தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் | பகுதி 245

ஏப்ரல் 15, 2023

தேவனின் மனநிலை என்பது அனைவருக்கும் மிகச்சுருக்கமாகத் தெரியும் ஒரு காரியமாகும், மேலும், அது யாரும் ஏற்றுக்கொள்வதற்கு எளிதானதல்ல, ஏனென்றால் அவருடைய மனநிலை ஒரு மனிதனின் குணாதிசயத்தைப் போன்றதல்ல. தேவனும், தனது சொந்த உணர்ச்சிகளான மகிழ்ச்சி, கோபம், துக்கம் மற்றும் சந்தோஷம் போன்றவற்றைக் கொண்டிருக்கிறார், ஆனால் இந்த உணர்ச்சிகள் மனிதனின் உணர்ச்சிகளிலிருந்து வேறுபடுகின்றன. தேவன் தேவன்தான், அவரிடம் உள்ளவற்றையே அவர் பெற்றிருக்கிறார். அவர் வெளிப்படுத்துவதும் மற்றும் தெரியப்படுத்துவதும் எல்லாம் அவருடைய சாராம்சமாகும் மற்றும் அவரது தனித்துவத்தை உருவகப்படுத்துபவையாகும். அவர் என்னவாக இருக்கிறார், அவரிடம் உள்ளவை எவை, அத்துடன் அவருடைய சாராம்சம் மற்றும் தனித்துவத்துவம் ஆகியவை எந்தவொரு மனிதனாலும் மாற்ற முடியாத காரியங்களாகும். அவரது மனநிலையானது மனிதகுலத்தின் மீதான அவரது அன்பு, மனிதகுலத்தின் மீதான ஆறுதல், மனிதகுலத்தின் மீதான வெறுப்பு மற்றும் இன்னும் அதிகமாக, மனிதகுலத்தைப் பற்றிய முழுமையான புரிந்து கொள்ளுதலை உள்ளடக்கியுள்ளது. இருப்பினும், மனிதனின் குணாதிசயம் நம்பிக்கையுடனும், சுறுசுறுப்பானதாகவும், உணர்ச்சியற்றதாகவும் இருக்கலாம். தேவனின் மனநிலை என்பது எல்லாவற்றையும் எல்லா ஜீவன்களையும் ஆள்பவருக்கும், எல்லா சிருஷ்டிப்புகளின் கர்த்தருக்கும் உரியது. அவரது மனநிலையானது கணம், வல்லமை, மேன்மை, மகத்துவம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, மேலாதிக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது. அவருடைய மனநிலையானது அதிகாரத்தின் அடையாளமாகும், நீதியான அனைத்திற்குமான அடையாளமாகும், அழகான மற்றும் நன்மையான அனைத்திற்குமான அடையாளமாகும். அதற்கும் மேலாக, இது இருளினாலும் மற்றும் எந்தவொரு எதிரியின் வல்லமையினாலும் ஆட்கொள்ளப்படவோ அல்லது கைப்பற்றப்படவோ முடியாத ஓர் அடையாளமாகும், அதேபோல் எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாலும் புண்படுத்தப்பட முடியாத அவரின் அடையாளமாகவும் உள்ளது (புண்படுத்தப்படுவதை அவர் சகித்துக் கொள்ள மாட்டார்). அவரது மனநிலை மிக உயர்ந்த வல்லமையின் அடையாளமாகும். அவருடைய கிரியையையோ அல்லது அவரது மனநிலையையோ எந்தவொரு நபராலும் அல்லது நபர்களாலும் தொந்தரவு செய்ய முடியாது அல்லது தொந்தரவு செய்யலாகாது. ஆனால் மனிதனின் குணாதிசயம் என்பது மிருகத்தின் மீதான மனிதனின் சிறிய மேன்மையின் வெறும் அடையாளத்திற்கு மேலானதல்ல. மனிதனுக்கு அவனுக்குள்ளும், அவனைப் பற்றியும், எந்த அதிகாரமும் இல்லை, சுய உரிமையும் இல்லை, சுயத்தை மீறும் திறனும் இல்லை, ஆனால் அவனது சாராம்சத்தில் ஜனங்களின் எல்லா வகையான நடத்தைகளின், நிகழ்வுகளின் மற்றும் காரியங்களின் கட்டுப்பாட்டிற்குக் கீழானவனாக முடங்கிப்போகிறான். இருள் மற்றும் தீமைகள் அழிக்கப்படும் காரணத்தால் நீதியும் வெளிச்சமும் இருப்பதும் மற்றும் வெளிப்படுவதும் தேவனின் சந்தோஷமாகும். மனிதகுலத்திற்கு வெளிச்சத்தையும் நல்வாழ்வையும் கொண்டுவருவதில் அவர் மகிழ்ச்சியடைகிறார். அவரது மகிழ்ச்சி ஒரு நீதியான மகிழ்ச்சி, நேர்மறையானவை அனைத்தும் இருப்பதற்கான அடையாளமாகவும், அதைவிட, ஜெயத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. தீமை மற்றும் இருள் இருப்பதாலும், சத்தியத்தை விரட்டும் காரியங்கள் இருப்பதாலும், இன்னும் அதிகமாக, நன்மையான மற்றும் அழகாக இருப்பதை எதிர்க்கும் காரியங்கள் இருப்பதாலும், அநீதியின் நிகழ்வும் மற்றும் குறுக்கீடும் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தீங்கே தேவனின் கோபத்திற்கு காரணமாகும். அவருடைய கோபமானது எதிர்மறையானவை எல்லாம் இனி இருக்காது என்பதற்கான அடையாளமாகும், அதற்கும் மேலாக, அது அவருடைய பரிசுத்தத்தின் அடையாளமாகும். அவருடைய துக்கம் மனிதகுலத்தினால் ஏற்படுகிறது, அவனுக்காக அவர் நம்பிக்கை வைத்துள்ளார், ஆனால் அவன் இருளில் விழுந்திருக்கிறவன், ஏனென்றால் அவர் மனிதனில் செய்யும் கிரியை அவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்காது, மேலும் அதனால் அவர் நேசிக்கும் மனிதகுலத்தவர் அனைவருமே வெளிச்சத்தில் வாழ முடியாது. குற்றமற்ற மனிதகுலத்துக்காகவும், நேர்மையான ஆனால் ஏதுமறியாத மனிதனுக்காகவும், நல்லவனாக இருந்தும் தன் சொந்தக் கருத்துக்கள் இல்லாதவனுக்காகவும் அவர் துக்கப்படுகிறார். அவரது துக்கமானது அவருடைய நற்குணம் மற்றும் அவரது இரக்கத்தின் அடையாளமாகும், இது அழகு மற்றும் தயவின் அடையாளமாகும். அவருடைய மகிழ்ச்சி, நிச்சயமாக, அவருடைய எதிரிகளைத் தோற்கடித்து, மனிதனின் நேர்மையான எண்ணங்களை ஆதாயமாக்குகிறது. இதை விட, இது எதிரியின் அனைத்து வல்லமைகளையும் வெளியேற்றுவதிலிருந்தும் அழிப்பதிலிருந்தும் எழுகிறது, ஏனென்றால் மனிதகுலம் ஒரு நல்ல அமைதியான வாழ்க்கையைப் பெறுகிறது. தேவனின் மகிழ்ச்சி மனிதனின் மகிழ்ச்சியைப் போன்றதல்ல. மாறாக, இது நல்ல பழங்களைக் களஞ்சியத்தில் சேர்ப்பது போன்ற உணர்வாகும், இது மகிழ்ச்சியை விட பெரிய உணர்வாகும். இவரது மகிழ்ச்சி, இந்த நேரத்திலிருந்து மனிதகுலம் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான அடையாளமாகும், மேலும் மனிதகுலம் வெளிச்சத்தின் உலகத்தில் நுழைவதின் அடையாளமாகும். மறுபுறம் மனிதகுலத்தின் உணர்ச்சிகள் எல்லாம், நீதிக்காகவோ, வெளிச்சத்திற்காகவோ அல்லது அழகானதற்காகவோ, எல்லாவற்றிற்கும் மேலாக பரலோகத்தால் வழங்கப்பட்ட கிருபைக்காகவோ அல்ல, அவனது சொந்த நலன்களுக்காகவே தோன்றுகின்றன. மனிதகுலத்தின் உணர்ச்சிகள் சுயநலமானவை மற்றும் இருளின் உலகத்தைச் சேர்ந்தவை. அவை தேவனுடைய சித்தத்தின் பொருட்டும் இல்லை, தேவனின் திட்டத்தின் பொருட்டும் இல்லை, எனவே மனிதனையும் தேவனையும் ஒருசேர்ந்தாற்போலப் பேச முடியாது. தேவன் என்றென்றும் உயர்ந்தவர், எப்போதும் மேன்மையுள்ளவர், அதே சமயம் மனிதன் என்றென்றும் இழிவானவன், என்றென்றும் பயனற்றவன். இது ஏனென்றால், தேவன் என்றென்றும் தியாகங்களைச் செய்கிறார், மனிதகுலத்திற்காகத் தன்னை அர்ப்பணிக்கிறார். இருப்பினும், மனிதன் என்றென்றும் தனக்காக மட்டுமே மேற்கொண்டு முயலுகிறான். மனிதகுலம் உயிர்வாழ்வதற்காக தேவன் என்றென்றும் வேதனையை மேற்கொள்ளுகிறார், ஆனால் மனிதன் ஒருபோதும் வெளிச்சத்தின் பொருட்டோ அல்லது நீதிக்காகவோ எதையும் பங்களிப்பதில்லை. மனிதன் ஒரு காலத்திற்கு முயற்சி செய்தாலும், அது ஒரு அடியைக் கூட தாங்க முடியாது, ஏனென்றால் மனிதனின் முயற்சி எப்போதும் மற்றவர்களுக்காக இல்லாமல் தன் சொந்த நலனுக்காகவே உள்ளது. மனிதன் எப்போதும் சுயநலவாதி, அதே சமயம் தேவன் எப்போதும் சுயநலமற்றவர். தேவன் நீதியானதும், நல்லதும், அழகானதுமான எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கிறார், அதே நேரத்தில் மனிதன் எல்லா அருவருப்புகளையும் தீமையையும் வெளிப்படுத்துவதில் வெற்றியடைகிறான். தேவன் ஒருபோதும் தனது நீதியின் மற்றும் அழகின் சாராம்சத்தை மாற்றமாட்டார், ஆனாலும் மனிதன் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் நீதிக்குத் துரோகம் செய்யவும் தேவனிடமிருந்து விலகிச் செல்வதற்கும் மிகவும் திறனுள்ளவனாக இருக்கிறான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க