கோபாக்கினை நாளில் மாம்சமான ஒருவனும் தப்பிக்க முடியாது

என் வார்த்தைகள், அதிகாரம், மகத்துவம் மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றை எல்லா நாடுகள் மற்றும் தேசங்களில் உள்ள மக்களுக்கும் வெளிப்படுத்தும் வண்ணம் எனது ஆரம்பக் கிரியை பிரபஞ்சம் முழுவதிலும் தகுந்தவாறும் பரிபூரணமாகவும் செய்யப்படுவதற்காக என் கிரியை சீராக முன்னேற்றம் அடையும் பொருட்டு இன்று, நான் உங்களது சொந்த உயிர்வாழ்விற்காக உங்களுக்கு புத்திமதி கூறுகிறேன். உங்களுக்கு மத்தியில் நான் செய்யும் கிரியைதான் பிரபஞ்சம் முழுவதிலும் என் கிரியைக்கான ஆரம்பம். ஏற்கெனவே இப்போது கடைசி நாட்களின் காலமாக இருக்கும் போதிலும், “கடைசி நாட்கள்” என்பது ஒரு காலத்தின் பெயர் என்பதை அறிந்துகொள்ளுங்கள்; நியாயப்பிரமாணத்தின் காலம் மற்றும் கிருபையின் காலம் போன்று, அது ஒரு காலத்தைக் குறிக்கிறது, மேலும், இறுதி சில ஆண்டுகள் அல்லது மாதங்கள் என்பதற்கு மாறாக, அது ஒரு முழுமையான காலத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனாலும் கடைசி நாட்கள் கிருபையின் காலத்தையும் நியாயப்பிரமாணத்தின் காலத்தையும் போல் அல்லாமல் முற்றிலும் மாறானவைகளாக இருக்கின்றன. கடைசி நாட்களின் கிரியை இஸ்ரவேலில் அல்ல, புறஜாதியார் மத்தியில் செய்யப்படுகிறது; அது பிரபஞ்சம் முழுவதுமான என் மகிமை பிரபஞ்சத்தையும் ஆகாயவிரிவையும் நிறைக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்குப் புறம்பாக இருக்கும் அனைத்து தேசங்கள் மற்றும் கோத்திரங்கள் மேல் நான் ராஜ்யபாரம் செய்வதற்கு முன்னான என் ஜெயங்கொள்ளுதல் ஆகும். நான் மேலான மகிமையைப் பெறுவதற்காகவும், பூமியின் மேலுள்ள எல்லா சிருஷ்டிகளும் என் மகிமையை ஒவ்வொரு தேசத்துக்கும், என்றென்றும் தலைமுறை தலைமுறையாகவும் கொண்டுசெல்லுவதற்காகவும், நான் பூமியில் பெற்ற சகல மகிமையையும் வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லா சிருஷ்டிகளும் காணத்தக்கதாகவும் அது அவ்வாறாக உள்ளது. கடைசி நாட்களில் செய்யப்படும் கிரியை ஜெயங்கொள்ளுதலின் கிரியை ஆகும். அது உலக மக்கள் அனைவருக்குமான வாழ்க்கைக்கான வழிகாட்டி அல்ல, ஆனால் பூமியில் மனுக்குலத்தின் அழிவில்லாத, ஆயிரமாண்டு கால துன்ப வாழ்க்கையின் முடிவாகும். அதன் விளைவாக, கடைசி நாட்களின் கிரியையானது, இஸ்ரவேலில் நடந்த பல ஆயிரம் ஆண்டுகளின் கிரியையைப் போன்றோ, அல்லது யூதேயாவில் வெறும் பல ஆண்டுகள் நடைபெற்று தேவனின் இரண்டாவது மனுஷ அவதரிப்பு வரை இரண்டாயிரம் ஆண்டுகள் தொடர்ந்த கிரியையைப் போன்றோ இருக்க முடியாது. கடைசி நாட்களின் மக்கள் மாம்சத்தில் மீட்பரின் மறு தோற்றத்தைத்தான் காண்கின்றனர், மேலும் அவர்கள் தேவனின் தனிப்பட்ட கிரியை மற்றும் வார்த்தைகளைப் பெறுகின்றனர். கடைசி நாட்கள் முடிவுக்கு வருவதற்கு முன் இருப்பது இரண்டாயிரம் ஆண்டுகாலமாக இருக்காது, அவை