அத்தியாயம் 1

துதியானது சீயோனுக்கு வந்துவிட்டது. தேவனுடைய வாசஸ்தலம் தோன்றியுள்ளது. எல்லா ஜனங்களும் போற்றும் மகிமையுள்ள பரிசுத்த நாமம் பரவுகிறது. ஆ, சர்வவல்லமையுள்ள தேவனே! பிரபஞ்சத்தின் அதிபதி, கடைசி நாட்களின் கிறிஸ்து—அவர் சீயோன் மலையின் மீது எழுந்திருக்கும் பிரகாசிக்கும் சூரியன். இது பிரபஞ்சம் முழுவதிலும் மாட்சிமையோடும் மேன்மையோடும் உயர்கிறது…

சர்வவல்லமையுள்ள தேவனே! நாங்கள் உம்மை மகிழ்ச்சியுடன் அழைக்கிறோம், நாங்கள் ஆடிப் பாடுகிறோம். நீர் உண்மையிலேயே எங்கள் மீட்பர், பிரபஞ்சத்தின் மகா ராஜா! நீர் ஒரு ஜெயம்கொள்ளும் குழுவை உருவாக்கி தேவனுடைய நிர்வாகத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளீர். எல்லா ஜனங்களும் இந்தப் பர்வதத்திடம் ஓடிவருவார்கள். எல்லா ஜனங்களும் சிங்காசனத்தின் முன் மண்டியிடுவார்கள்! நீர் ஒருவரே உண்மையான ஒரே தேவன். நீர் மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரமானவர். எல்லா மகிமையும், கனமும், வல்லமையும் சிங்காசனத்துக்கு உண்டாவதாக! சிங்காசனத்திலிருந்து ஜீவ ஊற்று பாய்கிறது. எண்ணிலடங்காத தேவ ஜனங்களுக்குத் தண்ணீர் கொடுத்துப் போஷிக்கிறது. ஒவ்வொரு நாளும் வாழ்க்கை மாறுகிறது. புதிய வெளிச்சம் மற்றும் வெளிப்பாடுகள் நம்மைப் பின்தொடர்கின்றன, தொடர்ந்து தேவனைப் பற்றிய புதிய புரிதல்களைக் கொடுக்கின்றன. அனுபவங்களுக்கு இடையில், தேவனைப் பற்றிய முழுமையான உறுதிப்பாட்டை நாம் அடைகிறோம். அவருடைய வார்த்தைகள் தொடர்ந்து வெளிப்படுகின்றன. அவை சரியானவர்களுக்குள் வெளிப்படுகின்றன. நாம் உண்மையில் மிகவும் பாக்கியவான்கள்! ஒவ்வொரு நாளும் தேவனை நேருக்கு நேர் சந்திக்கிறோம், எல்லாவற்றிலும் தேவனுடன் தொடர்புகொள்கிறோம் மற்றும் எல்லாவற்றின் மீதும் தேவனுக்கு ராஜரீகம் அளிக்கிறோம். தேவனுடைய வார்த்தையை நாம் கவனமாகச் சிந்திக்கிறோம். நம்முடைய இருதயங்கள் தேவனில் அமைதியாக இருக்கின்றன. இதனால் நாம் தேவனுக்கு முன்பாக வருகிறோம். அங்கு அவருடைய ஒளியைப் பெறுகிறோம். ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கை, செயல்கள், சொற்கள், எண்ணங்கள் மற்றும் யோசனைகளில் நாம் தேவனுடைய வார்த்தைக்குள் ஜீவிக்கிறோம். எல்லா நேரங்களிலும் நம்மால் வித்தியாசத்தைக் காண முடிகிறது. தேவனுடைய வார்த்தையானது, ஊசியில் நூல் கோர்ப்பது போல வழிநடத்துகிறது. எதிர்பாராத விதமாக, நமக்குள் மறைந்திருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருகின்றன. தேவனுடனான ஐக்கியம் எந்தத் தாமதத்தையும் ஏற்படுத்தாது. நம்முடைய எண்ணங்களும் யோசனைகளும் தேவனால் அப்பட்டமாக வெளிப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு தருணத்திலும் நாம் கிறிஸ்துவின் சிங்காசனத்திற்கு முன்பாக ஜீவிக்கிறோம். அங்கே நாம் நியாயத்தீர்ப்புக்கு உட்படுகிறோம். நம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு இடமும் சாத்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இன்று, தேவனுடைய ராஜரீகத்தை மீட்டெடுக்க, அவருடைய திருச்சபை சுத்திகரிக்கப்பட வேண்டும். தேவனால் முழுமையாக ஆட்கொள்ளப்பட, நாம் ஒரு வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் ஈடுபட வேண்டும். நம்முடைய பழைய குணம் சிலுவையில் அறையப்பட்டால்தான் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஜீவன் மிக உயர்ந்ததாக ஆட்சி செய்ய முடியும்.

இப்போதும், நம்முடைய மீட்புக்காக யுத்தம் செய்யப் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய ஒவ்வொரு உடல் பாகத்திலும் சக்தியை ஏற்றுகிறார்! நாம் நம்மை மறுக்கவும், தேவனோடு ஒத்துழைக்கவும் தயாராக இருக்கும்போதே, தேவன் நிச்சயமாக, எல்லா நேரங்களிலும் நம்மை ஒளிரச் செய்து தூய்மைப்படுத்துவார். மேலும், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நாம் தேவனால் முழுமையாக்கப்படும் பொருட்டு சாத்தான் ஆக்கிரமித்துள்ளதைப் புதிதாக மீட்டெடுப்பார். நேரத்தை வீணாக்காதீர்கள். தேவனுடைய வார்த்தையில் ஒவ்வொரு நொடியையும் வாழுங்கள். பரிசுத்தவான்களுடன் கட்டியெழுப்பப்பட்டு, ராஜ்யத்திற்குள் கொண்டு வரப்பட்டு, தேவனோடு மகிமைக்குள் பிரவேசியுங்கள்.

முந்தைய: முன்னுரை

அடுத்த: அத்தியாயம் 2

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக