மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்

இன்றைய கிரியை மற்றும் எதிர்காலக் கிரியைப் பற்றி மனிதன் கொஞ்சம் புரிந்துகொள்கிறான், ஆனால் மனிதகுலம் போய்ச்சேர வேண்டிய இடம் எது என்று அவன் புரிந்துகொள்ளவில்லை. ஒரு சிருஷ்டியாக, மனிதன் ஒரு சிருஷ்டிக்குரிய கடமையைச் செய்ய வேண்டும்: மனிதன் தேவனை அவர் செய்யக்கூடிய எல்லாவற்றிலும் பின்பற்ற வேண்டும்; நான் உங்களுக்குச் சொல்லும் வழியில் நீங்கள் தொடர வேண்டும். விஷயங்களை நீயாகவே நிர்வகிக்க உனக்கு வழி இல்லை, உனக்கு உன்மீது அதிகாரம் இல்லை; இவை அனைத்தும் நிச்சயம் தேவனின் திட்டத்திடம் விடப்பட வேண்டும், எல்லா விஷயங்களும் அவருடைய கரங்களுக்குள் அடங்கியிருக்கின்றன. தேவனின் கிரியை மனிதன் போய்ச்சேர வேண்டிய ஓர் அற்புதமான இடத்துடன் கூடிய ஒரு முடிவைக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அளித்தால், மனிதனை ஈர்க்கவும், மனிதனைப் பின்தொடரச் செய்யவும் தேவன் இதைப் பயன்படுத்தினால்—அவர் மனிதனுடன் ஓர் ஒப்பந்தம் செய்திருந்தால்—அப்படியானால் இது ஜெயமாக இருக்காது, அல்லது அது மனிதனின் ஜீவனில் செய்த கிரியையாக இருக்காது. மனிதனைக் கட்டுப்படுத்தவும், இருதயத்தை ஆதாயப்படுத்தவும் தேவன் மனிதனின் முடிவைப் பயன்படுத்தினார் என்றால், இதில் அவர் மனிதனைப் பரிபூரணப்படுத்த மாட்டார், அல்லது அவர் மனிதனை ஆதாயப்படுத்தவும் மாட்டார், மாறாக அவனைக் கட்டுப்படுத்த போய்ச்சேரும் இடத்தைப் பயன்படுத்துவார். மனிதன் எதிர்கால முடிவு, இறுதியாகப் போய்ச்சேருமிடம், மற்றும் நம்புவதற்கு ஏதேனும் நல்லது இருக்கிறதா இல்லையா என்பதைத் தவிர வேறு எதையும் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஜெயங்கொள்ளுதல் கிரியையின்போது மனிதனுக்கு ஓர் அழகான நம்பிக்கை அளிக்கப்பட்டிருந்தால், மனிதனை ஜெயங்கொள்வதற்கு முன்னர், பின்தொடர அவனுக்குச் சரியான போய்ச் சேருமிடம் வழங்கப்பட்டால், மனிதனை ஜெயங்கொள்வது அதன் பலனை அடைவது என்பது மட்டுமல்ல, ஜெயங்கொள்ளும் கிரியையின் பலனும்கூட பாதிப்புக்குள்ளாகும். அதாவது, ஜெயங்கொள்ளும் கிரியையானது மனிதனின் தலைவிதியையும் வாய்ப்புகளையும் பறிப்பதன் மூலமும், மனிதனின் கலகத்தனமான மனநிலைக்கு நியாயத்தீர்ப்பு அளித்து சிட்சிப்பதன் மூலமும் அதன் பலனை அடைகிறது. இது மனிதனுடன் ஓர் ஒப்பந்தம் செய்வதன் மூலம் அடையப்படவில்லை, அதாவது, மனிதனுக்கு ஆசீர்வாதங்களையும் கிருபையையும் அளிப்பதன் மூலம் அல்ல, மாறாக மனிதனின் விசுவாசத்தை வெளிப்படுத்துவதன் மூலமாகவும், அவனது “சுதந்திரத்தைப்” பறிப்பதன் மூலமாகவும், அவனது வாய்ப்புகளை அழிப்பதன் மூலமாகவும் அடையப்படுகிறது. இதுதான் ஜெயங்கொள்ளும் கிரியையின் சாராம்சமாகும். மனிதனுக்கு ஆரம்பத்திலேயே ஓர் அழகான நம்பிக்கை அளிக்கப்பட்டு, சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு கிரியைகள் பின்னர் செய்யப்பட்டிருந்தால், மனிதன் இந்தச் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பைத் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்வான், இறுதியில், சிருஷ்டிகருக்கு நிபந்தனையற்ற முறையில் கீழ்ப்படிவது மற்றும் அவரைத் தொழுதுகொள்வது ஆகியவை அவரது எல்லா ஜீவராசிகளாலும் அடையப்பட மாட்டாது; கண்மூடித்தனமான, அறியாமையுடனான கீழ்ப்படிதல் மட்டுமே இருக்கும், இல்லையென்றால் மனிதன் கண்மூடித்தனமாகத் தேவனுக்குக் கோரிக்கைகளை வைப்பான், மேலும் மனிதனின் இருதயத்தைப் பரிபூரணமாக ஜெயங்கொள்ள முடியாது. இதன் விளைவாக, அத்தகைய ஜெயங்கொள்ளும் கிரியை மூலமாக மனிதனை அடைவதும், மேலும், தேவனுக்குச் சாட்சியம் அளிப்பதும் சாத்தியமில்லை. அத்தகைய ஜீவராசிகள் தங்கள் கடமையைச் செய்ய இயலாது, மேலும் தேவனோடு பேரம் பேசுவதை மட்டுமே செய்வார்கள்; இது ஜெயமாக இருக்காது, ஆனால் இரக்கமும் ஆசீர்வாதமுமாக இருக்கும். மனிதனுடைய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவன் தனது விதி மற்றும் வாய்ப்புகளைத் தவிர வேறு எதையும் நினைக்கவில்லை, இந்த விஷயங்களை அவன் வழிபாட்டுப் பொருளாக்குகிறான். மனிதன் தனது விதி மற்றும் செல்லும் திசைகளுக்காக தேவனைப் பின்தொடர்கிறான்; அவன் தேவன் மீதுள்ள நேசத்தால் அவரைத் தொழுது கொள்வதில்லை. எனவே, மனிதனை ஜெயங்கொள்வதில், மனிதனின் சுயநலம், பேராசை மற்றும் தேவனைத் தொழுது கொள்வதை மிகவும் தடுக்கும் விஷயங்கள் அனைத்தும் கையாளப்பட வேண்டும், அதன் மூலம் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, மனிதன் மீதான ஜெயத்தின் பலன்கள் அடையப்படும். இதன் விளைவாக, மனிதனை ஜெயங்கொள்வதன் முதல் கட்டங்களில், மனிதனின் மூர்க்கத்தனமான இலட்சியங்களையும், மிக மோசமான பலவீனங்களையும் நீக்குவது அவசியம், இதன் மூலம், தேவன் மீதுள்ள அன்பை மனிதன் வெளிப்படுத்தவும், மனிதனின் வாழ்நாள் பற்றிய தனது அறிவை மாற்றவும், தேவனைப் பற்றிய அவனது பார்வை மற்றும் அவன் உயிர் வாழ்வதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளவும் முடியும். இந்த வகையில், தேவன்மீதான மனிதனின் அன்பு சுத்திகரிக்கப்படுகிறது, அதாவது மனிதனின் இதயம் ஜெயங்கொள்ளப்படுகிறது. ஆனால் எல்லா ஜீவராசிகள் மீதுமான தேவனின் மனப்பான்மையில், தேவன் ஜெயங்கொள்ளும் பொருட்டு மட்டுமே ஜெயங்கொள்வதில்லை; மாறாக, மனிதனை ஆதாயப்படுத்துவதற்காகவும், தன் சொந்த மகிமைக்காகவும், மனிதனின் ஆரம்பக்கால, உண்மையான தன்மையை மீட்டெடுப்பதற்காகவும் அவர் ஜெயங்கொள்கிறார். அவர் ஜெயங்கொள்ளும் பொருட்டு மட்டுமே ஜெயங்கொள்ள வேண்டுமென்றால், ஜெயங்கொள்ளும் கிரியையின் முக்கியத்துவம் இழக்கப்படும். அதாவது, ஜெயங்கொண்ட பிறகு, தேவன் அவரது மனிதக் கைகளைக் கழுவி, மனிதனுடைய ஜீவன் அல்லது மரணத்துக்குச் செவிசாய்க்கவில்லை என்றால், இது மனிதகுலத்தின் நிர்வாகமாகவோ, அல்லது மனிதனை ஜெயங்கொள்வது மனிதனின் இரட்சிப்புக்காகவோ இருக்காது. மனிதனை ஜெயங்கொள்வதைத் தொடர்ந்து மனிதனை ஆதாயப்படுத்துவதும், இறுதியாக அவன் போய்ச்சேர வேண்டிய ஓர் அற்புதமான இடத்திற்கு வருவதும் இரட்சிப்பின் அனைத்துக் கிரியைகளின் இருதயத்திலும் உள்ளது, மேலும் இது மட்டுமே மனிதனின் இரட்சிப்பின் நோக்கத்தை அடைய முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போய்ச்சேர வேண்டிய அழகான இடத்திற்கு மனிதனின் வருகையும், மீதமுள்ளவற்றுக்குள் பிரவேசிப்பதும் மட்டுமே அனைத்து ஜீவராசிகளிடமும் இருக்க வேண்டிய வாய்ப்புகளாகும், மற்றும் சிருஷ்டிகரால் செய்யப்பட வேண்டிய கிரியைகளாகும். மனிதன் இந்தக் கிரியையைச் செய்ய வேண்டியதிருந்தால், அது மிகவும் குறைவாகவே இருந்திருக்கும். இது மனிதனை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு சென்றிருக்கக்கூடும், ஆனால் அது மனிதனை நித்தியமாக போய்ச்சேருமிடத்திற்குக் கொண்டுவந்திருக்க முடியாது. மனிதனின் விதியை மனிதனால் தீர்மானிக்க முடியாது, மேலும், மனிதனின் வாய்ப்புகளையும் எதிர்காலத்தில் போய்ச்சேர வேண்டிய இடத்தையும் உறுதிப்படுத்த அவனால் முடியாது. இருப்பினும், தேவன் செய்யும் கிரியை வேறுபட்டது. அவர் மனிதனைச் சிருஷ்டித்ததிலிருந்து, அவனை வழிநடத்துகிறார்; அவர் மனிதனை இரட்சிப்பதால், அவர் அவனைப் பரிபூரணமாக இரட்சிப்பார், மற்றும் அவனைப் பரிபூரணமாக ஆதாயப்படுத்துவார்; அவர் மனிதனை வழிநடத்துவதால், அவனைப் போய்ச்சேர வேண்டிய சரியான இடத்திற்குக் கொண்டு வருவார்; அவர் மனிதனைச் சிருஷ்டித்து நிர்வகிப்பதால், மனிதனின் தலைவிதி மற்றும் வாய்ப்புகளுக்கு அவர் அவசியம் பொறுப்பேற்க வேண்டும். சிருஷ்டிகரால் செய்யப்படும் கிரியை என்பது இதுதான். மனிதனின் வாய்ப்புகளைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் ஜெயங்கொள்ளும் கிரியை அடையப்பட்டாலும், மனிதன் இறுதியில் தேவனால் அவனுக்கென்று ஆயத்தம் செய்யப்பட்ட போய்ச்சேர வேண்டிய சரியான இடத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும். தேவன் மனிதன் மீது கிரியை செய்வதால், மனிதனுக்குத் துல்லியமாகப் போய்ச்சேர வேண்டிய ஓர் இடம் இருக்கிறது, அவனுடைய தலைவிதி உறுதி செய்யப்படுகிறது. இங்கே, குறிப்பிடப்பட்ட பொருத்தமான போய்ச்சேருமிடம் மனிதனின் நம்பிக்கைகள் மற்றும் கடந்த காலங்களில் சுத்திகரிக்கப்பட்ட வாய்ப்புகள் அல்ல; இந்த இரண்டும் வேறுபட்டவை. மனிதன் எதிர்பார்க்கும் மற்றும் பின்தொடரும் விஷயங்கள் மனிதனுக்கு உண்டான போய்ச்சேருமிடம் என்பதைவிட, அவை மாம்சத்தின் ஆடம்பரமான ஆசைகளை தேடுவதிலிருந்து எழும் ஏக்கங்களாகும். இதற்கிடையில், மனிதனுக்காக தேவன் எதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார் என்றால், மனிதன் தூய்மைப்படுத்தப்பட்டவுடன் அவனுக்குக் கிடைக்க வேண்டிய, உலகைச் சிருஷ்டித்தபின் தேவன் மனிதனுக்காக ஆயத்தம் செய்த ஆசீர்வாதங்களும் வாக்குத்தத்தங்களுமாகும், மற்றும் இவை மனிதனின் விருப்பங்கள், எண்ணங்கள், கற்பனைகள் அல்லது மாம்சத்தால் கறைபடாதவை. போய்ச்சேரும் இந்த இடம் ஒரு குறிப்பிட்ட நபருக்காக ஆயத்தம் செய்யப்படவில்லை, ஆனால் இது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமான இடமாகும். எனவே, போய்ச்சேரும் இந்த இடம் மனிதகுலத்திற்கு மிகவும் பொருத்தமான இடமாகும்.

சிருஷ்டிகர் சிருஷ்டித்த அனைத்து ஜீவராசிகளுக்கும் திட்டமிட விரும்புகிறார். அவர் செய்யும் எதையும் நீ நிராகரிக்கவோ அல்லது கீழ்ப்படியாமல் இருக்கவோ கூடாது, அல்லது நீ அவருக்கு எதிராகக் கலகம் செய்யவும் கூடாது. அவர் செய்யும் கிரியை இறுதியில் அவருடைய நோக்கங்களை அடையும்போது, இதில் அவர் மகிமையைப் பெறுவார். இன்று, நீ மோவாபின் சந்ததி என்றோ, அல்லது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததி என்றோ ஏன் கூறப்படவில்லை? தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களைப் பற்றி ஏன் பேசவில்லை, சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசிகளைப் பற்றி மட்டுமே ஏன் பேசப்படுகிறது? சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசி—இதுதான் மனிதனின் உண்மையான பெயர், அவனது உள்ளார்ந்த அடையாளமாக இருப்பது இதுவே. கிரியையின் காலம் மற்றும் காலகட்டங்கள் மாறுபடுவதால் மட்டுமே பெயர்கள் மாறுபடுகின்றன; உண்மையில், மனிதன் ஓர் இயல்பான ஜீவராசி. எல்லா ஜீவராசிகளும், அவை மிகவும் சீர்கெட்டவையாக இருந்தாலும், மிகப் புனிதமானவையாக இருந்தாலும், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசியின் கடமையைச் செய்ய வேண்டும். தேவன் ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்யும்போது, உனது திசை, விதி அல்லது போய்ச்சேருமிடத்தைப் பயன்படுத்தி அவர் உன்னைக் கட்டுப்படுத்த மாட்டார். உண்மையில் இந்த வகையில் அவர் கிரியை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஜெயங்கொள்ளும் கிரியையின் நோக்கம், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசியின் கடமையை மனிதன் செய்ய வைப்பதும், சிருஷ்டிகரை அவன் தொழுது கொள்வதும் ஆகும்; இதற்குப் பிறகுதான் அவன் போய்ச்சேர வேண்டிய அற்புதமான இடத்திற்குள் பிரவேசிக்க முடியும். மனிதனின் தலைவிதி தேவனின் கைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. உன்னைக் கட்டுப்படுத்த உன்னாலேயே இயலாது. மனிதன் எப்போதுமே தன் சார்பாக விரைந்து வந்து தன்னை மும்முரமாகப் பயன்படுத்தினாலும், அவனால் தன்னைக் கட்டுப்படுத்த இயலாது. நீ உன் சொந்த வாய்ப்புகளை அறிந்து கொள்ள முடிந்தால், உன் சொந்த விதியை உன்னால் கட்டுப்படுத்த முடிந்தால், நீ அப்போதும் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசியாக இருப்பாயா? சுருக்கமாகக் கூறுவதென்றால், தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவருடைய எல்லாக் கிரியைகளும் மனிதனுக்காகவே செய்யப்படுகின்றன. உதாரணமாக, வானங்களையும் பூமியையும் மற்றும் மனிதனுக்குச் சேவை செய்யத் தேவன் சிருஷ்டித்த எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்: மனிதனுக்காக அவர் உருவாக்கிய சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள், வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம், மற்றும் இது போன்றவை எல்லாம் மனிதனின் ஜீவிதத்துக்காகவே உருவாக்கப்படுகின்றன. ஆகவே, தேவன் மனிதனை எவ்வாறு சிட்சிக்கிறார், நியாயந்தீர்க்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், இவை அனைத்தும் மனிதனின் இரட்சிப்பின் பொருட்டுதான் இருக்கின்றன. மனிதனை அவனது மாம்ச நம்பிக்கையிலிருந்து அவர் நீக்கினாலும், அது மனிதனைச் சுத்திகரிப்பதற்காகவே, மனிதனின் சுத்திகரிப்பு அவன் உயிர்வாழ்வதற்காகவே செய்யப்படுகிறது. மனிதன் யோய்ச்சேருமிடம் சிருஷ்டிகரின் கைகளில் உள்ளது, எனவே மனிதன் எப்படித் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியும்?

ஜெயங்கொள்ளும் கிரியையை முடித்ததும், மனிதன் ஓர் அழகான உலகத்திற்குக் கொண்டு வரப்படுவான். இந்த ஜீவிதம் அப்போதும் நிச்சயமாகப் பூமியில்தான் இருக்கும், ஆனால் அது இன்றைய மனிதனின் ஜீவிதத்தைப்போலல்லாமல் இருக்கும். மனிதகுலம் முழுவதையும் ஜெயங்கொண்ட பின்னர் மனிதகுலத்தின் ஜீவிதம் இதுதான், இது பூமியில் மனிதனுக்கு ஒரு புதிய தொடக்கமாக இருக்கும், மேலும் மனிதகுலத்திற்கு இதுபோன்ற ஒரு ஜீவிதம் இருப்பது மனிதகுலம் ஒரு புதிய மற்றும் அழகான உலகில் நுழைந்துள்ளது என்பதற்குச் சான்றாக இருக்கும். இது பூமியிலுள்ள மனிதன் மற்றும் தேவனின் ஜீவிதத்தின் தொடக்கமாக இருக்கும். அத்தகைய அழகான ஜீவிதத்தின் முன்மாதிரி என்னவென்றால், மனிதன் சுத்திகரிக்கப்பட்டு ஜெயங்கொள்ளப்பட்ட பிறகு, அவன் சிருஷ்டிகருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிறான். ஆகவே, மனிதகுலம் போய்ச்சேர வேண்டிய அற்புதமான இடத்திற்குள் நுழைவதற்கு முன்பு, தேவனின் கிரியையின் கடைசிக் கட்டமே ஜெயங்கொள்ளும் கிரியையாகும். அத்தகைய ஜீவிதம் என்பது பூமியில் மனிதனின் எதிர்கால ஜீவிதமாகவும், பூமியில் மிக அழகான ஜீவிதமாகவும், மனிதன் ஏங்குகிற ஜீவிதமாகவும், உலக வரலாற்றில் மனிதன் இதற்கு முன் அடையாத ஒரு வகை ஜீவிதமாகவும் இருக்கிறது. இது 6,000 ஆண்டுக்கால நிர்வாகக் கிரியையின் இறுதிப் பலனாகும்; மனிதகுலம் இதற்குத்தான் வெகுவாக ஏங்குகிறது, மேலும் இது மனிதனுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தமும் ஆகும். ஆனால் இந்த வாக்குத்தத்தம் உடனடியாக நிறைவேறாது: கடைசிக் காலத்தின் கிரியைகள் முடிந்ததும், மனிதன் முற்றிலுமாக ஜெயங்கொள்ளப்பட்டதும், அதாவது சாத்தான் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னரே மனிதன் எதிர்காலத்தில் போய்ச்சேருமிடத்திற்குள் நுழைவான். மனிதன் சுத்திகரிக்கப்பட்ட பிறகு, அவன் பாவ இயல்பு இல்லாதவனாக இருப்பான், ஏனென்றால் தேவன் சாத்தானைத் தோற்கடித்திருப்பார், அதாவது விரோத சக்திகளால் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இருக்காது, மனிதனின் மாம்சத்தைத் தாக்கக்கூடிய விரோத சக்திகள் எதுவும் இருக்காது. ஆகவே மனிதன் சுதந்திரமாகவும் பரிசுத்தமாகவும் இருப்பான்—அவன் நித்தியத்திற்குள் நுழைந்திருப்பான். அந்தகாரத்தின் வலிமைமிக்க விரோத சக்திகள் அடிமைத்தனத்தில் வைத்திருந்தால் மட்டுமே, மனிதன் எங்குச் சென்றாலும் சுதந்திரமாக இருப்பான், ஆகவே அவன் கிளர்ச்சியோ எதிர்ப்போ செய்யாமல் இருப்பான். சாத்தான் அடிமைத்தனத்தில் இருக்க வேண்டும், இதனால் மனிதனிடத்தில் அனைத்தும் நன்றாக இருக்கும்; தற்போதைய நிலைமை நிலவுவது ஏனென்றால் பூமியில் எல்லா இடங்களிலும் சாத்தான் இன்னமும் பிரச்சினையைத் தூண்டுகிறான், மேலும் தேவனின் நிர்வாகத்தின் முழு கிரியையும் அதன் முடிவை இன்னும் எட்டவில்லை. சாத்தான் தோற்கடிக்கப்பட்டவுடன், மனிதன் முற்றிலுமாக விடுவிக்கப்படுவான்; சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்து வெளியே வந்து மனிதன் தேவனைப் பெற்றதும், அவன் நீதியின் சூரியனைக் காண்பான். இயல்பான மனிதனுக்கு உரிய ஜீவிதம் மீண்டும் பெறப்படும்; தீமையிலிருந்து நன்மையை அறிந்துகொள்ளும் திறன், எப்படி சாப்பிட வேண்டும் மற்றும் ஆடை அணிய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது, இயல்பாக வாழக்கூடிய திறன் போன்ற இயல்பான மனிதனுக்கு இருக்க வேண்டியவை அனைத்தும் மீண்டும் பெறப்படும். ஏவாள் சர்ப்பத்தால் பரீட்சிக்கப்படாவிட்டால், ஆரம்பத்தில் சிருஷ்டிக்கப்பட்ட பிறகு மனிதன் இந்த மாதிரியான இயல்பான ஜீவிதத்தைப் பெற்றிருக்க வேண்டும். அவன் சாப்பிட்டு, ஆடை அணிந்து, பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை நடத்தியிருக்க வேண்டும். மனிதன் சீரழிவு நிலைக்கு வந்தபின், இந்த ஜீவிதம் அடைய முடியாத மாயையாக மாறியது, இன்றும் கூட மனிதன் அத்தகைய விஷயங்களைக் கற்பனை செய்யத் துணியவில்லை. உண்மையில், மனிதன் ஏங்குகிற இந்த அழகான ஜீவிதம் ஓர் அவசியத் தேவையாகும். மனிதன் அத்தகைய போய்ச்சேருமிடம் இல்லாமல் இருந்திருந்தால், பூமியில் அவனது சீரழிந்த ஜீவிதம் ஒருபோதும் முடிவடையாது, இவ்வளவு அழகான ஜீவிதம் இல்லாதிருந்தால், சாத்தானின் தலைவிதிக்கு அல்லது பூமியின் மீது சாத்தான் அதிகாரம் வைத்திருக்கும் காலத்துக்கு எந்த முடிவும் இருக்காது. மனிதன் அந்தகாரத்தின் வலிமை கொண்ட சக்திகளால் எட்ட முடியாத ஓர் உலகிற்குள் வர வேண்டும், அவன் அவ்வாறு செய்யும்போது, சாத்தான் தோற்கடிக்கப்பட்டான் என்பதை இது நிரூபிக்கும். இந்த வகையில், சாத்தானால் எந்த இடையூறும் ஏற்படாத நிலையில், தேவனே மனிதகுலத்தைக் கட்டுப்படுத்துவார், மேலும் அவர் மனிதனின் முழு ஜீவிதத்தையும் கட்டளையிடுவார், கட்டுப்படுத்துவார்; அப்போதுதான் சாத்தான் உண்மையிலேயே தோற்கடிக்கப்படுவான். இன்று மனிதனின் ஜீவிதம் பெரும்பாலும் அசுத்தமான ஜீவிதம்; அது இன்னும் கஷ்டமான மற்றும் துன்பப்பட்ட ஜீவிதம்தான். இதைச் சாத்தானின் தோல்வி என்று சொல்ல முடியாது; மனிதன் இன்னமும் துன்பக் கடலிலிருந்து தப்பவில்லை, இன்னும் மனிதனின் வாழ்க்கையின் கஷ்டத்திலிருந்து, அல்லது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பவில்லை, ஆனால் இன்னும் அவனுக்கு தேவனைப் பற்றிய சிறிதளவு அறிவுகூட இல்லை. மனிதனின் கஷ்டங்கள் அனைத்தும் சாத்தானால் உருவாக்கப்பட்டவை; மனிதனின் வாழ்க்கையில் துன்பத்தைக் கொண்டுவந்தது சாத்தான்தான், மேலும் சாத்தான் அடிமைத்தனத்தில் வைக்கப்பட்ட பின்னரே மனிதனால் துன்பக் கடலில் இருந்து பரிபூரணமாகத் தப்பிக்க முடியும். ஆயினும், மனிதனின் இதயத்தை ஜெயிப்பதன் மூலமும், அதனை ஆதாயப்படுத்துவதன் மூலமும் சாத்தானுடனான போரில் வென்றெடுக்கப்பட்டவனாக மனிதனை ஆக்குவதன் மூலமும், சாத்தானின் அடிமைத்தனம் அடையப்படுகிறது.

இன்று, பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை அடைவதற்கு முன்பு, ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது மற்றும் பரிபூரணமாக்கப்படுவது ஆகியவையே மனிதன் பின்பற்ற வேண்டியவை, சாத்தான் அடிமைப்படுத்தி வைக்கப்படுவதற்கு முன்பு அவைதான் அவன் பெறவிரும்பும் நோக்கங்களாகும். அடிப்படையாகவே, ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது மற்றும் பரிபூரணமாக்கப்படுவது அல்லது பெரிய அளவில் பயன்படுத்தப்படுவது இவற்றை மனிதன் பின்பற்றுவது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பதற்கானது: மனிதனின் பின்பற்றல் ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவதற்கானது, ஆனால் இறுதிப் பயன் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பதாக இருக்கும். சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பதன் மூலம் மட்டுமே மனிதன் பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை, தேவனைத் தொழுது கொள்ளும் ஜீவிதத்தை ஜீவிக்க முடியும். இன்று, ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுதல் மற்றும் பரிபூரணமாக்கப்படுதல் ஆகியவற்றை மனிதன் பின்பற்றுவது, பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தைப் பெறுவதற்கு முன்னர் பின்பற்றப்படும் விஷயமாகும். அவை சுத்திகரிக்கப்படுவது, சத்தியத்தைக் கடைப்பிடிப்பது மற்றும் சிருஷ்டிகரைத் தொழுது கொள்வது ஆகியவற்றுக்காகவே முதன்மையாகப் பின்பற்றப்படுகின்றன. பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை, கஷ்டமோ உபத்திரவமோ இல்லாத ஒரு ஜீவிதத்தை மனிதன் கொண்டிருந்தால், மனிதன் ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவதற்கான பின்பற்றுதலில் ஈடுபட மாட்டான். “ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது” மற்றும் “பரிபூரணமாக்கப்படுதல்” ஆகியவை மனிதன் பின்பற்றுவதற்குத் தேவன் கொடுக்கும் நோக்கங்களாகும், மேலும் இந்த நோக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் மனிதன் சத்தியத்தை நடைமுறையாக்கும்படியும் ஓர் அர்த்தமுள்ள ஜீவிதத்தை வாழும்படியும் அவர் செய்கிறார். மனிதனை முழுமையடையச் செய்வதும், அவனை ஆதாயப்படுத்திக் கொள்வதும் இதன் நோக்கமாகும், மேலும் ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது, பரிபூரணமாக்கப்படுவது இவற்றைப் பின்பற்றுவது அதற்கான ஒரு வழிமுறை மட்டுமேயாகும். எதிர்காலத்தில், மனிதன் அற்புதமான சென்றடையும் இடத்திற்குள் பிரவேசித்தால், ஒரு ஜெயங்கொண்டவனாக மாறியதற்கும் பரிபூரணமாக்கப்பட்டதற்கும் எந்தக் குறிப்பும் இருக்காது; தங்கள் கடமையைச் செய்யும் ஒவ்வொரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் மட்டுமே இருக்கும். இன்று, மனிதன் வெறுமனே தனக்கான ஒரு நோக்கத்தை வரையறுக்கும் பொருட்டு இவற்றைப் பின்பற்றுமாறு செய்யப்பட்டுள்ளான், இதனால் மனிதனின் பின்பற்றுதல் அதிக இலக்கு மற்றும் நடைமுறை கொண்டதாக இருக்கும். இல்லையெனில், மனிதன் தெளிவற்ற புலனாகாதவற்றுக்கு மத்தியில் வாழ்வான், மேலும் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பதை நாடுவான், இது அப்படியானால், மனிதன் இன்னும் அதிகமாக பரிதாபத்துக்கு உரியவன் ஆகமாட்டானா? குறிக்கோள்களோ கொள்கைகளோ இல்லாமல் இந்த வகையில் பின்பற்றுவது—இது தன்னைத்தானே ஏமாற்றுவது அல்லவா? இறுதியில், இந்தப் பின்பற்றல் இயற்கையாகவே பயனற்றதாக இருக்கும்; முடிவில், மனிதன் இன்னும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்வான், அதிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள அவனால் இயலாது. இத்தகைய நோக்கமற்ற பின்பற்றலுக்கு அவனை ஏன் உட்படுத்த வேண்டும்? மனிதன் நித்தியமான சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிக்கும்போது, சிருஷ்டிகரைத் தொழுது கொள்வான், மனிதன் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டு நித்தியத்திற்குள் பிரவேசித்துள்ள காரணத்தால், மனிதன் எந்த நோக்கத்தையும் பின்பற்ற மாட்டான், அல்லது சாத்தானால் முற்றுகையிடப்படுவதைப் பற்றி அவன் கவலைப்பட மாட்டான். இந்த நேரத்தில், மனிதன் தனது இடத்தை அறிந்துகொள்வான், மேலும் தன் கடமையைச் செய்வான், அவர்கள் சிட்சிக்கப்படாவிட்டாலும் அல்லது நியாயந்தீர்க்கப்படாவிட்டாலும் கூட, ஒவ்வொரு நபரும் தங்கள் கடமையைச் செய்வார்கள். அந்த நேரத்தில், மனிதன் அடையாளம் மற்றும் அந்தஸ்து இவை இரண்டிலும் ஒரு ஜீவனாக இருப்பான். உயர்வு மற்றும் தாழ்வு என்ற வேறுபாடு இனி இருக்காது; ஒவ்வொரு நபரும் ஒரு வித்தியாசமான செயல்பாட்டைச் செய்வார்கள். ஆயினும்கூட மனிதன் ஒழுங்காகவும் மனிதகுலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும் ஒரு சென்றடையும் இடத்தில் வாழ்வான்; சிருஷ்டிகரைத் தொழுது கொள்வதற்காக மனிதன் தன் கடமையைச் செய்வான், மேலும் இந்த மனுக்குலமே நித்திய மனுக்குலமாக மாறும். அந்த நேரத்தில், மனிதன் தேவனால் வெளிச்சம் பெற்ற ஒரு ஜீவிதம், தேவனின் கவனிப்பிலும் பாதுகாப்பிலும் உள்ள ஒரு ஜீவிதம், தேவனுடன் இணைந்த ஒரு ஜீவிதத்தை ஆதாயப்படுத்தியிருப்பான். மனுக்குலம் பூமியில் ஒரு இயல்பான ஜீவிதத்தை நடத்தும், மேலும் அனைத்து மக்களும் சரியான பாதையில் பிரவேசிப்பார்கள். 6,000 ஆண்டுக்கால நிர்வாகத் திட்டம் சாத்தானை முற்றிலுமாகத் தோற்கடித்திருக்கும், அதாவது மனிதன் சிருஷ்டிக்கப்பட்டபோது இருந்த அசலான சாயலைத் தேவன் மீட்டிருப்பார், அப்படி ஆகியிருந்தால் தேவனின் உண்மையான நோக்கம் நிறைவேறியிருக்கும். ஆரம்பத்தில், மனுக்குலம் சாத்தானால் சீர்கெட்டுப்போவதற்கு முன்பு, மனுக்குலம் பூமியில் ஓர் இயல்பான ஜீவிதத்தை நடத்தியது. பின்னர், மனிதன் சாத்தானால் சீர்கெட்டுப்போனபோது, மனிதன் இந்த இயல்பான ஜீவிதத்தை இழந்தான், அதனால் தேவனின் நிர்வாகக் கிரியையும், மனிதனின் இயல்பான ஜீவிதத்தை மீட்கச் சாத்தானுடனான யுத்தமும் தொடங்கியது. தேவனுடைய 6,000 ஆண்டுகால நிர்வாகக் கிரியைகள் முடிவுக்கு வரும்போதுதான், மனுக்குலத்தின் ஜீவிதம் அதிகாரப்பூர்வமாக பூமியில் தொடங்கும்; அதன்பிறகுதான் மனிதனுக்கு ஓர் அற்புதமான ஜீவிதம் கிடைக்கும், ஆரம்பத்தில் மனிதனை சிருஷ்டிப்பதில் தேவன் கொண்டிருந்த தனது நோக்கத்தையும், மனிதனின் அசல் சாயலையும் மீட்டெடுப்பார். ஆகவே, பூமியில் மனிதகுலத்தின் இயல்பான ஜீவிதம் மனிதனுக்கு கிடைத்தவுடன், மனிதன் ஜெயங்கொண்டவனாகவோ அல்லது பரிபூரணமாக்கப்பட்டவனாகவோ இருப்பதை பின்பற்ற மாட்டான், ஏனென்றால் மனிதன் பரிசுத்தவானாக இருப்பான். மக்கள் பேசும் “ஜெயங்கொண்டவர்கள்” மற்றும் “பரிபூரணமாக்கப்பட்டவர்கள்” என்பது தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தத்தின் போது மனிதன் பின்பற்றுவதற்கானவை, மேலும் அவை மனிதன் சீர்கேட்டுப்போனதால் மட்டுமே இருக்கின்றன. உனக்கு ஒரு நோக்கத்தைக் கொடுத்து, உன்னை இந்த நோக்கத்தைப் பின்பற்றச் செய்வதன் மூலம், சாத்தான் தோற்கடிக்கப்படுவான். நீ சாட்சியம் அளித்து சாத்தானை அவமானப்படுத்த, உன்னை ஒரு ஜெயங்கொண்டவன் அல்லது பரிபூரணமாக்கப்பட வேண்டியவன் அல்லது பயன்படுத்தப்பட வேண்டியவனாக இருக்கும்படி கேட்பது தேவைப்படுகிறது. இறுதியில், மனிதன் பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை நடத்துவான், மனிதன் பரிசுத்தவானாக இருப்பான்; இது நிகழும்போது, மக்கள் இன்னும் ஜெயங்கொண்டவர்களாக மாற முற்படுவார்களா? அவர்கள் அனைவரும் சிருஷ்டிப்பின் ஜீவன்கள் அல்லவா? ஒரு ஜெயங்கொண்டவன் மற்றும் ஒரு பரிபூரணமாக்கப்பட்டவன் என்று பேசுகையில், இந்த வார்த்தைகள் சாத்தானையும், மனிதனின் இழிநிலையையும் குறிக்கின்றன. “ஜெயங்கொண்டவன்” என்ற இந்த வார்த்தை சாத்தானுக்கும் விரோதச் சக்திகளுக்கும் எதிராக ஜெயங்கொள்ளப்படுவதைக் குறிக்கவில்லையா? நீ பரிபூரணப்படுத்தப்பட்டாய் என்று நீ கூறும்போது, உனக்குள் உள்ள எந்தவொன்று பரிபூரணப்படுத்தப்பட்டது? உன் சீர்கெட்ட சாத்தானிய மனப்பான்மையிலிருந்து நீயே விலகிவிட்டாய், இதனால் நீ தேவனுடைய மிக உயர்ந்த அன்பை அடைய முடியும் என்பதுதான், இல்லையா? இதுபோன்ற விஷயங்கள் மனிதனுக்குள் இருக்கும் இழிவான விஷயங்கள் தொடர்பாக மற்றும் சாத்தான் தொடர்பானவற்றுடன் கூறப்படுகின்றன; அவை தேவன் தொடர்பாகப் பேசப்படவில்லை.

நீ இப்போது ஒரு ஜெயங்கொண்டவனாக மாறி இப்போது பரிபூரணமாக்கப்படுவதை பின்தொடரவில்லையென்றால், பின்னர் எதிர்காலத்தில், மனுக்குலம் பூமியில் ஒரு இயல்பான ஜீவிதத்தை நடத்தும்போது, அத்தகைய பின்பற்றுதலுக்கு எந்த வாய்ப்பும் இருக்காது. அந்த நேரத்தில், ஒவ்வொரு வகையான நபரின் முடிவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அந்த நேரத்தில், நீ எந்த வகையான நபர் என்பது தெளிவாகத் தெரியும், மேலும் நீ ஒரு ஜெயங்கொண்டவனாக இருக்க விரும்பினால் அல்லது பரிபூரணமாக்கப்பட விரும்பினால், அது சாத்தியமற்றதாக இருக்கும். அவனது கீழ்ப்படியாமையின் காரணமாக, மனிதன் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் தண்டிக்கப்படுவான் என்பது மட்டுமே அப்போது இருக்கும். அந்த நேரத்தில், மனிதன் பின்பற்றுவது மற்றவர்களை விட உயர்ந்த நிலையில் இருக்காது, சிலர் ஜெயங்கொண்டவர்களாகவும், மற்றவர்கள் பரிபூரணமாக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள், அல்லது சிலர் தேவனின் முதற்பேறான குமாரர்களாகவும், மற்றவர்கள் தேவனின் குமாரர்களாகவும் இருப்பார்கள்; அவர்கள் இவற்றைப் பின்பற்ற மாட்டார்கள். அனைவரும் தேவனின் சிருஷ்டிகளாக இருப்பார்கள், அனைவரும் பூமியில் வாழ்வார்கள், அனைவரும் பூமியில் தேவனோடு சேர்ந்து வாழ்வார்கள். இப்போது தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தத்தின் நேரம், இந்த யுத்தம் இன்னும் முடிவடையாத காலம், மனிதன் இன்னும் முழுமையாக ஆதாயப்படுத்தப்படாத காலம்; இது மாற்றம்பெறும் காலம். ஆகவே, மனிதன் ஒரு ஜெயங்கொண்டவனாகவோ அல்லது தேவனுடைய மக்களில் ஒருவராகவோ ஆவதைப் பின்பற்ற வேண்டும். இன்று அந்தஸ்தில் வேறுபாடுகள் உள்ளன, ஆனால் நேரம் வரும்போது அத்தகைய வேறுபாடுகள் இருக்காது: ஜெயம் பெற்ற அனைவரின் அந்தஸ்தும் ஒரே மாதிரியாக இருக்கும், அவர்கள் அனைவரும் மனிதகுலத்தின் தகுதிவாய்ந்த உறுப்பினர்களாக இருப்பார்கள், பூமியில் சமமாக வாழ்வார்கள், அதாவது அவர்கள் அனைவரும் தகுதிவாய்ந்த சிருஷ்டிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள், மேலும் அதுவே அனைவருக்கும் தரப்படும். ஏனென்றால், தேவனின் கிரியையின் காலங்கள் வேறுபட்டவை, அவருடைய கிரியையின் நோக்கங்கள் வேறுபட்டவை, இந்தக் கிரியை உங்களிடத்தில் செய்யப்பட்டால், நீங்கள் பரிபூரணமாக்கப்பட்டு, ஜெயங்கொண்டவராக மாறத் தகுதி பெறுவீர்கள்; இது வேறு தேசங்களில் செய்யப்பட்டால், அங்குள்ள மக்கள் ஜெயங்கொள்ளப்படுவதற்கான முதல் குழுவினராகவும், பரிபூரணப்படுத்தப்படும் முதல் குழுவினராகவும் இருப்பார்கள். இன்று, இந்தக் கிரியை வேறு தேசங்களில் செய்யப்படவில்லை, எனவே மற்ற தேசங்களின் மக்கள் பரிபூரணமாக்கப்படுவதற்கும், ஜெயங்கொண்டவராவதற்கும் தகுதி பெறாதவர்கள், மேலும் அவர்கள் முதல் குழுவாக மாறுவது சாத்தியமில்லை. தேவனின் கிரியையின் நோக்கம் வேறுபட்டது, தேவனின் கிரியையின் காலம் வேறுபட்டது, அதன் எல்லை வேறுபட்டது என்பதால், முதல் குழு அங்கே உள்ளது, அதாவது, அங்கே ஜெயங்கொண்டவர்கள் இருக்கிறார்கள், அதேபோல் பரிபூரணமாக்கப்படும் இரண்டாவது குழுவும்கூட அங்கே இருக்கும். பரிபூரணமாக்கப்பட்ட முதல் குழு அங்கே இருக்கும்போது, ஒரு உருமாதிரி மற்றும் முன்மாதிரி இருக்கும், எனவே எதிர்காலத்தில் பரிபூரணமாக்கப்பட்டவர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது குழு இருக்கும், ஆனால் நித்தியத்தில் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பார்கள், மேலும் அந்தஸ்தின் வகைப்பாடுகள் இருக்காது. அவர்கள் வெறுமனே வெவ்வேறு காலங்களில் பரிபூரணமாக்கப்பட்டிருப்பார்கள், மேலும் அந்தஸ்தில் வேறுபாடுகள் இருக்காது. எல்லோரும் பரிபூரணமாக்கப்பட்டு, முழு பிரபஞ்சத்தின் கிரியையும் முடிவடைந்த நேரம் வரும்போது, அந்தஸ்தில் வேறுபாடுகள் இருக்காது, அனைவருக்கும் சம அந்தஸ்து இருக்கும். இன்று, இந்தக் கிரியை உங்களிடையே செய்யப்படுகிறது, இதனால் நீங்கள் ஜெயங்கொண்டவர்களாக மாறுவீர்கள். இது பிரிட்டனில் செய்யப்பட்டிருந்தால், பிரிட்டன் முதல் குழுவைக் கொண்டிருக்கும், அதே வழியில் நீங்கள் முதல் குழு ஆவீர்கள். இன்று வெறுமனே உங்களிடத்தில் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் விதத்தில் நீங்கள் குறிப்பாகக் கிருபையால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள், இந்தக் கிரியை உங்களிடத்தில் செய்யப்படவில்லை என்றால், நீங்கள் இரண்டாவது குழுவாக, அல்லது மூன்றாவது, அல்லது நான்காவது, அல்லது ஐந்தாவது குழுவாக இருப்பீர்கள். இதற்கு வெறுமனே கிரியையின் வரிசையில் உள்ள வேறுபாடு மட்டுமே காரணமாகும்; முதல் குழுவும் இரண்டாவது குழுவும் ஒன்று மற்றொன்றை விட உயர்ந்தது அல்லது குறைவாக இருப்பதைக் குறிக்கவில்லை, இது இந்த நபர்கள் பரிபூரணமாக்கப்படுவதற்கான வரிசையைக் குறிக்கிறது. இன்று இந்த வார்த்தைகள் உங்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன, ஆனால் இவை ஏன் உங்களுக்கு முன்பே தெரிவிக்கப்படவில்லை? ஏனெனில், ஒரு செயல்முறை இல்லாமல், மக்கள் உச்சத்தை நோக்கிச் செல்ல எத்தனிக்கிறார்கள். உதாரணமாக, இயேசு தம் காலத்தில் சொன்னார்: “நான் எப்படிப் புறப்பட்டேனோ, அதேபோல நான் வருவேன்.” இன்று, பலர் இந்த வார்த்தைகளில் மனதைப் பறிகொடுத்திருக்கிறார்கள், மேலும் அவர்கள் வெள்ளை அங்கிகளை மட்டுமே அணிந்து, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்வதற்காகக் காத்திருக்கிறார்கள். இதனால், மிக முன்கூட்டியே பேச முடியாத பல சொற்கள் உள்ளன; அவை மிக முன்கூட்டியே பேசப்பட்டிருந்தால், மனிதன் உச்சத்தை நோக்கிச் செல்ல முற்பட்டிருப்பான். மனிதனின் வளர்ச்சி மிகச் சிறியது, மேலும் அவனால் இந்த வார்த்தைகளைக் குறித்த உண்மையைப் பார்க்க இயலாது.

மனிதன் பூமியில் மனிதனின் உண்மையான ஜீவிதத்தை அடையும்போது, சாத்தானின் முழுச் சக்திகளும் அடிமைப்படுத்தி வைக்கப்படும்போது, மனிதன் பூமியில் எளிதாக வாழ்வான். இன்று இருப்பதுபோல விஷயங்கள் சிக்கலானதாக இருக்காது: மனித உறவுகள், சமூக உறவுகள், சிக்கலான குடும்ப உறவுகள்—அவை மிகுந்த சிரமங்களையும், மிகுந்த வேதனையையும் தருகின்றன! இங்கே மனிதனின் ஜீவிதம் மிகவும் பரிதாபகரமானது! மனிதன் ஜெயங்கொள்ளப்பட்டதும், அவனது இருதயமும் மனமும் மாறும்: தேவன் மீது பயபக்தியாயிருந்து, அவரை நேசிக்கும் இருதயம் அவனுக்கு இருக்கும். தேவனை நேசிக்க முற்படும் பிரபஞ்சத்திற்குள் உள்ள அனைவருமே ஜெயங்கொள்ளப்பட்டதும், அதாவது சாத்தான் தோற்கடிக்கப்பட்டதும், சாத்தானின் சகல அந்தகார வல்லமைகளும் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டதும், பூமியில் மனிதனின் ஜீவிதம் தொந்தரவு இல்லாததாக இருக்கும், அவனால் பூமியில் சுதந்திரமாக வாழ முடியும். மனிதனின் ஜீவிதம் மாம்ச உறவுகள் மற்றும் மாம்சத்தின் சிக்கல்கள் இல்லாததாக இருந்திருந்தால், அது மிகவும் எளிதாக இருக்கும். மனிதனின் மாம்ச உறவுகள் மிகவும் சிக்கலானவை, மனிதனுக்கு இதுபோன்ற விஷயங்கள் இருப்பது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தன்னை இன்னும் அவன் விடுவிக்கவில்லை என்பதற்குச் சான்றாகும். உனது ஒவ்வொரு சகோதர சகோதரிகளுடனும் நீ ஒரே உறவைக் கொண்டிருந்தால், உன் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் ஒரே உறவைக் கொண்டிருந்தால், உனக்கு எந்தக் கவலையும் இருக்காது, யாரையும் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இவை எதுவும் சிறப்பாக இருக்க முடியாது எனும்போது, இந்த வழியில் மனிதன் தனது துன்பத்தில் பாதியிலிருந்து விடுபடுவான். பூமியில் ஓர் இயல்பான மனித ஜீவிதத்தை வாழ்ந்தால், மனிதன் தேவதூதர்களை ஒத்து இருப்பான்; அவன் இன்னும் மாம்சமாக இருந்தாலும், அவன் ஒரு தேவதூதரைப் போலவே இருப்பான். இது இறுதி வாக்குத்தத்தம், மனிதனுக்கு வழங்கப்பட்ட கடைசி வாக்குத்தத்தம். இன்று மனிதன் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்கிறான்; இதுபோன்ற விஷயங்களை மனிதன் அனுபவிப்பது அர்த்தமற்றது என்று நீ நினைக்கிறாயா? சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியையை எந்தக் காரணமும் இல்லாமல் செய்ய முடியுமா? முன்னதாக மனிதனை சிட்சிப்பதும் நியாயத்தீர்ப்பளிப்பதும் அவனைப் பாதாளக்குழிக்குள் வைப்பதற்காகச் சொல்லப்பட்டது, அதாவது அவனது தலைவிதியையும் வாய்ப்புகளையும் பறிப்பது என்பது இதன் அர்த்தம். இது ஒரு விஷயத்திற்கானது: அது மனிதனின் சுத்திகரிப்பு. மனிதன் வேண்டுமென்றே பாதாளக்குழியில் வைக்கப்பட்டு, அதன்பிறகு தேவன் அவனைக் கை கழுவி விடுவதில்லை. மாறாக, அது மனிதனுக்குள் இருக்கும் கலகத்தனத்தைக் கையாள்வதற்கானது, இதனால் இறுதியில் மனிதனுக்குள் இருக்கும் விஷயங்கள் சுத்திகரிக்கப்படலாம், இதனால் அவன் தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெறலாம், மேலும் அவன் ஒரு பரிசுத்தமான மனிதனைப் போல ஆகலாம். இது செய்யப்பட்டால், பின்னர் அனைத்தும் நிறைவேற்றப்படும். உண்மையில், மனிதனுக்குள் கையாளப்பட வேண்டிய விஷயங்கள் கையாளப்படும்போது, மனிதன் உறுதியான சாட்சியமளிக்கும் போது, சாத்தானும்கூட தோற்கடிக்கப்படுவான், மேலும் முற்றிலும் சுத்திகரிக்கப்படாத, மனிதனுக்குள் அசலாக இருக்கக் கூடிய சில விஷயங்கள் மனிதனுக்குள் இருந்தாலும் கூட, சாத்தான் தோற்கடிக்கப்பட்டதும் அதன்பின்னர் பிரச்சினையை ஏற்படுத்தாது, மேலும் அந்த நேரத்தில் மனிதன் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டிருப்பான். மனிதன் அத்தகைய ஜீவிதத்தை ஒருபோதும் அனுபவித்து உணர்ந்ததில்லை, ஆனால் சாத்தான் தோற்கடிக்கப்பட்டதும், அனைத்தும் தீர்ந்துவிடும், மனிதனுக்குள் இருக்கும் அற்பமான விஷயங்கள் அனைத்தும் தீர்க்கப்படும், அந்த முக்கிய பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன், மற்ற எல்லாக் கஷ்டங்களும் முடிவுக்கு வரும். பூமியில் தேவன் மனித உருவம் எடுத்த இந்தச் சமயத்தில், அவர் மனிதர்களிடையே தனிப்பட்ட முறையில் தனது கிரியையைச் செய்யும்போது, அவர் செய்யும் எல்லாக் கிரியைகளும் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே செய்யப்படுகின்றன, மேலும் மனிதன் ஜெயங்கொள்ளப்படுவதன் மூலமும், உங்களை முழுமையாக்குவதன் மூலமும் அவர் சாத்தானைத் தோற்கடிப்பார். நீங்கள் உறுதியான சாட்சியங்களை அளிக்கும்போது, இதுவும் சாத்தானின் தோல்வியின் அடையாளமாக இருக்கும். மனிதன் முதலில் ஜெயங்கொள்ளப்படுகிறான், சாத்தானைத் தோற்கடிப்பதற்காக இறுதியில் முழுமையாக பரிபூரணமாக்கப்படுகிறான். சாராம்சத்தில், எவ்வாறாயினும், சாத்தானின் தோல்வியுடன் சேர்ந்து, உபத்திரவங்கள் நிறைந்த இந்த வெற்றுக் கடலிலிருந்து எல்லா மனிதர்களுக்கும் இது இரட்சிப்பாகும். கிரியை மேற்கொள்ளப்படுவது பிரபஞ்சம் முழுவதிலுமா அல்லது சீனாவிலா என்பதைப் பொருட்டாகக் கொள்ளாமல், சாத்தானைத் தோற்கடித்து, மனுக்குலம் முழுவதிலும் இரட்சிப்பைக் கொண்டுவருவதற்கு எல்லாம் வரிசையாக உள்ளன, இதனால் மனிதன் இளைப்பாறுதலான இடத்திற்குள் பிரவேசிக்க முடியும். மனித உருவான தேவன், இந்த இயல்பான மாம்சம், துல்லியமாகச் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆகும். வானத்தின் கீழே உள்ள தேவனை நேசிக்கும் அனைவருக்கும் இரட்சிப்பைக் கொண்டுவருவதற்கு மாம்சத்தில் தேவனின் கிரியை பயன்படுத்தப்படுகிறது, இது எல்லா மனிதர்களையும் ஜெயங்கொள்ளும் பொருட்டாகும், மேலும், சாத்தானைத் தோற்கடிப்பதற்கானதாகும். எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பைக் கொடுப்பதற்கான தேவனின் அனைத்து நிர்வாகக் கிரியைகளின் உட்பொருளானது, சாத்தானின் தோல்வியிலிருந்து பிரிக்க முடியாதது. ஏன், இந்தக் கிரியையின் பெரும்பகுதிகளில், நீங்கள் சாட்சியம் அளிப்பது பற்றி எப்போதும் பேசப்படுகிறது? இந்த சாட்சியம் யாரை நோக்கி இயக்கப்படுகிறது? இது சாத்தானை நோக்கியதல்லவா? இந்தச் சாட்சியம் தேவனுக்குச் செய்யப்படுகிறது, மேலும் தேவனின் கிரியை அதன் பயனை அடைந்துள்ளது என்பதற்கான சாட்சியமளிக்கப்படுகிறது. சாட்சியம் அளிப்பது சாத்தானைத் தோற்கடிக்கும் கிரியையுடன் தொடர்பு கொண்டது; சாத்தானுடன் ஒரு யுத்தம் இல்லாவிட்டால், மனிதன் சாட்சியம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், மனிதனை இரட்சிக்கும் அதே நேரத்தில், சாத்தான் தோற்கடிக்கப்பட வேண்டும், சாத்தானுக்கு முன்பாக மனிதன் சாட்சியம் அளிக்க வேண்டும் என்று தேவன் கோருகிறார், அது மனிதனை இரட்சிக்கவும் சாத்தானுடன் யுத்தம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, மனிதன் இரட்சிக்கப்படும் பொருள் மற்றும் சாத்தானைத் தோற்கடிப்பதற்கான ஒரு கருவி என இரண்டுமாகிறான், ஆகவே மனிதன் தேவனின் முழு நிர்வாகக் கிரியையின் உட்பொருளாக இருக்கிறான், அதே சமயம் சாத்தான் வெறுமனே அழிவின் பொருள், மற்றும் எதிரியாக இருக்கிறான். நீ எதுவும் செய்யவில்லை என்று நீ உணரலாம், ஆனால் உனது மனநிலையின் மாற்றங்கள் காரணமாக, சாட்சியம் அளிக்கப்படுகிறது, மேலும் இந்தச் சாட்சியம் சாத்தானை நோக்கிச் செய்யப்படுகிறது, அது மனிதனுக்குச் செய்யப்படவில்லை. அத்தகைய சாட்சியத்தை அனுபவிக்க மனிதன் தகுதியற்றவன். தேவன் செய்த கிரியையை அவன் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? தேவனுடைய யுத்தத்தின் நோக்கம் சாத்தான்; இதற்கிடையில், மனிதன் இரட்சிப்பின் பொருள் மட்டுமேயாவான். மனிதனிடம் சீர்கெட்ட சாத்தானின் மனப்பான்மை உள்ளது, மேலும் இந்தக் கிரியையைப் புரிந்துகொள்ள இயலாதவனாக இருக்கிறான். இதன் காரணம் சாத்தான் ஏற்படுத்தும் சீர்கேடு ஆகும், அது மனிதனுக்கு இயல்பானது அல்ல, ஆனால் அது சாத்தானால் இயக்கப்படுகிறது. இன்று, தேவனின் முக்கிய கிரியை சாத்தானைத் தோற்கடிப்பது, அதாவது மனிதனை முற்றிலுமாக ஜெயங்கொள்ளுவது, இதனால் மனிதன் சாத்தானுக்கு முன்பாக தேவனுக்கு இறுதி சாட்சியம் அளிக்க முடியும். இந்த வகையில், எல்லா விஷயங்களும் நிறைவேற்றப்படும். பல சந்தர்ப்பங்களில், உனது வெறுங்கண்ணுக்கு எதுவும் செய்யப்படவில்லை என்பதுபோல தோன்றுகிறது, ஆனால் உண்மையில், கிரியை ஏற்கெனவே முடிக்கப்பட்டுவிட்டது. முடிக்கப்பட்டு விட்ட அனைத்துக் கிரியைகளும் கண்ணுக்குப் புலப்பட வேண்டும் என்று மனிதன் கோருகிறான், ஆனாலும் உன் கண்ணுக்குத் தெரியாமலேயே நான் என் கிரியையை முடித்துவிட்டேன், ஏனென்றால் சாத்தான் சரண் அடைந்துவிட்டான், அதாவது அவன் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டான், தேவனின் ஞானம், சக்தி மற்றும் அதிகாரம் அத்தனையும் சாத்தானை வென்று விட்டது. துல்லியமாக, இதுவே சொல்லப்பட வேண்டிய சாட்சியம், அதற்கு மனிதனிடம் தெளிவான வெளிப்பாடு இல்லை என்றாலும், அது வெறுங்கண்ணுக்குப் புலப்படவில்லை என்றாலும், சாத்தான் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்டு விட்டான். இந்தக் கிரியை முழுதும் சாத்தானுக்கு எதிராக இயக்கப்பட்டு சாத்தானுடனான யுத்தம் காரணமாக மேற்கொள்ளப்படுகிறது. எனவே, வெற்றி பெற்றதாக மனிதன் பார்க்காத பல விஷயங்கள் உள்ளன, ஆனால் அவை தேவனின் பார்வையில் வெற்றிகரமாக நீண்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டன. தேவனின் எல்லா கிரியைகளைப் பற்றிய உள்ளார்ந்த சத்தியங்களில் இது ஒன்றாகும்.

சாத்தான் தோற்கடிக்கப்பட்டவுடன், அதாவது, மனிதன் முற்றிலுமாக ஜெயங்கொள்ளப்பட்டவுடன், இந்தக் கிரியை அனைத்தும் இரட்சிப்பின் பொருட்டுதான் என்பதை மனிதன் புரிந்துகொள்வான், மேலும் இந்த இரட்சிப்பின் வழிமுறையானது சாத்தானின் கைகளிலிருந்து மக்களைக் கைப்பற்றுவதாகும். தேவனின் 6,000 ஆண்டுக்கால நிர்வாகக் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம் மற்றும் ராஜ்யத்தின் காலம். இந்த மூன்று கட்ட கிரியைகள் அனைத்தும் மனுக்குலத்தின் இரட்சிப்பின் பொருட்டு, அதாவது சாத்தானால் கடுமையாகச் சீர்கெட்டுவிட்ட மனுக்குலத்தின் இரட்சிப்புக்காகவேயாகும். ஆயினும், அதே சமயம், அவை மேலும் தேவன் சாத்தானுடன் யுத்தம் செய்வதற்குமானவையாகும். இவ்வாறு, இரட்சிப்பின் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுவது போல, சாத்தானுடனான யுத்தமும் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் தேவனுடைய கிரியையின் இந்த இரண்டு அம்சங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன. சாத்தானுடனான போர் உண்மையில் மனுக்குலத்தின் இரட்சிப்பின் பொருட்டானது ஆகும், மனுக்குலத்தின் இரட்சிப்பின் கிரியை ஒரே கட்டத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படக்கூடிய ஒன்றல்ல என்பதால், சாத்தானுடனான யுத்தமும் கட்டங்கள் மற்றும் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் மனிதனின் தேவைகளுக்கேற்பவும், சாத்தான் அவனுக்குச் செய்துள்ள சீர்கேட்டின் அளவுக்கு ஏற்பவும் யுத்தம் நடத்தப்படுகிறது. ஒருவேளை, மனிதனின் கற்பனையில், இரண்டு படைகளும் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதுபோல், இந்த யுத்தத்தில் தேவன் சாத்தானுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பார் என்று அவன் நம்புகிறான். மனிதனின் அறிவாற்றல் இப்படித்தான் கற்பனை செய்யும் திறன் கொண்டது; இது அதீதத் தெளிவற்ற மற்றும் நம்பத்தகாத யோசனை, ஆனாலும் மனிதன் இதைத்தான் நம்புகிறான். மனிதனுடைய இரட்சிப்பின் வழி சாத்தானுடனான யுத்தத்தின் மூலம் என்று நான் இங்கே சொல்வதால், யுத்தம் இப்படித்தான் நடத்தப்படுகிறது என்று மனிதன் கற்பனை செய்கிறான். மனிதனுடைய இரட்சிப்பின் கிரியைக்கு மூன்று கட்டங்கள் உள்ளன, அதாவது சாத்தானை முழுவதுமாக தோற்கடிப்பதற்காகச் சாத்தானுடனான யுத்தம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சாத்தானுடனான யுத்தத்தின் முழு கிரியையின் உள்ளார்ந்த சத்தியம் என்னவென்றால், அதன் விளைவுகள் பல படிநிலைகளிலான கிரியை மூலம் அடையப்படுகின்றன: அவை மனிதனுக்குக் கிருபையை கொடுப்பது, மனிதனின் பாவநிவாரணபலியாக மாறுதல், மனிதனின் பாவங்களை மன்னித்தல், மனிதனை ஜெயிப்பது, மனிதனைப் பரிபூரணமாக்குவது. உண்மையில், சாத்தானுடனான யுத்தம் என்பது சாத்தானுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பது அல்ல, மாறாக மனிதனின் இரட்சிப்பு, மனிதனின் ஜீவிதம் பற்றிய கிரியை, தேவனுக்குச் சாட்சியம் அளிக்கும்படி மனிதனின் மனநிலையை மாற்றுவது ஆகியவையாகும். இப்படித்தான் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். மனிதனின் சீர்கெட்ட மனநிலையை மாற்றுவதன் மூலம் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். சாத்தான் தோற்கடிக்கப்பட்டிருக்கும்போது, அதாவது மனிதன் முற்றிலுமாக இரட்சிக்கப்பட்டிருக்கும்போது, பின்னர் அவமானப்படுத்தப்பட்ட சாத்தான் முற்றிலுமாக கட்டப்படுவான், இந்த வழியில் மனிதன் பரிபூரணமாக இரட்சிக்கப்பட்டிருப்பான். இவ்வாறு, மனிதனின் இரட்சிப்பின் சாராம்சமானது சாத்தானுக்கு எதிரான யுத்தமாகும், இந்த யுத்தம் முதன்மையாக மனிதனின் இரட்சிப்பில் பிரதிபலிக்கிறது. மனிதனை ஜெயங்கொள்ளும் கடைசி நாட்களின் கட்டம், சாத்தானுடனான யுத்தத்தின் கடைசிக் கட்டமாகும், மேலும் இது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் முழுமையான இரட்சிப்பின் கிரியையாகும். மனிதன் ஜெயங்கொள்ளப்படுவதன் உள்ளார்ந்த அர்த்தம், அவன் ஜெயங்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சாத்தானின் பண்புருவத்தை—சாத்தானால் சீர்கெட்ட மனிதனை—சிருஷ்டிகரிடம் திருப்பித் தருவதேயாகும், இதன் மூலம் அவன் சாத்தானைக் கைவிட்டு முழுமையாக தேவனிடம் திரும்புவான். இந்த வழியில், மனிதன் முழுமையாக இரட்சிக்கப்பட்டிருப்பான். எனவே, ஜெயங்கொள்ளும் கிரியை என்பது சாத்தானுக்கு எதிரான யுத்தத்தின் கடைசிக் கிரியை மற்றும் சாத்தானின் தோல்வியின் பொருட்டு தேவனின் நிர்வாகத்தின் இறுதிக் கட்டமாகும். இந்தக் கிரியை இல்லாமல், மனிதனின் முழு இரட்சிப்பும் இறுதியில் சாத்தியமற்றதாகும், சாத்தானின் முழுதளவான தோல்வியும்கூட சாத்தியமற்றதாகும், மனுக்குலம் ஒருபோதும் அற்புதமான சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிக்க முடியாது, அல்லது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாது. இதன் விளைவாக, சாத்தானுடனான யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் மனிதனின் இரட்சிப்பின் கிரியையை முடிக்க முடியாது, ஏனென்றால் தேவனின் நிர்வாகக் கிரியையின் உட்கருத்து மனுக்குலத்தின் இரட்சிப்புக்கானதாகும். ஆரம்பக்கால மனுக்குலம் தேவனின் கைகளில் இருந்தது, ஆனால் சாத்தானின் சோதனை மற்றும் சீர்கேட்டின் காரணமாக, மனிதன் சாத்தானால் கட்டப்பட்டு தீயவனின் கைகளில் விழுந்தான். இவ்வாறு, சாத்தான், தேவனின் நிர்வாகக் கிரியையில் தோற்கடிக்கப்பட வேண்டிய பொருளாக ஆனான். ஏனென்றால், சாத்தான் மனிதனைத் தன்னிடம் எடுத்துக்கொண்டான், மனிதன் எல்லா நிர்வாகத்தையும் நிறைவேற்ற தேவன் பயன்படுத்தும் மூலதனம் என்பதால், மனிதன் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால், அவன் சாத்தானின் கைகளிலிருந்து பறிக்கப்பட வேண்டும், அதாவது சாத்தானால் சிறைபிடித்து வைக்கப்பட்ட பின்னர் மனிதன் மீட்டெடுக்கப்பட வேண்டும். ஆகவே, மனிதனின் பழைய மனநிலையின் மாற்றங்கள், மனிதனின் அசலான ஆராயும் உணர்வை மீட்டெடுக்கும் மாற்றங்கள் மூலம் சாத்தானைத் தோற்கடிக்க வேண்டும். இந்த வழியில், சிறைபிடிக்கப்பட்ட மனிதனைச் சாத்தானின் கைகளிலிருந்து மீண்டும் பறிக்க முடியும். மனிதன் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டால், சாத்தான் வெட்கப்படுவான், மனிதன் இறுதியில் திரும்பப் பெறப்படுவான், சாத்தான் தோற்கடிக்கப்படுவான். மனிதன் சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதால், மனிதன் இந்த முழு யுத்தத்திலும் கொள்ளைப் பொருளாக மாறுவான், யுத்தம் முடிந்தவுடன் தண்டிக்கப்பட வேண்டிய பொருளாகச் சாத்தான் மாறுவான், அதன் பிறகு மனிதகுலத்தின் இரட்சிப்பின் முழுக்கிரியையும் முடிந்துவிடும்.

சிருஷ்டிக்கப்பட்டவர்களுக்கு தேவன் எந்தத் தீங்கும் செய்ய மாட்டார்; அவர் சாத்தானைத் தோற்கடிக்க மட்டுமே விரும்புகிறார். அவருடைய எல்லா கிரியைகளும்—அது சிட்சையாக இருந்தாலும், நியாயத்தீர்ப்பாக இருந்தாலும்—அது சாத்தானை நோக்கியது; அது மனிதகுலத்தின் இரட்சிப்பின் பொருட்டு மேற்கொள்ளப்படுகிறது, அது சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆனது, அது ஒரு குறிக்கோளைக் கொண்டுள்ளது: சாத்தானுக்கு எதிராக இறுதிவரை யுத்தம் செய்வது! சாத்தானை வென்றெடுக்கும் வரை தேவன் ஒருபோதும் ஓய மாட்டார்! அவர் சாத்தானைத் தோற்கடித்தவுடன் மட்டுமே ஓய்வார். ஏனென்றால், தேவன் செய்த எல்லாக் கிரியைகளும் சாத்தானை நோக்கியவையாகும், மேலும் சாத்தானால் சீர்கெட்டவர்கள் அனைவரும் சாத்தானின் ஆதிக்கத்தில் இருப்பதாலும், அனைவரும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்வதாலும், சாத்தானுக்கு எதிராகப் போராடாமல், அவனுடன் முறித்துக் கொள்ளாமல், சாத்தான் இந்த மக்கள் மீது உள்ள அவனது பிடியைத் தளர்த்த மாட்டான், மேலும் அவர்களை ஆதாயப்படுத்த முடியாது. அவர்களை ஆதாயப்படுத்தாவிட்டால், சாத்தான் தோற்கடிக்கப்படவில்லை, அவன் முறியடிக்கப்படவில்லை என்பதை அது நிரூபிக்கும். எனவே, தேவனின் 6,000 ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தில், முதல் கட்டத்தில் அவர் நியாயப்பிரமாணத்தின் கிரியையைச் செய்தார், இரண்டாவது கட்டத்தில் அவர் கிருபையின் காலக் கிரியையைச் செய்தார், அதாவது சிலுவையில் அறையப்படும் கிரியை மற்றும் மூன்றாம் கட்டத்தில் மனிதகுலத்தை ஜெயங்கொள்ளும் கிரியையை அவர் செய்கிறார். இந்தக் கிரியைகள் அனைத்தும் சாத்தான் மனிதகுலத்தை எந்த அளவுக்கு சீர்கேடாக்கியிருக்கிறானோ அந்த அளவுக்கு அவனை நோக்கியிருக்கும், இது எல்லாமே சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே, மற்றும் ஒவ்வொரு கட்டமும் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆனதாகும். தேவனுடைய 6,000 ஆண்டுகால நிர்வாகக் கிரியையின் சாராம்சமானது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்துக்கு எதிரான யுத்தமாகும், மனிதகுலத்தை நிர்வகிக்கும் கிரியையும் சாத்தானைத் தோற்கடிக்கும் கிரியையாகும், அது சாத்தானுடன் யுத்தம் செய்யும் கிரியை. தேவன் 6,000 ஆண்டுகளாக யுத்தம் செய்தார், இப்படியாக இறுதியில் மனிதனை புதிய உலகத்திற்குக் கொண்டு வர அவர் 6,000 ஆண்டுகளாகக் கிரியை செய்துள்ளார். சாத்தான் தோற்கடிக்கப்படும்போது, மனிதன் முற்றிலும் விடுவிக்கப்படுவான். இது இன்று தேவனின் கிரியையின் வழிகாட்டுதல் அல்லவா? துல்லியமாக இதுதான் இன்றைய கிரியையின் வழிகாட்டுதலாகும்: மனிதனின் முழுமையான விடுதலை மேலும் மனிதனை விடுவிப்பது, இதனால் அவன் எந்த விதிகளுக்கும் உட்படாமல் இருக்க அல்லது எந்த கட்டுகளாலும் அல்லது கட்டுப்பாடுகளாலும் மட்டுப்படுத்தப்படாமல் இருக்க முடியும். இந்தக் கிரியைகள் அனைத்தும் உங்கள் வளர்ச்சிக்கு ஏற்பவும், உங்கள் தேவைகளுக்கு ஏற்பவும் செய்யப்படுகின்றன, அதாவது நீங்கள் நிறைவேற்றக் கூடியது எதுவோ அது உங்களுக்கு வழங்கப்படுகிறது. உங்கள் மீது எதையும் திணிப்பதற்கான “வாத்தைக் கூண்டுக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளுவது” அல்ல; மாறாக, இந்தக் கிரியைகள் அனைத்தும் உங்கள் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு கட்ட கிரியையும் மனிதனின் உண்மையான தேவைகளுக்கும் வேண்டப்படுவனவற்றுக்கும் ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது; ஒவ்வொரு கட்ட கிரியையும் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆனது. உண்மையில், ஆரம்பத்தில் சிருஷ்டிகருக்கும் அவருடைய சிருஷ்டிப்புகளுக்கும் இடையில் எந்தத் தடைகளும் இல்லை. இந்தத் தடைகள் அனைத்தும் சாத்தானால் ஏற்பட்டவை. மனிதனைச் சாத்தான் எவ்வாறு தொந்தரவு செய்தான், சீர்கேடாக்கினான் என்பதன் காரணமாக அவனால் எதையும் பார்க்கவோ தொடவோ முடியவில்லை. மனிதன் பாதிக்கப்பட்டவன், அவன் ஏமாற்றப்பட்ட ஒருவன். சாத்தான் தோற்கடிக்கப்பட்டவுடன், சிருஷ்டிக்கப்பட்டவர்கள் சிருஷ்டிகரைப் பார்ப்பார்கள், சிருஷ்டிகர் சிருஷ்டித்தவர்களைப் பார்க்கவும் தனிப்பட்ட முறையில் அவர்களை வழிநடத்தவும் முடியும். பூமியில் மனிதன் கொள்ள வேண்டிய ஜீவிதம் இது மட்டுமேயாகும். எனவே, தேவனின் கிரியை முதன்மையாகச் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆனது, சாத்தான் தோற்கடிக்கப்பட்டவுடன், அனைத்தும் தீர்க்கப்பட்டுவிடும். இன்று, தேவன் மனிதர்கள் மத்தியில் வருவது எளிதான விஷயமல்ல என்பதை நீ பார்த்திருக்கிறாய். ஒவ்வொரு நாளும் உங்களிடம் தவறு கண்டுபிடிப்பதற்கும், இது, அது என்று சொல்வதற்கும், அல்லது அவர் எப்படி இருக்கிறார் என்பதையும், அவர் எப்படிப் பேசுகிறார், வாழ்கிறார் என்பதையும் பார்ப்பதற்கு உங்களை அனுமதிக்க அவர் வரவில்லை. அவரை நீங்கள் பார்க்க அனுமதிக்கவோ அல்லது உங்கள் கண்களைத் திறக்கவோ, அல்லது அவர் பேசிய புரியாத மறைபொருட்களை கேட்பதற்கும், அவர் திறந்த ஏழு முத்திரைகளுக்காகவும் தேவன் மாம்சமாக மாறவில்லை. மாறாக, சாத்தானைத் தோற்கடிக்க அவர் மாம்சமாக மாறினார். மனிதனை இரட்சிப்பதற்கும் சாத்தானுடன் யுத்தம் செய்வதற்கும் அவர் மாம்சமாக மனிதர்களிடையே தனிப்பட்ட முறையில் வந்துள்ளார்; இதுதான் அவரது மனித உருவெடுத்ததன் முக்கியத்துவம். சாத்தானைத் தோற்கடிப்பதற்காக அல்ல என்றால், அவர் தனிப்பட்ட முறையில் இந்தக் கிரியையைச் செய்ய மாட்டார். மனிதர்களிடையே தம்முடைய கிரியையைச் செய்வதற்கும், மனிதனுக்குத் தனிப்பட்ட முறையில் தன்னை வெளிப்படுத்துவதற்கும், மனிதன் தன்னைப் பார்ப்பதற்கு அனுமதிப்பதற்கும் தேவன் பூமிக்கு வந்துள்ளார்; இது ஒரு சிறிய விஷயமா? இது உண்மையில் அவ்வளவு எளிதல்ல! இது மனிதன் கற்பனை செய்வது போல அல்ல: தேவன் வந்துவிட்டார், அதனால் மனிதன் அவரைப் பார்க்கலாம், இதனால் தேவன் இருப்பது உண்மை, அது தெளிவற்ற அல்லது வெற்றுத்தனமான விஷயம் அல்ல என்பதையும், தேவன் உயர்ந்தவர், ஆனாலும் தாழ்மையுள்ளவர் என்பதையும் மனிதன் புரிந்துகொள்ள முடியும். அது அவ்வளவு எளிதாக இருக்க முடியுமா? இது துல்லியமாக, சாத்தான் மனிதனின் மாம்சத்தை சீர்கேடு அடையச் செய்ததால், மற்றும் மனிதனை தேவன் இரட்சிக்க விரும்புவதால், சாத்தானுடன் யுத்தம் செய்வதற்கும் மனிதனைத் தனிப்பட்ட முறையில் மேய்ப்பதற்கும் தேவன் மாம்ச உருவத்தைப் பெறவேண்டும் என்பதாகும். இது மட்டுமே அவருடைய கிரியைக்கு நன்மை பயக்கும். தேவனின் இரண்டு மனித உருவம் எடுத்த மாம்சங்கள் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவும், மனிதனைச் சிறப்பாக இரட்சிப்பதற்காகவும் இருந்தன. இது ஏனென்றால், தேவனின் ஆவியானவராக இருந்தாலும் சரி, தேவனின் மனித உருவ மாம்சமாக இருந்தாலும் சரி, சாத்தானுடன் யுத்தம் செய்யும் ஒருவர் தேவனாக மட்டுமே இருக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், சாத்தானுடன் யுத்தம் செய்கிறவர்கள் தேவதூதர்களாக இருக்க முடியாது, அப்படி இருக்கும்போது, அதனைக் காட்டிலும் குறைவாக, அது சாத்தானால் சீர்கேடடைந்த மனிதனாக இருக்க முடியாது. இந்த யுத்தத்தில் சண்டையிட தேவதூதர்கள் சக்தியற்றவர்கள், மனிதன் அதைக்காட்டிலும் பலமற்றவன். எனவே, மனிதனின் ஜீவித காலத்துக்கான கிரியையைச் செய்யத் தேவன் விரும்பினால், மனிதனை இரட்சிக்க அவர் தனிப்பட்ட முறையில் பூமிக்கு வர விரும்பினால், அவர் தனிப்பட்ட முறையில் மாம்சமாக மாற வேண்டும்—அதாவது, அவர் தனிப்பட்ட முறையில் மாம்ச உருவத்தைப் பெறவேண்டும், மேலும் அவரது உள்ளார்ந்த அடையாளம் மற்றும் அவர் செய்ய வேண்டிய கிரியையுடன் அவர் தனிப்பட்ட முறையில் மனிதனை இரட்சிக்க மனிதர் மத்தியில் வருகிறார். இல்லையென்றால், இந்தக் கிரியையைச் செய்தது தேவனுடைய ஆவியானவர் அல்லது மனிதன் என்றால், இந்த யுத்தத்தில் எதுவும் முடிவுக்கு வரப்போவதில்லை, மேலும் அது ஒருபோதும் முடிவடையாது. மனிதர்களிடையே உள்ள சாத்தானுக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் யுத்தத்துக்குச் செல்ல தேவன் மாம்சமாக மாறும்போதுதான் மனிதனுக்கு இரட்சிப்பின் வாய்ப்பு கிடைக்கும். மேலும், அப்போதுதான் சாத்தானை வெட்கமடையச் செய்து, அபகரிப்பதற்கான வாய்ப்புகள் அல்லது செயல்படுத்த எந்தத் திட்டமும் இல்லாமல் போகுமாறு செய்ய முடியும். மனுவுருவான தேவனால் செய்யப்படும் கிரியை தேவனுடைய ஆவியானவரால் செய்ய முடியாதது, மேலும் எந்த மாம்ச மனிதனும் தேவனின் சார்பாக அதைச் செய்வது இன்னும் சாத்தியமற்றது, ஏனென்றால் அவர் செய்யும் கிரியை மனிதனின் ஜீவிதம் நிமித்தமானது, மற்றும் மனிதனின் சீர்கெட்ட மனநிலையை மாற்றுவதற்கானது. இந்த யுத்தத்தில் மனிதன் பங்கேற்க வேண்டுமென்றால், அவன் மோசமாகக் குழப்பமடைந்து தப்பி ஓடுவான், மேலும் அவனது சீர்கெட்ட மனநிலையை வெறுமனே அவனால் மாற்ற இயலாது. மனிதனைச் சிலுவையிலிருந்து காப்பாற்றவோ, அல்லது கலகக்கார மனுக்குலம் அனைத்தையும் ஜெயங்கொள்ளவோ அவனால் இயலாது, ஆனால் கொள்கைகளுக்கு அப்பால் செல்ல இயலாத ஒரு சிறிய பழைய காரியத்தை, இல்லையெனில் சாத்தானின் தோல்விக்கு தொடர்பில்லாத காரியத்தை மட்டுமே செய்ய முடியும். அதனால் ஏன் கவலைப்படவேண்டும்? சாத்தானைத் தோற்கடிக்க முடியாதது, அதைக்காட்டிலும் குறைவாக, மனிதகுலத்தைக்கூட ஆதாயப்படுத்த முடியாத இந்தக் காரியத்தில் என்ன முக்கியத்துவம் இருக்கும்? எனவே, சாத்தானுடனான யுத்தத்தை தேவனால் தாமே மேற்கொள்ள முடியும், மனிதன் அதைச் செய்வது என்பது கொஞ்சமும் சாத்தியமில்லாதது. மனிதனின் கடமை கீழ்ப்படிதல் மற்றும் பின்பற்றுவதுதான், ஏனென்றால் வானத்தையும் பூமியையும் உருவாக்குவதற்கு ஒத்த கிரியையை மனிதனால் செய்ய முடியாது, மேலும், சாத்தானுடன் போரிடும் கிரியையையும் அவனால் செய்ய முடியாது. தேவன் தாமே அவரது தலைமையின் கீழ் மனிதன் சிருஷ்டிகரை திருப்திப்படுத்த மட்டுமே முடியும், இதன் மூலம் மட்டுமே சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான்; மனிதனால் செய்யக்கூடிய ஒரே விஷயம் இதுதான். எனவே, ஒரு புதிய யுத்தம் தொடங்கும் ஒவ்வொரு முறையும், அதாவது, புதிய காலத்தின் கிரியை தொடங்கும் ஒவ்வொரு முறையும், இந்தக் கிரியை தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்படுகிறது, இதன் மூலம் அவர் அனைத்து யுகங்களையும் வழிநடத்தி, மனுக்குலம் முழுமைக்கும் புதிய பாதையைத் திறக்கிறார். ஒவ்வொரு புதிய காலத்தின் விடியலும் சாத்தானுடனான யுத்தத்தில் ஒரு புதிய தொடக்கமாகும், இதன் மூலம் மனிதன் ஒரு புதிய, அழகான உலகிற்குள், மற்றும் தேவனால் தாமே தனிப்பட்ட முறையில் வழிநடத்தப்படும் ஒரு புதிய காலத்திற்குள் பிரவேசிக்கிறான். எல்லாவற்றிற்கும் மனிதன் எஜமானன், ஆனால் ஆதாயமாக்கப்பட்டவர்கள் சாத்தானுடனான எல்லா யுத்தங்களிலும் விளை பலன்களாக மாறுவார்கள். சாத்தான் எல்லாவற்றையும் சீர்கேடு ஆக்குபவன், அவன் எல்லா யுத்தங்களின் முடிவிலும் தோற்கடிக்கப்படுபவன், மேலும் இந்த யுத்தங்களைத் தொடர்ந்து தண்டிக்கப்படும் ஒருவன். தேவன், மனிதன் மற்றும் சாத்தான் இவர்களில், சாத்தான் மட்டுமே வெறுக்கப்படுவான் மேலும் நிராகரிக்கப்படுவான். சாத்தானால் ஆதாயப்படுத்தப்பட்டவர்கள், ஆனால் தேவனால் திரும்ப மீட்கப்படாதவர்கள், இதற்கிடையில், சாத்தானின் சார்பாகத் தண்டனையைப் பெறுவார்கள். இந்த மூவரில், தேவனை மட்டுமே எல்லோரும் தொழுது கொள்ள வேண்டும். சாத்தானால் சீர்கேடு ஆக்கப்பட்டவர்கள், ஆனால் தேவனால் மீட்கப்பட்டவர்கள் மற்றும் தேவனின் வழியைப் பின்பற்றுபவர்கள், இதற்கிடையில், தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பெற்றவர்களாகவும் தேவனுக்காகத் தீயவனை நியாயந்தீர்ப்பவர்களாகவும் மாறுகிறார்கள். தேவன் நிச்சயமாக ஜெயங்கொள்ளுவார், சாத்தான் நிச்சயமாகத் தோற்கடிக்கப்படுவான், ஆனால் மனிதர்களிடையே ஜெயம் பெறுபவர்களும் தோற்பவர்களும் இருக்கிறார்கள். ஜெயித்தவர்கள் ஜெயங்கொண்டவர்களுடன் ஒன்றிணைவார்கள், தோற்றவர்கள் தோல்வியுற்றவர்களுடன் சேர்வார்கள்; இதுதான் ஒவ்வொன்றின் தன்மைக்கேற்ப உள்ள வகைப்பாடு, இதுதான் தேவனின் எல்லாக் கிரியைகளின் இறுதி முடிவாகும். மேலும் தேவனின் எல்லா கிரியைகளின் நோக்கமும் இதுவேயாகும், மற்றும் இது ஒருபோதும் மாறாது. தேவனின் நிர்வாகத் திட்டத்தின் முக்கிய கிரியையின் உட்பொருள் மனிதனின் இரட்சிப்பின்மீது கவனம் செலுத்துகிறது, மேலும் தேவன் முதன்மையாக இந்த உட்பொருளின் பொருட்டு, இந்தக் கிரியையின் பொருட்டு மேலும் சாத்தானைத் தோற்கடிப்பதற்காக மாம்சமாக மாறுகிறார். தேவன் முதன்முதலில் மாம்சமாக மாறியதும்கூட சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவேயாகும்: அவர் தனிப்பட்ட முறையில் மாம்சமாக ஆனார், மனிதகுலத்தின் மீட்புக்கான கிரியையான முதல் யுத்தத்தின் கிரியையை முடிக்க, தனிப்பட்ட முறையில் சிலுவையில் அறையப்பட்டார். அதேபோல், இந்தக் கட்டத்தின் கிரியையும் தனிப்பட்ட முறையில் தேவனால் செய்யப்படுகிறது, அவர் மனிதர்களிடையே தனது கிரியையைச் செய்வதற்கும் அவருடைய வார்த்தையைத் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கும் மனிதர்கள் அவரைப் பார்க்க அனுமதிப்பதற்கும் மாம்சமாக மாறினார். நிச்சயமாக, அவர் அந்த வழியில் வேறு சில கிரியைகளையும் செய்வது தவிர்க்க முடியாதது, ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் தனது கிரியையைச் செய்வதற்கு முக்கிய காரணம் சாத்தானைத் தோற்கடிப்பது, மனுக்குலம் முழுவதையும் ஜெயங்கொள்வது, மேலும் இந்த மக்களை ஆதாயப்படுத்துவது ஆகியவையாகும். எனவே, தேவன் மனித உருவம் எடுத்த கிரியை உண்மையில் அவ்வளவு எளிதானது அல்ல. தேவன் தாழ்மையானவர், மறைபொருளாக உள்ளவர், தேவன் நிஜமானவர் என்பதை மனிதருக்குக் காண்பிப்பதே அவருடைய நோக்கம் என்றால், அவை இந்த கிரியையைச் செய்வதற்காக மட்டுமே என்றால், அவர் மாம்சமாக மாற வேண்டிய அவசியமில்லை. தேவன் மாம்சமாக மாறாவிட்டாலும், அவருடைய தாழ்மையையும் மறைபொருளாக இருப்பதையும், அவருடைய மகத்துவத்தையும் பரிசுத்தத்தையும் மனிதனுக்கு நேரடியாக வெளிப்படுத்த முடியும், ஆனால் இதுபோன்ற விஷயங்களுக்கும் மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவற்றால் மனிதனை இரட்சிக்கவோ அல்லது அவனை முழுமையாக்கவோ இயலாது, அப்படி இருக்கும்போது அவற்றால் சாத்தானைத் தோற்கடிக்க முடியாது என்பதைச் சொல்லத் தேவையில்லை. சாத்தானின் தோல்வியானது ஆவியானவர் ஒரு ஆவிக்கு எதிராக யுத்தம் செய்வதை மட்டுமே கொண்டிருக்குமானால், அத்தகைய கிரியை இன்னும் குறைவான நடைமுறை மதிப்பைக் கொண்டிருக்கும்; அதனால் மனிதனை ஆதாயப்படுத்த இயலாது மற்றும் அது மனிதனின் தலைவிதியையும் செல்லும் திசைகளையும் அழித்துவிடும். எனவே, இன்று தேவனின் கிரியை மிகவும் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதன் அவரைக் காணவேண்டும் என்பது மட்டுமல்ல, அல்லது மனிதனின் கண்கள் திறக்கப்படவேண்டும் என்பது மட்டுமல்ல, அல்லது செயல்படவும் ஊக்குவிப்பதற்கும் அவனுக்கு ஒரு சிறிய உணர்வை வழங்குவது மட்டுமல்ல; இத்தகைய கிரியைக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை. நீ இத்தகைய அறிவை பற்றி மட்டுமே பேச முடியும் என்றால், தேவன் மனித உருவம் எடுத்ததன் உண்மையான முக்கியத்துவத்தை நீ அறியவில்லை என்பதை இது நிரூபிக்கிறது.

தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் கிரியை முழுவதும் தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்படுகிறது. முதல் கட்டம்—உலகத்தைச் சிருஷ்டித்தல்—இது தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்பட்டது, அது அவ்வாறு இல்லாதிருந்தால், மனிதகுலத்தைச் சிருஷ்டிக்கும் வல்லமை வேறு யாருக்கும் இருந்திருக்காது; இரண்டாவது கட்டம் அனைத்து மனிதகுலத்தையும் மீட்பது ஆகும், இதுவும்கூட தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்பட்டது; மூன்றாவது கட்டம் பற்றிச் சொல்லாமலே அது விளங்கும்: அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரும் தேவனின் கிரியைகள் எல்லாமும் தேவனால் தாமே செய்யப்பட வேண்டும் என்பதற்கு இன்னும் பெரிய தேவை உள்ளது. ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் மீட்பது, ஜெயங்கொள்வது, ஆதாயப்படுத்துவது, மனித குலம் முழுவதையும் பரிபூரணப்படுத்துவது ஆகிய அனைத்தும் தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்படுகின்றன. அவர் தனிப்பட்ட முறையில் இந்தக் கிரியையைச் செய்யவில்லை என்றால், அவருடைய அடையாளத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவோ அல்லது அவரது கிரியையை அறிந்துகொள்ளவோ மனிதனால் முடியாது. சாத்தானைத் தோற்கடிப்பதற்காக, மனிதகுலத்தை ஆதாயப்படுத்த, மனிதனுக்கு பூமியில் ஓர் இயல்பான ஜீவிதத்தைத் தருவதற்காக, அவருடைய முழு நிர்வாகத் திட்டத்துக்காகவும், அவருடைய எல்லா கிரியைகளுக்காகவும், அவர் தனிப்பட்ட முறையில் மனிதனை வழிநடத்துகிறார், தனிப்பட்ட முறையில் மனிதர்களிடையே கிரியை செய்கிறார், அவர் தனிப்பட்ட முறையில் இந்தக் கிரியையை அவசியம் செய்ய வேண்டும். மனிதன் அவரைக் காணும் படிக்கு, மனிதன் சந்தோஷப்படுவதற்காக தேவன் வந்தார் என்று மட்டுமே மனிதன் நம்பினால், அத்தகைய நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை, முக்கியத்துவமும் இல்லை. மனிதன் விளங்கிக் கொள்வது மிகவும் மேலோட்டமானது! இந்தக் கிரியையைத் தானே நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே தேவன் இந்தக் கிரியையைப் பரிபூரணமாகவும் முழுமையாகவும் செய்ய முடியும். தேவன் சார்பாக மனிதனால் அதைச் செய்ய இயலாது. தேவனின் அடையாளமோ அல்லது அவருடைய சாராம்சமோ அவனுக்கு இல்லாததால், அவனால் தேவனின் கிரியையைச் செய்ய இயலாது, மனிதன் இந்தக் கிரியையைச் செய்தாலும், அதற்கு எந்த விளைவும் இருக்காது. மீட்புக்காகவும், எல்லா மனிதர்களையும் பாவத்திலிருந்து மீட்பதற்கும், மனிதன் தூய்மைப்படுத்தப்படுவதற்கு ஏற்றவன் ஆவதற்கும், அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்படுவதற்கும் தேவன் முதன்முதலில் மாம்சமாக ஆனார். மேலும் மனிதர்களிடையே ஜெயங்கொள்ளும் கிரியையும் தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்படுகிறது. இந்தக் கட்டத்தில், தேவன் தீர்க்கதரிசனத்தை மட்டுமே பேசினால், ஒரு தீர்க்கதரிசி அல்லது அத்தகைய திறமை பெற்ற ஒருவர் அவருடைய இடத்தைப் பிடிக்க முடியும்; தீர்க்கதரிசனம் பற்றி மட்டுமே பேசப்பட்டால், மனிதன் தேவனுக்குப் பதிலீடாக இருக்க முடியும். மனிதன் தனிப்பட்ட முறையில் தேவன் தாமே செய்யும் கிரியையைச் செய்ய முயன்றால், மேலும் மனிதனின் ஜீவித காரியத்தைச் செய்ய முயன்றால், அவனால் அந்தக் கிரியையைச் செய்ய இயலாது. இது தேவனால் தாமே தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும்: இந்தக் கிரியையைச் செய்யத் தேவன் தனிப்பட்ட முறையில் மாம்சமாக மாற வேண்டும். வார்த்தையின் காலத்தில், தீர்க்கதரிசனம் மட்டுமே பேசப்பட்டால், ஏசாயா அல்லது எலியா தீர்க்கதரிசி இந்தக் கிரியையைச் செய்ய முடியும், மேலும் அதைத் தனிப்பட்ட முறையில் தேவன் தாமே செய்ய வேண்டியதில்லை. இந்தக் கட்டத்தில் செய்யப்படும் கிரியைகள் வெறுமனே தீர்க்கதரிசனத்தைப் பேசுவதல்ல, மேலும் மனிதனை ஜெயங்கொள்ளவும் சாத்தானைத் தோற்கடிக்கவும் வார்த்தைகளின் கிரியை பயன்படுத்தப்படுவது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், இந்தக் கிரியையை மனிதனால் செய்ய முடியாது, தனிப்பட்ட முறையில் தேவன் தாமே செய்ய வேண்டும். நியாயப்பிரமாணத்தின் காலத்தில் யேகோவா தம்முடைய கிரியையின் ஒரு பகுதியைச் செய்தார், அதன் பிறகு அவர் சில வார்த்தைகளைப் பேசினார், தீர்க்கதரிசிகள் மூலம் சில கிரியைகளைச் செய்தார். இது ஏனென்றால், மனிதன் யேகோவாவை அவரது கிரியையில் பதிலீடு செய்ய முடியும், மேலும் தீர்க்கதரிசிகள் விஷயங்களை முன்னறிவிக்கவும், அவர் சார்பாகச் சில கனவுகளை விளக்கவும் முடியும். ஆரம்பத்தில் செய்யப்பட்ட கிரியை மனிதனின் மனநிலையை நேரடியாக மாற்றும் கிரியை அல்ல, அது மனிதனின் பாவத்துடன் தொடர்பில்லாதது, மேலும் மனிதன் நியாயப்பிரமாணத்திற்குக் கட்டுப்பட வேண்டிய தேவை இருந்தது. ஆகவே, யேகோவா மாம்சமாகி, தன்னை மனிதனுக்கு வெளிப்படுத்தவில்லை; அதற்குப் பதிலாக அவர் மோசேயுடனும் மற்றவர்களுடனும் நேரடியாகப் பேசினார், அவர்களை அவர் சார்பாகப் பேசவும் கிரியை செய்யவும் அனுமதித்தார், மேலும் அவர்கள் நேரடியாக மனிதர்களிடையே கிரியை செய்யும்படி செய்தார். தேவனுடைய முதல் கட்டக் கிரியை மனிதனின் தலைமையாக இருந்தது. இது சாத்தானுக்கு எதிரான யுத்தத்தின் தொடக்கமாக இருந்தது, ஆனால் இந்த யுத்தம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவில்லை. சாத்தானுக்கு எதிரான அதிகாரப்பூர்வ யுத்தம் தேவன் முதலில் மாம்ச உருவம் எடுத்தபோது தொடங்கியது, அது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேவன் மாம்ச உருவம் எடுத்துச் சிலுவையில் அறையப்பட்டதுதான் இந்த யுத்தத்தின் முதல் சண்டை. மனித உருவம் எடுத்த தேவன் சிலுவையில் அறையப்பட்டது சாத்தானைத் தோற்கடித்தது, அதுதான் யுத்தத்தின் முதல் வெற்றிகரமான கட்டமாகும். மனித உருவம் எடுத்த தேவன் மனிதனின் ஜீவிதத்தில் நேரடியாகக் கிரியை செய்யத் தொடங்கியபோது, அதுதான் மனிதனை மீட்டெடுக்கும் கிரியையின் அதிகாரப்பூர்வத் தொடக்கமாகும், மேலும் இது மனிதனின் பழைய மனநிலையை மாற்றும் கிரியை என்பதால், இது சாத்தானுடன் போரிடுவதற்கான கிரியை ஆகும். ஆரம்பத்தில் யேகோவா செய்த கிரியையின் கட்டமானது பூமியில் மனிதனின் ஜீவிதத்தின் தலைமைத்துவம் மட்டுமேயாகும். இது தேவனின் கிரியையின் தொடக்கமாக இருந்தது, அது இன்னும் எந்தவொரு யுத்தத்திலும் அல்லது எந்தவொரு பெரிய கிரியையிலும் ஈடுபடவில்லை என்றாலும், அது வரவிருக்கும் யுத்தத்தின் கிரியைக்கு அடித்தளத்தை அமைத்தது. பின்னர், கிருபையின் காலத்தின் இரண்டாம் கட்டக் கிரியை மனிதனின் பழைய மனநிலையை மாற்றுவதை உள்ளடக்கியது, அதாவது மனிதனின் ஜீவிதத்தை தேவன் தாமே வார்த்தெடுத்தார். இதனை தேவன் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டியிருந்தது: இதற்கு தேவன் தனிப்பட்ட முறையில் மாம்சமாக மாற வேண்டியிருந்தது. அவர் மாம்சமாக மாறாமல் இருந்திருந்தால், இந்தக் கிரியையின் கட்டத்தில் வேறு யாரும் அவருக்குப் பதிலீடு செய்திருக்க முடியாது, ஏனென்றால் அது சாத்தானுக்கு எதிராக நேரடியாகப் போரிடும் கிரியையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. மனிதன் இந்த வேலையை தேவனின் சார்பாக செய்திருந்தால், மனிதன் சாத்தானுக்கு முன் நின்றபோது, சாத்தான் கீழ்ப்படிந்திருக்க மாட்டான், அவனைத் தோற்கடிப்பது சாத்தியம் இல்லாது போகும். அதைத் தோற்கடிக்க வந்தது மனித உருவம் எடுத்த தேவனாகத்தான் இருக்க வேண்டும், ஏனென்றால் மனித உருவம் எடுத்த தேவன் சாராம்சத்தில் இன்னும் தேவன்தான், அவர் இன்னும் மனிதனின் ஜீவிதம்தான், அவர் இன்னும் சிருஷ்டிகராகவே இருக்கிறார்; என்ன நடந்தாலும், அவருடைய அடையாளமும் சாராம்சமும் மாறாது. எனவே, அவர் மாம்ச உருவத்தை எடுத்துக்கொண்டார் மற்றும் சாத்தானின் பரிபூரணமான கீழ்ப்படிதலை ஏற்படுத்தும் கிரியையைச் செய்தார். கடைசிக் காலத்தின் கிரியையின் போது, மனிதனை இந்தக் கிரியையைச் செய்து, வார்த்தைகளை நேரடியாகப் பேசும்படி செய்திருந்தால், அவனால் அவற்றைப் பேசமுடிந்திருக்காது, தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தால், இந்தத் தீர்க்கதரிசனத்தால் மனிதனை ஜெயங்கொள்ள முடியாமல் இருந்திருக்கும். மாம்ச உருவத்தை எடுத்துக் கொள்வதன் மூலம், தேவன் சாத்தானைத் தோற்கடித்து அதன் முற்றிலுமான அடிபணிதலை ஏற்படுத்தினார். அவர் சாத்தானை முற்றிலுமாகத் தோற்கடித்து, மனிதனைப் பரிபூரணமாக ஜெயங்கொண்டு, மனிதனை முழுவதுமாக ஜெயங்கொள்ளும் போது, இந்தக் கட்டக் கிரியை முடிவடைந்து ஜெயம் கிடைக்கும். தேவனின் நிர்வாகத்தில், மனிதன் தேவனுக்கு மாற்றீடாக இருக்க முடியாது. குறிப்பாக, காலத்தை வழிநடத்துவதற்கு மற்றும் புதிய கிரியையைத் தொடங்குவதற்குத் தேவனால் தாமே தனிப்பட்ட முறையில் கிரியைகள் செய்யப்பட வேண்டிய தேவை அதிகமாக உள்ளது. மனிதனுக்கு வெளிப்பாட்டைக் கொடுப்பதும், தீர்க்கதரிசனத்தை வழங்குவதும் மனிதனால் செய்யப்படலாம், ஆனால் அது தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டிய கிரியை என்றால், அது தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தத்தின் கிரியை என்றால், பின்பு இந்தக் கிரியையை மனிதனால் செய்ய முடியாது. முதல் கட்டக் கிரியையின் போது, சாத்தானுடன் போர் இல்லாதபோது, தீர்க்கதரிசிகள் பேசிய தீர்க்கதரிசனத்தைப் பயன்படுத்தி யேகோவா தனிப்பட்ட முறையில் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார். பின்னர், இரண்டாம் கட்ட கிரியையானது சாத்தானுடனான யுத்தம், மற்றும் தேவன் தாமே தனிப்பட்ட முறையில் மாம்சமாகி, இந்தக் கிரியையைச் செய்ய மாம்சத்திற்குள் வந்தார். சாத்தானுக்கு எதிரான யுத்தத்தில் சம்பந்தப்பட்ட எதுவும் மனித உருவம் எடுத்த தேவனையும் உள்ளடக்கியது, அதாவது இந்த யுத்தத்தை மனிதனால் தொடங்க முடியாது. மனிதன் யுத்தம் செய்தால், அவன் சாத்தானைத் தோற்கடிக்க சக்தியில்லாதவன். அதன் ஆதிக்கத்தின்கீழ் இருக்கும்போது அதை எதிர்த்துப் போராடுவதற்கான வலிமை அவனுக்கு எப்படி இருக்க முடியும்? மனிதன் இவற்றுக்கு இடையில் இருக்கிறான்: நீ சாத்தானை நோக்கிச் சாய்ந்தால், நீ சாத்தானுக்குச் சொந்தம், ஆனால் நீ தேவனைத் திருப்திப்படுத்தினால், நீ தேவனுக்குச் சொந்தமானவன். இந்த யுத்தத்தின் கிரியையில் மனிதன் முயற்சித்து தேவனுக்கு மாற்றீடு ஆகலாமா, அவனால் முடியுமா? அவன் அவ்வாறு செய்திருந்தால், அவன் வெகு காலத்திற்கு முன்பே அழிந்து போயிருக்க மாட்டானா? அவன் நீண்ட காலத்திற்கு முன்பே பாதாள உலகுக்குள் நுழைந்திருப்பான் அல்லவா? ஆகவே, மனிதன் தேவனை அவரது கிரியையில் மாற்றீடு செய்ய முடியாது, அதாவது மனிதனுக்கு தேவனின் சாராம்சம் இல்லை, அதாவது நீ சாத்தானுடன் போரிட்டால் அதை உன்னால் தோற்கடிக்க இயலாது. மனிதனால் சில வேலைகளை மட்டுமே செய்ய முடியும்; அவன் சிலரை ஜெயிக்க முடியும், ஆனால் தேவன் தாமே செய்யும் கிரியையில் அவன் தேவனுக்கு மாற்றீடாக இருக்க முடியாது. மனிதன் எப்படிச் சாத்தானுடன் யுத்தம் செய்ய முடியும்? நீ தொடங்குவதற்கு முன்பே சாத்தான் உன்னைச் சிறைபிடிப்பான். தேவன் தாமே சாத்தானுடன் போரிடுகிறார், இந்த அடிப்படையில் மனிதன் தேவனைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிறான், அதனால் மனிதன் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டு சாத்தானின் கட்டுகளிலிருந்து தப்பிக்க முடியும். மனிதன் தனது சொந்த ஞானத்தினாலும் திறன்களாலும் அடையக்கூடிய விஷயங்கள் மிகவும் குறைவு; அவனால் மனிதர்களை முழுமையாக்குவதற்கும், அவர்களை வழிநடத்துவதற்கும், மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக, சாத்தானைத் தோற்கடிப்பதற்கும் இயலாது. மனிதனின் புத்திசாலித்தனமும் ஞானமும் சாத்தானின் திட்டங்களை முறியடிக்காது, ஆகவே மனிதன் அதை எவ்வாறு எதிர்த்து யுத்தம் செய்ய முடியும்?

பரிபூரணமாக்கப்படுவதற்கு விருப்பமாக உள்ள அனைவருக்கும் பரிபூரணமாக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது, எனவே அனைவரும் இளைப்பாற வேண்டும்: எதிர்காலத்தில் நீங்கள் அனைவரும் சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிப்பீர்கள். ஆனால் நீ பரிபூரணமாக்கப்பட விரும்பவில்லை என்றால், அற்புதமான உலகில் நுழைய விரும்பவில்லை என்றால், அது உனது சொந்தப் பிரச்சினை. பரிபூரணமாக்கப்படுவதற்கு விருப்பமாக இருப்பவர்களும் விசுவாசமுள்ளவர்களும், தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் அனைவரும், மற்றும் தங்கள் செயல்பாட்டை உண்மையாகச் செய்கிறவர்களும்—இவர்கள் அனைவருமே பரிபூரணமாக்கப் படக்கூடியவர்கள். இன்று, விசுவாசமாகத் தங்கள் கடமையைச் செய்யாதவர்கள் அனைவரும், மற்றும் தேவனுக்கு விசுவாசமில்லாதவர்கள் அனைவரும், தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் அனைவரும், குறிப்பாகப் பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் பெற்றவர்கள், ஆனால் அதை நடைமுறைக்குக் கொண்டு வராதவர்கள் அத்தகைய அனைவரும் பரிபூரணமாக்கப்பட முடியாதவர்கள். விசுவாசமுள்ளவர்களாகவும் தேவனுக்கு கீழ்ப்படிபவர்களாகவும் இருக்கத் தயாராக உள்ள அனைவரையும் பரிபூரணமாக்க முடியும், அவர்கள் கொஞ்சம் அறியாதவர்களாக இருந்தாலும்; இதனைப் பின்பற்றத் தயாராக உள்ள அனைவரையும் பரிபூரணமாக்க முடியும். இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. இந்தத் திசையில் நீ தொடரத் தயாராக இருக்கும் வரை, நீ பரிபூரணமாக்கப்படமுடியும். உங்களில் யாரையும் கைவிடவோ அல்லது புறம்பாக்கவோ நான் விரும்பவில்லை, ஆனால் மனிதன் நல்லவிதமாகச் செய்ய முயற்சிக்கவில்லை என்றால், பின்னர் உன்னை நீயே அழித்துக் கொள்கிறாய்; உன்னை புறம்பாக்குவது நானல்ல, நீயே உன்னை அவ்வாறு செய்கிறாய். உனக்கு நீ நல்லவிதமாகச் செய்ய முயற்சிக்கவில்லை என்றால்—நீ சோம்பேறியாக இருந்தால், அல்லது உனது கடமையைச் செய்யாவிட்டால், அல்லது விசுவாசமாக இல்லாவிட்டால், அல்லது நீ சத்தியத்தைக் கடைப்பிடிக்காவிட்டால், நீ எப்போதும் நீ விரும்பியபடி செய்வதானால், நீ பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், உன் சொந்தப் புகழுக்காகவும், செல்வத்துக்காகவும் போராடுகிறவன் என்றால், மற்றும் எதிர் பாலினத்தவர்களிடம் நடந்துகொள்ளும் முறையில் நீ நேர்மையற்றவனாக இருந்தால், நீ உனது சொந்தப் பாவங்களின் சுமையைச் சுமப்பாய்; நீ யாருடைய பரிதாபத்திற்கும் தகுதியுள்ளவன் அல்ல. நீங்கள் அனைவரும் பரிபூரணமாக்கப்பட வேண்டும் என்பதும், குறைந்தபட்சம் ஜெயங்கொள்ளப்பட வேண்டும் என்பதும் எனது நோக்கம், இதனால் இந்தக் கட்டக் கிரியை வெற்றிகரமாக முடிக்கப்படலாம். ஒவ்வொரு மனிதனும் பரிபூரணமாக்கப்பட வேண்டும், இறுதியில் அவரால் ஆதாயப்படுத்தப்பட வேண்டும், அவரால் பரிபூரணமாகச் சுத்திகரிக்கப்பட வேண்டும், அவருக்குப் பிரியமான மக்களாக மாற வேண்டும் என்பதே தேவனின் விருப்பம். நான் உங்களுக்குச் சொல்வது பின்தங்கியதா அல்லது மோசமான திறமை வாய்ந்ததா என்பதெல்லாம் முக்கியமல்ல—இது எல்லாம் உண்மை. இதை நான் சொல்வதென்பது, நான் உங்களைக் கைவிட உத்தேசிக்கிறேன், நான் உங்களிடத்தில் நம்பிக்கையை இழந்துவிட்டேன், அதைக்காட்டிலும் உங்களை இரட்சிக்க நான் விரும்பவில்லை என்பதையெல்லாம் நிரூபிக்கவில்லை. இன்று நான் உங்கள் இரட்சிப்பின் கிரியையைச் செய்ய வந்திருக்கிறேன், அதாவது நான் செய்யும் கிரியை இரட்சிப்பின் கிரியையின் தொடர்ச்சியாகும். ஒவ்வொரு நபருக்கும் பரிபூரணமாக்கப் படுவதற்கு வாய்ப்பு உள்ளது: ஆனால் நீ அதற்குத் தயாராக இருக்க வேண்டும், நீ பின்பற்ற வேண்டும், இறுதியில் நீ இந்த முடிவை அடைய முடியும், உங்களில் ஒருவர் கூடக் கைவிடப்பட மாட்டார்கள். நீ மோசமான திறமை வாய்ந்தவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் மோசமான திறனுக்கேற்ப இருக்கும்; நீ அதிகத் திறன் கொண்டவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் உயர் திறனுக்கேற்ப இருக்கும்; நீ அறியாதவனாகவும், கல்வியறிவற்றவனாகவும் இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் கல்வியறிவின்மைக்கு ஏற்ப இருக்கும்; நீ கல்வியறிவு பெற்றவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் நீ கல்வியறிவு பெற்றவனாக இருப்பதற்கு ஏற்ப இருக்கும்; நீ வயதானவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் வயதுக்கு ஏற்ப இருக்கும்; நீ விருந்தோம்பல் வழங்க வல்லவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் இந்தத் திறனுக்கு ஏற்ப இருக்கும்; உன்னால் விருந்தோம்பல் வழங்க முடியாது, ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை மட்டுமே செய்ய முடியும் என்று நீ சொன்னால், அது ஒரு நற்செய்தியைப் பரப்புவதா, அல்லது தேவாலயத்தைக் கவனித்துக்கொள்வதா, அல்லது பிற பொது விவகாரங்களில் கலந்துகொள்வதா என்பதில் உன்னைப் பற்றிய எனது பரிபூரணமாக்கும் செயல் நீ செய்யும் செயல்பாட்டிற்கு ஏற்ப இருக்கும். விசுவாசமாக இருப்பது, கடைசிவரை கீழ்ப்படிதல், தேவன்மீது மிகுந்த அன்பு செலுத்த முற்படுவது—இதைத்தான் நீ நிறைவேற்ற வேண்டும், இந்த மூன்று விஷயங்களை விடச் சிறந்த நடைமுறைகள் எதுவும் இல்லை. இறுதியில், இந்த மூன்று விஷயங்களை மனிதன் அடைய வேண்டிய தேவையுள்ளது, அவனால் அவற்றை அடைய முடிந்தால், அவன் பரிபூரணமாகிவிடுவான். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, நீ உண்மையிலேயே பின்பற்ற வேண்டும், இந்த விஷயத்தில் நீ முன்னோக்கியும் மேல்நோக்கியும் தீவிரமான உந்துதல் செய்ய வேண்டும், அந்த விஷயத்தில் செயலற்றவனாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு நபருக்கும் பரிபூரணமாக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், பரிபூரணமாக்கப்பட்டவராக ஆகும் திறன் உள்ளது என்றும் நான் சொல்லியிருக்கிறேன், இது உண்மைதான், ஆனால் நீ உன் பின்பற்றும் செயலில் சிறப்பாக இருக்க முயற்சிக்க வேண்டாம். இந்த மூன்று அளவுகோல்களை நீங்கள் அடையவில்லை என்றால், இறுதியில் நீ அவசியம் புறம்பாக்கப்படுவாய். எல்லோரும் இதைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், எல்லோருக்கும் கிரியையும் பரிசுத்த ஆவியின் பிரகாசமும் இருக்க வேண்டும், மேலும் கடைசிவரை கீழ்ப்படிய இயல வேண்டும், ஏனென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை இதுதான். நீங்கள் அனைவரும் உங்கள் கடமையைச் செய்தவுடன், நீங்கள் அனைவரும் பரிபூரணப்படுத்தப்பட்டிருப்பீர்கள், உங்களிடம் பலத்த சாட்சியம் இருக்கும். சாட்சியம் அளிப்பவர்கள் அனைவரும் சாத்தானை வென்றவர்களாகவும், தேவனின் வாக்குத்தத்தைப் பெற்றவர்களாகவும் உள்ளனர், மேலும் அவர்கள் அற்புதமான சென்றடையும் இடத்திலேயே வாழ்வார்கள்.

முந்தைய: பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது

அடுத்த: தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக