Tamil Sermon Series | தேவனோட எல்லா கிரியைகளும் வார்த்தைகளும் வேதாகமத்துல இருக்குதுங்கறது மெய்தானா?

டிசம்பர் 28, 2022

இரட்சகராகிய சர்வவல்லமையுள்ள தேவன் கடைசி நாட்களில் தோன்றி கிரியை செய்து வருகிறார், மேலும் அவர் மில்லியன்கணக்கான வார்த்தைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது வார்த்தைகளின் தொகுப்பான மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பது இணையத்தில் கிடைக்கிறது. இது மத உலகத்தை மட்டுமல்ல, முழு உலகையும் உலுக்கியிருக்கிறது. சத்தியத்தின் மீது தாகமுள்ள அநேகர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் சத்தியமாகவும், தேவனுடைய சத்தமாகவும் இருப்பதைக் கண்டு, அவர் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசு என்பதைக் கண்டுணர்ந்து, தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக வந்திருக்கிறார்கள். ஆனால், சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் சத்தியம் என்றும், அவை வல்லமையுள்ளவை மற்றும் அதிகாரம் கொண்டவை என்றும் மத உலகில் பலர் ஒப்புக்கொண்டாலும், அவர்கள் தேவனுடைய கிரியை மற்றும் வார்த்தைகள் அனைத்தும் வேதாகமத்தில் உள்ளன, அதற்கு வெளியே எதுவும் இல்லை என்று இன்னும் வலியுறுத்துகிறார்கள். சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையும் வார்த்தைகளும் வேதாகமத்துக்கு அப்பாற்பட்டவை என்று அவர்கள் நினைப்பதால், அவர்கள் அதை மறுத்து, கண்டனம் செய்கிறார்கள், அதன் விளைவாக பேரழிவுகளுக்கு முன் கர்த்தரை வரவேற்கும் வாய்ப்பை இழந்து பேரழிவுகளில் விழுகின்றனர். அப்படியென்றால், "தேவனுடைய கிரியை மற்றும் வார்த்தைகள் அனைத்தும் வேதாகமத்தில் உள்ளன, அதற்கு வெளியே எதுவும் காணப்படவில்லை" என்ற இந்த கருத்தில் உண்மையிலேயே என்ன தவறு இருக்கிறது? சத்தியத்தைத் தேடவும், வேதாகமத்தின் உள் சம்பவத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ளவும், பதிலைக் கண்டறியவும் இந்த நிகழ்ச்சி உங்களுக்கு வழிகாட்டும்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க