தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் | பகுதி 260

டிசம்பர் 19, 2022

இந்த உலகத்திற்கு வருகின்ற அனைவரும் வாழ்க்கையையும் மரணத்தையும் கட்டாயம் கடந்து செல்ல வேண்டும். அவர்களில் பெரும்பாலானோர் மரணம் மற்றும் மறுபிறப்பு சுழற்சியைக் கடந்து சென்றிருக்கிறார்கள். உயிரோடிருப்பவர்கள் விரைவில் மரித்துபோவார்கள். மரித்தவர்கள் விரைவில் உயிர்த்தெழுவார்கள். இவை அனைத்தும் ஒவ்வொரு ஜீவனுக்கும் தேவன் ஏற்பாடு செய்துள்ள வாழ்க்கைமுறை ஆகும். எனினும், இந்தப் போக்கையும் இந்த சுழற்சியையும் மனிதன் கவனமாகப் பார்க்க வேண்டும் என்பதே தேவன் விரும்பும் சத்தியமாகும். தேவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஜீவன் வரம்பற்றது, பொருள், நேரம், இடம் ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்பட முடியாதது. தேவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஜீவனின் இரகசியமும், ஜீவனானது அவரிடமிருந்து வந்தது என்பதற்கான சான்றும் இதுவே. ஜீவனானது தேவனிடமிருந்து வந்தது என்பதைப் பலர் விசுவாசிக்கவில்லை என்றாலும், அவர் இருப்பதை அவர்கள் நம்பினாலும் அல்லது மறுத்தாலும், தேவனிடமிருந்து வரும் அனைத்தையும் மனிதன் தவிர்க்க இயலாமல் அனுபவிக்கிறான். ஒரு நாள் திடீரென்று மனம்மாறி, உலகில் உள்ள அனைத்தையும் மீட்டெடுக்கவும், தேவன் தாம் கொடுத்த ஜீவனைத் திரும்பப் பெறவும் விரும்பினால், ஒன்றும் மீந்திராது. தேவன் தம்முடைய ஜீவனைக்கொண்டு உயிருள்ள ஜீவன்களுக்கும் உயிரற்ற பொருட்களுக்கும் அனைத்தையும் வழங்குகிறார். தம் வல்லமையினாலும் அதிகாரத்தினாலும் அனைத்தையும் நன்கு ஒழுங்குபடுத்துகிறார். இது யாராலும் சிந்தித்துப் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ முடியாத உண்மையாகும். இந்தப் புரிந்துகொள்ள முடியாத உண்மைகள் தேவனுடைய ஜீவ வல்லமையின் வெளிப்பாடாகவும் சான்றாகவும் இருக்கின்றன. இப்போது உனக்கு ஒரு இரகசியத்தை நான் சொல்கிறேன்: தேவனுடைய ஜீவனின் மகத்துவத்தையும் அவரது ஜீவனின் வல்லமையையும் எந்த சிருஷ்டிக்கும் புரிந்துகொள்ள முடியாததாகும். கடந்த காலத்தைப் போலவே இது இப்போது உள்ளது, வரவிருக்கும் காலத்திலும் அப்படியே இருக்கும். நான் சொல்லும் இரண்டாவது இரகசியம் இதுதான்: சிருஷ்க்கப்பட்ட எல்லா ஜீவன்களுக்கும் வடிவமும் உருவமும் எவ்வளவு வித்தியாசமாக இருந்தாலும் அவர்களுடைய ஜீவனின் ஆதாரமானது தேவனிடமிருந்து மட்டுமே வருகிறது. எப்படிப்பட்ட ஜீவனாக நீ இருந்தாலும் தேவன் நிர்ணயித்த ஜீவிதப் பாதைக்கு எதிராக உன்னால் திரும்ப முடியாது. எப்படியாயினும், மனிதன் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவனுடைய பராமரிப்பும், பாதுகாப்பும், ஏற்பாடும் இல்லாமல், மனிதன் எவ்வளவு விடாமுயற்சியுடன் செயல்பட்டாலும் கடினமாகப் போராடினாலும் அவன் பெற வேண்டிய அனைத்தையும் பெற முடியாது. தேவனிடமிருந்து ஜீவன் வழங்கப்படாமல், வாழ்க்கையினை வாழ்வதில் உள்ள மதிப்பையும் அர்த்தத்தையும் மனிதன் இழக்கிறான். தனது ஜீவனின் மதிப்பை அற்பமாக வீணடிக்கும் மனிதனை, இவ்வளவு கவலையற்றவனாக இருக்க தேவனால் எப்படி அனுமதிக்க முடியும்? நான் முன்பு கூறியது போல: தேவன் உன்னுடைய ஜீவனின் ஆதாரமாக இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே. தேவன் கொடுத்த அனைத்தையும் மனிதன் மதிக்கத் தவறினால், முன்பு தாம் கொடுத்ததை தேவன் திரும்பப் பெறுவது மட்டுமல்லாமல், அவர் கொடுத்த அனைத்திற்குமான விலையை மனிதனை இரண்டு மடங்காக திரும்பச் செலுத்த வைப்பார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க