மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (1)

மிக விரைவில் எனது கிரியை முடிவடையும், மேலும் ஒன்றாக இருந்த பல ஆண்டுகள் தாங்கமுடியாத நினைவாக மாறிவிட்டது. நான் இடைவிடாமல் எனது வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறேன், தொடர்ந்து எனது புதிய கிரியைகளை வெளிப்படுத்தியிருக்கிறேன். நிச்சயமாக, நான் செய்யும் கிரியையின் ஒவ்வொரு சிறு விஷயத்திற்கும் எனது ஆலோசனையானது அவசியமான ஓர் அங்கமாக இருக்கிறது. எனது ஆலோசனையின்றி, நீங்கள் அனைவரும் வழிதப்பி அலைந்து திரிந்து, நீங்களே உங்களை முழுமையாக இழந்துபோனவர்களாக இருப்பதைக் கூட காண்பீர்கள். எனது கிரியையானது இப்போது முடிவடைய இருக்கிறது, அது தன் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. நான் இன்னும் ஆலோசனை வழங்கும் கிரியையைச் செய்ய விரும்புகிறேன், அதாவது, நீங்கள் கேட்கும் விஷயங்களுக்கான அறிவுரைகளை வழங்க விரும்புகிறேன். நான் அனுபவித்த வேதனையை நீங்கள் வீணடிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன், மேலும், நான் எடுத்துள்ள கவனமுள்ள அக்கறையை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்றும், மேலும் மனுஷராக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதன் அஸ்திபாரமாக எனது வார்த்தைகளை நீங்கள் கருதுவீர்கள் என்றும் நான் நம்புகிறேன். அவை நீங்கள் கேட்க விரும்பும் வார்த்தைகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறீர்களோ இல்லையோ, அல்லது அவற்றை அசௌகரியத்துடன் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடிகிறது என்றாலும், நீங்கள் அவற்றைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், உங்கள் சாதாரண மற்றும் அக்கறையற்ற மனநிலைகளும் நடத்தைகளும் என்னைத் தீவிரமாக வருத்தப்படுத்தும், உண்மையில் என்னை வெறுப்புகொள்ள வைக்கும். நீங்கள் அனைவரும் எனது வார்த்தைகளை மீண்டும் மீண்டும்—ஆயிரக்கணக்கான முறை—வாசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், மேலும் நீங்கள் அவற்றை இருதயத்தில் அறிந்து கொள்வீர்கள் என்றும் கூட நான் நம்புகிறேன். இவ்வாறாக மட்டுமே உங்களைப் பற்றிய எனது எதிர்பார்ப்புகளை உங்களால் தோல்வியடையச் செய்ய இயலாது. இருப்பினும், நீங்கள் யாரும் இப்போது இப்படி ஜீவிப்பதில்லை. இதற்கு மாறாக, நீங்கள் அனைவரும் ஒரு மோசமான ஜீவிதத்தில் மூழ்கியிருக்கிறீர்கள், உங்கள் இருதயம் திருப்தியடையும் அளவிற்குப் புசித்துக் குடிக்கும் ஒரு ஜீவிதத்தில் மூழ்கியிருக்கிறீர்கள், மேலும் உங்கள் இருதயத்தையும் ஆத்துமாவையும் வளப்படுத்த நீங்கள் யாரும் என் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. இந்த காரணத்திற்காக, மனுக்குலத்தின் உண்மையான முகம் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன்: மனுஷனால் எந்த நேரத்திலும் எனக்குத் துரோகம் செய்ய முடியும், எனது வார்த்தைகளுக்கு ஒருவராலும் முற்றிலும் விசுவாசமாக இருக்க முடியாது.

“மனுஷனானவன் இனியும் தனது தோற்றத்தைக் கொண்டிராத வகையில் சாத்தானால் மிகவும் சீர்கெடுக்கப்பட்டுவிட்டான்.” பெரும்பான்மையான ஜனங்கள் இப்போது இந்த வாக்கியத்தை ஓரளவிற்கு அங்கீகரிக்கின்றனர். நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், நான் குறிப்பிடும் “அங்கீகாரம்” என்பது மெய்யான அறிவுக்கு மாறாக ஒரு வகையான மேலோட்டமான ஒப்புதலாக மட்டுமே இருக்கிறது. உங்களில் எவராலும் உங்களையே துல்லியமாக மதிப்பீடு செய்யவோ அல்லது உங்களையே முழுமையாக ஆராயவோ முடியாது என்பதால், நீங்கள் எனது வார்த்தைகளுக்கு ஒன்றுக்கும் மேலான அர்த்தத்தைக் கொண்டவர்களாகவே இருக்கிறீர்கள். ஆனால் இந்த நேரத்தில், உங்களுக்குள் இருக்கும் ஒரு மிக மோசமான பிரச்சனையை விளக்க நான் உண்மைகளைப் பயன்படுத்துகிறேன். அந்த பிரச்சினைதான் துரோகம். நீங்கள் அனைவரும் “துரோகம்” என்ற வார்த்தையை நன்கு அறிந்திருக்கிறீர்கள், ஏனென்றால் கணவன் தன் மனைவிக்குத் துரோகம் செய்வது, மனைவி தன் கணவனுக்குத் துரோகம் செய்வது, மகன் தன் தந்தைக்குத் துரோகம் செய்வது, மகள் தன் தாய்க்குத் துரோகம் செய்வது, அடிமை தன் எஜமானனுக்குத் துரோகம் செய்வது, நண்பர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்வது, உறவினர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்வது, விற்பனையாளர்கள் வாங்குபவர்களுக்குத் துரோகம் செய்வது போன்ற இன்னொருவருக்குத் துரோகம் செய்யும் விஷயத்தைப் பெரும்பாலானவர்கள் செய்திருக்கிறார்கள். இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தும் துரோகத்தின் சாராம்சத்தைக் கொண்டுள்ளன. சுருக்கமாக, துரோகம் என்பது ஒரு வாக்குறுதியை மீறும், தார்மீகக் கொள்கைகளை மீறும் அல்லது மனுஷ நெறிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும், மனுஷத்தன்மையின் இழப்பை நிரூபிக்கும் ஒரு நடத்தை ஆகும். பொதுவாக, இந்த உலகில் பிறந்த ஒரு மனுஷனாக, நீ சத்தியத்திற்குத் துரோகம் செய்யும் ஒரு செயலைச் செய்திருப்பாய், நீ வேறொரு நபருக்குத் துரோகம் செய்ததையோ அல்லது இதற்கு முன்பு பல முறை நீ மற்றவர்களுக்குத் துரோகம் செய்ததையோ நினைவில் வைத்திருக்கிறாயா இல்லையா என்பது முக்கியமில்லை. நீ உனது பெற்றோருக்கோ நண்பர்களுக்கோ துரோகம் செய்யும் திறன் கொண்டவன் என்பதால், நீ மற்றவர்களுக்கும் துரோகம் செய்யும் திறன் கொண்டவனாகத்தான் இருக்கிறாய், மேலும் நீ எனக்குத் துரோகம் செய்வதற்கும் நான் வெறுக்கிற காரியங்களைச் செய்வதற்கும் திறன் கொண்டவனாக இருக்கிறாய். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், துரோகம் என்பது வெறும் மேலோட்டமான ஒழுக்கக்கேடான நடத்தை இல்லை, ஆனால் சத்தியத்துடன் முரண்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. இதுவே எனக்கு எதிரான மனுக்குலத்தின் எதிர்ப்பிற்கும் கீழ்ப்படியாமைக்கும் மூல காரணமாக இருக்கிறது. இதனால்தான் நான் அதைப் பின்வரும் அறிக்கையில் சுருக்கமாகக் கூறியிருக்கிறேன்: துரோகம் என்பது மனுஷனின் சுபாவமாக இருக்கிறது, மேலும் இந்தச் சுபாவமானது ஒவ்வொருவனும் என்னுடன் உடன்படுவதற்கான பெரிய சத்துருவாக இருக்கிறது.

துரோகம் என்பது எனக்கு முற்றிலும் கீழ்ப்படிய முடியாத நடத்தையாக இருக்கிறது. துரோகம் என்பது எனக்கு விசுவாசமாக இருக்க முடியாத நடத்தையாக இருக்கிறது. என்னை ஏமாற்றுவதும், என்னை ஏமாற்ற பொய்களைப் பயன்படுத்துவதும் துரோகம்தான். பல கருத்துக்களை வளர்ப்பதும் அவற்றை எல்லா இடங்களுக்கும் பரப்புவதும் துரோகம்தான். எனது சாட்சியங்களையும் விருப்பங்களையும் நிலைநிறுத்த முடியாமல் இருப்பதும் துரோகம்தான். இருதயத்தில் என்னிடமிருந்து தொலைவில் இருக்கும்போது பொய்யாகப் புன்னகைப்பதும் துரோகம்தான். இவை அனைத்துமே உங்களால் எப்போதும் திறமையாகச் செய்யக்கூடிய துரோகச் செயல்கள், மேலும் இவை உங்களிடையே பொதுவானவையாக இருக்கின்றன. உங்களில் யாரும் இதை ஒரு பிரச்சினையாக நினைக்காமல் போகலாம், ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. நீ எனக்குத் துரோகம் செய்வதை ஓர் அற்பமான விஷயமாக என்னால் கருத முடியாது, நிச்சயமாக என்னால் அதைப் புறக்கணிக்கவும் முடியாது. இப்போது, நான் உங்களிடையே கிரியை செய்யும் போது, நீங்கள் இவ்வாறாக நடந்துகொள்கிறீர்கள்—உங்களைக் கவனிக்க யாரும் இல்லாத நாள் ஒன்று வந்தால், தங்களைத் தங்கள் சொந்த சிறிய மலைகளின் ராஜாக்கள் என்று அறிவிக்கும் கொள்ளைக்காரர்களாக நீங்கள் இருக்க மாட்டீர்களா? அவ்வாறு நிகழும்போது நீங்கள் ஒரு பேரழிவை ஏற்படுத்தினால், அவற்றை யார் சுத்தம் செய்ய இருப்பார்கள்? துரோகத்தின் சில செயல்களானது வெறுமனே அவ்வப்போது நடக்கும் சம்பவங்கள்தான் என்றும் அவை உங்கள் தொடர்ச்சியான நடத்தை இல்லை என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள், மேலும் உங்கள் பெருமையைப் புண்படுத்தும் வகையில், இதுபோன்ற தீவிரத்தோடு அந்த விஷயம் விவாதிக்கப்படத் தேவையில்லை என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே அவ்வாறு நினைத்தால், உங்களுக்குப் புத்தி இல்லை என்று அர்த்தம். அவ்வாறு நினைப்பது கலகத்தின் ஒரு மாதிரியாகவும், முன்மாதிரியாகவும் இருக்கிறது. மனுஷனின் சுபாவமானது அவனது ஜீவிதமாக இருக்கிறது; அது அவன் ஜீவிக்க சார்ந்திருக்கும் ஒரு கொள்கையாக இருக்கிறது, அதை அவனால் மாற்ற முடியாது. துரோகச் சுபாவத்தை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள். உன்னால் உனது உறவினர் அல்லது நண்பனுக்குத் துரோகம் செய்ய முடிந்தால், அது உனது ஜீவிதத்தின் ஒரு பகுதிதான் என்பதையும், நீ பிறக்கும்போதே உன்னுடன் பிறந்த உனது சுபாவம்தான் என்பதையும் அது நிரூபிக்கிறது. இது யாராலும் மறுக்க முடியாத ஒன்று. உதாரணமாக, சிலர் மற்றவர்களிடமிருந்து திருடுவதை அனுபவித்து மகிழ்ந்தால், அவர்கள் சில சமயங்களில் மட்டும் திருடினாலும், சில சமயங்களில் திருடாமல் இருந்தாலும் இந்தத் திருடுவதை அனுபவித்து மகிழ்வது என்பது அவர்களின் ஜீவிதத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது என்று அர்த்தம். அவர்கள் திருடினாலும் திருடாவிட்டாலும், அவர்கள் திருடுவது ஒரு வகை நடத்தைதான் என்பதை அதனால் நிரூபிக்க முடியாது. மாறாக, அவர்கள் திருடுவது அவர்களின் ஜீவிதத்தின் ஒரு பகுதி—அதாவது அவர்களின் சுபாவம் தான் என்பதை இது நிரூபிக்கிறது. சிலர் கேட்பார்கள்: அது அவர்களின் சுபாவம் என்பதால், ஏன் அவர்கள் நல்ல திருடக்கூடிய பொருட்களைக் காணும்போது சில சமயங்களில் அவற்றைத் திருடுவதில்லை? பதில் மிகவும் எளிதானது. அவர்கள் திருடாததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. கண்காணிக்கும் கண்களின் பார்வையில் பெரிதாக இருக்கும் பொருட்களைப் பறிப்பது சிரமம் என்பதால், அல்லது திருட சரியான நேரம் கிடைக்கவில்லை என்பதால், அல்லது அதிக விலையுள்ள பொருளாக இருந்து அது கவனமாகப் பாதுகாக்கப்படுவதால், அல்லது ஒருவேளை அவர்களுக்கு அதில் குறிப்பிட்ட ஆர்வம் இல்லை என்பதால், அது அவர்களுக்கு என்ன பயன் தரும் என்று தெரியாமல் இருப்பதால், மற்றும் இன்னும் பல காரணங்களுக்காகக் கூட அவர்கள் திருடாமல் இருக்கலாம். இந்தக் காரணங்கள் அனைத்தும் சாத்தியமானவைதான். ஆனால் எதுவாக இருந்தாலும், அவர்கள் எதையாவது திருடினாலும் திருடாவிட்டாலும், இந்த எண்ணம் தற்காலிகமானதுதான் என்பதையும், விரைவாகக் கடந்து செல்லும் விஷயம்தான் என்பதையும் அதனால் நிரூபிக்க முடியாது. மாறாக, அது அவர்களின் சுபாவத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது, நல்லதுக்காக அதை மாற்றுவது கூட கடினம். அப்படிப்பட்டவர்கள் ஒருமுறை மட்டும் திருடுவதில் திருப்தி அடைவதில்லை; அவர்கள் நல்ல அல்லது பொருத்தமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போதெல்லாம் மற்றவர்களின் உடைமைகளை அவர்கள் சொந்தமாகக் கோருவது போன்ற எண்ணங்கள் எழுகின்றன. அதனால்தான் இந்தச் சிந்தனையின் தோற்றமானது இப்போதெல்லாம் வெறுமனே இப்போதோ அப்போதோ தோன்றுவது இல்லை, ஆனால் அந்த நபரின் சொந்தச் சுபாவத்திலேயே இருக்கிறது என்று நான் சொல்கிறேன்.

எவரும் தங்கள் உண்மையான முகத்தை பிரதிநிதித்துவப்படுத்த தங்கள் சொந்த வார்த்தைகளையும் செயல்களையும் பயன்படுத்தலாம். இந்த உண்மையான முகம் என்பது நிச்சயமாக அவர்களின் சுபாவத்தைத்தான் குறிக்கிறது. நீ வஞ்சகமான முறையில் பேசும் ஒருவன் என்றால், நீ ஒரு வஞ்சக சுபாவத்தைக் கொண்டிருக்கிறாய். உனது சுபாவம் தந்திரமானதாக இருந்தால், நீ ஒரு நயவஞ்சகமான முறையில் செயல்பட்டு, மற்றவர்கள் உன்னால் ஏமாறுவதை நீ மிகவும் எளிதாக்குகிறாய். உனது சுபாவம் கெட்டதாக இருந்தால், உனது வார்த்தைகள் கேட்க இனிமையாக இருந்தாலும் உனது செயல்களால் உனது கெட்ட தந்திரங்களை உன்னால் மறைக்க முடியாது. உனது சுபாவம் சோம்பேறித்தனமானதாக இருந்தால், நீ சொல்வது அனைத்தும் உனது செயலற்ற தன்மை மற்றும் சோம்பேறித்தனத்திற்கான பொறுப்பைக் கைவிடுவதாக இருக்கும், மேலும் உனது நடவடிக்கைகள் மெதுவாகவும், செயலற்றதாகவும், உண்மையை மறைப்பதில் மிகவும் திறமையானதாகவும் இருக்கும். உனது சுபாவம் அனுதாபம் மிக்கதாக இருந்தால், உனது வார்த்தைகள் நியாயமானதாக இருக்கும், மேலும் உங்கள் செயல்களும் சத்தியத்துடன் நன்கு ஒத்துப்போகும். உனது சுபாவம் விசுவாசமானதாக இருந்தால், உனது வார்த்தைகள் நிச்சயமாக நேர்மையானதாக இருக்கும், மேலும் நீ செயல்படும் விதம் பண்புள்ளதாகவும் உனது எஜமானனைக் கவலையடையச் செய்யாததாகவும் இருக்கும். உனது சுபாவமானது சிற்றின்ப வேட்கையோ அல்லது பணத்தாசை கொண்டதாகவோ இருந்தால், உனது இருதயம் பெரும்பாலும் இவற்றால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கும், மேலும் நீ அறியாமலே ஜனங்கள் எளிதாக மறக்க முடியாத, ஜனங்களை வெறுக்க வைக்கும் மாறுபட்ட, ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்வாய். நான் சொன்னது போலவே, நீ துரோகத்தின் தன்மையைக் கொண்டிருந்தால், உன்னால் அதிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்ள முடியாது. நீ மற்றவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை என்றால், உனக்குத் துரோகத்தின் சுபாவம் இல்லை என்று சவால் விட வேண்டாம். நீ அப்படி நினைத்தால், உண்மையிலேயே, நீ கலகம் செய்கிறாய் என்று அர்த்தம். ஒவ்வொரு முறையும் நான் பேசும்போது எனது எல்லா வார்த்தைகளும் ஒரு நபரை அல்லது ஒரு வகையான நபரை மட்டுமல்ல, எல்லா ஜனங்களையும் குறிவைத்துப் பேசப்படுகின்றன. ஒரு விஷயத்தில் நீ எனக்குத் துரோகம் செய்யவில்லை என்பதால், எந்த விஷயத்திலும் நீ எனக்குத் துரோகம் செய்ய மாட்டாய் என்பது நிச்சயமல்ல. சிலர் தங்கள் திருமணத்தில் ஏற்படும் பின்னடைவுகளின் போது சத்தியத்தைத் தேடுவதில் தங்கள் தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். சிலர் குடும்பப் பிரச்சனைகளின் போது என்னிடம் விசுவாசமாக இருக்க வேண்டிய கடமையைக் கைவிடுகிறார்கள். சிலர் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தேடுகையில் என்னைக் கைவிடுகிறார்கள். சிலர் வெளிச்சத்தில் ஜீவித்து பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் மகிழ்ச்சியைப் பெறுவதை விட இருண்ட பள்ளத்தாக்கிலும் விழத் தயாராக இருக்கிறார்கள். சிலர் செல்வத்தின் மீதான சிற்றின்ப வேட்கையைத் திருப்திப்படுத்துவதற்காக நண்பர்களின் ஆலோசனையைப் புறக்கணிக்கிறார்கள், இப்போது கூட தாங்கள் செய்த தவறை ஒப்புக் கொண்டு தங்கள் போக்கை அவர்கள் மாற்றுவதில்லை. சிலர் எனது பாதுகாப்பைப் பெறுவதற்காகத் தற்காலிகமாக மட்டுமே எனது நாமத்தில் ஜீவிக்கிறார்கள், மற்றவர்கள் என்னிடம் வலுக்கட்டாயத்தினால் கொஞ்சமாக மட்டுமே தங்களை அர்ப்பணிக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் ஜீவிதத்தில் ஒட்டிக்கொண்டு, மரணத்திற்கு அஞ்சுபவர்களாக இருக்கிறார்கள். மேலும், இவைகளும் மற்ற ஒழுக்கக்கேடான செயல்களுமான நேர்மையில்லாத நடத்தைகள், ஜனங்கள் நீண்ட காலமாக எனக்குத் தங்கள் இருதயங்களில் ஆழமாகச் செய்த துரோக நடத்தைகள் அல்லவா? நிச்சயமாக, ஜனங்கள் எனக்குத் துரோகம் செய்ய முன்கூட்டியே திட்டமிடுவதில்லை என்பது எனக்குத் தெரியும்; அவர்களின் துரோகமானது அவர்களது சுபாவத்தின் இயல்பான வெளிப்பாடாக இருக்கிறது. யாரும் எனக்குத் துரோகம் செய்ய விரும்புவதில்லை, எனக்குத் துரோகம் செய்யும்படிக்கு அவர்கள் ஏதேனும் செய்திருந்தாலும் அவர்கள் அதை எண்ணி மகிழ்ச்சியாக இருப்பதில்லை. மாறாக, அவர்கள் பயத்தால் நடுங்குகிறார்கள், இல்லையா? எனவே, இந்தத் துரோகங்களை எவ்வாறு மீட்பது, மேலும் தற்போதைய நிலைமையை எவ்வாறு மாற்றுவது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?

முந்தைய: பூமியில் தேவனை அறிந்துகொள்வது எப்படி

அடுத்த: மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (2)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக