தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 11

மார்ச் 16, 2023

மூன்று கட்ட கிரியைகளைப் பற்றிய இந்த தொடர்ச்சியான குறிப்பு ஏன் கொடுக்கப்பட்டுள்ளது? யுகங்கள் கடந்து செல்வது, சமுதாய வளர்ச்சி மற்றும் இயற்கையின் மாறிவரும் முகம் அனைத்தும் மூன்று கட்ட கிரியைகளில் மாற்றங்களைப் பின்பற்றுகின்றன. மனுக்குலமானது தேவனுடைய கிரியையுடன் காலப்போக்கில் மாறுகிறது, அது தானாகவே உருவாவதில்லை. தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளும் சகல சிருஷ்டிகளையும், ஒவ்வொரு மதத்தையும், மதப்பிரிவையும் சேர்ந்த அனைவரையும் ஒரே தேவனுடைய ஆளுகையின் கீழ் கொண்டுவருவதற்காக குறிப்பிடப்படுகின்றன. நீ எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், இறுதியில் நீங்கள் எல்லோரும் தேவனுடைய ஆளுகையின் கீழ் அடிபணிவீர்கள். தேவனால் மட்டுமே இந்தக் கிரியையைச் செய்ய முடியும்; இதை எந்த மதத் தலைவராலும் செய்ய முடியாது. உலகில் பல முக்கியமான மதங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் சொந்தத் தலைவரைக் கொண்டுள்ளன. மேலும், பின்பற்றுபவர்கள் உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளிலும் பிரதேசங்களிலும் பரவிக்கிடக்கிறார்கள். பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா நாடும் தனக்குள் வெவ்வேறு மதங்களைக் கொண்டுள்ளன. ஆனாலும், உலகம் முழுவதும் எத்தனை மதங்கள் இருந்தாலும், பிரபஞ்சத்திற்குள் உள்ள எல்லா ஜனங்களும் இறுதியில் ஒரே தேவனுடைய வழிகாட்டுதலின் கீழ் வாழ்கிறார்கள், அவர்களுடைய வாழ்க்கை மதத் தலைவர்களால் வழிநடத்தப்படுவதில்லை. அதாவது, மனுக்குலம் ஒரு குறிப்பிட்ட மதத் தலைவரால் வழிநடத்தப்படுவதில்லை. மாறாக, வானத்தையும், பூமியையும், சகலத்தையும் சிருஷ்டித்த, மனுக்குலத்தையும் சிருஷ்டித்த சிருஷ்டிகராலேயே மனுக்குலம் வழிநடத்தப்படுகிறது, இதுதான் உண்மை. உலகில் பல பெரிய மதங்கள் இருந்தாலும், அவை எவ்வளவு பெரியவையாக இருந்தாலும், அவை அனைத்தும் சிருஷ்டிகரின் ஆளுகையின் கீழ்தான் உள்ளன, அவை எதுவுமே இந்த ஆளுகையின் எல்லையை மீற முடியாது. மனுக்குலத்தின் வளர்ச்சி, சமுதாயத்தின் மாற்றம், இயற்கை அறிவியலின் வளர்ச்சி என ஒவ்வொன்றும் சிருஷ்டிகரின் ஏற்பாடுகளிலிருந்து பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. இக்கிரியை குறிப்பிட்ட எந்தவொரு மதத் தலைவராலும் செய்யக்கூடிய ஒன்றல்ல. மதத் தலைவர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் தலைவராக மட்டுமே இருக்கிறார், அவர்களால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ, வானத்தையும் பூமியையும் சகலத்தையும் சிருஷ்டித்தவரை பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது. மதத் தலைவரால் முழு மதத்திற்குள்ளும் உள்ள எல்லோரையும் வழிநடத்த முடியும், ஆனால் அவர்களால் வானத்திற்குக் கீழுள்ள எல்லா சிருஷ்டிகளுக்கும் கட்டளையிட முடியாது. இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். மதத் தலைவர் தலைவராக மட்டுமே இருக்கிறார், அவர்களால் தேவனுக்கு (சிருஷ்டிகருக்கு) சமமாக நிற்க முடியாது. சகலமும் சிருஷ்டிகரின் கைகளில் உள்ளன, இறுதியில் அவை அனைத்தும் சிருஷ்டிகரின் கைகளுக்குத் திரும்பும். மனுக்குலம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது. மதத்தைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு நபரும் தேவனுடைய ஆளுகையின் கீழ் திரும்புவார். இது தவிர்க்க முடியாதது. தேவன் மட்டுமே எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவராகவும், சகல சிருஷ்டிகளுக்கு மத்தியிலும் அவரே மிகவும் உயர்ந்த ஆட்சியாளராகவும் இருக்கிறார், சகல சிருஷ்டிகளும் அவருடைய ஆளுகையின் கீழ் திரும்ப வேண்டும். ஒரு மனுஷனுடைய அந்தஸ்து எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அந்த மனுஷனால் மனுக்குலத்தை ஒரு பொருத்தமான சென்றுசேருமிடத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது. யாராலும் சகலத்தையும் அதனதன் வகைக்கு ஏற்ப வகைப்படுத்த முடியாது. யேகோவா தாமே மனுக்குலத்தை சிருஷ்டித்து ஒவ்வொன்றையும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தினார். கடைசிக்காலம் வரும்போது, அவர் தமது சொந்தக் கிரியையை தாமே செய்வார், சகலத்தையும் அதனதன் வகைக்கு ஏற்ப வகைப்படுத்துவார். இக்கிரியையை தேவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. ஆதி முதல் இன்று வரை செய்யப்பட்ட மூன்று கட்ட கிரியைகள் எல்லாமே தேவனாலேயே செய்யப்பட்டன, அவை ஒரே தேவனாலேயே செய்யப்பட்டன. மூன்று கட்ட கிரியைகளின் உண்மை என்பது முழு மனுக்குலத்திற்கான தேவனுடைய தலைமைத்துவத்தைப் பற்றிய உண்மையாகும், இது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். மூன்று கட்ட கிரியைகளின் முடிவில், சகலமும் அதனதன் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டு, தேவனுடைய ஆளுகையின் கீழ் திரும்பும். ஏனென்றால், முழு பிரபஞ்சத்திலும் இந்த ஒரே தேவன் மட்டுமே இருக்கிறார், வேறு எந்த மதங்களும் இல்லை. உலகைச் சிருஷ்டிக்க முடியாதவரால் அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவும் முடியாது, அதேநேரத்தில் உலகைச் சிருஷ்டித்தவர் நிச்சயமாக அதை முடிவுக்குக் கொண்டுவர வல்லவராய் இருப்பார். ஆகையால், ஒருவரால் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல், மனுஷனை அவனுடைய மனதை வளர்த்துக் கொள்ள உதவ மட்டுமே முடிந்தால், அவர் நிச்சயமாக தேவனாக இருக்க மாட்டார், நிச்சயமாக மனுக்குலத்தின் கர்த்தராக இருக்க மாட்டார். அவரால் இவ்வளவு பெரிய கிரியையைச் செய்ய முடியாது. இதுபோன்ற கிரியையைச் செய்யக்கூடியவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார், இக்கிரியையைச் செய்ய முடியாத எல்லோருமே நிச்சயமாக எதிரிகளாக இருக்கின்றனரே தவிர, அவர்கள் தேவன் அல்ல. தீய மதங்கள் அனைத்தும் தேவனுடன் இணக்கமாக இல்லை. மேலும், அவை தேவனுடன் இணக்கமாக இல்லை என்பதனால், அவை தேவனுடைய எதிரிகளாக இருக்கின்றன. கிரியைகள் அனைத்தும் இந்த ஒரு மெய்தேவனாலேயே செய்யப்படுகின்றன, மேலும் முழு பிரபஞ்சமும் இந்த ஒரே தேவனாலேயே கட்டளையிடப்படுகிறது. அவருடைய கிரியை இஸ்ரவேலில் அல்லது சீனாவில் செய்யப்பட்டாலும், கிரியை ஆவியானவரால் அல்லது மாம்சத்தினால் செய்யப்பட்டாலும், எல்லாமே தேவனாலேயே செய்யப்படுகிறது, வேறு ஒருவராலும் செய்ய முடியாது. ஏனென்றால் அவரே முழு மனுக்குலத்தின் தேவனாக இருக்கிறார், அதனால் அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் சுதந்திரமாகவும், தடையின்றியும் கிரியை செய்கிறார். இதுவே எல்லா தரிசனங்களிலும் மிகவும் பெரியதாகும். தேவனுடைய ஒரு சிருஷ்டியாக, நீ தேவனுடைய ஒரு சிருஷ்டிக்குரிய கடமையைச் செய்யவும், தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவும் விரும்பினால், நீ தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்ள வேண்டும், சிருஷ்டிகளுக்கான தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், அவருடைய நிர்வாகத் திட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் அவர் செய்யும் கிரியையின் முக்கியத்துவம் அனைத்தையும் நீ புரிந்துகொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தேவனுடைய தகுதியான சிருஷ்டிகள் அல்ல! தேவனுடைய ஒரு சிருஷ்டியாக, நீ எங்கிருந்து வந்தாய் என்று உனக்குப் புரியவில்லை என்றால், மனுக்குலத்தின் வரலாற்றையும், தேவன் செய்த கிரியைகள் அனைத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்றால், மேலும், இன்று வரை மனுக்குலம் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் மற்றும் முழு மனுக்குலத்திற்கும் கட்டளையிடுகிறவர் யார் என்று புரிந்துகொள்ளவில்லை என்றால், உன்னால் உன் கடமையைச் செய்ய இயலாது. தேவன் இன்று வரை மனுக்குலத்தை வழிநடத்தியுள்ளார். பூமியில் மனுஷனை சிருஷ்டித்தது முதல் அவர் மனிதனை ஒருபோதும் விட்டுவிடவில்லை. பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் கிரியை செய்வதை நிறுத்துவதில்லை, மனுக்குலத்தை வழிநடத்துவதை ஒருபோதும் நிறுத்தியதில்லை, மனுக்குலத்தை ஒருபோதும் விட்டுவிட்டதில்லை. ஆனால் தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை மனுஷன் உணரவுமில்லை, அவன் தேவனை அறியவுமில்லை. தேவனுடைய சகல சிருஷ்டிகளுக்கும் இதைவிட இழிவானது ஏதேனும் உண்டா? தேவன் தனிப்பட்ட முறையில் மனுஷனை வழிநடத்துகிறார், ஆனால் மனுஷன் தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்வதில்லை. நீ தேவனுடைய ஒரு சிருஷ்டி, ஆனாலும் உனது சொந்த வரலாற்றை நீ புரிந்துகொள்ளவில்லை, உனது பயணத்தில் உன்னை வழிநடத்தியவர் யார் என்று தெரியவில்லை, தேவன் செய்த கிரியையை நீ அறியாமல் இருக்கிறாய், அதனால் உன்னால் தேவனை அறிந்துகொள்ள முடியவில்லை. நீ இன்னும் இப்போது இதையெல்லாம் பற்றி அறிந்துகொள்ளவில்லை என்றால், நீ ஒருபோதும் சாட்சி பகருவதற்குத் தகுதியானவனாக இருக்க மாட்டாய். இன்று, சிருஷ்டிகர் தனிப்பட்ட முறையில் சகல ஜனங்களையும் மீண்டும் ஒரு முறை வழிநடத்துகிறார் மற்றும் சகல ஜனங்களையும் அவருடைய ஞானம், சர்வவல்லமை, இரட்சிப்பு மற்றும் அற்புதத்தன்மை ஆகியவற்றைக் காணச் செய்கிறார். ஆனாலும் நீ இன்னும் உணரவில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை, ஆகையால் நீ இரட்சிப்பைப் பெறாத ஒருவன் அல்லவா? சாத்தானுக்குச் சொந்தமானவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்வதில்லை, அதேநேரத்தில் தேவனுக்குச் சொந்தமானவர்களால் தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடிகிறது. நான் பேசும் வார்த்தைகளை உணர்ந்து புரிந்துகொள்பவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள், தேவனுக்கு சாட்சி கொடுப்பார்கள். நான் பேசும் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாத ஒருவரும் தேவனுக்கு சாட்சி கொடுக்க முடியாது, மேலும் அவர்கள் புறம்பாக்கப்படுவார்கள். தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளாதவர்களாலும், தேவனுடைய கிரியையை உணராதவர்களாலும் தேவனுடைய அறிவை அடைய இயலாது, இதுபோன்றவர்கள் தேவனுக்கு சாட்சி கொடுக்க முடியாது. நீ தேவனுக்கு சாட்சி கொடுக்க விரும்பினால், நீ தேவனை அறிந்திருக்க வேண்டும். தேவனைப் பற்றிய அறிவானது தேவனுடைய கிரியையின் மூலமே பெறப்படுகிறது. மொத்தத்தில், நீ தேவனை அறிந்துகொள்ள விரும்பினால், நீ தேவனுடைய கிரியையை அறிந்திருக்க வேண்டும்: தேவனுடைய கிரியையை அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும். மூன்று கட்ட கிரியைகளும் முடிவுக்கு வரும்போது, தேவனுக்கு சாட்சி பகருகிறவர்கள் அடங்கிய ஒரு கூட்டமும், தேவனை அறிந்தவர்கள் அடங்கிய ஒரு கூட்டமும் உருவாக்கப்படும். இவர்கள் அனைவரும் தேவனை அறிந்துகொள்வார்கள், இவர்களால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க இயலும். இவர்கள் மனிதத்தன்மையையும் அறிவையும் கொண்டிருப்பார்கள், தேவனுடைய மூன்று கட்ட இரட்சிப்பின் கிரியைகள் அனைத்தையும் அறிந்திருப்பார்கள். இதுதான் இறுதியில் நிறைவேற்றப்படும் கிரியையாகும், இவர்கள்தான் 6,000 ஆண்டுகால நிர்வாகக் கிரியையின் பலன்களாவார்கள் மற்றும் சாத்தானின் இறுதித் தோல்விக்கு மிகவும் வல்லமையான சாட்சிகளாவார்கள். தேவனுக்குச் சாட்சி பகரக்கூடியவர்களாலேயே தேவனுடைய வாக்குத்தத்தத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற முடியும் மற்றும் இறுதியில் மீதியான ஜனக்கூட்டமாக இருப்பார்கள், இவர்களே தேவனுடைய அதிகாரத்தைக் கொண்டிருப்பார்கள் மற்றும் தேவனுக்குச் சாட்சி பகருவார்கள். நீங்கள் எல்லோருமே அந்த ஜனக்கூட்டத்தின் அங்கத்தினராகலாம் அல்லது பாதிப் பேர் மட்டுமே அங்கத்தினராகலாம் அல்லது ஒரு சிலரே அங்கத்தினராகலாம், இது உங்கள் விருப்பத்தையும் உங்கள் நாட்டத்தையும் பொறுத்ததாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க