தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கடைசிக் காலத்தில் நியாயத்தீர்ப்பு | பகுதி 86

ஜனவரி 29, 2023

தேவன் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையை, மனிதன் அவரைப் பற்றிய அறிவைப் பெறுவதற்காகவும், அவருடைய சாட்சியின் பொருட்டும் செய்கிறார். மனிதனின் சீர்கேடான மனநிலை குறித்து அவர் நியாயத்தீர்ப்பு செய்யாமல், மனிதனால் எந்தக் குற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாத அவரது நீதியான மனநிலையை அறிந்துகொள்வதற்கு சாத்தியமில்லை, மேலும் தேவனைப் பற்றிய தனது பழைய அறிவைப் புதிதாக மாற்ற முடியாது. அவருடைய சாட்சியின் பொருட்டு, மற்றும் அவரது நிர்வகித்தலின் பொருட்டு, அவர் தம்மை முழுவதுமாக வெளியரங்கமாக்கி, இதனால் மனிதனை, அவரது பொது காட்சிப்படுத்துதலின் மூலம், தேவனைப் பற்றிய அறிவைப் பெறவும், அவனுடைய மனநிலையில் மறுரூபமடையவும், மற்றும் தேவனுக்கு நற்சாட்சி அளிக்கவும் இயன்றவனாக்குகிறார். மனிதனின் மனநிலை மாற்றம் தேவனின் பல வகைப்பட்ட கிரியையின் மூலம் செய்து முடிக்கப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்கள் அவனது மனநிலையில் இல்லாமல், மனிதனால் தேவனுக்குச் சாட்சிப் பகரவும், தேவனின் இருதயத்திற்குப் பிரியமானவனாக இருக்கவும் முடியாது. மனிதன் தன்னைச் சாத்தானின் கட்டுகளிலிருந்தும் இருளின் ஆதிக்கத்திலிருந்தும் விடுவித்திருப்பதை மனிதனின் மனநிலையின் மாற்றம் குறிக்கிறது, மேலும் உண்மையிலேயே தேவனின் கிரியையின் சான்றாகவும், மாதிரியாகவும், தேவனின் சாட்சியாகவும், தேவனின் இருதயத்திற்குப் பிரியமானவனாகவும் மாறியிருக்கிறான். இன்று, மனுவுருவான தேவன் பூமியில் தமது கிரியையைச் செய்ய வந்திருக்கிறார், மனிதன் அவரைப் பற்றிய அறிவையும், அவருக்குக் கீழ்ப்படிவதையும், அவருக்குச் சாட்சி பகிர்வதையும், அவருடைய நடைமுறையான மற்றும் இயல்பான கிரியைகளை அறிந்து கொள்ளவும், அவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் அவர் செய்யும் எல்லா மனிதனின் கருத்துக்களுக்கு உடன்படாத கிரியைகளுக்கும் கீழ்ப்படியவும், மனிதனை இரட்சிக்க அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளுக்கும் சாட்சி அளிக்கவும், அத்துடன் மனிதனை ஜெயங்கொள்ள அவர் நிறைவேற்றும் எல்லாச் செயல்களும் அவருக்குத் தேவையாயிருக்கிறது. தேவனுக்குச் சாட்சி அளிப்பவர்கள் தேவனைக் குறித்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வகையான சாட்சிகள் மட்டுமே துல்லியமும், உண்மையுமானவை, இவ்வகையான சாட்சிகளால் மட்டுமே சாத்தானை வெட்கப்படுத்த முடியும். தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை, கையாள்தல் மற்றும் கிளைநறுக்குதல் மூலமாய் தம்மை தெரிந்துகொண்டவர்களை அவருக்குச் சாட்சிப் பகரப் பயன்படுத்துகிறார். சாத்தானால் சீர்கெட்டவர்களை அவருக்குச் சாட்சி அளிக்க அவர் பயன்படுத்துகிறார், அதேபோல், தங்கள் மனநிலையில் மாறியவர்களையும், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றவர்களையும் அவர் தம்முடைய சாட்சியைப் பகர பயன்படுத்துகிறார். மனிதன் அவரை வாயால் புகழ்வது அவருக்குத் தேவையில்லை, அவரால் இரட்சிக்கப்படாத சாத்தானின் வகையானோரின் துதியும் சாட்சியும் அவருக்குத் தேவையில்லை. தேவனை அறிந்தவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சிப் பகர தகுதியானவர்கள், மற்றும் தங்கள் மனநிலையில் மாற்றம் பெற்றவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சிப் பகரத் தகுதியானவர்கள். மனிதன் வேண்டுமென்றே தமது பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதைத் தேவன் அனுமதிக்க மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறிந்தவர்களால் மட்டுமே தேவனுக்கு சாட்சிப் பகர முடியும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க