இயேசு யூதேயாவில் நடத்திய கிருபையின் காலக் கிரியையைப் போன்று குறுகியவை. இது ஏன் என்றால், கடைசி நாட்கள் என்பது ஒரு முழு யுகத்தின் முடிவாகும். அவை தேவனின் ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் முழுமையும் முடிவுமாகும் மற்றும் அவை மனுக்குலத்தின் துன்ப வாழ்க்கைப் பயணத்தை முடித்துவைக்கின்றன. அவை ஒட்டுமொத்த மனுக்குலத்தையும் ஒரு புதிய காலத்திற்குள் கொண்டு செல்லவில்லை அல்லது மனுக்குலத்தின் வாழ்க்கை தொடரவும் அனுமதிக்கவில்லை; அது என் நிர்வாகத் திட்டத்துக்கு அல்லது மனிதனின் வாழ்வுக்கு முக்கியத்துவம் கொண்டிருக்காது. மனுக்குலம் இவ்வாறு சென்றுகொண்டிருந்தால், இன்று இல்லாவிட்டலும் ஒருநாள் அவர்கள் பிசாசினால் முழுவதுமாக விழுங்கப்படுவர், மேலும் எனக்குச் சொந்தமான அந்த ஆத்துமாக்கள் இறுதியில் அதன் கரங்களால் பாழாக்கப்படும். என் கிரியைகள் ஆறாயிரம் ஆண்டுகளாக நீடிக்கின்றன, மற்றும் முழு மனுக்குலத்தின் மீது தீயவனின் கட்டுப்பாடும் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு மிகாமல் நீடிக்கும் என நான் உறுதியளிக்கிறேன். ஆகவே, இப்போது நேரம் வந்திருக்கிறது. இனிமேலும் நான் தொடரவும் தாமதிக்கவும் மாட்டேன்: கடைசி காலங்களின் போது நான் சாத்தானை அழிப்பேன், நான் என் மகிமை யாவையும் திரும்பவும் பெறுவேன், எனக்கு உரிமையான அனைத்து ஆத்துமாக்களையும் மீட்டெடுப்பதன் மூலம் அந்தத் துயருற்ற ஆத்துமாக்கள் கடல்போன்ற துன்பத்தில் இருந்து விடுதலை பெறும், மேலும் இவ்வாறு பூமியின் மேல் எனது எல்லா கிரியைகளும் நிறைவடையும். இந்த நாள் முதற்கொண்டு, நான் பூமியில் ஒரு போதும் மாம்சமாக மாட்டேன், மற்றும் எனது அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆவியும் பூமியில் கிரியை செய்யாது. நான் ஒன்றே ஒன்றைத்தான் பூமியில் செய்வேன்: நான் மனுக்குலத்தை மீண்டும் பூமியில் சிருஷ்டிப்பேன், அந்த மனுக்குலம் பரிசுத்தமானதாக இருக்கும் மற்றும் அதுவே பூமியில் என் உண்மையுள்ள நகரமாகவும் இருக்கும். ஆனால் நான் முழு பூமியையும் அழிக்க மாட்டேன் என்பதையும் அல்லது முழு மனுக்குலத்தையும் அழிக்க மாட்டேன் என்பதையும் அறிந்துகொள்ளவும். என்னை நேசிக்கும் மற்றும் என்னால் முற்றிலுமாக ஜெயங்கொள்ளப்பட்ட மூன்றாம் பங்கை—மீந்திருக்கும் மூன்றாம் பங்கை நான் வைப்பேன், மேலும் இந்த மூன்றாம் பங்கை நியாயப்பிரமாணத்தின் கீழ் இஸ்ரவேலர்களைப் போல பூமியில் பலன்தந்து பெருகச்செய்வேன், எண்ணற்ற ஆடுகள் மற்றும் மிருகஜீவன்கள் மற்றும் பூமியின் அனைத்து வளங்களாலும் போஷிப்பேன். இந்த மனுக்குலம் எப்போதும் என்னுடன் இருக்கும், ஆனால் இன்றைய மனுக்குலம் போல் வெறுக்கத்தகும்படி அசுத்தமானதாக இருக்காது, ஆனால் என்னால் ஆதாயப்படுத்தப்பட்ட அனைவரின் சபையாக இருக்கும். இத்தகைய மனுக்குலம் சாத்தானால் சேதமும், தொந்தரவும் அடைவதில்லை அல்லது