தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 22

அக்டோபர் 21, 2022

இயேசு செய்த கிரியை அந்தக் காலத்தில் மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப இருந்தது. அவருடைய கிரியை மனிதகுலத்தை மீட்பதும், அவர்களுடைய பாவங்களை மன்னிப்பதுமாக இருந்தது. ஆகவே அவருடைய மனநிலையானது மனத்தாழ்மை, பொறுமை, அன்பு, பக்தி, சகிப்புத்தன்மை, இரக்கம், கிருபை மற்றும் தயை ஆகிய அனைத்தும் கலந்த ஒன்றாக இருந்தது. அவர் மிகுதியான கிருபையையும் ஆசீர்வாதங்களையும் மேலும் மக்கள் அனுபவிக்கக்கூடிய எல்லாவற்றையும் மனிதகுலத்திற்குக் கொண்டுவந்தார். சமாதானம் மற்றும் மகிழ்ச்சி, அவருடைய சகிப்புத்தன்மை மற்றும் அன்பு, அவருடைய இரக்கம், மற்றும் அன்பான தயை ஆகியவற்றை அவர்களுடைய இன்பத்திற்காக அவர் அவர்களுக்குக் கொடுத்தார். அந்தக் காலக்கட்டத்தில், ஜனங்கள் இன்பத்துடன் அனுபவித்த அனுபவங்களாவன—அவர்களின் இருதயங்களுக்குள் சமாதானம் மற்றும் பாதுகாப்பின் உணர்வு, அவர்களின் ஆவிகளுக்குள் நிச்சயத்தின் உணர்வு, மற்றும் இரட்சகராகிய இயேசுவை அவர்கள் சார்ந்திருத்தல்—என இவை அனைத்தும் அவர்கள் வாழ்ந்த, அந்தக் காலம் முழுவதும் நிறைந்திருந்தன. மனிதன் ஏற்கனவே சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டிருக்கிறான். ஆகவே கிருபையின் காலத்தில், எல்லா மனிதர்களையும் மீட்கும் கிரியைக்கு, மிகுதியான கிருபையும், எல்லையற்ற சகிப்புத்தன்மையும், பொறுமையும் தேவைப்பட்டது. அதற்கும் மேலாக, ஒரு பலனைப் பெற, மனிதகுலத்தின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்குப் போதுமான பலி ஒன்று தேவைப்பட்டது. கிருபையின் காலத்தில் மனிதகுலம் கண்டது மனிதகுலத்தின் பாவங்களுக்கான எனது பாவநிவாரணபலியான இயேசுவை மட்டுமே. அவர்கள் அறிந்ததெல்லாம், தேவன் இரக்கமுள்ளவராகவும், சகிப்புத்தன்மையுள்ளவராகவும் இருக்க முடியும் என்பதாகும். மேலும் அவர்கள் பார்த்ததெல்லாம் இயேசுவின் இரக்கத்தையும், தயையையும் மட்டுமேயாகும். இவை அனைத்திற்கும் காரணம் அவர்கள் கிருபையின் காலத்தில் பிறந்தார்கள் என்பதேயாகும். ஆகவே, அவர்கள் மீட்கப்படுவதற்கு முன்பு, இயேசு தங்களுக்கு அளித்த பல வகையான கிருபையை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருந்தது. இது மட்டுமே அவர்களுக்குப் பயனுள்ளதாய் இருந்தது. இவ்வாறு, அவர்கள் கிருபையை அனுபவிப்பதன் மூலம் தாங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற முடிந்தது. மேலும் இயேசுவின் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் அனுபவிப்பதன் மூலமும் மீட்கப்படுவதற்கான வாய்ப்பைப் பெற முடிந்தது. இயேசுவின் சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையினால் மட்டுமே அவர்கள் மன்னிப்பைப் பெறுவதற்கான உரிமையைப் பெற்றனர், மேலும் இயேசு அளித்த மிகுதியான கிருபையினை அனுபவித்தனர். இயேசு சொன்னது போல்: நீதிமான்களையல்ல, பாவிகள் அவர்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பைப் பெறத்தக்கதாக அனுமதிக்கும்படி, அவர்களை மீட்பதற்கே வந்திருக்கிறேன். இயேசு மாம்சமானபோது, அவர் மனிதனின் குற்றங்களுக்கு சகிப்பின்மையையும், நியாயத்தீர்ப்பையும், சாபத்தையும் கொண்டு வந்திருந்தால், மனிதன் ஒருபோதும் மீட்கப்படுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்க மாட்டான், என்றென்றும் பாவியாகவே இருந்திருப்பான். இது அவ்வாறு இருந்திருந்தால், ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் நியாயப்பிரமாண காலத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கும், மேலும் நியாயப்பிரமாணத்தின் காலம் இன்னும் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும். மனிதனின் பாவங்கள் மிகுதியானதாக மற்றும் மிகவும் மோசமானதாக வளர்ந்திருக்கும். மேலும் மனிதகுலத்தின் சிருஷ்டிப்பு வீணானதாக இருந்திருக்கும். மனிதர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டு யேகோவாவுக்கு ஊழியம் மட்டுமே செய்திருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பாவங்கள் முதலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களின் பாவங்களைவிட அதிகமாக இருந்திருக்கும். இயேசு எவ்வளவு அதிகமாக மனிதகுலத்தை நேசித்து, அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களிடம் போதுமான இரக்கத்தையும் கிருபையையும் கொண்டுவந்தாரோ, அவ்வளவு அதிகமாக மனிதர்களும், இயேசு ஒரு பெரிய விலைக்கிரயம் செலுத்தி மீட்டுக்கொண்ட வழித்தவறிய ஆட்டுக்குட்டிகள் என்று அழைக்கப்படுவதற்கான தகுதியைப் பெற்றிருந்தார்கள். இந்தக் கிரியையில் சாத்தானால் தலையிட முடியவில்லை, ஏனென்றால் இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை ஓர் அன்பான தாய் குழந்தையைத் தன் மார்பில் சாய்த்துக்கொள்வது போல நடத்தினார். அவர்களைக் குறித்து கோபத்தையோ வெறுப்பையோ அவர் வளர்த்துக்கொள்ளவில்லை, ஆனால் ஆறுதல் நிறைந்தவராக இருந்தார். அவர் ஒருபோதும் அவர்களிடம் கோபப்படவில்லை, ஆனால் அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களின் முட்டாள்தனத்திற்கும் அறியாமைக்கும், "மற்றவர்களை ஏழெழுபதுதரமட்டும் மன்னியுங்கள்" என்று சொல்லும் அளவிற்குக் கண்டுகொள்ளாதவராக இருந்தார். இவ்வாறு மற்றவர்களின் இருதயங்கள் அவருடைய இருதயத்தால் மாற்றப்பட்டன. இவ்வாறு ஜனங்கள் அவருடைய சகிப்புத்தன்மையின் மூலம் தங்கள் பாவங்களுக்குப் பாவ மன்னிப்பைப் பெற்றார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க