தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 588

மே 15, 2023

இன்றைய கிரியை மற்றும் எதிர்காலக் கிரியைப் பற்றி மனிதன் கொஞ்சம் புரிந்துகொள்கிறான், ஆனால் மனிதகுலம் போய்ச்சேர வேண்டிய இடம் எது என்று அவன் புரிந்துகொள்ளவில்லை. ஒரு சிருஷ்டியாக, மனிதன் ஒரு சிருஷ்டிக்குரிய கடமையைச் செய்ய வேண்டும்: மனிதன் தேவனை அவர் செய்யக்கூடிய எல்லாவற்றிலும் பின்பற்ற வேண்டும்; நான் உங்களுக்குச் சொல்லும் வழியில் நீங்கள் தொடர வேண்டும். விஷயங்களை நீயாகவே நிர்வகிக்க உனக்கு வழி இல்லை, உனக்கு உன்மீது அதிகாரம் இல்லை; இவை அனைத்தும் நிச்சயம் தேவனின் திட்டத்திடம் விடப்பட வேண்டும், எல்லா விஷயங்களும் அவருடைய கரங்களுக்குள் அடங்கியிருக்கின்றன. தேவனின் கிரியை மனிதன் போய்ச்சேர வேண்டிய ஓர் அற்புதமான இடத்துடன் கூடிய ஒரு முடிவைக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அளித்தால், மனிதனை ஈர்க்கவும், மனிதனைப் பின்தொடரச் செய்யவும் தேவன் இதைப் பயன்படுத்தினால்—அவர் மனிதனுடன் ஓர் ஒப்பந்தம் செய்திருந்தால்—அப்படியானால் இது ஜெயமாக இருக்காது, அல்லது அது மனிதனின் ஜீவனில் செய்த கிரியையாக இருக்காது. மனிதனைக் கட்டுப்படுத்தவும், இருதயத்தை ஆதாயப்படுத்தவும் தேவன் மனிதனின் முடிவைப் பயன்படுத்தினார் என்றால், இதில் அவர் மனிதனைப் பரிபூரணப்படுத்த மாட்டார், அல்லது அவர் மனிதனை ஆதாயப்படுத்தவும் மாட்டார், மாறாக அவனைக் கட்டுப்படுத்த போய்ச்சேரும் இடத்தைப் பயன்படுத்துவார். மனிதன் எதிர்கால முடிவு, இறுதியாகப் போய்ச்சேருமிடம், மற்றும் நம்புவதற்கு ஏதேனும் நல்லது இருக்கிறதா இல்லையா என்பதைத் தவிர வேறு எதையும் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஜெயங்கொள்ளுதல் கிரியையின்போது மனிதனுக்கு ஓர் அழகான நம்பிக்கை அளிக்கப்பட்டிருந்தால், மனிதனை ஜெயங்கொள்வதற்கு முன்னர், பின்தொடர அவனுக்குச் சரியான போய்ச் சேருமிடம் வழங்கப்பட்டால், மனிதனை ஜெயங்கொள்வது அதன் பலனை அடைவது என்பது மட்டுமல்ல, ஜெயங்கொள்ளும் கிரியையின் பலனும்கூட பாதிப்புக்குள்ளாகும். அதாவது, ஜெயங்கொள்ளும் கிரியையானது மனிதனின் தலைவிதியையும் வாய்ப்புகளையும் பறிப்பதன் மூலமும், மனிதனின் கலகத்தனமான மனநிலைக்கு நியாயத்தீர்ப்பு அளித்து சிட்சிப்பதன் மூலமும் அதன் பலனை அடைகிறது. இது மனிதனுடன் ஓர் ஒப்பந்தம் செய்வதன் மூலம் அடையப்படவில்லை, அதாவது, மனிதனுக்கு ஆசீர்வாதங்களையும் கிருபையையும் அளிப்பதன் மூலம் அல்ல, மாறாக மனிதனின் விசுவாசத்தை வெளிப்படுத்துவதன் மூலமாகவும், அவனது "சுதந்திரத்தைப்" பறிப்பதன் மூலமாகவும், அவனது வாய்ப்புகளை அழிப்பதன் மூலமாகவும் அடையப்படுகிறது. இதுதான் ஜெயங்கொள்ளும் கிரியையின் சாராம்சமாகும். மனிதனுக்கு ஆரம்பத்திலேயே ஓர் அழகான நம்பிக்கை அளிக்கப்பட்டு, சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு கிரியைகள் பின்னர் செய்யப்பட்டிருந்தால், மனிதன் இந்தச் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பைத் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்வான், இறுதியில், சிருஷ்டிகருக்கு நிபந்தனையற்ற முறையில் கீழ்ப்படிவது மற்றும் அவரைத் தொழுதுகொள்வது ஆகியவை அவரது எல்லா ஜீவராசிகளாலும் அடையப்பட மாட்டாது; கண்மூடித்தனமான, அறியாமையுடனான கீழ்ப்படிதல் மட்டுமே இருக்கும், இல்லையென்றால் மனிதன் கண்மூடித்தனமாகத் தேவனுக்குக் கோரிக்கைகளை வைப்பான், மேலும் மனிதனின் இருதயத்தைப் பரிபூரணமாக ஜெயங்கொள்ள முடியாது. இதன் விளைவாக, அத்தகைய ஜெயங்கொள்ளும் கிரியை மூலமாக மனிதனை அடைவதும், மேலும், தேவனுக்குச் சாட்சியம் அளிப்பதும் சாத்தியமில்லை. அத்தகைய ஜீவராசிகள் தங்கள் கடமையைச் செய்ய இயலாது, மேலும் தேவனோடு பேரம் பேசுவதை மட்டுமே செய்வார்கள்; இது ஜெயமாக இருக்காது, ஆனால் இரக்கமும் ஆசீர்வாதமுமாக இருக்கும். மனிதனுடைய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவன் தனது விதி மற்றும் வாய்ப்புகளைத் தவிர வேறு எதையும் நினைக்கவில்லை, இந்த விஷயங்களை அவன் வழிபாட்டுப் பொருளாக்குகிறான். மனிதன் தனது விதி மற்றும் செல்லும் திசைகளுக்காக தேவனைப் பின்தொடர்கிறான்; அவன் தேவன் மீதுள்ள நேசத்தால் அவரைத் தொழுது கொள்வதில்லை. எனவே, மனிதனை ஜெயங்கொள்வதில், மனிதனின் சுயநலம், பேராசை மற்றும் தேவனைத் தொழுது கொள்வதை மிகவும் தடுக்கும் விஷயங்கள் அனைத்தும் கையாளப்பட வேண்டும், அதன் மூலம் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, மனிதன் மீதான ஜெயத்தின் பலன்கள் அடையப்படும். இதன் விளைவாக, மனிதனை ஜெயங்கொள்வதன் முதல் கட்டங்களில், மனிதனின் மூர்க்கத்தனமான இலட்சியங்களையும், மிக மோசமான பலவீனங்களையும் நீக்குவது அவசியம், இதன் மூலம், தேவன் மீதுள்ள அன்பை மனிதன் வெளிப்படுத்தவும், மனிதனின் வாழ்நாள் பற்றிய தனது அறிவை மாற்றவும், தேவனைப் பற்றிய அவனது பார்வை மற்றும் அவன் உயிர் வாழ்வதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளவும் முடியும். இந்த வகையில், தேவன்மீதான மனிதனின் அன்பு சுத்திகரிக்கப்படுகிறது, அதாவது மனிதனின் இதயம் ஜெயங்கொள்ளப்படுகிறது. ஆனால் எல்லா ஜீவராசிகள் மீதுமான தேவனின் மனப்பான்மையில், தேவன் ஜெயங்கொள்ளும் பொருட்டு மட்டுமே ஜெயங்கொள்வதில்லை; மாறாக, மனிதனை ஆதாயப்படுத்துவதற்காகவும், தன் சொந்த மகிமைக்காகவும், மனிதனின் ஆரம்பக்கால, உண்மையான தன்மையை மீட்டெடுப்பதற்காகவும் அவர் ஜெயங்கொள்கிறார். அவர் ஜெயங்கொள்ளும் பொருட்டு மட்டுமே ஜெயங்கொள்ள வேண்டுமென்றால், ஜெயங்கொள்ளும் கிரியையின் முக்கியத்துவம் இழக்கப்படும். அதாவது, ஜெயங்கொண்ட பிறகு, தேவன் அவரது மனிதக் கைகளைக் கழுவி, மனிதனுடைய ஜீவன் அல்லது மரணத்துக்குச் செவிசாய்க்கவில்லை என்றால், இது மனிதகுலத்தின் நிர்வாகமாகவோ, அல்லது மனிதனை ஜெயங்கொள்வது மனிதனின் இரட்சிப்புக்காகவோ இருக்காது. மனிதனை ஜெயங்கொள்வதைத் தொடர்ந்து மனிதனை ஆதாயப்படுத்துவதும், இறுதியாக அவன் போய்ச்சேர வேண்டிய ஓர் அற்புதமான இடத்திற்கு வருவதும் இரட்சிப்பின் அனைத்துக் கிரியைகளின் இருதயத்திலும் உள்ளது, மேலும் இது மட்டுமே மனிதனின் இரட்சிப்பின் நோக்கத்தை அடைய முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போய்ச்சேர வேண்டிய அழகான இடத்திற்கு மனிதனின் வருகையும், மீதமுள்ளவற்றுக்குள் பிரவேசிப்பதும் மட்டுமே அனைத்து ஜீவராசிகளிடமும் இருக்க வேண்டிய வாய்ப்புகளாகும், மற்றும் சிருஷ்டிகரால் செய்யப்பட வேண்டிய கிரியைகளாகும். மனிதன் இந்தக் கிரியையைச் செய்ய வேண்டியதிருந்தால், அது மிகவும் குறைவாகவே இருந்திருக்கும். இது மனிதனை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு சென்றிருக்கக்கூடும், ஆனால் அது மனிதனை நித்தியமாக போய்ச்சேருமிடத்திற்குக் கொண்டுவந்திருக்க முடியாது. மனிதனின் விதியை மனிதனால் தீர்மானிக்க முடியாது, மேலும், மனிதனின் வாய்ப்புகளையும் எதிர்காலத்தில் போய்ச்சேர வேண்டிய இடத்தையும் உறுதிப்படுத்த அவனால் முடியாது. இருப்பினும், தேவன் செய்யும் கிரியை வேறுபட்டது. அவர் மனிதனைச் சிருஷ்டித்ததிலிருந்து, அவனை வழிநடத்துகிறார்; அவர் மனிதனை இரட்சிப்பதால், அவர் அவனைப் பரிபூரணமாக இரட்சிப்பார், மற்றும் அவனைப் பரிபூரணமாக ஆதாயப்படுத்துவார்; அவர் மனிதனை வழிநடத்துவதால், அவனைப் போய்ச்சேர வேண்டிய சரியான இடத்திற்குக் கொண்டு வருவார்; அவர் மனிதனைச் சிருஷ்டித்து நிர்வகிப்பதால், மனிதனின் தலைவிதி மற்றும் வாய்ப்புகளுக்கு அவர் அவசியம் பொறுப்பேற்க வேண்டும். சிருஷ்டிகரால் செய்யப்படும் கிரியை என்பது இதுதான். மனிதனின் வாய்ப்புகளைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் ஜெயங்கொள்ளும் கிரியை அடையப்பட்டாலும், மனிதன் இறுதியில் தேவனால் அவனுக்கென்று ஆயத்தம் செய்யப்பட்ட போய்ச்சேர வேண்டிய சரியான இடத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும். தேவன் மனிதன் மீது கிரியை செய்வதால், மனிதனுக்குத் துல்லியமாகப் போய்ச்சேர வேண்டிய ஓர் இடம் இருக்கிறது, அவனுடைய தலைவிதி உறுதி செய்யப்படுகிறது. இங்கே, குறிப்பிடப்பட்ட பொருத்தமான போய்ச்சேருமிடம் மனிதனின் நம்பிக்கைகள் மற்றும் கடந்த காலங்களில் சுத்திகரிக்கப்பட்ட வாய்ப்புகள் அல்ல; இந்த இரண்டும் வேறுபட்டவை. மனிதன் எதிர்பார்க்கும் மற்றும் பின்தொடரும் விஷயங்கள் மனிதனுக்கு உண்டான போய்ச்சேருமிடம் என்பதைவிட, அவை மாம்சத்தின் ஆடம்பரமான ஆசைகளை தேடுவதிலிருந்து எழும் ஏக்கங்களாகும். இதற்கிடையில், மனிதனுக்காக தேவன் எதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார் என்றால், மனிதன் தூய்மைப்படுத்தப்பட்டவுடன் அவனுக்குக் கிடைக்க வேண்டிய, உலகைச் சிருஷ்டித்தபின் தேவன் மனிதனுக்காக ஆயத்தம் செய்த ஆசீர்வாதங்களும் வாக்குத்தத்தங்களுமாகும், மற்றும் இவை மனிதனின் விருப்பங்கள், எண்ணங்கள், கற்பனைகள் அல்லது மாம்சத்தால் கறைபடாதவை. போய்ச்சேரும் இந்த இடம் ஒரு குறிப்பிட்ட நபருக்காக ஆயத்தம் செய்யப்படவில்லை, ஆனால் இது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமான இடமாகும். எனவே, போய்ச்சேரும் இந்த இடம் மனிதகுலத்திற்கு மிகவும் பொருத்தமான இடமாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க