B. கிருபையின் காலத்தில் அவருடைய கிரியைப் பற்றிய தேவனுடைய வெளிப்பாடு குறித்து

28. கிருபையின் காலத்தில் அனைத்து கிரியைகளையும் இயேசு பிரதிநிதித்துவப்படுத்துகிறார்; அவர் மாம்சத்தில் அவதரித்தார், சிலுவையில் அறையப்பட்டார், மேலும் அவர் கிருபையின் யுகத்தையும் தொடங்கினார். மீட்பின் கிரியையை நிறைவு செய்வதற்கும், நியாயப்பிரமாண யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கிருபையின் யுகத்தை தொடங்குவதற்கும் அவர் சிலுவையில் அறையப்பட்டார். எனவே அவர் “பிரதான அதிபதி”, “பாவநிவாரணபலி” மற்றும் “மீட்பர்” என்று அழைக்கப்பட்டார். இதன் விளைவாக, இயேசுவின் கிரியையும், யேகோவாவின் கிரியையும் கொள்கை அடிப்படையில் ஒன்றாக இருப்பினும் உள்ளடக்கத்தில் வேறுபடுகின்றன. யேகோவா நியாயப்பிரமாண யுகத்தைத் தொடங்கினார். பூமியில் தேவனுடைய கிரியைக்கான அடிப்படையை, அதாவது தோற்றுவிக்கும் இடத்தை நிறுவி, கற்பனைகளையும் கட்டளைகளையும் வெளியிட்டார். இவை அவர் மேற்கொண்ட இரண்டு கிரியைகளாகும், மேலும் இவை நியாயப்பிரமாண யுகத்தைக் குறிக்கின்றன. கிருபையின் யுகத்தில் இயேசு செய்த கிரியை, நியாயப்பிரமாணங்களை வெளியிடுவதல்ல, ஆனால் அவற்றை நிறைவேற்றுவதேயாகும். இதன் மூலம் கிருபையின் யுகத்தை அறிமுகப்படுத்துவதும், இரண்டாயிரம் ஆண்டுகள் நீடித்த நியாயப்பிரமாண யுகத்தை நிறைவு செய்வதும் ஆகும். அவர் கிருபையின் யுகத்தைத் தொடங்குவதற்காக வந்த வழிகாட்டியாக இருந்தார், ஆனாலும் அவருடைய கிரியையின் முக்கிய பகுதி மீட்பில் இருந்தது. ஆகவே அவருடைய கிரியையும் இரு மடங்காக இருந்தது: ஒரு புதிய யுகத்தைத் தொடங்குவதும், தான் சிலுவையில் அறையப்படுவதன் மூலம் மீட்பின் வேலையை முடிப்பதும் அந்த இரு மடங்கான கிரியை ஆகும். அதன் பிறகு அவர் புறப்பட்டார். இவ்வாறு நியாயப்பிரமாணத்தின் யுகம் முடிவடைந்து கிருபையின் யுகம் ஆரம்பமானது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை” என்பதிலிருந்து

29. கிருபையின் யுகத்தில் மனுஷனை இரட்சித்த தேவன், இயேசு. அவர் கிருபையும், அன்பும், இரக்கமும், சகிப்புத்தன்மையும், பொறுமையும், தாழ்மையும், கவனிப்பும் கொண்டவராகவும், அதன் உருவாகவும் இருந்தார். அவர் செய்தப் பல கிரியைகள் மனுஷனின் மீட்பிற்காகவே இருந்தன. அவரது மனநிலை இரக்கமும் அன்பும் நிறைந்த ஒன்றாகும், மேலும் அவர் இரக்கமுள்ளவராகவும் அன்பானவராகவும் இருந்ததால், தேவன் தம்மை நேசித்தது போலவே மனுஷனையும் நேசித்தார் என்பதைக் காண்பிக்க, மனுஷனுக்காக அவர் சிலுவையில் அறையப்பட வேண்டியிருந்தது, அந்த அளவுக்கு அவர் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார். கிருபையின் யுகத்தில், தேவனின் நாமம் இயேசு என்பதாக இருந்தது, அதாவது தேவன் என்பவர் மனுஷனை இரட்சித்த தேவனாக இருந்தார், அவர் இரக்கமுள்ள மற்றும் அன்பான தேவனாக இருந்தார். தேவன் மனுஷனுடன் இருந்தார். அவருடைய அன்பும், இரக்கமும், அவருடைய இரட்சிப்பும் ஒவ்வொரு மனுஷனுடனும் இருந்தன. இயேசுவின் நாமத்தையும் அவருடைய பிரசன்னத்தையும் ஏற்றுக்கொண்டதன் மூலம் மட்டுமே மனுஷனால் அமைதியையும், மகிழ்ச்சியையும் பெற முடிந்தது, அவருடைய ஆசீர்வாதத்தையும், அவருடைய பரந்த மற்றும் ஏராளமான கிருபையையும், அவருடைய இரட்சிப்பையும் பெற முடிந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்டதன் மூலம், அவரைப் பின்பற்றிய அனைவரும் இரட்சிப்பைப் பெற்றார்கள், அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. கிருபையின் யுகத்தில், தேவனின் நாமம் இயேசு என்பதாக இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிருபையின் யுகத்தின் கிரியைகள் முக்கியமாக இயேசு என்ற நாமத்தில் தான் செய்யப்பட்டன. கிருபையின் யுகத்தில், தேவன், இயேசு என்று அழைக்கப்பட்டார். அவர் பழைய ஏற்பாட்டையும் தாண்டி புதிய கிரியையின் ஒரு கட்டத்தை மேற்கொண்டார், அவருடைய கிரியை சிலுவையில் அறையப்படுவதுடன் நிறைவு செய்யப்பட்டது. இதுவே அவருடைய கிரியையின் முழுமையாக இருந்தது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

30. இயேசு செய்த கிரியை அந்த யுகத்தில் மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப இருந்தது. அவருடைய கிரியை மனிதகுலத்தை மீட்பதும், அவர்களுடைய பாவங்களை மன்னிப்பதும் ஆகும். ஆகவே அவருடைய மனநிலையானது மனத்தாழ்மை, பொறுமை, அன்பு, பக்தி, சகிப்புத்தன்மை, இரக்கம் மற்றும் கிருபை ஆகிய அனைத்தும் கலந்த ஒன்றாக இருந்தது. அவர் மிகுதியான கிருபையையும் ஆசீர்வாதங்களையும் மனிதகுலத்திற்குக் கொண்டுவந்தார். மேலும் மக்கள் அனுபவிக்கக்கூடிய சமாதானம் மற்றும் மகிழ்ச்சி, அவருடைய சகிப்புத்தன்மை மற்றும் அன்பு, அவருடைய இரக்கம் மற்றும் கிருபை என எல்லாவற்றையும், அவர்களுடைய இன்பத்திற்காக அவர் அவர்களுக்குக் கொடுத்தார். அந்த காலகட்டத்தில், ஜனங்கள் இன்பத்துடன் அனுபவித்த அனுபவங்களாவன—அவர்களின் இருதயங்களுக்குள் சமாதானம் மற்றும் பாதுகாப்பின் உணர்வு, அவர்களின் ஆவிகளுக்குள் நிச்சயத்தின் உணர்வு, மற்றும் இரட்சகராகிய இயேசுவை அவர்கள் சார்ந்திருத்தல்—என இவை அனைத்தும் அவர்கள் வாழ்ந்த, அந்த யுகம் முழுவதும் நிறைந்திருந்தன. மனிதன் ஏற்கனவே சாத்தானால் சிதைந்துவிட்டான். ஆகவே கிருபையின் யுகத்தில், எல்லா மனிதர்களையும் மீட்கும் கிரியைக்கு, மிகுதியான கிருபையும், எல்லையற்ற சகிப்புத்தன்மையும், பொறுமையும் தேவைப்பட்டது. அதற்கும் மேலாக, ஒரு பலனைப் பெற, மனிதகுலத்தின் பாவங்களுக்கு நிவாரணம் செய்யப் போதுமான பலி ஒன்று தேவைப்பட்டது. கிருபையின் யுகத்தில் மனிதகுலம் கண்டது மனிதகுலத்தின் பாவங்களுக்கான எனது பாவநிவாரணபலி மட்டுமே: இயேசு. அவர்கள் அறிந்ததெல்லாம், தேவன் இரக்கமுள்ளவராகவும், சகிப்புத்தன்மையுள்ளவராகவும் இருக்க முடியும் என்பதாகும். மேலும் அவர்கள் பார்த்ததெல்லாம் இயேசுவின் இரக்கமும், கிருபையும் மட்டுமே. இவை அனைத்திற்கும் காரணம் அவர்கள் கிருபையின் யுகத்தில் பிறந்தார்கள் என்பதே. ஆகவே, அவர்கள் மீட்கப்படுவதற்கு