Tamil Sermon Series | திரித்துவம் என்ற கருத்து நயாயப்படுத்தக் கூடியதா?

டிசம்பர் 12, 2022

கர்த்தராகிய இயேசு தமது மீட்பின் பணியைச் செய்ததில் இருந்து 2000 வருஷங்களாகக் கிறிஸ்தவம் முழுவதும் தேவனைத் "திரித்துவம்" என்று வரையறுத்துள்ளது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று வேதாகமம் குறிப்பிடுவதால், அங்கிருந்து சிலர் வெறுமனே அனுமானத்தின் மூலம், பரிசுத்தமான பிதா, குமாரன், மற்றும் ஆவி ஆகிய மூன்று பகுதிகளும் ஒன்றான மெய்த்தேவனை உருவாக்குகின்றன என்றும், இந்த பகுதிகளில் ஏதாவது ஒன்று இல்லாவிட்டால் அவர்கள் மெய்யான ஒரே தேவன் இல்லை என்றும் நினைத்துக்கொண்டு தேவன் ஒரு திரித்துவம் என்ற முடிவுக்கு வருகின்றனர். நல்லது, திரித்துவம் என்ற இந்தக் கருத்து பகுத்தறிவுக்கு முன் நிலைநிற்குமா? யேகோவா தேவன் ஒன்றான மெய்த்தேவனாக இல்லாமல் இருக்கக்கூடுமோ? அல்லது கர்த்தராகிய இயேசு மெய்யான ஒரே தேவன் இல்லையா, மேலும் பரிசுத்த ஆவியானவரும் கூட இல்லையா? திரித்துவம் என்ற இந்தக் கருத்து உண்மையில் ஒன்றான மெய்த்தேவனை மறுத்து துண்டாடவில்லையா? "மெய்யான விசுவாசத்தைத் தேடுதல்" என்ற இந்த அத்தியாயத்தில் இதைப் பற்றிய சத்தியத்தை நாம் வெளிக்கொணர்வோம். இதன் மூலம் நாம் ஒன்றான மெய்த்தேவனைப் பற்றி கற்றுக்கொள்ளலாம்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க