தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 138

ஜனவரி 19, 2023

தேவன் தமது சாதாரண மனிதத்தன்மையைப் பரிபூரணப்படுத்துவதற்காகவோ, சாதாரண மனிதத்தன்மையின் கிரியையைச் செய்வதற்காகவோ பூமிக்கு வருவதில்லை. அவர் சாதாரண மனிதத்தன்மையில் தெய்வீகக் கிரியையைச் செய்வதற்காக மட்டுமே வருகிறார். தேவன் பேசும் சாதாரண மனிதத்தன்மை என்பது ஜனங்கள் கற்பனை செய்வது போன்றது அல்ல. மனிதன் "சாதாரண மனிதத்தன்மையை" ஒரு மனைவி அல்லது ஒரு கணவன், மற்றும் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோரைக் கொண்டிருப்பதாக வரையறுக்கிறான், இது ஒரு சாதாரண மனிதன் என்பதற்குச் சான்றாகும். ஆனால், தேவன் இதை இவ்வாறு பார்ப்பதில்லை. அவர் சாதாரண மனிதத்தன்மையைச் சாதாரண மனித எண்ணங்களாக, சாதாரண மனித ஜீவிதங்களாக மற்றும் சாதாரண நபர்களாகப் பிறப்பதாகப் பார்க்கிறார். ஆனால் சாதாரணத்தன்மை குறித்து மனிதன் பேசும் விதத்தில் அவருடைய சாதாரணத்தன்மையில் ஒரு மனைவி, அல்லது ஒரு கணவன், மற்றும் குழந்தைகள் ஆகியோரைக் கொண்டிருப்பது அடங்காது. அதாவது, மனிதனைப் பொறுத்தவரை, தேவன் பேசும் சாதாரண மனிதத்தன்மையை மனிதத்தன்மை இல்லாதது, கிட்டத்தட்ட உணர்ச்சி இல்லாதது மற்றும் மாம்ச தேவைகள் இல்லாதது என்று மனிதன் கருதுகிறான், அதாவது ஒரு சாதாரண மனிதனின் வெளிப்புறத்தை மட்டுமே கொண்டு, ஒரு சாதாரண நபரின் தோற்றத்தைப் பெற்று, ஆனால் உண்மையில் ஒரு சாதாரண மனிதன் கொண்டிருக்க வேண்டிய அனைத்தையும் முழுமையாகக் கொண்டிராத இயேசுவைப் போல இருப்பதாகக் கருதுகிறான். இதிலிருந்து மாம்சமாகிய தேவனுடைய சாராம்சமானது சாதாரண மனிதத்தன்மையை முழுவதுமாக உள்ளடக்காமல், சாதாரண மனித வாழ்க்கையின் வழக்கமான செயல்பாடுகளை ஆதரிப்பதற்காகவும், சாதாரண மனிதனின் பகுத்தறியும் சக்திகளை நிலைநிறுத்துவதற்காகவும் ஜனங்கள் கொண்டிருக்க வேண்டிய காரியங்களின் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக்கியிருப்பதைக் காணலாம். ஆனால் இந்தக் காரியங்களுக்கும் சாதாரண மனிதத்தன்மையாக மனிதன் கருதுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவைதான் மாம்சமாகிய தேவன் கொண்டிருக்க வேண்டியவையாகும். இருப்பினும், மாம்சமாகிய தேவன் ஒரு மனைவி, மகன்கள் மற்றும் மகள்கள், ஒரு குடும்பம் ஆகியவற்றைக் கொண்டிருந்தால் மட்டுமே சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருப்பதாகக் கூற முடியும் என்று சொல்கிறவர்களும் இருக்கின்றனர். இந்த விஷயங்கள் இல்லாமல், அவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல என்று அவர்கள் கூறுகின்றனர். அப்படியானால் நான் உன்னிடம் கேட்கிறேன், "தேவனுக்கு ஒரு மனைவி உண்டா? தேவனுக்கு ஒரு கணவர் இருப்பது சாத்தியமா? தேவனால் குழந்தைகளைப் பெற முடியுமா?" இவை பொய்யானவை அல்லவா? ஆனாலும்கூட, மாம்சமாகிய தேவனால் பாறைகளுக்கு இடையிலான பிளவுகளிலிருந்து தோன்றவோ அல்லது வானத்திலிருந்து கீழே விழவோ முடியாது. அவரால் ஒரு சாதாரண மனிதக் குடும்பத்தில் மட்டுமே பிறக்க முடியும். அதனால்தான் அவருக்குப் பெற்றோரும் சகோதரிகளும் இருக்கின்றனர். இவைதான் மாம்சமாகிய தேவனுடைய சாதாரண மனிதத்தன்மை கொண்டிருக்க வேண்டியவையாகும். இதுதான் இயேசுவின் நிலையாக இருந்தது. இயேசுவுக்கு ஒரு தந்தை, தாய், சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இருந்தனர், இவையெல்லாம் இயல்பானவையாக இருந்தன. ஆனால் அவருக்கு ஒரு மனைவி மற்றும் மகன்களும் மகள்களும் இருந்திருந்தால், மாம்சமாகிய தேவன் கொண்டிருக்க வேண்டுமென்று தேவன் விரும்பிய சாதாரண மனிதத்தன்மையாக அவருடையது இருந்திருக்காது. இதுதான் நிலைமையாக இருந்திருந்தால், அவரால் தெய்வீகத்தன்மையின் சார்பாக கிரியை செய்திருக்க முடிந்திருக்காது. இதற்கு சரியான காரணம் என்னவென்றால், அவர் ஒரு மனைவியையோ குழந்தைகளையோ கொண்டிருக்கவில்லை. அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் சாதாரண நபருக்குப் பிறந்திருந்தாலும், அவரால் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடிந்தது. இதை மேலும் தெளிவுபடுத்த, ஒரு சாதாரண நபர் என்று தேவன் கருதுபவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நபராக இருக்கிறார். அத்தகைய நபர் மட்டுமே தெய்வீகக் கிரியையைச் செய்வதற்கு தகுதியுடையவராக இருக்கிறார். மறுபுறம், ஒரு நபருக்கு ஒரு மனைவி, குழந்தைகள் அல்லது ஒரு கணவன் இருந்தால், அந்த நபரால் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடியாது. ஏனென்றால், மனிதர்களுக்குத் தேவைப்படும் சாதாரண மனிதத்தன்மையை மட்டுமே அவர்கள் கொண்டிருப்பார்கள், ஆனால் தேவனுக்குத் தேவைப்படும் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்க மாட்டார்கள். தேவனால் கருதப்படுவதும், ஜனங்களால் புரிந்துகொள்ளப்படுவதும் பெரும்பாலும் மாறுபட்டவையாகவும், இணக்கமில்லாதவையாகவும் இருக்கின்றன. தேவனுடைய கிரியையின் இந்தக் கட்டத்தில், ஜனங்களின் கருத்துக்களிலிருந்து அதிகம் மாறுபடுகின்றன மற்றும் பெரிதும் வேறுபடுகின்றன. தேவனுடைய கிரியையின் இந்தக் கட்டத்தில் தெய்வீகத்தன்மையே முற்றிலும் பிரதான பங்கு வகிக்கிறது, மனிதத்தன்மை ஒரு துணைப் பங்கையே வகிக்கிறது என்று ஒருவர் கூறலாம். தேவன் பூமிக்கு தமது கிரியையைச் செய்ய வருவதால், மனிதனை அதில் கை வைக்க அனுமதிப்பதைக் காட்டிலும் அவரே தமது கிரியையைச் செய்ய மாம்சத்தில் (முழுமையற்ற, சாதாரண மனிதனாக) அவதரிக்கிறார். மனிதகுலத்தை ஒரு புதிய யுகத்திற்குள் வைக்கவும், மனிதகுலத்திடம் அவருடைய கிரியையின் அடுத்தக் கட்டத்தைப் பற்றி சொல்லவும், அவருடைய வார்த்தைகளில் விவரிக்கப்பட்டுள்ள பாதைக்கு ஏற்ப நடக்குமாறு ஜனங்களைக் கேட்டுக்கொள்ளவும் அவர் இந்த மாம்சமாகிய அவதரிப்பைப் பயன்படுத்துகிறார். இவ்வாறுதான் மாம்சத்தில் தேவனுடைய கிரியை முடிவடைகிறது. அவர் மனிதகுலத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லப் போகிறார், இனிமேலும் சாதாரண மனிதத்தன்மையுள்ள மாம்சத்தில் இருக்கப்போவதில்லை, மாறாக அவருடைய கிரியையின் மற்றொரு பகுதியைத் தொடர மனிதரிடமிருந்து விலகியிருக்கப்போகிறார். அதன்பின், தனது சொந்த இருதயத்திற்கு ஏற்ற ஜனங்களைப் பயன்படுத்தி, அவர்களுடைய மனிதத்தன்மையிலே இந்த ஜனக்கூட்டத்திற்கு நடுவே பூமியில் தமது கிரியையைத் தொடர்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகிய தேவனுக்கும் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களுக்கும் இடையிலான இன்றியமையாத வேறுபாடு” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க