ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 29

சகலமும் உயிர்த்தெழுப்பப்பட்ட நாளில், நான் மனுஷனிடையே வந்து, அவனுடன் அற்புதமான பகல்களையும் இரவுகளையும் கழிக்கிறேன். இந்தக் கட்டத்தில் மட்டுமே மனுஷன் எனது அணுகலைக் கொஞ்சம் உணர்கிறான், என்னுடன் அவனுடைய தொடர்பு அடிக்கடி நிகழும்போது, என்னிடம் என்ன இருக்கிறது என்பதையும், நான் என்னவாக இருக்கிறேன் என்பதையும் அவன் காண்கிறான்—இதன் விளைவாக, என்னைப் பற்றிய சில அறிவை அவன் பெறுகிறான். எல்லா ஜனங்களிடையேயும், நான் என் தலையை உயர்த்திப் பார்க்கிறேன், அவர்கள் அனைவரும் என்னைப் பார்க்கிறார்கள். ஆனாலும் உலகிற்குப் பேரழிவு ஏற்படும்போது, அவர்கள் உடனடியாகக் கவலைப்படுகிறார்கள், என் உருவம் அவர்களின் இருதயங்களிலிருந்து மறைகிறது; பேரழிவின் வருகையால் பீதியடையும் அவர்கள், எனது புத்திமதிகளைப் பொருட்படுத்துவதில்லை. நான் மனுஷனிடையே பல வருடங்களைக் கடந்துவிட்டேன், ஆனாலும் அவன் எப்போதும் அறியாமலேயே இருக்கிறான், என்னை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. இன்று இதை நான் என் சொந்த வார்த்தைகளால் அவனிடம் சொல்கிறேன், மேலும் எல்லா ஜனங்களையும் என்னிடமிருந்து எதையாவது பெறும்படி எனக்கு முன்பாக வரச் செய்கிறேன், ஆனால் அவர்கள் இன்னும் என்னிடமிருந்து தூரமாகவே இருக்கிறார்கள், அதனால் அவர்கள் என்னை அறியவில்லை. என் அடிச்சுவடுகள் பிரபஞ்சத்திலும் பூமியின் முனைகளிலும் படும்போது, மனுஷன் தன்னைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவான், எல்லா ஜனங்களும் என்னிடம் வந்து என் முன் தரைமட்டும் குனிந்து, என்னை வணங்குவார்கள். இதுவே நான் மகிமை அடையும் நாளாகவும், நான் திரும்பும் நாளாகவும் மற்றும் நான் புறப்படும் நாளாகவும் இருக்கும். இப்போது, நான் எல்லா மனுஷரிடையேயும் எனது பணியைத் தொடங்கியிருக்கிறேன், எனது நிர்வாகத் திட்டத்தின் நிறைவாகப் பிரபஞ்சம் முழுவதும் நான் முறையாக இறங்கியிருக்கிறேன். இந்தத் தருணத்திலிருந்து, எச்சரிக்கையற்ற எவரும் இரக்கமற்ற சிட்சையின் மத்தியில் மூழ்கடிக்கப்படுவார்கள், இது எந்த நேரத்திலும் நிகழக்கூடும். இது நான் இருதயமற்றவன் என்பதால் அல்ல; மாறாக, இது எனது நிர்வாகத் திட்டத்தின் ஒரு படிநிலை என்பதே ஆகும்; அனைத்தும் எனது திட்டத்தின் படிநிலைகள் படியே தொடர வேண்டும், இதை எந்த மனுஷனாலும் மாற்ற முடியாது. நான் எனது கிரியையை முறையாகத் தொடங்கும்போது, எல்லா ஜனங்களும் நான் நகரும்போது நகர்கிறார்கள், அதாவது பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஜனங்கள் என்னுடன் படிப்படியாகத் தங்களை ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள், பிரபஞ்சம் முழுவதும் “மகிழ்ச்சி” நிறைந்திருக்கிறது, மேலும், மனுஷன் என்னால் முன்னோக்கித் தூண்டப்படுகிறான். இதன் விளைவாக, சிவப்பான பெரிய வலுசர்ப்பம் அதுவாகவே அதனை வெறித்தனமான மற்றும் திகைப்பூட்டும் நிலைக்குத் தள்ளுகிறது, அது என் கிரியைக்கு உதவுகிறது, மேலும், அது விருப்பமில்லாமல் இருந்தாலும், அதன் சொந்த ஆசைகளைப் பின்பற்ற முடியாமல் போகிறது, அதனால் என் கட்டுப்பாட்டுக்குச் சமர்ப்பிப்பதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை. எனது எல்லா திட்டங்களிலும், சிவப்பான பெரிய வலுசர்ப்பம் எனக்கு பிரதிபலிப்புப் படலமாகவும், என் சத்துருவாகவும், என் ஊழியக்காரனாகவும் இருக்கிறது; எனவே, அதற்கான எனது “தேவைகளை” நான் ஒருபோதும் தளர்த்துவதில்லை. எனவே, எனது மனுஷ அவதரிப்பின் கிரியையின் இறுதிக் கட்டம் அதன் வீட்டில் நிறைவடைகிறது. இவ்வழியில், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் எனக்குச் சரியாக சேவையைச் செய்ய முடிகிறது, இதன் மூலம் நான் அதை வென்று எனது திட்டத்தை முடிப்பேன். நான் கிரியை செய்யும் போது, எல்லா தேவதூதர்களும் என்னுடன் தீர்க்கமான யுத்தத்தில் இறங்குகிறார்கள், இறுதிக் கட்டத்தில் என் விருப்பங்களை நிறைவேற்றத் தீர்மானிக்கிறார்கள், இதனால் பூமியிலுள்ள ஜனங்கள் தேவதூதர்களைப் போல எனக்கு முன்பாகக் கீழ்ப்படிகிறார்கள், மேலும் அவர்களுக்கு என்னை எதிர்க்க விருப்பமுமில்லை, எனக்கு எதிராகக் கலகம் செய்யும் எதையும் செய்யவும் மறுக்கிறார்கள். இவையே பிரபஞ்சம் முழுவதும் எனது கிரியையின் இயக்கவியலாக இருக்கிறது.

மனுஷரிடையே நான் வந்ததன் நோக்கமும் அதன் முக்கியத்துவமும் அனைத்து மனுஷரையும் இரட்சிப்பதும், எல்லா மனுஷரையும் மீண்டும் என் வீட்டுக்குக் கொண்டுவருவதும், பரலோகத்தை பூமியுடன் மீண்டும் ஒன்றிணைப்பதும் மற்றும் மனுஷன் பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையிலான “சமிக்ஞைகளை” தெரிவிக்கச் செய்வதற்குமே ஆகும், ஏனெனில் இதுவே மனுஷனின் இயற்கையான செயல்பாடு ஆகும். நான் மனுக்குலத்தை உருவாக்கிய நேரத்தில், மனுக்குலத்திற்காக எல்லாவற்றையும் தயார் செய்திருந்தேன், பின்னர், என் தேவைகளுக்கு ஏற்ப நான் அதற்குக் கொடுத்த செல்வத்தை மனுக்குலம் பெற அனுமதித்தேன். இவ்வாறு, என் வழிகாட்டுதலின் கீழ்தான் எல்லா மனுஷரும் இன்றைய தினத்தை வந்தடைந்திருக்கிறார்கள் என்று நான் சொல்கிறேன். இவை அனைத்தும் எனது திட்டம். எல்லா மனுஷரிடையேயும், எண்ணற்ற ஜனங்கள் என் அன்பான பாதுகாப்பின் கீழ் இருக்கிறார்கள், எண்ணற்ற எண்ணிக்கையிலானவர்கள் என் வெறுப்பின் சிட்சையின் கீழ் வாழ்கிறார்கள். ஜனங்கள் அனைவரும் என்னிடம் ஜெபித்தாலும், அவர்களால் தற்போதைய சூழ்நிலைகளை மாற்ற முடிவதில்லை; அவர்கள் நம்பிக்கையை இழந்தவுடன், இயற்கையை அதன் பாதையில் செல்ல அனுமதிப்பதும், மற்றும் எனக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதை நிறுத்தவும் மட்டுமே அவர்களால் முடியும், ஏனென்றால் மனுஷனால் இவற்றை மட்டுமே நிறைவேற்றிட முடியும். மனுஷனின் வாழ்க்கை நிலையைப் பார்க்கையில், மனுஷன் இன்னும் உண்மையான வாழ்க்கையைக் கண்டுபிடிக்கவில்லை, உலகின் அநீதி, பாழடைந்தத் தன்மை மற்றும் பரிதாபகரமான நிலைமைகளை