தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கடைசிக் காலத்தில் நியாயத்தீர்ப்பு | பகுதி 85

பிப்ரவரி 16, 2023

என் வார்த்தைகள் கடுமையானவையாக இருந்தாலும், அவை எல்லாம் மனிதனுடைய இரட்சிப்புக்காகக் கூறப்படுகின்றன, ஏனெனில் நான் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறேனே தவிர மனிதனுடைய மாம்சத்தைத் தண்டிக்கவில்லை. இந்த வார்த்தைகள் மனிதனை ஒளியில் வாழவும், ஒளி இருக்கிறது என்பதை அறியவும், ஒளி விலைமதிப்பற்றது என்பதை அறியவும், இன்னும் அதிகமாக இந்த வார்த்தைகள் அவர்களுக்கு எவ்வளவு நன்மையானவை என்பதை அவர்கள் அறிவதோடு தேவனே இரட்சிப்பு என்றும் அறியச் செய்கின்றன. சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த பல வார்த்தைகளை நான் கூறியிருந்தாலும், உண்மையில் அவை எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவோ அது உனக்குச் செய்யப்படவில்லை. நான் என் கிரியையைச் செய்யவும் என் வார்த்தைகளைக் கூறவும் வந்திருக்கிறேன், என் வார்த்தைகள் கண்டிப்பானவையாக இருந்தாலும், அவை உங்கள் சீர்கேடு மற்றும் உங்கள் மாறுபாட்டைக் குறித்த நியாயத்தீர்ப்பாகப் பேசப்படுகின்றன. சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்து மனிதனை இரட்சிப்பதே நான் இதைச் செய்வதற்கான நோக்கமாக இருக்கிறது; நான் மனிதனை இரட்சிக்க என் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். என் வார்த்தைகளைக் கொண்டு மனிதனுக்குத் தீங்கு செய்வது என் நோக்கமல்ல. என் கிரியையில் முடிவுகளை அடையவே என் வார்த்தைகள் கடுமையாக இருக்கின்றன. இத்தகைய கிரியை மூலமே மனிதர் தங்களை அறிந்து தங்களது மாறுபாடான மனநிலையில் இருந்து விடுபட்டு வருவார்கள். சத்தியத்தைப் புரிந்துகொண்டபின் அதைக் கடைப்பிடிக்க ஜனங்களை அனுமதிப்பதும், தங்கள் மனநிலையில் மாற்றங்களை அடைவதும், தங்களைப் பற்றியும் தேவனின் கிரியையைப் பற்றியும் அறிவைப் பெறுவதுமே வார்த்தைகளின் கிரியையின் மாபெரும் முக்கியத்துவம் ஆகும். வார்த்தைகளைப் பேசுவதன் மூலம் கிரியையைச் செய்வது மட்டுமே தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்பைச் சாத்தியப்படுத்தும், மற்றும் வார்த்தைகளால் மட்டுமே சத்தியத்தை விளக்க முடியும். இந்த வகையில் கிரியை செய்வதே மனிதனை ஜெயங்கொள்ளுவதற்கான சிறந்த வழியாகும்; வார்த்தைகளைக் கூறுவதை விட, சத்தியத்தையும் தேவனின் கிரியையையும் குறித்த தெளிவான புரிதலை வேறு எந்த முறையும் ஜனங்களுக்கு அளிக்கும் திறன் கொண்டது அல்ல. இவ்வாறு, தமது இறுதிக் கட்ட கிரியையில், இன்னும் மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத சத்தியங்களையும் இரகசியங்கள் அனைத்தையும் அவர்களுக்காக வெளிப்படுத்த, சத்திய வழியையும் ஜீவனையும் தேவனிடம் இருந்து அடைய அவர்களை அனுமதித்து, அவ்வகையில் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற தேவன் மனிதனோடு பேசுகிறார். தேவ சித்தத்தை அவர்கள் நிறைவேற்ற அவர்களுக்கு உதவுவதுதான் மனிதன் மீது தேவன் செய்யும் கிரியையின் நோக்கமாகும், மேலும் அது அவர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரச் செய்யப்படுகிறது. ஆகவே, மனிதனை இரட்சிக்கும் காலகட்டத்தின் போது, அவர்களைத் தண்டிக்கும் கிரியையை அவர் செய்வதில்லை. மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் வேளையில், தேவன் தீங்கைத் தண்டிப்பதோ நன்மைக்குப் பிரதிபலன் அளிப்பதோ இல்லை, அதுமட்டுமல்லாமல் பல வகையான ஜனங்களின் சென்றடையும் இடங்களை அவர் வெளிப்படுத்துவதும் இல்லை. மாறாக, அவரது இறுதிக் கட்ட கிரியை முடிவடைந்த பின்னர் மட்டுமே, தீங்கைத் தண்டித்து நன்மைக்குப் பிரதிபலன் அளிக்கும் கிரியையைச் செய்வார் மற்றும் அதன்பின் அவர் அனைத்து வெவ்வேறு வகையான ஜனங்களின் முடிவுகளையும் வெளிப்படுத்துவார். இரட்சிக்கப்படக் கூடாதவர்களே உண்மையில் தண்டிக்கப்படுகிறவர்களாக இருப்பார்கள், அதே வேளையில் தேவனின் இரட்சிப்பின் சமயத்தில் தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றவர்களே இரட்சிக்கப்படுகிறவர்களாக இருப்பார்கள். தேவனுடைய இரட்சிப்பின் கிரியை செய்யப்படும் போது, முடிந்த வரையில் இரட்சிக்கப்படக் கூடிய ஒவ்வொரு தனி நபரும் இரட்சிக்கப்படுவார்கள், மற்றும் ஒருவரும் நிராகரிக்கப்பட மாட்டார்கள், ஏனெனில் மனிதனை இரட்சிப்பதே தேவனுடைய கிரியையின் நோக்கமாகும். மனிதனைத் தேவன் இரட்சிக்கும் சமயத்தில், தங்கள் மனநிலையில் மாற்றத்தை அடைய முடியாத அனைவரும்—அது மட்டும் அல்லாமல் முற்றிலுமாக தேவனுக்குக் கீழ்ப்படிய முடியாதவர்களும்—தண்டனைக்குரிய பொருளாவார்கள். வார்த்தைகளின் கிரியை எனப்படும் இந்தக் கட்ட கிரியையானது ஜனங்கள் புரிந்துகொள்ளாத எல்லா வழிமுறைகளையும் இரகசியங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தும், அதனால் அவர்கள் தேவ சித்தத்தையும் மற்றும் அவர்களிடம் இருந்து தேவனுக்குத் தேவையானவற்றையும் புரிந்துகொள்ள முடியும், அதனால் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் படி நடக்கவும் தங்கள் மனநிலைகளில் மாற்றத்தை அடையவும் தேவையான முன்னிபந்தனைகளைக் கொண்டிருக்கவும் முடியும். தம்முடைய கிரியையைச் செய்ய தேவன் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறார் மேலும் சிறிதளவு கலகத்துடன் இருப்பதற்காக ஜனங்களைத் தண்டிப்பதில்லை; இது ஏனென்றால் இப்போதுதான் இரட்சிப்பின் கிரியைக்கான சமயம் ஆகும். கலகத்துடன் நடந்து கொள்ளுகிற எவரேனும் ஒருவர் தண்டிக்கப்பட்டால், பின்னர் இரட்சிக்கப்படுவதற்கு ஒருவருக்கும் வாய்ப்பு கிடைக்காது; எல்லோரும் தண்டிக்கப்பட்டு பாதாளத்தில் விழுவார்கள். மனிதனை நியாயந்தீர்க்கும் வார்த்தைகளின் நோக்கம் அவர்கள் தங்களை அறிவதற்கும் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கும் அவர்களை அனுமதிப்பதுதான்; அத்தகைய நியாயத்தீர்ப்பைக் கொண்டு அவர்களைத் தண்டிப்பதற்காக அல்ல. வார்த்தைகளின் கிரியையின் காலத்தில், பல ஜனங்கள் மாம்சமாகிய தேவனிடத்தில் தங்கள் மாறுபாட்டையும் விரோதத்தையும், அது மட்டும் அல்லாமல் தங்கள் கீழ்ப்படியாமையையும் வெளிப்படுத்துவார்கள். இருந்த போதிலும், அதன் விளைவாக அவர் இந்த எல்லா மக்களையும் தண்டிக்க மாட்டார், ஆனால் அதற்குப் பதில் முற்றிலுமாக சீர்கெட்டுப் போனவர்களையும் இரட்சிக்கப்படக் கூடாதவர்களையும் மட்டுமே புறம்பே தள்ளிவிடுகிறார். அவர் அவர்களுடைய மாம்சத்தைச் சாத்தானிடம் கொடுப்பார், மேலும், சில நேர்வுகளில், அவர்களுடைய மாம்சத்துக்கு முடிவுகட்டுவார். மீந்திருப்பவர்கள் தொடர்ந்து பின்தொடர்வார்கள் மேலும் அடக்கியாளப்பட்டுத் திருத்தப்படும் அனுபவத்தைப் பெறுவார்கள். பின்தொடரும் போது, இந்த ஜனங்களால் அடக்கியாளப்பட்டுத் திருத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல், மேலும் மேலும் சீரழிந்தால், பின்னர் அவர்கள் இரட்சிப்புக்கான தங்கள் கடைசி வாய்ப்பையும் இழந்து போவார்கள். தேவனுடைய வார்த்தைகளால் ஜெயங்கொள்ளப்பட்டு கீழ்ப்படியும் ஒவ்வொருவருக்கும் இரட்சிப்புக்கான ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்; இந்த ஜனங்கள் ஒவ்வொருவருக்குமான தேவனின் இரட்சிப்பு அவரது மிகுந்த இரக்கத்தைக் காட்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்களிடத்தில் மிகவும் பொறுமை காட்டப்படும். ஜனங்கள் தங்கள் தவறான பாதைகளில் இருந்து திரும்பினால், மேலும் அவர்கள் மனந்திரும்ப முடியுமானால், அவரது இரட்சிப்பைப் பெற தேவன் அவர்களுக்கு வாய்ப்புகளை அளிப்பார். மனிதர்கள் தேவனுக்கு விரோதமாய் முதன்முதலில் கலகம் செய்யும்போது, அவர்களைக் கொன்றுபோட அவருக்கு விருப்பம் இல்லாதிருக்கிறது; மாறாக அவர்களை இரட்சிக்க அவரால் முடிந்ததை எல்லாம் அவர் செய்கிறார். யாருக்காவது இரட்சிப்புக்கான இடம் இல்லாத போது, தேவன் அவர்களைப் புறம்பே தள்ளிவிடுகிறார். சில ஜனங்களைத் தண்டிப்பதில் தேவன் நெடிய சாந்தமுள்ளவராக இருப்பதற்கான காரணம் அவர் இரட்சிக்கப்படக்கூடிய எல்லோரையும் இரட்சிக்க விரும்புவதே ஆகும். வார்த்தைகளை மட்டும் கொண்டு அவர் ஜனங்களை நியாயந்தீர்க்கிறார், அவர்களுக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கிறார், மற்றும் வார்த்தைகள் மூலம் வழிகாட்டுகிறார் மேலும் அவர் ஒரு கோலைப் பயன்படுத்தி அவர்களைக் கொல்வதில்லை. வார்த்தைகளைப் பயன்படுத்தி மனிதர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வருவதே இறுதிக்கட்ட கிரியையின் நோக்கமும் முக்கியத்துவமும் ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க