வொன்றும் மனிதன் அவரை அறிந்து கொள்ள உதவுகிறது, மேலும் மனிதனை பரிபூரணமாக்குவதற்காகவே உள்ளது. அவர் கிரியை செய்வதற்காக எந்த முறையைப் பிரயோகித்தாலும், ஒவ்வொன்றும் மனிதனைக் கட்டியெழுப்பவும், மனிதனைப் பரிபூரணப்படுத்தவுமே செய்யப்படுகிறது. அவர் கிரியை செய்யும் முறைகளில் ஒன்றானது மிக நீண்ட காலமாக நீடித்திருந்தாலும், இது தேவன் மீதுள்ள மனிதனின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும். இதனால், உங்கள் இருதயத்தில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. இவை அனைத்தும் தேவனின் கிரியையின் படிநிலைகள், நீங்கள் அவற்றிற்கு கீழ்ப்படியத் தான் வேண்டும்.

இன்றைய தினத்தில் பேசப்படுவது யதார்த்தத்திற்குள் நுழைவது ஆகும்—அது பரலோகத்திற்கு ஏறுவதும் அல்ல, அல்லது ராஜாக்களாக ஆட்சி செய்வதும் அல்ல; பேசப்படுவதெல்லாம் யதார்த்தத்திற்குள் நுழைவதைத் தொடர்வதுதான். இதைவிடத் தொடர்ந்து முயலுவதற்கு நடைமுறையில் வேறு எதுவும் இல்லை, மேலும் அரசர்களாக ஆட்சி செய்வது பற்றி பேசுவது நடைமுறைக்கு உரியதில்லை. மனிதனுக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் உண்டு, இன்றும் அவன் தனது மதக் கருத்துக்களைக் கொண்டே தேவனின் கிரியையை அளவிடுகிறான். தேவனுடைய அநேக கிரியை செய்யும் முறைகளை அனுபவித்த மனிதனுக்கு தேவனின் கிரியை குறித்து இன்னும் தெரியாது, இன்னும் அறிகுறிகளையும் அதிசயங்களையும் தேடுகிறான், தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்று பார்க்க இன்னும் தேடுகிறான். இது மிகப்பெரிய அறியாமை அல்லவா? தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்படாமல், நீ இன்னும் அவரை தேவன் என்று நம்புவாயா? இன்று, சபையிலிருக்கும் இதுபோன்ற பலர் அறிகுறிகளையும் அதிசயங்களையும் காணக் காத்திருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகள் நிறைவேற்றப்பட்டால், அவர்கள் அவரை தேவன் என்றும் தேவனுடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அவர் தேவன் அல்ல என்றும் கூறுகிறார்கள். அப்படியானால், நீ அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படுவதாலோ அல்லது அவர் தேவன்தான் என்பதாலோ தேவனை விசுவாசிக்கிறாயா? தேவனை விசுவாசிப்பதைப் பற்றிய மனிதனின் பார்வை சரியாக இருக்க வேண்டும்! தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை நீ காணும்போது, நீ விலகிச் சென்றுவிடுகிறாய். இது தேவன் மீதான விசுவாசமா? நீ தேவனை விசுவாசிக்கும் போது, எல்லாவற்றையும் தேவனுடைய இரக்கத்திற்கு விட்டுவிட வேண்டும், தேவனுடைய எல்லா கிரியைக்கும் கீழ்ப்படிய வேண்டும். பழைய ஏற்பாட்டில் தேவன் அநேக வார்த்தைகளைப் பேசியுள்ளார். அவற்றில் நிறைவேறியதில் எதை உங்கள் கண்கள் கண்டது? நீ அதைக் காணாதபடியால் யேகோவா உண்மையான தேவன் அல்ல என்று நீ சொல்ல முடியுமா? அநேக வார்த்தைகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், மனிதனிடம் சத்தியம் இல்லை என்பதாலும் எதையும் புரிந்து கொள்ளாதவன் என்பதாலும், மனிதனால் அதை தெளிவாகப் பார்க்க இயலாது. சிலர் தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்று எண்ணும் போது தப்பியோடிவிட விரும்புகிறார்கள். அதை முயற்சி செய். உன்னால் தப்பியோடிவிட முடியுமா என்று பார். தப்பியோடியிருந்தாலும், இன்னும் நீ திரும்ப வருவாய். தேவன் தம்முடைய வார்த்தையால் உன்னைக் கட்டுப்படுத்துகிறார், நீ தேவனுடய சபையையும் தேவனுடைய வார்த்தையையும் விட்டுவிட்டால், நீ வாழ்ந்திட வழி எதுவும் உனக்கு இருக்காது. இதை நீ நம்பவில்லை என்றால், அதை நீயே முயற்சி செய்—நீ வெளியேறிவிடலாம் என்று நினைக்கிறாயா? தேவனுடைய ஆவியானவர் உன்னைக் கட்டுப்படுத்துகிறார். உன்னால் வெளியேறிவிட முடியாது. இது தேவனின் ஒரு நிர்வாகக் கட்டளை! சிலர் முயற்சி செய்ய விரும்பினால், அவர்களால் முடியும்! இந்த நபர் தேவன் அல்ல, எனவே அவருக்கு எதிராக ஒரு பாவத்தைச் செய்து அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம் என்று நீ சொல்கிறாய். ஒருவேளை, உன்னுடைய மாம்ச சரீரம் சாகாதிருக்கலாம் மற்றும் உன்னால் உண்ணவும் உடுத்திக் கொள்ளவும் முடியலாம், ஆனால் மனதளவில் அது தாங்க முடியாததாக இருக்கும். நீ மன அழுத்தத்தையும் வேதனையையும் உணர்வாய். வேறு எதுவும் மிகவும் வேதனையாக இருக்காது. மனிதனால் மன வேதனையையும் பாழாக்குதலையும் தாங்கிக் கொள்ள முடியாது. ஒருவேளை உன்னால் மாம்சத்தின் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியலாம், ஆனால் மன அழுத்தத்தையும், நீடித்த வேதனையையும் உன்னால் முற்றிலுமாகத் தாங்கிக் கொள்ள இயலாது. இன்று, சிலர் எதிர்மறையானவர்களாக மாறிவிடுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் எந்த அறிகுறிகளையும் அதிசயங்களையும் காணும் திறனைப் பெற்றிருக்கவில்லை, ஆனாலும் எவ்வளவு எதிர்மறையானவர்களாக மாறினாலும் யாரும் தப்பி ஓடிப்போகத் துணிவதில்லை, ஏனென்றால் தேவன் மனிதனை அவருடைய வார்த்தையால் கட்டுப்படுத்துகிறார். உண்மைகளின் வருகை இல்லை என்றாலும், இன்னும் யாராலும் தப்பி ஓட முடியாது. இவை தேவனுடைய செயல்கள் இல்லையா? தேவன் மனிதனுக்கு ஜீவனை வழங்குவதற்காக இன்று பூமிக்கு வந்துள்ளார். ஜனங்கள் கற்பனை செய்வதைப் போல, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு அமைதியான உறவை உறுதி செய்வதற்காக அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிப்பதன் மூலம் அவர் உன்னிடம் நயந்து பேசி மயக்குவதில்லை. வாழ்க்கையில் கவனம் செலுத்தாமல், அதற்குப் பதிலாக தேவனுடைய அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிப்பதில் கவனம் செலுத்துபவர்கள் அனைவரும் பரிசேயர்கள்! இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள் பரிசேயர்கள்தான். தேவனை விசுவாசிப்பதற்கான உன் சுய கருத்தின் படி தேவனை நீ அளவிடுகிறாய் என்பதாலும், அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படுவதால் தேவனை விசுவாசிக்கவும், நிறைவேற்றப்படாத போது சந்தேகப்படுவதும், தேவனுக்கு எதிராக அவதூறாகப் பேசவும் செய்தால், நீ அவரைச் சிலுவையில் அறையவில்லையா? இது போன்றவர்கள் தங்கள் கடமைகளை அலட்சியம் செய்கிறார்கள், பேராசையுடன் ஆறுதலில் மகிழ்ச்சியடைகிறார்கள்!

