தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் | பகுதி 285

ஏப்ரல் 27, 2023

யூதர்கள் யாவரும் பழைய ஏற்பாட்டைப் படித்து ஒரு முன்னணையில் ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்ற ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை அறிந்திருந்தார்கள். இந்தத் தீர்க்கதரிசனத்தை முற்றிலுமாக அறிந்திருந்த பின்னும் அவர்கள் ஏன் இயேசுவைத் துன்பப்படுத்தினார்கள்? அது அவர்களது கலக சுபாவத்தினாலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் குறித்த அறியாமையினாலும் அல்லவா? அக்காலத்தில், தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட ஆண் பிள்ளையைப் பற்றி தாங்கள் அறிந்திருந்ததை விடவும் இயேசுவின் கிரியை வேறாக இருப்பதாக பரிசேயர்கள் நம்பினார்கள், மேலும் மனிதனாகப் பிறந்த தேவனுடைய கிரியை வேதாகமத்தோடு இணக்கமானதாக இல்லை என்பதால் இன்று மக்கள் தேவனை நிராகரிக்கிறார்கள். தேவனிடத்தில் அவர்களுடைய கலகப்புத்தியின் சாராம்சம் ஒரேமாதிரியாக இருக்கிறதல்லவா? பரிசுத்த ஆவியானவரின் அனைத்துக் கிரியைகளையும் உன்னால் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள முடியுமா? அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தால் அதுவே சரியான நீரோட்டம் ஆகும், மேலும் எந்த ஒரு சந்தேகமும் இன்றி நீ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்; எதை ஏற்க வேண்டும் என்பதை நீ தேர்ந்தெடுக்கக் கூடாது. நீ தேவனுக்குள் நுண்ணறிவைப் பெற்று அவரைக் குறித்து அதிக கவனமாக இருந்தால், இது தேவையற்றதாக இருந்திருக்கும் அல்லவா? நீ வேதாகமத்தில் இருந்து இன்னும் அதிக ஆதாரத்தைத் தேடக் கூடாது; அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தால், நீ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் நீ தேவனைப் பின்பற்றவே அவரை நம்புகிறாய், மேலும் அவரை நீ சோதித்தறியக் கூடாது. நான் உன்னுடைய தேவன் என்பதை நிரூபிக்க மேலும் ஆதாரங்களை நீ தேடக் கூடாது, ஆனால் நான் உனக்குப் பயனுள்ளவராக இருக்கிறேனா என்பதை உய்த்துணர்ந்து கொள்ளும் திறனுடையவனாக நீ இருக்கவேண்டும்—இதுவே மிகவும் முக்கியமானதாகும். நீ வேதாகமத்துக்குள் மறுக்கமுடியாத சான்றுகளைக் கண்டறிந்தாலும், அது உன்னை என் முன் முழுமையாகக் கொண்டுவர முடியாது. நீ வேதாகமத்தின் வரையறைக்குள்ளேயே வாழ்கிறாய், எனக்கு முன் அல்ல; என்னை அறிந்துகொள்ள வேதாகமம் உனக்கு உதவமுடியாது, என் பேரில் உனக்குள்ள அன்பையும் அதனால் ஆழப்படுத்த முடியாது. ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்று வேதாகமம் தீர்க்கதரிசனம் உரைத்த போதிலும், மனிதன் தேவனுடைய கிரியையை அறிந்திருக்கவில்லை என்பதால், ஒருவராலும் யாரைக் குறித்து இந்தத் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, மேலும் இதுவே இயேசுவுக்கு எதிராகப் பரிசேயர்களை நிற்கவைத்தது. என் கிரியை மனிதனின் நலனுக்கானது என்று சிலர் அறிவர், ஆனால் அவர்கள் தொடர்ந்து நானும் இயேசுவும் முற்றிலும் தனியான, ஒருவருக்கொருவர் இணக்கமற்ற இருவர் என தொடர்ந்து நம்புகின்றனர். அக்காலமான கிருபையின் காலத்தில், எவ்வாறு கடைப்பிடித்து நடப்பது, எவ்வாறு ஒன்றுகூடுவது, எவ்வாறு ஜெபத்தின் போது வேண்டுதல் செய்வது, எவ்வாறு பிறரை நடத்துவது, போன்ற தலைப்புகளில் இயேசு மட்டுமே தமது சீடர்களுக்கு ஒரு தொடர் போதனையை அளித்தார். அவர் செய்த கிரியை கிருபையின் காலத்திற்குரியது, மேலும் அவர் சீடர்களும் தம்மைப் பின்பற்றியவர்களும் எவ்வாறு கடைபிடித்து நடக்கவேண்டும் என்று மட்டுமே விளக்கினார். அவர் கிருபையின் காலக் கிரியையை மட்டுமே செய்தார், மேலும் கடைசி நாட்களின் கிரியை ஒன்றையும் செய்யவில்லை. நியாயப்பிரமாணத்தின் காலத்தில் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணங்களை யேகோவா விதித்தபோது, பின் ஏன் அவர் கிருபையின் காலக் கிரியையை ஆற்றவில்லை? கிருபையின் காலக் கிரியையை முன்கூட்டியே ஏன் அவர் தெளிவுபடுத்தவில்லை? மனிதன் அதை ஏற்றுக்கொள்ள அவனுக்கு இது உதவி இருக்குமல்லவா? ஓர் ஆண் குழந்தை பிறந்து ஆளுகை செய்யும் என்று மட்டுமே அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார், ஆனால் அவர் கிருபையின் காலக் கிரியையை முன்கூட்டியே செய்யவில்லை. தேவனின் கிரியைக்கு ஒவ்வொரு காலத்திலும் தெளிவான எல்லைகள் உள்ளன; அவர் நடப்புக் காலத்தின் கிரியையை மட்டுமே செய்கிறார், மற்றும் கிரியையின் அடுத்த கட்டத்தை அவர் ஒருபோதும் முன்கூட்டியே ஆற்றுவதில்லை. இவ்வாறே ஒவ்வொரு காலத்தினுடைய அவரது பிரதிநிதித்துவக் கிரியையை முன்னுக்குக் கொண்டுவர முடியும். இயேசு கடைசி நாட்களின் அடையாளங்களைப் பற்றி, எவ்வாறு பொறுமையாக இருப்பது என்பது பற்றி, மற்றும் எவ்வாறு இரட்சிக்கப்படுவது என்பது பற்றி, எவ்வாறு மனந்திரும்பி பாவ அறிக்கை செய்வது என்பது பற்றி மற்றும் எவ்வாறு சிலுவையை எடுத்துக்கொண்டு பாடுகளை சகிப்பது என்பது பற்றி மட்டுமே பேசினார்; கடைசி நாட்களில் எவ்வாறு மனிதன் வருகைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்றோ அல்லது அவன் எவ்வாறு தேவ சித்தத்தைத் திருப்தி செய்ய முயலவேண்டும் என்றோ ஒருபோதும் அவர் பேசவில்லை. இவ்வாறிருக்க, தேவனின் கடைசி நாட்களின் கிரியையை வேதாகமத்தில் தேடுவது என்பது வேடிக்கையாக இருக்கிறது அல்லவா? வேதாகமத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டு இருப்பதால் மட்டுமே உன்னால் என்ன காண முடியும்? ஒரு வேத விளக்கவுரையாளராக இருந்தாலும் சரி அல்லது ஒரு போதகராக இருந்தாலும் சரி, இன்றைக்கான கிரியையை முன்கூட்டியே யாரால் கண்டிருக்க முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லை வகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க