ஒரு தகுந்த மேய்ப்பன் என்னவிதத்தில் ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்

பரிசுத்த ஆவியானவர் மக்கள் மீது கிரியை செய்யும் போது அவர்கள் இருக்கும் பல்வேறு நிலைகள் குறித்த ஒரு புரிதலை நீ பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, தேவனுக்குச் செய்யும் ஊழியத்தில் ஒருங்கிணைப்பாளர்களாக இருப்பவர்கள் இந்த நிலைகள் குறித்து இன்னும் அதிகமான அளவில் புரிதலைப் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் அனுபவங்களை அல்லது பிரவேசிப்பதற்குரிய வழிகள் குறித்து மட்டும் அதிக அளவில் பேசுவதாக இருந்தால், அது உங்கள் அனுபவம் அதிக அளவில் ஒருதலைப் பட்சமானதாக இருக்கின்றது என்பதைக் காட்டுகிறது. உங்கள் உண்மையான நிலையை அறியாமலும், சத்தியத்தின் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாமலும், மனநிலையில் ஒரு மாற்றத்தினை பெற முடியாது. பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் கோட்பாடுகளை அறியாமலும் அல்லது அது எப்படிப்பட்ட கனிகளைத் தருகிறது என்பதை அறியாமலும் இருந்து கொண்டு, பொல்லாத ஆவிகளின் கிரியையினை நீங்கள் தெளிவாக உணருவது என்பது கடினமானதாக இருக்கும். நீங்கள் பொல்லாத ஆவிகளின் கிரியைகளை அம்பலப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் மனிதனுடைய கருத்துக்களையும் வெளிப்படுத்தி அந்த பிரச்சினையின் உள்ளார்ந்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டும்; மக்களின் நடத்தையிலுள்ள பல வழிவிலகல்களையும், தேவன் மீதான விசுவாசத்தில் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளையும் நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும், இதனால் அவர்கள் அவைகளை அடையாளம் கண்டுகொள்ளுவார்கள். குறைந்தபட்சம், அவர்கள் தங்களை எதிர்மறையாகவோ அல்லது செயலற்றவர்களாகவோ உணரும்படி நீங்கள் செய்து விடக்கூடாது. ஆனாலும், பெரும்பாலான மக்களுக்கு உண்மையில் கஷ்டங்கள் இருக்கிறது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும், நீ காரணம் அறியாதவனாகவோ அல்லது “ஒரு பன்றியை பாடுவதற்குக் கற்பிக்க முயற்சி செய்பவனாகவோ” நீ இருக்கக்கூடாது; அது முட்டாள்தனமான நடத்தை ஆகும். மக்கள் அனுபவிக்கும் பல கஷ்டங்களைத் தீர்ப்பதற்கு, பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் வல்லமையை நீ முதலில் புரிந்துகொள்ள வேண்டும்; பரிசுத்த ஆவியானவர் வெவ்வேறு மக்களிடத்தில் எப்படி கிரியை செய்கிறார் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும், மக்கள் எப்படிப்பட்ட கஷ்டங்களைச் சந்திக்கின்றனர் என்பதையும் அவர்களது குறைபாடுகளையும் பற்றிய புரிதலை நீ பெற்றிருக்க வேண்டும், எந்தவொரு விலகலோ அல்லது தவறோ செய்யாமல் நீ அந்த பிரச்சினைக்கான முக்கிய காரணங்களை ஆராய்ந்து அதன் மூலக்காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும். இந்த வகையான நபர் மட்டுமே தேவனுக்கு செய்யும் ஊழியத்தில் ஒருங்கிணைந்து செயல்படத் தகுதி பெற்றவர் ஆவார்.

முக்கிய பிரச்சினைகளை உன்னால் புரிந்து கொள்ள முடிகின்றதா என்பதும் அனேகமானவற்றைத் தெளிவாக பார்க்க முடிகிறதா இல்லையா என்பதும் உன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களைப் பொறுத்து இருக்கிறது. நீ எப்படிபட்ட விதத்தில் அனுபவிக்கின்றாயோ அதே விதத்தில்தான் நீ மற்றவர்களையும் வழிநடத்துகின்றாய். நீ எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் புரிந்து கொண்டால், மற்றவர்களை எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் புரிந்து கொள்ள வழிநடத்துவாய். தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்தை எந்த விதத்தில் நீ அனுபவிக்கின்றாயோ அதே விதத்தில் தான் தேவனுடைய வெளிப்பாடுகள் பற்றிய யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க நீ மற்றவர்களையும் வழிநடத்துவாய். தேவனுடைய வார்த்தைகளில் இருந்து உன்னால் அதிகமான சத்தியங்களைப் புரிந்து கொள்ளவும் அநேக காரியங்களைப் பற்றிய நுண்ணறிவைப் பெற்றுக்கொள்ளவும் முடியுமானால், அப்பொழுது உன்னால் மற்றவர்களைச் சத்தியத்திற்குள் வழிநடத்த முடியும், மேலும் நீங்கள் வழிநடத்துபவர்கள் தரிசனங்களைக் குறித்தச் சரியானப் புரிதலைப் பெற்றுக் கொள்வார்கள். நீ இயற்கைக்கு அப்பாற்பட்ட உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தினால், நீ வழிநடத்துபவர்களும் அப்படியே செய்வார்கள். நீ கடைபிடிப்பதைப் புறக்கணித்து விட்டு, அதற்குப் பதிலாகக் கலந்துரையாடலை வலியுறுத்தினால், அப்பொழுது நீ வழிநடத்துபவர்களும் கூட கடைப்பிடிக்காமல் அல்லது அவர்களது மனநிலைகளில் எந்த மாற்றத்தையும் பெறாமல் கலந்துரையாடுவதில் கவனம் செலுத்துவார்கள்; அவர்கள் எந்தவொரு சத்தியத்தையும் கடைப்பிடிக்காமல், மேலோட்டமான உற்சாகத்தினை மட்டுமே கொண்டிருப்பார்கள். எல்லா மக்களும் தங்களுக்குள் எதை வைத்திருக்கிறார்களோ அதையே மற்றவர்களுக்கும் வழங்குகிறார்கள். ஒருவர் எப்படிப்பட்ட நபர் என்பது எந்த பாதையில் அவர்கள் மற்றவர்களை வழிநடத்துகிறார்கள் என்பதிலும், மற்றும் எப்படிப்பட்ட மக்களை அவர்கள் வழிநடத்துகிறார்கள் என்பதிலும் தீர்மானிக்கப்படுகிறது. தேவன் பயன்படுத்துவதற்கு உண்மையில் பொருத்தமானவர்களாக இருப்பதற்கு, உங்களில் ஆசை இருந்தால் மட்டும் போதாது, தேவனிடத்தில் இருந்து மிக அதிக அளவில் பிரகாசமும், அவரது வார்த்தைகளில் இருந்து வழிநடத்துதலும், அவர் உங்களோடு இடைபட்ட அனுபவமும், அவரது வார்த்தைகளினால் உண்டாகும் சுத்திகரிப்பும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. இதனை ஓர் அஸ்திபாரமாகக் கொண்டு, சாதாரணமான வேளைகளில், நீங்கள் உங்களது கவனிப்புகள், சிந்தனைகள், எண்ணங்கள் மற்றும் முடிவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அதற்கு ஏற்றபடி உள்வாங்கிக் கொள்வதையோ அல்லது நீக்குதலையோ செய்ய வேண்டும். இவை அனைத்தும் யதார்த்தத்திற்குள் நீங்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளாகும், இவற்றுள் ஒவ்வொன்றும் தவிர்க்க முடியாதவையாகும். இப்படித்தான் தேவன் கிரியை செய்கிறார். தேவன் கிரியை செய்யும் இந்த வழிமுறைக்குள் நீ பிரவேசிப்பாயானால், அவரால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு ஒவ்வொரு நாளும் வாய்ப்புகளை நீ பெற்றுக் கொள்ள முடியும். எந்த வேளையிலும், உன் சூழ்நிலை கடுமையானதாக அல்லது சாதகமானதாக இருந்தாலும், நீ சோதிக்கபடுவதாக அல்லது சோதனைக்குள்ளாக்கப்படுவதாக இருந்தாலும், நீ உழைப்பவனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீ தனிநபராக வாழ்க்கையை வாழ்பவனாகவோ அல்லது கூட்டத்தின் ஒரு பகுதியாக வாழ்பவனாகவோ இருந்தாலும் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்குரிய வாய்ப்புகளை நீ எப்பொழுதும் ஒன்றைக் கூட தவறவிட்டு விடாமல் கண்டுபிடித்துக் கொள்வாய். நீ அவை அனைத்தையும் கண்டுபிடித்துக் கொள்வாய்—இந்த விதத்தில், நீ தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதற்கான இரகசியத்தைக் கண்டுபிடித்திருப்பாய்.

முந்தைய: சத்தியத்தின்படி நடக்க விருப்பமாயிருக்கும் ஒருவரே இரட்சிப்பைப் பெறுகின்ற ஒருவராவார்

அடுத்த: அனுபவம் பற்றியவை

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக