B. சத்தியத்தைக் கடைப்பிடித்து, சத்தியத்தைப் புரிந்துகொண்டு, யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பது எப்படி என்பது குறித்து

344. இப்போது இருப்பது ராஜ்யத்தின் யுகம். இந்த புதிய யுகத்திற்குள் நீ நுழைந்திருக்கிறாய் என்பது தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நீ நுழைந்திருக்கிறாயா, அவருடைய வார்த்தைகள் உனது வாழ்வின் யதார்த்தத்தை மாற்றியிருக்கின்றனவா என்பதைப் பொறுத்தது. தேவனின் வார்த்தைகள் ஒவ்வொரு நபருக்கும் தெரியப்படுத்தப்படுகின்றன, இதன் மூலம், இறுதியில், எல்லா ஜனங்களும் தேவனின் வார்த்தைகளின் உலகில் வாழ்வார்கள், மற்றும் அவருடைய வார்த்தைகள் ஒவ்வொருவரையும் உள்ளிருந்து தெளியச் செய்யும் மற்றும் பிரகாசமாக்கும். இந்த நேரத்தில், நீ தேவனின் வார்த்தைகளை வாசிப்பதில் அக்கறையற்றவனாகவும், அவருடைய வார்த்தைகளில் ஆர்வம் காட்டாமலும் இருந்தால், உனது நிலை தவறானது என்பதையே இது காட்டுகிறது. உன்னால் வார்த்தையின் யுகத்திற்குள் நுழைய முடியாவிட்டால், பரிசுத்த ஆவியானவர் உன்னுள் கிரியை செய்ய மாட்டார்; நீ இந்த யுகத்திற்குள் நுழைந்திருந்தால், அவர் தம்முடைய கிரியையைச் செய்வார். பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறுவதற்கு வார்த்தையின் யுகத்தின் தொடக்கத்தில் நீ என்ன செய்ய முடியும்? இந்த யுகத்திலும், உங்களுக்கு மத்தியில், தேவன் பின்வரும் உண்மையை நிறைவேற்றுவார்: ஒவ்வொரு மனுஷனும் தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்வார்கள், சத்தியத்தைக் கடைபிடிக்க அவர்களால் முடியும், தேவனை ஆர்வத்துடன் நேசிப்பார்கள்; எல்லா ஜனங்களும் தேவனுடைய வார்த்தைகளை ஒரு அஸ்திவாரமாகவும், அவர்களின் யதார்த்தமாகவும் பயன்படுத்துவார்கள், மேலும் தேவனை ஆராதிக்கும் இருதயங்களைக் கொண்டிருப்பார்கள்; தேவனின் வார்த்தைகளைக் கடைபிடிப்பதன் மூலம், மனுஷன் தேவனுடன் சேர்ந்து ராஜரீக வல்லமையைப் பயன்படுத்துவான். இது தேவனால் அடைய வேண்டிய கிரியை. தேவனின் வார்த்தைகளை வாசிக்காமல் நீ இருக்க முடியுமா? இன்று, அவருடைய வார்த்தைகளை வாசிக்காமல் ஓரிரு நாட்கள் கூட இருக்க முடியாது என்று நினைக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளை வாசிக்க வேண்டும், நேரம் அனுமதிக்கவில்லை என்றால், அவற்றைக் கேட்பது போதுமானதாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்கு அளிக்கும் உணர்வு இதுதான், மற்றும் அவர்களை ஏவத் துவங்கியிருக்கும் வழியும் இதுதான். அதாவது, தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நுழையும்படி அவர் வார்த்தைகளின் மூலம் ஜனங்களை ஆளுகிறார். தேவனின் வார்த்தைகளைப் புசிக்காமலும், அருந்தாமலும் ஒரேயொரு நாள் கழிந்தால், நீங்கள் இருட்டையும் தாகத்தையும் உணர்வீர்கள், அதைத் தாங்க முடியாது, இது நீ பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுகிறாய் என்பதையும், அவர் உன்னிடமிருந்து விலகவில்லை என்பதையும் காட்டுகிறது. அப்போதுதான் நீ இந்த பிரவாகத்தில் இருப்பவனாவாய். இருப்பினும், தேவனின் வார்த்தைகளைப் புசிக்காமலும், அருந்தாமலும் ஓரிரு நாட்கள் இருந்தப் பிறகு, நீ எதையும் உணரவில்லை என்றால், உனக்குத் தாகம் இல்லை, மற்றும் நீ ஏவப்படவே இல்லை, பரிசுத்த ஆவியானவர் உன்னிடமிருந்து விலகிவிட்டார் என்பதை இது காட்டுகிறது. இதன் அர்த்தம், உனக்குள் உள்ள நிலையில் ஏதோ தவறு இருக்கிறது; நீ வார்த்தையின் யுகத்திற்குள் நுழையவில்லை, பின்மாற்றமடைந்தவர்களில் நீயும் ஒருவனே. ஜனங்களை ஆள்வதற்கு தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்; நீ தேவனின் வார்த்தைகளைப் புசித்துக் குடித்தால், நன்றாக உணர்வாய், நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ பின்பற்றுவதற்கு வழி இல்லை. தேவனின் வார்த்தைகள் ஜனங்களின் போஜனமாகவும், அவர்களை இயக்கும் சக்தியாகவும் மாறும். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” என்று வேதாகமம் சொல்கிறது. இன்று, தேவன் இந்தக் கிரியையை செய்து முடிப்பார், இந்த உண்மையை அவர் உங்களிடம் நிறைவேற்றுவார். கடந்த காலங்களில், ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் வாசிக்காமல் பல நாட்கள் இருந்திருக்கலாம், ஆயினும் அவர்களால் வழக்கம் போல் புசிக்கவும் வேலை செய்யவும் முடியும், ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படி இல்லை? இந்த யுகத்தில், தேவன் அனைவரையும் ஆள பிரதானமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். தேவனின் வார்த்தைகளின் மூலம், மனுஷன் நியாயந்தீர்க்கப்பட்டு பரிபூரணமாக்கப்படுகிறான், பின்னர் இறுதியாக ராஜ்யத்திற்குள் கொண்டு செல்லப்படுகிறான். தேவனின் வார்த்தைகளால் மட்டுமே மனுஷனின் ஜீவனை வழங்க முடியும், மேலும் தேவனின் வார்த்தைகளால் மட்டுமே, குறிப்பாக ராஜ்யத்தின் யுகத்தில், மனுஷனுக்கு வெளிச்சத்தையும் கடைபிடிப்பதற்கான ஒரு பாதையையும் வழங்க முடியும். தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திலிருந்து நீ விலகிச் செல்லாத வரை, ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளைப் புசித்துக்கொண்டும், அருந்திக்கொண்டும் இருந்தால், தேவனால் உன்னைப் பரிபூரணப்படுத்த முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து

345. மனிதன் வைத்திருக்க வேண்டிய சத்தியம் அது தேவனுடைய வார்த்தையில் காணப்படுகிறது, அதுவே மனிதகுலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும் உதவியாகவும் இருக்கும் சத்தியம். உங்கள் உடலுக்குத் தேவைப்படும் சத்து மருந்து மற்றும் வாழ்வாதாரம், மனிதன் அவனது இயல்பான மனிதத் தன்மைக்கு திரும்ப வருவதற்கு உதவுகிறது. இந்த சத்தியத்தினால் ஒரு மனிதன் தன்னை பலப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அதிகமாக தேவனுடைய வார்த்தை நடைமுறைப்படுத்தும் போது உங்களுடைய வாழ்க்கை சீக்கிரமாக மலரும் சத்தியமும் அதிகமாகத் தெளிவாகும். நீங்கள் உங்கள் அந்தஸ்தில் வளரும்போது ஆவிக்குரிய உலகத்தின் காரியங்களை மிகத் தெளிவாக காண்பீர்கள், சாத்தான் மீது நீங்கள் ஜெயம் கொள்ள அதிகமான பலத்தையும் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தையை நடைமுறைப்படுத்தும் போது, புரியாதிருந்த அனேக சத்தியங்கள் உங்களுக்குப் புரிய வரும். நடைமுறையில் தங்கள் அனுபவத்தை ஆழமாக்குவதை விட, தேவனுடைய வார்த்தையின் உரையை வெறுமனே புரிந்துகொள்வதிலும், உபதேசங்ளுக்கு வேண்டியதைக் கொடுப்பதில் தங்கள் கவனத்தை செலுத்துவதிலும் பெரும்பாலான மக்கள் திருப்தி அடைகிறார்கள், ஆனால் அது பரிசேயர்களின் வழி அல்லவா? ஆக “தேவனின் வார்த்தை ஜீவனாய் இருக்கிறது” என்ற சொற்றொடர் இவர்களுக்கு எவ்வளவு தூரம் மெய்யானதாக இருக்கிறது? ஒரு மனிதனுடைய வாழ்வு வெறுமனே தேவனுடைய வார்த்தையை வாசிப்பதனால் வளர முடியாது, தேவனுடைய வார்த்தையை அவன் நடைமுறைப்படுத்தும் போது வளர்கிறான். தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வது என்பது வாழ்க்கையையும் அந்தஸ்தையும் பெறுவதற்குத் தேவையானது என்பது உங்கள் நம்பிக்கையாக இருந்தால், உங்கள் புரிதல் நெளிவடைந்தது. தேவனுடைய வார்த்தையை உண்மையாக புரிந்து கொள்வது என்பது நீங்கள் சத்தியத்தை கடைப்பிடிக்கும்போது நிகழ்கிறது, ‘நீங்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும் போது மாத்திரமே அதை புரிந்துகொள்ள முடியும்’ என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இன்று, தேவனுடைய வார்த்தையை வாசித்த பிறகு நீங்கள் தேவனுடைய வார்த்தையைத் தெரியும் என்று சொல்லலாம் ஆனால் நீங்கள் புரிந்துகொண்டதாகச் சொல்ல முடியாது. சிலர் சத்தியத்தை கடைப்பிடிப்பதற்கான ஒரே வழி முதலில் அதைப் புரிந்துகொள்வதுதான் என்று கூறுகிறார்கள், ஆனால், இது ஓரளவு மட்டுமே சரியானது, நிச்சயமாக அது முற்றிலும் துல்லியமானது அல்ல. நீங்கள் ஓரு சத்தியத்தைப் பற்றிய அறிவை நீங்கள் பெறுவதற்கு முன்பு, நீங்கள் அந்த சத்தியத்தை அனுபவத்தில் உணரவில்லை. நீங்கள் ஒரு பிரசங்கத்தில் இருந்து ஒன்றை காதில் கேட்பது மட்டும் மெய்யான புரிந்துகொள்ளுதல் ஆகாது—இது வார்த்தைகளின் வெளிப்படையான அர்த்தத்தை அப்படியே வசப்படுத்திக் கொள்வது தான், ஆனால், அந்த வார்த்தைகளை மெய்யான அர்த்தத்துடன் புரிந்து கொண்டதற்கு அது சமம் அல்ல. ஏதோ மேலோட்டமான சத்தியத்தின் அறிவை பெற்றிருக்கிறேன் என்று சொல்வீர்களானால் அது நீங்கள் புரிந்து கொண்டீர்கள் அல்லது அதைப் பற்றிய அறிவைக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல; சத்தியத்தைக் குறித்ததான மெய்யான அர்த்தம் என்பது அதை அனுபவித்து உணரும்போது மாத்திரமே கிடைக்கும். ஆகையால், நீங்கள் அனுபவம் ஆக்கிக் கொள்ளும் போது மாத்திரமே நீங்கள் அதை புரிந்துகொள்ள முடியும் அப்போது தான் நீங்கள் அதன் மறைவான பகுதிகளைப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் அனுபவத்தை ஆழமாக்குவது என்பது அர்த்தங்களை புரிந்துகொள்வதற்கும், சத்தியத்தின் சாரத்தை புரிந்து கொள்வதற்கும் ஒரே வழியாகும். ஆகையால், நீங்கள் சத்தியத்தோடு எல்லா இடங்களுக்கும் செல்ல முடியும், ஆனால் உங்களுக்குள் சத்தியம் இல்லாது இருக்குமானால் நீங்கள் மற்றவர்களை சம்மதிக்க வைக்க-மதத்தை சார்ந்த மக்கள் இருக்கட்டும், உங்கள் குடும்பத்தாரைக் கூட சம்மதிக்க வைக்க இயலாது. உங்களில் சத்தியம் இல்லாது பனித்துளிகள் பறப்பது போன்று இருக்கிறீர்கள், ஆனால் சத்தியத்தோடு இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்க முடியும், உங்களை யாரும் தாக்க முடியாது. ஒரு கோட்பாடு எவ்வளவு வலுவானதாக இருந்தாலும், அது சத்தியத்தை வெல்ல முடியாது. சத்தியத்துடன், உலகத்தையே அசைக்கலாம் மற்றும் மலைகள் மற்றும் கடல்களை நகர்த்தலாம், அதேசமயம் சத்தியம் இல்லாவிட்டால் வலுவான நகரச் சுவர்களும் புழுக்களால் தகர்க்கப்பட வழி உண்டாகும். இது ஒரு வெளிப்படையான உண்மை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டவுடன், அதன்படி நடக்க வேண்டும்” என்பதிலிருந்து

348. நீங்கள் தேவனின் வார்த்தையை நிறைய படித்திருக்கிறீர்கள் ஆனால் உரையின் பொருளை மட்டுமே புரிந்துகொண்டிருக்கிறீர்கள், உங்கள் நடைமுறை அனுபவங்களின் மூலம் தேவனுடைய வார்த்தையை நேரடியாக அறிந்திருக்கவில்லை என்றால், நீங்கள் தேவனின் வார்த்தையை அறிய மாட்டீர்கள். உங்களைப் பொறுத்த மட்டிலும், தேவனுடைய வார்த்தை அது வாழ்க்கை அல்ல அது வெறும் உயிரற்ற எழுத்துக்கள். இந்த உயிரற்ற எழுத்துக்களின் சாத்தார்த்தத்தைக் கடைபிடிப்பதில் மட்டுமே வாழ்கிறேன் என்று இருப்பீர்களானால் நீங்கள் தேவனுடைய வார்த்தையின் சாராம்சத்தை புரிந்து கொள்ள முடியாது அல்லது அவருடைய சித்தத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் அவருடைய வார்த்தையை உங்களுடைய நடைமுறை அனுபவம் ஆக்கிக் கொள்ளும் போது மாத்திரமே தேவனுடைய வார்த்தையின் ஆவிக்குரிய அர்த்தம் அதுவாகவே உங்களுக்கு வெளிப்படுத்தப்படும், மேலும் அனுபவத்தின் மூலம்தான் பல சத்தியங்களின் ஆவிக்குரிய அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொண்டு தேவனுடைய வார்த்தையின் மனித அறிவுக்கு எட்டாதவைகளைத் திறக்க முடியும். நீங்கள் இதனை நடைமுறைப்படுத்தாது இருப்பீர்களனால், அவருடைய வார்த்தை எவ்வளவு தெளிவாக இருந்தாலும் இதுவரைக்கும் நீங்கள் புரிந்து கொண்டது என்பதெல்லாம் வெறும் எழுத்துக்களும் உபதேசங்களுமாகவே இருக்கும், அவை உங்களுக்கு ஒரு மத ரீதியான கட்டுப்பாடாக மாறிவிடும். இதைத்தான் பரிசேயர்களும் செய்தார்கள் அல்லவா? நீங்கள் தேவனுடைய வார்த்தையை நடைமுறைப்படுத்தி அதை அனுபவமாக்கிக் கொள்ளும்போது அது உங்களுக்கு நடைமுறையாகி விடுகிறது; நீங்கள் அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்காத போது, தேவனுடைய வார்த்தை உங்களுக்கு மூன்றாம் வானம் என்னும் புராண கட்டுக்கதைக்கு சற்று மேலானதாகவே இருக்கும். உண்மையில், தேவனை நம்புவதற்கான செயல்முறையானது, நீங்கள் அவருடைய வார்த்தையை அனுபவிப்பதும், அவரால் ஆதாயமடைந்து கொள்வதும் அல்லது இன்னும் தெளிவாகச் சொல்வதானால், தேவனை விசுவாசிப்பது என்பது அவருடைய வார்த்தையின் அறிவையும் புரிதலையும் கொண்டிருக்க வேண்டும்; அவருடைய வார்த்தையை நீங்கள் அனுபவமாக மாற்றி வாழ்வது என்பதாக இருக்க வேண்டும்; இதுதான் நீங்கள் தேவனிடத்தில் கொண்டுள்ள நம்பிக்கையின் பின்னணியில் உள்ள உண்மை நிலை. நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்கள் மேலும் வார்த்தையை உங்களுக்குள் இருக்கும் ஒன்றாக வைத்துக் கொண்டு நடைமுறைப்படுத்தாமல் அதே நேரத்தில் நித்திய ஜீவனை எதிர்பார்த்தீர்கள் என்றால், நீங்கள் முட்டாள்தனமாகக் காணப்படுவீர்கள். இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு விருந்துக்கு போய் அங்கே இருக்கக்கூடிய ருசியான பதார்த்தங்களைப் பார்த்து அதை மனப்பாடம் செய்துகொண்டேன், ஆனால் அதை நான் ருசி பார்க்கவில்லை என்பது போல் இருக்கிறது அப்படிப்பட்ட நபர் ஒரு முட்டாள் அல்லவா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டவுடன், அதன்படி நடக்க வேண்டும்” என்பதிலிருந்து

349. ஜனங்களிடம் தேவன் கேட்டுக்கொள்பவைகள் அவ்வளவு எட்டாதவைகள் அல்ல. அவர்கள் கொஞ்சம்முயற்சி செய்தாலும் கூட, அவர்கள் “தேர்ச்சி தரத்தைப்” பெறுவார்கள். உண்மையில், சத்தியத்தைக் கடைப்பிடிப்பதை விட அதைப் புரிந்துகொள்வது, அறிந்துகொள்வது மற்றும் உணர்ந்துகொள்வது மிகவும் சிக்கலானது. உண்மையை அறிந்துகொள்வதும் உணர்ந்துகொள்வதும் சத்தியத்தைக் கடைபிடித்த பிறகு வருகிறது; இவையே பரிசுத்த ஆவியானவர் செயல்படும் படிகள் மற்றும் முறையாகும். நீ ஏன் கீழ்ப்படிய முடியாது? உன் வழியில் செயல்படுவதன்மூலம் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நீ ஆதாயப்படுத்திக்கொள்ள முடியுமா? தேவனுடைய வார்த்தையின்படி, பரிசுத்த ஆவியானவர் உன் இன்பத்திற்காகவோ அல்லது உன் குறைவுகளின் அடிப்படையிலோ செயல்படுகிறாரா? இதை நீங்கள் தெளிவாகக் காண முடியாவிட்டால் இது அர்த்தமற்றது. தேவனின் வார்த்தைகளைப் படிக்க பெரும்பாலான ஜனங்கள் அதிக முயற்சி செய்திருப்பதும், ஆனால் வெறும் அறிவைப் பெற்றுள்ளதும் அதன்பின்னர் உண்மையான பாதையைப்பற்றி எதுவும் கூறமுடியாத நிலையில் இருப்பதும் ஏன்? அறிவைக் கொண்டிருப்பது சத்தியத்தைக் கொண்டிருப்பதற்குச் சமம் என்று நீ நினைக்கிறாயா? அது ஒரு குழப்பமான பார்வை அல்லவா? ஒரு கடற்கரையில் உள்ள மணல் போல உன்னால் அதிக அறிவுடன் பேச முடிந்தாலும், அதில் எதுவுமே உண்மையான பாதையைக் கொண்டிருக்கவில்லை. இதைச் செய்வதன் மூலம் நீங்கள் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லையா? அதை ஆதரிக்க எந்த பொருளும் இல்லாமல், நீங்கள் ஒரு வெற்றுக் காட்சியை உருவாக்கவில்லையா? அத்தகைய நடத்தை அனைத்தும் ஜனங்களுக்கு தீங்குநிறைந்ததாக இருக்கிறது! கோட்பாடு எவ்வளவு உயர்வாய் இருக்கிறதோ அவ்வளவாய் அது யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது, அவ்வளவாய் ஜனங்களை யதார்த்தத்திற்குள் கொண்டுச்செல்ல இயலாததாயிருக்கிறது; கோட்பாடு எவ்வளவு உயர்வாய் இருக்கிறதோ, அவ்வளவாய் அது நீ தேவனை நிந்திக்கவும் அவரை எதிர்க்கவும் வைக்கிறது. மிக உயர்வான கோட்பாடுகளை விலைமதிப்பற்ற பொக்கிஷங்களைப் போல நடத்த வேண்டாம்; அவை தீங்கு விளைவிக்கும் மற்றும் எந்த நோக்கத்திற்கும் பயன்படாது! ஒருவேளை சிலர் மிக உயர்வான கோட்பாடுகளைப் பற்றி பேச முடியும்—ஆனால் இவற்றில் யதார்த்தம் எதுவும் இல்லை, ஏனென்றால் இந்த ஜனங்கள் தனிப்பட்ட முறையில் அவற்றை அனுபவித்திருக்கவில்லை, எனவே நடைமுறைப் பயிற்சிக்கு பாதை இல்லை. அத்தகையவர்கள் மற்றவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல இயலாது, மேலும் அவர்களை வழிதவறிச் செல்லும்படிக்கே நடத்திச் செல்லுவார்கள். இது ஜனங்களுக்கு தீங்கு விளைவிப்பதல்லவா? குறைந்த பட்சம், நீ ஜனங்களின் தற்போதைய சிக்கல்களைத் தீர்க்கவும், நுழைவு அடைய அவர்களை அனுமதிக்கக் கூடியவகையிலும் இருக்க வேண்டும்; இது மட்டுமே அர்ப்பணிப்பாகக் கருதப்படுகிறது, அப்போதுதான் நீ தேவனுக்கு ஊழியம் செய்யும் தகுதிபெற முடியும். எப்போதும் பேரளவிலான, கற்பனையான சொற்களைப் பேசாதே, மற்றவர்களை உனக்குக் கீழ்ப்படியும்படி பிணைக்க பொருத்தமற்ற நடைமுறைகளின் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு செய்வது எந்த விளைவையும் ஏற்படுத்தாது, மேலும் அது அவர்களின் குழப்பத்தை அதிகரிக்கக்கூடும். இப்படிச் செல்வது பல உபதேசக் கோட்பாடுகளை உருவாக்கும், இது ஜனங்கள் உன்னை வெறுக்கும்படிச் செய்யும். இதுதான் மனிதனின் குறைபாடாக உள்ளது, இது உண்மையிலேயே இழிவுபடுத்துவதாக உள்ளது. எனவே உண்மையில் நிலவுகின்ற பிரச்சனைகளைப் பற்றி அதிகம் பேசுங்கள். மற்றவர்களின் அனுபவங்களை உங்கள் சொந்தச் சொத்தாகக் கருத வேண்டாம், மற்றவர்கள் போற்றுவதற்காக அவற்றைப் பிடித்துக் கொள்ளவும் வேண்டாம்; நீங்கள் உங்கள் சொந்த, தனிப்பட்ட வழியைத் தேட வேண்டும். ஒவ்வொரு நபரும் இதையே நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “யதார்த்த நிலைமீது அதிகமாய்க் கவனம் செலுத்துங்கள்” என்பதிலிருந்து

