Sermon Series: Seeking True Faith | கடைசி நாட்களில் தேவன் ஏன் ஆவிவடிவத்தில் வராமல் மனுஷரூபத்தில் வருகிறார்? (Tamil Subtitles)

ஜனவரி 2, 2022

கடைசி நாட்கள்ள, சர்வ்வல்லமயுள்ள தேவன் மாம்சத்துல, அநேக சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்காரு மேலும் தேவனுடய வீட்டுல துவங்கி, நியாயதீர்ப்பின் கிரியைய செஞ்சிக்கிட்டு இருக்காரு. பேரழிவுக்கு முன்னால ஒரு கூட்டம் ஜெயம்கொள்றவங்கள ஆயத்தம் செஞ்சிருக்காரு. சர்வ்வல்லமயுள்ள தேவனுடய ராஜ்யத்தின் சுவிசேஷம் பூமியில உள்ள எல்லா நாடுகளயும் சென்றடஞ்சிருக்கு, அதிக அதிகமான மக்கள் தேவனுடய சத்தத்த கேட்காங்க, சர்வ்வல்லமயுள்ள தேவன் பக்கமா திரும்புறாங்க. இவ்வளவுக்குப் பின்னும், மத உலகத்துக்குள்ள இருக்குற அநேகர், தேவன் மாம்சத்தில தோன்றுனாரு, கிரிய செஞ்சாருங்குறத முழுமயா நம்புறதில்ல. அவருடய உயிர்தெழுதலுக்கு பிறகு நாப்பது நாள் கர்த்தராகிய இயேசு ஆவியா காட்சியளித்த்த அவுங்க நம்புறாங்க, எனவே அவரு ஆவியா திரும்பி வரணும்னு நினைக்றாங்க. ஏன் சர்வ்வல்லமயுள்ள தேவன் ஆவியா வராம, மாம்சத்துல மனுஷகுமாரனா வரணும்? சர்வவல்லமயுள்ள தேவன் ஆவியா இல்லம மாம்சத்துல வந்த மனுஷகுமாரனா இருக்கிறதினால அநேகர் அவர ஏத்துக்க மறுக்குறாங்க இரட்சகரால இரட்சிக்கப்பட கிடைக்கிற ஒரே சந்தப்பத்த அவங்க தவற விடுறாங்க, இதுக்காக அவுங்க நித்தியத்துக்கும் வருத்தப்படுவாங்க, ஆகவே, ஏன் தேவன், கடைசி நாட்கள்ல கிரிய செய்ய ஆவி ரூபத்தில தோன்றாம மனுஷகுமாரனா மாம்சமானாரு? மெய்யான விசுவாசத்தைத் தேடுதல்ங்கற இந்த அத்தியாயத்தில நாம சேர்ந்து தேவனுடய கிரியயப் பத்தி அதிகமா கத்துக்குவோம்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க