முற்றுகையிடப்படுவதும் இல்லை, மேலும் நான் சாத்தானை ஜெயங்கொண்ட பின் பூமியில் இருக்கும் ஒரே மனுக்குலமாக இருக்கும். இன்று என்னால் ஜெயங்கொள்ளப்படும் மனுக்குலம் இதுவே மற்றும் அது என் வாக்குத்தத்தத்தை அடைந்துகொண்டது. ஆகவே, கடைசி நாட்களில் ஜெயங்கொள்ளப்படும் மனுக்குலமே தப்பித்துக்கொள்ளும் மற்றும் அது என் நித்திய ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும். அதுவே சாத்தானை நான் மேற்கொண்டதற்கான ஒரே சான்றாதாரம், மேலும் அதுவே சாத்தானோடான என் யுத்தத்தின் அழிவாகும். யுத்தத்தின் இந்த அழிவை சாத்தானின் அதிகார எல்லையில் இருந்து என்னால் இரட்சிக்கப்பட்டது, மற்றும் என் ஆறாயிர ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் ஒரே பலனும் கனியும் ஆகும். அவர்கள் பிரபஞ்சம் எங்கும் உள்ள ஒவ்வொரு தேசத்திலும் பிரிவிலும் இருந்தும், ஒவ்வொரு இடத்திலும் நாட்டிலும் இருந்தும் வருகிறார்கள். அவர்கள் வெவ்வேறு இனத்தினர், வெவ்வேறு மொழிகளும், பழக்கவழக்கங்களும், தோல் நிறமும் கொண்டவர்கள், மற்றும் அவர்கள் உலகின் ஒவ்வொரு தேசத்திலும் பிரிவிலும் மேலும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரந்து இருப்பவர்கள். முடிவில், ஒரு முழுமையான மனுக்குலத்தை உருவாக்க ஒன்றாக வருவார்கள், அது சாத்தானின் படைகள் சென்றடையமுடியாத ஒரு மனிதர்களின் கூட்டமாகும். மனுக்குலத்தின் மத்தியில் என்னால் இரட்சிக்கப்பட்டு ஜெயங்கொள்ளப்படாதவர்கள் கடலின் ஆழத்துக்குள் அமைதியாக அமிழ்ந்து நித்தியமாக என் பட்சிக்கும் அக்கினியால் எரிக்கப்படுவார்கள். ஆட்டுக்குட்டியின் மாம்சம் புசித்து, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைப் பானம்செய்து, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் தங்கள் கதவு நிலைகளை அடையாளப்படுத்திய இஸ்ரவேலர்களை மட்டுமே விட்டுவிட்டு, எகிப்தின் தலைச்சாண் பிள்ளைகளையும் மிருகஜீவன்களையும் நான் அழித்தது போல் இந்தப் பழைய, மிகவும் அசுத்தமான மனுக்குலத்தை அழித்தொழிப்பேன். என்னால் ஜெயங்கொள்ளப்பட்ட மக்களும் என் குடும்பம் ஆனவர்களும்தானே ஆட்டுக்குட்டியாகிய என் மாம்சத்தைப் புசித்து, ஆட்டுக்குட்டியாகிய என் இரத்தத்தைப் பானம்செய்பவர்கள் மற்றும் என்னால் இரட்சிக்கப்பட்டவர்கள் மற்றும் என்னைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அல்லவா? இத்தகைய மக்கள் எப்போதும் என் மகிமையோடு இணைந்திருக்கவில்லையா? ஆட்டுக்குட்டியாகிய மாம்சம் இல்லாமல் இருப்பவர்கள் அமைதியாகக் கடலின் ஆழத்துக்குள் ஏற்கெனவே அமிழ்ந்துவிடவில்லையா? இன்று நீங்கள் என்னை எதிர்க்கிறீர்கள், மேலும் இன்று என்னுடைய வார்த்தைகள் இஸ்ரவேலர்களின் பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும் யேகோவா பேசிய வார்த்தைகள் போல் இருக்கின்றன. இருப்பினும் உங்கள் இருதயங்களின் ஆழத்தில் இருக்கும் கடினம் என் கோபாக்கினையை