தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கடைசிக் காலத்தில் நியாயத்தீர்ப்பு | பகுதி 95

மார்ச் 30, 2023

சகலத்தையும் ஜெயங்கொள்வதன் மூலம், அவற்றின் வகைகளின்படி வகைப்படுத்தப்படுவதே கடைசிக் காலம் ஆகும். ஜெயங்கொள்வதே கடைசிக் காலத்தின் கிரியை ஆகும்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒவ்வொருவரின் பாவங்களையும் நியாயந்தீர்ப்பதே கடைசிக் காலத்தின் கிரியை ஆகும். இல்லையெனில், ஜனங்களை எவ்வாறு வகைப்படுத்த முடியும்? உங்களிடையே செய்யப்படும் இந்த வகைப்படுத்துதல் கிரியை, முழு பிரபஞ்சத்திலும் நடைபெறும் இதுபோன்ற கிரியையின் தொடக்கமாகும். இதற்குப் பிறகு, சகல தேசங்களை சேர்ந்த சகல ஜனங்களும் ஜெயங்கொள்ளும் கிரியைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், சிருஷ்டிக்கப்படும் ஒவ்வொருவரும், நியாயந்தீர்க்கப்பட நியாயத்தீர்ப்பின் இருக்கைக்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட்டு, அவரவர் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுவார்கள். எந்தவொரு நபரும் எந்தவொரு பொருளும் இந்த ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிப்பதில் இருந்து தப்ப முடியாது, எந்தவொரு நபரும் அல்லது பொருளும் வகைப்படுத்தப்படாமல் விடுவதில்லை; ஒவ்வொரு மனுஷனும் வகைப்படுத்தப்படுவான், ஏனென்றால் சகலத்தின் முடிவும் நெருங்கி வருகிறது, வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அதன் முடிவுக்கு வந்துவிட்டன. மனுஷ வாழ்வின் கடைசிக் காலத்தில் இருந்து மனுஷன் எவ்வாறு தப்பிக்க முடியும்? மேலும், உங்கள் கீழ்ப்படியாமை எவ்வளவு காலம் தொடர முடியும்? உங்கள் கடைசிக் காலம் வந்துவிட்டதை நீங்கள் உணரவில்லையா? தேவனை வணங்கி, அவர் தோன்றுவதற்கு ஏங்குகிறவர்கள் தேவனின் நீதி தோன்றும் நாளை எப்படி காணாமல் இருக்க முடியும்? நன்மைக்கான இறுதி வெகுமதியை அவர்கள் எவ்வாறு பெற முடியாதுபோகும்? நீ நன்மை செய்பவனா, அல்லது தீமை செய்பவனா? நீ நீதியுள்ள நியாயத்தீர்ப்பை ஏற்று அதன்பின்னர் கீழ்ப்படிகிறவனா, அல்லது நீதியுள்ள நியாயத்தீர்ப்பை ஏற்று அதன்பின்னர் சபிக்கப்படுபவனா? நீ வெளிச்சத்தில் நியாயத்தீர்ப்பின் இருக்கைக்கு முன்பாக ஜீவிக்கிறவனா, அல்லது இருளுக்கு மத்தியில் பாதாளத்தில் வசிக்கிறவனா? உன் முடிவு வெகுமதிகளில் ஒன்றா, அல்லது தண்டனைகளில் ஒன்றா என்பதை மிகத் தெளிவாக அறிந்தவன் நீ மட்டுமே அல்லவா? தேவன் நீதியுள்ளவர் என்பதை மிகத் தெளிவாக அறிந்தவனும், மிக ஆழமாகப் புரிந்துகொள்பவனும் நீ மட்டுமே அல்லவா? ஆகவே உன் நடத்தையும் இருதயமும் எப்படிப்பட்டவை? இன்று நான் உன்னை ஜெயங்கொள்ளும்போது, உனது நடத்தை நல்லதா அல்லது தீயதா என்பதை நான் சொல்ல வேண்டுமா? நீ எனக்காக எவ்வளவு விட்டுக்கொடுத்திருக்கிறாய்? நீ என்னை எவ்வளவு ஆழமாக வணங்குகிறாய்? நீ என்னிடம் எப்படி நடந்துகொள்கிறாய் என்பது உனக்கு தெளிவாகத் தெரியாதா? நீ இறுதியில் சந்திக்கும் முடிவை மற்றவரை விட நீ நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்! மெய்யாகவே, நான் உனக்குச் சொல்கிறேன்: நான் மனுஷகுலத்தை மட்டுமே சிருஷ்டித்தேன், நான் உன்னை சிருஷ்டித்தேன், ஆனால் நான் உங்களை சாத்தானிடம் ஒப்படைக்கவில்லை; நான் வேண்டுமென்றே உங்களை என்னை எதிர்த்துக் கலகம் செய்யவோ அல்லது என்னை எதிர்க்கவோ செய்யவில்லை, அதன்மூலம் என்னால் நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. இந்த பேரழிவுகள் மற்றும் துன்பங்கள் அனைத்தும் உங்கள் இருதயங்கள் மிகவும் கடினமாகவும், உங்கள் நடத்தை மிகவும் இழிவானதாகவும் இருப்பதால் தான் அல்லவா? ஆகவே, நீங்கள் சந்திக்கும் முடிவு உங்களால் தீர்மானிக்கப்பட்டது தான் இல்லையா? உங்கள் முடிவு எப்படி இருக்கும் என்பதை மற்றவர்களை விட உங்களுக்கு, உங்கள் இருதயத்திற்கு தெரியுமல்லவா? நான் ஜனங்களை ஜெயங்கொள்வதற்கான காரணம், அவர்களை வெளிப்படுத்துவதும், உனக்கு இரட்சிப்பைக் கொடுப்பதும்தான். இது உன்னை தீமை செய்யச் செய்வதல்ல, அல்லது வேண்டுமென்றே உன்னை அழிவின் நரகத்தில் நடக்க வைப்பதும் அல்ல. நேரம் வரும்போது, உன் பெரும் துன்பங்கள், உன் அழுகை மற்றும் பற்களைக் கடிப்பது—இவை அனைத்தும் உன் பாவங்களால் ஏற்பட்டதாக இருக்காதா? ஆகவே, உனது சொந்த நன்மை அல்லது உனது சொந்த தீமைதான் உனது சிறந்த நியாயத்தீர்ப்பு அல்லவா? உன் முடிவு என்னவாக இருக்கும் என்பதற்கு இதுவே சிறந்த சான்று அல்லவா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க