தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 137

ஜனவரி 19, 2023

தேவன் பூமிக்கு வரும்போது, அவர் தமது கிரியையைத் தெய்வீகத்தன்மைக்குள் மட்டுமே செய்கிறார், இதைத்தான் பரலோக ஆவியானவர் மாம்சமாகிய தேவனிடம் ஒப்படைத்துள்ளார். அவர் வரும்போது, அவர் தமது வார்த்தைகளை வெவ்வேறு வழிகளிலும் வெவ்வேறு கண்ணோட்டங்களிலும் எடுத்துரைக்க, அவர் தேசம் முழுவதும் பேசுகிறார். அவர் தமது குறிக்கோள்களாகவும், செயல்படும் கொள்கையாகவும் முக்கியமாக மனிதனுக்குத் தேவையானதை வழங்குகிறார் மற்றும் மனிதனுக்குப் போதிக்கிறார், மேலும் தனிப்பட்ட உறவுகள் அல்லது ஜனங்களுடைய வாழ்க்கை விவரங்கள் போன்றவற்றில் அவர் தன்னைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆவியானவருக்காக பேசுவதே அவருடைய பிரதான ஊழியமாகும். அதாவது, தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் தொட்டுணரும்படியாகத் தோன்றும்போது, அவர் மனிதனுக்கான ஜீவனை வழங்கி, சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். அவர் மனிதனுடைய கிரியையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை, அதாவது அவர் மனிதகுலத்தின் கிரியையில் பங்கேற்பதில்லை. மனிதர்களால் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடியாது. தேவன் மனிதனுடைய கிரியையில் பங்கேற்பதில்லை. தேவன் தமது கிரியையைச் செய்ய இந்த பூமிக்கு வந்த இத்தனை ஆண்டுகளில், அவர் அதை எப்போதும் ஜனங்கள் மூலமாகவே செய்திருக்கிறார். இருப்பினும், இந்த ஜனங்களை மாம்சமான தேவனாகக் கருத முடியாது, தேவனால் பயன்படுத்தப்படுபவர்களாக மட்டுமே கருத முடியும். இதற்கிடையில், இன்றைய தேவனால் தெய்வீகக் கண்ணோட்டத்தில் நேரடியாகப் பேசி, ஆவியானவரின் சத்தத்தை வெளிப்படுத்தவும், ஆவியானவரின் சார்பாகக் கிரியை செய்யவும் முடியும். அதேபோல், யுகங்கள் முழுவதுமாக தேவன் பயன்படுத்திய எல்லோருமே மாம்ச சரீரத்திற்குள் கிரியை செய்யும் தேவனுடைய ஆவியானவரின் நிகழ்வுகளாகவே இருக்கின்றனர், அப்படியானால் அவர்களை ஏன் தேவன் என்று அழைக்க முடியாது? ஆனால் இன்றைய தேவனும் மாம்சத்தில் நேரடியாகக் கிரியை செய்யும் தேவனுடைய ஆவியானவராக இருக்கிறார், மேலும் இயேசுவும் மாம்சத்தில் கிரியை செய்யும் தேவனுடைய ஆவியானவராக இருந்தார். அவர்கள் இருவருமே தேவன் என்று அழைக்கப்படுகின்றனர். அப்படியானால் வேறுபாடு என்ன? யுகங்கள் முழுவதுமாக தேவன் பயன்படுத்திய நபர்கள் எல்லோருமே சாதாரணமாகச் சிந்திக்கும் பகுத்தறியும் திறன்படைத்தவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் எல்லோருமே மனித நடத்தை குறித்த கொள்கைகளைப் புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் சாதாரண மனித கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர், மேலும் அவர்கள் சாதாரண ஜனங்கள் கொண்டிருக்க வேண்டிய எல்லாவற்றையும் கொண்டிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அசாதாரண திறமையையும், இயல்பான புத்திசாலித்தனத்தையும் பெற்றிருக்கின்றனர். இந்த நபர்கள் மீது கிரியை செய்வதில், தேவனுடைய ஆவியானவர் அவர்களுடைய தாலந்துகளைப் பயன்படுத்துகிறார், இந்தத் தாலந்துகள் தேவன் அவர்களுக்கு வழங்கிய வரங்களாகும். தேவனுடைய ஊழியத்தில் அவர்களுடைய பெலன்களைப் பயன்படுத்தி தேவனுடைய ஆவியானவர் அவர்களுடைய தாலந்துகளை உபயோகிக்கிறார். ஆனாலும், தேவனுடைய சாராம்சமானது கருத்துகள் அல்லது எண்ணங்கள் இல்லாமலும், மனித நோக்கங்கள் கலக்காமலும், சாதாரண மனிதர்கள் கொண்டிருப்பவை இல்லாமலும் இருக்கிறது. அதாவது, அவர் மனித நடத்தை குறித்தக் கொள்கைகளை அறிந்திருக்கவுமில்லை. இவ்வாறுதான் இன்றைய தேவன் பூமிக்கு வருகிறார். அவருடைய கிரியையும் அவருடைய வார்த்தைகளும் மனித நோக்கங்களோ மனித எண்ணங்களோ கலக்காதவையாக இருக்கின்றன, ஆனால் அவை ஆவியானவரின் நோக்கங்களின் நேரடி வெளிப்பாடாக இருக்கின்றன, அவர் தேவனுடைய சார்பாக நேரடியாகக் கிரியை செய்கிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஆவியானவர் நேரடியாகப் பேசுகிறார், அதாவது, தெய்வீகத்தன்மையானது மனிதனின் நோக்கங்களில் சிறிதளவுகூட கலக்காமல் நேரடியாகக் கிரியை செய்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், மாம்சமாகிய தேவன் தெய்வீகத்தன்மையை நேரடியாக வெளிப்படுத்துகிறார், மனித எண்ணங்களோ கருத்துக்களோ இல்லாமல் இருக்கிறார், மேலும் அவரிடம் மனித நடத்தைகளின் கொள்கைளைப் பற்றிய புரிதல் எதுவும் இல்லை. தெய்வீகத்தன்மை மட்டுமே கிரியையில் ஈடுபட்டிருந்தால் (அதாவது தேவன் மட்டுமே கிரியை செய்கிறார் என்றால்), தேவனுடைய கிரியை பூமியில் செய்யப்படுவதற்கு எந்த வழியும் இருந்திருக்காது. ஆகவே, தேவன் பூமிக்கு வரும்போது, தெய்வீகத்தன்மையில் தேவன் செய்யும் கிரியையுடன் இணைந்து மனிதகுலத்திற்குள் கிரியை செய்ய அவர் பயன்படுத்தும் சிறு எண்ணிக்கையிலான நபர்களை அவர் கொண்டிருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், அவர் தமது தெய்வீகக் கிரியையை நிலைநிறுத்த மனித கிரியையைப் பயன்படுத்துகிறார். இல்லையென்றால், மனிதன் நேரடியாக தெய்வீகக் கிரியையில் ஈடுபட வழி இருந்திருக்காது. இவ்வாறுதான் இயேசுவும் அவருடைய சீஷர்களும் கிரியை செய்தனர். உலகில் இயேசுவின் காலக் கட்டத்தில், அவர் பழைய நியாயப்பிரமாணங்களை ஒழித்து புதிதானக் கட்டளைகளை ஏற்படுத்தினார். அவர் பல வார்த்தைகளையும் பேசினார். இந்தக் கிரியைகள் எல்லாம் தெய்வீகத்தன்மையில் செய்யப்பட்டன. பேதுரு, பவுல், யோவான் போன்ற மற்றவர்கள் எல்லோரும் இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு தங்கள் அடுத்தடுத்த கிரியைகளைத் தொடங்கினர். அதாவது, தேவன் அந்த யுகத்தில் தமது கிரியையைத் தொடங்கினார், கிருபையின் காலத்தின் தொடக்கத்தில் தொடங்கினார். அதாவது, அவர் பழைய யுகத்தை ஒழித்து, ஒரு புதிய யுகத்தைத் தொடங்கினார். மேலும், "தேவன் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார்" என்ற வார்த்தைகளையும் நிறைவேற்றினார். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், மனிதனானவன் தெய்வீகக் கிரியையை அடிப்படையாகக் கொண்டு மனித கிரியையைச் செய்ய வேண்டும். இயேசு சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி, பூமியில் தனது கிரியையை முடித்ததும், அவர் மனிதனை விட்டுச் சென்றுவிட்டார். இதற்குப் பிறகு, கிரியை செய்த எல்லா ஜனங்களும் அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்ட கொள்கைகளின்படியே செய்தார்கள் மற்றும் அவர் பேசிய சத்தியங்களின்படியே நடந்தனர். இந்த ஜனங்கள் எல்லோரும் இயேசுவுக்காகக் கிரியை செய்தனர். இயேசு மட்டுமே கிரியை செய்திருந்தால், அவர் எத்தனை வார்த்தைகள் பேசியிருந்தாலும், அவருடைய வார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ஜனங்களுக்கு எந்த வழியும் இருந்திருக்காது. ஏனென்றால், அவர் தெய்வீகத்தில் கிரியை செய்தார், தெய்வீக வார்த்தைகளை மட்டுமே அவரால் பேச முடிந்தது, சாதாரண ஜனங்கள் அவருடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு அவரால் காரியங்களை விவரிக்க முடியவில்லை. ஆகையால், அவருக்குப் பின் வந்த அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் அவருடைய கிரியையை முடிக்க வேண்டியதாயிற்று. தெய்வீகக் கிரியையை முடிப்பதற்காக பேசவும் கிரியை செய்யவும் மாம்சமாகிய தேவனின் மாம்சத்தைப் பயன்படுத்தி, அதன்பின் அவருடைய கிரியையை நிறைவேற்ற தேவனுடைய சொந்த இருதயத்தைப் பின்பற்றுகிற ஒரு சில அல்லது அநேகமாக அதிக நபர்களைப் பயன்படுத்தினார், மாம்சமாகிய தேவன் தமது கிரியை செய்யும் விதத்தின் கொள்கை இதுதான். அதாவது, மனிதகுலத்திற்கு மேய்ச்சலைக் கொடுக்கும் மற்றும் தண்ணீரைப் பாய்ச்சும் கிரியையைச் செய்வதற்கு தேவன் தமது இருதயத்திற்கு ஏற்ற நபர்களைப் பயன்படுத்துகிறார், இதன்மூலம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம் சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கலாம்.

தேவன் மாம்சத்தில் வந்தபோது, அவர் தெய்வீகக் கிரியையை மட்டுமே செய்து, அவருடன் இணைந்து கிரியை செய்ய அவரது இருதயத்திற்கு ஏற்ற ஒருவரும் இல்லை என்றால், மனிதனால் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவோ தேவனுடன் இணைந்து செயல்படவோ முடியாது. தேவன் இந்தக் கிரியையைச் செய்து முடிக்கவும், திருச்சபைகளைக் கண்காணிக்கவும், மேய்க்கவும் அவருடைய இருதயத்திற்கு ஏற்ற சாதாரண நபர்களைப் பயன்படுத்த வேண்டும், இதனால் மனிதனின் அறிவாற்றல் செயல்முறைகளின் அளவு, அவனது மூளை ஆகியவை கற்பனை செய்யும் திறனுடையவையாக இருக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், தேவன் தமது தெய்வீகத்திற்குள் செய்யும் கிரியையை "மொழிபெயர்க்க" அவருடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு சிறு எண்ணிக்கையிலான நபர்களைப் பயன்படுத்துகிறார், இதன்மூலம் தெய்வீகப் பாஷையை மனிதப் பாஷையாக மாற்ற முடியும், மேலும் இதன்மூலம் ஜனங்களால் அதைப் புரிந்துகொள்ளவும் முடியும். தேவன் அவ்வாறு செய்திருக்காவிட்டால், தேவனுடைய தெய்வீகப் பாஷையை ஒருவரும் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால், தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர்கள்பொதுவாகவே சிறிய எண்ணிக்கையிலான சிறுபான்மையினராக இருக்கின்றனர், மேலும் மனிதனின் புரிந்துகொள்ளும் திறன் பலவீனமாகவே இருக்கிறது. அதனால்தான், மாம்சமாகிய தேவனின் மாம்சத்தில் கிரியை செய்யும் போது மட்டுமே தேவன் இந்த முறையைத் தேர்ந்தெடுக்கிறார். தெய்வீகக் கிரியை மட்டுமே இருந்திருந்தால், மனிதனுக்கு தேவனை அறிந்து கொள்ளவோ அல்லது தேவனுடன் செயல்படவோ வழி எதுவும் இருந்திருக்காது, ஏனென்றால் மனிதனுக்கு தேவனுடைய பாஷைப் புரிவதில்லை. தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற, அவருடைய வார்த்தைகளைத் தெளிவுபடுத்தும் பிரதிநிதிகள் மூலமாக மட்டுமே மனிதனால் இந்த பாஷையைப் புரிந்துகொள்ள முடியும். ஆனாலும், மனிதகுலத்திற்குள் இதுபோன்றவர்கள் மட்டுமே கிரியை செய்தால், அதனால் மனிதனின் சாதாரண வாழ்க்கையை மட்டுமே பராமரிக்க முடியும், மனிதனின் மனநிலையை அதனால் மாற்ற முடியாது. தேவனுடைய கிரியையால் ஒரு புதிய தொடக்கப் புள்ளியைக் கொண்டிருக்க முடியவில்லை. அதே பழைய பாடல்களும், அதே பழைய பயனற்ற கூற்றுகளும் மட்டுமே இருந்தன. மாம்சமாகிய தேவனுடைய பிரதிநிதி மூலமாக மட்டுமே, மாம்சமாகிய அவருடைய காலத்தில் அவர் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்கிறார் மற்றும் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்கிறார், அதன் பிறகு ஜனங்கள் அவருடைய வார்த்தைகளின்படியே கிரியை செய்கின்றனர், அனுபவம் பெறுகின்றனர், இவ்வாறு மட்டுமே அவர்களுடைய வாழ்க்கை மனநிலை மாற முடியும், இவ்வாறு மட்டுமே அவர்களால் காலத்துடன் ஓட முடியும். தெய்வீகத்தன்மையில் கிரியை செய்கிறவர் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், அதே நேரத்தில் மனிதத்தன்மையில் கிரியை செய்கிறவர்கள் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களாக இருக்கின்றனர். அதாவது, மாம்சமாகிய தேவன் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களிடமிருந்து முக்கியமாக வேறுபட்டவராக இருக்கிறார். மாம்சமாகிய தேவன் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடிகிறது, அதே நேரத்தில் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களால் செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு காலத்தின் துவக்கத்திலும், மனிதனைப் புதிய துவக்கத்திற்குள் கொண்டுவர தேவனுடைய ஆவியானவர் தனிப்பட்ட முறையில் பேசி, புதிய யுகத்தைத் தொடங்குகிறார். அவர் பேசி முடித்ததும், தேவனுடைய தெய்வீகத்தன்மையில் அவரது கிரியை செய்யப்படுகிறது என்பதை இது குறிக்கிறது. அதன் பிறகு, ஜனங்கள் எல்லோரும் தங்கள் ஜீவனின் அனுபவத்திற்குள் பிரவேசிக்க தேவனால் பயன்படுத்தப்படுபவர்களின் வழியைப் பின்பற்றுகின்றனர். மேலும், இந்தக் கட்டத்தில்தான் தேவன் மனிதனை புதிய யுகத்திற்குள் கொண்டு வந்து, மாம்சத்தில் தேவனுடைய கிரியை முடிக்கும் தருணமான ஒரு புதிய தொடக்கப் புள்ளியை ஜனங்களிடம் கொடுக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகிய தேவனுக்கும் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களுக்கும் இடையிலான இன்றியமையாத வேறுபாடு” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க