முன்பு, இயேசு தங்களுக்கு அளித்த பல வகையான கிருபையை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருந்தது. இது மட்டுமே அவர்களுக்குப் பயனுள்ளதாய் இருந்தது. இவ்வாறு, அவர்கள் கிருபையை அனுபவிப்பதன் மூலம் தாங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற முடியும். மேலும் இயேசுவின் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் அனுபவிப்பதன் மூலமும் மீட்கப்படுவதற்கான வாய்ப்பைப் பெற முடியும். இயேசுவின் சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையினால் மட்டுமே அவர்கள் மன்னிப்பைப் பெறுவதற்கான உரிமையை ஜெயித்தனர், மேலும் இயேசு அளித்த மிகுதியான கிருபையினை அனுபவித்தனர். இயேசு சொன்னது போல்: பாவிகள் அவர்களுடைய பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெறத்தக்கதாக அனுமதிக்கும்படி, நீதிமான்களையல்ல பாவிகளை மீட்பதற்கே வந்திருக்கிறேன். இயேசு மாம்சமானபோது, அவர் மனிதனின் குற்றங்களுக்கு சகிப்பின்மையையும், நியாயத்தீர்ப்பையும், சாபத்தையும் கொண்டு வந்திருந்தால், மனிதன் ஒருபோதும் மீட்கப்படுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்க மாட்டான், என்றென்றும் பாவியாகவே இருந்திருப்பான். இது அவ்வாறு இருந்திருந்தால், ஆறாயிரம் ஆண்டு மேலாண்மைத் திட்டம் நியாயப்பிரமாண யுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும், மேலும் நியாயப்பிரமாணத்தின் காலம் இன்னும் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும். மனிதனின் பாவங்கள் மிகுதியானதாக மற்றும் மிகவும் மோசமானதாக வளர்ந்திருக்கும். மேலும் மனிதகுலத்தின் சிருஷ்டிப்பு வீணானதாக இருந்திருக்கும். மனிதர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டு யேகோவாவுக்கு சேவை மட்டுமே செய்திருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பாவங்கள் முதலில் படைக்கப்பட்ட மனிதர்களின் பாவங்களைவிட அதிகமாக இருந்திருக்கும். இயேசு எவ்வளவு அதிகமாக மனிதகுலத்தை நேசித்தாரோ, அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களிடம் போதுமான இரக்கத்தையும் கிருபையையும் கொண்டுவந்தாரோ, அதற்கு ஈடாக மனிதர்களும், இயேசு ஒரு பெரிய விலைக்கிரயம் செலுத்தி திரும்பப் பெற்ற வழித்தவறிய ஆட்டுக்குட்டிகள் என்று அழைக்கப்படுவதற்கான உரிமையில் இருக்கிறார்கள். இந்த கிரியையில் சாத்தானால் தலையிட முடியவில்லை, ஏனென்றால் இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை ஒரு அன்பான தாய் குழந்தையை தன் மார்பில் சாய்த்துக்கொள்வது போல நடத்துகிறார். அவர்களைக் குறித்து கோபமோ வெறுப்போ அவரிடமில்லை, ஆனால் ஆறுதல் நிறைந்தவராக இருந்தார். அவர் ஒருபோதும் அவர்களிடையே கோபப்படவில்லை, ஆனால் அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களின் முட்டாள்தனத்திற்கும் அறியாமைக்கும், “மற்றவர்களை ஏழெழுபதுதரமட்டும் மன்னியுங்கள்” என்று சொல்லும் அளவிற்கு கண்டுகொள்ளாதவராக இருந்தார். இவ்வாறு மற்றவர்களின் இருதயங்கள் அவருடைய இருதயத்தால் மாற்றப்பட்டன. இவ்வாறு ஜனங்கள் அவருடைய சகிப்புத்தன்மையின் மூலம் பாவ மன்னிப்பைப் பெற்றார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை” என்பதிலிருந்து

31. இயேசு தம்முடைய மனிதப் பிறவியில் முற்றிலும் உணர்ச்சியற்றவராக இருந்தபோதிலும், அவர் எப்போதும் தம்முடைய சீஷர்களை ஆறுதல்படுத்தினார், அவர்களுக்கு வழங்கினார், உதவினார், மேலும் அவர்களுக்கு ஆதரவளித்தார். அவர் எவ்வளவு கிரியையைச் செய்தாலும், எவ்வளவு துன்பங்களை அனுபவித்தாலும், அவர் ஒருபோதும் ஜனங்களிடம் அதிகப்படியான கோரிக்கைகளை முன்வைக்கவில்லை, மாறாக எப்போதும் பொறுமையுள்ளவராகவும், அவர்களின் பாவங்களை சகிப்பவராகவும் இருந்தார். எனவே கிருபையின் யுகத்தின் ஜனங்கள் அவரை “பிரியமான இரட்சகராகிய இயேசு” என்று அன்பாக அழைத்தனர். அக்கால ஜனங்களுக்கு—அதாவது எல்லா ஜனங்களுக்கும்—இயேசுவிடம் என்ன இருந்தது என்றால், இரக்கமும் கிருபையுமாகும். அவர் ஒருபோதும் ஜனங்களின் மீறுதல்களை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. அவர்களை அவர் நடத்திய விதம் அவர்களின் மீறுதல்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது வேறுபட்ட யுகம் என்பதால், அவர்கள் நிறைவாக புசிக்கத்தக்கதாக, அவ்வப்போது ஜனங்களுக்கு மிகுதியான ஆகாரத்தை அவர் வழங்கினார். தம்மைப் பின்பற்றிய அனைவரையும் அவர் கிருபையோடு நடத்தினார், வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கினார், பிசாசுகளைத் துரத்தினார், மரித்தவர்களை எழுப்பினார். ஜனங்கள் அவரை விசுவாசிப்பதற்கும், அவர் செய்த அனைத்தும் மிகுந்த அக்கறையுடனும், உண்மையுடனும் செய்யப்பட்டிருப்பதைக் ஜனங்கள் காணும் பொருட்டும், அவருடைய கரங்களில் இறந்தவர்கள் கூட உயிர்த்தெழ முடியும் என்பதையும் வெளிக்காட்ட, அழுகிய சடலத்தையும் உயிர்த்தெழும்பச் செய்தார். இவ்வாறு அவர் மௌனமாக சகித்துக்கொண்டு, அவர்களிடையே மீட்பின் கிரியையைச் செய்தார். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பே, அவர் மனிதகுலத்தின் பாவங்களைத் தன்மீது எடுத்துக்கொண்டு மனிதகுலத்திற்கான பாவநிவாரணபலியாக மாறியிருந்தார். சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பே, மனிதகுலத்தை மீட்பதற்காக அவர் சிலுவைக்கான வழியைத் திறந்திருந்தார். இறுதியில், அவர் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையின் பொருட்டு தன்னைத் தியாகம் செய்து, தம்முடைய இரக்கம், கிருபை மற்றும் பரிசுத்தம் என அனைத்தையும் மனிதகுலத்திற்கு வழங்கினார். அவர் மனிதகுலத்திடம் எப்போதும் சகிப்புத்தன்மை உள்ளவராகவும், ஒருபோதும் பழிவாங்காதவராகவும், அவர்களுடைய பாவங்களை மன்னிப்பவராகவும், மனந்திரும்பும்படி அவர்களை அறிவுறுத்தியவராகவும், பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் அன்பு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்தவராகவும், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி சிலுவையின் பொருட்டு தங்களைத் தியாகம் செய்ய கற்றுக் கொடுத்தவராகவும் இருந்தார். அவர் சகோதர சகோதரிகளிடம் கொண்டிருந்த அன்பு மரியாள் மீதான அன்பையும் மீறியது. மீட்பிற்காக, வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கியதும், பிசாசுகளைத் துரத்தியதும் அவர் செய்த கிரியையின் கொள்கைகளாக இருந்தன. அவர் எங்கு சென்றிருந்தாலும், தன்னைப் பின்பற்றிய அனைவரையும் அவர் கிருபையுடன் நடத்தினார். அவர், ஏழைகள் ஐஸ்வரியவான்களாகவும், முடவர்கள் நடக்கவும், குருடர்கள் பார்க்கவும், மேலும் செவிடர்கள் கேட்கவும் செய்தார். தாழ்த்தப்பட்ட, ஆதரவற்றவர்களையும், பாவிகளையும்கூட தன்னுடன் ஒரே மேஜையில் அமர அவர் அழைத்தார். அவர்களை ஒருபோதும் விலக்கிக் கொள்ளாமல், எப்போதும் பொறுமையாக இருந்தார். ஒரு மேய்ப்பனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று காணாமற்ப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுப் போய்ச் காணாமற்ப்போனதைத் தேடுவான். அவன் அதைக் கண்டுபிடித்தால், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்றும் கூறினார். ஒரு தாய் ஆடு தனது ஆட்டுக்குட்டிகளை நேசிப்பதைப் போல அவர் தம்மைப் பின்பற்றுபவர்களை நேசித்தார். அவர்கள் மூடர்களாகவும், அறிவற்றவர்களாகவும், அவருடைய பார்வையில் பாவிகளாகவும் இருந்தபோதிலும், சமுதாயத்தில் கீழானவராக இருந்தபோதிலும், இந்த பாவிகளை, அதாவது மற்றவர்களால் இகழப்பட்ட மனிதர்களை அவருடைய கண்மணிபோல கருதினார். அவர்களுக்கு அவர் தயவாக இருந்ததால், பலிபீடத்தின் மீது ஒரு ஆட்டுக்குட்டி பலியிடப்படுவது போல, அவர்களுக்காக அவர் தம் உயிரைக் கொடுத்தார். அவர்களுடைய ஊழியக்காரனைப் போல அவர் அவர்களுக்கிடையே சென்று, தம்மைப் பயன்படுத்தவும், தம்மைக் கொல்லவும் அனுமதித்தார். நிபந்தனையின்றி அவர்களுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தார். தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் நேசிக்கப்படத்தக்க மீட்பராகிய இயேசுவாக இருந்தார். ஆனால் ஒரு உயர்ந்த பீடத்திலிருந்து ஜனங்களுக்கு அறிவுரை வழங்கிய பரிசேயர்களுக்கு, அவர் இரக்கத்தையும் கிருபையையும் காட்டவில்லை, மாறாக வெறுப்பையும் மனக்கசப்பையும் காட்டினார். அவர் பரிசேயர்களிடையே அதிகமாக தன் கிரியையை நடப்பிக்கவில்லை, அவ்வப்போது அவர்களுக்கு போதித்து கண்டித்தார். அவர்களின் மத்தியில் அவர் மீட்பின் கிரியையையும் செய்யவில்லை, அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்யவில்லை. அவர் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அவருடைய இரக்கத்தையும், கிருபையையும் அளித்தார். இந்த பாவிகளுக்காக அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, கடைசி வரை சகித்துக்கொண்டார். மேலும், எல்லா மனிதர்களையும் முழுமையாக மீட்டுக்கொள்ளும் வரை ஒவ்வொரு அவமானத்தையும் அனுபவித்தார். இது அவரது கிரியைகளின் மொத்த தொகை ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை” என்பதிலிருந்து

32. இயேசுவின் மீட்பு இல்லாவிட்டால், மனிதகுலம் என்றென்றும் பாவத்தில் வாழ்ந்து, பாவத்தின் சந்ததியாக, பிசாசுகளின் சந்ததியாக மாறியிருக்கும். இவ்வாறு தொடர்ந்தால், உலகம் முழுவதும் சாத்தான் வசிக்கும் இடமாக, அவனின் வசிப்பிடமாக மாறியிருக்கும். எவ்வாறாயினும், மீட்பின் கிரியைக்காக மனிதகுலத்தின் மீது இரக்கத்தையும் கிருபையையும் காட்ட வேண்டும். அத்தகைய வழிமுறைகளால் மட்டுமே மனிதகுலம் மன்னிப்பைப் பெற முடியும். மேலும் இறுதியாக, மனிதகுலம் தேவனால் முற்றிலுமாகவும் முழுமையாகவும் பெறப்படுவதற்கான உரிமையை ஜெயிக்க முடியும். இந்த கிரியையின் நிலை இல்லாதிருந்தால், ஆறாயிரம் ஆண்டு இரட்சிப்பின் திட்டம் முன்னேற முடியாது. இயேசு சிலுவையில் அறையப்படாமல், நோயையும் பிசாசு பிடித்தவர்களையும் மட்டுமே அவர் குணப்படுத்தியிருந்தால், ஜனங்கள் தங்கள் பாவங்களிலிருந்து முழுமையான மன்னிப்பை பெற்றிருக்க முடியாது. இயேசு பூமியில் தனது கிரியையைச் செய்ய செலவழித்த மூன்றரை ஆண்டுகளில், அவர் மீட்பின் கிரியையில் பாதியை மட்டுமே முடித்தார்; பின்னர், சிலுவையில் அறையப்பட்டு, பாவப்பட்ட மாம்சத்தின் தோற்றமாக மாறுவதன் மூலம், தீயவனிடம் ஒப்படைக்கப்படுவதன் மூலம், அவர் சிலுவையில் அறையப்படுவதை செய்து முடித்து, மனிதகுலத்தின் தலைவிதியை மேற்கொண்டார். அவர் சாத்தானின் கைகளில் விடுவிக்கப்பட்ட பின்னரே, அவர் மனிதகுலத்தை மீட்டுக்கொண்டார். முப்பத்தி மூன்றரை ஆண்டுகளாக அவர் பூமியில் துன்பப்பட்டார், ஏளனம் செய்யப்பட்டார், அவதூறாக பேசப்பட்டார், கைவிடப்பட்டார், அவர் தலை சாய்க்க இடமில்லை, ஓய்வெடுக்க இடமில்லை, பின்னர் அவர் ஜீவனுள்ளவராக சிலுவையில் அறையப்பட்டார். ஒரு பரிசுத்தமான பாவமறியா உடல் சிலுவையில் அறையப்பட்டது. அங்குள்ள ஒவ்வொரு விதமான துன்பங்களையும் அவர் சகித்துக்கொண்டார். அதிகாரத்தில் இருந்தவர்கள் அவரைக் கேலி செய்து வாரினால் அடித்தார்கள், சேவகர்களும் அவருடைய முகத்தில் துப்பினர். ஆயினும் அவர் மவுனமாக இருந்தார், இறுதிவரை சகித்துக்கொண்டார், நிபந்தனையின்றி மரணம் வரைக்கும் தன்னை ஒப்புக்கொடுத்தார். அதன்பிறகு அவர் மனிதகுலம் அனைத்தையும் மீட்டுக்கொண்டார். அதற்குப் பிறகுதான் அவர் இளைப்பாற அனுமதிக்கப்பட்டார். இயேசு செய்த கிரியை கிருபையின் யுகத்தை மட்டுமே குறிக்கிறது. இது நியாயப்பிரமாண யுகத்தையும் குறிக்கவில்லை, கடைசி நாட்களின் கிரியையாகவும் இல்லை. கிருபையின் யுகத்தில் மனிதகுலம் கடந்து வந்த இரண்டாவது யுகத்தில், அதாவது மீட்பின் யுகத்தில் இயேசுவினுடைய கிரியையின் சாராம்சம் இதுவே.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை” என்பதிலிருந்து

முந்தைய: A. நியாயப்பிரமாண காலத்தில் அவருடைய கிரியைப் பற்றிய தேவனுடைய வெளிப்பாடு குறித்து

அடுத்த: C. இறுதி காலமாகிய ராஜ்யத்தின் காலம் குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக