தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் | பகுதி 244

ஏப்ரல் 15, 2023

நீங்கள் அடைவதற்கு அநேக காரியங்கள் உள்ளன என நான் நம்புகிறேன், ஆனாலும் நான் கேட்பதை நிறைவேற்ற, உங்கள் கிரியைகள் அனைத்தாலும், உங்கள் ஜீவனைக் குறித்த அனைத்தாலும் முடியவில்லை, எனவே நான் நேராகக் கருத்துக்கு வந்து என் சித்தத்தை உங்களுக்கு விளக்குவதைத் தவிர வேறு வழியில்லை. உங்களின் பகுத்தறிதல் மோசமானதாக இருப்பதாலும் மற்றும் உங்களின் புரிதல் இதேபோல் மோசமானதாக இருப்பதாலும், நீங்கள் எனது மனநிலையையும் சாராம்சத்தையும் முற்றிலும் அறியாதவர்களாக இருக்கின்றீர்கள். ஆகவே அவற்றைக் குறித்து நான் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது ஓர் அவசர காரியமாகும். இந்தச் சிக்கல்களை எந்த அளவிற்கு நீ முன்பு புரிந்து கொண்டாலும் பரவாயில்லை, நீ எவ்வளவு புரிந்துகொள்ள விரும்பினாலும், அவற்றை நான் இன்னும் விரிவாக உங்களுக்கு விளக்க வேண்டும். இந்தச் சிக்கல்கள் உங்களுக்கு முற்றிலும் அந்நியமானவை அல்ல, ஆனாலும் உங்களுக்கு அவற்றில் உள்ள அர்த்தத்தைக் குறித்து அதிகப் புரிதலும், அதிக பரிச்சயமும், இருப்பதில்லை. உங்களில் அநேகருக்கு அதைக் குறித்து தெளிவில்லாத மற்றும் ஓரளவு மற்றும் அரைகுறையாக புரிதல் மட்டுமே உள்ளது. சத்தியத்தை நன்றாக கைக்கொள்ள, அதாவது என் வார்த்தைகளை நன்றாக கைக்கொள்ள உங்களுக்கு உதவுவதற்கு இந்தப் பிரச்சனைகளைத்தான் நீங்கள் முதலும் முக்கியமாக அறிந்திருக்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் விசுவாசம் தெளிவற்றதாகவும், பாசாங்குத்தனமாகவும், மதத்தின் கண்ணிகளால் நிரப்பப்பட்டதாகவும் இருக்கும். தேவனின் மனநிலையை நீ புரிந்து கொள்ளாவிட்டால், நீ அவருக்காகச் செய்ய வேண்டிய கிரியையைச் செய்வது உனக்கு சாத்தியமில்லை. தேவனின் சாராம்சம் உனக்குத் தெரியாவிட்டால், நீ அவரிடம் பயபக்தியையும் பயத்தையும் கொண்டிருப்பது சாத்தியமில்லை. அதற்குப் பதிலாக, கவனக்குறைவான வேடிக்கையான தன்மையும் இரண்டகம் பேசுவதும் மேலும், திருத்த முடியாத தேவதூஷணமும் மட்டுமே இருக்கும். தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது உண்மையில் முக்கியமானது என்றாலும், தேவனின் சாரத்தை அறிந்து கொள்வதை கவனிக்காதிருக்க முடியாது என்றாலும், இந்த பிரச்சினைகளைக் குறித்து யாரும் முழுமையாக ஆராயவோ அல்லது அதற்குள் மூழ்கிடவோ இல்லை. நான் வழங்கிய நிர்வாகக் கட்டளைகளை நீங்கள் அனைவரும் தள்ளிவிட்டீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. நீங்கள் தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்ளாவிட்டால், நீங்கள் அவருடைய மனநிலைக்கு இடறலுண்டாக்குவது பெரும்பாலும் நிகழக்கூடியதே. அவருடைய மனநிலைக்கு இடறலுண்டாக்குவது தேவனின் கோபத்தைத் தூண்டுவதற்கு ஒப்பாகும், இந்நிலையில் நிர்வாகக் கட்டளைகளை மீறுவதே உன்னுடைய கிரியைகளின் கடைசிப் பலனாக இருக்கும். தேவனின் சாராம்சத்தை நீ அறிந்திருக்கும்போது, அவருடைய மனநிலையையும் நீ புரிந்துகொள்ள முடியும் என்பதை இப்போது நீ உணர வேண்டும். அவருடைய மனநிலையை நீ புரிந்துகொள்ளும்போது, நிர்வாகக் கட்டளைகளையும் நீ புரிந்துகொள்வாய். நிர்வாகக் கட்டளைகளில் உள்ளவற்றில் பெரும்பாலானவை தேவனின் மனநிலையைத் தொடுகிறது என்று சொல்லத் தேவையில்லை, ஆனால் அவருடைய மனநிலை எல்லாம் நிர்வாகக் கட்டளைகளுக்குள் வெளிப்படுத்தப்படவில்லை. எனவே, தேவனின் மனநிலையைப் பற்றிய உங்கள் புரிதலை வளர்ப்பதில் நீங்கள் இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க