கற்பனைகளைக் கைக்கொள்ளுதலும் சத்தியத்தைக் கடைப்பிடித்தலும்

நடைமுறையில், கற்பனைகளைக் கைக்கொள்ளுதல் சத்தியத்தின்படி செய்தலோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது ஒருவர் சத்தியத்தின்படி செய்ய வேண்டும். சத்தியத்தின்படி செய்யும்போது ஒருவர் கற்பனைகளின் கொள்கைகளை மீறக் கூடாது அல்லது கற்பனைகளுக்கு எதிராகப் போகக் கூடாது; உன்னிடம் தேவன் எதிர்பார்க்கிற எதுவாயினும் அதையே நீ செய்ய வேண்டும். கற்பனைகளைக் கைக்கொள்ளுவதும் சத்தியத்திபடி செய்வதுவும் ஒன்றுக்கொன்று இணைந்தவை, அவை முரண்பட்டவை அல்ல. அதிக அதிகமாக நீ சத்தியத்தின்படி செய்யும்போது, கற்பனைகளின் சாரத்தை அதிக அதிகமாய்க் கைக்கொள்ளும் திறன் பெற்றவனாய் நீ மாறுவாய். நீ அதிக அதிகமாய்ச் சத்தியத்தின்படி செய்யும்போது, கட்டளைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தேவனுடைய வார்த்தைகளை அதிக அதிகமாய்ப் புரிந்துகொள்வாய். சத்தியத்தின்படி செய்தலும் கட்டளைகளைக் கைக்கொள்ளுவதும் முரண்பட்ட செயல்கள் அல்ல—அவை ஒன்றுக்கொன்று இணைந்துள்ளன. ஆரம்பத்தில், மனுஷன் கட்டளைகளைக் கைக்கொண்ட பிறகே அவனால் சத்தியத்தின்படி செய்து பரிசுத்த ஆவியானவரிடம் இருந்து பிரகாசிப்பித்தலை அடைய முடிந்தது, ஆனால் இது தேவனின் உண்மையான எண்ணம் அல்ல. நீ நல்ல முறையில் நடந்துகொள்ளுவதை மட்டும் அல்ல, அவரை ஆராதிக்க உன் இருதயத்தை ஊற்றவேண்டும் என்றே தேவன் எதிர்பார்க்கிறார். இருப்பினும், நீ கட்டளைகளைக் குறைந்தபட்சம் மேலோட்டமாகவாவது கைக்கொள்ள வேண்டும். படிப்படியாக, அனுபவத்தின் மூலம், தேவனைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலை அடைந்த பின்னர், ஜனங்கள் அவருக்கு எதிராகக் கலகம் செய்வதையும் எதிர்ப்பதையும் நிறுத்துவார்கள், மேலும் அதன் பிறகு அவரது கிரியையைப் பற்றி அவர்களுக்கு எந்த ஒரு சந்தேகமும் இருக்காது. கற்பனைகளின் சாரத்த்திற்கு ஜனங்கள் கட்டுப்பட இதுதான் ஒரே வழி. ஆகையால், சத்தியத்தின்படி செய்யாமல் வெறுமனே கற்பனைகளைக் கைக்கொள்ளுதல் என்பது பலனற்றது, மேலும் அது தேவனை உண்மையாகத் தொழுகொள்ளுவதை உள்ளடக்காது, ஏனெனில் நீ உண்மையான வளர்ச்சியை அடையவில்லை. சத்தியம் இல்லாமல் கற்பனைகளைக் கைக்கொள்ளுவது என்பது விதிகளை விறைப்பாகக் கடைப்பிடிப்பது போன்றதாகும். இப்படிச் செய்யும் போது, கற்பனைகள் உன்னுடைய நியாயப்பிரமாணம் ஆகும், அது நீ ஜீவிதத்தில் வளர உதவாது. மாறாக, அவை உனது பாரமாக மாறும், மேலும் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணங்களைப் போலவே உன்னை இறுக்கமாகக் கட்டும், அதன் விளைவாக நீ பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை இழந்துபோவாய். ஆகவே, சத்தியத்தின்படி செய்தால் மட்டுமே உன்னால் சிறந்த முறையில் கற்பனைகளைக் கைக்கொள்ள முடியும், மேலும் நீ சத்தியத்தின்படி செய்வதற்காகக் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறாய். கற்பனைகளைக் கைக்கொள்ளும் செயல்முறையில், நீ இன்னும் அதிகமாக சத்தியத்தின்படி செய்வாய், மேலும் சத்தியத்தின் படி செய்யும்போது, கற்பனைகளின் உண்மை அர்த்தம் என்னவென்பது பற்றி நீ இன்னும் அதிகமான புரிதலை அடைவாய். மனுஷன் கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று தேவன் வற்புறுத்துவதன் பின்னணியில் இருக்கும் நோக்கமும் அர்த்தமும் என்னவென்றால், அவன் கற்பனை செய்வது போல் அவனை விதிகளைப் பின்பற்ற வைப்பதற்காகவல்ல; மாறாக அது அவன் ஜீவனுக்குள் பிரவேசிப்பதோடு சம்பந்தப்பட்டதாகும். ஜீவிதத்தில் உன் வளர்ச்சியின் அளவானது எவ்வளவு தூரத்துக்கு நீ கற்பனைகளைக் கைக்கொள்ள முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது. கற்பனைகள் மனுஷனால் கைக்கொள்ளப்பட வேண்டியது என்றாலும், மனுஷனின் ஜீவித அனுபவத்தின் வழியாகவே கற்பனைகளின் சாரம் வெளிப்படையாகத் தெரிகிறது. கற்பனைகளைச் சரியாகக் கைக்கொண்டால் அவர்கள் “முற்றிலுமாக தயாராக இருக்கிறார்கள் என்றும் செய்யப்பட வேண்டியதெல்லாம் எடுத்துக்கொள்ளப்படுதல்தான் என்றும்” பெரும்பாலான ஜனங்கள் கருதுகின்றனர். இது நம்பத்தகாத வகையைச் சார்ந்த கருத்து, மேலும் இது தேவனின் சித்தப்படியானதல்ல. இப்படிப்பட்ட விஷயங்களைக் கூறுபவர்கள் முன்னேறுவதற்கு விரும்பவில்லை, மற்றும் அவர்கள் மாம்சத்தை இச்சிக்கிறார்கள். இது முட்டாள்தனமானது! இது எதார்த்தத்தின்படியானது அல்ல! உண்மையாகவே கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் சத்தியத்தின் படி செய்தல் மட்டுமே தேவனின் சித்தமல்ல. இதைச் செய்பவர்கள் முடமானவர்கள்; அவர்கள் ஒரு கால் இல்லாதவர்களைப் போன்றவர்கள். விதிகளைக் கடைப்பிடிப்பதுபோல் வெறுமனே கட்டளைகளைக் கைக்கொள்ளுவது, இருப்பினும் சத்தியம் இல்லாமல் இருப்பது—இதனாலும் தேவ சித்தத்தைத் திருப்திப்படுத்த முடியாது; ஒரு கண் இல்லாதவர்களைப் போல, இப்படிச் செய்யும் ஜனங்களும், ஒரு வகை ஊனம் கொண்டவர்களே. நீ கற்பனைகளைச் சரியாகக் கைக்கொண்டு, நடைமுறை தேவனைப் பற்றிய தெளிவான புரிதலை அடைந்தால், நீ சத்தியத்தைக் கொண்டிருப்பாய் என்று சொல்லலாம்; ஒப்பீட்டளவில் பேசினால், நீ உண்மையான வளர்ச்சியை அடைந்திருப்பாய். நீ செய்யவேண்டிய சத்தியத்தைச் செய்தால், நீ கற்பனையையும் கைக்கொள்வாய், மேலும் இந்த இரு விஷயங்களும் ஒன்றுகொன்று முரண்படுவதில்லை. சத்தியத்தின்படி செய்தலும் கற்பனைகளைக் கைக்கொள்ளுதலும் இரு அமைப்புகள், ஒருவனின் ஜீவித அனுபவத்தில் இரண்டும் முழுமைபெறத் தேவையான பகுதிகள் ஆகும். ஒருவனது அனுபவமானது கற்பனைகளைக் கைக்கொள்ளுதலும் சத்தியத்தைச் செய்தலும் ஆகியவற்றுக்கு இடையில் ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க வேண்டுமே தவிரப் பிரிவினையை அல்ல. இருப்பினும், இந்த இரண்டு விஷயங்களுக்கும் இடையில் வித்தியாசங்களும் இணைப்புகளுமாகிய இரண்டும் இருக்கின்றன.

இந்த நீரோட்டத்தில் இருக்கும் அனைத்து ஜனங்களும், இன்று தேவனுடைய குரலைக் கேட்கும் அனைவரும், ஒரு புதிய காலத்துக்குள் பிரவேசித்துவிட்டனர் என்ற உண்மைக்குப் புதிய காலத்தில் கற்பனைகளின் பிரகடனப்படுத்துதல் ஒரு சாட்சி ஆகும். இது தேவனின் கிரியையில் ஒரு புதிய ஆரம்பம் ஆகும், தேவனின் ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் கடைசிப் பாகத்தின் தொடக்கமும் ஆகும். ஒரு புதிய வானமும் ஒரு புதிய பூமியும் கொண்ட ராஜ்யத்துக்குள் தேவனும் மனிதனும் பிரவேசித்ததைப் புதிய காலத்தின் கற்பனைகள் குறிக்கின்றன, மேலும், யேகோவா இஸ்ரவேலர்கள் மத்தியில் கிரியை செய்தது போலவும், இயேசு யூதர்களின் மத்தியில் கிரியை செய்தது போலவும், தேவன் அதிகமான நடைமுறைக் கிரியைகளைச் செய்வார், மேலும் பூமியில் இன்னும் அதிகமான மற்றும் இன்னும் பெரிய கிரியையைச் செய்வார் என்பதையும் குறிக்கின்றன. ஜனங்களின் இந்தக் குழுவினர் தேவனிடம் இருந்து அதிகமான பெரிய கட்டளைகளைப் பெறுவார்கள், மற்றும் தேவைகளைப் பெறுவார்கள், போஷிக்கப்படுவார்கள், ஆதரிக்கப்படுவார்கள், பராமரிக்கப்படுவார்கள், மற்றும் ஒரு நடைமுறைக்கு உகந்த வகையில் அவரால் பாதுகாக்கப்படுவார்கள், அவரால் இன்னும் அதிகமான நடைமுறைப் பயிற்சியைப் பெறுவார்கள் மற்றும் கையாளப்படுவார்கள், உடைக்கப்படுவார்கள் மற்றும் தேவனுடைய வார்த்தையால் புடமிடப்படுவார்கள் என்பதையும் அவை குறிக்கிகின்றன. புதிய காலத்தின் கற்பனைகளின் முக்கியத்துவம் மிகவும் ஆழமானது. தேவன் உண்மையிலேயே பூமியில் தோன்றுவார் என்றும், அங்கிருந்து அவர் முழு பிரபஞ்சத்தையும் ஜெயங்கொண்டு, மாம்சத்தில் தமது எல்லா மகிமையையும் வெளிப்படுத்துவார் என்றும் அவை குறிப்பிடுகின்றன. தம்மால் தெரிந்தெடுக்கப்பட்ட அனைவரையும் பரிபூரணப்படுத்துவதற்காக நடைமுறை தேவன் பூமியிலே நடைமுறைக் கிரியையை செய்யப் போகிறார் என்றும் அவை குறிப்பிடுகின்றன. மேலும், பூமியில் தேவன் எல்லாவற்றையும் தம் வார்த்தைகளைக் கொண்டு நிறைவேற்றுவார் மற்றும் “மனுவுருவான தேவன் உன்னதத்துக்கு எழுந்தருளுவார் மேலும் மகிமைப்படுத்தப்படுவார், மற்றும் மகாபெரியவரான அவருக்கு முன்பு எல்லா ஜாதிகளும் வந்து முழங்காலிட்டுப் பணிந்து தேவனைத் தொழுதுகொள்ளுவார்கள்” என்ற ஆணையை வெளிப்படுத்துவார். புதிய காலத்தின் கற்பனைகள் மனுஷன் கைக்கொள்வதற்காக என்றாலும், மற்றும் அப்படிச் செய்வது மனுஷனின் கடமையும் கடப்பாடுமாக இருந்தாலும், அவை குறிக்கும் அர்த்தம் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் ஆழமானது ஆகும். புதிய காலத்தின் கற்பனைகள், யேகோவாவாலும் இயேசுவாலும் பிரகடனப்படுத்தப்பட்ட பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணங்களையும் புதிய ஏற்பாட்டின் கட்டளைகளையும் பதிலீடு செய்கின்றன. இது ஜனங்கள் கற்பனை செய்யும் அளவுக்கு எளிமையான விஷயம் அல்ல, ஒரு மிக ஆழமான பாடமாகும். புதிய காலத்தின் கற்பனைகளுக்கு நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அம்சம் இருக்கிறது: அவை கிருபையின் காலத்துக்கும் ராஜ்யத்தின் காலத்துக்கும் இடையில் ஓர் இடைமுகமாகச் செயல்படுகிறது. புதிய காலத்தின் கற்பனைகள் பழைய காலத்தின் எல்லா நடைமுறைகளையும் கட்டளைகளையும் மட்டுமல்லாமல், இயேசுவின் காலம் மற்றும் அதற்கு முந்தியவைகளில் இருந்து எல்லா நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவரும். நடைமுறை தேவனுக்கு முன்பாக அவை மனுஷனைக் கொண்டுவரும். அவரால் தனிப்பட்ட முறையில் பரிபூரணப்படுத்தப்படத் தொடங்கும்படி அவன் அனுமதிக்கப்படுவான்; அவையே பரிபூரணத்தின் பாதைக்கு ஆரம்பமாக இருக்கின்றன. இப்படி, புதிய காலத்தின் கட்டளைகளைப் பொறுத்து, நீங்கள் ஒரு சரியான மனப்பாங்கைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் அவற்றை ஏனோதானோவென்று பின்பற்றவோ அல்லது வெறுக்கவோ கூடாது. புதிய காலத்தின் கட்டளைகள் ஒரு குறிப்பிட்ட கருத்தை மிகவும் வலியுறுத்துகின்றன: மனுஷன் இன்றைய நடைமுறை தேவன் தம்மையே தொழுதுகொள்ள வேண்டும். இதில் மிகவும் நடைமுறைக்கு ஏற்ற வகையில் ஆவியின் சாராம்சத்துக்கு கீழ்ப்படிவது அடங்கும். தேவன் நீதியின் சூரியனாக வெளிப்பட்ட பின்னர் அவர் மனுஷனை குற்றவாளியாகவோ அல்லது நீதிமானாகவோ நியாயந்தீர்க்கும் கொள்கையையும் இந்தக் கட்டளைகள் வலியுறுத்துகின்றன. நடைமுறைப்படுத்துவதை விடவும் இந்தக் கட்டளைகள் புரிந்துகொள்ள எளிதானவை ஆகும். தேவன் மனுஷனைப் பரிபூரணப்படுத்த விரும்பினால், அவர் தமது சொந்த வார்த்தைகளாலும் வழிகாட்டுதலாலும் அவ்வாறு செய்ய வேண்டும் மற்றும் மனுஷன் தனது சொந்த உள்ளார்ந்த அறிவினால் மட்டும் பரிபூரணத்தை அடைய முடியாது என்பதை இதில் இருந்து காண முடியும். மனுஷன் புதிய காலத்தின் கட்டளைகளைக் கைக்கொள்ள முடிவதும் முடியாமல் போவதும் அவனது நடைமுறை தேவனைப் பற்றிய அறிவைப் பொறுத்ததாகும். ஆகவே, உன்னால் கட்டளைகளைக் கைக்கொள்ள முடியுமா அல்லது முடியாதா என்பது சில நாட்களிலேயே தீர்க்க முடிந்த கேள்வியல்ல. இது கற்றுக்கொள்ள வேண்டிய மிக ஆழமான பாடமாகும்.

சத்தியத்தின்படி செய்வது என்பது மனிதனின் வாழ்க்கை வளர்ச்சியடையக் கூடிய ஒரு பாதையாகும். நீங்கள் சத்தியத்தின்படி செய்யாவிட்டால் அதன் பின் உங்களிடம் கொள்கை மட்டுமே எஞ்சி இருக்கும் மேலும் உண்மையான ஜீவிதம் இருக்காது. மனித வளர்ச்சிக்கான ஒரு குறியீடு சத்தியம். நீ சத்தியத்தின்படி செய்கிறாயா இல்லையா என்பது உனக்கு உண்மையான வளர்ச்சி இருக்கிதா இல்லையா என்பதுடன் தொடர்புடையதாகும். நீ சத்தியத்தின்படி செய்யவில்லை என்றால், நீதியின்படி நடக்கவில்லை என்றால், அல்லது உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டு உன் மாம்சத்தைப் பற்றி மட்டுமே கவனம்செலுத்தினால், அப்போது கற்பனைகளைக் கைக்கொள்வதிலிருந்து நீ மிகவும் தூரம் இருக்கிறாய். இதுவே பாடங்களில் மிகவும் ஆழமானது. ஒவ்வொரு காலத்திலும், ஜனங்கள் பிரவேசிக்கவும் புரிந்துகொள்ளவும் பல சத்தியங்கள் உள்ளன, ஆனால் ஒவ்வொரு காலத்திலும் அந்தச் சத்தியங்களோடு கூட சேர்ந்து பல்வேறு கற்பனைகளும் உள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்தோடு சம்பந்தப்பட்ட சத்தியங்களையே ஜனங்கள் கடைப்பிடிக்கிறார்கள் மற்றும் அவர்கள் கைக்கொள்ளும் கற்பனைகளும் அவ்வாறானதே. ஒவ்வொரு காலங்களும் தனக்குரிய கடைப்பிடிக்கவேண்டிய சத்தியங்களையும் கைக்கொள்ள வேண்டிய கற்பனைகளையும் கொண்டிருக்கின்றன. இருப்பினும், தேவனால் பிரகடனப்படுத்தப்பட்ட பல்வேறு கற்பனைகளைப் பொறுத்து—அதாவது, வெவ்வேறு காலங்களைப் பொறுத்து—சத்தியத்தை மனுஷன் கைக்கொள்ளுவதன் இலக்கும் விளைவும் மாறுபடும். கற்பனைகள் சத்தியத்துக்கு ஊழியம் செய்கின்றன, மேலும் கற்பனைகளைப் பராமரிக்க சத்தியம் இருக்கின்றது எனச் சொல்லலாம். சத்தியம் மட்டுமே இருக்குமென்றால், சொல்லும்படியாக தேவனின் கிரியையில் மாற்றங்கள் இருக்காது. இருப்பினும், கற்பனைகளைக் குறிப்பிடுவதன் மூலம், பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் இருக்கும் போக்குகளின் அளவை மனுஷனால் அடையாளம் காணமுடியும், மற்றும் தேவன் கிரியை செய்யும் காலத்தையும் மனிதனால் அறிய முடியும். நியாயப்பிரமாணத்தின் காலத்தில் ஜனங்களால் கைக்கொள்ளப்பட்ட சத்தியங்களின்படி செய்யும் ஜனங்கள் மதத்தில் பலர் இருக்கின்றனர். இருப்பினும், அவர்கள் புதிய காலத்தின் கட்டளைகளைக் கொண்டிருக்கவில்லை, அல்லது அவர்களால் அதைக் கைக்கொள்ளவும் முடியாது. அவர்கள் இன்னும் பழைய வழிகளையே கடைப்பிடித்து ஆதி மனிதர்களாகவே இருக்கின்றனர். அவர்களிடம் கிரியையின் புதிய முறைகள் இல்லை மற்றும் புதிய காலத்தின் கட்டளைகளைக் காண முடியாது. அதனால், தேவனுடைய கிரியை அவர்களிடம் இல்லை. அவர்களிடம் காலியான முட்டைத் தோடு இருப்பது போன்றிருக்கிறது; உள்ளே குஞ்சு இல்லை என்றால், ஆவியும் இல்லை. இன்னும் துல்லியமாகக் கூறுவது என்றால், அவர்களிடம் ஜீவன் இல்லை என்று அர்த்தம். இத்தகைய ஜனங்கள் இன்னும் புதிய காலத்துக்குள் பிரவேசிக்கவில்லை, மேலும் பல அடிகள் அவர்கள் பின்தங்கிவிட்டார்கள். ஆகையால், பழைய காலங்களில் இருந்து சத்தியங்களைக் கொண்டிருந்தும் புதிய காலத்தின் கட்டளைகளைக் கொண்டிராவிட்டால் அது பயனற்றது. உங்களில் பலர் இன்றைய சத்தியங்களின் படி செய்கிறீர்கள் ஆனால் அதன் கற்பனைகளைக் கைக்கொள்வதில்லை. நீங்கள் ஒன்றையும் அடையமாட்டீர்கள், நீங்கள் கடைப்பிடிக்கும் சத்தியம் பயனற்றதும் அர்த்தமற்றதுமாக இருக்கும் மேலும் தேவன் உங்களைப் புகழ மாட்டார். பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையின் முறைமையின் அளவுகோல்களுக்குள் சத்தியத்தின்படி செய்ய வேண்டும்; இன்றைய நடைமுறை தேவனின் குரலுக்கு பதில்வினையாக அது செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அனைத்தும் ஒன்றுமில்லாமல் இருக்கும், இது ஒரு மூங்கில் கூடையில் தண்ணீர் எடுக்க முயற்சிப்பது போன்றதாகும். புதிய காலத்தின் கற்பனைகளைப் பிரகடனப்படுத்தியதன் நடைமுறை அர்த்தமும் ஆகும். ஜனங்கள் கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டுமானால், குறைந்தபட்சம் அவர்கள் மனுவுருவில் தோன்றுகிற நடைமுறை தேவனை குழப்பமின்றி அறிந்திருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், ஜனங்கள் கற்பனைகளைக் கைக்கொள்ளுவது பற்றிய கொள்கைகளைக் கிரகிக்க வேண்டும். கற்பனைகளைக் கைக்கொள்ளுவது என்பது அவற்றை ஏனோதானோவென்று அல்லது தன்னிச்சையாகப் பின்பற்றுவதில்லை, ஆனால் ஓர் அடிப்படையோடு, ஒரு நோக்கத்தோடு, மற்றும் கொள்கைகளோடு கைக்கொள்ளுவது ஆகும். உங்கள் தரிசனங்கள் தெளிவாக இருப்பதே முதலில் அடைய வேண்டிய விஷயம். உனக்குப் பரிசுத்த ஆவியானவரின் தற்காலக் கிரியையில் முழுமையான புரிதல் இருந்தால், மேலும் நீ கிரியையின் இன்றைய முறைகளில் பிரவேசித்தால், பின்னர் நீ கற்பனைகளைக் கைக்கொள்ளுவது பற்றிய தெளிவான புரிதலை இயல்பாகவே அடைவாய். புதிய காலத்தின் கற்பனைகளின் சாரத்தைத் நீ தெளிவாகப் பார்த்து கற்பனைகளைக் கைக்கொள்ளக் கூடிய நாள் வந்தால், அதன் பின் நீ பரிபூரணப்படுத்தப்பட்டிருப்பாய். இதுவே சத்தியத்தைக் கடைப்பிடிப்பது மற்றும் கற்பனைகளைக் கைக்கொள்ளுதலின் நடைமுறை முக்கியத்துவம் ஆகும். உன்னால் சத்தியத்தைச் கடைப்பிடிக்க முடியுமா அல்லது முடியாதா என்பது புதிய காலத்தின் கற்பனைகளின் சாரத்தை எவ்வாறு நீ பார்க்கிறாய் என்பதைப் பொறுத்தது ஆகும். பரிசுத்த ஆவியானவரின் கிரியை தொடர்ந்து மனுஷனுக்குத் தோன்றும், மேலும் மனிதனிடமான தேவனுடைய தேவைகள் அதிக அதிகமாகும். ஆகையால், மனுஷர் உண்மையாகவே கடைப்பிடிக்கும் சத்தியங்கள் எண்ணிக்கையில் அதிகமாகும், மேலும் பெரியதாகும், மற்றும் கற்பனைகளைக் கைக்கொள்ளுவதன் விளைவுகள் மேலும் ஆழமானதாக மாறும். ஆகவே, நீங்கள் சத்தியத்தின்படி செய்யும் அதே வேளையில் கற்பனைகளையும் கைக்கொள்ள வேண்டும். ஒருவரும் இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தக் கூடாது; இந்தப் புதிய காலத்தில் புதிய சத்தியமும் புதிய கற்பனைகளும் ஒரேநேரத்தில் தொடங்கட்டும்.

முந்தைய: யதார்த்த நிலைமீது அதிகமாய்க் கவனம் செலுத்துங்கள்

அடுத்த: நடைமுறை தேவனும் தேவன்தான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக