Tamil Sermon Series | கடைசி நாட்களின் தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியை எப்படி மனுக்குலத்த சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் செய்யுது?

ஜனவரி 1, 2023

பேரழிவுகள் தங்கள் மேல இருப்பத மக்கள் உணர்ந்துருக்காங்க மேலும், மேகத்து மேல கர்த்தர் வர்றத எதிர்பாத்து படபடப்போடு காத்திருக்காங்க. வருஷக்கணக்கா காத்திருந்த பிறகும், அவர் வர்றத அவங்க இன்னும் பாக்கல. மாறா, கடைசி நாட்கள்ல சர்வ வல்லமயுள்ள தேவனுடய நியாயந்தீர்க்கும் கிரியைக்கு கிழக்கத்திய மின்னல் சாட்சி கொடுப்பத அவங்க பாக்குறாங்க. இது அவங்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றம். அநேக மக்கள் தங்களுடய கருத்துகளயும், கற்பனைகளயும் பிடிச்சிகிட்டு உண்மயான வழிய தேடவும் ஆராயவும் விருப்பமில்லாம இருக்காங்க, அதனால தான் அவங்க கர்த்தர இன்னும் வரவேற்காம இருக்காங்க, மாறா, பேரழிவுக்குள்ள விழுந்துருக்காங்க. ஆனா சத்தியத்த நேசிக்குற அநேகர் இருக்குறாங்க மேலும் சர்வவல்லமயுள்ள தேவனுடய வார்த்தைகள அவுங்க வாசிக்கும் போது, அவங்க அவ அவற்றோட வல்லமயயும், அதிகாரத்தயும் பாத்தாங்க, அவை எல்லாம் சத்தியம்ன்குறதயும் பாத்தாங்க. தேவனுடய சத்தத்த அவங்க அங்கிகரிச்சாங்க, அதுக்குமேலும் தங்களோட கருத்துகளால பின்னால இழுக்கப்படல, ஆனா, தொடர்ந்து சரியான வழிய ஆராஞ்சிக்கிட்டே இருந்தாங்க. அவங்களோட முதல் கேள்வி என்னவா இருந்திச்சின்னா, அவங்களோட பாவம் மன்னிக்கப்பட்டிருக்கறப்போ, அவங்க தேவனால நீதிமான்கள்ன்னு கருதப்படுறப்போ, தேவன் ஏன் இன்னும் நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்யணும், அதோட கடைசி நாட்கள்ள அந்தக் கிரியயின் மூலமா மனுக்குலத்த தேவன் எப்படி சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் செய்றாரு. உண்மயான வழிய ஆராய்ற ஒவ்வொருவரும் எதிர்கொள்ற மிக முக்கியமான இரண்டு கேள்விகள் இவைதான். மெய்யான விசுவாசத்த தேடுதல்ங்ற இந்த நிகழ்ச்சி சத்தியத்த தேடவும் விடய கண்டு பிடிக்கவும் உங்கள வழிநடத்தும்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க