தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கடைசிக் காலத்தில் நியாயத்தீர்ப்பு | பகுதி 92

ஏப்ரல் 8, 2023

ஜனங்களாகிய உங்கள் மீது செய்த ஜெயங்கொள்ளும் கிரியை மிக ஆழமான முக்கியத்துவம் வாய்ந்தது: ஒருபுறம், இந்த கிரியையின் நோக்கம் ஒரு குழுவினரைப் பரிபூரணமாக்குவதே ஆகும், அதாவது, அவர்கள் ஜெயங்கண்ட ஒரு குழுவாக மாறுவார்கள் என்பதற்காகப் பரிபூரணமாக்குவது—முதன்முதலில் பரிபூரணமாக்கப்பட்ட குழுவாக இவர்கள் இருப்பார்கள், அதாவது முதன்முதலில் கனிந்த பழங்களாக இருப்பார்கள். மறுபுறம், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷரை தேவனின் அன்பை அனுபவிக்க அனுமதிப்பது, தேவனின் முழுமையான மற்றும் மிகப் பெரிய இரட்சிப்பைப் பெற வைப்பது, இரக்கம் மற்றும் அன்பான தயவை மட்டுமல்ல, மிக முக்கியமாக சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்க மனுஷனை அனுமதிப்பது ஆகியவை ஆகும். உலகத்தைச் சிருஷ்டித்ததிலிருந்து இப்போது வரை, தேவன் தம்முடைய கிரியையில் செய்ததெல்லாம் மனுஷனிடம் எந்த வெறுப்பும் காட்டாமல் அன்பு செலுத்தியது மட்டும் தான். நீ கண்ட சிட்சையும் நியாயத்தீர்ப்பும் கூட அன்புதான், உண்மையான மற்றும் மெய்யான அன்பு, மனுஷ ஜீவிதத்தின் சரியான பாதையில் ஜனங்களை வழிநடத்தும் ஓர் அன்பு. இன்னொரு சார்பில் பார்த்தால், இது சாத்தான் முன்பாக சாட்சிக் கொடுப்பதாக இருக்கிறது. மற்றொன்றில், எதிர்கால சுவிசேஷக் கிரியைகளைப் பரப்புவதற்கு ஓர் அடித்தளத்தை அமைப்பதாக இருக்கிறது. அவர் செய்த எல்லா கிரியைகளும் மனுஷ ஜீவிதத்தின் சரியான பாதையில் ஜனங்களை வழிநடத்தும் நோக்கத்திற்காகவே இருக்கின்றன, இதனால் அவர்கள் இயல்பான மனுஷராக ஜீவிக்க முடியும், ஏனென்றால் ஜனங்களுக்கு எப்படி வாழ வேண்டும் என்று தெரியவில்லை, மேலும் இந்த வழிகாட்டுதல் இல்லாமல் நீ வெற்று ஜீவிதம்தான் ஜீவித்திருப்பாய்; உன் ஜீவிதம் மதிப்பு அல்லது அர்த்தமற்றதாக இருக்கும், மேலும் உன்னால் ஒரு சாதாரண மனுஷனாக இருக்கவே இயலாது. இதுதான் மனுஷனை ஜெயங்கொள்வதன் ஆழமான முக்கியத்துவம் ஆகும். நீங்கள் அனைவரும் மோவாபின் சந்ததியினர்; ஜெயங்கொள்ளும் கிரியை உங்களில் மேற்கொள்ளப்படும்போது, அதுவே பெரிய இரட்சிப்பாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் பாவம் மிக்க மற்றும் ஒழுக்கக்கேடான தேசத்தில் ஜீவிக்கிறீர்கள், நீங்கள் அனைவரும் ஒழுக்கக்கேடானவர்கள் மற்றும் பாவம் மிக்கவர்கள். இன்று உங்களால் தேவனைப் பார்க்க முடிவது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, நீங்கள் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் பெற்றிருக்கிறீர்கள், நீங்கள் உண்மையிலேயே ஆழ்ந்த இரட்சிப்பைப் பெற்றிருக்கிறீர்கள், அதாவது தேவனின் மிகப்பெரிய அன்பைப் பெற்றிருக்கிறீர்கள். தேவன் செய்யும் எல்லாவற்றிலும், அவர் உங்களை உண்மையாக நேசிக்கிறார். அவருக்கு தவறான எண்ணம் இல்லை. உங்கள் பாவங்களால்தான் அவர் உங்களை நியாயந்தீர்க்கிறார், எனவே நீங்கள் உங்களை ஆராய்ந்து இந்த மகத்தான இரட்சிப்பைப் பெறுகிறீர்கள். இவை அனைத்தும் மனுஷனை பரிபூரணமாக்கும் நோக்கத்திற்காக செய்யப்படுகின்றன. ஆதி முதல் அந்தம் வரை, மனுஷனை இரட்சிக்க தேவன் தம்மால் முடிந்ததைச் செய்து வருகிறார், மேலும் அவர் தம்முடைய கைகளால் சிருஷ்டித்த மனுஷரை முற்றிலுமாக அழிக்க விரும்பவில்லை. இன்று, அவர் உங்களிடையே கிரியை செய்ய வந்திருக்கிறார், இந்த இரட்சிப்பு எல்லாவற்றையும் விட மேலானதல்லவா? அவர் உங்களை வெறுத்திருந்தால், உங்களைத் தனிப்பட்ட முறையில் வழிநடத்த அவர் இன்னும் இவ்வளவு பெரிய கிரியையைச் செய்வாரா? அவர் ஏன் அவ்வாறு கஷ்டப்பட வேண்டும்? தேவன் உங்களை வெறுக்கவில்லை அல்லது உங்களைப் பற்றிய எந்தவிதமான தவறான நோக்கங்களும் அவருக்கு இல்லை. தேவனின் அன்பு உண்மையான அன்பு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஜனங்கள் கீழ்ப்படியாததால்தான் அவர் நியாயத்தீர்ப்பின் மூலம் அவர்களை இரட்சிக்க வேண்டியதாக இருக்கிறது; இதற்காக இல்லையென்றால், அவர்களை இரட்சிப்பது சாத்தியமற்றதாகிவிடும். ஏனென்றால், உங்களுக்கு எப்படி ஜீவிக்க வேண்டும் என்று தெரியவில்லை, எப்படி ஜீவிக்க வேண்டும் என்று நீங்கள் அறிந்திருக்கவில்லை, மேலும் நீங்கள் இந்த ஒழுக்கக்கேடான மற்றும் பாவம் மிக்க தேசத்தில் ஜீவிக்கிறீர்கள், மேலும் நீங்களே ஒழுக்கக்கேடான மற்றும் இழிவான பிசாசுகளாக இருப்பதால், உங்களை இன்னும் மோசமாகிப்போக அவர் அனுமதிக்க மாட்டார், நீங்கள் இப்போது சாத்தானின் விருப்பப்படி ஜீவித்திருக்கும் இந்த இழிவான தேசத்தில் நீங்கள் ஜீவிப்பதைப் பார்க்க அவர் அனுமதிக்க மாட்டார், மேலும் நீங்கள் பாதாளத்தினுள் வீழ்த்தப்படுவதையும் அவர் அனுமதிக்க மாட்டார். அவர் இந்த நபர்களை ஆதாயப்படுத்த விரும்புகிறார் மற்றும் உங்களை முழுமையாக இரட்சிக்கவும் விரும்புகிறார். உங்களை ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்வதற்கான முக்கிய நோக்கம் இதுதான்—இது இரட்சிப்புக்காக மட்டுமே. உன்னிடம் செய்யப்படும் அனைத்தும் அன்பும் இரட்சிப்பும்தான் என்பதை உன்னால் பார்க்க முடியாவிட்டால், அது வெறுமனே ஒரு முறை மட்டுமே, மனுஷனைத் துன்புறுத்துவதற்கான ஒரு வழி, நம்பத்தகாத ஒன்று என்று நீ நினைத்தால், நீ வேதனையையும் கஷ்டத்தையும் அனுபவிக்க மீண்டும் உனது உலகத்திற்கே திரும்பிச் செல்லக்கூடும்! இந்த பிரவாகத்தில் நிலைத்திருக்க நீ தயாராக இருந்தால், இந்த நியாயத்தீர்ப்பையும் இந்த மகத்தான இரட்சிப்பையும் அனுபவிக்க நீ தயாராக இருந்தால், மனுஷ உலகில் எங்கும் காண முடியாத இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தையும் அனுபவிக்க நீ தயாராக இருந்தால், இந்த அன்பை அனுபவிக்க நீ தயாராக இருந்தால், நீ நல்லவனாக இரு: ஜெயங்கொள்ளும் கிரியையை ஏற்க இந்த பிரவாகத்திலேயே இரு, இதன்மூலம் நீ பரிபூரணமாக்கப்படுவாய். இன்று, தேவனின் நியாயத்தீர்ப்பின் காரணமாக நீ சிறிய வலியையும் சுத்திகரிப்பையும் சந்திக்க நேரிடும், ஆனால் இந்த வலியை அனுபவிப்பதற்கு மதிப்பும் அர்த்தமும் இருக்கிறது. தேவனின் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பினால் ஜனங்கள் சுத்திகரிக்கப்பட்டு இரக்கமின்றி அம்பலப்படுத்தப்பட்டாலும்—அவர்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பதும், அவர்களின் மாம்சத்தைத் தண்டிப்பதுமே இதன் நோக்கமாக இருக்கிறது—இந்தக் கிரியைகளில் எதுவுமே அவர்களின் மாம்சம் அழிவதற்குக் கண்டனம் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. வார்த்தையின் கடுமையான வெளிப்பாடுகள் அனைத்தும் உன்னை சரியான பாதையில் கொண்டு செல்லும் நோக்கத்திற்காகவே இருக்கின்றன. நீங்கள் தனிப்பட்ட முறையில் இந்தக் கிரியையை அதிகம் அனுபவித்திருக்கிறீர்கள், தெளிவாக, இது உங்களை ஒரு தீய பாதையில் அழைத்துச் செல்லவில்லை! உன்னைச் சாதாரண மனுஷத்தன்மையோடு ஜீவிக்க வைப்பதற்காகவே இவை அனைத்தும் உள்ளன, இவை அனைத்தும் உனது சாதாரண மனுஷத்தன்மையால் அடையக்கூடியவை. தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு அடியும் உனது தேவைகளின் அடிப்படையில், உனது பலவீனங்களின்படி, மற்றும் உனது உண்மையான சரீரவளர்ச்சியின்படி தான் இருக்கிறது, தாங்க முடியாத சுமை உன் மீது வைக்கப்படுவதில்லை. இது இன்று உனக்கு தெளிவாகத் தெரியவில்லை, நான் உன்னிடம் கடுமையாக இருப்பதைப் போல நீ உணர்கிறாய், மேலும் ஒவ்வொரு நாளும் நான் உன்னை சிட்சிப்பதற்கும், நியாயத்தீர்ப்பளிப்பதற்கும், நிந்திப்பதற்கும் காரணம் நான் உன்னை வெறுப்பதுதான் என்று நீ எப்போதும் விசுவாசிக்கிறாய். ஆனால் நீ சிட்சை, நியாயத்தீர்ப்பினால் துன்புறுகிறாய் என்றாலும், இது உண்மையில் உனக்கான அன்பு மட்டும் தான், அதுவே மிகப்பெரிய பாதுகாப்பு. இந்த கிரியையின் ஆழமான அர்த்தத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியாவிட்டால், நீ தொடர்ந்து அனுபவிப்பது சாத்தியமில்லாமல் போய்விடும். இந்த இரட்சிப்பு உனக்கு ஆறுதலளிக்கும். நீ உன் சுயநினைவுக்கு வர மறுக்காதே. இவ்வளவு தூரம் வந்திருப்பதால், ஜெயங்கொள்ளும் கிரியையின் முக்கியத்துவம் உனக்குத் தெளிவாக இருக்க வேண்டும், மேலும் இதைப் பற்றி நீ எவ்வழியிலும் கருத்துக்களைக் கொண்டிருக்க கூடாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (4)" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க