தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 139

ஜனவரி 19, 2023

மாம்சமாகிய தேவனால் மனிதனுடன் என்றென்றும் இருக்க முடியாது, ஏனென்றால் தேவன் செய்ய வேண்டிய கிரியைகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அவரால் மாம்சத்திற்குள் கட்டுண்டு இருக்க முடியாது. அவர் மாம்சத்தின் சாயலில் அந்தக் கிரியையைச் செய்தாலும், அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய அவர் மாம்சத்தைத் துறக்க வேண்டியதிருக்கிறது. தேவன் பூமிக்கு வரும்போது, அவர் மரித்து மனிதகுலத்தை விட்டுச் செல்வதற்கு முன்பு சாதாரண நபர் அடைய வேண்டிய உருவத்தை அவர் அடையும் வரை அவர் காத்திருப்பதில்லை. அவருடைய மாம்சம் எத்தனை வயதுடையதாக இருந்தாலும், அவருடைய கிரியை முடிந்ததும், அவர் மனிதனை விட்டுச் சென்றுவிடுகிறார். அவருக்கு வயது என்பது போன்ற எந்தக் காரியமும் கிடையாது. மனித ஆயுட்காலத்துக்கு ஏற்ப அவர் தமது நாட்களை எண்ணுவதில்லை. அதற்குப் பதிலாக, அவர் தமது கிரியையின் படிகளுக்கு ஏற்ப மாம்சத்தில் தமது வாழ்க்கையை முடிக்கிறார். மாம்சத்திற்குள் வருவதில் தேவனுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வயது இருக்க வேண்டும், வயது வந்தவராக வளர வேண்டும், முதுமையடைய வேண்டும், அந்த சரீரம் மரிக்கும்போது மட்டுமே வெளியேற வேண்டும் என்று கருதுபவர்கள் இருக்கலாம். இது மனிதனின் கற்பனையாகும். தேவன் இவ்வாறு கிரியை செய்வதில்லை. அவர் தாம் செய்யவேண்டிய கிரியையைச் செய்வதற்காக மட்டுமே மாம்சத்திற்குள் வருகிறார், சாதாரண மனிதனின் செயல்பாடுகளான பெற்றோருக்குப் பிறந்து, வளர்ந்து, ஒரு குடும்பத்தை உருவாக்கி, ஒரு தொழிலைத் தொடங்கி, குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது அல்லது வாழ்வின் ஏற்ற இறக்கங்களை அனுபவிப்பது போன்ற ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை வாழ்வதற்கு அல்ல. தேவன் பூமிக்கு வரும்போது, தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தைத் தரித்துக்கொண்டு, மாம்சத்திற்குள் வருவதாக இது இருக்கிறது, ஆனால் தேவன் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை வாழ்வதில்லை. அவர் தனது நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே நிறைவேற்ற வருகிறார். அதன் பிறகு அவர் மனிதகுலத்தை விட்டுச் சென்றுவிடுவார். அவர் மாம்சத்திற்குள் வரும்போது, தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தின் சாதாரண மனிதத்தன்மையை பரிபூரணமாக்குவதில்லை. மாறாக, தேவன் முன்குறித்த நேரத்தில், தெய்வீகத்தன்மை நேரடியாக கிரியை செய்கிறது. அதன்பின், அவர் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து, தமது ஊழியத்தை முழுவதுமாக முடித்தப் பிறகு, இந்தக் கட்டத்தில் தேவனுடைய ஆவியானவரின் கிரியை செய்யப்படுகிறது. அவருடைய மாம்ச சரீரம் அதன் நீண்ட ஆயுட்காலத்தில் வாழ்ந்ததா என்பதைப் பொருட்படுத்தாமல், மாம்சமாகிய தேவனுடைய வாழ்க்கையும் அந்த நேரத்தில் முடிவடைகிறது, அதாவது, மாம்ச சரீரமானது வாழ்வின் எந்தக் கட்டத்தை அடைந்தாலும், அது பூமியில் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும், எல்லாமே ஆவியானவரின் கிரியை மூலமே தீர்மானிக்கப்படுகின்றன. சாதாரண மனிதத்தன்மையில் இருக்க வேண்டும் என்று மனிதன் கருதுவதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இயேசுவை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர் முப்பத்து மூன்றரை ஆண்டுகள் மாம்சத்தில் ஜீவித்தார். ஒரு மனித சரீரத்தின் ஆயுட்காலத்தின் அடிப்படையில், அவர் அந்த வயதில் மரித்திருக்கக்கூடாது, அவர் விட்டுச் சென்றிருக்கக்கூடாது. ஆனால் இது குறித்து தேவனுடைய ஆவியானவருக்கு எந்தக் கவலையும் இல்லை. அவருடைய கிரியை முடிந்ததும், அந்த நேரத்தில் அவரது சரீரம் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆவியானவருடன் மறைந்து சென்றது. இதுதான் தேவன் மாம்சத்தில் கிரியை செய்யும் கொள்கையாகும். ஆகையால், உறுதியாகக் கூறுவதென்றால், மாம்சமாகிய தேவனுடைய மனிதத்தன்மையானது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. அவர் மீண்டும் கிரியை செய்வதற்காகவே பூமிக்கு வருகிறார், சாதாரண மனிதனின் வாழ்க்கையை வாழ்வதற்காக அல்ல. அவர் முதலில் ஒரு சாதாரண மனித வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்டு, அதன்பின் கிரியை செய்ய ஆரம்பிப்பதில்லை. மாறாக, அவர் ஒரு சாதாரண மனித குடும்பத்தில் பிறந்ததனால், அவரால் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடிகிறது, இந்தக் கிரியையானது மனிதனின் நோக்கங்களால் களங்கப்படாததாகவும், மாம்சமல்லாததாகவும் இருக்கிறது, இது நிச்சயமாக சமூகத்தின் வழிகளைக் கடைப்பிடிப்பதில்லை அல்லது மனிதனின் எண்ணங்கள் அல்லது கருத்துக்களைக் கொண்டிருப்பதில்லை, மேலும் இது வாழ்வதற்கான மனிதனின் தத்துவங்களையும் கொண்டிருப்பதில்லை. இதுதான் மாம்சமாகிய தேவன் செய்ய விரும்பும் கிரியையாகும். மேலும், இதுதான் அவர் மாம்சமாகியதன் நடைமுறை முக்கியத்துவமும் ஆகும். பிற அற்பமான செயல்முறைகளுக்கு உள்ளாகாமல், மாம்சத்தில் செய்ய வேண்டிய கிரியையின் ஒரு கட்டத்தைச் செய்யவே தேவன் பிரதானமாக மாம்சத்திற்குள் வருகிறார். ஒரு சாதாரண மனிதனின் அனுபவங்களைப் பொறுத்தவரை, அவர் அவற்றைக் கொண்டிருப்பதில்லை. மாம்சமாகிய தேவனுடைய மாம்சம் செய்ய வேண்டிய கிரியையில் சாதாரண மனித அனுபவங்கள் அடங்குவதில்லை. ஆகையால், தேவன் மாம்சத்தில் தாம் நிறைவேற்ற வேண்டிய கிரியையை நிறைவேற்றுவதற்காகவே மாம்சத்திற்குள் வருகிறார். மற்றவற்றுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பல அற்பமான செயல்முறைகளுக்கு உள்ளாவதில்லை. அவருடைய கிரியை முடிந்ததும், அவர் மாம்சமாகியதன் முக்கியத்துவமும் முடிவடைகிறது. இந்தக் கட்டத்தை முடிப்பது என்றால் அவர் மாம்சத்தில் செய்ய வேண்டிய கிரியை முடிந்துவிட்டது, அவருடைய மாம்சத்தின் ஊழியம் முழுமையடைந்துவிட்டது என்று அர்த்தமாகும். ஆனால் அவரால் முடிவின்றி தொடர்ந்து மாம்சத்தில் கிரியை செய்ய முடியாது. அவர் மாம்சத்திற்கு வெளியே உள்ள மற்றொரு இடத்திற்குக் கிரியை செய்யச் செல்ல வேண்டும். இவ்வாறு மட்டுமே அவருடைய கிரியையை முழுமையாகச் செய்து, அதிகப் பலனை அடைய முடியும். தேவன் தமது மூலமுதலானத் திட்டத்தின் படியே கிரியை செய்கிறார். அவர் என்ன கிரியை செய்ய வேண்டும், எந்தக் கிரியையைச் செய்து முடித்திருக்கிறார் என்பது அவருக்கு தமது உள்ளங்கையைப் போலத் தெளிவாகத் தெரியும். தேவன் ஒவ்வொரு நபரையும் தாம் ஏற்கனவே முன்குறித்த பாதையில் நடக்க வழிநடத்துகிறார். ஒருவரும் இதிலிருந்து தப்ப முடியாது. தேவனுடைய ஆவியானவரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுபவர்களால் மட்டுமே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியும். ஒருவேளை, பிற்காலக் கிரியையில், மனிதனை வழிநடத்த தேவன் மாம்சத்தில் பேசாமல், ஆவியானவர் தொட்டுணரக்கூடிய உருவத்தில் மனிதனின் வாழ்க்கையை வழிநடத்துவார். அப்போதுதான் மனிதனால் தேவனைத் தொடவும், தேவனைக் காணவும், மேலும் நடைமுறைத் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு தேவனுக்கு தேவைப்படும் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கவும் முடியும். இதுதான் தேவன் நிறைவேற்ற விரும்பும் மற்றும் அவர் நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிட்ட கிரியை ஆகும். இதன் மூலம், நீங்கள் செல்ல வேண்டிய பாதையை நீங்கள் எல்லோரும் காண வேண்டும்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகிய தேவனுக்கும் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களுக்கும் இடையிலான இன்றியமையாத வேறுபாடு” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க