350. சத்தியத்தைப் பற்றிய உங்களுடைய புரிதல் உங்கள் சொந்த நிலைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதா? நிஜ வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த ஜனங்களுடன், நிகழ்வுகளுடன், விஷயங்களுடன் எந்த சத்தியங்கள் தொடர்புடையவை என்பதைக் குறித்து நீங்கள் முதலாவது சிந்திக்க வேண்டும். இந்த சத்தியங்களில் தான் நீ தேவனுடைய சித்தத்தைக் கண்டுபிடித்து, நீ சந்தித்ததை அவருடைய சித்தத்துடன் தொடர்புபடுத்த முடியும். நீ சந்தித்தவைகளுடன் சத்தியத்தின் எந்த அம்சங்கள் தொடர்புடையதாய் இருக்கின்றன என்பது உனக்குத் தெரியாத போது, அதற்குப் பதிலாக தேவனுடைய சித்தத்தை நேரடியாக அணுகினால், இது முடிவுகளைத் தரக்கூடாத ஒரு குருட்டுத்தனமான அணுகுமுறையாகும். நீ சத்தியத்தைத் தேடி தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ள விரும்பினால், முதலில் உனக்கு என்ன மாதிரியான விஷயங்கள் நிகழ்ந்தன, சத்தியத்தின் எந்த அம்சங்கள் அதனோடு தொடர்புடையவை என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும் மற்றும் நீ அனுபவித்தவைகளுடன் தொடர்புடைய தேவனுடைய வார்த்தையில் உள்ள குறிப்பிட்ட சத்தியத்தைத் தேட வேண்டும். அதன்பின்பு நீ அந்த சத்தியத்தில் உனக்கு ஏற்ற நடைமுறைப் பாதையைத் தேடு; இவ்வழியில் நீ தேவனுடைய சித்தத்தை மறைமுகமாகப் புரிந்து கொள்ள முடியும். சத்தியத்தைத் தேடுவதும், சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும் ஒரு போதனையையோ இயந்திரத்தனமாக உபயோகிப்பதோ அல்லது ஒரு சூத்திரத்தைப் பின்பற்றுவதோ அல்ல. சத்தியம் சூத்திரமானது அல்ல, அது ஒரு சட்டமும் அல்ல. அது உயிரற்றதல்ல, அதுவே ஜீவனானது, அது ஒரு ஜீவனுள்ள விஷயம், மேலும் அது ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியதும், மனிதன் தன் வாழ்க்கையில் கொண்டிருக்க வேண்டியதுமான ஒரு கட்டளையாகும். இது நீ முடிந்தவரை அனுபவத்தின் மூலம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். நீ உன் அனுபவத்தில் எந்த நிலைக்கு வந்திருந்தாலும், தேவனுடைய வார்த்தையில் இருந்தோ அல்லது சத்தியத்தில் இருந்தோ உன்னைப் பிரிக்க முடியாது, மேலும் தேவனுடைய மனநிலையைப் பற்றி நீ புரிந்து கொள்வதும், தேவனிடத்தில் உள்ளவைகளையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் பற்றி உனக்கு தெரிந்தவைகளெல்லாம் தேவனுடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவைகள் சத்தியத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. தேவனுடைய மனநிலையும், அவரிடம் உள்ளவைகளும், அவர் யாராக இருக்கிறார் என்பதே சத்தியமாகும்; சத்தியம் என்பது தேவனுடைய மனநிலை, அவரிடம் உள்ளவைகள் மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதின் அதிகாரப்பூர்வமான வெளிப்பாடாகும். அது அவரிடம் உள்ளவைகளையும், அவர் யாராக இருக்கிறார் என்பதையும் வலுவாக்குகிறது, மேலும் அவரிடம் உள்ளவைகளையும், அவர் யாராக இருக்கிறார் என்பதையும் குறித்த ஒரு தெளிவான அறிக்கையை உருவாக்குகிறது. அது தேவன் எதை விரும்புகிறார், எதை விரும்புவதில்லை, நீங்கள் எதைச் செய்ய அவர் விரும்புகிறார், அவர் உங்களைச் செய்ய அனுமதிக்காதது எது, எந்த ஜனங்களை அவர் வெறுக்கிறார், எந்த ஜனங்களை அவர் விரும்புகிறார் என்பதை மிக நேரடியாகக் கூறுகிறது. தேவன் வெளிப்படுத்தும் சத்தியங்களுக்குப் பின்னால் ஜனங்கள் அவருடைய இன்பம், கோபம், துக்கம், சந்தோஷம் ஆகியவற்றையும், அவருடைய சாராம்சத்தையும் கூட காணலாம், இதுவே அவருடைய மனநிலையின் வெளிப்பாடாகும். தேவனிடத்தில் உள்ளவையும், அவர் யாராக இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதோடு, அவருடைய வார்த்தையிலிருந்து அவருடைய மனநிலையை அறிந்துகொள்வதோடு கூட, நடைமுறை அனுபவத்தின் மூலம் இந்தப் புரிதலை அடைய வேண்டியதின் அவசியம் மிக முக்கியமானதாகும். தேவனை அறிந்து கொள்வதற்காக ஒரு நபர் நிஜ வாழ்க்கையில் இருந்து தன்னை நீக்கிக் கொண்டால் அவரால் அதை அடைய முடியாது. தேவனுடைய வார்த்தையிலிருந்து சில புரிதல்களைப் பெறக்கூடிய நபர்கள் இருந்தாலும், அவர்களின் புரிதலானது கோட்பாடுகள் மற்றும் வார்த்தைகளுக்கு உட்பட்டுள்ளது, மேலும் அந்தப் புரிதலில் தேவன் உண்மையில் எப்படி இருக்கிறார் என்பதில் ஏற்றத்தாழ்வு எழுகிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

351. ஜனங்கள் தேவனில் விசுவாசம் வைப்பதற்கு ஆரம்பித்ததிலிருந்து பல தவறான நோக்கங்களை கொண்டிருக்கிறார்கள். நீ சத்தியத்தை நடைமுறைப்படுத்தாதபோது, உன்னுடைய நோக்கங்கள் அனைத்தும் சரியானவை என்றே நினைப்பாய், ஆனால் ஏதாவது ஒன்று உனக்கு நிகழும்போது உனக்குள் பல தவறான நோக்கங்கள் இருப்பதை காண்பாய். இப்படியாக, தேவன் ஜனங்களை பரிபூரணப்படுத்துகிறபோது, தேவனைக் குறித்த அறிவை தடைசெய்யும் பல எண்ணங்கள் தங்களுக்குள் இருப்பதை அவர்களை உணரும்படி செய்கிறார். உன் நோக்கங்கள் தவறானவை என்று நீ அறிந்துகொள்ளும்போது, நீ கொண்டிருக்கும் கருத்துகள் மற்றும் நோக்கங்களின்படி நடப்பதை நிறுத்தி, தேவனுக்கு சாட்சி பகர்ந்து, உனக்கு நேரிடும் எல்லாவற்றின் மத்தியிலும் உன் ஸ்தானத்தில் நிலைத்திருக்கவும் கூடுமானால், மாம்சத்திற்கு விரோதமாக செயல்பட்டுள்ளாய் என்பது நிரூபணமாகிறது. நீ மாம்சத்திற்கு விரோதமாக செயல்படும்போது, கண்டிப்பாக உனக்குள் ஒரு யுத்தம் எழுவது தவிர்க்க முடியாதது. சாத்தான், ஜனங்களை அவற்றை பின்பற்ற வைக்க முயற்சிப்பான்; மாம்சத்தின் கருத்துகளைப் பின்பற்றவும் மற்றும் விருப்பங்களை நிலைநிறுத்தவும் முயற்சிப்பான்—ஆனால் தேவனுடைய வார்த்தைகள் ஜனங்களுக்கு உள்ளான அறிவொளியையும் பிரகாசத்தையும் அளிக்கும். இந்த நேரத்தில் தேவனையா, அல்லது சாத்தானையா யாரை பின்பற்றுவது என்பது உன்னைப் பொறுத்ததாகும். தேவன், ஜனங்களுக்கு உள்ளிருக்கும் காரியங்களை, தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றதாக இல்லாத எண்ணங்கள் மற்றும் கருத்துகள் ஆகியவற்றை முதன்மையாக கையாளுவதற்காக சத்தியத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்கிறார். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களின் இருதயங்களை தொட்டு அறிவொளியையும் பிரகாசத்தையும் அளிக்கிறார். ஆகவே சம்பவிக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் பின்னாக ஒரு யுத்தம் இருக்கிறது: ஜனங்கள் ஒவ்வொருமுறையும் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போதும் அல்லது தேவனை நேசிக்கின்றபோதும் ஒரு பெரிய யுத்தம் இருக்கிறது. மாம்சத்தில் எல்லாம் நன்றாக இருப்பதாக தோன்றினாலும், அவர்களுடைய இருதயங்களின் ஆழங்களில் உண்மையில், ஒரு வாழ்வா-சாவா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்—இந்தத் தீவிர யுத்தத்திற்கு பிறகுதான், மிகப் பெரிய அளவிலான தீவிர பிரதிபலிப்புக்குப் பிறகே வெற்றி அல்லது தோல்வி தீர்மானிக்கப்படும். ஒருவருக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியாது. ஏனென்றால் ஜனங்களுக்குள் இருக்கும் பெரும்பாலான நோக்கங்கள் தவறானவை, இல்லையென்றால் தேவனுடைய அநேக செயல்கள் அவர்கள் கொண்டிருக்கும் கருத்துகளிலிருந்து மாறுபட்டவை, ஜனங்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போது, சம்பவங்களுக்கு பின்னாக ஒரு பெரிய யுத்தம் நடக்கிறது. இந்த சத்தியத்தை நடைமுறைப்படுத்திக்கொண்ட பிறகு, இக்காட்சிகளுக்குப் பின்னால் முடிவாக, தேவனை திருப்திபடுத்தும் வகையில் ஜனங்கள் தங்கள் மனதை மாற்றுவதற்கு முன்பு அளவிடமுடியாத அளவிற்கு கவலையின் கண்ணீரை வடிப்பார்கள். இந்தப் யுத்தத்தின் காரணமாக ஜனங்கள் வருத்தங்களையும் புடமிடப்படுதலையும் சகிக்கின்றனர்; இது உண்மையான பாடு. உன்மீது யுத்தம் வரும்போது, உண்மையில் உன்னால் தேவன் பட்சமாக நிற்க முடிந்தால், தேவனை உன்னால் திருப்திப்படுத்த இயலும். சத்தியத்தை நடைமுறைப்படுத்துகிறபோது ஒருவர் உள்ளார்ந்த பாடுகளை அனுபவிப்பது தவிர்க்க முடியாதது. அவர்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போது, ஜனங்களுக்குள் எல்லாமே சரியாக இருந்தால், பிறகு அவர்களுக்கு தேவனால் பரிபூரணப்படுத்தப்பட வேண்டிய அவசியமிருக்காது, அங்கே யுத்தம் இருக்காது மற்றும் அவர்கள் பாடநபவிக்க மாட்டார்கள். அதேனென்றால் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றதல்லாத பல காரியங்கள் ஜனங்களுக்குள் இருப்பதாலும், மாம்சத்திற்கு எதிரான மனநிலையின் யுத்தம்அதிகம் இருப்பதாலும், ஜனங்கள் மாம்சத்திற்கு விரோதமாக செயல்படுவதற்கான பாடத்தை அதிக ஆழமாக படிக்க வேண்டியது அவசியம். இதுதான் தேவன் தம்முடன் பாடுகளின் வழியாக செல்லும்படியாக மனுஷனை அழைக்கிறார். நீங்கள் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, உடனடியாக தேவனிடம் சென்று, “ஆ தேவனே! நாம் உம்மை திருப்திபடுத்த விரும்புகிறேன், உம் இருதயத்தை திருப்தியாக்கக்கூடிய இந்த இறுதி தீங்கநுபவிக்க விரும்புகிறேன், எவ்வளவு அதிக பின்னடைவுகள் ஏற்பட்டாலும், நான் இன்னும் உம்மை திருப்திபடுத்தவேண்டும். நான் என் வாழ்க்கை முழுவதையும் விட்டுக்கொடுக்க நேர்ந்தாலும், உம்மை திருப்திபடுத்தியே ஆக வேண்டும்,” என்று ஜெபியுங்கள். இந்தத் தீர்மானத்தோடு நீ இப்படியாக ஜெபிக்கும்போது, உன்னுடைய சாட்சியில் உன்னால் நிலைத்து நிற்க இயலும். ஒவ்வொருமுறை அவர்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போது, ஒவ்வொருமுறையும் புடமிடப்படுதலின் வழியாய் செல்லும்போதும், ஒவ்வொருமுறை பரீட்சிக்கப்படும்போதும், தேவனுடைய செயல் அவர்கள்மேல் வரும் ஒவ்வொருமுறையும், மக்கள் அதிகமான வேதனை சகிக்கவேண்டியதிருக்கும். இவை அனைத்துமே ஜனங்களுக்கான ஒரு சோதனையாகும், ஆகவே, இவை எல்லாவற்றுக்குள்ளும் ஒரு யுத்தம் உண்டு. இதுவே அவர்கள் செலுத்தும் உண்மையான கிரயம். தேவனுடைய வார்த்தைகளை அதிகமாக வாசிப்பதும், அதிகமானவற்றுக்காக ஓடுவதும் இக்கிரயத்தின் ஒரு பகுதியாகும். இதை ஜனங்கள் செய்தே ஆக வேண்டும், இது அவர்களுடைய கடமையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புமாகும். ஆனால் ஜனங்கள் தங்களுக்குள் ஒதுக்கப்படவேண்டியவற்றை ஒதுக்கியாகவேண்டும். நீ அப்படி செய்யாவிட்டால், உன் வெளிப்புற பாடுகள் எவ்வளவு அதிகமாயினும், நீ எவ்வளவுதான் ஓடியலைந்தாலும் அத்தனையும் வீணாயிருக்கும்! உனக்குள் நடக்கும் மாற்றங்கள் மட்டுமே உன் புறம்பான பாடுகளுக்கு மதிப்பு உண்டா என்பதை தீர்மானிக்க இயலும். உனது உள்ளா மனநிலை மாற்றப்பட்டு, நீ சத்தியத்தை நடைமுறைப்படுத்தினால், உன் புறம்பான பாடுகள் தேவனின் அங்கீகாரத்தை பெறும்; உன்னுடைய உள்ளார்ந்த மனநிலையில் எந்த மாற்றமும் இல்லையென்றால் புறம்பாக நீ எவ்வளவு பாடுகளை அனுபவித்தாலும், எவ்வளவுதான் ஓடினாலும் தேவனிடமிருந்து அங்கீகாரம் கிடைக்காது—தேவனால் உறுதிப்படுத்தப்படாத எந்த பாடும் வீணாகவே போகும். நீ செலுத்திய கிரயத்தை தேவன் அங்கீகரிக்கிறாரா இல்லையா என்பது உனக்குள் ஏற்படும் மாற்றத்தையும், சத்தியத்தை நடைமுறைப்படுத்துகிறாயா இல்லையா என்பதையும் தேவனுடைய சித்தத்திற்கும் தேவனுடைய அறிவிற்கும் உகந்ததை செய்யும்படி உங்கள் சொந்த நோக்கங்கள் மற்றும் கருத்துகளுக்கு விரோதமாக செயல்படுகிறீர்களா என்பதையும், தேவனுக்கு விசுவாசமாக இருப்பதையும் பொறுத்தே தீர்மானிக்கப்படும். நீ எவ்வளவு ஓடுகிறாய் என்பது பொருட்டல்ல, உன் சொந்த நோக்கங்களுக்கு விரோதமாக செயல்பட ஒருபோதும் அறியாதிருந்து, புறம்பான செயல்கள் மற்றும் உணர்ச்சிபூர்வ ஆர்வத்தை மட்டுமே தேடினால், உன் வாழ்க்கையில் ஒருபோதும் கவனம் செலுத்தாமல் இருந்தால், உன்னுடைய பாடுகள் அத்தனையும் வீணாயிருந்திருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்” என்பதிலிருந்து

354. தேவன் நடைமுறையான தேவனாக இருக்கிறார். அவருடைய கிரியைகள் எல்லாம் நடைமுறையானவையாக இருக்கின்றன, அவர் பேசுகிற வார்த்தைகள் எல்லாம் நடைமுறையானவையாக இருக்கின்றன, அவர் வெளிப்படுத்துகிற சத்தியங்கள் எல்லாம் நடைமுறையானவையாக இருக்கின்றன. அவருடைய வார்த்தைகளாக இல்லாதவைகளெல்லாம் வெற்றிடமும், இல்லாதவையும், ஆதாரம் அற்றவையும் ஆகும். இன்று, பரிசுத்த ஆவியானவர் மக்களைத் தேவனின் வார்த்தைகளுக்குள் வழிநடத்துகிறார். மக்கள் யதார்த்தத்திற்குள் நுழைய வேண்டுமானால், அவர்கள் யதார்த்தத்தைத் தேட வேண்டும், யதார்த்தத்தை அறிந்துகொள்ள வேண்டும், அதன் பிறகு அவர்கள் யதார்த்தத்தை அனுபவித்து, யதார்த்தமாக வாழ வேண்டும். மக்கள் யதார்த்தத்தை எத்தனை அதிகமாக அறிந்திருக்கிறார்களோ, அவர்களால் பிறரின் வார்த்தைகள் உண்மையானவையா என்பதை அவ்வளவு அதிகமாக அறிந்துகொள்ள முடிகிறது. மக்கள் யதார்த்தத்தை எவ்வளவு அதிகமாக அறிவார்களோ, அவர்களிடம் அவ்வளவு குறைவான கருத்துக்கள் உள்ளன. மக்கள் எவ்வளவு அதிகமாக யதார்த்தத்தை அனுபவிக்கிறார்களோ, அவர்கள் யதார்த்தத்தின் தேவனின் கிரியைகளை அவ்வளவு அதிகம் அறிவார்கள், மேலும் அவர்களுடைய பாழான, சாத்தானுக்குரிய மனநிலையிலிருந்து விடுதலையாவது அவர்களுக்கு அவ்வளவு எளிது. மக்கள் எவ்வளவு யதார்த்தத்தை பெற்றிருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை அறிவார்கள், மேலும் அவ்வளவு அதிகமாக அவர்கள் மாம்சத்தை வெறுக்கிறார்கள் மற்றும் சத்தியத்தை நேசிக்கிறார்கள். மேலும் மக்கள் எவ்வளவு யதார்த்தமாக இருக்கிறார்களோ, தேவனின் தேவைகளின் விதிமுறைக்கு அவ்வளவு நெருக்கமாக வருகிறார்கள். தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டவர்கள் யதார்த்தத்தைப் பெற்றவர்கள், யதார்த்தத்தை அறிந்தவர்கள் ஆவர், தேவனின் உண்மையான கிரியைகளை யதார்த்தத்தை அனுபவிப்பதன் மூலம் அறிந்து கொண்டவர்கள் ஆவர். நீ ஒரு நடைமுறையான வழியில் எவ்வளவு அதிகமாக தேவனுக்கு ஒத்துழைத்து, உன் சரீரத்தை சீர்ப்படுத்துகிறாயோ, அவ்வளவு அதிகமாக பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நீ பெற்றுக்கொள்வாய், அவ்வளவு அதிகமாக நீ யதார்த்தத்தை பெற்றுக்கொள்வாய், மேலும் நீ தேவனால் அவ்வளவு அதிகமாய் வெளிச்சத்தைப் பெறுவாய், இதனால் தேவனின் உண்மையான கிரியைகளைப் பற்றிய உனது அறிவு பெருகும். உன்னால் பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வெளிச்சத்தில் வாழ முடிந்தால், உனக்கு நடைமுறைக்கான தற்போதைய பாதை தெளிவானதாகிவிடும், மேலும் உனக்கு கடந்தகால மதக் கருத்துக்கள் மற்றும் பழைய நடைமுறைகளிலிருந்து உன்னைப் பிரிக்க அதிக வாய்ப்பு இருக்கும். யதார்த்தம் தான் இன்றைய கவனமாயிருக்கிறது. மக்களிடம் எவ்வளவு யதார்த்தம் இருக்கிறதோ, சத்தியத்தைப் பற்றிய அவர்களின் அறிவு அவ்வளவு தெளிவாயிருக்கிறது, மேலும் அவர்களுடைய தேவனுடைய சித்தத்தைக் குறித்து அதிக புரிதல் இருக்கும். யதார்த்தத்தால் எல்லா எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் மேற்கொள்ள முடியும், அது எல்லா கோட்பாடுகளையும் திறமைகளையும் மேற்கொள்ள முடியும், மேலும் மக்கள் எவ்வளவு அதிகமாக யதார்த்தத்தின் மீது கவனம் செலுத்துகிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை உண்மையாக நேசித்து, அவருடைய வார்த்தைகளுக்காக பசியும் தாகமுமாயிருக்கிறார்கள். எப்போதும் நீ யதார்த்தத்தில் கவனம் செலுத்தினால், வாழ்க்கை, மதக் கருத்துக்கள் மற்றும் இயல்பான குணங்கள் குறித்த உன்னுடைய தத்துவம் இயல்பாகவே தேவனின் கிரியையைப் பின்பற்றி நீக்கப்படும். யதார்த்தத்தைப் பின்தொடராத, யதார்த்தத்தைக் குறித்த எவ்வித அறிவும் இல்லாதவர்களாகிய அவர்கள், இயற்கைக்கு அப்பாற்பட்டது எதுவோ அதைப் பின்தொடருவார்கள், மேலும் அவர்கள் எளிதாக ஏமாற்றமடைவார்கள். இதுபோன்றோரில் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதற்கான வழியில்லை, எனவே அவர்கள் ஒன்றுமில்லாதவர்களாக உணர்கிறார்கள், மேலும் அதனால் அவர்களின் வாழ்க்கை அர்த்தமற்றதாயிருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “யதார்த்தத்தை அறிந்துகொள்வது எப்படி” என்பதிலிருந்து

355. நீங்கள் எவ்வளவு உண்மையை நடைமுறைக்குக் கொண்டுவருகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் சத்தியத்தைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையை எவ்வளவு அதிகமாக நடைமுறைப்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக தேவனின் அன்பையும் நீங்கள் பெற்றிருப்பீர்கள். மேலும் நீங்கள் உண்மையை எவ்வளவு அதிகமாக நடைமுறைப்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். நீ எப்பொழுதும் இந்த வழியில் பயிற்சி செய்தால், உன்னைக்குறித்த தேவனின் அன்பு படிப்படியாக பேதுரு தேவனை அறிந்தது கொண்டதைப் போலவே உன்னை பார்க்கும்படியாக செய்யும். பேதுரு, தேவனிடம் வானத்தையும் பூமியையும் மற்றும் எல்லாவற்றையும் உண்டாக்கும் ஞானம் மட்டுமல்ல, ஆனால், மேலும், மக்களில் உண்மையான கிரியையைச் செய்வதற்கான ஞானமும் அவரிடம் உள்ளது என்று சொன்னார். வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் உண்டாக்கியதன் காரணமாக மட்டுமல்லாமல், மேலும் மனிதனை படைப்பதற்கும், மனிதனைக் இரட்சிப்பதற்கும், மனிதனை பரிபூரணமாக்குவதற்கும், அவனுடைய அன்பைப் பெறுவதற்குமான அவருடைய திறனின் காரணமாக அவர் ஜனங்களின் அன்பிற்கு தகுதியானவர் என்று பேதுரு கூறினார். ஆகவே, மனிதனின் அன்பிற்கு தகுதியானவை அவரிடத்தில் அதிகம் இருப்பதாக பேதுரு சொல்லத்தான் செய்தார். பேதுரு இயேசுவை நோக்கி, “வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் உண்டாக்கியதே ஜனங்களின் அன்பிற்கு நீர் தகுதியானவராக ஒரே காரணமா? உம்மில் உள்ள அநேகக் காரியங்கள் அன்புக்குறியவை. நீர் நிஜ வாழ்க்கையில் செயல்படுகிறீர், நகர்கிறீர், உம் ஆவி என்னை உள்ளே தொடுகிறது, நீர் என்னை ஒழுங்குபடுத்துகிறீர், நீர் என்னை நிந்திக்கிறீர்—இந்த விஷயங்கள் ஜனங்களின் அன்பிற்கு இன்னும் தகுதியானவை.” நீ தேவனின் அன்பைக் காணவும் அனுபவிக்கவும் விரும்பினால், நீ நிஜ வாழ்க்கையில் ஆராய்ந்து தேட வேண்டும், மேலும் உன் சொந்த மாம்சத்தை ஒதுக்கி வைக்க தயாராக இருக்க வேண்டும். இந்த தீர்மானத்தை நீ செய்ய வேண்டும். சோம்பேறியாகவோ அல்லது மாம்சத்தின் இன்பங்களை விரும்பாமலோ, மாம்சத்திற்காக வாழாமல் தேவனுக்காக வாழ்வனாகவும் இருந்து, எல்லாவற்றிலும் தேவனை திருப்திப்படுத்தக்கூடிய உறுதியான ஒருவராக நீ இருக்க வேண்டும். நீ தேவனை திருப்திப்படுத்தாத சமயங்கள் இருக்கலாம். ஏனென்றால், நீ தேவனின் விருப்பத்தை புரிந்து கொள்ளவில்லை. அடுத்த முறை, அதிக முயற்சி தேவை என்றாலும், நீ அவரை திருப்திப்படுத்த வேண்டும் மற்றும் மாம்சத்தை திருப்திப்படுத்தக்கூடாது. இந்த வழியில் நீ அனுபவம் பெறும்போது, நீ தேவனை அறிந்து கொண்டிருப்பாய். வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் தேவனால் உண்டாக்க முடியும் என்பதையும், அவர் மாம்சமாகிவிட்டார் என்பதையும், அதனால் ஜனங்கள் உண்மையில் அவரைப் பார்க்கவும், அவருடன் உண்மையில் ஐக்கியப்படவும் முடியும் என்பதை நீ கண்டுகொள்வாய். அவர் மனிதர்களிடையே நடக்க முடிகிறது என்பதையும், அவருடைய ஆவியால் நிஜ வாழ்க்கையில் ஜனங்களை பரிபூரணமாக்க முடியும் என்பதையும், அவருடைய அருமையைக் காணவும், அவருடைய ஒழுக்கத்தையும், தண்டனையையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கவும் அவர்களை அனுமதிக்கிறது என்பதையும் நீ கண்டுகொள்வாய். நீ எப்போதுமே இந்த வழியில் அனுபவித்தால், நிஜ வாழ்க்கையில் நீ தேவனிடமிருந்து பிரிக்கமுடியாதவனாக இருப்பாய், ஒரு நாள் தேவனுடனான உன் உறவு சாதாரணமாகிவிட்டால், உன்னால் நிந்தனைக்கு ஆளாகி வருத்தத்தை உணர முடியும். நீ தேவனுடன் ஒரு சாதாரண உறவைக் கொண்டிருக்கும்போது, நீ ஒருபோதும் தேவனை விட்டு விலக விரும்பமாட்டாய், ஒரு நாள் தேவன் உன்னைத் தாம் கைவிட்டு விடுவதாக சொன்னால், நீ பயப்படுவாய், மேலும் நீ தேவனால் கைவிடப்படுவதை விட இறந்துவிடுவது மேல் என்று கூறுவாய். இந்த உணர்ச்சிகளை நீ பெற்றவுடன், உன்னால் தேவனை விட்டு விலக இயலாது என்று நீ உணர்ந்து கொள்வாய், இந்த வழியில், நீ ஒரு அடித்தளத்தை வைத்திருப்பாய், மேலும் தேவனின் அன்பை உண்மையிலேயே அனுபவிப்பாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்” என்பதிலிருந்து

356. மக்களின் மிகப்பெரிய தவறு என்னவென்றால், தேவன் மீதுள்ள விசுவாசத்தில், அவர்கள் தேவனுடைய வார்த்தையை மட்டுமே விசுவாசிக்கிறார்கள் தேவன் அவர்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகி இருக்கிறார். எல்லா மக்களும், தேவன் ஜீவித்திருப்பதை நம்புகிறார்கள், ஆனால் தேவன் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை. மக்களின் வாய்கள் தேவனிடம் அநேக ஜெபங்களை ஏறெடுக்கிறது, ஆனால் தேவனுக்கு அவர்களின் இதயங்களில் இடமில்லை, எனவே தேவன் அவர்களிடம் இடம்பெற மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறார். ஏனெனில் மக்கள் தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள், இதனால் அவர்கள் வெட்கப்படவும் இந்த சோதனைகளுக்கு மத்தியில், தங்களை அறிந்து கொள்ளவும் செய்வதைத் தவிர தேவனுக்கு வேறு வழியில்லை. இல்லையென்றால், மானுடம் பிரதான தூதரின் சந்ததியினராக மாறும், அல்லாமல் மிகவும் தீமை நிறைந்ததாக மாறும். தேவன் மீது அவர்கள் வைத்திருக்கும் விசுவாசத்தின் செயல்பாட்டில், ஒவ்வொரு நபரும் தேவனின் இடைவிடாத சுத்திகரிப்பின் கீழ் தங்களின் பல தனிப்பட்ட நோக்கங்களையும், குறிக்கோள்களையும் விலக்குகிறார்கள். இல்லையென்றால், தேவன் யாரையும் பயன்படுத்துவதற்கான வழி இருக்காது, மேலும் அவர் செய்ய வேண்டிய வேலையை மக்களிடையே செய்ய முடியாது. தேவன் முதலில் மக்களை சுத்தப்படுத்துகிறார், இந்த செயல்முறையின் மூலம், தேவன் அவர்களை மாற்றக்கூடும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளலாம். அப்போதுதான் தேவன் தம்முடைய வாழ்க்கையை அவர்களுக்குள் செயல்படுத்துகிறார், இதனால் மட்டுமே அவர்களின் இருதயங்கள் முழுமையாக தேவனிடம் திரும்ப முடியும். எனவே நான் சொல்கிறேன், தேவனை நம்புவது மக்கள் சொல்வது போல் எளிதானது அல்ல. தேவன் அதைப் பார்க்கிறார், உனக்கு அறிவு மட்டுமே உண்டாயிருந்து, ஆனால் அவருடைய வார்த்தையை ஜீவனாக கொண்டிருக்கவில்லை என்றால், மேலும் நீ உன் சொந்த அறிவுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், சத்தியத்தை கடைப்பிடிக்கவோ அல்லது தேவனுடைய வார்த்தைப்படி வாழவோ முடியாவிட்டால், தேவனை நேசிக்கும் இதயம் உன்னிடம் இல்லை என்பதற்கு இதுவே சான்றாகும், உன் இதயம் தேவனுக்கு உரியதல்ல என்பதை இது காட்டுகிறது. ஒருவர் தேவனை விசுவாசிப்பதின் மூலம் அவரை அறிந்து கொள்ள முடியும்: இதுவே இறுதி இலக்கு மனிதனின் நாட்டத்தின் குறிக்கோள். தேவனுடைய வார்த்தைகளைச் செயல்படுத்துவதற்கு நீ முயற்சி செய்ய வேண்டும், இதனால் அவை உனக்கு நடைமுறையில் பலனளிக்கும். உன்னிடம் கோட்பாட்டு அறிவு மட்டுமே இருந்தால், தேவன் மீதான உன் விசுவாசம் வீணாகிவிடும். நீ அவருடைய வார்த்தையை கடைப்பிடித்து வாழ்ந்தால் மட்டுமே, உன் விசுவாசம் முழுமையானதாகவும், தேவனின் விருப்பத்திற்கு இணங்கவும் இருக்கமுடியும். இந்த வழியில், மக்கள் அதிகமாக அறிவு சார்ந்ததைப் பற்றி பேசலாம், ஆனால் அவர்கள் இறக்கும் போது, அவர்களின் கண்கள் கண்ணீரால் சூழ்ந்துக் கொள்கின்றன, மேலும் அவர்கள் வாழ்நாளை வீணடித்ததற்காக தங்களை வெறுக்கிறார்கள், முதிர் வயதில் வீணாக வாழ்ந்தார்கள். அவர்கள் வெறுமனே கோட்பாடுகளைப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் உண்மையை நடைமுறைக்குக் கொண்டுவரவோ அல்லது தேவனுக்கு சாட்சி கொடுக்கவோ முடியாது; அதற்கு பதிலாக, அவர்கள் வெறுமனே அங்கும் இங்கும் ஓடுகிறார்கள், ஒரு தேனீ போல சுறுசுறுப்பாக இருக்கிறார்கள், மரணத்தின் விளிம்பில் மட்டுமே அவர்கள் உண்மையான சாட்சியம் இல்லாததையும் அவர்கள் தேவனை அறியவில்லை என்பதையும் காண்கிறார்கள். இது மிகவும் தாமதமானதாக இல்லையா? நீ ஏன் இன்றைய நாளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி நீ விரும்பும் சத்தியத்தைத் தொடரக்கூடாது? நாளை வரை ஏன் காத்திருக்க வேண்டும்? வாழ்க்கையில் நீ சத்தியத்திற்காகக் கஷ்டப்படாவிட்டால் அல்லது அதைப் பெற முயற்சிக்கவில்லை என்றால், நீங்கள் மரிக்கும் நேரத்தில் நீ வருத்தப்பட விரும்புகிறாயா? அப்படியானால், ஏன் தேவனை விசுவாசிக்கிறாய்? உண்மையாக, மக்கள், சிறிதளவு முயற்சி செய்தால், சத்தியத்தை நடைமுறைப்படுத்தினால், அதன் மூலம் தேவனை திருப்திப்படுத்தக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. மக்களின் இருதயங்கள் எப்போதுமே சாத்தானால் பிடிக்கப்பட்டிருப்பதால், அவர்கள் தேவனுக்காக செயல்பட முடியாமல் போகிறது, மேலும் அவர்களின் மாம்சத்திற்காக தொடர்ந்து விரைந்து செய்லபடுகின்றனர், இறுதியில் அதைக்காட்ட எதுவும் இல்லை. இந்தக் காரணத்திற்காக, மக்கள் தொடர்ந்து தொல்லைகள் மற்றும் சிரமங்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை சாத்தானின் உபத்திரவம் அல்லவா? இது மாம்சத்தின் கெடுதல் அல்லவா? நீ உதட்டளவில் பேசி தேவனை முட்டாளாக்க முயற்சிக்கக்கூடாது. மாறாக, நீ உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உன்னையே நீ ஏமாற்ற வேண்டாம், அதன் பயன் என்ன? உன் மாம்சத்திற்காக வாழ்வதன் மூலமும், லாபத்துக்காகவும் புகழுக்காகவும் போராடுவதன் மூலம் நீ என்ன பெற முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ தேவனை விசுவாசிப்பதினால் சத்தியத்திற்காகவே நீ வாழ வேண்டும்” என்பதிலிருந்து

357. தேவனை உண்மையாக விசுவாசிக்கிறவர்கள் தேவனின் வார்த்தையைக் கடைப்பிடிக்க விரும்புபவர்களாகவும், சத்தியத்தைக் கடைப்பிடிக்க விரும்புபவர்களாகவும் இருக்கின்றனர். தேவனுக்கு சாட்சியமளிப்பதில் உண்மையிலேயே உறுதியாக நிற்கக்கூடிய ஜனங்கள் அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிக்கத் தயாராக இருப்பவர்களாகவும், உண்மையாக சத்தியத்தின் பக்கம் நிற்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர். தந்திரத்தையும் அநீதியையும் நாடுகிற ஜனங்கள் அனைவரிடமும் சத்தியம் இருக்காது, அவர்கள் அனைவரும் தேவனுக்கு அவமானத்தைத் தருகிறார்கள். திருச்சபையில் சச்சரவுகளை ஏற்படுத்துபவர்கள் சாத்தானின் சேவகர்கள், அவர்கள் சாத்தானின் உருவகமாகவும் இருக்கின்றனர். அத்தகையவர்கள் மிகவும் தீங்கிழைக்கக்கூடியவர்கள். எந்தவிதமான பகுத்தறிவும் இல்லாதவர்களும், சத்தியத்தின் பக்கத்தில் நிற்க இயலாதவர்களும் தீய நோக்கங்களை மனதில் தேக்கிவைத்து, சத்தியத்தைக் களங்கப்படுத்துகிறார்கள். அதற்கும் மேலாக, அவர்கள் சாத்தானின் மூலப்படிம பிரதிநிதிகள். அவர்கள் மீட்பிற்கு அப்பாற்பட்டவர்கள், மற்றும் இயற்கையாகவே அகற்றப்படுவார்கள். தேவனின் குடும்பம் சத்தியத்தை கடைப்பிடிக்காதவர்களை நிலைத்திருக்க அனுமதிக்காது, திருச்சபையை வேண்டுமென்றே தகர்ப்பவர்களை நிலைத்திருக்க அனுமதிக்காது. இருப்பினும், வெளியேற்றும் வேலையைச் செய்ய இது நேரம் இல்லை; அத்தகைய ஜனங்கள் இறுதியில் அம்பலப்படுத்தப்படுவார்கள் மற்றும் அகற்றப்படுவார்கள். இந்த ஜனங்கள் மீது மேலும் பயனற்ற வேலை எதுவும் பயன்படுத்தப்படக்கூடாது; சாத்தானைச் சேர்ந்தவர்கள் சத்தியத்தின் பக்கம் நிற்க முடியாது, அதேசமயம் சத்தியத்தை நாடுபவர்களால் முடியும். சத்தியத்தை கடைப்பிடிக்காத மக்கள் சத்தியத்தின் வழியைக் கேட்க தகுதியற்றவர்கள், சத்தியத்திற்கு சாட்சியாக இருக்க தகுதியற்றவர்கள். சத்தியம் அவர்களின் காதுகளுக்கு மட்டுமே அல்ல; மாறாக, அதைக் கடைப்பிடிப்பவர்களை நோக்கி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு நபரின் முடிவும் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்பு, திருச்சபையைத் தொந்தரவு செய்வோர் மற்றும் தேவனின் கிரியைக்கு இடையூறு விளைவிப்போர் முதலில் இப்போதைக்கு ஒதுக்கி வைக்கப்படுவார்கள், பின்னர் அவர்கள் கையாளப்படுவார்கள். கிரியை நிறைவேறியதும், இந்த ஜனங்கள் ஒவ்வொருவரும் அம்பலப்படுத்தப்படுவார்கள், பின்னர் அவர்கள் அகற்றப்படுவார்கள். தற்போதைக்கு, சத்தியம் வழங்கப்படும்போது, அவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். முழு சத்தியமும் மனுஷகுலத்திற்கு வெளிப்படுத்தப்படும் போது, அந்த ஜனங்கள் அகற்றப்பட வேண்டும்; எல்லா ஜனங்களும் தங்கள் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படும் நேரமாக அது இருக்கும். பகுத்தறிவு இல்லாதவர்களின் அற்பமான தந்திரங்கள் துன்மார்க்கரின் கைகளில் அவர்கள் அழிவுக்கு வழிவகுக்கும், அவர்கள் ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்று அவர்களால் நயங்காட்டப்படுவார்கள். அத்தகைய கவனிப்புதான் அவர்களுக்குத் தேவை, ஏனென்றால் அவர்கள் சத்தியத்தை நேசிக்கவில்லை, ஏனென்றால் அவர்களால் சத்தியத்தின் பக்கம் நிற்க இயலவில்லை, ஏனென்றால் அவர்கள் தீயவர்களைப் பின்பற்றுகிறார்கள் மற்றும் தீயவர்களின் பக்கம் நிற்கிறார்கள், மற்றும் அவர்கள் தீயவர்களுடன் இணைந்து, தேவனை எதிர்க்கிறார்கள். அந்த தீயவர்கள் வெளிப்படுத்துபவை தீயவை என்பதை அவர்கள் பரிபூரணமாக அறிவார்கள், ஆனாலும் அவர்கள் இருதயங்களை கடினப்படுத்தி, அவர்களைப் பின்பற்றுவதற்காக சத்தியத்தைப் புறக்கணிக்கிறார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிக்காத, ஆனால் அழிவுகரமான மற்றும் அருவருப்பான காரியங்களைச் செய்கிற இந்த ஜனங்கள் அனைவரும் தீமை செய்யவில்லையா? அவர்களில் தங்களை ராஜாக்களாக அலங்கரிப்பவர்களும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள் என்றாலும், அவர்களுடைய தேவனை எதிர்க்கும் இயல்புகள் அனைத்தும் ஒன்றல்லவா? தேவன் அவர்களை இரட்சிக்கவில்லை என்பதற்கு அவர்கள் என்ன காரணம் சொல்ல முடியும்? தேவன் நீதியுள்ளவர் அல்ல என்று அவர்கள் கூறுவதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? அவர்களை அழிப்பது அவர்களின் சொந்த தீமை அல்லவா? அவர்களை நரகத்திற்குள் இழுத்துச் செல்வது அவர்களின் சொந்தக் கலகம் அல்லவா? சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் ஜனங்கள், இறுதியில், சத்தியத்தின் காரணமாக இரட்சிக்கப்பட்டு பரிபூரணப்படுவார்கள். சத்தியத்தை கடைப்பிடிக்காதவர்கள், இறுதியில், சத்தியத்தின் காரணமாக தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் கடைப்பிடிக்காதவர்களுக்கும் காத்திருக்கும் முடிவுகள் இவை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை” என்பதிலிருந்து

முந்தைய: A. தேவன் மீது விசுவாசம் வைத்திருப்பது என்றால் என்ன என்பதை வெளிப்படுத்துதல் குறித்து

அடுத்த: C. தன்னை அறிந்துகொள்வது மற்றும் மெய்யான மனந்திரும்புதலை அடைவது எப்படி என்பது குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக