தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கடைசிக் காலத்தில் நியாயத்தீர்ப்பு | பகுதி 88

மே 4, 2023

மனுஷனின் பாரம்பரியக் கருத்துக்களில், தேவனின் அன்பு என்பது அவருடைய கிருபை, இரக்கம் மற்றும் மனுஷனின் பலவீனத்திற்கான அனுதாபம் ஆகியவைதான் என்று அவன் விசுவாசிக்கிறான். இந்த விஷயங்களும் தேவனின் அன்புதான் என்றாலும், இவை ஒருதலைப்பட்சமானவை, மேலும் தேவன் மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்கான முதன்மை வழிமுறையாக இது இருப்பதில்லை. சிலர் உடல்நலக்குறைவு காரணமாக தேவனை விசுவாசிக்கத் தொடங்குகிறார்கள். இந்த உடல்நலக் குறைவானதுதான் உனக்கான தேவனின் கிருபை; அது இல்லாமல், நீ தேவனை விசுவாசிக்க மாட்டாய், நீ தேவனை விசுவாசிக்கவில்லை என்றால் நீ இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டாய்—ஆகவே இந்தக் கிருபை கூட தேவனின் அன்புதான். இயேசுவை விசுவாசித்த காலத்தில், ஜனங்கள் தேவனுக்குப் பிடிக்காததைச் செய்தார்கள், ஏனென்றால் அவர்கள் சத்தியத்தைப் புரிந்து கொள்ளவில்லை, ஆனாலும் தேவனிடம் அன்பும் இரக்கமும் இருக்கிறது, மேலும் அவர் மனுஷனை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறார். மனுஷனுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும், மனுஷன் தம்மைப் பின்பற்ற தேவன் அனுமதிக்கிறார், மேலும், அவர் இன்றைய நாள் வரை மனுஷனை வழிநடத்தியிருக்கிறார். இது தேவனின் அன்பு இல்லையா? தேவனின் மனநிலையில் வெளிப்படும் விஷயங்களே தேவனின் அன்பாகும்—இது முற்றிலும் சரியானது! திருச்சபைக் கட்டிடம் அதன் முடிவடையும் நிலையை எட்டியபோது, தேவன் ஊழியம் செய்பவர்களின் கிரியைகளைச் செய்து, மனுஷனைப் பாதாளக்குழிக்குள் தள்ளினார். ஊழியம் செய்பவர்களின் காலத்தின் வார்த்தைகள் அனைத்தும் சாபங்களாக இருந்தன: உனது மாம்சத்தின் சாபங்கள், உனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையின் சாபங்கள் மற்றும் தேவனின் சித்தத்தை நிறைவேற்றாத உனது விஷயங்களின் சாபங்கள் ஆகியவைதான் அந்த சாபங்கள். அந்தக் கட்டத்தில் தேவன் செய்த கிரியைகள் மகத்துவம் மிக்கதாக வெளிப்பட்டன, அதன்பிறகு தேவன் சிட்சைக்கான கிரியையை மேற்கொண்டார், மேலும் மரண உபத்திரவமும் வந்தது. அத்தகைய கிரியையில், மனுஷன் தேவனின் கோபத்தையும், மகத்துவத்தையும், நியாயத்தீர்ப்பையும், ஆக்கினைத்தீர்ப்பையும் கண்டான், மேலும் தேவனின் கிருபையையும், அவருடைய அன்பையும், இரக்கத்தையும் அவன் கண்டான். தேவன் செய்த அனைத்தும், மற்றும் அவருடைய மனநிலையாக வெளிப்படுத்தப்பட்ட அனைத்தும், மனுஷன் மீதான தேவனின் அன்பாக மட்டுமே இருந்தது. தேவன் செய்த அனைத்தும் மனுஷனின் தேவைகளைப் பூர்த்தி செய்தன. மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்காகவே அவர் அதைச் செய்தார், மேலும் அவர் மனுஷனின் வளர்ச்சிக்கு ஏற்ப அவனுக்கு வழங்கினார். தேவன் இதைச் செய்திராவிட்டால், மனுஷனால் தேவனுக்கு முன்பாக வர முடிந்திருக்காது, மேலும் தேவனின் உண்மையான முகத்தை அறிய வழி இருந்திருக்காது. மனுஷன் முதன்முதலில் தேவனை நம்பத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை, மனுஷனின் வளர்ச்சிக்கு ஏற்ப தேவன் படிப்படியாக மனுஷனுக்கு வழங்கியிருக்கிறார், இதனால், தனக்குள் மனுஷன் படிப்படியாக அவரை அறிந்துகொண்டான். இன்றைய நாளுக்கு வந்திருப்பதால் மட்டுமே தேவனின் நியாயத்தீர்ப்பு எவ்வளவு அற்புதமானது என்பதை மனுஷன் உணருகிறான். சிருஷ்டிப்பின் காலத்திலிருந்து இன்று வரை சபிக்கும் கிரியையின் முதல் நிகழ்வுதான் ஊழியம் செய்பவர்களின் கிரியையின் படியாக இருந்தது. மனுஷன் பாதாளக்குழிக்குள் போக சபிக்கப்பட்டான். தேவன் அதைச் செய்திருக்கவில்லை என்றால், இன்று மனுஷனுக்கு தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இருந்திருக்காது; தேவனுடைய சாபத்தின் மூலம்தான் மனுஷன் அதிகாரப்பூர்வமாக அவரது மனநிலையை எதிர்கொண்டான். ஊழியம் செய்பவர்களின் உபத்திரவம் மூலம் மனுஷன் வெளிப்பட்டான். அவனது விசுவாசம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அவனது வளர்ச்சி மிகச் சிறியது என்றும், தேவனின் சித்தத்தை அவனால் நிறைவேற்ற இயலாது என்றும், எல்லா நேரங்களிலும் தேவனைத் திருப்திப்படுத்துவதாக அவன் கூறியது வெறும் வார்த்தைகளைத் தவிர வேறில்லை என்றும் அவர் கண்டார். ஊழியம் செய்பவர்களின் கிரியையின் படியில் தேவன் மனுஷனை சபித்த போதிலும், இப்போது திரும்பிப் பார்க்கும்போது, தேவனுடைய கிரியையின் அந்தப் படியானது அற்புதமானதாக இருக்கிறது: இது மனுஷனுக்கு ஒரு சிறந்த திருப்புமுனையைக் கொண்டு வந்தது, மேலும் அவனது ஜீவித மனநிலையில் ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஊழியம் செய்பவர்களின் காலத்திற்கு முன்பு, மனுஷன் ஜீவிதத்தைப் பின்தொடர்வது என்றால் என்ன, தேவனை விசுவாசிப்பது என்றால் என்ன, அல்லது தேவனுடைய கிரியையின் ஞானம் ஆகியவற்றைப் பற்றி எதுவும் புரிந்துகொள்ளவில்லை, மேலும் தேவனின் கிரியையானது மனுஷனைச் சோதிக்க முடியும் என்பதையும் அவன் புரிந்துகொள்ளவில்லை. ஊழியம் செய்பவர்களின் காலம் முதல் இன்று வரை, தேவனின் கிரியை எவ்வளவு அதிசயமானது என்பதை மனுஷன் கண்டுவருகிறான்—இது மனுஷனால் புரிந்துகொள்ள முடியாதது. மனுஷன் தனது மூளையைப் பயன்படுத்தி அதன்மூலம் தேவன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைக் கற்பனை செய்ய முடிவதில்லை, மேலும் தனது வளர்ச்சி எவ்வளவு சிறியது என்பதையும், தான் அதிகம் கீழ்ப்படியாமல் இருப்பதையும் அவன் காண்கிறான். தேவன் மனுஷனை சபித்தபோது, அது ஒரு விளைவை அடைவதற்காகவே செய்யப்பட்டது, அவர் மனுஷனைக் கொல்லவில்லை. அவர் மனுஷனை சபித்த போதிலும், அவர் வார்த்தைகளால்தான் அவ்வாறு செய்தார், அவருடைய சாபங்கள் உண்மையில் மனுஷனுக்கு ஏற்படவில்லை, ஏனென்றால் தேவன் மனுஷனின் கீழ்ப்படியாமையைத்தான் சபித்திருக்கிறார், ஆகவே மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்கும் அவருடைய சாபங்களின் வார்த்தைகள் பேசப்பட்டன. தேவன் மனுஷனை நியாயந்தீர்த்தாலும் சபித்தாலும், இரண்டுமே மனுஷனைப் பரிபூரணமாக்குகின்றன: இவை இரண்டும் மனுஷனுக்குள் தூய்மையற்றதைப் பரிபூரணமாக்கவே செய்யப்படுகின்றன. இதன் மூலம் மனுஷன் சுத்திகரிக்கப்படுகிறான், மேலும் மனுஷனுக்குள் இல்லாத விஷயங்கள் அவருடைய வார்த்தைகள் மற்றும் கிரியையின் மூலம் பரிபூரணமாக்கப்படுகின்றன. கடுமையான வார்த்தைகள் அல்லது நியாயத்தீர்ப்பு அல்லது சிட்சை என எதுவாக இருந்தாலும், தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு படியும் மனுஷனைப் பரிபூரணமாக்குகிறது, மேலும் அது முற்றிலும் பொருத்தமானதாக இருக்கிறது. யுகங்கள் முழுவதும் தேவன் இதுபோன்ற கிரியையைச் செய்ததில்லை; இன்று, நீங்கள் அவருடைய ஞானத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர் உங்களுக்குள் கிரியை செய்கிறார். உங்களுக்குள் சில வேதனைகளை நீங்கள் அனுபவித்திருந்தாலும், உங்கள் இருதயங்கள் உறுதியும் சமாதானமும் அடைகின்றன; தேவனுடைய இந்தக் கட்ட கிரியையை உங்களால் அனுபவிக்க முடிகிறது என்பது உங்களது ஆசீர்வாதமாக இருக்கிறது. எதிர்காலத்தில் நீங்கள் எதை ஆதாயமாக்கிக்கொள்ள முடியும் என்பதைப் பொருட்படுத்தாமல் பார்த்தால், இன்று தேவனின் கிரியையில் நீங்கள் காண்பது அன்பு மட்டுமாகத்தான் இருக்கிறது. தேவனின் நியாயத்தீர்ப்பையும் புடமிடுதலையும் மனுஷன் அனுபவிக்காவிட்டால், அவனுடைய செயல்களும் ஆர்வமும் எப்போதும் மேற்பரப்பு மட்டத்திலேயே இருக்கும், மேலும் அவனது மனநிலையும் எப்போதும் மாறாமல் இருக்கும். இது தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறதா? இன்று, ஆணவமும் அகந்தையும் நிறைந்த மனுஷனுக்குள் இன்னும் நிறைய விஷயங்கள் இருந்தாலும், மனுஷனின் மனநிலை முன்பை விட மிகவும் நிலையானதாக இருக்கிறது. தேவன் உன்னைக் கையாளுவது உன்னை இரட்சிப்பதற்காகச் செய்யப்படுகிறது, மேலும் அந்த நேரத்தில் நீ சிறிது வலியை உணர்ந்தாலும், உனது மனநிலையில் மாற்றம் ஏற்படும் நாள் வரும். அந்த நேரத்தில், நீ திரும்பிப் பார்த்து, தேவனின் கிரியை எவ்வளவு ஞானமானது என்பதைக் காண்பாய், அந்த நேரத்தில் உன்னால் தேவனின் சித்தத்தை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும். இன்று, சிலர் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொண்டதாகக் கூறுகிறார்கள், ஆனால் அது மிகவும் யதார்த்தமானதாக இல்லை. உண்மையில், அவர்கள் பொய்யைப் பேசுகிறார்கள், ஏனென்றால் தேவனின் சித்தம் மனுஷனை இரட்சிப்பதா அல்லது மனுஷனை சபிப்பதா என்பதை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஒருவேளை உன்னால் இப்போது அதைத் தெளிவாகக் காண முடியாமல் இருக்கலாம், ஆனால் தேவன் மகிமை அடையும் நாள் வந்துவிட்டது என்பதை நீ பார்க்கும் நாள் வரும், மேலும் தேவனை நேசிப்பது எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை நீ காண்பாய், இதன்மூலம் நீ மனுஷ ஜீவிதத்தை அறிந்து கொள்ளுவாய், உனது மாம்சம் தேவனை நேசிக்கும் உலகில் ஜீவிக்கும், இதன்மூலம் உனது ஆவி விடுவிக்கப்படும், உனது ஜீவிதம் மகிழ்ச்சியாக இருக்கும், மேலும் நீ எப்போதும் தேவனுக்கு நெருக்கமாக இருப்பாய், அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பாய். அந்த நேரத்தில், தேவனின் இன்றைய கிரியை எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை நீ உண்மையிலேயே அறிந்துகொள்வாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க