தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 14

செப்டம்பர் 8, 2022

ஜனங்களுடைய முடிவுகளைத் தீர்மானிப்பது யார்?

விவாதிக்க மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு விஷயம் உள்ளது. அதுதான் தேவன் மீதான உங்கள் மனநிலையாகும். இந்த மனநிலை மிகவும் முக்கியமானதாகும்! நீங்கள் இறுதியில் அழிவை நோக்கிச் செல்வீர்களா அல்லது தேவன் உங்களுக்காகத் தயாரித்த அழகான இடத்திற்குச் செல்வீர்களா என்பதை அது தீர்மானிக்கிறது. ராஜ்ய யுகத்தில், தேவன் ஏற்கனவே இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கிரியை செய்துள்ளார். ஒருவேளை, இந்த இரண்டு தசாப்தங்களில், நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்கள் என்பது குறித்து உங்களுக்கு உறுதியாகத் தெரியாமல் இருக்கலாம். இருப்பினும், தேவனுடைய இருதயத்தில், உங்கள் ஒவ்வொருவரின் உண்மையான மற்றும் மெய்யான பதிவை அவர் செய்துள்ளார். ஒவ்வொரு மனிதனும் அவரைப் பின்பற்றவும், அவருடைய பிரசங்கங்களைக் கேட்கவும் தொடங்கிய காலத்திலிருந்து, படிப்படியாகச் சத்தியத்தை மேலும் மேலும் புரிந்துக்கொண்டு, ஒவ்வொரு மனிதனும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தொடங்கும் காலம் வரையிலான, ஒவ்வொரு மனிதனின் அனைத்து விதமான நடத்தைகளையும் தேவன் பதிவு செய்துள்ளார். தங்கள் கடமைகளை நிறைவேற்றும் போதும், எல்லா விதமான சூழல்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ளும் போதும், ஜனங்களுடைய மனநிலைகள் என்னவாக இருக்கின்றன? அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்? அவர்கள் இருதயங்களில் தேவனை நோக்கி எப்படி உணருகிறார்கள்? … இவை அனைத்திற்கும் தேவன் ஒரு கணக்கு வைத்திருக்கிறார். அவை அனைத்தையும் பற்றிய பதிவு அவரிடம் உள்ளது. ஒருவேளை, உங்கள் பார்வையில், இந்தப் பிரச்சினைகள் குழப்பமானவையாகும். இருப்பினும், தேவன் நிற்கும் இடத்திலிருந்து, அவை அனைத்தும் படிகம் போல தெளிவாக இருக்கின்றன மற்றும் மந்தமான ஒரு சிறிய குறிப்பு கூட இல்லை. அது ஒவ்வொரு மனிதனுடைய முடிவுகளையும் உள்ளடக்கிய ஒரு பிரச்சனையாகும். ஒவ்வொரு மனிதனுடைய தலைவிதியையும் எதிர்கால வாய்ப்புகளையும் அது தொடுகிறது. அதற்கும் மேலாக, தேவன் தனது கடினமான முயற்சிகள் அனைத்தையும் செய்கிறார். ஆகையால், தேவன் அதை ஒருபோதும் புறக்கணிக்க மாட்டார். எந்தக் கவனக்குறைவையும் அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். மனிதகுலத்தின் இந்தக் கணக்கைப் பற்றிய ஒரு பதிவை தேவன் உருவாக்கி வருகிறார். மனிதர்கள் தேவனைப் பின்தொடர்வதில் தொடக்கக் காலம் முதல் இறுதி வரையிலான முழுக் காலத்தையும் அவர் கவனிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் அவரைப் பற்றிய உன் மனநிலை உன் தலைவிதியைத் தீர்மானித்துள்ளது. அது உண்மையல்லவா? இப்போது, தேவன் நீதியுள்ளவர் என்று நீ நம்புகிறாயா? அவருடையச் செயல்கள் பொருத்தமானவையா? உங்கள் தலையில் தேவனைப் பற்றி வேறு ஏதேனும் கற்பனைகள் இருக்கிறதா? (இல்லை.) அப்படியானால், ஜனங்களுடைய முடிவுகளை தேவன் தீர்மானிக்க வேண்டும் அல்லது ஜனங்களே தங்களைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுவீர்களா? (அவர்களை தேவன் தீர்மானிக்க வேண்டும்.) அவர்களை தீர்மானிப்பது யார்? (தேவன்.) உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை, அல்லவா? ஹாங்காங்கைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே, பேசுங்கள் அவர்களை யார் தீர்மானிக்கிறார்கள்? (ஜனங்களே அவற்றைத் தீர்மானிக்கிறார்கள்.) ஜனங்களே அவற்றைத் தீர்மானிக்கிறார்களா? ஜனங்களுடைய முடிவுகளுக்கு தேவனுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று அது அர்த்தமாகிறது அல்லவா? தென் கொரியாவைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே பேசுங்கள். (தேவன் அவர்களுடைய செயல்கள் மற்றும் கிரியைகள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் எந்தப் பாதையில் செல்கிறார்கள் என்பதன் அடிப்படையில் ஜனங்களின் முடிவுகளைத் தீர்மானிக்கிறார்.) இது மிகவும் உண்மையான ஒரு பதிலாகும். இங்கே ஓர் உண்மை உள்ளது, அதை நான் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்: தேவனுடைய இரட்சிப்பின் போது, அவர் மனிதர்களுக்கு ஒரு தரத்தை அமைத்துள்ளார். இந்தத் தரநிலை என்னவென்றால், அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு தேவனுடைய வழியில் நடக்க வேண்டும். இந்தத் தரம்தான் ஜனங்களுடைய முடிவுகளை எடைபோடப் பயன்படுகிறது. தேவனுடைய இந்தத் தரத்திற்கு ஏற்ப நீ நடைமுறையில் கடைபிடித்தால், நீ ஒரு நல்ல முடிவைப் பெறலாம். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒரு நல்ல முடிவைப் பெற முடியாது. அப்படியானால், இந்த முடிவை யார் தீர்மானிக்கிறார்கள் என்று நீ கூறுவாய்? அதை நிர்ணயிப்பது தேவன் மட்டுமல்ல, மாறாக தேவனும் மனிதர்களும் ஒன்றாக இருக்கிறார்கள். அது சரியானதாகுமா? (ஆம்.) அது ஏன்? ஏனென்றால், மனிதகுலத்தின் இரட்சிப்பின் வேலையில் ஈடுபடவும், மனிதகுலத்திற்கு ஓர் அழகான இலக்கைத் தயாரிக்கவும் தேவன் தீவிரமாக விரும்புகிறார். மனிதர்கள் தேவனுடைய கிரியையின் நோக்கங்கள் ஆவர். இந்தப் முடிவையும், இந்த இலக்கையும் தேவன் அவர்களுக்காக ஆயத்தம் செய்கிறார். அவருக்குக் கிரியை செய்ய எந்தப் பொருளும் இல்லை என்றால், அவர் இந்த கிரியையைச் செய்ய அவசியமில்லை. அவர் இந்தக் கிரியையைச் செய்யவில்லை என்றால், மனிதர்கள் இரட்சிப்பைப் பெற வாய்ப்பில்லை. மனிதர்கள் இரட்சிக்கப்பட வேண்டியவர்கள். இரட்சிக்கப்படுவது இந்தச் செயல்பாட்டின் செயலற்றப் பகுதியாக இருந்தாலும், மனிதகுலத்தைக் காப்பாற்றும் தனது கிரியையில் தேவன் ஜெயம் பெறுவாரா இல்லையா என்பதை இந்தப் பங்கை வகிப்பவர்களின் மனநிலையே தீர்மானிக்கிறது. தேவன் உனக்குக் கொடுக்கும் வழிகாட்டுதலுக்காக இல்லாவிட்டால், அவருடைய தரத்தை நீ அறிய மாட்டாய். உனக்கு ஒரு குறிக்கோளும் இருக்காது. உன்னிடம் இந்தத் தரநிலை மற்றும் இந்த நோக்கம் இருந்தால், நீ இன்னும் ஒத்துழைக்கவில்லை என்றால், நடைமுறைக்கு கொண்டு வரவில்லை என்றால் அல்லது விலைக்கிரையத்தை செலுத்தவில்லை என்றால், நீ இந்த முடிவைப் பெற மாட்டாய். இந்தக் காரணத்திற்காக, ஒருவரின் முடிவை தேவனிடமிருந்து பிரிக்க முடியாது என்றும், அதை மனிதனிடமிருந்தும் பிரிக்க முடியாது என்றும் நான் சொல்கிறேன். இப்போது, ஜனங்களுடைய முடிவுகளை யார் தீர்மானிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிகிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க