ஒருபுறம், மனிதனின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவனுக்கு தேவனின் கிரியையைக் குறித்துத் தெரியாது. மனிதனின் அணுகுமுறை மறுப்பிற்குரிய ஒன்றல்ல என்றாலும், அது சந்தேகத்திற்குரிய ஒன்றாகும். மனிதன் மறுக்கவும் மாட்டான், ஆனால் அவன் முழுமையாக ஒப்புக்கொள்ளவும் மாட்டான். தேவனின் கிரியையைப் பற்றி ஜனங்களுக்கு முழுமையான அறிவு இருந்தால், அவர்கள் விலகிச் செல்ல மாட்டார்கள். மற்றொரு பிரச்சினை என்னவென்றால், மனிதனுக்கு யதார்த்தத்தைப் பற்றி தெரியாது. இன்று, தேவனுடைய வார்த்தையோடுதான் ஒவ்வொரு நபரும் ஐக்கியப்பட்டுள்ளனர். உண்மையில், அறிகுறிகளையும் அதிசயங்களையும் பார்ப்பதைப் பற்றி எதிர்காலத்தில் நீ நினைக்கக்கூடாது. நான் உனக்குத் தெளிவாகச் சொல்கிறேன். தற்போதைய கட்டத்தில், நீ கூட தேவனின் வார்த்தைகளைப் பார்க்கும் திறன் கொண்டவன், எந்த உண்மைகளும் இல்லை என்றாலும், தேவனின் ஜீவன் இன்னும் மனிதனுக்குள் கிரியை செய்யலாம். இந்தக் கிரியையே ஆயிரம் வருட அரசாட்சியின் முக்கியக் கிரியையாகும், மேலும் இந்தக் கிரியையை உன்னால் உணர முடியாவிட்டால், நீ பலவீனமடைந்து கவிழ்ந்துவிடுவாய். சோதனைகளுக்கு மத்தியில் நீ இறங்குவாய், இன்னும் வேதனையானது என்னவென்றால், சாத்தானால் சிறைபிடிக்கப்படுவாய். முக்கியமாக தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசுவதற்கு பூமிக்கு வந்துள்ளார். நீ ஐக்கியப்படுவது தேவனுடைய வார்த்தையுடனே, நீ பார்ப்பது தேவனுடைய வார்த்தையே, நீ கேட்பது தேவனுடைய வார்த்தையே, நீ கடைப்பிடிப்பது தேவனுடைய வார்த்தையே, நீ அனுபவிப்பது தேவனுடைய வார்த்தையே, தேவனுடைய இந்த மனுவுருவானவர் மனிதனை பரிபூரணமாக்க இந்த வார்த்தையை முக்கியமாக பயன்படுத்துகிறார். அவர் அறிகுறிகளையும் அதிசயங்களையும் காட்டுவதில்லை, குறிப்பாகக் கடந்த காலத்தில் இயேசு செய்த கிரியையைச் செய்வதில்லை. அவர்கள் தேவனாயிருந்தாலும், மற்றும் இருவரும் மாம்சமாக இருந்தாலும், அவர்களுடைய ஊழியங்கள் ஒன்றல்ல. இயேசு வந்தபோது, அவரும் தேவனின் கிரியையின் ஒரு பகுதியைச் செய்தார் மற்றும் சில வார்த்தைகளையும் பேசினார். ஆனால் அவர் நிறைவேற்றிய முக்கியமான கிரியை என்ன? சிலுவையில் அறையப்பட்டதே அவர் முக்கியமாக சாதித்த கிரியை ஆகும். சிலுவையில் அறையப்படும் கிரியையை நிறைவேற்றவும், எல்லா மனிதர்களையும் இரட்சிப்பதற்கும் அவர் பாவமுள்ள மாம்சத்தின் சாயலானார், மேலும் முழு மனுக்குலத்தின் பாவங்களுக்காகவும் அவர் பாவநிவாரணபலியானார். அவர் நிறைவேற்றிய முக்கியமான கிரியை இதுதான். இறுதியில், பின்னர் வந்தவர்களை வழிநடத்த சிலுவையின் பாதையை அவர் கொடுத்தார். முதன்மையாக, இயேசு வந்தபோது மீட்பின் கிரியையை முடிக்க வேண்டும். அவர் எல்லா மனிதர்களையும் மீட்டு, பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தை மனிதனிடம் கொண்டு வந்தார், மேலும், அவர் பரலோகராஜ்யத்திற்கான பாதையை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக, பின்னர் வந்த அனைவரும், “நாம் சிலுவையின் பாதையில் நடக்க வேண்டும், சிலுவைக்காக நம்மை தியாகம் செய்ய வேண்டும்” என்று கூறினார்கள். நிச்சயமாக, ஆரம்பத்தில், இயேசுவும் வேறு சில கிரியைகளைச் செய்தார், மனிதனை மனந்திரும்பச் செய்யவும், தனது பாவங்களை அறிக்கையிடச் செய்யவும் சில வார்த்தைகளைப் பேசினார். ஆனால் சிலுவையில் அறையப்படுவதே இன்னும் அவருடைய ஊழியமாக இருந்தது, அவர் தம் வழியை பிரசங்கிக்க செலவிட்ட மூன்றரை வருடங்களும், பின்னர் வந்த சிலுவையில் அறையப்படுவதற்கான முன்னேற்பாடாக இருந்தன. இயேசு பல முறை ஜெபித்ததும் சிலுவையில் அறையப்படுவதற்காகவே. அவர் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையும், அவர் பூமியில் வாழ்ந்த முப்பத்தி மூன்றரை ஆண்டுகளும் முதன்மையாக சிலுவையில் அறையப்படும் கிரியையைச் செய்து முடிப்பதற்காகவே. இந்த கிரியையை மேற்கொள்ள அவை அவருக்கு பலம் கொடுப்பதாக இருந்தன, இதன் விளைவாக சிலுவையில் அறையப்படுவதை தேவன் அவரிடம் ஒப்படைத்தார். இன்று மனுவுருவான தேவன் எந்தக் கிரியையை நிறைவேற்றுவார்? முதன்மையாக “மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின்” கிரியையை நிறைவு செய்வதற்காகவும், வார்த்தையைப் பயன்படுத்தி மனிதனை பரிபூரணமாக்குவதற்கும், வார்த்தையால் நடத்தப்படுவதையும் வார்த்தையால் செம்மைப்படுத்துவதையும் மனிதனை ஏற்றுக்கொள்ளும்படி செய்யவும், இன்று, தேவன் மாம்சமானார். அவருடைய வார்த்தைகளில் அவர் உன்னை ஆகாரத்தைப் பெறவும் ஜீவனைப் பெறவும் செய்கிறார். அவருடைய வார்த்தைகளில் நீ அவருடைய கிரியைகளையும் செயல்களையும் காணலாம். உன்னை சிட்சிக்கவும் சுத்திகரிக்கவும் தேவன் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார், இதனால், நீ கஷ்டங்களை அனுபவித்தால், அதுவும் தேவனுடைய வார்த்தையினாலேயே ஆகும். இன்று, தேவன் உண்மைகளால் அல்ல, வார்த்தைகளால் கிரியை