ஒன்றுதிரட்டி, உங்கள் மாம்சத்தின் மேல் அதிக வேதனையையையும், உங்கள் பாவங்களின் மேல் அதிக நியாயத்தீர்ப்புகளையும் உங்கள் அநீதியின் மேல் கூடுதல் கோபாக்கினையையும் கொண்டு வருகிறது. இன்று நீங்கள் என்னை இந்த விதத்தில் நடத்தும்போது என் கோபாக்கினை நாளில் யார் தப்ப முடியும்? என் தண்டனையின் கண்களில் இருந்து யாருடைய அநீதியால் தப்பிக்க முடியும்? சர்வவல்லவரான என் கரங்களில் இருந்து யாருடைய பாவங்கள் தப்பிக்க முடியும்? சர்வவல்லவரான என் நியாயத்தீர்ப்பில் இருந்து யாருடைய முரட்டாட்டம் தப்பிக்க முடியும்? நான், யேகோவா, புறஜாதியார் குடும்பத்தின் சந்ததியாரான உங்களிடம் இவ்வாறு பேசுகிறேன், மேலும் நான் உங்களிடம் பேசும் இந்த வார்த்தைகள் நியாயப்பிரமாணத்தின் காலத்திலும், கிருபையின் காலத்திலும் கூறப்பட்ட வார்த்தைகளை மிஞ்சுகிறது, ஆனாலும் நீங்கள் எகிப்தின் அனைத்து மக்களையும் விட கடினமானவர்களாக இருக்கிறீர்கள். நான் நிதானமாக என் கிரியையை செய்யும்போது என்னுடைய கோபாக்கினையை நீங்கள் குவித்து வைக்கவில்லையா? சர்வவல்லவரான என் நாளின் போது உங்களால் எவ்வாறு தீங்கின்றித் தப்பித்துக்கொள்ள முடியும்?

உங்கள் மத்தியில் நான் இவ்விதமாய்க் கிரியை செய்து பேசினேன், நான் மிக அதிகமாக ஆற்றலையும் முயற்சியையும் செலவுசெய்தேன், இருப்பினும் நான் உங்களுக்கு வெளிப்படையாகக் கூறியதை எப்போது நீங்கள் செவிகொடுத்துக் கேட்டுள்ளீர்கள்? சர்வவல்லவரான எனக்கு எங்கே நீங்கள் தலைவணங்கினீர்கள்? நீங்கள் ஏன் என்னை இவ்விதமாக நடத்துகிறீர்கள்? நீங்கள் கூறும் மற்றும் செய்யும் எல்லாம் ஏன் என் கோபத்தைக் கிளறுகின்றன? உங்கள் இருதயம் ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது? நான் எப்போதாவது உங்களை விழத்தள்ளி இருக்கிறேனா? என்னைத் துயரமும் விசனமும் அடையச் செய்வதைத் தவிர வேறொன்றையும் நீங்கள் செய்யவில்லையே? யேகோவாவாகிய என் கோபாக்கினையின் நாள் உங்கள் மேல் வரட்டும் என்று நீங்கள் காத்திருக்கிறீர்களா? உங்கள் கீழ்ப்படியாமையால் தூண்டப்படும் கோபத்தை நான் அனுப்புவதற்காக நீங்கள் காத்திருக்கிறீர்களா? நான் செய்யும் ஒவ்வொன்றும் உங்களுக்காக இல்லையா? ஆனால் யேகோவாவான என்னை எப்போதும் நீங்கள் இந்த விதமாகத்தானே நடத்தியிருக்கிறீர்கள்: என் பலிகளைத் திருடி, என் பலிபீடத்தில் இருந்து காணிக்கைகளை எடுத்து ஓநாய்களின் குட்டிகளுக்கும் குட்டிகளின் குட்டிக்கும் உணவளிக்கத்தானே அதன் குகைக்கு எடுத்துச்செல்கிறீர்கள்; கோப முறைப்புடனும், வாள்களோடும், வேல்களோடும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடுகின்றனர், சர்வவல்லவரான என் வார்த்தைகளை மலக்கழிவைப் போல அசுத்தமாக மாற கழிப்பறைக்குள் வீசி எறிகின்றார்கள். உங்கள் நேர்மை எங்கே? உங்கள் மனிதப்பண்பு விலங்குப்பண்பாக மாறிவிட்டது! உங்கள் இருதயங்கள் வெகுகாலத்திற்கு முன்னரே கல்லாக மாறிவிட்டன. சர்வவல்லவரான எனக்கு எதிராக இன்று நீங்கள் செய்யும் தீமைகளை வருகின்ற என் கோபாக்கினை நாளே நான் நியாயம் தீர்க்கும் நாள் என்று உங்களுக்குத் தெரியாதா? என் வார்த்தைகளைச் சேற்றில் வீசிவிட்டு அதற்குச் செவிகொடுக்காது என்னை இவ்விதமாக ஏமாற்றிவிட்டு, இவ்வாறு என் முதுகுக்குப் பின்னால் நடிப்பதன் மூலம் என் உக்கிரத்தின் பார்வையில் இருந்து தப்பித்துவிடலாம் என்று எண்ணுகிறீர்களா? என் பலிகளைத் திருடி என் உடைமைகளை இச்சித்த போதே யேகோவாவாகிய என் கண்கள் உங்களைப் பார்த்துவிட்டதை நீங்கள் அறியவில்லையா? பலிகள் செலுத்தப்பட்ட பலிபீடத்துக்கு முன் என் பலிகளை எப்போது திருடினீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த வகையில் என்னை ஏமாற்ற நீங்கள் போதுமான அளவுக்குப் புத்திசாலிகள் என்று உங்களை நீங்கள் எவ்வாறு நம்ப முடிந்தது? உங்கள் கொடிய பாவங்களை விட்டு என் கோபாக்கினை எவ்வாறு விலக முடியும்? உங்கள் தீய செயல்களைக் கடந்து என் உக்கிர கோபம் எவ்வாறு செல்லும்? இன்று நீங்கள் செய்யும் தீமை உங்களுக்கு ஒரு வெளியேறும் வழியைத் திறக்காது, ஆனால் உங்களது நாளைய தினத்துக்காகத் தண்டனையைக் குவித்து வைக்கும்; அது உங்களுக்கு எதிராக சர்வவல்லவரான என் கடிந்துகொள்ளுதலைத் தூண்டுகிறது. உங்கள் தீய காரியங்களும் தீய வார்த்தைகளும் என் தண்டனையில் இருந்து எவ்வாறு தப்பிக்கும்? உங்கள் ஜெபங்கள் என் செவிகளை எவ்வாறு வந்தடையும்? உங்களை அநீதியில் இருந்து விடுவிக்க ஒரு வழியை எவ்வாறு நான் திறக்க முடியும்? என்னை மீறும் உங்கள் தீய செயல்களை நான் எவ்வாறு விட்டுவிட முடியும்? சர்ப்பத்தைப் போன்று விஷம் நிறைந்த உங்கள் நாவுகளை துண்டிக்காமல் நான் எவ்வாறு இருக்க முடியும்? உங்கள் நீதிக்காக நீங்கள் என்னைக் கூப்பிடவில்லை, ஆனால் பதிலாக உங்கள் அநீதியின் காரணமாக என் கோபாக்கினையைக் குவித்து வைக்கிறீர்கள். உங்களை நான் எவ்வாறு மன்னிக்க முடியும்? சர்வவல்லவரான என் கண்களில் உங்கள் வார்த்தைகளும் செயல்களும் அசுத்தமானவை. சர்வவல்லவராகிய என் கண்கள் உங்கள் அநீதியை இடைவிடாத தண்டனையாகக் காண்கிறது. எனது நீதியான கடிந்துகொள்ளுதலும் நியாயத்தீர்ப்பும் உங்களிடம் இருந்து எவ்வாறு விலக முடியும்? இதை நீங்கள் எனக்குச் செய்து, துன்பமும் கோபமும் உருவாக்குவதால், என் கையில் இருந்து உங்களை நான் எவ்விதம் தப்பவிடவும் யேகோவாவாகிய நான் உங்களை தண்டித்து சபிக்கும் நாளில் இருந்து விலகிச்செல்லவும் விட முடியும்? உங்களது எல்லா தீய சொற்களும் பேச்சுக்களும் என் செவிகளுக்கு ஏற்கெனவே எட்டிவிட்டது உங்களுக்குத் தெரியவில்லையா? உங்கள் அநீதி ஏற்கெனவே நீதி என்னும் என் பரிசுத்த அங்கியை களங்கப்படுத்திவிட்டதை நீங்கள் அறியவில்லையா? உங்கள் கீழ்ப்படியாமை ஏற்கெனவே என் உறுதியான கோபத்தைத் தூண்டிவிட்டுவிட்டதை நீங்கள் அறியவில்லையா? வெகுகாலத்துக்கு முன்னரே நீங்கள் என்னைக் குமுறவைத்ததுடன், வெகுகாலத்திற்கு முன்னரே என் பொறுமையைச் சோதித்து வருவதையும் நீங்கள் அறியவில்லையா? நீங்கள் ஏற்கெனவே என் மாம்சத்தைச் சிதைத்து அதைக் கந்தலாக்கிவிட்டதை நீங்கள் அறியவில்லையா? நான் என் கோபத்தை மட்டுப்படுத்தி இதுவரை பொறுமையாக இருந்தேன், இனிமேலும் உங்களைக் குறித்து நான் பொறுமையாக இருக்க மாட்டேன். நீங்கள் ஆற்றும் தீமைகள் ஏற்கெனவே என் கண்களை எட்டிவிட்டது, மேலும் என்னுடைய கூப்பிடுதல்கள் ஏற்கெனவே என் பிதாவின் காதுகளை எட்டியுள்ளது. நீங்கள் என்னை இவ்வாறு நடத்துவதற்கு அவர் எவ்வாறு அனுமதிக்க முடியும்? நான் உங்களில் செய்யும் எந்த கிரியையாவது உங்கள் பொருட்டானதாக இல்லாமல் இருக்கிறதா? இருப்பினும் யேகோவாவாகிய என் கிரியையை அதிகம் நேசிக்கிறவராக உங்கள் மத்தியில் மாறியிருப்பது யார்? நான் பலவீனமாக இருப்பதாலும் வேதனையை அனுபவித்ததன் காரணமாகவும் என் பிதாவின் சித்தத்துக்கு உண்மை இல்லாதவனாக நான் இருக்க முடியுமா? நீங்கள் என் இருதயத்தைப் புரிந்துகொள்ளவில்லையா? யேகோவா செய்தது போல நான் உங்களிடம் பேசுகிறேன்; உங்களுக்காக நான் அதிகமாக அர்ப்பணித்திருக்கவில்லையா? என் பிதாவின் கிரியைக்காக இந்தத் துன்பங்களை எல்லாம் நான் தாங்கிக்கொள்ள விரும்பினாலும், என் துன்பத்தின் விளைவாக நான் உங்கள் மேல் கொண்டுவரும் தண்டனையில் இருந்து உங்களை எவ்வாறு விடுவிக்க முடியும்? என்னால் நீங்கள் அதிகமாக அனுபவிக்கவில்லையா? இன்று, என் பிதாவால் நான் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளேன்; எனது ஏராளமான வார்த்தைகளைக் காட்டிலும் மிகவும் அதிகமாக நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா? உங்கள் ஜீவனுக்காகவும் நீங்கள் அனுபவிக்கும் விஷயங்களுக்காகவும் என் ஜீவன் பரிமாற்றம் செய்யப்பட்டதை நீங்கள் அறியவில்லையா? என் பிதா என் ஜீவனைப் பயன்படுத்தி சாத்தானோடு யுத்தம் செய்து, உங்களுக்கு என் ஜீவனை வழங்கியதும், அதன் காரணமாக நீங்கள் நூறுமடங்கப் பெறுவதோடு, பல சோதனைகளை நீங்கள் தவிர்க்கவும் அனுமதித்ததை நீங்கள் அறியவில்லையா? என் கிரியையின் மூலமாக மட்டுமே நீங்கள் பல சோதனைகளில் இருந்தும் பல கடுமையான தண்டனைகளில் இருந்தும் விதிவிலக்கு பெற்றீர்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா? என் நிமித்தமாகவே பிதா இதுவரை உங்களை அனுபவித்து மகிழ அனுமதிக்கிறார் என்பதை நீங்கள் அறியவில்லையா? உங்கள் இருதயங்களில் காய்ப்பு உருவாகிவிட்டது போல உங்களால் இன்று கடினமாகவும் பிடிவாதமாகவும் எவ்வாறு இருக்க முடிகிறது. நான் பூமியில் இருந்து சென்ற பின்னர் தொடர்ந்து வரும் கோபாக்கினையின் நாளில் இருந்து நீங்கள் இன்று செய்யும் தீமை எவ்வாறு தப்பும்? மிகவும் கடினமாகவும் பிடிவாதமாகவும் இருப்பவர்களை யேகோவாவின் கோபத்தில் இருந்து எவ்வாறு நான் தப்புவதற்கு அனுமதிப்பேன்?

கடந்த காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்: எப்போது உங்களை நோக்கி என் பார்வை கோபமாகவும், என் குரல் கண்டிப்பாகவும் இருந்தது? அற்ப விஷயங்களைப் பற்றிய பிரச்சினைகளை உங்களிடம் நான் எழுப்பி இருக்கிறேனா? காரணமின்றி எப்போது நான் உங்களைக் கண்டித்துள்ளேன்? முகமுகமாக எப்போது நான் உங்களைக் கண்டித்திருக்கிறேன்? ஒவ்வொரு சோதனைகளில் இருந்தும் உங்களை விலக்கிக் காக்க என் கிரியையின் நிமித்தமாக அல்லவா நான் என் பிதாவைக் கூப்பிட்டேன்? நீங்கள் ஏன் என்னை இவ்வாறு நடத்துகிறீர்கள்? நான் உங்கள் மாம்சத்தை வீழ்த்த எப்போதாவது என் அதிகாரத்தைப் பயன்படுத்தி இருக்கிறேனா? நீங்கள் எனக்கு ஏன் இவ்வாறு திருப்பி அளிக்கிறீர்கள்? என்னைப் பொறுத்த வரையில் சில சமயம் அனலாகவும் சிலசமயம் குளிராகவும் உங்களைக் காட்டிக்கொண்டாலும் நீங்கள் அனலும் இல்லை குளிரும் இல்லாத நிலையில் இருந்து இனிமையாகப் பேசி என்னிடம் இருந்து விஷயங்களை மறைக்கிறீர்கள், மேலும் உங்கள் வாய்நிறைய அநீதியின் எச்சிலே நிறைந்துள்ளது. உங்கள் நாவுகளால் என் ஆவியை ஏமாற்ற முடியும் என்று எண்ணுகிறீர்களா? உங்கள் நாவுகள் என் கோபாக்கினையில் இருந்து தப்ப முடியும் என்று எண்ணுகிறீர்களா? யேகோவாவான என் கிரியைகளின் மேல் உங்கள் நாவுகள் அவைகள் விரும்புகிற படியெல்லாம் நியாயந்தீர்க்க முடியும் என்று எண்ணுகிறீர்களா? மனிதன் நியாயந்தீர்க்கும் தேவனாக நான் இருக்கிறேனா? இவ்வாறு என்னை தேவதூஷணம் கூற ஒரு சிறு முட்டைப்புழுவை என்னால் அனுமதிக்க முடியுமா? என் நித்திய ஆசீர்வாதங்களின் மத்தியில் இத்தகைய கீழ்ப்படியாமையின் பிள்ளைகளை எவ்வாறு நான் வைக்க முடியும்? உங்கள் வார்த்தைகளும் செயல்பாடுகளும் வெகுகாலத்திற்கு முன்னரே வெளிப்படுத்தப்பட்டு கண்டிக்கப்பட்டவை. நான் வானங்களை விரித்து எல்லாவற்றையும் படைத்தபோது, நான் எந்த சிருஷ்டியையும் அவைகள் விரும்பியபடி பங்கேற்க அனுமதிக்கவில்லை, அதுமட்டுமல்லாமல் எதுவும் அதன் இஷ்டப்படி என் கிரியைக்கும் நிர்வாகத்துக்கும் இடையூறு செய்ய அனுமதிக்கவுமில்லை. ஒரு மனிதனை அல்லது பொருளை நான் சகித்துக்கொள்ளவில்லை; என்னிடம் கொடூரமாகவும் மனிதத்தன்மையற்றும் நடந்தவர்களை நான் எப்படி விட்டுவைப்பேன்? என் வார்த்தைகளுக்கு எதிராகக் கலகம் செய்பவர்களை என்னால் எவ்வாறு மன்னிக்க முடியும்? எனக்குக் கீழ்ப்படியாதவர்களை எவ்வாறு நான் தப்பவிட முடியும்? மனிதனின் முடிவு சர்வவல்லவரான என் கையில் இல்லையா? உனது அநீதியையும் கீழ்ப்படியாமையையும் பரிசுத்தமானது என்று நான் எவ்வாறு கருத முடியும்? உன் பாவங்கள் என் பரிசுத்தத்தை எவ்வாறு தீட்டுப்படுத்த முடியும்? அநியாயக்காரனின் அசுத்தத்தால் நான் தீட்டுப்படுவதில்லை, அல்லது அநியாயக்காரனின் காணிக்கைகளில் நான் பிரியப்படுவதும் இல்லை. யேகோவாவான என்னிடம் நீ உண்மையுள்ளவனாக இருந்தால் என் பலிபீடத்தில் இருக்கும் பலிகளை உனக்காக எப்படி உன்னால் எடுத்துக்கொள்ள முடியும்? என் பரிசுத்த நாமத்தை தூஷிக்க உன் விஷம்நிறைந்த நாவைப் பயன்படுத்த முடியுமா? இந்த வகையில் என் வார்த்தைகளுக்கு எதிராக உன்னால் கலகம் செய்ய முடியுமா? என் மகிமையையும் பரிசுத்த நாமத்தையும் ஒரு கருவியாகக் கொண்டு தீயவனான சாத்தானுக்குச் சேவைசெய்ய முடியுமா? பரிசுத்தவான்களின் மகிழ்வுக்காக என் ஜீவன் வழங்கப்பட்டிருக்கிறது. நீ விரும்பும்படி எல்லாம் என் ஜீவனை வைத்து விளையாடவும், அதை உங்கள் நடுவில் சண்டைக்கான கருவியாகப் பயன்படுத்தவும் நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்னைப் பொறுத்தவற்றில் நீங்கள் எவ்வாறு மிகவும் இதயமற்றவர்களாகவும், நன்மையின் வழியில் மிகவும் குறைபாடு கொண்டவர்களாகவும் இருக்கமுடியும்? இந்த ஜீவ வார்த்தைகளில் உங்கள் தீய செயல்களை நான் ஏற்கெனவே எழுதிவிட்டேன் என்பதை நீங்கள் அறியவில்லையா? நான் எகிப்தைத் தண்டிக்கும் கோபாக்கினையின் நாளின் போது நீங்கள் எவ்வாறு தப்பிக்க முடியும்? காலங்காலமாக இந்த விதமாக என்னை நீங்கள் எதிர்த்து மீறுவதை நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்? அந்த நாள் வரும்போது உங்கள் தண்டனை எகிப்தில் நடந்ததை விட சகிக்கமுடியாததாக இருக்கும் என்று நான் உங்களுக்கு வெளிப்படையாகக் கூறுகிறேன். என் கோபாக்கினை நாளில் இருந்து உங்களால் எவ்வாறு தப்பிக்க முடியும்? நான் மெய்யாகவே கூறுகிறேன்: என் பொறுமை உங்கள் தீய செயல்களுக்காக உருவாக்கப்பட்டு அந்த நாளின் தண்டனைக்காக நிலைத்திருக்கிறது. நான் என் பொறுமையின் முடிவை எட்டிவிட்ட பின்னர் கோபாக்கினையான நியாயத்தீர்ப்பால் துன்பம் அடையப்போவது நீங்கள்தாம் அல்லவா? எல்லா விஷயங்களும் சர்வவல்லவராகிய என் கையில் இருக்கவில்லையா? வானங்களின் கீழ் இவ்வாறு எனக்குக் கீழ்ப்படியாமல் இருக்க எவ்வாறு உங்களை நான் அனுமதிக்க முடியும்? அவர் வருவார் ஆனால் ஒருபோதும் வரவில்லை என்று கூறப்பட்ட மேசியாவை நீங்கள் சந்தித்துவிட்ட காரணத்தால் உங்கள் ஜீவன் மிகக் கடினமானதாக இருக்கும். நீங்கள் அவருடைய விரோதிகள் இல்லையா? இயேசு உங்களோடு நட்போடு இருந்தார், ஆனால் நீங்கள்தான் மேசியாவின் எதிரிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் இயேசுவுடன் நட்பாக இருந்தும் உங்கள் தீய செயல்கள் வெறுக்கத்தக்கவர்களாக இருப்பவர்களின் பாத்திரங்களை நிரப்பிவிட்டது என்பதை நீங்கள் அறியவில்லையா? நீங்கள் யேகோவாவுக்கு நெருக்கமானவர்களாக இருந்தும் உங்கள் தீய வார்த்தைகள் யேகோவாவின் காதுகளை எட்டி அவருடைய உக்கிரத்தைத் தூண்டிவிட்டுள்ளதை நீங்கள் அறியீர்களா? அவர் எவ்வாறு உனக்கு நெருக்கமாக இருக்க முடியும், மேலும் தீய செயல்களால் நிரம்பி இருக்கும் உன்னுடைய அந்தப் பாத்திரங்களை அவர் எவ்வாறு எரிக்காமல் இருக்க முடியும்? அவர் எவ்வாறு உன் எதிரியாக இல்லாமல் இருக்க முடியும்?

முந்தைய: உதிரும் இலைகள் அவற்றின் வேர்களுக்குத் திரும்பும்போது, நீ செய்த அனைத்துத் தீமைகளுக்கும் நீ வருத்தப்படுவாய்

அடுத்த: இரட்சகர் ஏற்கனவே ஒரு “வெண் மேகத்தின்” மீது திரும்பியுள்ளார்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக