தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் | பகுதி 291

ஏப்ரல் 17, 2023

இன்று உன்னை ஜெயங்கொள்வதன் நோக்கம், தேவன் உனது தேவன் என்றும் மற்றவர்களின் தேவன் என்றும், மிக முக்கியமாக அவர் தம்மை நேசிக்கும் அனைவருக்கும் தேவன் என்றும், மற்றும் அனைத்து சிருஷ்டிப்புகளுக்கும் தேவன் என்றும் நீ ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதுதான். அவர் இஸ்ரவேலரின் தேவன், எகிப்து ஜனங்களின் தேவன். அவர் ஆங்கிலேயர்களின் தேவன் மற்றும் அமெரிக்கர்களின் தேவன். அவர் ஆதாம் மற்றும் ஏவாளின் தேவன் மட்டுமல்ல, அவர்களுடைய சந்ததியினரின் தேவனும் கூட. அவர் வானத்திலும், பூமியிலும் உள்ள சகலத்திற்கும் தேவன். எல்லா குடும்பங்களும், அவர்கள் இஸ்ரவேலராக இருந்தாலும், புறஜாதியராக இருந்தாலும், அனைவரும் ஒரே தேவனின் கைகளில் இருக்கிறார்கள். அவர் யூதேயாவில் பிறந்து, இஸ்ரவேலில் பல ஆயிரம் ஆண்டுகள் கிரியை செய்தது மட்டுமல்லாமல், இன்று அவர் சீனாவில் இறங்குகிறார், இங்குதான் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் சுருண்டு கிடக்கிறது. யூதேயாவில் பிறந்திருப்பது அவரை யூதர்களின் ராஜாவாக ஆக்குகிறது என்றால், இன்று உங்கள் அனைவருக்கும் இடையே இறங்குவதால் அவர் உங்கள் அனைவருக்குமான தேவன் அல்லவா? அவர் இஸ்ரவேலரை வழிநடத்தி யூதேயாவில் பிறந்தார், மேலும் அவர் ஒரு புறஜாதி தேசத்திலும் பிறந்தார். அவர் செய்த எல்லாக் கிரியைகளும் அவர் சிருஷ்டித்த எல்லா மனுஷர்களுக்காகத்தான் இல்லையா? அவர் இஸ்ரவேலரை நூறு மடங்கு நேசிக்கிறாரா, புறஜாதியாரை ஆயிரம் மடங்கு வெறுக்கிறாரா? அது உங்கள் கருத்து அல்லவா? தேவன் ஒருபோதும் உங்கள் தேவனாக இருக்கவில்லை என்பது விஷயம் அல்ல, மாறாக நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் விஷயம்; தேவன் உங்கள் தேவனாக இருக்க விரும்பவில்லை என்பது விஷயம் அல்ல, மாறாக நீங்கள் அவரை நிராகரிக்கிறீர்கள் என்பதுதான் விஷயம். சிருஷ்டிக்கப்பட்டவர்களில் யார் சர்வவல்லவரின் கைகளுக்குள் இல்லை? இன்று உங்களை ஜெயங்கொள்வதில், தேவன் உங்கள் தேவன்தானே தவிர வேறு யாருமல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வதே குறிக்கோள் அல்லவா? தேவன் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமே என்பதை நீங்கள் இன்னும் பராமரிக்கிறீர்கள் என்றால், இஸ்ரவேலில் உள்ள தாவீதின் வீடு தேவனின் பிறப்பின் தோற்றம் என்றும், இஸ்ரவேலைத் தவிர வேறு எந்தத் தேசமும் தேவனை "உற்பத்தி" செய்யத் தகுதியற்றவை என்றும், எந்தவொரு புறஜாதிக் குடும்பத்தினரும் யேகோவாவின் கிரியையைத் தனிப்பட்ட முறையில் பெற முடியாது என்றும் நீங்கள் இன்னும் பராமரிக்கிறீர்கள் என்றால்—நீ இப்போதும் இவ்வாறு நினைத்தால், அது உன்னைப் பிடிவாதக்காரனாக மாற்றாதா? எப்போதும் இஸ்ரவேல் மீதே குறியாக இருக்க வேண்டாம். தேவன் இன்று உங்களிடையே இருக்கிறார். நீ பரலோகத்தையே பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. பரலோகத்தில் இருக்கும் உன் தேவனுக்காக வருத்தப்படுவதை நிறுத்து! தேவன் உங்கள் மத்தியில் வந்துவிட்டார், எனவே அவர் எப்படி பரலோகத்தில் இருக்க முடியும்? நீ மிக நீண்ட காலமாக தேவனை நம்பவில்லை, ஆனாலும் நீ அவரைப் பற்றி நிறைய கருத்துக்களைக் கொண்டிருக்கிறாய், இஸ்ரவேலரின் தேவன் தமது பிரசன்னத்தால் உனக்கு கிருபை அளிப்பார் என்று நீ ஒரு நொடி கூட நினைக்கத் துணிவதில்லை. நீங்கள் எவ்வளவு இழிவாக இருக்கிறீர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவன் தனிப்பட்ட தோற்றத்தில் வருவதை நீங்கள் எப்படிக் காண்பீர்கள் என்பதை நீங்கள் சிந்திக்கத் துணிவதில்லை. தேவன் எப்படி ஒரு புறஜாதி தேசத்தில் தனிப்பட்ட முறையில் இறங்க முடியும் என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை நினைத்ததில்லை. அவர் சீனாய் மலையிலோ அல்லது ஒலிவ மலையிலோ இறங்கி இஸ்ரவேலருக்குத் தோன்ற வேண்டும். புறஜாதியார் (அதாவது இஸ்ரவேலுக்கு வெளியே உள்ளவர்கள்) அனைவரும் அவர் வெறுக்கும் பொருட்களாக இருக்கவில்லையா? அவர் எவ்வாறு அவர்களிடையே தனிப்பட்ட முறையில் கிரியை செய்ய முடியும்? இவை அனைத்தும் நீங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த ஆழமாக வேரூன்றிய கருத்துக்கள். இன்று உங்களை ஜெயங்கொள்வதன் நோக்கம் உங்களுடைய இந்தக் கருத்துக்களைச் சிதைப்பதாகும். இவ்வாறு, சீனாய் மலையிலோ அல்லது ஒலிவ மலையிலோ அல்ல, ஆனால் இதற்கு முன் அவர் வழிநடத்தியிராத ஜனங்களாகிய உங்களிடையே தேவனின் தனிப்பட்டத் தோற்றத்தை நீங்கள் காண்கிறீர்கள். தேவன் இஸ்ரவேலில் தமது கிரியையின் இரண்டு கட்டங்களைச் செய்தபின், அவர் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் என்பது உண்மைதான் என்றாலும் அவர் இஸ்ரவேலரின் தேவனாக மட்டுமே இருக்க விரும்புகிறார், புறஜாதியினரின் தேவனாக இருக்க விரும்பவில்லை என்று இஸ்ரவேலரும் எல்லா புறஜாதியரும் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருந்தனர். இஸ்ரவேலர் பின்வருவனவற்றை நம்புகிறார்கள்: தேவன் எங்கள் தேவனாக மட்டுமே இருக்க முடியும், புறஜாதியாரான உங்கள் தேவனாக இருக்க முடியாது, மேலும் நீங்கள் யேகோவாவை வணங்காததால், எங்கள் தேவனாகிய யேகோவா உங்களை வெறுக்கிறார். அந்த யூத ஜனங்களும் பின்வருவனவற்றை நம்புகிறார்கள்: கர்த்தராகிய இயேசு யூத ஜனங்களாகிய எங்களது உருவத்தை அணிந்துகொண்டார், அவர் யூத ஜனங்களின் அடையாளத்தைத் தாங்கிய தேவன் ஆகிறார். தேவன் எங்களிடையே கிரியை செய்கிறார். தேவனின் உருவமும் எங்கள் உருவமும் ஒத்தவை; எங்கள் உருவம் தேவனுக்கு நெருக்கமாக இருக்கிறது. கர்த்தராகிய இயேசு யூதர்களின் ராஜா; புறஜாதியார் அத்தகைய பெரிய இரட்சிப்பைப் பெற தகுதியற்றவர்கள். கர்த்தராகிய இயேசுதான் யூதர்களான நமக்கு பாவநிவாரணப்பலி. இஸ்ரவேலர்களும் யூத ஜனங்களும் இந்த இரண்டு கருத்துக்களையும் உருவாக்கியது கிரியையின் அந்த இரண்டு கட்டங்களின் அடிப்படையில்தான். தேவன் புறஜாதியினரின் தேவன் என்பதை அனுமதிக்காமல், அவர்கள் தேவனைத் தங்கள் தேவன் என்று கூறி அகந்தை கொள்கிறார்கள். இவ்வாறாக, தேவன் புறஜாதியரின் இருதயங்களில் ஒரு வெற்றிடமாகிப் போனார். ஏனென்றால், தேவன் புறஜாதியினரின் தேவனாக இருக்க விரும்பவில்லை என்றும், அவர் தேர்ந்தெடுத்த ஜனங்களான இஸ்ரவேலர்களையும் யூத ஜனங்களையும், குறிப்பாக அவரைப் பின்பற்றிய சீஷர்களை மட்டுமே நேசிக்கிறார் என்றும் எல்லோரும் விசுவாசித்தனர். யேகோவாவும் இயேசுவும் செய்த கிரியை எல்லா மனுஷரும் உயிர்வாழ்வதற்காகவே என்று உங்களுக்குத் தெரியாதா? இஸ்ரவேலுக்கு வெளியே பிறந்த உங்கள் அனைவருக்கும் தேவன்தான் தேவன் என்பதை நீ இப்போது ஒப்புக்கொள்கிறாயா? தேவன் இன்று இங்கே உங்கள் மத்தியில் இல்லையா? இது ஒரு சொப்பனமாக இருக்க முடியாது, இல்லையா? இந்த யதார்த்தத்தை நீங்கள் ஏற்கவில்லையா? நீங்கள் அதை நம்பவோ அல்லது அதைப் பற்றிச் சிந்திக்கவோ துணிவதில்லை. நீங்கள் அதை எப்படிப் பார்த்தாலும், உங்கள் நடுவில் தேவன் இங்கே இல்லையா? இந்த வார்த்தைகளை நம்ப நீங்கள் இன்னும் பயப்படுகிறீர்களா? இந்த நாளிலிருந்து, ஜெயங்கொள்ளப்பட்ட அனைவரும் மற்றும் தேவனின் சீஷர்களாக இருக்க விரும்பும் அனைவரும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லவா? இன்று பின்பற்றுபவர்களாக இருக்கும் நீங்கள் அனைவரும், இஸ்ரவேலுக்கு வெளியே இருக்கும் ஜனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லையா? உங்கள் அந்தஸ்து இஸ்ரவேலருக்கு சமமானதல்லவா? இவை அனைத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டாமா? உங்களை ஜெயங்கொள்ளும் கிரியையின் குறிக்கோள் இதுவல்லவா? நீங்கள் தேவனைக் காண முடியும் என்பதால், ஆதியிலிருந்து எதிர்காலம் வரை அவர் என்றென்றும் உங்கள் தேவனாக இருப்பார். நீங்கள் அனைவரும் அவரைப் பின்பற்றி, அவருடைய விசுவாசியாக, கீழ்ப்படிதலுள்ள ஜீவன்களாக இருக்கும்வரை அவர் உங்களைக் கைவிட மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (3)" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க