தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 326

பிப்ரவரி 17, 2023

தங்கள் விசுவாசத்தில், தேவன் அவர்களுக்கு ஒரு பொருத்தமான சென்றடையும் இடத்தையும் அவர்களுக்குத் தேவையான எல்லா கிருபையையும் அளிப்பதையும், அவரைத் தங்கள் ஊழியக்காரராக மாற்றவும், எந்தச் சூழலிலும் தங்களுக்கு இடையில் ஒருபோதும் எந்த ஒரு முரண்பாடும் இல்லாத வண்ணம் அவர்களோடு அவர் ஒரு சமாதானமான, நட்புரீதியான உறவைப் பேணுவதையும் ஜனங்கள் நாடுகிறார்கள். அதாவது, வேதாகமத்தில் அவர்கள் வாசித்திருக்கும், "நான் உங்கள் எல்லா விண்ணப்பங்களுக்கும் செவிகொடுப்பேன்" என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, அவர் அவர்களுடைய எல்லா தேவைகளையும் சந்திக்கும் வாக்குத்தத்தம் அளித்து அவர்கள் எதற்காகவெல்லாம் ஜெபிக்கிறார்களோ அவற்றை எல்லாம் தந்தருளுவதே தேவனிடம் அவர்களுக்கு இருக்கும் விசுவாசம் கோருகிறது. அவர்கள் தேவன் யாரையும் நியாயந்தீர்க்கவோ அல்லது தண்டிக்கவோ கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள், ஏனெனில் அவர் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் நல்ல உறவைப் பேணும், எப்போதும் இரக்கம் உள்ள இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவாக இருக்கிறார். தேவனை ஜனங்கள் விசுவாசிக்கும் விதம் இதுவே: தாங்கள் கலகக்காரர்களாக அல்லது கீழ்ப்படிகிறவர்களாக இருந்தாலும் அவர் கண்மூடித்தனமாக அவர்களுக்கு எல்லாவற்றையும் அளிப்பார் என்ற நம்பிக்கையோடு அவர்கள் வெட்கம் இல்லாமல் தேவனிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அவர் தங்களுக்கு எந்தத் தடையும் இன்றி அதுவும் இரட்டத்தனையாக "திருப்பிச் செலுத்த" வேண்டும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் தொடர்ந்து தேவனிடம் இருந்து "கடன்களை வசூலிக்கிறார்கள்"; அவர்கள் நினைக்கிறார்கள், தேவன் அவர்களிடம் இருந்து எதையும் பெற்றாரோ இல்லையோ, அவர் அவர்களால் ஏமாற்றப்பட மட்டுமே முடியும், மற்றும் அவரால் ஜனங்களைத் தன்னிச்சையாகத் திட்டமிட்டுக் கையாள முடியாது, அதைவிட, பல ஆண்டுகளாக மறைந்திருக்கும் அவரது ஞானத்தையும் நீதியான மனநிலையையும் தாம் விரும்பும் போதெல்லாம் அவர்களுடைய அனுமதி இல்லாமல் ஜனங்களிடம் வெளிப்படுத்த முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். தேவன் அப்படியே விடுவித்துவிடுவார், அவ்வாறு செய்வதில் அவர் வெறுப்படைய மாட்டார், மற்றும் இது என்றென்றும் இப்படியே தொடர்ந்து நடக்கும் என்ற நம்பிக்கையுடன், அவர்கள் வெறுமனே தங்கள் பாவங்களை தேவனிடத்தில் அறிக்கையிடுகிறார்கள். தேவன் ஊழியம் கொள்ளும்படி வராமல், மனிதர்களுக்கு ஊழியம் செய்யவே வந்தார், மற்றும் அவர் இங்கே அவர்களது ஊழியக்காரராக இருக்கிறார் என்று வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருப்பதால் அவர்களுக்கு சும்மா கீழ்ப்படிவார் என்று நம்பி அவர்கள் தேவனுக்கு வெறுமனே உத்தரவிடுகிறார்கள். எப்போதும் நீங்கள் இந்த வகையிலேயே நம்பிவிட்டீர்கள் அல்லவா? எப்போதெல்லாம் உங்களுக்கு தேவனிடத்தில் இருந்து ஏதாவது ஒன்றைப் பெற முடியவில்லையோ அப்போதெல்லாம், நீங்கள் ஓடிவிட விரும்புகிறீர்கள்; ஏதாவது ஒன்றை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் மனக்கசப்பு அடைகிறீர்கள், மற்றும் அவருக்கு எதிராக எல்லா வகையான நிந்தனைகளையும் வீசும் அளவுக்குப் போகிறீர்கள். நீங்கள் தேவன் தமது ஞானத்தையும் அற்புதத்தையும் முழுமையாக வெளிப்படுத்தக் கூட அனுமதிப்பதில்லை; பதிலாக, தற்காலிகமான தொல்லைகள் அற்ற ஆறுதலை அனுபவிக்க மட்டுமே நீங்கள் விரும்புகிறீர்கள். இப்போதுவரை, தேவனை விசுவாசிப்பதில் உங்கள் சிந்தை அதே பழைய பார்வைகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. தேவன் சிறிதளவு தம் மகத்துவத்தைக் காட்டினாலே, நீங்கள் வருத்தம் அடைகிறீர்கள். உங்கள் வளர்ச்சி எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று இப்போது நீங்கள் பார்க்கிறீர்களா? உண்மையில் உங்கள் பழைய பார்வைகள் மாறாமல் இருக்கும்போது நீங்கள் எல்லோரும் தேவனுக்கு விசுவாசமாக இருப்பதாக கருதாதீர்கள். உனக்கு ஒன்றும் நேரிடாதபோது, நீ எல்லாம் சீராகச் செல்வதாக நம்புகிறாய், மேலும் தேவனிடத்தில் உன் அன்பு உச்சத்தை எட்டுகிறது. ஏதாவது சிறிய அளவில் நேர்ந்தால், நீ பாதாளத்தில் விழுந்து விடுகிறாய். இதுதான் தேவனுக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பதா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க