விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?

மனிதனிடம் விசுவாசத்தின் நிச்சயமற்ற வார்த்தையே உள்ளது, விசுவாசத்தை எது உருவாக்குகிறது என்றும், அதைவிட அவனுக்கு ஏன் விசுவாசம் இருக்கிறது என்றும் இன்னும் மனிதனுக்குத் தெரியவில்லை. மனிதன் மிகக் குறைவாகவே புரிந்துகொள்ளுகிறான், மற்றும் மனிதன் மிகக் குறைவுள்ளவனாகவும் இருக்கிறான்; என்னிடம் அவனுக்கு விசுவாசம் இருப்பினும், அது அக்கறையற்றதும் அறியாமைகொண்டதுமே ஆகும். விசுவாசம் என்றால் என்னவென்றும், அல்லது அவனுக்கு ஏன் என்னிடம் விசுவாசம் உள்ளது என்றும் தெரியாவிட்டாலும், அவன் தொடர்ந்து விடாப்பிடியான ஒரு வெறியோடு என்னை விசுவாசிக்கிறான். நான் மனிதனிடம் கேட்பது என்னவென்றால் இவ்விதம் வீணாக விடாப்பிடியான வெறியோடு என்னை நோக்கிக் கூப்பிட வேண்டாம் அல்லது முறையற்ற வகையில் என்னில் விசுவாசம் கொள்ள வேண்டாம் என்பதே, ஏனெனில் நான் செய்யும் கிரியை மனிதன் என்னைப் பார்ப்பதற்காகவும் என்னைத் தெரிந்துகொள்ளுவதற்காகவுமே அல்லாமல் என்னால் ஈர்க்கப்பட்டு என்னை ஒரு புதிய வெளிச்சத்தில் காண்பதற்காகவல்ல. நான் ஒருகாலத்தில் அநேக அடையாளங்களையும் அற்புதங்களையும் வெளிப்படுத்தினேன் மேலும் பல அதிசயங்களைச் செய்துகாட்டினேன் மற்றும் அக்காலத்தின் இஸ்ரவேலர்கள் என்னிடம் மாபெரும் அபிமானத்தைக் காட்டினார்கள் மேலும் நோயாளிகளைக் குணப்படுத்தி பிசாசுகளை விரட்டிய என் அசாதாரணமான வல்லமையைப் போற்றிவணங்கினார்கள். அக்காலத்தில், யூதர்கள் என் சுகமளிக்கும் வல்லமை உன்னதமானது, அசாதாரணமானது என்று எண்ணினர்—மற்றும் என்னுடைய பல கிரியைகளின் காரணமாக, அவர்கள் யாவரும் என்னை வணங்கினார்கள், மேலும் என்னுடைய சகல வல்லமைக்காகவும் மிகுந்த அபிமானம் கொண்டார்கள். இவ்வாறு, நான் அதிசயங்களைச் செய்வதைப் பார்த்த பலர் என்னை நெருக்கமாகப் பின்தொடர்ந்தார்கள். நான் நோயாளிகளைக் குணப்படுத்துவதைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்துகொண்டார்கள். நான் பல அடையாளங்களையும் அற்புதங்களையும் வெளிப்படுத்தினேன், இருப்பினும் மக்கள் என்னை ஒரு கைதேர்ந்த வைத்தியர் போல்தான் பார்த்தார்கள்; அவ்வாறே, அக்காலத்தில் நான் மக்களிடம் பல போதனை வார்த்தைகளைப் பேசினேன், இருந்தாலும் அவர்கள் தமது சீடனை விட மேலான ஒரு வெறும் போதகரைப் போன்றே என்னைக் கருதினார்கள். இன்றும், என் கிரியைகளின் வரலாற்று ஆவணங்களை மனிதன் கண்ட பின்னும், நான் நோயாளிகளைக் குணப்படுத்தும் ஒரு பெரும் வைத்தியர் என்றும், அறியாமையில் இருக்கிறவர்களுக்கு ஒரு போதகர் என்றுமே தொடர்ந்து விளக்கம் அளிக்கிறார்கள், மேலும் அவர்கள் என்னை இரக்கமுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று வரையறுத்துள்ளார்கள். வேதவசனங்களை வியாக்கியானம் செய்பவர்கள் குணப்படுத்தலில் என் வல்லமையை விஞ்சியிருக்கலாம், அல்லது தங்கள் போதகரைத் தற்போது விஞ்சியிருக்கும் சீடர்களாகக் கூட இருக்கலாம், ஆயினும் உலகெங்கும் அறியப்பட்ட பெயர்களைக் கொண்ட பெரும் புகழ்பெற்ற இத்தகைய மனிதர்கள், என்னை வெறும் வைத்தியர் என்றே மிகக் கீழாகக் கருதுகின்றனர். என்னுடைய கிரியைகள் கடற்கரை மணலத்தனையாய் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன, என்னுடைய ஞானம் சாலோமனின் குமாரர்கள் எல்லோரையும் விட மிஞ்சியிருக்கிறது, எனினும் மக்கள் என்னை ஒரு சாதாரண வைத்தியர் என்றும் அறியப்படாத மக்களின் போதகர் என்றும் மட்டுமே நினைக்கிறார்கள். நான் அவர்களைக் குணப்படுத்தக் கூடும் என்று மட்டுமே பலர் என்னில் விசுவாசம் வைக்கிறார்கள். தங்கள் உடல்களில் இருந்து அசுத்த ஆவிகளை விரட்ட நான் என் வல்லமையைப் பயன்படுத்துவேன் என்று மட்டுமே பலர் என்னில் விசுவாசம் வைக்கிறார்கள், மேலும் என்னிடம் இருந்து தாங்கள் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றே மிகப் பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். பெரும் பொருட்செல்வங்களை என்னிடம் இருந்து நாடிப் பெறவே பலரும் என்னை விசுவாசிக்கிறார்கள். இந்த வாழ்க்கையை சமாதானத்துடன் கழிக்கவும் இனிவரும் உலகில் பாதுகாப்பாகவும் நல்லவிதமாக இருக்கவுமே பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். நரகத்தின் வேதனைகளைத் தவிர்க்கவும் பரலோகத்தின் ஆசிர்வாதங்களைப் பெறவுமே பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். பலரும் தற்காலிகமான ஆறுதலுக்காகவே என்னை விசுவாசிக்கிறார்களே தவிர இனி வரும் உலகத்தில் எதையும் நாடிப்பெறத் தேடவில்லை. நான் என் கோபத்தை மனிதன் மேல் காட்டி அவன் முன்னர் பெற்றிருந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துக்கொண்ட போது, மனிதன் சந்தேகம் கொண்டவனானான். நரகத்தின் வேதனைகளை அளித்து பரலோகத்தின் ஆசிர்வாதங்களைத் திரும்ப எடுத்துக்கொண்ட போது, மனிதனின் வெட்கம் கோபமாக மாறியது. மனிதன் தன்னைக் குணப்படுத்தும்படி என்னைக் கேட்டபோது, நான் அவனுக்குச் செவிகொடுக்காததோடு அவனிடத்தில் வெறுப்புடையவனானேன்; பதிலாக மனிதன் என்னைவிட்டு விலகி தீய மருந்துகள் மற்றும் சூனிய வழிகளைத் தேடினான். என்னிடத்தில் இருந்து மனிதன் கோரிய அனைத்தையுமே நான் எடுத்துக்கொண்ட போது, ஒரு தடயமும் இன்றி ஒவ்வொருவரும் மறைந்து போயினர். இவ்வாறு, நான் அதிக அளவில் கிருபையை அளிப்பதால் மனிதனுக்கு என்னிடம் விசுவாசம் இருக்கிறது, மேலும் பெற வேண்டியதோ இன்னும் அதிகமாக உள்ளது. என் கிருபைக்காக யூதர்கள் என்னைப் பின்பற்றினார்கள், நான் சென்ற இடம் எல்லாம் என்னைப் பின்தொடர்ந்தார்கள். குறைந்த அறிவும் அனுபவமும் கொண்ட இந்த அறியாமையில் இருக்கும் மனிதர்கள் நான் வெளிக்காட்டிய அடையாளங்களையும் அற்புதங்களையும் மட்டுமே காண விரும்பினார்கள். மாபெரும் அதிசயங்களைக் செய்யக்கூடிய யூத வீட்டாரின் தலைவராகவே அவர்கள் என்னைக் கருதினர். ஆகவே, மேலும் மனிதர்களிடம் இருந்து நான் பிசாசுகளைத் துரத்தியபோது அது அவர்களிடையே அதிக விவாதத்தை எழுப்பியது: நான் எலியா என்றும், நானே மோசே என்றும், நானே எல்லா தீர்க்கதரிசிகளிலும் முந்தியவர் என்றும், எல்லா வைத்தியர்களிலும் நானே பெரியவர் என்றும் அவர்கள் கூறினார்கள். நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன் என்று நானே கூறினேனே அல்லாமல் நான் இருப்பதையோ அல்லது என் அடையாளத்தையோ யாரும் அறிய முடியவில்லை. என் பிதா இருக்கும் இடம் பரலோகம் என்று நான் கூறினேனே தவிர நானே தேவனின் குமாரன் என்றும் நானே தேவன் என்றும் யாரும் அறியவில்லை. எல்லா மனிதகுலத்திற்கும் மீட்பைக் கொண்டுவந்து மனிதகுலத்தை மீட்பேன் என்று நானே கூறினேனே அல்லாமல், மனிதகுலத்தின் மீட்பர் நானே என்று ஒருவரும் அறியவில்லை, மேலும் மனிதன் என்னை ஒரு தயாளமும் இரக்கமும் கொண்ட மனிதர் என்றே அறிந்திருந்தனர். என்னைப் பற்றிய யாவையையும் என்னால் விளக்க முடிந்ததே தவிர, ஒருவரும் என்னை அறியவில்லை, மற்றும் ஒருவரும் நானே ஜீவனுள்ள தேவனின் குமாரன் என்று நம்பவில்லை. இதுவே மக்கள் என்னிடத்தில் வைத்த விசுவாசம், மற்றும் அவர்கள் என்னை முட்டாளாக்க முயற்சிசெய்த விதம். என்னைப் பற்றி இத்தகைய எண்ணம் கொண்டிருக்கும் போது அவர்களால் எனக்கு சாட்சியாக எப்படி இருக்க முடியும்?

மக்கள் என்னை விசுவாசித்தாலும், எனக்கு சாட்சியாக விளங்க அவர்களுக்குத் திறன் இல்லை, அல்லது என்னை நான் தெரியப்படுத்தும் முன் அவர்களால் எனக்காகச் சாட்சி அளிக்க முடியவில்லை. நான் சிருஷ்டிகளையும் எல்லா பரிசுத்த மனிதர்களையும் விஞ்சி இருப்பதை மட்டுமே மக்கள் பார்க்கின்றனர், மேலும் நான் செய்யும் கிரியைகளை மனிதர்களால் செய்ய முடியாது என்றும் பார்க்கிறார்கள். இவ்வாறு, யூதர்களில் இருந்து இந்நாளின் மக்கள் வரை எனது மகத்துவமான கிரியைகளை நோக்கிப் பார்க்கும் அனைவருமே என்னைக் குறித்த ஆர்வத்தால் நிறைந்திருக்கிறார்களே ஒழிய ஓர் ஒற்றைச் சிருஷ்டியின் வாயும் என்னைக் குறித்த சாட்சியைப் பகர முடியவில்லை. எனது பிதா மட்டுமே எனக்குச் சாட்சி அளித்தார், மேலும் அனைத்து சிருஷ்டிகளின் மத்தியிலும் எனக்காக ஒரு பாதையை உருவாக்கியிருக்கிறார்; அவர் அவ்வாறு செய்திருக்கவில்லை எனில், நான் எவ்வாறாகக் கிரியை செய்திருந்தாலும், நானே சிருஷ்டிப்பின் கர்த்தர் என்று மனிதன் ஒருபோதும் அறிந்திருக்க மாட்டான், ஏனெனில் மனிதன் என்னிடம் இருந்து எடுத்துக்கொள்ள மட்டுமே அறிந்திருக்கிறானே தவிர, என்னுடைய கிரியைகளின் நிமித்தம் என்னிடம் விசுவாசம் கொள்ளவில்லை. நான் பரிசுத்தராகவும் எந்த வகையிலும் ஒரு பாவியாக இல்லாமல் இருப்பதாலும், எண்ணற்ற மறைபொருட்களை என்னால் விளக்கமுடியும் என்பதாலும், திரளான மக்களுக்கு மேலானவராக இருப்பதாலும், அல்லது என்னிடம் இருந்து அதிக நன்மைகளைப் பெற்றிருப்பதாலும் மட்டுமே மனிதன் என்னை அறிகிறான், ஆனால் நானே சிருஷ்டி கர்த்தர் என்று ஒரு சிலரே விசுவாசிக்கிறார்கள். இதனால்தான் என் மேல் ஏன் விசுவாசம் வைத்திருக்கிறான் என்று மனிதனுக்குத் தெரியவில்லை என்று நான் கூறுகிறேன்; என்னில் விசுவாசம் வைப்பதன் நோக்கம் அல்லது முக்கியத்துவம் அவனுக்குத் தெரியவில்லை. எனக்குச் சாட்சியாக விளங்க முற்றிலும் தகுதியற்ற அளவுக்கு மனிதனின் உண்மைத்தன்மை குறைவுபட்டதாக உள்ளது. உண்மை விசுவாசம் உங்களிடம் மிகக் குறைவாக உள்ளது, மேலும் நீங்கள் மிகக் குறைவாகவே அடைந்திருக்கிறீர்கள், ஆகவே உங்களிடம் மிகக் குறைந்த அளவே சாட்சி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நீங்கள் மிகக் குறைவாகவே புரிந்து கொள்ளுகிறீர்கள் மற்றும் என்னுடைய கிரியைகளுக்குச் சாட்சியளிக்க ஏறத்தாழ தகுதியற்ற அளவுக்கு அதிகக் குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறீர்கள். உங்கள் மன உறுதி உண்மையில் கருத்தில் எடுத்துக்கொள்ளத்தக்கதாகும், ஆனால் தேவனின் சாராம்சத்தைக் குறித்து வெற்றிகரமாக உங்களால் சாட்சியம் அளிக்க முடியும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? நீங்கள் அனுபவித்ததும் பார்த்ததும் எல்லா காலங்களிலும் இருந்த பரிசுத்தவான்கள் மற்றும் தீர்க்கதரிசிகளை விடவும் மிதமிஞ்சியதாகக் காணப்படுகிறது, ஆனாலும் கடந்த காலத்தின் இந்தப் பரிசுத்தவான்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை விட பெரிய சாட்சியை உங்களால் அளிக்க முடியுமா? இப்போது நான் உங்களுக்கு வழங்குவது மோசேயை மிஞ்சுவதாகவும், தாவீதை ஒளிமங்கச் செய்வதாகவும் உள்ளது, ஆகவே அதுபோல உங்கள் சாட்சியும் மோசேயை மிஞ்சுவதாகவும் உங்கள் வார்த்தைகள் தாவீதுடையதை விடப் பெரியனவாகவும் இருக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். நான் உங்களுக்கு நூறு மடங்காக அளிக்கிறேன்—ஆகவே அதுபோன்றே அவ்வகையிலேயே நீங்கள் எனக்குத் திருப்பியளிக்க வேண்டும் என்று கேட்கிறேன். மனுக்குலத்திற்கு ஜீவனை அருளுவது நான் ஒருவனே என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும், மேலும் நீங்கள்தான் என்னிடம் இருந்து ஜீவனைப் பெறுகிறீர்கள் மற்றும் நீங்கள்தான் எனக்குச் சாட்சிகொடுக்க வேண்டும். இது நான் உங்களிடத்தில் அனுப்பும் உங்கள் கடமையாகும், இதை நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டும். நான் உங்களுக்கு என் சகல மகிமையையும் வழங்கியிருக்கிறேன், தெரிந்துகொள்ளப்பட்ட மக்களான இஸ்ரவேலர்கள் ஒருபோதும் பெறாத ஜீவனை உங்களுக்கு நான் வழங்கியிருக்கிறேன். அந்த உரிமையின் படி, நீங்கள் எனக்குச் சாட்சிகொடுக்க வேண்டும் மற்றும் உங்கள் இளமையை எனக்குச் சமர்ப்பணம் செய்து உங்கள் ஜீவனை அர்ப்பணிக்க வேண்டும். யாருக்கெல்லாம் நான் என் மகிமையை வழங்குகிறேனோ அவர்கள் எனக்காகச் சாட்சிகளாக இருந்து தங்கள் ஜீவனை அர்ப்பணிக்க வேண்டும். இது வெகுகாலத்திற்கு முன்னரே என்னால் முன்குறிக்கப்பட்டுள்ளது. நான் உங்களுக்கு என் மகிமையை வழங்குவது என்பது உங்கள் நல் அதிர்ஷ்டமாகும், மேலும் என் மகிமைக்குச் சாட்சியாக இருப்பது உங்கள் கடமையாகும். ஆசிர்வாதங்களைப் பெறுவதற்காக மட்டுமே என்னை நீங்கள் விசுவாசித்தால், என் கிரியையின் முக்கியத்துவம் குறைந்ததாக இருக்கும், மற்றும் நீங்கள் உங்கள் கடமையை நிறைவு செய்யாதவர்களாக இருப்பீர்கள். இஸ்ரவேலர்கள் என் இரக்கம், அன்பு மற்றும் மகத்துவத்தை மட்டுமே பார்த்தார்கள், மற்றும் யூதர்கள் என் பொறுமை மற்றும் மீட்புக்கு மட்டுமே சாட்சியம் அளித்தார்கள். அவர்கள் தங்களால் புரிந்துகொள்ளத்தக்க அளவுக்கே என் ஆவியின் கிரியைகளின் மிக மிக குறைந்ததையே, ஆனால் நீங்கள் கேட்டு அறிந்தவைகளில் பத்தாயிரத்தில் ஒரு பகுதியையே கண்டார்கள். நீங்கள் கண்டிருப்பவை அவர்கள் நடுவில் இருந்த பிரதான ஆசாரியர்களை விடவும் கூட மிஞ்சுகின்றன. இன்று நீங்கள் புரிந்துகொள்ளும் சத்தியங்கள் அவர்களுடையவற்றை விட அதிகம்; இன்று நீங்கள் கண்டவை, நியாயப்பிரமாணத்தின் காலத்தையும், கிருபையின் காலத்தையும் விடக் கூடுதலானவை, மேலும் நீங்கள் அனுபவித்திருப்பவை மோசேயையும் எலியாவையும் கூட மிஞ்சுகின்றன. ஏனெனில், இஸ்ரவேலர்கள் புரிந்துகொண்டவை யேகோவாவின் நியாயப்பிரமாணங்களை மட்டுமே, மேலும் அவர்கள் கண்டது யேகோவாவின் பின்புறத்தை மட்டுமே; யூதர்கள் புரிந்துகொண்டது இயேசுவின் மீட்பை மட்டுமே, அவர்கள் பெற்றுக்கொண்டது இயேசுவால் அருளப்பட்ட கிருபையை மட்டுமே, மேலும் அவர்கள் கண்டது யூதர்களின் வீட்டுக்குள் இயேசுவின் சாயலை மட்டுமே. இன்று நீங்கள் காண்பது யேகோவாவின் மகிமையை, இயேசுவின் மீட்பை, மற்றும் இந்நாளின் என்னுடைய அனைத்துக் கிரியைகளையும் ஆகும். அவ்வாறே, என் ஆவியின் வார்த்தைகளை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், என்னுடைய ஞானத்தை அறிந்து போற்றியிருக்கிறீர்கள், எனது அதிசயங்களை அறிந்து கொண்டிருக்கிறீர்கள், மற்றும் என் மனநிலையைக் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நான் என் ஆளுகைத் திட்டங்கள் எல்லாவற்றையும் உங்களிடம் கூறியிருக்கிறேன். நீங்கள் கண்டிருப்பது வெறும் ஓர் அன்பான மற்றும் இரக்கமுள்ள தேவனை மட்டுமல்ல, நீதியால் நிரம்பிய ஒரு தேவனையுமே. நீங்கள் என் அற்புதக் கிரியைகளை கண்டிருக்கிறீர்கள் மேலும் நான் மகத்துவத்தாலும் உக்கிரத்தாலும் நிரம்பித் ததும்புவதையும் அறிந்திருக்கிறீர்கள். மேலும், ஒருமுறை இஸ்ரவேலரின் வீட்டுக்குள் என் கடுங்கோபத்தைக் கொண்டு வந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள், மற்றும் அந்த இந்நாள், அது உங்கள் மேல் வந்துவிட்டது. ஏசாயாவையும் யோவானையும் விட அதிகமாகப் பரலோகத்தில் என் இரகசியங்களை நீங்கள் புரிந்துகொள்ளுகிறீர்கள்; என் சௌந்தரியத்தையும் வணங்கத்தக்கத் தன்மையையும் பற்றி கடந்த காலங்களின் பரிசுத்தவான்களை விடவும் நீங்கள் அதிகமாக அறிவீர்கள். நீங்கள் பெற்றுக்கொண்டது வெறும் என் சத்தியத்தையும், என் வழியையும், என் ஜீவனையும், மட்டுமல்லாமல் யோவானின் தரிசனத்தை விடவும் பெரிய ஒரு தரிசனத்தையும் ஒரு வெளிப்பாட்டையும் ஆகும். நீங்கள் இன்னும் பல இரகசியங்களைப் புரிந்துகொள்ளுகிறீர்கள், மற்றும் என் உண்மையான முகத்தோற்றத்தையும் நோக்கிப் பார்த்திருக்கிறீர்கள்; நீங்கள் அதிகமான என் நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்கள் மேலும் என்னுடைய நீதியான மனநிலையைப் பற்றி அதிகமாக அறிந்திருக்கிறீர்கள். ஆகவே, நீங்கள் கடைசி நாட்களில் பிறந்திருந்தாலும், உங்கள் புரிந்துகொள்ளுதல் முந்தியதையும் கடந்தகாலத்தைப் பற்றியதும் ஆகும், மேலும் இன்றைய நாளின் விஷயங்களையும் அனுபவித்திருக்கிறீர்கள், மற்றும் இவை எல்லாம் என்னால் தனிப்பட்ட முறையில் செய்யப்பட்டவை. நான் உங்களிடம் கேட்பது மிகையானது அல்ல, ஏனெனில் நான் உங்களுக்கு அதிகமாக அளித்திருக்கிறேன், மேலும் நீங்கள் என்னில் அதிகமாகக் கண்டிருக்கிறீர்கள். இவ்வாறு, கடந்த காலத்தின் பரிசுத்தவான்களுக்கு எனது சாட்சியாக இருக்கும்படியாக நான் உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன், மற்றும் இதுவே என் இருதயத்தின் ஒரே விருப்பமாகும்.

முதலில் எனக்குச் சாட்சிகொடுத்தவர் என்னுடைய பிதாவாகும், ஆனால் நான் அதிக மகிமையைப் பெற விரும்புகிறேன், ஏனெனில் சிருஷ்டிகளின் வாயில் இருந்து சாட்சியின் வார்த்தைகள் வரவேண்டும்—ஆகவே நீங்கள் உங்கள் கடமைகளை நிறைவேற்றி, மனிதர்களின் மத்தியில் என்னுடைய கிரியைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவர என்னுடைய எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் எதற்காக என்னை விசுவாசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும்; என்னிடம் பணிபயில்பவராக அல்லது என்னுடைய நோயாளியாக இருக்க, அல்லது பரலோகத்தில் இருக்கும் எனது ஒரு பரிசுத்தவானாக மாற மட்டுமே நீங்கள் விரும்பினால், என்னை நீங்கள் பின்தொடருவது அர்த்தமற்றதாக இருக்கும். இவ்வாறு என்னை வெறுமனே பின்பற்றுவது சக்தியை வீணடிக்கும் ஒன்றாகும்; என்னிடத்தில் இத்தகைய விசுவாசம் வைப்பது வெறுமனே உங்கள் நாட்களைப் பொழுதுபோக்கு போல் கடத்துவதும், உங்கள் இளமையை வீணடிப்பதும் ஆகும். மேலும் முடிவில் உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. இது ஒரு வீண் உழைப்பு அல்லவா? நான் யூதர்கள் மத்தியில் இருந்து வெகு காலத்திற்கு முன்னரே புறப்பட்டுவிட்டேன், மேலும் இனிமேலும் நான் மனிதர்களின் ஒரு வைத்தியர் அல்ல அல்லது மனிதருக்கான ஒரு மருந்தும் அல்ல. நான் இனிமேலும் மனிதர்களுக்காகப் பளுவை ஏற்று விரட்டப்படவும் விருப்பப்படி வெட்டப்படுவதற்குமான ஒரு மிருகமும் அல்ல; மாறாக, மனிதன் என்னை அறிந்துகொள்ளும் பொருட்டாகவே மனிதனை நியாயந்தீர்க்கவும் சிட்சிக்கவும் மனிதன் மத்தியில் வந்துள்ளேன். நான் ஒருமுறை மீட்பின் கிரியையைச் செய்தேன் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்; ஒரு சமயத்தில் நான் இயேசுவாக இருந்தேன், ஒரு சமயம் நான் யேகோவாவாக இருந்தேன் ஆனால் பின்னர் இயேசுவானேன், ஆனால் எப்போதும் என்னால் இயேசுவாக இருக்க முடியாது. நான் மனுக்குலத்தின் தேவன், சிருஷ்டிப்பின் கர்த்தர், ஆனால் எப்போதும் இயேசுவாகவோ அல்லது யேகோவாவாக என்னால் இருக்க முடியாது. மனிதன் கருதுகின்ற வைத்தியராக நான் இருந்தேன், ஆனால் தேவன் மனுக்குலத்திற்கு வெறும் வைத்தியரே என்று கூறமுடியாது. ஆகவே, உன்னுடைய விசுவாசத்தில் நீ பழைய பார்வைகளையே வைத்திருந்தால் நீ எதையும் அடைய மாட்டாய். இன்று நீ என்னை எவ்வாறு போற்றினாலும் சரி: “தேவன் மனிதனிடத்தில் எவ்வளவு தூரம் அன்புகூருகிறார்; அவர் என்னைக் குணப்படுத்தி ஆசிர்வாதத்தையும், சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறார். தேவன் மனிதனுக்கு எவ்வளவு நல்லவராக இருக்கிறார்; நாம் அவரிடம் விசுவாசம் உள்ளவர்களாய் இருந்தாலே போதும், அதன்பின் நாம் பணம் மற்றும் சொத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம்….” இன்னும் என்னால் என் மூல கிரியைகளைத் தடுக்க முடியாது. இன்று நீ என்னில் விசுவாசம் கொண்டால், நீ என் மகிமையை மட்டுமே பெறுவாய் மற்றும் எனக்குச் சாட்சி கொடுக்க தகுதியுள்ளவனாவாய், மேலும் மற்றதெல்லாம் இரண்டாம் பட்சமானதாகும். இதை நீ தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

நீ என்னை ஏன் விசுவாசிக்கிறாய் என்று இப்போது உனக்கு உண்மையிலேயே தெரிகிறதா? என் கிரியையின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் நீ உண்மையிலேயே அறிந்துகொள்ளுகிறாயா? உன் கடமைகளை உண்மையிலேயே அறிந்துகொள்ளுகிறாயா? என் சாட்சியை உண்மையிலேயே அறிந்துகொள்கிறாயா? நீ வெறுமனே என்னை விசுவாசித்து, ஆனால் உன்னில் என் மகிமை அல்லது சாட்சியின் அடையாளம் இல்லை எனில், முன்னரே நான் உன்னை புறம்பாக்கிவிட்டேன் என்றாகிறது. இவைகளை எல்லாம் அறிந்தவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் எல்லாம் என் பார்வையில் அதிகமான முட்களே, மற்றும் என் வீட்டில், என் வழிகளில் அவர்கள் தடைகளே அன்றி வேறல்ல, என் கிரியையில் இருந்து முற்றிலுமாகத் தூற்றப்படவேண்டிய பதர்களே, அவர்களால் பயன் இல்லை, அவர்கள் மதிப்பேதும் அற்றவர்கள், நான் அவர்களை நீண்ட காலத்திற்கு முன்னரே வெறுத்துவிட்டேன். சாட்சி இல்லாத எல்லோர் மேலும் அடிக்கடி என் கோபாக்கினை விழுகிறது, மேலும் ஒருபோதும் என் கோல் அவர்களிடம் இருந்து விலகுவதில்லை. நான் அவர்களை நீண்ட காலத்திற்கு முன்னரே தீயவன் கைகளில் அளித்துவிட்டேன்; என் ஆசீர்வாதம் இல்லாமல் அவர்கள் இருக்கிறார்கள். நாள் வரும்போது, புத்தியில்லாத ஸ்திரீகளைவிட இவர்களுக்கான தண்டனை மிகவும் கடினமானதாக இருக்கும். இன்று, எனது கடமையாக இருக்கும் கிரியையை மட்டுமே நான் செய்கிறேன்; கோதுமை அனைத்தையும் அந்தப் பதர்களோடும் கூட நான் கட்டுகளாகக் கட்டுவேன். இன்று என் கிரியை இதுவே. நான் தூற்றும் காலத்தில் அந்தப் பதர்கள் தூற்றப்பட்டு அகற்றப்படும், பின்னர் கோதுமை மணிகள் களஞ்சியத்தில் சேர்க்கப்படும், தூற்றப்பட்ட அந்தப் பதர்கள் அக்கினியின் நடுவில் வைக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்படும். எல்லா மனிதர்களையும் கட்டுகளாகக் கட்டுவது மட்டுமே இப்போதைய என் கிரியையாகும்; அதாவது, அவர்களை முற்றிலுமாக ஜெயங்கொள்ளுவதேயாகும். பின் எல்லா மனிதர்களின் முடிவையும் வெளிப்படுத்தத் தூற்றுதலை நான் தொடங்குவேன். மேலும் நீ என்னை திருப்திப்படுத்துவது எவ்வாறு என்பதை இப்போது தெரிந்துகொள்ள வேண்டும், மற்றும் என்னில் உனக்கிருக்கும் விசுவாசத்தை சரியான பாதையில் அமைக்க வேண்டும். இப்போது உன் உண்மையையும் கீழ்ப்படிதலையும், இப்போது உன் அன்பையும் சாட்சியையும் நான் விரும்புகிறேன். இந்தக் கணத்தில் சாட்சி என்றால் என்ன அல்லது அன்பு என்றால் என்ன என்று உனக்குத் தெரியாவிட்டாலும், நீ உனக்கிருக்கும் எல்லாவற்றையும் என்னிடம் கொண்டுவர வேண்டும், மேலும் உன்னிடம் இருக்கும் ஒரே பொக்கிஷமான உன் உண்மையையும் கீழ்ப்படிதலையும் என்னிடம் அளிக்க வேண்டும். மனிதனை நான் முற்றிலுமாக ஜெயங்கொள்ளுதலின் சாட்சியைப் போலவே, சாத்தானை நான் தோற்கடிப்பதின் சாட்சியும் மனிதனின் உண்மை மற்றும் கீழ்ப்படிதலுக்குள்தான் அடங்கியுள்ளது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். என்னில் நீ வைக்கும் விசுவாசத்தின் கடமை என்னவென்றால் எனக்கு நீ சாட்சி கொடுப்பதும், எனக்கு உண்மையாய் இருப்பதும், மேலும் கடைசிவரை கீழ்ப்படிதலுடன் இருப்பதும் தவிர வேறில்லை. என் கிரியையின் அடுத்த படியை நான் தொடங்கும் முன் எனக்கு நீ எவ்வாறு சாட்சிகொடுப்பாய்? எவ்வாறு நீ எனக்கு உண்மையும் கீழ்ப்படிதலும் உள்ளவனாய் இருப்பாய்? நீ உன் முழு உத்தமத்தையும் உனது பணிக்கு அர்ப்பணிப்பாயா, அல்லது விட்டுவிடுவாயா? எனது ஒவ்வொரு ஏற்பாட்டுக்கும் (மரணமாக அல்லது அழிவாக இருந்தாலும்) ஒப்புக்கொடுப்பாயா அல்லது எனது சிட்சைக்கு விலகி நடுவழியில் ஓடிவிடுவாயா? நீ எனக்குச் சாட்சியாக விளங்க வேண்டும் என்றும், எனக்கு உண்மையோடும் கீழ்ப்படிதலோடும் இருக்க வேண்டும் என்றே நான் உன்னை சிட்சிக்கிறேன். மேலதிகமாக, தற்போதைய சிட்சை என் கிரியையின் அடுத்த படியை அவிழ்க்கவும் கிரியை தடைபடாது நடக்கவுமே ஆகும். எனவே, ஞானம் உள்ளவனாக இருந்து உன்னுடைய ஜீவனையும் வாழ்வின் முக்கியத்துவத்தையும் அற்பமான மணலைப் போன்றது என எண்ணி நடந்துகொள்ளாதே என நான் உனக்குப் புத்தி சொல்லுகிறேன். வரவிருக்கும் என் கிரியை சரியாக என்னவாக இருக்கும் என்று உன்னால் சரியாக அறிய முடியுமா? வரவிருக்கும் நாட்களில் நான் எவ்வாறு கிரியை செய்வேன் என்பதும் எவ்வாறு என் கிரியை கட்டவிழும் என்பதும் உனக்குத் தெரியுமா? என் கிரியையில் உனக்குள்ள அனுபவத்தின் முக்கியத்துவத்தையும் மேலதிகமாக, என்னில் இருக்கும் உன் விசுவாசத்தின் முக்கியத்துவத்தையும் நீ அறிய வேண்டும். நான் மிக அதிகமாக செய்துவிட்டேன்; நீ கற்பனை செய்வதுபோல என்னால் எப்படி பாதியில் விட்டுவிட முடியும்? நான் அப்படிப்பட்ட விசாலமான கிரியையைச் செய்திருக்கிறேன். நான் அதை எவ்வாறு அழிக்க முடியும்? உண்மையில், இந்த யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவே நான் வந்திருக்கிறேன். இது உண்மையே, ஆனால் மேலும் நான் ஒரு புதிய யுகத்தை, புதிய கிரியையைத் தொடங்க வேண்டும் என்பதையும், எல்லாவற்றிற்கும் மேலாக, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்ப வேண்டும் என்பதையும் நீ அறிந்துகொள்ள வேண்டும். தற்போதைய கிரியை ஒரு யுகத்தைத் தொடங்கவும் இனிவரும் காலத்தில் சுவிசேஷத்தைப் பரப்ப ஓர் அடித்தளத்தை அமைக்கவும், எதிர்காலத்தில் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் மட்டுமே என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். என் கிரியை நீ நினைப்பது போல் மிக எளிதானதும் அல்ல, நீ நம்புவது போல மதிப்பற்றதும் அல்லது அர்த்தமற்றதும் அல்ல. ஆகவே, நான் இன்னும் உன்னிடம் கூறவேண்டியது: நீ உன் ஜீவனை என் கிரியைக்கு அளிக்க வேண்டும், மேலும், நீ என் மகிமைக்கு உன்னை அர்ப்பணிக்க வேண்டும். நீண்ட காலமாக நீ எனக்கு சாட்சி கொடுக்க வேண்டும் என நான் ஆவலாய் இருந்தேன், மேலும் இன்னும் அதிகமாக நான் நீ என் சுவிஷேஷத்தைப் பரப்ப வேண்டும் என்று ஏங்கினேன். என் இருதயத்தில் என்ன இருக்கிறது என்று நீ புரிந்துகொள்ள வேண்டும்.

முந்தைய: உண்மையான நபராக இருப்பதன் அர்த்தம் என்ன

அடுத்த: உதிரும் இலைகள் அவற்றின் வேர்களுக்குத் திரும்பும்போது, நீ செய்த அனைத்துத் தீமைகளுக்கும் நீ வருத்தப்படுவாய்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக