வானத்தைநோக்கி அண்ணாந்து பார்ப்பதனால் உண்மையில் உங்களால் கர்த்தரை வரவேற்க முடியுமா

டிசம்பர் 21, 2020

பேரழிவுகளுக்கு முன்பதாக தங்களைப் பரலோக ராஜ்யத்திற்கு எடுத்துக் கொள்ள கர்த்தராகிய இயேசு மேகத்தின் மீது திரும்ப வருவார் என்று கர்த்தரை விசுவாசிக்கிற பல விசுவாசிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த காணொளியின் முக்கிய கதாபாத்திரமான ஜின் செங் என்பவரும் இதற்கு விதிவிலக்கானவரல்ல. அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மூடத்தனமாக வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு, கர்த்தருக்காக காத்துக்கொண்டிருக்கிறார். கர்த்தராகிய இயேசு ஏற்கனவே திரும்பி வந்துவிட்டார் எனவும், அவர் அநேக சத்தியங்களை வெளிப்படுத்திக்கொண்டு, தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பளித்துக் கொண்டிருக்கிறார் எனவும் யாராவது அளிக்கும் சாட்சியத்தை அவர் கேட்கும் பொழுதுகூட, கர்த்தர் ஒரு மேகத்தில் தான் வருவார் என்ற எண்ணத்தை அவர் விடாப்பிடியாய்ப் பற்றிக் கொள்கிறார். அதனால் அவர் அந்த சாட்சியை விரும்பவோ ஆராயவோ மறுக்கிறார். மேலும் கர்த்தருடைய வருகையும் அவரைக் கடந்து செல்கிறது. முடிவாக அவர் தனது கருத்துக்களை விட்டுவிட்டு, கடைசி நாட்களின் தேவனுடைய கிரியையை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்? கர்த்தருடைய சத்தத்தை கவனமாகக் கேட்காமல், வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு கர்த்தரை வரவேற்பது சாத்தியமா? ஜின் செங்கின் அனுபவம் என்ன என்று காண்போம்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க