செய்கிறார். அவருடைய வார்த்தை உன் மீது வந்த பின்னரே பரிசுத்த ஆவியானவர் உனக்குள் கிரியை செய்து உன்னை வலியை அனுபவிக்கவோ அல்லது இனிமையாக உணரவோ செய்ய முடியும். தேவனுடைய வார்த்தை மட்டுமே உன்னை யதார்த்தத்திற்குள் கொண்டு வர முடியும், மேலும் தேவனுடைய வார்த்தையால் மட்டுமே உன்னை பரிபூரணமாக்க முடியும். எனவே, குறைந்தபட்சம் நீ இதைப் புரிந்து கொள்ள வேண்டும், கடைசி நாட்களில் தேவனால் செய்யப்படும் கிரியை என்பது முதன்மையாக ஒவ்வொரு நபரையும் பரிபூரணமாக்குவதற்கும் மனிதனை வழிநடத்துவதற்கும் அவருடைய வார்த்தையைப் பயன்படுத்துவதே ஆகும். அவர் செய்யும் எல்லா கிரியைகளும் வார்த்தையின் மூலமே செய்யப்படுகின்றன. உன்னைச் சிட்சிக்க அவர் உண்மைகளைப் பயன்படுத்துவதில்லை. சிலர் தேவனை எதிர்க்கும் நேரங்களும் உண்டு. தேவன் உனக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்துவதில்லை, உன் சரீரம் சிட்சிக்கப்படுவதில்லை, நீ கஷ்டங்களை அனுபவிப்பதில்லை. ஆனால் அவருடைய வார்த்தை உன் மீது வந்து, உன்னைச் சுத்திகரித்தவுடன், அதை உன்னால் தாங்க முடியாது. அது அப்படியல்லவா? ஊழியம் செய்பவர்களின் காலத்தில், மனிதனை பாதாளக்குழிக்குள் தள்ளும்படி தேவன் சொன்னார். மனிதன் உண்மையில் பாதாளக்குழிக்கு வந்தானா? மனிதனைச் சுத்திகரிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே, மனிதன் பாதாளக்குழிக்குள் நுழைந்தான். ஆகவே, கடைசி நாட்களில், தேவன் மாம்சமாகும் போது, எல்லாவற்றையும் நிறைவேற்றவும் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தவும் அவர் முக்கியமாக வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அவருடைய வார்த்தைகளில் மட்டுமே அவர் என்னவாக இருக்கிறார் என்று பார்க்க முடியும். அவருடைய வார்த்தைகளில்தான் அவர் தேவன் என்பதை நீ காண முடியும். மனுவுருவான தேவன் பூமிக்கு வரும்போது, அவர் வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர வேறு எந்தக் கிரியையும் செய்வதில்லை. இதனால் உண்மைகள் தேவையில்லை. வார்த்தைகளே போதுமானதாகும். இது ஏனென்றால், அவர், மனிதன் தம்முடைய வல்லமையையும் மேலாதிக்கத்தையும் அவருடைய வார்த்தைகளில் காண அனுமதிக்கவும், மனிதனை அவர் தம்மை எப்படி தாழ்மையுடன் மறைக்கிறார் என்பதை அவரது வார்த்தைகளில் காண அனுமதிக்கவும், மனிதன் தன் வார்த்தைகளை முழுவதுமாக அறிந்துகொள்ள அனுமதிக்கவும், முக்கியமாக இந்தக் கிரியையைச் செய்ய வந்துள்ளார். அவரிடம் உள்ள அனைத்தும், அவர் என்னவாக இருக்கிறார் என்பதும் அவருடைய வார்த்தைகளிலேயே உள்ளன. அவருடைய ஞானமும் அதிசயமும் அவருடைய வார்த்தைகளிலேயே உள்ளன. நீ இதில், தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பல முறைகளில் பேசுவதைக் காண முடியும். இந்தக் காலப்பகுதியில் தேவனின் பெரும்பாலான கிரியைகள் மனிதனை வழிநடத்துதல், வெளிப்படுத்துதல் மற்றும் கையாள்வது ஆகும். அவர் ஒரு நபரை எளிதில் சபிப்பதில்லை, அவர் அவ்வாறு செய்யும்போது கூட, அவர் வார்த்தையின் மூலம்தான் அவர்களைச் சபிக்கிறார். ஆகவே, தேவன் மாம்சமாகிய இந்தக் காலத்தில், தேவன் நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதையும், பேய்களை மீண்டும் துரத்துவதையும் பார்க்க முயற்சிக்காதீர்கள், தொடர்ந்து அடையாளங்களைத் தேடுவதை நிறுத்துங்கள். அதற்கு எந்த அர்த்தமும் இல்லை! அந்த அறிகுறிகளால் மனிதனைப் பரிபூரணப்படுத்த முடியாது! தெளிவாகப் பேசுவோமானால், இன்று, மாம்சத்தின் உண்மையான தேவன் தாமே செயல்படுவதில்லை. அவர் பேச மட்டுமே செய்கிறார். இதுவே சத்தியம்! அவர் உன்னைப் பரிபூரணமாக்குவதற்கு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், மேலும் உன்னை போஷிப்பதற்கும் உனக்குத் தண்ணீர் பாய்ச்சவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அவர் கிரியை செய்யவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், மேலும் அவருடைய யதார்த்தத்தை உங்களுக்குத் தெரியப்படுத்த அவர் உண்மைகளுக்குப் பதிலாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். தேவனின் இந்த கிரியையின் முறையை நீ உணரக்கூடியவனாக இருந்தால், எதிர்மறையாக இருப்பது கடினம். எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நீ நேர்மறையானவற்றில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் அதாவது, தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அல்லது உண்மைகளின் வருகை இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், தேவன் மனிதனை அவருடைய வார்த்தைகளிலிருந்து வாழ்க்கையைப் பெற வைக்கிறார், இது எல்லா அறிகுறிகளிலும் மிகப்பெரியது. இன்னும் அதிகமாக, இது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். தேவனை அறிந்து கொள்வதற்கான சிறந்த சான்று இதுவாகும், மேலும் இது அறிகுறிகளை விட பெரிய அறிகுறியாகும். இந்த வார்த்தைகளால் மட்டுமே மனிதனைப் பரிபூரணப்படுத்த முடியும்.