அவன் இன்னும் காணவில்லை—அதனால், பேரழிவின் வருகைக்காக இல்லாவிடில், அநேக ஜனங்கள் இன்னும் இயற்கை அன்னையைத் தழுவிக் கொண்டுதான் இருந்திருப்பார்கள், இன்னும் “வாழ்க்கையின்” சுவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுதான் இருந்திருப்பார்கள். இதுதான் உலகின் யதார்த்தம் அல்லவா? இது மனுஷனிடம் நான் பேசும் இரட்சிப்பின் சத்தம் அல்லவா? ஏன், மனுஷரிடையே, யாரும் என்னை உண்மையாக நேசிப்பதேயில்லை? சிட்சை மற்றும் சோதனைகளுக்கு மத்தியில் மட்டுமே ஏன் மனுஷன் என்னை நேசிக்கிறான், ஏன் என் பாதுகாப்பில் இருக்கும்போது யாரும் என்னை நேசிப்பதில்லை? நான் என் சிட்சையை மனுக்குலத்திற்கு பல முறை வழங்கியிருக்கிறேன். அவர்கள் அதைப் பார்க்கிறார்கள், ஆனால் பின்னர் அவர்கள் அதைப் புறக்கணிக்கிறார்கள், இந்த நேரத்தில் அவர்கள் அதைப் படித்துச் சிந்திப்பதில்லை, எனவேதான் மனுஷனுக்கு வரும் அனைத்தும் இரக்கமற்ற நியாயத்தீர்ப்பாக இருக்கின்றன. இது எனது கிரியை செய்யும் முறைகளில் ஒன்றாகும், ஆனால் மனுஷனை மாறச் செய்து, அவனை என்னை நேசிக்க வைப்பதற்காகவே இது இன்னும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

நான் ராஜ்யத்தில் ஆட்சி செய்கிறேன், மேலும், முழு பிரபஞ்சத்திலும் நான் ஆட்சி செய்கிறேன்; நான் ராஜ்யத்தின் ராஜாவாகவும் மற்றும் பிரபஞ்சத்தின் தலைவராகவும் இருக்கிறேன். இந்தத் தருணத்திலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லாத அனைவரையும் நான் ஒன்று சேர்த்து, புறஜாதியினரிடையே எனது கிரியையைத் தொடங்குகிறேன், மேலும் எனது நிர்வாக ஆணைகளை முழு பிரபஞ்சத்திற்கும் அறிவிக்கிறேன், இதன்மூலம் எனது கிரியையின் அடுத்தக் கட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ளுவேன். என் கிரியையைப் புறஜாதியினரிடையே பரப்ப நான் சிட்சையைப் பயன்படுத்துவேன், அதாவது புறஜாதியார் அனைவருக்கும் எதிராக நான் பெலத்தைப் பயன்படுத்துவேன். இயற்கையாகவே, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடையே எனது கிரியை செயல்படும் அதே நேரத்தில் இந்தக் கிரியை மேற்கொள்ளப்படும். என் ஜனங்கள் பூமியில் ஆட்சி செய்து அதிகாரம் செலுத்தும்போது, அந்த நாள், பூமியிலுள்ள ஜனங்கள் அனைவரையும் வென்ற நாளாகவும் இருக்கும், மேலும், அது நான் இளைப்பாறும் நேரமாகவும் இருக்கும்—அப்போதுதான் ஜெயங்கொள்ளப்பட்ட அனைவரின் முன்பாகவும் நான் தோன்றுவேன். நான் பரிசுத்த ராஜ்யத்திற்கு முன்பாகத் தோன்றுகிறேன், அதேசமயம் என்னை அசுத்த தேசத்திலிருந்து நானே மறைக்கிறேன். எனக்கு முன்பாக ஜெயங்கொண்டு கீழ்ப்படியும் அனைவராலுமே என் முகத்தை அவர்கள் கண்களால் பார்க்க முடிகிறது, மேலும் என் சத்தத்தை அவர்கள் காதுகளால் கேட்கவும் முடிகிறது. கடைசி நாட்களில் பிறந்தவர்களின் ஆசீர்வாதம் இதுதான், இது என்னால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஆசீர்வாதம், இதனை எந்த மனுஷனாலும் மாற்ற முடியாது. இன்று, எதிர்காலக் கிரியைக்காக நான் இவ்வழியில் கிரியை செய்கிறேன். எனது எல்லாக் கிரியைகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை, அவை அனைத்திலும், ஓர் அழைப்பும் ஒரு பதிலும் உள்ளது: ஒருபோதும் எந்த நடவடிக்கையும் திடீரென நிறுத்தப்படுவதில்லை, வேறு எந்த நடவடிக்கையும் சுயாதீனமாக மேற்கொள்ளப்படுவதும் இல்லை. இது அப்படியாக இல்லையா? கடந்த காலத்தின் கிரியை இன்றைய கிரியைக்கு அஸ்திபாரம் இல்லையா? கடந்த காலத்தின் வார்த்தைகள் இன்றைய வார்த்தைகளுக்கு முன்னோடியாக இல்லையா? கடந்த காலத்தின் படிநிலைகள் இன்றைய படிநிலைகளின் தோற்றம் இல்லையா? நான் சுருளை முறையாகத் திறக்கும்போதுதான், அதாவது பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஜனங்கள் சிட்சிக்கப்படுகையில், உலகெங்கிலும் உள்ள ஜனங்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகையில், அதுவே எனது கிரியையின் உச்சக்கட்டமாக இருக்கிறது; எல்லா ஜனங்களும் வெளிச்சம் இல்லாத தேசத்தில் வாழ்கிறார்கள், எல்லா ஜனங்களும் தங்கள் சூழலால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிருஷ்டிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை மனுஷன் அனுபவிக்காத வாழ்க்கை இது, யுகங்கள் முழுவதும் யாரும் இந்த வகையான வாழ்க்கையை “அனுபவித்ததில்லை”, எனவே இதற்கு முன் செய்திடாத கிரியையை நான் இப்போது செய்திருக்கிறேன் என்று நான் கூறுகிறேன். இதுவே விவகாரங்களின் உண்மையான நிலை, இதுவே அதன் கருப்பொருள். ஏனென்றால், எனது நாள் எல்லா மனுஷரிடமும் நெருங்கி வருகிறது, ஏனென்றால் அது தொலைவில் தோன்றாமல் மனுஷனின் கண்களுக்கு முன்பாகவே தோன்றுகிறது, இதன் விளைவாக யார் பயப்படாமல் இருக்க முடியும்? இதில் யார் மகிழ்ச்சியாக இருக்க முடியாது? அருவருப்பான நகரமான பாபிலோன் கடைசியில் முடிவுக்கு வந்துவிட்டது; மனுஷன் மீண்டும் ஒரு புதிய உலகத்தைச் சந்திக்கிறான், வானமும் பூமியும் மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.

நான் எல்லா தேசங்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாகத் தோன்றும்போது, வெண்மையான மேகங்கள் வானத்தில் கடையப்பட்டு என்னைச் சூழ்ந்து கொள்கின்றன. அவ்வாறே, பூமியிலுள்ள பறவைகள் எனக்காகப் பாடிக்கொண்டே மகிழ்ச்சியுடன் நடனமாடி, பூமியின் சூழ்நிலையை எடுத்துக்காட்டுகின்றன, இனியும் “மெதுவாக கீழ்நோக்கிச் செல்லாமல்”, ஆனால் அதற்குப் பதிலாக உற்சாகமான சூழ்நிலையில் ஜீவித்திருக்கும்படி, பூமியிலுள்ள எல்லாவற்றையும் உயிர்த்தெழச் செய்கின்றன. நான் மேகங்களுக்கிடையில் இருக்கும்போது, மனுஷன் என் முகத்தையும் கண்களையும் மங்கலாகவே உணர்கிறான், மேலும் இந்த நேரத்தில் அவன் கொஞ்சம் பயப்படவும் செய்கிறான். கடந்த காலங்களில், புராணங்களில் என்னைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை அவன் கேள்விப்பட்டிருக்கிறான், இதன் விளைவாக அவன் என் மீது பாதியளவு நம்பிக்கையும், மீதியளவு சந்தேகத்தையும் கொண்டிருக்கிறான். நான் எங்கே இருக்கிறேன், அல்லது என் முகம் எவ்வளவு பெரியது என்று அவனுக்குத் தெரியாது—அது கடல் போன்று அகலமானதா, அல்லது பச்சைப்பசேலாக இருக்கும் மேய்ச்சல் நிலங்களைப் போல எல்லையற்றதா? இந்த விஷயங்கள் யாருக்கும் தெரியாது. இன்று மேகங்களில் மனுஷன் என் முகத்தைப் பார்க்கும்போதுதான், என்னைப் பற்றிய புராணம் உண்மையானது என்று மனுஷன் உணர்கிறான், அதன் காரணமாக அவன் என்னை நோக்கி இன்னும் கொஞ்சம் சாதகமாக வருகிறான், மேலும், என் காரியங்கள் காரணமாகவே என்னைப் பற்றிய அவனுடைய அபிமானம் சற்று அதிகரிக்கிறது. ஆனால் மனுஷன் இன்னும் என்னை அறிந்திருக்கவில்லை, அவன் என்னில் ஒரு பகுதியை மட்டுமே மேகங்களில் காண்கிறான். அதன்பிறகு, நான் என் கைகளை நீட்டி அவற்றை மனுஷனுக்குக் காட்டுகிறேன். மனுஷன் ஆச்சரியப்படுகிறான், என் கைகளால் தாக்கப்படுவோம் என்ற ஆழ்ந்த பயத்தால் அவன் அவனது வாய்க்கு முன்பாக கைதட்டுகிறான், அதன்மூலம் அவன் அவனது போற்றுதலுடன் சிறிது பயபக்தியையும் சேர்க்கிறான். அவன் கவனம் செலுத்தாதபோது என்னால் அவன் தாக்கப்படுவான் என்ற ஆழ்ந்த பயத்தில், மனுஷன் என் ஒவ்வொரு அசைவின் மீதும் தன் கண்களைப் பதிக்கிறான்—ஆனாலும் மனுஷனால் கவனிக்கப்படுவதால் நான் கட்டுப்படுத்தப் படுவதில்லை, நான் தொடர்ந்து என் கரங்களால் கிரியை செய்கிறேன். நான் செய்யும் அனைத்துக் காரியங்களின் நிமித்தமாகத்தான், மனுஷன் என்னிடம் ஒருவித தயவைக் கொண்டிருக்கிறான், இதனால் படிப்படியாக எனக்கு முன்பாக வந்து என்னுடன் கூட்டுறவு கொள்கிறான். நான் முழுவதுமாக மனுஷனுக்கு வெளிப்படும் போது, மனுஷன் என் முகத்தைக் காண்பான், அப்போதிருந்து நான் இனிமேல் மனுஷனிடமிருந்து என்னை மறைத்துக் கொள்ளவோ அல்லது மறைந்து கொள்ளவோ மாட்டேன். பிரபஞ்சம் முழுவதும், ஜனங்கள் அனைவரது முன்பாகவும் நான் பகிரங்கமாகத் தோன்றுவேன், மாம்சமும் இரத்தமும் கொண்ட அனைவரும் என் எல்லாக் காரியங்களையும் காண்பார்கள். ஆவிக்குரியவர்கள் அனைவரும் நிச்சயமாக என் வீட்டில் நிம்மதியாக வாழ்வார்கள், என்னுடன் சேர்ந்து அற்புதமான ஆசீர்வாதங்களை நிச்சயமாக அனுபவிப்பார்கள். நான் அக்கறை கொள்ளும் அனைவரும் சிட்சையிலிருந்து தப்பிப்பார்கள், மேலும் அவர்களை ஆவியின் வேதனையிலிருந்தும் மாம்சத்தின் வியாகுலத்திலிருந்தும் தவிர்ப்பேன். நான் எல்லா ஜனங்களுக்கு முன்பாகவும் பகிரங்கமாகத் தோன்றி, ஆட்சி செய்து, என் அதிகாரத்தைப் பயன்படுத்துவேன், இதனால் சடலங்களின் துர்நாற்றம் இனி பிரபஞ்சத்தில் பரவாது; அதற்கு பதிலாக, என் மிருதுவான நறுமணம் உலகம் முழுவதும் பரவும், ஏனென்றால் எனது நாள் நெருங்கி வருகிறது, மனுஷன் தூக்கத்திலிருந்து விழிக்கிறான், பூமியில் உள்ள அனைத்தும் கிரமமாக இருக்கிறது, பூமியின் உயிர்பிழைக்கும் நாட்கள் இனியும் இருக்கப்போவதில்லை, ஏனென்றால் நான் வந்துவிட்டேன்!

ஏப்ரல் 6, 1992

முந்தைய: ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 26

அடுத்த: விசுவாசிகள் என்ன விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக