Christian Song | நாம் சிங்காசனத்திற்கு முன்பாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறோம் (Tamil Subtitles)

மார்ச் 25, 2021

நாம் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறோம்,

தேவனுடைய இரக்கத்தினாலும் கிருபையினாலும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறோம்.

பரிசுத்தவான்களின் இருதயங்களில் தேவனுக்காக அன்பைக் கொண்டுவந்தார்கள்.

அவர்களுடைய ஆவிக்குரிய பாதையிலிருந்து அலைந்து தடுமாறவில்லை.

ஒன்றான மெய்த்தேவன் மாம்சமாகிவிட்டார் என்பதில் அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்,

அவரே பிரபஞ்சத்தின் தலையாயிருக்கிறார் மற்றும் எல்லாவற்றிற்கும் கட்டளையிடுகிறார்.

இது தவறிழைக்காத சான்றென பரிசுத்த ஆவியானவரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது ஒருபோதும் மாறாது!

சர்வவல்லமையுள்ள தேவனே!

இன்று, நீர் எங்கள் கண்களைத் திறந்திருக்கிறீர்.

குருடர்களால் காணமுடிகிறது,

முடவர்களால் நடக்க முடிகிறது, குஷ்டரோகிகள் குணமடைய முடிகிறது.

நீரே பரலோகத்திற்கான வாசலைத் திறந்து

ஆவிக்குரிய உலகின் இரகசியங்களை காணச்செய்தீர்.

உம்முடைய வார்த்தைகள் எங்களில் ஊடுருவுகின்றன;

சாத்தானால் கெடுக்கப்பட்ட எங்களின் மனிதத்தன்மையிலிருந்து

நீர் எங்களை இரட்சித்திருக்கிறீர்,

இது உம்முடைய பெரிய கிரியையும் இரக்கமுமாய் இருக்கிறது.

நாங்கள் உம்முடைய சாட்சிகள்!

நீர் நீண்ட காலமாக தாழ்மையுடன், அமைதியாக மறைந்திருக்கிறீர்.

நீர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுதலுக்கும், சிலுவையில் அறையப்படுதலுக்கும்,

மனித ஜீவிதத்தின் சந்தோஷங்கள் மற்றும் துக்கங்களுக்கும்,

ஆபத்துகள் மற்றும் துன்பங்களுக்கும் ஆளாகியுள்ளீர்.

நீர் மனித உலகின் வலியை அனுபவித்து ருசித்திருக்கிறீர் மற்றும்

நீர் அந்த யுகத்தினால் கைவிடப்பட்டிருக்கிறீர்.

மனுஷரூபமெடுத்த தேவனே தேவன்!

தேவனுடைய சித்தத்திற்காக, நீர் எங்களை குப்பையிலிருந்து இரட்சித்தீர்.

உம்முடைய வலது கரத்தால் எங்களைப் பிடித்துக் கொண்டு,

உம்முடைய கிருபையை எங்களுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறீர்.

உம்முடைய ஜீவனை எங்களுக்குள்ளாக கிரியை செய்யும்படிக்கு நீர் அதிகப்படியான

முயற்சிகளை மேற்கொண்டீர்.

உம்முடைய இரத்தம், வியர்வை, மற்றும் கண்ணீர் பரிசுத்தவான்களில் இருக்கிறது.

நாங்கள் உம்முடைய முடிவில்லா முயற்சிகளின் பலன்களாக இருக்கிறோம்.

நாங்கள் நீர் செலுத்துகிற விலைக்கிரயமாக இருக்கிறோம்.

சர்வவல்லமையுள்ள தேவனே!

உமது அன்பும் இரக்கமும்,

நீதியும் மகத்துவமும், மற்றும் பரிசுத்தமும் மனத்தாழ்மையின் நிமித்தம்

எல்லா ஜனங்களும் உமக்கு முன்பாக பணிந்து,

உம்மை நித்திய காலத்திற்கும் வணங்குவார்கள்.

நீர் அனைத்து திருச்சபைகளையும் பிலதெல்பியா சபையாக பரிபூரணமாக்கியுள்ளீர்.

உமது ஆறாயிரம் ஆண்டுத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளீர்.

பரிசுத்தவான்கள் தாழ்மையுடன் உமக்கு முன்பாக கீழ்ப்படிந்து,

ஆவியில் இணைந்து, ஒருவருக்கொருவர் அன்பில் பிணைந்து,

ஜீவ நீரூற்றின் பிறப்பிடத்துடன் இணைந்திருக்கிறார்கள்.

ஜீவத்தண்ணீர் இடைவிடாமல் ஓடுகிறது,

திருச்சபையை வாதிக்கிற

அனைத்து அசுத்தத்தையும் கழுவி தூய்மைப்படுத்துகிறது,

மீண்டும் ஒருவிசை உமது ஆலயத்தை தூய்மைப்படுத்துகிறது.

எங்களுடைய ஆவிகளை

ஆளுகைச் செய்யும்படியாக நாங்கள் தேவனை அனுமதிக்கிறோம்.

அவருடன் நடந்து, தெய்வீகத்தை அடைந்து,

உலகத்தை ஜெயித்து,

எங்களுடை ஆவிகள் சுதந்திரமாக பறக்கின்றன:

இதுவே சர்வவல்லமையுள்ள தேவன் ராஜாவாக இருப்பதினால் கிடைக்கும் பலனாகும்.

ஆகவே, தேவனுடன் ஒத்துழையுங்கள், ஒருங்கிணைந்து ஊழியம் செய்யுங்கள்,

ஒன்றாகத் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுங்கள்,

பரிசுத்த ஆவிக்குரிய சரீரமாக மாறுவதற்கு துரிதப்படுங்கள்,

சாத்தானை மிதியுங்கள், சாத்தானின் விதிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க