தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 7

மார்ச் 16, 2023

மூன்று கட்ட கிரியைகளும் தேவனுடைய முழு கிரியையின் பதிவாகும்; அவை மனுக்குலத்திற்கான தேவனுடைய இரட்சிப்பின் பதிவாகும், அவை கற்பனையானவை அல்ல. நீங்கள் உண்மையிலேயே தேவனுடைய முழு மனநிலையைப் பற்றிய அறிவைக் கண்டடைய விரும்பினால், தேவனால் செய்யப்படும் மூன்று கட்ட கிரியைகளையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மேலும், நீங்கள் எந்தக் கட்டத்தையும் தவிர்க்கக்கூடாது. இதுவே தேவனை அறிய முற்படுபவர்களால் அடையப்பட வேண்டிய குறைந்தபட்ச காரியங்களாகும். தேவனைப் பற்றிய உண்மையான அறிவை மனுஷனால் பொய்யாக புனைய முடியாது. இது மனுஷனால் கற்பனை செய்யக்கூடிய ஒன்றல்ல, ஒரு தனி நபருக்கு வழங்கப்படும் பரிசுத்த ஆவியானவரின் சிறப்பு தயவின் விளைவும் அல்ல. மாறாக, இது தேவனுடைய கிரியையை மனுஷன் அனுபவித்த பிறகு வரும் ஒரு அறிவாகும். மேலும், இது தேவனுடைய கிரியையைப் பற்றிய உண்மைகளை அனுபவித்த பிறகு மட்டுமே வரும் தேவனைப் பற்றிய அறிவாகும். இத்தகையதொரு அறிவை உடனே பெற முடியாது, மேலும் இது கற்பிக்கக்கூடிய ஒன்றும் அல்ல. இது முற்றிலும் தனிப்பட்ட அனுபவத்துடன் தொடர்புடையதாகும். மனுக்குலத்திற்கான தேவனுடைய இரட்சிப்பானது இந்த மூன்று கட்ட கிரியைகளின் மையத்தில் தான் உள்ளது, ஆனாலும் இரட்சிப்பின் கிரியைக்குள் பல கிரியை செய்யும் முறைகளும், தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்தும் பல வழிமுறைகளும் அடங்கும். இதுதான் மனுஷன் அடையாளம் காண்பதற்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது, மேலும் இதுதான் மனுஷன் புரிந்துகொள்வதற்கு கடினமானதாக இருக்கிறது. யுகங்களைப் பிரித்தல், தேவனுடைய கிரியையில் காணப்படும் மாற்றங்கள், கிரியை நடக்கும் இடத்தின் மாற்றங்கள், இந்த கிரியையைப் பெறுபவரின் மாற்றங்கள் மற்றும் இதுபோன்ற பல என இவை அனைத்தும் மூன்று கட்ட கிரியைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும் முறையிலுள்ள வேறுபாடு, அத்துடன் தேவனுடைய மனநிலை, சாயல், நாமம், அடையாளம் ஆகியவற்றின் மாற்றங்கள் அல்லது பிற மாற்றங்கள் என அனைத்தும் மூன்று கட்ட கிரியைகளின் பகுதியாகும். ஒரு கட்ட கிரியையால் ஒரு பகுதியை மட்டுமே குறிப்பிட முடியும், இது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது. இது யுகங்களைப் பிரிப்பதையோ, அல்லது தேவனுடைய கிரியையின் மாற்றங்களையோ மற்றும் பிற அம்சங்களையோ உள்ளடக்குவதில்லை. இது தெளிவாகத் தெரிந்த உண்மையாகும். மூன்று கட்ட கிரியைகளும் மனுக்குலத்தை இரட்சிக்கும் தேவனுடைய முழு கிரியையாகும். இரட்சிப்பின் கிரியையில் தேவனுடைய கிரியையையும் தேவனுடைய மனநிலையையும் மனுஷன் அறிந்திருக்க வேண்டும்; இந்த உண்மையில்லாமல், தேவனைப் பற்றிய உங்கள் அறிவு வெற்று வார்த்தைகளே தவிர வேறு எதுவுமில்லை, அது வெற்றுப் பேச்சே தவிர வேறு எதுவுமில்லை. இதுபோன்ற அறிவால் மனுஷனை நம்ப வைக்கவோ ஜெயங்கொள்ளவோ முடியாது; இது யதார்த்தத்துடன் முரண்படுகிறது, இது உண்மை அல்ல. இது ஏராளமானதாகவும், காதுக்கு இனிமையானதாகவும் இருக்கலாம், ஆனால் இது தேவனுடைய உள்ளார்ந்த மனநிலையுடன் முரண்பட்டால், தேவன் உன்னை மன்னிக்கமாட்டார். அவர் உனது அறிவைப் பாராட்டமாட்டார் என்பது மட்டுமின்றி, அவரை தேவதூஷணம் செய்த பாவியாக இருப்பதற்காக அவர் உன்னைப் பழிவாங்குவார். தேவனை அறிந்துகொள்வதற்கான வார்த்தைகள் இலகுவாக பேசப்படுவதில்லை. நீ சரளமாக பேசுகிறவனாகவும் வாக்கு வல்லமையுள்ளவனாகவும் இருந்தாலும் மற்றும் கருப்பை வெள்ளையாக இருப்பதாகவும், வெள்ளையைக் கருப்பாகவும் இருப்பதாகவும் வாதாடக்கூடிய அளவிற்கு உனது வார்த்தைகள் மிகவும் சாதுரியமாக இருந்தாலும், தேவனுடைய அறிவைப் பற்றி பேசுதல் என்று வரும்போது, நீ இன்னும் அறிவில்லாதவனாகவே இருக்கிறாய். தேவன் என்பவர் நீ கண்மூடித்தனமாக நியாயந்தீர்க்கக்கூடிய ஒருவரோ அல்லது சாதாரணமாகப் புகழக்கூடிய ஒருவரோ அல்லது ஆர்வமற்று சிறுமைப்படுத்தப்படக்கூடிய ஒருவரோ அல்ல. நீ எல்லோரையும் புகழ்கிறாய், ஆனாலும் தேவனுடைய உன்னதமான கிருபையை விவரிக்க சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க நீ போராடுகிறாய், இதைத்தான் தோல்வியுற்றவர் ஒவ்வொரும் உணர வேண்டும். தேவனை விவரிக்கும் திறன் கொண்ட மொழிப் புலமையாளர்கள் பலர் இருந்தாலும், அவர்கள் விவரிக்கும் துல்லியம் தேவனுக்குரியவர்கள் பேசும் சத்தியத்தில் நூறில் ஒரு பகுதி மட்டுமே இருக்கிறது, தேவனுக்குரியவர்கள் குறைவான சொற்களை மட்டுமே கொண்டிருந்தாலும், பயன்படுத்துவதில் வளமான அனுபவத்தைப் பெற்றுள்ளனர். இவ்வாறு, தேவனைப் பற்றிய அறிவு துல்லியத்திலும் உண்மைத்தன்மையிலும் தான் இருக்கிறது, வார்த்தைகளை சாதுரியமாக பயன்படுத்துவதிலோ வளமான சொற்களைக் கொண்டிருப்பதிலோ இல்லை என்பதைப் பார்க்கலாம். ஏனென்றால், மனுஷனுடைய அறிவும் தேவனுடைய அறிவும் முற்றிலும் வேறுபட்டவையாகும். தேவனை அறிந்துகொள்ளும் பாடமானது மனுக்குலத்தின் எந்த இயற்கை அறிவியலையும் விட உயர்ந்ததாகும். இது தேவனை அறிந்துகொள்ள முயற்சிக்கிறவர்களில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலானவர்களால் மட்டுமே அடையக்கூடிய ஒரு பாடமாகும், இதை திறமையுள்ள எந்தவொரு நபராலும் அடைந்துவிட முடியாது. ஆகையால், நீங்கள் தேவனை அறிந்துகொள்வதையும், சத்தியத்தைப் பின்தொடர்வதையும் வெறும் குழந்தையால் அடையக்கூடிய விஷயங்களாகப் பார்க்கக்கூடாது. நீ உன் குடும்ப வாழ்க்கை, அல்லது உன் தொழில், அல்லது உன் திருமணத்தில் முற்றிலும் வெற்றிபெற்றவனாக இருக்கலாம், ஆனால் சத்தியம் மற்றும் தேவனுடைய வார்த்தை என்று வரும்போது, உன்னையே காண்பிக்க உன்னிடம் எதுவுமில்லை மற்றும் நீ எதையும் அடையவுமில்லை. சத்தியத்தைக் கடைப்பிடிப்பது உனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்றும், தேவனை அறிந்துகொள்வது இன்னும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்றும் சொல்லலாம். இதுதான் உங்கள் சிரமமாக இருக்கிறது, இதுதான் முழு மனுக்குலமும் எதிர்கொள்ளும் சிரமமாக இருக்கிறது. தேவனை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் சில வெற்றிகளைப் பெற்றவர்களில், தரத்தைப் பூர்த்தி செய்பவர்கள் யாருமில்லை. தேவனை அறிந்துகொள்வது என்றால் என்ன, அல்லது தேவனை அறிந்துகொள்வது ஏன் அவசியம், அல்லது தேவனை அறிந்துகொள்ள ஒருவர் எந்த அளவை அடைய வேண்டும் என்று மனுஷனுக்குத் தெரியாது. இதுதான் மனுக்குலத்திற்கு மிகவும் குழப்பமானதாக இருக்கிறது, இது மனுக்குலம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய புதிராக இருக்கிறது. இக்கேள்விக்கு யாராலும் பதிலளிக்க முடியவில்லை, இக்கேள்விக்கு பதிலளிக்கவும் யாரும் தயாராக இல்லை. ஏனென்றால், இன்றுவரை மனுக்குலத்திலுள்ள யாரும் இக்கிரியையைப் பற்றிய ஆய்வில் எந்த வெற்றியும் பெற்றதில்லை. ஒருவேளை, மூன்று கட்ட கிரியைகளைப் பற்றிய புதிர் மனுக்குலத்திற்கு தெரியப்படுத்தப்படும்போது, தேவனை அறிந்த திறமையானவர்களைக் கொண்ட ஒரு கூட்டம் அடுத்தடுத்து தோன்றும். நிச்சயமாகவே, அதுதான் விஷயம் என்று நம்புகிறேன். மேலும், நான் இக்கிரியையைச் செய்வதற்கான செயல்முறையில் இருக்கிறேன் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற திறமையான நபர்கள் தோன்றுவதைக் காண்பேன் என்று நம்புகிறேன். அவர்கள் இந்த மூன்று கட்ட கிரியைகளின் உண்மைக்கு சாட்சி கொடுப்பவர்களாக மாறுவார்கள். நிச்சயமாகவே, இந்த மூன்று கட்ட கிரியைகளுக்கு அவர்கள்தான் முதலில் சாட்சி பகருகிறவர்களாக இருப்பார்கள். ஆனால், தேவனுடைய கிரியை முடிவடையும் நாளில் இதுபோன்ற திறமையானவர்கள் வெளிப்படாவிட்டால் அல்லது மாம்சமாகிய தேவனால் பரிபூரணமாக்கப்படுவதைத் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்ட இதுபோன்ற ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே இருந்தால், அதைவிட வேதனையும் வருத்தமும் மிக்கது எதுவுமில்லை. ஆனாலும், இது மிகவும் மோசமான சூழ்நிலைதான். எது எப்படி இருந்தாலும், உண்மையிலேயே பின்தொடர்பவர்களால்தான் இந்த ஆசீர்வாதத்தைப் பெற முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஆதிகாலம் முதற்கொண்டு, இதுபோன்ற கிரியைகள் இதற்கு முன்பு இருந்ததில்லை. இதுபோன்ற கிரியை மனித வளர்ச்சி வரலாற்றில் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. தேவனை அறிந்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக உன்னால் உண்மையிலேயே மாற முடிந்தால், இது சகல சிருஷ்டிகளுக்கு மத்தியில் மிகவும் மேலான கெளரவமாக இருக்காதா? மனுக்குலத்தின் மத்தியில் எந்த சிருஷ்டியாகிலும் தேவனால் அதிகமாக பாராட்டப்படுவானா? இதுபோன்ற கிரியையை அடைவது எளிதானதல்ல, ஆனால் இறுதியில் இன்னும் வெகுமதிகளை அறுவடை செய்யும். அவர்களுடைய பாலினம் அல்லது நாடு என எதுவாக இருந்தாலும், தேவனைப் பற்றிய அறிவை அடையக்கூடிய அனைவரும் இறுதியில் தேவனுடைய மிகப் பெரிய கனத்தைப் பெறுவார்கள், மேலும் தேவனுடைய அதிகாரத்தைக் கொண்டவர்களாக மட்டுமே இருப்பார்கள். இதுதான் இன்றைய கிரியையாகும். இது எதிர்காலத்தின் கிரியையும் ஆகும். இது 6,000 ஆண்டுகால கிரியைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய கடைசி மற்றும் மிக உயர்ந்த கிரியையாகும், மேலும் இது ஒவ்வொரு வகை மனுஷரையும் வெளிப்படுத்தும் ஒரு கிரியை முறையாகும். தேவன் மனுஷனை அறிந்துகொள்ளச் செய்யும் கிரியையின் மூலம், மனுஷனுடைய வெவ்வேறு தராதரங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன: தேவனை அறிந்தவர்களே தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அவருடைய வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும் தகுதியுள்ளவர்கள், அதேநேரத்தில் தேவனை அறியாதவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் அவருடைய வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும் தகுதியற்றவர்கள். தேவனை அறிந்தவர்கள் தேவனுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள், தேவனை அறியாதவர்களை தேவனுக்கு நெருக்கமானவர்கள் என்று அழைக்க முடியாது. தேவனுக்கு நெருக்கமானவர்களால் தேவனுடைய எந்த ஆசீர்வாதத்தையும் பெற முடியும், ஆனால் அவருக்கு நெருக்கமில்லாதவர்கள் அவருடைய எந்த கிரியைக்கும் தகுதியானவர்கள் அல்ல. இது உபத்திரவங்கள், சுத்திகரிப்பு அல்லது நியாயத்தீர்ப்பு என எதுவாக இருந்தாலும், இவை அனைத்தும் இறுதியில் தேவனைப் பற்றிய அறிவை மனுஷனை அடைய அனுமதிப்பதற்காகவே உள்ளன, இதன்மூலம் மனுஷன் தேவனுக்குக் கீழ்ப்படிவான். இதுதான் இறுதியில் அடையப்படும் பலனாகும். மூன்று கட்ட கிரியைகளில் எதுவும் மறைக்கப்படவில்லை, இது தேவனைப் பற்றிய மனுஷனுடைய அறிவுக்கு நன்மையானதாக இருக்கிறது மற்றும் தேவனைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற மனுஷனுக்கு உதவுகிறது. இக்கிரியைகள் அனைத்தும் மனுஷனுக்கு நன்மை பயக்கின்றவையாக இருக்கின்றன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க