ராஜ்யத்தின் காலம் தொடங்கியவுடன், தேவன் தம்முடைய வார்த்தைகளை வெளியிடத் தொடங்கினார். எதிர்காலத்தில், படிப்படியாக இந்த வார்த்தைகள் நிறைவேற்றப்படும், அந்த நேரத்தில் மனிதனுடைய வாழ்க்கை முதிர்ச்சியடையும். தேவன் இந்த வார்த்தையை மனிதனின் சீர்கேடான மனநிலையை வெளிப்படுத்தப் பயன்படுத்துவது மிகவும் உண்மையானது, மேலும் மிகவும் அவசியமானது, மேலும் மனிதனின் விசுவாசத்தைப் பரிபூரணப்படுத்துவதற்கான தனது கிரியையை அவர் செய்வதற்கு வார்த்தையைத் தவிர வேறு எதையும் பயன்படுத்துவதில்லை, ஏனென்றால் இன்று வார்த்தையின் காலம், மற்றும் மனிதனின் விசுவாசம், தீர்மானம் மற்றும் ஒத்துழைப்பு அதற்குத் தேவை. மனுவுருவான தேவனின் கடைசி நாட்களின் கிரியை மனிதனுக்கு ஊழியம் செய்வதற்கும் வழங்குவதற்கும் அவருடைய வார்த்தையைப் பயன்படுத்துவதாகும். மனுவுருவான தேவன் அவருடைய வார்த்தைகளைப் பேசிய பின்னர்தான் அவை நிறைவேற்றப்படத் தொடங்கும். அவர் பேசும் காலத்தில், அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை, ஏனென்றால் அவர் மாம்சத்தின் கட்டத்தில் இருக்கும் போது, அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்பட முடியாது. தேவன் மாம்சமானவரே, ஆவியானவர் அல்ல என்பதை மனிதன் காணும்படி இது நிகழ்கிறது. இதனால் மனிதன் தேவனின் யதார்த்தத்தை தன் கண்களால் பார்க்க முடியும். அவருடைய கிரியை முடிந்த நாளில், பூமியில் அவரால் பேசப்பட வேண்டிய அனைத்து வார்த்தைகளும் பேசப்பட்டுவிட்டபோது, அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படத் தொடங்கும். இப்போது தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்படுவதற்கான காலம் அல்ல, ஏனென்றால் அவர் இன்னும் தம்முடைய வார்த்தைகளைப் பேசி முடித்திருக்கவில்லை. ஆகவே, தேவன் தம்முடைய வார்த்தைகளை இன்னும் பூமியில் பேசுகிறார் என்பதை நீ காணும்போது, அவருடைய வார்த்தைகளின் நிறைவேறுதலுக்காகக் காத்திருக்க வேண்டாம். தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசுவதை நிறுத்தும்போது, பூமியில் அவருடைய கிரியை முடிக்கப்பட்டிருக்கும் போதுதான் அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படத் தொடங்கும். அவர் பூமியில் பேசும் வார்த்தைகளில், ஒரு பக்கத்தில் வாழ்க்கையின் ஏற்பாடும், மற்றொரு பக்கத்தில், வரவிருக்கும் காரியங்களின் தீர்க்கதரிசனமும், செய்யப்படவிருக்கும் காரியங்கள் மற்றும் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய காரியங்கள், ஆகிய தீர்க்கதரிசனமும் உள்ளது. இயேசுவின் வார்த்தைகளிலும் தீர்க்கதரிசனம் இருந்தது. ஒரு பக்கத்தில், அவர் ஜீவனை வழங்கினார், மற்றொரு பக்கத்தில் அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார். இன்று, ஒரே நேரத்தில் வார்த்தைகளையும் உண்மைகளையும் நிறைவேற்றுவதற்கான பேச்சு எதுவும் இல்லை, ஏனென்றால் மனிதன் தன் கண்களால் காணக்கூடியவற்றுக்கும் தேவனால் செய்யப்படுவனவற்றிற்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. தேவனின் கிரியை முடிக்கப்பட்டதும், அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படும், வார்த்தைகளுக்குப் பிறகு உண்மைகள் வரும் என்று மட்டுமே கூற முடியும். கடைசி நாட்களில், மனுவுருவான தேவன் பூமியில் வார்த்தையின் ஊழியத்தைச் செய்கிறார், மேலும் வார்த்தையின் ஊழியத்தைச் செய்வதில், அவர் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார், மற்ற காரியங்களில் அக்கறை காட்டுவதில்லை. தேவனின் கிரியை மாறியதும், அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படத் தொடங்கும். இன்று, உன்னை பரிபூரணப்படுத்துவதற்கு முதலில் வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர் முழு பிரபஞ்சத்திலும் மகிமை பெறும்போது, அவருடைய கிரியை முழுமையடையும். பேசப்பட வேண்டிய அனைத்து வார்த்தைகளும் பேசப்பட்டிருக்கும், எல்லா வார்த்தைகளும் உண்மைகளாக மாறியிருக்கும். மனுக்குலம் அவரை அறிந்துகொள்ளும்படி, இதன்மூலம் மனுக்குலம் அவர் என்றால் என்ன என்பதைக் காணவும், அவருடைய ஞானத்தையும், அவருடைய வார்த்தையிலிருக்கும் அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் காணவும், தேவன் கடைசி நாட்களில் இந்த வார்த்தையின் ஊழியத்தைச் செய்ய பூமிக்கு வந்திருக்கிறார். ராஜ்யத்தின் காலத்தின் போது, தேவன் முக்கியமாக முழு மனுக்குலத்தையும் ஜெயங்கொள்ள இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார். எதிர்காலத்தில், அவருடைய வார்த்தை ஒவ்வொரு மதம், துறை, தேசம் மற்றும் சபைப் பிரிவினரின் மீதும் வரும். தேவன் இந்த வார்த்தையை ஜெயங்கொள்ளுவதற்காகப் பயன்படுத்தி, அவருடைய வார்த்தை அதிகாரத்தையும் வல்லமையையும் கொண்டுள்ளது என்பதை எல்லா மனிதர்களையும் காணச் செய்கிறார். எனவே இன்று நீங்கள் தேவனுடைய வார்த்தையை மட்டுமே எதிர்கொள்கிறீர்கள்.

இந்தக் காலத்தில் தேவன் பேசும் வார்த்தைகள் நியாயப்பிரமாண காலத்தின் போது பேசப்பட்ட வார்த்தைகளிலிருந்து வேறுபடுகின்றன, ஆகவே, அவை கிருபையின் காலத்தின் போது பேசப்பட்ட வார்த்தைகளிலிருந்து வேறுபடுகின்றன. கிருபையின் காலத்தில், தேவன் வார்த்தையின் கிரியையைச் செய்யவில்லை, ஆனால் மனிதகுலத்தை இரட்சிப்பதற்காக சிலுவையில் அறையப்படுவதை மட்டுமே விவரித்தார். இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பதையும், அவர் சிலுவையில் பட்ட துன்பத்தையும், தேவனுக்காக மனிதன் எவ்வாறு சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பதையும் மட்டுமே வேதாகமம் விவரிக்கிறது. அந்தக் காலத்தில், தேவனால் செய்யப்பட்ட அனைத்துக் கிரியைகளும் சிலுவையில் அறையப்படுவதையே மையமாகக் கொண்டிருந்தன. ராஜ்யத்தின் காலத்தின் போது, மனுவுருவான தேவன் தன்னை விசுவாசிக்கிற அனைவரையும் ஜெயங்கொள்ள வார்த்தைகளைப் பேசுகிறார். இது “மாம்சத்தில் தோன்றும் வார்த்தை”. இந்தக் கிரியையைச் செய்ய தேவன் கடைசி நாட்களில் வந்துள்ளார், அதாவது, மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின் உண்மையான முக்கியத்துவத்தை நிறைவேற்றிட அவர் வந்துள்ளார். அவர் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார், உண்மைகளின் வருகை அரிதானதாக உள்ளது. இது மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின் சாராம்சமாகும், மேலும் மனுவுருவான தேவன் அவருடைய வார்த்தைகளைப் பேசும்போது, இது மாம்சத்தில் உள்ள வார்த்தையின் தோற்றம், மற்றும் மாம்சத்திற்குள் வரும் வார்த்தையாக இருக்கிறது. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகியது.” இது (மாம்சத்தில் வார்த்தையின் தோற்றத்தின் கிரியை) தேவன் கடைசி நாட்களில் நிறைவேற்றும் கிரியை, இது அவருடைய முழு நிர்வாகத் திட்டத்தின் இறுதி அத்தியாயமாகும், எனவே தேவன் பூமிக்கு வந்து அவருடைய வார்த்தைகளை மாம்சத்தில் வெளிப்படுத்த வேண்டும். அது இன்று செய்யப்படுகிறது, அது எதிர்காலத்தில் செய்யப்படும், தேவனால் நிறைவேற்றப்படும், மனிதனின் இறுதி இலக்கு, இரட்சிக்கப்படுவார்கள், அழிக்கப்படுவார்கள் மற்றும் இதுபோன்ற இறுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய இந்தக் கிரியைகள் எல்லாம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன, மேலும் அவை மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின் உண்மையான முக்கியத்துவத்தை நிறைவேற்றுவதற்காகவே ஆகும். முன்னர் வெளியிடப்பட்ட நிர்வாக ஆணைகள் மற்றும் அமைப்புச்சட்டம், அழிக்கப்பட இருப்பவர்கள், இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கப் போகிறவர்கள்—இந்த வார்த்தைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். இதுதான் கடைசி நாட்களில் மனுவுருவான தேவனால் பிரதானமாக நிறைவேற்றப்படும் கிரியை ஆகும். தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள் எங்கு இருக்கிறார்கள், முன்குறிக்கப்பட்டாதவர்கள் எங்கு இருக்கிறார்கள், அவருடைய ஜனங்களும் குமாரர்களும் எவ்வாறு வகைப்படுத்தப்படுவார்கள், இஸ்ரேலுக்கு என்ன நடக்கும், எகிப்துக்கு என்ன நடக்கும், எதிர்காலத்தில், இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்படும். தேவனின் கிரியையின் வேகம் துரிதப்படுத்துகிறது. ஒவ்வொரு காலத்திலும் என்ன செய்யப்பட வேண்டும், கடைசி நாட்களில் மனுவுருவான தேவன் செய்ய வேண்டியவை, செய்யப்பட வேண்டிய அவருடைய ஊழியம், இந்த வார்த்தையை மனிதனுக்கு வெளிப்படுத்துவதற்கான வழிமுறையாக தேவன் பயன்படுத்துகிறார் மற்றும் இந்த வார்த்தைகள் அனைத்தும் மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின் உண்மையான முக்கியத்துவத்தை நிறைவேற்றுவதற்காகும்.

“அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்ப்பதில் கவனம் செலுத்துபவர்கள் அனைவரும் கைவிடப்படுவார்கள். அவர்கள் பரிபூரணர்களாக ஆக்கப்படுபவர்கள் அல்ல”, என்று நான் முன்பு கூறியிருக்கிறேன். நான் அநேக வார்த்தைகளைப் பேசியிருக்கிறேன், ஆனாலும் மனிதனுக்கு இந்த கிரியையைப் பற்றி சிறிதளவு அறிவும் இல்லை, மேலும், இந்த இடத்திற்கு வந்தபோதும், ஜனங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் கேட்கிறார்கள். தேவன் மீதான உன் விசுவாசம், அடையாளங்கள் மற்றும் அற்புதங்களைத் தேடுவதைத் தவிர வேறொன்றுமில்லையா, அல்லது ஜீவனைப் பெறுவதற்காகவா? இயேசுவும் பல வார்த்தைகளைப் பேசினார், அவற்றில் சில இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இயேசு தேவன் இல்லை என்று நீ சொல்ல முடியுமா? அவர் கிறிஸ்து என்றும் தேவனின் நேசகுமாரன் என்றும் தேவன் சாட்சி கொடுத்தார். இதை நீ மறுக்க முடியுமா? இன்று, தேவன் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார், இதை நீ முழுமையாக அறியவில்லை என்றால், நீ உறுதியாக நிற்க முடியாது. அவர் தேவன் என்பதால் நீ அவரை விசுவாசிக்கிறாயா, அல்லது அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படுகின்றனவா இல்லையா என்பதை அடிப்படையாகக் கொண்டு அவரை விசுவாசிக்கிறாயா? நீ அடையாளங்களையும் அற்புதங்களையும் விசுவாசிக்கிறாயா, அல்லது தேவனை விசுவாசிக்கிறாயா? இன்று, அவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டவில்லை. அவர் உண்மையில் தேவனா? அவர் பேசும் வார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், அவர் உண்மையில் தேவனா? அவர் பேசும் வார்த்தைகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதன் மூலம் தேவனின் சாராம்சம் தீர்மானிக்கப்படுகிறதா? தேவனை விசுவாசிப்பதற்கு முன்பு சிலர் தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்படுவதற்காக எப்போதும் காத்திருப்பது ஏன்? அவர்கள் அவரை அறியவில்லை என்று அர்த்தமல்லவா? அத்தகைய கருத்துக்களைக் கொண்டவர்கள் அனைவரும் தேவனை மறுப்பவர்கள். தேவனை அளவிட அவர்கள் கருத்துக்களைப் பயன்படுத்துகிறார்கள். தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்பட்டால், அவர்கள் அவரை விசுவாசிக்கிறார்கள், இல்லையென்றால் அவர்கள் அவரை விசுவாசிப்பதில்லை. அவர்கள் எப்போதும் அடையாளங்களையும் அற்புதங்களையும் பின்பற்றுகிறார்கள். இந்த ஜனங்கள் நவீன காலத்தின் பரிசேயர்கள் அல்லவா? உன்னால் உறுதியாக நிற்க முடியுமா இல்லையா என்பது நீ உண்மையான தேவனை அறிந்திருக்கிறாயா இல்லையா என்பதைப் பொறுத்தது. இது முக்கியமானது! உன்னில் தேவனின் வார்த்தையின் யதார்த்தம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, தேவனின் யதார்த்தத்தைப் பற்றிய உன் அறிவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, சோதனைகளின் போது உன்னால் அவ்வளவு உறுதியாக நிற்க முடிகிறது. அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்ப்பதில் நீ எவ்வளவு கவனம் செலுத்துகிறாயோ, உன்னால் அவ்வளவு குறைவாக உறுதியாக நிற்க முடிகிறது, மேலும் சோதனைகளுக்கு மத்தியில் நீ விழுந்து விடுவாய். அடையாளங்களும் அற்புதங்களும் அஸ்திபாரம் அல்ல. தேவனின் யதார்த்தம் மட்டுமே ஜீவன். தேவனின் கிரியையால் அடைய வேண்டிய பலன்கள் குறித்து சிலருக்குத் தெரியாது. அவர்கள் தங்கள் நாட்களை கலக்கத்தில் செலவிடுகிறார்கள், தேவனின் கிரியையைப் பற்றிய அறிவைப் பின்தொடர்வதில்லை. அவர்கள் பின்தொடர்வதின் நோக்கம், தேவன் அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதே ஆகும், அப்போதுதான் அவர்கள் தங்கள் விசுவாசத்தில் தீவிரமாக இருப்பார்கள். தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்பட்டால்தான் ஜீவனைப் பின்பற்றுவோம் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், அவர்கள் ஜீவனைப் பின்பற்ற வாய்ப்பில்லை. தேவனை விசுவாசிப்பது என்பது அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்ப்பதும், பரலோகத்திற்கும் மூன்றாம் வானத்திற்கும் ஏறுவதற்கான நாட்டமும் என்று மனிதன் கருதுகிறான். அவர்கள் யாரும் தேவன் மீதான விசுவாசம் என்பது யதார்த்தத்திற்குள் நுழைவதும், ஜீவனைப் பின்தொடர்வதும், தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதைப் பின்தொடர்வதும் என்று கூறுவதில்லை. இது போன்ற பின்தொடர்தலின் மதிப்பு என்ன? தேவனைப் பற்றிய அறிவையும், தேவனின் திருப்தியையும் பின்பற்றாதவர்கள் தேவனை விசுவாசிக்காதவர்கள் ஆவர். அவர்கள் தான் தேவனை நிந்திக்கிறவர்கள்!

தேவன் மீதான விசுவாசம் என்ன என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? தேவன் மீதான விசுவாசம் என்பது அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்ப்பதா? அது பரலோகத்திற்கு ஏறுவது என்று அர்த்தமா? தேவனை விசுவாசிப்பது சிறிதும் எளிதானது அல்ல. அந்த மத நடைமுறைகள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதும், பேய்களை விரட்டுவதும், அடையாளங்கள் மற்றும் அற்புதங்களில் கவனம் செலுத்துவதும், தேவனின் கிருபை, சமாதானம் மற்றும் மகிழ்ச்சியை அதிகம் விரும்புவது, மாம்சத்தின் வாய்ப்புகள் மற்றும் வசதிகளைப் பின்தொடர்வது ஆகிய இவையே மத நடைமுறைகள், அத்தகைய மத நடைமுறைகள் தெளிவற்ற ஒரு வகையான விசுவாசம் ஆகும். இன்று தேவன் மீதான உண்மையான விசுவாசம் என்பது என்ன? தேவனின் வார்த்தையை உங்களுடைய வாழ்க்கையின் யதார்த்தமாக ஏற்றுக்கொள்வதும், அவரைப் பற்றிய உண்மையான அன்பை அடைவதற்காக தேவனை அவருடைய வார்த்தையின் மூலமாய் அறிந்து கொள்வதும் ஆகும். தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தேவன் மீதான விசுவாசம் என்பது நீ தேவனுக்குக் கீழ்ப்படிவதும், தேவனை நேசிப்பதும், தேவனின் ஒரு சிருஷ்டியால் செய்யப்பட வேண்டிய கடமையைச் செய்வதுவும் என்று கூறலாம். இது தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் ஆகும். தேவனின் அருமையைப் பற்றிய அறிவை நீ அடைய வேண்டும், தேவன் ஆராதிப்பதற்கு எவ்வளவு தகுதியானவராக இருக்கிறார், அவருடைய சிருஷ்டிப்புகளில், தேவன் எவ்வாறு இரட்சிப்பின் கிரியையைச் செய்கிறார், அவற்றை எவ்வாறு பரிபூரணமாக்குகிறார். இவை தேவன் மீதான உன் விசுவாசத்தின் அத்தியாவசியமானவை. தேவன் மீதான விசுவாசம் என்பது முக்கியமாக மாம்சத்திற்குரிய வாழ்க்கையிலிருந்து தேவனை நேசிக்கும் வாழ்க்கைக்கு மாறுவது ஆகும். அது சீர்கெட்ட வாழ்க்கையிலிருந்து தேவனின் வார்த்தைகளுக்குள் வாழ்வதுவரை ஆகும். அது சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்து வெளிவந்து தேவனின் கவனிப்பிலும் பாதுகாப்பிலும் வாழ்வது ஆகும். அது தேவனுக்குக் கீழ்ப்படிதலையும் மாம்சத்திற்குக் கீழ்ப்படியாமையையும் அடைய முடிவது ஆகும். இது உன் முழு இருதயத்தையும் பெற தேவனை அனுமதிப்பது, உன்னை பரிபூரணமாக்க தேவனை அனுமதிப்பது, மேலும் சீர்கேடு நிறைந்த சாத்தானின் மனநிலையிலிருந்து உன்னை விடுவிப்பதும் ஆகும். தேவன் மீதான விசுவாசம் முக்கியமாக இருப்பதால், தேவனின் வல்லமையும் மகிமையும் உன்னிடத்தில் வெளிப்படும், இதனால் நீ தேவனுடைய சித்தத்தைச் செய்யவும், தேவனின் திட்டத்தை நிறைவேற்றவும், சாத்தானுக்கு முன்பாக தேவனுக்கு சாட்சி அளிக்கவும் முடியும். தேவன் மீதான விசுவாசம் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணும் விருப்பத்தைச் சுற்றி இருக்கக்கூடாது, அது உன் சுய மாம்சத்திற்காகவும் இருக்கக்கூடாது. இது தேவனை அறிந்துகொள்வதையும், பேதுருவைப் போலவே தேவனுக்குக் கீழ்ப்படிவதையும், ஒருவர் இறக்கும் வரை தேவனுக்குக் கீழ்ப்படிவதையும் பற்றியதாக இருக்க வேண்டும். தேவனை விசுவாசிப்பதற்கான முக்கிய நோக்கங்கள் இவையே. தேவனை அறிந்து அவரை திருப்திப்படுத்துவதற்காக ஒருவர் தேவனுடைய வார்த்தையைப் புசித்துப் பானம்பண்ண வேண்டும். தேவனுடைய வார்த்தையைப் புசித்துப் பானம்பண்ணுவது உனக்கு தேவனைப் பற்றிய அதிக அறிவைத் தருகிறது, அதன்பின்தான் உன்னால் அவருக்குக் கீழ்ப்படிய முடியும். தேவனைப் பற்றிய அறிவால் மட்டுமே உன்னால் அவரை நேசிக்க முடியும், மேலும் தேவன் மீதுள்ள விசுவாசத்தில் மனிதன் கொண்டிருக்க வேண்டிய குறிக்கோள் இதுதான். தேவன் மீதான உன் விசுவாசத்தில், நீ எப்போதும் அடையாளங்களையும் அற்புதங்களையும் காண முயற்சிக்கிறாய் என்றால், தேவன் மீதான இந்த விசுவாசத்தின் கண்ணோட்டம் தவறானது. தேவன் மீதான விசுவாசம் என்பது தேவனின் வார்த்தையை வாழ்க்கையின் யதார்த்தமாக ஏற்றுக்கொள்வதாகும். தேவனின் வாயிலிருந்து வரும் அவருடைய வார்த்தைகளைக் கடைபிடித்து அவற்றை உனக்குள் நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே தேவனின் நோக்கமானது அடையப்படுகிறது. தேவனை விசுவாசிப்பதில், மனிதன் தேவனால் பரிபூரணமாகவும், தேவனுக்கு அர்ப்பணிக்கவும், தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படியவும் முயற்சி செய்ய வேண்டும். நீ குறைகூறாமல் தேவனுக்குக் கீழ்ப்படிய முடிந்து, தேவனின் விருப்பங்களைக் கவனத்தில் கொண்டு, பேதுருவின் உயரத்தை அடைந்து, தேவனால் பேசப்படும் பேதுருவின் பாணியைக் கொண்டிருந்தால், நீ தேவன் மீதான விசுவாசத்தில் வெற்றியை அடைந்திருப்பதையும், அதுதான் நீ தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டிருக்கிறாய் என்பதையும் குறிக்கும்.

முழு பிரபஞ்சத்திலும் தேவன் தமது கிரியையைச் செய்கிறார். அவரை விசுவாசிக்கிறவர்கள் அனைவரும் அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, அவருடைய வார்த்தையைப் புசித்துப் பானம்பண்ண வேண்டும். தேவன் காட்டும் அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்த்து யாராலும் தேவனால் ஆதாயப்படுத்தப்பட முடியாது. எல்லாக் காலத்திலும் மனிதனைப் பரிபூரணமாக்க தேவன் எப்போதும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு நீங்கள் உங்கள் கவனத்தை அடையாளங்களுக்கும் அற்புதங்களுக்கும் அர்ப்பணிக்கக்கூடாது, ஆனால் தேவனால் பரிபூரணமாக்கப்பட முயற்சிக்க வேண்டும். பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாண காலத்தில், தேவன் சில வார்த்தைகளைப் பேசினார், கிருபையின் காலத்தில், இயேசுவும் அநேக வார்த்தைகளைப் பேசினார். இயேசு அநேக வார்த்தைகளைச் சொல்லியிருந்தபின், பிற்கால அப்போஸ்தலர்களும் சீஷர்களும் இயேசுவால் வழங்கப்பட்ட கட்டளைகளின்படி நடந்து கொள்ள ஜனங்களை வழிநடத்தினார்கள், இயேசு பேசிய வார்த்தைகளுக்கும் கொள்கைகளுக்கும் ஏற்ப அனுபவித்தார்கள். கடைசி நாட்களில், மனிதனைப் பரிபூரணமாக்க தேவன் இந்த வார்த்தையை முக்கியமாகப் பயன்படுத்துகிறார். அவர் மனிதனை ஒடுக்க, அல்லது மனிதனை சமாதானப்படுத்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பயன்படுத்துவதில்லை. இது தேவனின் வல்லமையைத் தெளிவுபடுத்த முடியாது. தேவன் அடையாளங்களையும் அற்புதங்களையும் மட்டுமே காட்டியிருந்தால், தேவனின் யதார்த்தத்தைத் தெளிவுபடுத்துவது சாத்தியமில்லை, இதனால் மனிதனை பரிபூரணமாக்குவது சாத்தியமில்லை. தேவன் மனிதனை அடையாளங்களாலும், அற்புதங்களாலும் பரிபூரணமாக்குவதில்லை, ஆனால் இந்த வார்த்தையை மனிதனை நீர்ப் பாய்ச்சி மேய்த்திடப் பயன்படுத்துகிறார், அதன் பிறகு மனிதனின் முழுமையான கீழ்ப்படிதலும், தேவனைப் பற்றிய மனிதனின் அறிவும் அடையப்படுகிறது. அவர் செய்யும் கிரியையின் மற்றும் அவர் பேசும் வார்த்தைகளின் நோக்கம் இதுதான். மனிதனைப் பரிபூரணமாக்குவதற்கு அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பிக்கும் முறையை தேவன் பயன்படுத்துவதில்லை. அவர் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், மேலும் மனிதனைப் பரிபூரணமாக்க கிரியையின் பலவிதமான முறைகளைப் பயன்படுத்துகிறார். இது சுத்திகரித்தல், கையாளுதல், கிளைநறுக்குதல் அல்லது வார்த்தைகளை வழங்குதல் என எதுவாக இருந்தாலும், மனிதனைப் பரிபூரணமாக்குவதற்கும், தேவனின் கிரியை, ஞானம் மற்றும் அற்புதத்தன்மையைப் பற்றி மனிதனுக்கு அதிக அறிவைத் தருவதற்கும் தேவன் பல்வேறு கண்ணோட்டங்களில் பேசுகிறார். கடைசி நாட்களில் தேவன் காலத்தை முடிக்கும் நேரத்தில் மனிதன் முழுமையாக்கப்படுகையில், அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்க்க அவன் தகுதி பெறுவான். நீ தேவனை அறிந்துகொண்டு, அவர் என்ன செய்தாலும் தேவனுக்குக் கீழ்ப்படிய முடிந்தால், நீ அடையாளங்களையும் அற்புதங்களையும் காணும்போது அவரைப் பற்றி உனக்கு இனி எந்தக் கருத்துக்களும் இருக்காது. இந்த நேரத்தில், நீ சீர்கேடு நிறைந்தவனும் தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிய இயலாதவனுமாய் இருக்கும் இந்த நிலையில் அடையாளங்களையும் அற்புதங்களையும் காண நீ தகுதியுடையவன் என்று நினைக்கிறாயா? காலம் மாறும்போதும், மேலும், காலம் முடிவடையும் போதும், தேவன் அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பிக்கும் போது, அது தேவன் மனிதனைத் தண்டிப்பது ஆகும். தேவனின் கிரியை சாதாரணமாக மேற்கொள்ளப்படும்போது, அவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டுவதில்லை. அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பிப்பது அவருக்கு மிகவும் எளிது, ஆனால் அது தேவனின் கிரியையின் கொள்கை அல்ல, அது மனிதனை நிர்வகிப்பதன் தேவனுடைய நோக்கமும் அல்ல. மனிதன் அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்டிருந்தால், தேவனின் ஆவிக்குரிய சரீரம் மனிதனுக்குத் தோன்றினால், எல்லா மக்களும் தேவனை நம்பமாட்டார்களா? ஜெயங்கொண்டவர்களில் ஒரு குழுவினர் கிழக்கிலிருந்து ஆதாயப்படுத்தப்பட்டார்கள் என்றும் ஜெயங்கொண்டவர்கள் பெரும் உபத்திரவங்களுக்கு மத்தியில் இருந்து வந்தவர்கள் என்றும் நான் முன்பு கூறியுள்ளேன். இந்த வார்த்தைகளின் பொருள் என்ன? நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை, மற்றும் கையாளுதல் மற்றும் பராமரிப்பு, மற்றும் அனைத்து வகையான சுத்திகரிப்பு ஆகியவற்றிற்கும் பின்னர் மட்டுமே இந்த ஜனங்கள் உண்மையிலேயே கீழ்ப்படிந்ததால் ஜெயங்கொண்டவர்கள் என்று அவர்கள் அர்த்தப்படுத்துகிறார்கள். இந்த ஜனங்களின் விசுவாசம் தெளிவற்றதும் சுருக்கமானதும் அல்ல, ஆனால் உண்மையானது. அவர்கள் எந்த அடையாளங்களையும் அதிசயங்களையும், எந்த அற்புதங்களையும் பார்த்ததில்லை. அவர்கள் சுருக்கமான எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகள் அல்லது ஆழமான நுண்ணறிவுகளைப் பற்றி பேசுவதில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் யதார்த்தத்தையும், தேவனின் வார்த்தைகளையும், தேவனின் யதார்த்தத்தைப் பற்றிய உண்மையான அறிவையும் கொண்டுள்ளனர். அத்தகைய குழு தேவனின் வல்லமையைத் தெளிவுபடுத்துவதில் அதிக திறன் கொண்டதல்லவா? கடைசி நாட்களில் தேவனின் கிரியையே உண்மையான கிரியையாகும். இயேசுவின் காலத்தில், அவர் மனிதனைப் பரிபூரணமாக்க வரவில்லை, ஆனால் மனிதனை மீட்பதற்காக வந்தார், ஆகவே, ஜனங்கள் தம்மைப் பின்பற்றும்படி சில அற்புதங்களை அவர் காட்டினார். அவர் முக்கியமாக சிலுவையில் அறையப்படும் கிரியையைச் செய்து முடிக்க வந்தார், அடையாளங்களைக் காண்பிப்பது அவருடைய ஊழியத்தின் ஒரு பகுதியாக இல்லை. இத்தகைய அடையாளங்களும் அற்புதங்களும் அவருடைய கிரியையைச் சிறப்பாகச் செய்வதற்காக செய்யப்பட்ட கிரியையாகும், அவை கூடுதல் கிரியை ஆகும், மற்றும் எல்லா காலத்தின் கிரியையையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. பழைய ஏற்பாட்டுக் காலத்தின் போது, தேவன் சில அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டினார். ஆனால் இன்று தேவன் செய்யும் கிரியை உண்மையான கிரியை, அவர் நிச்சயமாக இப்போது அறிகுறிகளையும் அதிசயங்களையும் காட்ட மாட்டார். அவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டினால், அவருடைய உண்மையான கிரியை சீர்குலைந்து போகும், அவரால் மேலும் எந்தக் கிரியையும் செய்ய முடியாது. மனிதனைப் பரிபூரணமாக்குவதற்கு தேவன் வார்த்தையைச் சொல்லியிருந்தார், ஆனால் அடையாளங்களையும் அற்புதங்களையும் கூடக் காட்டினார் என்றால், மனிதன் உண்மையிலேயே அவரை விசுவாசிக்கிறானா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா? இவ்வாறு, அத்தகைய செயல்களைத் தேவன் செய்வதில்லை. மனிதனுக்குள் மதம் அதிகமாக இருக்கிறது. மனிதனுக்குள் இருக்கும் அனைத்து மதக் கருத்துகளையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் வெளியேற்றவும், தேவனின் யதார்த்தத்தை மனிதனுக்குத் தெரியப்படுத்தவும் தேவன் கடைசி நாட்களில் வந்துள்ளார். அவர் சுருக்கமாகவும், கற்பனையாகவும் இருக்கும் ஒரு தேவனின் உருவத்தை அகற்ற வந்திருக்கிறார். வேறுவிதமாகக் கூறினால், அது இல்லாத ஒரு தேவனின் உருவம் ஆகும். எனவே, இப்போது உனக்கு யதார்த்தத்தைப் பற்றிய அறிவு இருப்பது மட்டுமே விலைமதிப்பற்றது! சத்தியம் எல்லாவற்றிற்கும் மாற்றாகிறது. இன்று நீ எவ்வளவு சத்தியத்தைக் கொண்டிருக்கிறாய்? அவை அனைத்தும் தேவனின் அடையாளங்கள் மற்றும் அற்புதங்களைக் காண்பிக்கின்றனவா? பொல்லாத ஆவிகளும் அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டலாம். அவைகள் அனைத்தும் தேவனா? தேவன் மீது அவர் வைத்திருக்கும் விசுவாசத்தில், மனிதன் தேடுவது சத்தியத்தையே, அடையாளங்களையும் அற்புதங்களையும் விட, அவன் பின்பற்றுவது ஜீவனையே. இதுவே தேவனை விசுவாசிக்கிற அனைவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

முந்தைய: ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்

அடுத்த: பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக