மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை தேவனுடைய வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது என்று நாம் ஏன் சொல்கிறோம்?

நவம்பர் 27, 2020

வார்த்தைகள் தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகப் பேசப்படுகின்றனவா, ஒரு தீர்க்கதரிசி மூலமாக தெரிவிக்கப்படுகின்றனவா அல்லது கர்த்தராகிய இயேசுவின் சாயல் மூலமாக மனுவுருவெடுத்த தேவனால் பேசப்படுகின்றனவா, இவை அனைத்தும் தேவனுடைய வார்த்தைகள்தானா என்பதை வேதாகமத்தின் மூலம் நாம் எல்லோருமே காணலாம். ஜனங்கள் தங்கள் அதிகாரத்தையும் வல்லமையையும், சத்தியமான அனைத்தையும் உணர தேவனுடைய எந்தவொரு வார்த்தையும் உதவுகின்றன; இது மறுக்க முடியாதது. தேவனுடைய வார்த்தைகளை அடிக்கடி வாசிக்கும் எல்லோருமே அவருடைய அதிகாரம், சர்வவல்லமை மற்றும் அவற்றிலுள்ள ஞானம் ஆகியவற்றின் வெளிப்பாடுகளையும், அவருடைய நீதியான மனநிலையின் வெளிப்பாடுகளையும் காணலாம். இவ்வாறு, தேவனுடைய அடையாளமும் நிலையும் அவருடைய வார்த்தைகளில் தெளிவாக பிரதிபலிக்கின்றன. மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பது தேவனுடைய இரண்டாவது மனுவுருவெடுத்தலால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பாகும், இவை தேவன் கிருபையின் காலத்தில் மனுக்குலத்தை மீட்பதற்கான கிரியையை முடித்து, தமது வீட்டிலிருந்து தொடங்கி கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்பின் கிரியை அதிகாரப்பூர்வமாக தொடங்கிய பிறகு கூறப்பட்டன. இந்த வார்த்தைகள் கடைசி நாட்களில் எல்லா மனிதர்களிடமும் தேவன் பேசிய வார்த்தைகளாகும். அவற்றில், தேவனுடைய ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் இரகசியத்தையும், அவருடைய மூன்று கட்ட கிரியைகளின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும், அவர் மனுவுருவெடுத்ததன் இரகசியத்தையும், கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்பைக் குறித்த இரகசியத்தையும், மனுக்குலத்தின் முடிவு மற்றும் சென்றடையும் இடத்தைக் குறித்த இரகசியத்தையும் சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்துகிறார்; மேலும், சாத்தானால் மனுக்குலத்தின் சீர்கேட்டின் சாராம்சத்தையும் உண்மையையும் வெளிப்படுத்துகிறார், மேலும் சத்தியத்தை கடைப்பிடிப்பதற்கும் அவர்களுடைய ஜீவிய மனநிலைகளில் மாற்றங்களை அடைவதற்கும் மனுக்குலத்திற்கு பாதையைக் காட்டுகிறார்; மற்றும் பல—இதன் மூலம் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உள்ள தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுகிறார்: "ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்" (வெளிப்படுத்தல் 2:7). "அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன். புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங்கண்டேன். வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது. ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன். அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்" (வெளிப்படுத்தல் 5:1-5). சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் வெளிப்படுத்துதல் புத்தகத்தின் தீர்க்கதரிசனங்களை முழுமையாக நிறைவேற்றியுள்ளன. தேவனால் மட்டுமே தமது சொந்த நிர்வாகத் திட்டத்தின் இரகசியத்தை வெளிப்படுத்த முடியும். மேலும், தேவனால் மட்டுமே சிருஷ்டிகராக தனது அடையாளத்தில் முழு மனுக்குலத்திடமும் தனது வார்த்தைகளைப் பேசவும், மனுக்குலத்தின் சீர்கேட்டைப் பற்றிய உண்மையை நியாந்தீர்க்கவும் வெளிப்படுத்தவும் முடியும், மேலும் பல்வேறு வகையான சகல ஜனங்களுக்கான முடிவுகளையும் சென்றடையும் இடங்களையும் தீர்மானிக்க முடியும். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளுக்கு அதிகாரமும் வல்லமையும் உள்ளன. மேலும், ஒவ்வொரு வார்த்தையும் தேவன் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது. ஆகவே, சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்திய மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பது கடைசி நாட்களில் மனுக்குலம் முழுவதும் தேவன் பேசிய வார்த்தைகளின் தொகுப்பாகும், அத்துடன் திருச்சபைகளுக்கு பரிசுத்த ஆவியானவரால் பேசப்பட்ட வார்த்தைகளாகும் என்பதை நாம் உறுதியாகக் கூறலாம்.

ஒவ்வொரு முறையும் பேசுவதற்காக தேவன் மாம்சமாக மாறும்போது, மனிதர்களை அறிவுறுத்தும் மற்றும் கோரிக்கைகளை வைக்கும் வார்த்தைகளையும், சீர்கெட்ட மனிதர்களை நியாயந்தீர்க்கும், தண்டிக்கும் மற்றும் வெளிப்படுத்தும் வார்த்தைகளையும், அவர்களுக்கு வாக்குத்தத்தங்களைக் கொடுக்கும் வார்த்தைகளையுமே அவர் எப்போதும் பேசுகிறார். தேவனுடைய வார்த்தைகள் அனைத்தும் சத்தியம், வழி மற்றும் ஜீவனின் வெளிப்பாடுகளாகும்; அவை அவருடைய மனநிலையையும், அவர் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அவருடைய ஜீவ சாராம்சத்தின் வெளிப்பாடுகளாகும். இது கர்த்தராகிய இயேசு தமது கிரியையைச் செய்ய வந்தபோது, அவர் எவ்வாறு பல வார்த்தைகளை வெளிப்படுத்தினாரோ அதைப் போன்றது. உதாரணமாக: "மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்" (மத்தேயு 4:17). "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்" (மத்தேயு 22:37-40). "மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை" (மத்தேயு 23:13). கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளில் மனிதர்களிடம் தேவன் வைத்த கோரிக்கைகளும், அவர்களை நியாயந்தீர்ப்பதற்கான வார்த்தைகளும் அடங்கும். இந்த வார்த்தைகள் எல்லாமே சிருஷ்டிகராக தனது அடையாளத்தில் தேவனால் மனிதர்களுக்கு பேசப்பட்டன. மேலும், கர்த்தராகிய இயேசு வெளிப்படுத்திய வார்த்தைகளிலிருந்து, தேவனுடைய வார்த்தைகள் சத்தியமானவை என்பதையும், அவை அதிகாரமுள்ளவை, வல்லமையானவை என்பதையும், அவை தேவனுடைய அடையாளம் மற்றும் நிலையையே முற்றிலுமாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதையும் காணலாம். சர்வவல்லமையுள்ள தேவனால் பேசப்பட்ட வார்த்தைகள் கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளைப் போன்றவை; இவை அனைத்தும் மனுவுருவெடுத்த தேவனால் மனுக்குலத்திற்கு பேசப்பட்ட வார்த்தைகள். மேலும், அவை தேவனுடைய மனநிலையையும் பரிசுத்த சாராம்சத்தையும் வெளிப்படுத்துகின்றன, அவருடைய அடையாளத்தையும் நிலையையும் முழுமையாக வெளிப்படுத்துகின்றன. சர்வவல்லமையுள்ள தேவனானவர் தேவனுடைய ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தைப் பற்றிய இரகசியத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, முழு மனுக்குலத்தினுடைய சீர்கேட்டின் சாராம்சத்தையும் ஆதாரத்தையும் வெளிப்படுத்துகிறார், மேலும் ஜனங்களுடைய இருதயம் மற்றும் மனது ஆகியவற்றிலுள்ள தாங்களே அறிந்திராத சீர்கேடுகளையும் கூட வெளிப்படுத்தியுள்ளார். இந்த வார்த்தைகளை வாசிப்பதன் அடிப்படையில், ஜனங்கள் அவற்றை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கின்றனர். அதே சமயம், சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் சாத்தானின் அந்தகார ஆதிக்கங்களைத் தூக்கி எறிந்து, சுத்திகரிக்கப்பட்டு இரட்சிப்பை அடைவதற்கான வழியை அவர்களுக்குக் காட்டுகின்றன. மேலும், ஒரு நேர்மையான நபராவது எப்படி, தேவனை நேசித்து அவருக்கு கீழ்படிவது எப்படி, அவருக்குப் பயந்து தீமையைவிட்டு விலகுவது எப்படி, அவருக்கு ஊழியம் செய்வது எப்படி, ஒரு இயல்பான மனிதத்தன்மையில் வாழ்வது எப்படி மற்றும் பல என இதுபோன்ற தாங்கள் கடைப்பிடித்து தங்களுடைய விசுவாசத்திற்குள் பிரவேசிக்க வேண்டிய சகல சத்தியங்களையும் அது ஜனங்களுக்குச் சொல்கிறது. கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்திய சத்தியத்தின் பல்வேறு அம்சங்கள் அனைத்தும் கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகின்றன: "இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்" (யோவான் 16:12-13). சிருஷ்டிகரைத் தவிர, யாரால் எல்லா மனிதர்களிடமும் பேச முடியும்? தேவனுடைய சித்தத்தை யாரால் நேரடியாக வெளிப்படுத்தவும் மனுக்குலத்தின் கோரிக்கைகளை முன்வைக்கவும் முடியும்? தேவனைத் தவிர, யாரால் சீர்கேடான மனுக்குலத்தின் உண்மையையும் சாராம்சத்தையும் காண முடியும்? மனித இருதயத்தின் ஆழமான இடைவெளிகளில் மறைந்திருக்கும் சாத்தானிய சுபாவத்தை யாரால் வெளிப்படுத்த முடியும்? கடைசி நாட்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை நிறைவேற்றி, சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து ஜனங்களை முழுமையாக இரட்சிக்க யாரால் முடியும்? எந்தவொரு பிரபலமோ, சிறந்த நபரோ, அறிவாளியோ அல்லது இறையியலாளரோ சத்தியத்தை வெளிப்படுத்தவோ அல்லது முழு மனுக்குலத்திடமும் பேசவோ முடியாது, ஜனங்களுடைய சீர்கேடான சாராம்சத்தைக் காணவோ அல்லது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து அவர்களை இரட்சிக்கவோ முடியாது; இரட்சகருக்கு மட்டுமே இந்த வகையான அதிகாரமும் வல்லமையும் உள்ளது! சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் தேவனுடைய தனித்துவமான அதிகாரம் மற்றும் வல்லமையின் முழுமையான வெளிப்பாடாகும்; அவை அவருடைய அடையாளம் மற்றும் சாராம்சத்தின் வெளிப்பாடாகும். ஆகவே, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் தேவனுடைய மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளாகும், இது எல்லா சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டதாகும்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

சர்வவல்லமையுள்ள தேவனும் கர்த்தராகிய இயேசுவும் ஒரே தேவன்தான்

மனுக்குலம் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டபோது, மனுக்குலத்தின் இரட்சிப்பிற்கான தமது நிர்வாகத் திட்டத்தை தேவன் தொடங்கினார். மனுக்குலத்தின்...

ராஜ்யத்தின் காலத்தில் தேவன் ஏன் சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தை எடுத்துக்கொள்கிறார்

அநேகருக்கு இது ஏன் என்று புரியவில்லை, சர்வவல்லமையுள்ள தேவனானவர் திரும்பி வந்துள்ள கர்த்தராகிய இயேசுவாக இருப்பதனால், கர்த்தராகிய இயேசு கடைசி...

சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை எவ்வாறு உருவாகியது

மாம்சமான தேவனின் கிரியையினால் கிறிஸ்தவ சபைகளைப் போலவே சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையும் உருவாகியது. கர்த்தராகிய இயேசு மாம்சமாகித்...

சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் அடிப்படை நம்பிக்கைகள்

(1) சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் கோட்பாடுகள் கிறிஸ்தவத்தின் கோட்பாடுகள் வேதாகமத்தில் இருந்து உருவாகின்றன. சர்வவல்லமையுள்ள...