சுவிசேஷ திரைப்பட டிரெய்லர்கள் | கதவைத் தட்டுதல் (Tamil Subtitles)

மார்ச் 29, 2021

"நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று" (மத்தேயு 25:6). (© BSI) "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" (வெளிப்படுத்தல் 3:20). (© BSI) என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கர்த்தராகிய இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தார். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, கர்த்தருடைய விசுவாசிகள் கர்த்தர் கதவைத் தட்டுவார் என்று விழிப்புடன் காத்திருக்கின்றனர், அப்படியானால் அவர் திரும்பி வரும்போது மனுக்குலத்தின் கதவை எப்படி தட்டுவார்? கடைசி நாட்களில் கர்த்தராகிய இயேசு மாம்சமான சர்வவல்லமையுள்ள தேவனாக திரும்பி வந்துள்ளார் என்றும் கடைசி நாட்களில் அவர் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார் என்றும் சிலர் சாட்சியமளித்துள்ளனர். இந்த செய்தி முழு மத உலகையும் உலுக்கியுள்ளது.

படத்தின் கதாநாயகி யாங் ஐகுவாங் பல தசாப்தங்களாக கர்த்தரை நம்புகிறாள், எப்போதும் உற்சாகமாகவும் வேலையிலும் பிரசங்கத்திலும் ஈடுபட்டு வருகிறாள், கர்த்தர் திரும்பி வருவதை வரவேற்க காத்திருக்கிறாள். ஒரு நாள், இரண்டு பேர் வந்து கதவைத் தட்டி, கர்த்தராகிய இயேசு திரும்பி வந்துவிட்டார் என்று யாங் ஐகுவாங் மற்றும் அவரது கணவரிடம் சொல்கின்றனர், மேலும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளால் ஆழமாக ஏவப்படுகின்றனர், ஆனால் யாங் ஐகுவாங் போதகர்கள் மற்றும் மூப்பர்களின் பொய்களுக்கும், வஞ்சகங்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்பட்டிருப்பதால், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் சாட்சிகளை வீட்டை விட்டு வெளியே விரட்டி விடுகிறாள். அதன்பிறகு, சாட்சிகள் பல சந்தர்ப்பங்களில் அவர்களுடைய கதவைத் தட்டி, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை யாங் ஐகுவாங்கிற்கு வாசித்து, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியைக்கு சாட்சி பகருகின்றனர். இந்த நேரத்தில், போதகர் அவ்வப்போது யாங் ஐகுவாங்கை தொந்தரவு செய்கிறார் மற்றும் தடுக்கிறார், அவள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகிறாள். ஆனாலும், சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளைக் கேட்பதன் மூலம், யாங் ஐகுவாங் சத்தியத்தை புரிந்துகொண்டு, போதகர்களாலும் மூப்பர்களாலும் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் பொய்கள் குறித்த அறிவைப் பெறுகிறாள். கடைசி நாட்களில் கர்த்தர் திரும்பி வரும்போது ஜனங்களின் கதவுகளை எப்படி தட்டுகிறார் என்பதையும், நாம் அவரை எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதையும் அவள் புரிந்துகொள்கிறாள்! மூடுபனி மறையும் போது, யாங் ஐகுவாங் இறுதியாக தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, சர்வவல்லமையுள்ள தேவன் உண்மையிலேய திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசு என்பதை ஒப்புக்கொள்கிறாள்!

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க