மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (2)

மனுஷனின் சுபாவமானது எனது சாராம்சத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது, ஏனென்றால் மனுஷனின் சீர்கெட்டச் சுபாவமானது முற்றிலும் சாத்தானிடமிருந்துதான் உருவாகிறது; மனுஷனின் சாராம்சமானது சாத்தானால் நடைமுறைக்கு உள்ளாக்கப்பட்டு சீர்கெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மனுஷன் சாத்தானின் பொல்லாப்பு மற்றும் அசிங்கத்தினுடைய செல்வாக்கின் கீழ் ஜீவிக்கிறான். மனுஷன் சத்தியத்தின் உலகிலோ அல்லது பரிசுத்தமான சூழலிலோ வளருவதில்லை, மேலும் அவன் வெளிச்சத்திலும் ஜீவிப்பதில்லை. ஆகையால், பிறந்த தருணத்திலிருந்தே யாரும் தங்கள் சுபாவத்தினுள் சத்தியத்தை வைத்திருப்பது சாத்தியமில்லை, மேலும் தேவனுக்கு அஞ்சும் மற்றும் கீழ்ப்படியும் ஒரு சாராம்சத்துடன் யாரும் பிறக்க முடியாது. மாறாக, தேவனை எதிர்க்கும், தேவனுக்குக் கீழ்ப்படியாத, சத்தியத்தின் மீது அன்பு இல்லாத ஒரு சுபாவத்தை ஜனங்கள் கொண்டிருக்கிறார்கள். துரோகம் எனும் இந்தச் சுபாவம்தான் நான் விவாதிக்க விரும்பும் பிரச்சினை ஆகும். தேவனுக்கு எதிரான ஒவ்வொருவரின் எதிர்ப்பின் ஊற்றே துரோகம் ஆகும். இது மனுஷனில் மட்டுமே இருக்கும் ஒரு பிரச்சினை, என்னுள் இருப்பதில்லை. சிலர் கேட்பார்கள்: எல்லா மனுஷரும் கிறிஸ்துவைப் போலவே உலகில் ஜீவிக்கிறார்கள் என்பதால், கிறிஸ்துவைத் தவிர எல்லா மனுஷரும் தேவனுக்குத் துரோகம் செய்யும் சுபாவங்களைக் கொண்டிருப்பது ஏன்? இது உங்களுக்குத் தெளிவாக விளக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை ஆகும்.

ஆத்துமாவின் தொடர்ச்சியான மறு மனுவுருவாதலே மனுக்குலம் இருப்பதன் அடிப்படையாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒவ்வொரு மனுஷனும் தனது ஆத்துமா மறுபடியும் மனுவுருவாகும்போது மாம்சத்தில் ஒரு மனுஷ ஜீவிதத்தைப் பெறுகிறான். ஒருவனின் சரீரம் பிறந்த பிறகு, அந்த மாம்சமானது இறுதியில் அதன் வரம்புகளை அடையும் வரை அதன் ஜீவிதம் தொடர்கிறது, இறுதி வரம்பு என்பது ஆத்துமா அதன் சரீரத்தை விட்டு வெளியேறும் இறுதித் தருணம் ஆகும். இந்தச் செயல்முறையானது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, ஒருவனின் ஆத்துமா காலப்போக்கில் வந்து செல்கிறது, இவ்வாறாக மனுக்குலம் இருப்பது பராமரிக்கப்படுகிறது. மாம்சத்தின் ஜீவிதமானது மனுஷனுடைய ஆத்துமாவின் ஜீவிதமாகவும் இருக்கிறது, மேலும் மனுஷனின் ஆத்துமாவானது மனுஷ மாம்சத்தின் இருப்பை ஆதரிக்கிறது. அதாவது, ஒவ்வொருவனின் ஜீவிதமும் அவனது ஆத்துமாவிலிருந்து வருகிறது, மேலும் ஜீவிதமானது மாம்சத்திற்கு உள்ளார்ந்த விஷயமும் இல்லை. இவ்வாறு, மனுஷனின் சுபாவமானது ஆத்துமாவிலிருந்து வருகிறது, மாம்சத்திலிருந்து வருவதில்லை. சாத்தானின் சோதனைகள், துன்பங்கள் மற்றும் சீர்கேடுகளை மனுஷன் எவ்வாறு அனுபவித்தான் என்பது ஒவ்வொருவனின் ஆத்துமாவுக்கு மட்டுமே தெரியும். இந்த விஷயங்கள் மனுஷனின் மாம்சத்திற்குத் தெரியாது. ஆகையால், மனுக்குலமானது அறியாமலே இன்னும் இருட்டாகி, இன்னும் அசுத்தமாகி, இன்னும் பொல்லாப்பு கொண்டதாக மாறுகிறது, அதே நேரத்தில் மனுஷனுக்கும் எனக்கும் இடையிலான தூரம் இன்னும் அதிகமாகி, மனுக்குலத்திற்கு ஜீவிதம் என்பது மேலும் இருட்டாகிறது. சாத்தான் மனுக்குலத்தின் ஆத்துமாக்களை அவனது பிடியில் வைத்திருக்கிறான், ஆகவே, மனுஷனின் மாம்சமும் சாத்தானால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய மாம்சமும் அத்தகைய மனுக்குலமும் தேவனை எவ்வாறு எதிர்க்காமல் இருக்க முடியும்? அவர்கள் தேவனுடன் எவ்வாறு இயல்பாக ஒத்துப்போக முடியும்? சாத்தான் எனக்குத் துரோகம் செய்ததால்தான் நான் சாத்தானை நடுவானில் தூக்கி வீசியிருக்கிறேன். இப்படியிருந்தால், மனுஷர் தங்களது ஈடுபாட்டிலிருந்து எவ்வாறு விடுபட முடியும்? இதனால்தான் துரோகமானது மனுஷ இயல்பாக இருக்கிறது. இந்தப் பகுத்தறிவை நீங்கள் புரிந்துகொண்டவுடன், நீங்கள் கிறிஸ்துவின் சாராம்சத்திலும் சிறிதளவு விசுவாசம் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவனுடைய ஆவியானவர் அணிந்திருக்கும் மாம்சமானது தேவனின் சொந்த மாம்சமாகும். தேவனுடைய ஆவியானவர் உயர்ந்தவராக இருக்கிறார்; அவர் சர்வவல்லவராக, பரிசுத்தராக, நீதியுள்ளவராக இருக்கிறார். அதேபோல், அவருடைய மாம்சமும் உயர்ந்ததாக, சர்வவல்லமைமிக்கதாக, பரிசுத்தமானதாக, நீதியுள்ளதாக இருக்கிறது. அத்தகைய மாம்சத்தால் மட்டுமே மனுக்குலத்திற்கு நீதியும் நன்மையும் வழங்க முடியும், அதுவே பரிசுத்தமானதாக, மகிமைகொண்டதாக, வல்லமை பொருந்தியதாக இருக்கிறது; சத்தியத்தை மீறும், ஒழுக்கத்தையும் நீதியையும் மீறும் எதையும் அவரால் செய்ய இயலாது, மேலும் தேவனுடைய ஆவியானவருக்குத் துரோகம் செய்யும் எதையும் அவரால் செய்ய முடியாது. தேவனுடைய ஆவியானவர் பரிசுத்தமானவர், ஆகவே அவருடைய மாம்சமானது சாத்தானால் சீர்கெட்டுப்போகாது; அவருடைய மாம்சமானது மனுஷனின் மாம்சத்தை விட வித்தியாசமான சாராம்சத்தைக் கொண்டது. ஏனென்றால் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டுப்போனது மனுஷன்தான், தேவன் இல்லை; தேவனின் மாம்சத்தைச் சாத்தானால் சீர்கெட்டுப்போக வைக்க முடியாது. ஆகவே, மனுஷனும் கிறிஸ்துவும் ஒரே இடத்திலேயே ஜீவிக்கிறார்கள் என்ற போதிலும், மனுஷன்தான் சாத்தானால் உடைமையாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு சிக்கவைக்கப்படுகிறான். இதற்கு நேர்மாறாக, கிறிஸ்து சாத்தானின் சீர்கேட்டின் தாக்கத்திற்கு நித்தியமாக உள்ளாகாதவராய் இருக்கிறார், ஏனென்றால் சாத்தான் ஒருபோதும் மிக உன்னதமான இடத்தில் ஏறுவதற்கான திறம்மிக்கவனாக இருக்க மாட்டான், மேலும் அவனால் ஒருபோதும் தேவனிடம் நெருங்கவே முடியாது. இன்று எனக்குத் துரோகம் செய்வது, சாத்தானால் சீர்கெட்டுப்போயிருக்கும் மனுக்குலம் மட்டும்தான் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். துரோகம் என்பது ஒருபோதும் கிறிஸ்துவை உள்ளடக்கிய ஒரு பிரச்சினையாக இருக்காது.

சாத்தானால் சீர்கெட்டுப்போன அனைத்து ஆத்துமாக்களும் சாத்தானின் ஆதிக்கத்தில் அடிமைகளாக இருக்கின்றன. கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் மட்டுமே தனியாகப் பிரிக்கப்பட்டு, சாத்தானின் முகாமிலிருந்து இரட்சிக்கப்பட்டு, இன்றைய ராஜ்யத்திற்குள் கொண்டு வரப்படுகின்றனர். இந்த ஜனங்கள் இனியும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் ஜீவித்திருக்க மாட்டார்கள். அப்படியிருந்தும், மனுஷனின் சுபாவமானது இன்னும் மனுஷனின் மாம்சத்தில் வேரூன்றியிருக்கிறது, அதாவது உங்கள் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டிருந்தாலும், உங்கள் சுபாவமானது முன்பைப் போலவே இருக்கிறது, மேலும் நீங்கள் எனக்குத் துரோகம் செய்ய நூறு சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. உங்களது சுபாவம் கட்டுப்படுத்த முடியாததாக இருப்பதால்தான் எனது கிரியை நீண்ட காலம் நீடிக்கிறது. இப்போது, நீங்கள் உங்கள் கடமைகளை நிறைவேற்றும்போது உங்கள் திறனுக்கு ஏற்றவாறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறீர்கள், ஆனாலும் நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு துரோகம் செய்து, சாத்தானின் ஆதிக்கத்திற்கு, அவனது முகாமுக்குத் திரும்பி, உங்கள் பழைய ஜீவிதத்திற்கு திரும்பும் திறன் கொண்டவர்களாக இருக்கிறீர்கள்—இது மறுக்க முடியாத உண்மை. அந்த நேரத்தில், நீங்கள் இப்போது செய்வது போல, சிறிதளவும் மனிதத்தன்மையையோ அல்லது மனித சாயலையோ முன்வைப்பது உங்களுக்கு சாத்தியமாக இருக்காது. கடுமையான சந்தர்ப்பங்களில், நீங்கள் அழிக்கப்படுவீர்கள், மேலும், நித்தியமாக அழிக்கப்பட்டு, மீண்டும் ஒருபோதும் மறு மனுவுருவாகாதபடிக்குக் கடுமையாகத் தண்டிக்கப்படுவீர்கள். இதுவே உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள பிரச்சினை. முதலாவதாக, எனது கிரியை வீணாகாதபடிக்கும், இரண்டாவதாக, நீங்கள் அனைவரும் வெளிச்சத்தின் நாட்களில் வாழும்படிக்கும் நான் உங்களுக்கு இவ்வாறாக நினைவூட்டுகிறேன். உண்மையில், எனது கிரியையானது வீணானதா என்பது முக்கியமான பிரச்சினை இல்லை. நீங்கள் மகிழ்ச்சியான ஜீவிதத்தையும் அற்புதமான எதிர்காலத்தையும் பெற முடிகிறது என்பது தான் முக்கியமானதாக இருக்கிறது. ஜனங்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பதே எனது கிரியையாக இருக்கிறது. உனது ஆத்துமா சாத்தானின் கைகளுக்குள் விழுந்தால், உனது சரீரம் நிம்மதியாக ஜீவிக்காது. நான் உனது சரீரத்தைப் பாதுகாக்கிறேன் என்றால், உனது ஆத்துமாவும் நிச்சயமாக என் பராமரிப்பில்தான் இருக்கும். நான் உன்னை மெய்யாகவே வெறுக்கிறேன் என்றால், உன் சரீரமும் ஆத்துமாவும் ஒரே நேரத்தில் சாத்தானின் கைகளில் விழும். அதற்குப் பிறகான உனது நிலைமையை உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? ஒரு நாள் எனது வார்த்தைகள் உங்கள் மீது செயல்படவில்லை என்றால், நான் உங்களைச் சாத்தானிடம் ஒப்படைப்பேன், அதன் மூலம் எனது கோபம் முற்றிலுமாகக் கலைந்து போகும்வரை நீங்கள் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவீர்கள், அல்லது, உங்களது இருதயம் எனக்குத் துரோகம் செய்வதில் இருந்து மாறாது என்பதற்காக மீட்க முடியாத மனுஷரான உங்களை நான் தனிப்பட்ட முறையில் தண்டிப்பேன்.

எனக்கான துரோகங்கள் உங்களுக்குள் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க நீங்கள் இப்போது உங்களால் முடிந்தவரை விரைவாக உங்களையே உற்று நோக்குங்கள். உங்கள் பதிலுக்காக நான் வாஞ்சையோடு காத்திருக்கிறேன். என்னைக் கையாள்வதில் அக்கறையில்லாதவர்களாக இருக்காதீர்கள். நான் ஒருபோதும் ஜனங்களுடன் விளையாடுவதில்லை. நான் ஏதாவது செய்வேன் என்று சொன்னால் நான் நிச்சயமாக அதைச் செய்வேன். நீங்கள் ஒவ்வொருவரும் எனது வார்த்தைகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளுபவராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், மேலும் இந்த வார்த்தைகளை அறிவியல் புனைக்கதைகளாக எண்ண வேண்டாம். உங்களிடமிருந்து உறுதியான நடவடிக்கையை மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன், உங்கள் கற்பனைகளை எதிர்பார்க்கவில்லை. அடுத்து, நீங்கள் எனது கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலளிக்க வேண்டும்:

1. நீ உண்மையிலேயே ஓர் ஊழியனாக இருந்தால், உன்னால் எந்தவிதமான தளர்வு அல்லது எதிர்மறையின்மையும் இல்லாமல் எனக்கு விசுவாசமாகச் சேவையை வழங்க முடியுமா?

2. நான் உன்னை ஒருபோதும் பாராட்டுவதில்லை என்பதை நீ அறிந்துகொண்டால், உன்னால் இன்னும் இங்கேயே தங்கியிருந்து ஜீவிதம் முழுமைக்கான சேவையை எனக்கு உன்னால் வழங்க முடியுமா?

3. நீ அதிக முயற்சி செய்யும்போதும் நான் உன்னிடம் கடுமையாக நடந்துகொண்டால், உன்னால் தெளிவற்ற நிலையில் எனக்காகத் தொடர்ந்து பணியாற்ற முடியுமா?

4. நீ எனக்காகச் செலவினங்களைச் செய்தபின்பும், உனது சிறிய கோரிக்கைகளை நான் பூர்த்தி செய்யவில்லை என்றால், நீ அதற்காக சோகமாக ஏமாற்றத்துடன் இருப்பாயா, அல்லது கோபமடைந்து துஷ்பிரயோகம் செய்வாயா?

5. நீ எப்போதுமே மிகவும் விசுவாசமாக இருந்து, என்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தாலும், நீ நோய், வறுமை போன்ற துன்பங்களை அனுபவித்து, உனது நண்பர்கள் மற்றும் உறவினர்களைக் கைவிட்டு, அல்லது ஜீவிதத்தில் வேறு ஏதேனும் துரதிர்ஷ்டங்களை நீ சகித்தால், என்மீதான உனது விசுவாசமும், அன்பும் இன்னும் தொடருமா?

6. உனது இருதயத்தில் நீ கற்பனை செய்த எதுவும் நான் செய்திருப்பதுடன் பொருந்தவில்லை என்றால், நீ உனது எதிர்காலப் பாதையில் எவ்வாறு நடந்துசெல்வாய்?

7. நீ பெற நினைத்த எந்தவொரு பொருளையும் நீ பெறவில்லை என்றால், தொடர்ந்து என்னைப் பின்பற்றுபவனாக உன்னால் இருக்க முடியுமா?

8. எனது கிரியையின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் உன்னால் ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியவில்லை என்றால், தன்னிச்சையாக நியாயத்தீர்ப்புகளை வழங்காத மற்றும் முடிவுகளை எடுக்காத கீழ்ப்படிதலுள்ளவனாக உன்னால் இருக்க முடியுமா?

9. மனுக்குலத்துடன் நான் ஒன்றாக இருந்தபோது நான் சொன்ன எல்லா வார்த்தைகளையும், நான் செய்த எல்லாக் கிரியைகளையும் உன்னால் பொக்கிஷமாக வைத்திருக்க முடியுமா?

10. நீ எதையும் பெறாவிட்டாலும், எனது விசுவாசமுள்ள சீஷனாக, ஜீவிதம் முழுவதும் எனக்காகத் துன்பங்களை அனுபவிக்க நீ தயாராக இருக்கிறாயா?

11. எனக்காக, உன்னால் உனது எதிர்கால உயிர்பிழைக்கும் பாதையைக் கருத்தில்கொள்ளவோ, திட்டமிடவோ அல்லது தயார்படுத்தவோ முடியுமா?

இந்தக் கேள்விகள் உங்களுக்கான எனது இறுதி தேவைகளைக் குறிக்கின்றன, மேலும் உங்கள் அனைவராலும் எனக்குப் பதில்களை வழங்க முடியும் என்று நம்புகிறேன். உன்னிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்விகளில் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களை நீ பூர்த்தி செய்திருந்தால், நீ தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இந்தத் தேவைகளில் ஒன்றைக் கூட உன்னால் நிறைவேற்ற முடியாவிட்டால், நீ நிச்சயமாக நரகத்தில் தள்ளப்படும் மனுஷர் வகையைச் சேர்ந்தவனாகத்தான் இருப்பாய். அத்தகையவர்களுக்கு, நான் மேலும் எதுவும் சொல்லத் தேவையில்லை, ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக என்னுடன் ஒத்துப்போகக்கூடியவர்கள் இல்லை. எந்தவொரு சூழ்நிலையிலும் எனக்குத் துரோகம் செய்யக்கூடிய ஒருவனை நான் எப்படி எனது வீட்டில் வைத்திருக்க முடியும்? பெரும்பாலான சூழ்நிலைகளில் எனக்குத் துரோகம் செய்யக் கூடியவர்களைப் பொறுத்தவரை, மற்ற ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன்பு அவர்களின் செயல்திறனைக் கவனிப்பேன். இருப்பினும், எனக்குத் துரோகம் செய்யும் திறன் கொண்ட அனைவருமே, எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்; நான் அவர்களை எனது இருதயத்தில் நினைவுகொண்டு, அவர்களுடைய பொல்லாத காரியங்களுக்குத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். நான் எழுப்பிய தேவைகள் அனைத்தும் நீங்கள் உங்களுக்குள்ளேயே ஆராய வேண்டிய பிரச்சினைகள் ஆகும். உங்கள் அனைவராலும் அவற்றைத் தீவிரமாகப் பரிசீலிக்க முடியும் என்றும், எனது விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன். எதிர்காலத்தில், எனது தேவைகளுக்கு எதிராக நீங்கள் எனக்கு அளித்த பதில்களை நான் சரிபார்ப்பேன். அந்த நேரத்தில், நான் உங்களிடமிருந்து வேறு எதுவும் எதிர்பார்க்கமாட்டேன், மேலும் அதிக உற்சாகமான அறிவுறுத்தலையும் உங்களுக்கு வழங்க மாட்டேன். அதற்குப் பதிலாக, நான் எனது அதிகாரத்தைப் பயன்படுத்துவேன். வைக்கப்பட வேண்டியவர்கள் வைக்கப்படுவார்கள், வெகுமதி வழங்கப்பட வேண்டியவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும், சாத்தானிடம் ஒப்படைக்கப்பட வேண்டியவர்கள் சாத்தானிடம் ஒப்படைக்கப்படுவார்கள், கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள், அழிந்துபோக வேண்டியவர்கள் அழிக்கப்படுவார்கள். இதனால், எனது நாட்களில் என்னைத் தொந்தரவு செய்ய யாரும் இருக்க மாட்டார்கள். நீ எனது வார்த்தைகளை விசுவாசிக்கிறாயா? நீ பழிவாங்கலை விசுவாசிக்கிறாயா? என்னை ஏமாற்றித் துரோகம் செய்யும் பொல்லாதவர்கள் அனைவரையும் நான் தண்டிப்பேன் என்று நீ விசுவாசிக்கிறாயா? அந்த நாள் விரைவில் வரும் அல்லது அது பின்னர் வரும் என்று நீ நம்புகிறாயா? நீ தண்டனையை எண்ணி பயங்கொள்பவனா, அல்லது தண்டனையைத் தாங்க வேண்டும் என்று தெரிந்தும் என்னை எதிர்க்கிறவனா? அந்த நாள் வரும்போது, நீ உற்சாகத்துக்கும் சிரிப்பிற்கும் மத்தியில் ஜீவித்திருப்பாயா, அல்லது அழுதுகொண்டும் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டும் இருப்பாயா என்று உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? நீ எந்த வகையான முடிவை சந்திக்க விரும்புகிறாய்? நீ என்னை நூறு சதவிகிதம் விசுவாசிக்கிறாயா அல்லது நூறு சதவிகிதம் சந்தேகிக்கிறாயா என்பதை நீ எப்போதாவது தீவிரமாகக் கருத்தில் கொண்டதுண்டா? உனது செயல்களும் நடத்தைகளும் உனக்கு எந்த வகையான விளைவுகளையும் பலன்களையும் ஏற்படுத்தும் என்பதை நீ எப்போதாவது கவனமாகக் கருதியதுண்டா? எனது வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறிவிடும் என்று நீ உண்மையிலேயே நம்புகிறாயா, அல்லது எனது வார்த்தைகள் நிறைவேறிவிடும் என்று நீ பயப்படுகிறாயா? எனது வார்த்தைகளை நிறைவேற்றுவதற்காக நான் விரைவில் புறப்பட்டுச் செல்வேன் என்று நீ நம்பினால், உனது சொந்த வார்த்தைகளையும் செயல்களையும் நீ எவ்வாறு நடத்துவாய்? நான் புறப்பட்டுச் செல்வதை நீ விரும்பவில்லை என்றால், மேலும் எனது வார்த்தைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற வேண்டும் என்று நீ விரும்பவில்லை என்றால், நீ எதற்காக என்னை விசுவாசிக்கிறாய்? நீ எதற்காக என்னைப் பின்பற்றுகிறாய் என்பது உனக்கு உண்மையிலேயே தெரியுமா? உனது காரணமானது உனது எல்லைகளை விரிவுபடுத்துவதாக இருந்தால், நீ உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டிய அவசியமில்லை. நீ ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்பதும், வரவிருக்கும் பேரழிவைத் தவிர்க்க வேண்டும் என்பதும் காரணமாக இருந்தால், உனது சொந்த நடத்தை குறித்து நீ ஏன் கவலைப்படவில்லை? எனது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமா என்று நீ ஏன் உன்னையே கேட்பதில்லை? வரவிருக்கும் ஆசீர்வாதங்களைப் பெற நீ தகுதியுள்ளவனா என்று நீ ஏன் உன்னையே கேட்பதில்லை?

முந்தைய: மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (1)

அடுத்த: உங்களின் செய்கைகளை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக